Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடையையும் மீறி ஹிஜாப் அணிந்து சென்ற ஆசிரியை விரட்டி அடிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

அய்யா பிச்சை வேணாம், நாயை பிடியுங்கோ....

உலகத்தில மிக மோசமான தாக்குதல் உங்க நடந்திருக்கு. சரத் பொன்னர் வேற 13ம் திகதி வெடியை வைக்கபோகினமாம் எண்டு சொல்லுறார்.

மனிசன் வெடிப்பயத்தில, இருக்கிறான்..... எங்களுக்கு இவையள் படிப்பிச்சு கிழிக்க தேவை இல்லை எண்டது தான் இப்ப சனத்தோட நிலை.

இரண்டொரு மாதம் போக நிலைப்பாடு மாறலாம். இப்ப வேணாம்.
 

இப்படி ஒரு பயம் இருந்தால் அது அநாவசியமானது என்பதை விளக்குவதற்கு, இதனால் பிள்ளைகளின் படிப்பு பாதிக்கும் என்பதை விளக்குவதற்கு, சிங்கள பாடசாலைகளோ, சம்பிக்க ரணவக்க போன்ற   இனவாதிகளே செய்யாத ஒரு விடயத்தை நாம் செய்வதால் ஏற்படப் போகும் பிரதிகூலங்களை விளக்குவதற்கு, ஒரு ஆள்கூட அந்த மக்கள் மத்தியில் இல்லை என்பதை நினக்கும் போது, அவர்களுக்கா பரிதாபபட மட்டுமே முடிகிறது.

தவிர யாரின் எடுபிடியாகவேண்டிய தேவை எனக்கு கொஞ்சமும் இல்லை.

இந்த இனம் மறுபடியும், மறுபடியும் மூர்கதனமகா மோதி மொக்கேனப் பட்டுத்தான் வாழ வேண்டும் என்பதுதான் விதி போலும்.

  • Replies 141
  • Views 13.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

இப்படி ஒரு பயம் இருந்தால் அது அநாவசியமானது என்பதை விளக்குவதற்கு, இதனால் பிள்ளைகளின் படிப்பு பாதிக்கும் என்பதை விளக்குவதற்கு, சிங்கள பாடசாலைகளோ, சம்பிக்க ரணவக்க போன்ற   இனவாதிகளே செய்யாத ஒரு விடயத்தை நாம் செய்வதால் ஏற்படப் போகும் பிரதிகூலங்களை விளக்குவதற்கு, ஒரு ஆள்கூட அந்த மக்கள் மத்தியில் இல்லை என்பதை நினக்கும் போது, அவர்களுக்கா பரிதாபபட மட்டுமே முடிகிறது.

தவிர யாரின் எடுபிடியாகவேண்டிய தேவை எனக்கு கொஞ்சமும் இல்லை.

இந்த இனம் மறுபடியும், மறுபடியும் மூர்கதனமகா மோதி மொக்கேனப் பட்டுத்தான் வாழ வேண்டும் என்பதுதான் விதி போலும்.

சம்பக்க ரணவகையின் மக்கள் பாதிப்புறவில்லை.
யார், யார், அடிப்படைவாதிகள் இல்லை என்று தெரியாதவரை, இப்போதைக்கு படிப்பும் வேணாம், பள்ளிக்கூடமும் வேணாம்.

உயிர் பிழைச்சா போதும்... மூடர்களாக இருந்து விட்டு போறம். ஆனாலும் உயிர் முக்கியம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

பர்தாவை போட்ட படி எந்த குண்டுதாரியும் வரவில்லை.

ஒருவர் குண்டுவெடிப்புக்கு மறுநாள் வத்தளையில் மாட்டினார். ஆனால் பொலிசே அவர் முஸ்லீம் இல்லை எனவும், ஒரு பெண்ணை (கள்ள உறவு) சந்திக்கவே இப்படி போனார் என்றும் கூறியுளது.

மற்றைய வீடியோ எங்கே எடுத்தது என்ற விளக்கம் ஏதுமில்லை. 

