Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனைவி சொல்லே மருந்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிடரிப்பகுதியிலே -எனக்குப்

பெரியதாய் ஒரு தசைப்பிடிப்பு.

ஆட்டிச் சொல்ல முடியுதில்லை-  தலையை

ஆம் என்றும், இல்லை என்றும்.

பின்னாலே பார்ப்பதற்கு நான்

பிரள வேண்டும் பாதி வட்டம்.

முயன்றுதான் பார்த்தேன்- பல மருந்தும்

முன்னேற்றம் மட்டும் பூச்சியமே.

வாட்டி இழு எருக்கிலையை

வலி மறையும் என்றார் பாட்டி.

வாட்டி,வாட்டி இழுத்துப் பார்த்தேன் -பிடரி

மயிரெல்லாம் எரிந்து போச்சு.

வா வீ கியூ மணம் வருதே நானும்

வரட்டா ஒரு பிடிபிடிக்க என

மயிரெரியும் வாசனையை என்

மச்சான் வா வி கியூ என நினைத்துக் கேட்டான்.

டைகிளோ பீனைல் போடு என

ரை கட்டிய நண்பன் சொன்னான்.

போட்டுத்தான் பார்த்தேன் நானும்

ம்கும் போகவில்லை தசைப்பிடிப்பு.

பிசியோ தெரபி சிகிச்சை செய்யும்

பிரிந்து போன பழைய காதலி சொன்னாள்.

செய்துதான் பார்த்தேன்-

செலவாய்ப் போச்சு பெருமளவு.

தலையணையை மாற்றுங்கள் அத்தான் 

தயவாய் எந்தன் மனைவி சொன்னாள்.

மாற்றினேன் தலையணையை-அதிசயம்,

மாயமாச்சு தசைப்பிடிப்பு.

கட்டிப்பிடித்து உம்ம்ம்மா கொடுத்து

காரணம் என்ன என்று கேட்டேன்.

தலையணைக்கும் மெத்தைக்கும்

சரியான பொருத்தமில்லை,

மற்றையவர் பொருந்தாட்டியும்

நமக்கும் வலிகள் வரும்.

மனைவி சொன்னாள் இந்த உண்மை.

மெத்தையை மாற்றுதற்கு

மெத்தச் செலவு ,

அதனாலேதான்- தலையணையில்

கையை வைத்தேன் தயங்காமல்

இதையும் சொன்னாள்.

மனைவி சொல் மந்திரமாம் -மட்டுமில்லை

மனைவி சொல் மருந்துமாகும்.

ஆதலினால் மனைவி சொல்லைக்

கருத்தில் கொள்ளும் -அது உங்கள் துன்பம் போக்கும்,துயரம் தீர்க்கும் !.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நந்தி said:

கட்டிப்பிடித்து உம்ம்ம்மா கொடுத்து

காரணம் என்ன என்று கேட்டேன்.

தலையணைக்கும் மெத்தைக்கும்

சரியான பொருத்தமில்லை,

மற்றையவர் பொருந்தாட்டியும்

நமக்கும் வலிகள் வரும்.

கவிதை நன்று....நந்தி..!

சிவப்பு நிறத்தில் உள்ள வரிகள்.....ஒரு மாபெரும் தத்துவத்தைச் சொல்லி நிற்க்கின்றன!

46 minutes ago, நந்தி said:

தலையணையை மாற்றுங்கள் அத்தான் 

தயவாய் எந்தன் மனைவி சொன்னாள்.

மாற்றினேன் தலையணையை-அதிசயம்,

மாயமாச்சு தசைப்பிடிப்பு.

ஆரோக்கியம் சம்பந்தமான முக்கிய ஓர் அறிவுரையைக் கவிதையாக வடித்துள்ளீர்கள், நந்தி. இப்படி சிறு சிறு காரணங்கள் பலவற்றைப் புறக்கணிப்பதாலும் நமது ஆரோக்கியம் கெடுகிறது. 

மேலும் தொடருங்கள் நந்தி 🙂

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தசைப்பிடிப்பு தரமான ஒரு கவிதையை எங்களுக்கு தந்திருக்கு......நல்ல நகைச்சுவையுடன் கூடிய கவிதை நந்தி, தொடர்ந்து எழுதுங்கள்.........!   👍

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நகைச்சுவையான கவிதை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புங்கையூரன் said:

கவிதை நன்று....நந்தி..!