என்ன செய்வது, சிங்களமும் தெரியாமல், முகப்புத்தகத்தில் வருவதையே செய்தி என நம்பி, அதை வைத்தே தம் நச்சு எண்ணக்களுக்கு மேலும் வலுச்சேர்த்து, அதயே கருத்து என்று பரப்பும் அளவில்தாம் நம்மில் சிலர் இருக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

முதல் நாள் குண்டு வெடிப்பு, அடுத்தநாள், முஸ்லீம் உடையில் கள்ள உறவிடம் போனாராம்.

பாதுகாப்புக்கு பொறுப்பான ஜனாதிபதி முதல், கடைசி போலீஸ் கான்ஸ்டபிள் வரை பொறுப்பு இல்லாத நாட்டில், மக்கள் யாரையுமே நம்ம முடியாது.

அவர்களுக்கு ஞான உபதேசம் செய்யவும் நாங்கள், பெரிய பிஸ்தாக்கள் இல்லை.  

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:


யார், யார், அடிப்படைவாதிகள் இல்லை என்று தெரியாதவரை, இப்போதைக்கு படிப்பும் வேணாம், பள்ளிக்கூடமும் வேணாம்.

உயிர் பிழைச்சா போதும்... மூடர்களாக இருந்து விட்டு போறம். ஆனாலும் உயிர் முக்கியம்.

அப்படியாயின் இலங்கையில் இருக்கும் ஒரு தமிழனும் பஸ்சில், ரெயினில், பொது இடத்தில் போக முடியாது, ஏனென்றால் அங்கேயும் ஒரு ஹிஜாபி வரலாம். அல்லது ஒரு தாடி வைத்தவர் (முஸ்லீமாக கூட இருக்க வேண்டியதில்லை). வரலாம்.

வகுப்பில் இருந்து நேரா பதுங்கு குளிக்குள் ஓடிபோயிருந்துட்டு மீண்டும் வகுப்பில் வந்திருந்து படித்த இனம்.

இன்று நிழலை கண்டு மருளும் நிலை. 

#பரிதாபம்

2 minutes ago, Nathamuni said:

முதல் நாள் குண்டு வெடிப்பு, அடுத்தநாள், முஸ்லீம் உடையில் கள்ள உறவிடம் போனாராம்.

பாதுகாப்புக்கு பொறுப்பான ஜனாதிபதி முதல், கடைசி போலீஸ் கான்ஸ்டபிள் வரை பொறுப்பு இல்லாத நாட்டில், மக்கள் யாரையுமே நம்ம முடியாது.

அவர்களுக்கு ஞான உபதேசம் செய்யவும் நாங்கள், பெரிய பிஸ்தாக்கள் இல்லை.  

😂 நாந்தான் சொன்னேனே கூமுட்டைகள் எல்லா இனத்திலும் இருக்கும் எண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 
6 minutes ago, goshan_che said:

அப்படியாயின் இலங்கையில் இருக்கும் ஒரு தமிழனும் பஸ்சில், ரெயினில், பொது இடத்தில் போக முடியாது, ஏனென்றால் அங்கேயும் ஒரு ஹிஜாபி வரலாம். அல்லது ஒரு தாடி வைத்தவர் (முஸ்லீமாக கூட இருக்க வேண்டியதில்லை). வரலாம்.

வகுப்பில் இருந்து நேரா பதுங்கு குளிக்குள் ஓடிபோயிருந்துட்டு மீண்டும் வகுப்பில் வந்திருந்து படித்த இனம்.

இன்று நிழலை கண்டு மருளும் நிலை. 

#பரிதாபம்

😂 நாந்தான் சொன்னேனே எல்லா இனத்திலும் இருக்கும் எண்டு. 

கூமுட்டைகள்: கூல்.... பாஸ்... இருந்துட்டு போறம்.... இன்னோரு வெடி வேணாம்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை கூமுட்டை என்று சொல்லவிலை நாமு. ஆனா வெடி விழும், இலங்கையில் தமிழர் எல்லாரும் வீட்டுகுள்ளே பூட்டிக்கொண்டு இருங்கோ என்றது கொஞ்சம் ஓவர்தான்.

கனபேருக்கு அட்டாச்ட் பாத் ரூம் வேற இல்லை. அது வெடிய விட பெரிய ஆபத்தா எல்லே போய்டும்😂

  • கருத்துக்கள உறவுகள்

சட்டம் அது...சட்டத்தை மீறினவையை தண்டிக்காமல் இடமற்றம்...இங்கை 15 வருசமா இருந்தபடத்துக்கு ஒருவருசம் சொந்தம் கொண்டாடினதுக்கு  ஜெயில்...சம் ஆப்பம் சாப்பிட்டுவிட்டு ..தூங்கிவழியுது.....

Edited by alvayan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

முதல் நாள் குண்டு வெடிப்பு, அடுத்தநாள், முஸ்லீம் உடையில் கள்ள உறவிடம் போனாராம்.

பாதுகாப்புக்கு பொறுப்பான ஜனாதிபதி முதல், கடைசி போலீஸ் கான்ஸ்டபிள் வரை பொறுப்பு இல்லாத நாட்டில், மக்கள் யாரையுமே நம்ம முடியாது.

அவர்களுக்கு ஞான உபதேசம் செய்யவும் நாங்கள், பெரிய பிஸ்தாக்கள் இல்லை.  

உப்படியான கதைகளை சொறீலங்கா பொலிஸ் நம்பும்.. ஏனெனில் அதற்கு கிடைத்த உளவுத்தகவலையே காசை வாங்கிக்கிட்டு கண்டும் காணாமலும் விட்ட பொலிஸ் தானே.

ஆனால் மக்கள் நம்பமாட்டார்கள்.

இங்கும் சிலர்.. சொறீலங்கா பொலிஸ் மாதிரித்தான். விடுங்க முனி. 

பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் பாதுகாப்பை நோக்கி எடுக்கும் நடவடிக்கைகளை யாரும் தடுக்க முடியாது. சட்டத்துக்கு முரணாக அவர்கள் போகவில்லையே.  அதுதான் இப்பொழுது முக்கியம். 

  • கருத்துக்கள உறவுகள்
On 5/8/2019 at 6:54 PM, Nathamuni said:

அய்யா பிச்சை வேணாம், நாயை பிடியுங்கோ....

உலகத்தில மிக மோசமான தாக்குதல் உங்க நடந்திருக்கு. சரத் பொன்னர் வேற 13ம் திகதி வெடி வைக்கபோகினமாம் எண்டு சொல்லுறார். 

150ல 50 தான் பிடிபட்டிருக்கு. மிச்சம் 100 எங்க எண்டு தெரியல்லையாம்.

மனிசன் வெடிப்பயத்தில, இருக்கிறான்..... எங்களுக்கு இவையள் படிப்பிச்சு கிழிக்க தேவை இல்லை எண்டது தான் இப்ப சனத்தோட நிலை.

தமிழே வேண்டாம், சிங்கள வாத்தியிடம்  சிங்களத்திலே  படிக்கலாம்.... உந்த பயத்தோட பள்ளிக்கூடம் போற வேலை வேண்டாம்....

இரண்டொரு மாதம் போக நிலைப்பாடு மாறலாம். இப்ப வேணாம்.

உவர் ஒருத்தர், பிரச்னை இல்லை எண்டு சான்றிதழ் குடுத்த மாதிரி கதைக்கிறார். வீடியோ எடுத்து சோசியல் மீடியாவிலே போட்டதன் நோக்கம் என்ன? எப்படிப் பட்ட கில்லாடிகள்.

நாதமுனி, இங்கே கருத்தெழுதும் மற்றவர்களின் முஸ்லிம் குரோதம் எனக்குப் புரிகிறது, அவர்கள் அப்படித் தான் எல்லா விடயத்திலும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்த மாதிரியான நடவடிக்கைகளால் மேலதிக குண்டு வெடிப்புகளைத் தடுக்க முடியும் என்று உண்மையிலேயே நம்புகிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

மத அடிப்படைவாதிகள் உண்மையாகவே தாம் என்னசெய்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டுதான் செய்கிறார்களா என்று எண்ணத் தோன்றுகிறது. இல்லாவிட்டால் குழந்தைகளுடன் கூட்டம் கூட்டமாக தேவாலயத்திற்குள் வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அப்பாவிகள் நடுவிலே போய் அமைதியாகத் தான் கொண்டுபோன குண்டை வெடிக்கவைத்து தானும் செத்துக் கூடவே அப்பாவிகளையும் கொல்ல மனம் மரத்திருக்க வேண்டும்.