சிவப்பு நிறத்தில் உள்ள வரிகள்.....ஒரு மாபெரும் தத்துவத்தைச் சொல்லி நிற்க்கின்றன!

மிக்க நன்றி புங்கையூரன்.

8 hours ago, மல்லிகை வாசம் said:

ஆரோக்கியம் சம்பந்தமான முக்கிய ஓர் அறிவுரையைக் கவிதையாக வடித்துள்ளீர்கள், நந்தி. இப்படி சிறு சிறு காரணங்கள் பலவற்றைப் புறக்கணிப்பதாலும் நமது ஆரோக்கியம் கெடுகிறது. 

மேலும் தொடருங்கள் நந்தி 🙂

நன்றி சகோதரா.

3 hours ago, suvy said:

ஒரு தசைப்பிடிப்பு தரமான ஒரு கவிதையை எங்களுக்கு தந்திருக்கு......நல்ல நகைச்சுவையுடன் கூடிய கவிதை நந்தி, தொடர்ந்து எழுதுங்கள்.........!   👍

நன்றி நண்பா.யாவும் கற்பனையே.

Edited by நந்தி

  • கருத்துக்கள உறவுகள்

 நல்ல நகைச்சுவையுடனான கவிதை .மனைவியின் சொல்லும்  மருந்தாக அமையும் 
 

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுக்குள்ள நந்திபோல ஒருத்தி குந்திக் கொண்டிருக்க ஊரெல்லாம் மருந்து கேட்டு கடைசியில வீட்டுக்காரியிடம் கேட்க வேணுமென்று தோன்றியுள்ளது. நல்ல நகைச்சுவையுடன் கவ pதை எழுதியுள்ளீர்கள் தொடர்ந்தும் எழுதுங்கள் நந்தி.

  • கருத்துக்கள உறவுகள்

புதிதாய் வந்த பலர் புதுமையா கலுக்குகிறார்கள்.

கடலை வடையுடன் ஒருவர் வந்தால், கழுத்துப் பிடிப்புடன் இன்னுமொருவர் வருகிறார்.

வாருங்கள் வணக்கம், வழங்குங்கள் வரிசை கட்டி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 hours ago, நந்தி said:

மற்றையவர் பொருந்தாட்டியும்

நமக்கும் வலிகள் வரும்.

மனைவி சொன்னாள் இந்த உண்மை.

மெத்தையை மாற்றுதற்கு

மெத்தச் செலவு ,

அதனாலேதான்- தலையணையில்

கையை வைத்தேன் தயங்காமல்

இதையும் சொன்னாள்.

மனைவி சொல் மந்திரமாம் -மட்டுமில்லை

மனைவி சொல் மருந்துமாகும்.

ஆதலினால் மனைவி சொல்லைக்

கருத்தில் கொள்ளும் -அது உங்கள் துன்பம் போக்கும்,துயரம் தீர்க்கும் !.

 

அடி பலம் போல் இருக்கின்றது....

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அடி பலம் போல் இருக்கின்றது....

 

மனைவியின் கையால் அடி வாங்காத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா அண்ணன்.வாங்கிப்பாருங்கள் வாழ்க்கை ருசிக்கும்.அடிக்கிற கைதான் அணைக்கும்.அது மட்டுமில்ல அதுக்கும் மேல.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/4/2019 at 5:47 AM, நந்தி said:

மற்றையவர் பொருந்தாட்டியும்

நமக்கும் வலிகள் வரும்.

மனைவி சொன்னாள் இந்த உண்மை.

மனைவி சொல் மந்திரமோ! மருந்தோ!! ஏன் சொன்னாள்? எதற்காகச் சொன்னாள்?? நந்தியவர்களுக்கு இன்னுமா புரியவில்லை.!! 🤣🤣🤣🤣 

கவிதை அருமை நந்தி. 👏

  • கருத்துக்கள உறவுகள்

ரசிக்கத்தக்க  கவிதை  வாழ்த்துக்கள்  நந்தி   நல்வரவுகளும்.  

மனைவி  சொல்லே   மந்திரம்  எனும்  தந்திரத்தைத்    தானே  இந்த  அப்பாவி  ஆண்வர்க்கம்  காலாகாலமாக  கடைப்பிடித்து    வருகிறது. ஆப்பிள்  ஆய்ந்து  கொடுத்ததில்  தொடங்கி   மாயமானைத்  தேடி  ஓடுப்பட்டதில்    தொடர்ந்து  இன்று  வரையும்  .. ஓய   மாட்டோம் மாட்டோம்    …

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.