மற்றையவர்களைக் கொல்வதை மட்டுமே தமது வாழ்வின் ஒரே குறிக்கோளாகக் கொண்டவரை, இத்தாக்குதல்களை நடத்துபவனைப் பிடித்தால் ஒழிய கட்டுப்படுத்துவது கடிணம்.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Justin said:

நாதமுனி, இங்கே கருத்தெழுதும் மற்றவர்களின் முஸ்லிம் குரோதம் எனக்குப் புரிகிறது, அவர்கள் அப்படித் தான் எல்லா விடயத்திலும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்த மாதிரியான நடவடிக்கைகளால் மேலதிக குண்டு வெடிப்புகளைத் தடுக்க முடியும் என்று உண்மையிலேயே நம்புகிறீர்களா?

இது குரோதம் என்று சொல்ல முடியாது. மைத்திரி, இன்று, பாதுகாப்பு விடயங்கள் முடியும் வரை முஸ்லீம் சமூகம் சில அசவுகரியங்களை தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் என்கிறார்.

அரசே, பாதுகாப்பு உத்தரவாதம் தரும் நிலையிலும் இல்லை. செய்திகளை பார்க்கும் போது, மைத்திரி, புலனாய்வு தகவல்களை வேண்டுமென்றே புறக்கணித்து, பையை தூக்கிக் கொண்டு, திருப்பதி, சிங்கப்பூர் என்று போய் இருக்கிறார்.

கிறித்தவ தமிழர்கள், கச்சிதமாக தேர்வு செய்து இலக்கு வைக்கப் பட்டு கொல்லப்பட்டுள்ளனர். ஏன், ஒரு சிங்கள இலக்கும் இல்லை. இறந்தவர்கள் அனைவரும், உள்நாட்டு, வெளிநாட்டு கிறிஸ்தவர்கள். 

வெளிநாட்டவர்கள், ஒன்றில் ஓடி விட்டனர், அல்லது இனி வரப்போவது இல்லை. 

உள்ளூர் மக்கள் தங்களை பாதுகாக்கும் வழிகளை தேடுவது தவறாக முடியாது. அதில் தாக்கியவர்களை சந்தேகத்துடன் பார்ப்பது தவிர்க்க முடியாது. 

மக்கள், சந்தேகத்துடனும், அலெர்ட் ஆகவும் இருக்கும் வரை, இனியொருவர் முதுகில் பையுடன் வர முடியாது.

வேறு வழிகளில் மட்டுமே...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட பெண்டுகள் எண்டால் அங்க இருக்கிற கோப்பியை இங்க எடுத்துத் தாறதுக்கே கெஞ்ச வேண்டிக் கிடக்கு ।    இவளளவை என்னடாவெண்டால் மனுஷன் சொல்லிப் போட்டார் எண்டு வெயிலத்துக்குள்ளயும் வேர்க்க விறுவிறுக்க மூடிக் கட்டிக் கொண்டு திரியிறாளவை  🙄   

 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, சாமானியன் said:

எங்கட பெண்டுகள் எண்டால் அங்க இருக்கிற கோப்பியை இங்க எடுத்துத் தாறதுக்கே கெஞ்ச வேண்டிக் கிடக்கு ।    இவளளவை என்னடாவெண்டால் மனுஷன் சொல்லிப் போட்டார் எண்டு வெயிலத்துக்குள்ளயும் வேர்க்க விறுவிறுக்க மூடிக் கட்டிக் கொண்டு திரியிறாளவை  🙄   

சாமானியன்.... சரியான கவலையிலை, கருத்து எழுதினமாதிரி இருக்கு.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சாமானியன் said:

எங்கட பெண்டுகள் எண்டால் அங்க இருக்கிற கோப்பியை இங்க எடுத்துத் தாறதுக்கே கெஞ்ச வேண்டிக் கிடக்கு ।    இவளளவை என்னடாவெண்டால் மனுஷன் சொல்லிப் போட்டார் எண்டு வெயிலத்துக்குள்ளயும் வேர்க்க விறுவிறுக்க மூடிக் கட்டிக் கொண்டு திரியிறாளவை  🙄   

 

எங்கன்டயளும் ஆறு முழ சீலையை கட்டிக்கொண்டு இருந்தவையள்.....வெள்ளையள் வந்த பின்புதான் கொஞ்சம் முன்னேற்றம் 😄

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, putthan said:

எங்கன்டயளும் ஆறு முழ சீலையை கட்டிக்கொண்டு இருந்தவையள்.....வெள்ளையள் வந்த பின்புதான் கொஞ்சம் முன்னேற்றம் 😄

அதுவும் இடுப்புக்கு கீழ தான்.

போர்த்துகேயன் வரேக்க... அதுதான் கோலம். ஆனாலும் பெண்கள் மேலாடை அணிவதில், சாதிய வேறுபாடு காரணமாக தடைகள் இருந்தன.

இலங்கையில் மாறினாலும், இந்தியாவில் மிக அண்மைக் காலம் வரை இருந்தது.

6 hours ago, சாமானியன் said:

எங்கட பெண்டுகள் எண்டால் அங்க இருக்கிற கோப்பியை இங்க எடுத்துத் தாறதுக்கே கெஞ்ச வேண்டிக் கிடக்கு ।    இவளளவை என்னடாவெண்டால் மனுஷன் சொல்லிப் போட்டார் எண்டு வெயிலத்துக்குள்ளயும் வேர்க்க விறுவிறுக்க மூடிக் கட்டிக் கொண்டு திரியிறாளவை  🙄   

 

நீங்கள் வேற சாமானியன் எண்டுறியள்..

நீங்களே ஊத்தின கோப்பியை எடுத்து குடிக்க, ஆள் தேடினா அப்படித்தான் சாமானியன்.

அதுக்கு தான் சொல்லுறது, பேரிலயாவது, முனி, தனி என்று சன்னாசி தனம் இருக்கோணும்...

பேரை மாத்தி.... 'பெண்ணே, இந்தா.. விபூதி.... கொண்டா அந்த கோப்பியை' என்று சொல்லிப் பாருங்கோ....

(சாத்து வாங்கினால், கம்பெனி பொறுப்பல்ல, சொல்லாமல் சன்னியாசம் கிளப்பலாம்)
 

  • கருத்துக்கள உறவுகள்
ஆசிரியர் சேவை சங்கத்தின் வன்மையான கண்டிப்பு:
 
 
பாடசாலைகளில் தோன்றும் பல்வேறு முரண்பாடுகளில் தலையிடும் உரிமை அதிபர்களுக்கு உள்ளதே தவிர  பெற்றோர்கள் சட்டத்தை கையில் எடுத்து பாடசாலையின் நிர்வாக நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்தல் கூடாது .
 
இது மாணவர்களின் கல்வியை பாதிக்கும் என்கிறார். இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின்  பொதுச்செயலாளர் மகிந்த ஜெயசிங்க.
 
திருகோணமலை மக்கள் விடுதலை காரியாலயத்தில் நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பொன்றின் போதே மேற்படி கருத்தை தெரிவித்தார். நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக மக்களின் இயல்பு வாழக்கை மற்றும் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தன.
 
 தற்போது அவை வழமைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இங்கு விஜயம் செய்த மகிந்த ஜெயசிங்க அவர்கள். அண்மையில் அவிசாவெலை புவக்பிட்டி பாடசாலை முஸ்லீம் பெண் ஆசிரியர்கள் சர்ச்சை பற்றி குறிப்பிட்டார்.
 
அங்கு கடமை புரியும் பண்ணிரண்டு பெண் ஆசிரியர்களும்  அபாயா அணிந்து சென்ற காரணத்திற்காக அப்பாடசாலை பெற்றோர்களால் வழிமறிக்கப்பட்டு அபாயாவை கழற்றி சாரி அணிந்து வருமாறு கட்டாயப்படுத்தப் பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் மேற்படி விடயமானது சட்ட விரோதமானது.
 
 பெற்றோர்கள் சட்டத்தை கையில் எடுக்க முடியாது.  இது அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் அல்லது வலயக் கல்வி அலுவலரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்க வேண்டும் அதனை விடுத்து தமது பிள்ளைகளுக்கு கல்வி சொல்லித்தரும் ஆசிரியர்களை பயங்கரவாதிகளாக நோக்குவதும் அவர்களை நடுவீதியில் வைத்து அவமானப்படுத்திடுவதும் எந்த சட்டத்தில் உள்ளது.என்றார் .
 
தொடர்ந்து பேசிய அவர் மேற்படி பிரதேசங்கள் மிகுந்த ஆசிரியர் தட்டுபாட்டைக் கொண்ட பிரதேசமாகும். ஏற்கனவே மேற்படி பாடசாலையில்ஆசிரியர் தட்டுப்பாடு உள்ளது.
 
இந்த நிலையில் கணித ஆசிரியர் உற்பட 12 ஆசிரியர்கள் இடமாற்றமானது ஈடு செய்ய முடியாத ஒன்றாகும் இதனால் பிள்ளைகளின் கல்வி தான் மிகுந்த பாதிப்பை அடையும்.  இந்தப் பெற்றோருக்கு முதலில் தெளிவு வேண்டும் முகத்தை மறைத்தல் கூடாது என்று தான் அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. ஆனால் அபாயாவை நீக்குமாறு கூறவில்லை.
 
பெற்றோருக்கு சந்தேகம் இருப்பின் அவர்கள் அதிபரை நாடி இருக்க வேண்டும்  எனவே மேற்படி செயற்பாடுகளினால்  பிள்ளைகளின் கல்வியை எவ்வாறு ஈடு செய்யப்போகிறார்கள் என்பது தற்போது மிகப் பெரிய பிரச்சினையாகும் என்று  குறிப்பிட்டார்.
 

- ஹஸ்பர் A. ஹலீம் -

 
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Nathamuni said:

இது குரோதம் என்று சொல்ல முடியாது. மைத்திரி, இன்று, பாதுகாப்பு விடயங்கள் முடியும் வரை முஸ்லீம் சமூகம் சில அசவுகரியங்களை தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் என்கிறார்.

அரசே, பாதுகாப்பு உத்தரவாதம் தரும் நிலையிலும் இல்லை. செய்திகளை பார்க்கும் போது, மைத்திரி, புலனாய்வு தகவல்களை வேண்டுமென்றே புறக்கணித்து, பையை தூக்கிக் கொண்டு, திருப்பதி, சிங்கப்பூர் என்று போய் இருக்கிறார்.

கிறித்தவ தமிழர்கள், கச்சிதமாக தேர்வு செய்து இலக்கு வைக்கப் பட்டு கொல்லப்பட்டுள்ளனர். ஏன், ஒரு சிங்கள இலக்கும் இல்லை. இறந்தவர்கள் அனைவரும், உள்நாட்டு, வெளிநாட்டு கிறிஸ்தவர்கள். 

வெளிநாட்டவர்கள், ஒன்றில் ஓடி விட்டனர், அல்லது இனி வரப்போவது இல்லை. 

உள்ளூர் மக்கள் தங்களை பாதுகாக்கும் வழிகளை தேடுவது தவறாக முடியாது. அதில் தாக்கியவர்களை சந்தேகத்துடன் பார்ப்பது தவிர்க்க முடியாது. 

மக்கள், சந்தேகத்துடனும், அலெர்ட் ஆகவும் இருக்கும் வரை, இனியொருவர் முதுகில் பையுடன் வர முடியாது.

வேறு வழிகளில் மட்டுமே...

நாதமுனி, மாட்டைப் பற்றிக் கேள்வி கேட்டால், மாடு கட்டிய மரத்தைப் பற்றி விளாவாரியாக எழுதியிருக்கிறீர்கள்!, நன்றி. இந்த vigilante கள் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்வதும், அதை நாங்கள் வெளிநாட்டில் இருந்து முஸ்லிம் விரோதக் கருத்துகளால் சிலாகிப்பதும் பயங்கரவாதத் தாக்குதல்களை உடனடியாகத் தடுக்கவும் உதவாது, நீண்ட காலப் போக்கிலும் குறைக்காது, வேண்டுமானால் பாதிக்கப் படும் சாதாரண முஸ்லிம்கள் எதிர்காலத்தில் இது போன்ற தாக்குதல்களை நடத்தவோ அல்லது தெரிந்தும் தகவல் தெரிவிக்காமல் இருக்கவோ இது தூண்டும்! கீழ்வரும் கேள்விகளை உங்களுக்கும், இங்கே முஸ்லிம் விரோதம் பரப்பும் நண்பர்களுக்கும் முன்வைக்கிறேன். பதில்கள் தேவையில்லை, ஆனால் உங்கள் reflection இற்காக மட்டும் இவை:

1. தாக்குதல் குழுவின் முன்னைய செயல்பாடுகள் பற்றி அசாத் சாலி என்ற முஸ்லிம் தலைவர் உட்பட சாதாரண முஸ்லிம்களும் முன்னரே தகவல் கொடுத்திருக்கிறார்கள் என்பது fact. இதுவே இந்தத் தாக்குதல்களை அவர்கள் ஆதரிக்கவோ பாராட்டவோ இல்லை என்பதன் ஆதாரமாக இருக்கும் போது, வேறென்ன சாதாரண முஸ்லிம்கள் மேலதிகமாகச் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

2.சாதாரண தமிழர்களைச் சந்தேகநபர்களாகச் சிங்களவர்கள் பார்த்ததால் நாம் இலங்கையில் பட்ட துன்பங்கள், அவமானங்கள், கைதுகள் நினைவிருக்கிறதா? இதை இன்னொரு சமூகம் மீது திணிக்க ஏன் நாம் சந்தோஷப் படுகிறோம்? இந்த சாதாரண தமிழர்கள் பலர் இன்றும் அரசியற் கைதிகளாக இருக்கும் நிலையில், இந்த முஸ்லிம் குரோதம் எங்களுக்கே கூசவில்லையா? இந்த உரிமை மீறல்களைக் காட்டித் தானே நாங்கள் சிறந்த வாழ்நிலைமைகள் கொண்ட நாடுகளுக்கு வந்து வாழ ஆரம்பித்தோம்?

3. உலகின் வேறு எந்த நாட்டில், இப்படி பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்பற்ற சாதாரண மக்களைத் துன்புறுத்துவதும் demonize செய்வதும்  அமைதியைக் கொண்டு வந்திருக்கிறது? மேற்கில் 2001 இல் இருந்து தடுக்கப் பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் எல்லாம் அடிப்படைவாத அமைப்புகளுள் ஊடுருவி உளவு பார்த்த முஸ்லிம்களால் தான் தடுக்கப் பட முடிந்தது என்பதை அறிவீர்களா? இதற்காகவே முஸ்லிம்களை அன்னியப்படுத்துவதை மேற்கு நாடுகளின்பாதுகாப்புத் துறையினர் எதிர்க்கிறார்கள் என்றாவது அறிவீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, goshan_che said:
ஆசிரியர் சேவை சங்கத்தின் வன்மையான கண்டிப்பு:
 
 
 மேற்படி பிரதேசங்கள் மிகுந்த ஆசிரியர் தட்டுபாட்டைக் கொண்ட பிரதேசமாகும். ஏற்கனவே மேற்படி பாடசாலையில்ஆசிரியர் தட்டுப்பாடு உள்ளது.
 
இந்த நிலையில் கணித ஆசிரியர் உற்பட 12 ஆசிரியர்கள் இடமாற்றமானது ஈடு செய்ய முடியாத ஒன்றாகும் இதனால் பிள்ளைகளின் கல்வி தான் மிகுந்த பாதிப்பை அடையும்.  இந்தப் பெற்றோருக்கு முதலில் தெளிவு வேண்டும் முகத்தை மறைத்தல் கூடாது என்று தான் அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. ஆனால் அபாயாவை நீக்குமாறு கூறவில்லை.
 

 நடுநிலை சிங்கம்:  சேவை மனப்பான்மையுடைய யாராவது வடக்கு கிழக்கிலிருந்தோ அல்லது புலத்தில் இருந்தோ போய்த் தான் ஆசிரியர் வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் போல?

தேசிக்காய்கள்: "புது ஆசிரியர்களைத் தேடித் தர வேண்டியது சிறிலங்கா அரசின் பொறுப்பல்லவா? அதைச் செய்யாமல் விடுவதால் அவர்கள் தான் தமிழர்களின் கல்வியைக் கருவறுக்கும் சூத்திரதாரிகள் (எங்களுக்கு முஸ்லிம் ஆசிரியர்களைத் துரத்த மட்டும் தான் தெரியும்!)"  

  • கருத்துக்கள உறவுகள்

 

இவர்கள்  குறானுக்கு  மட்டுமே கட்டுப்படுவார்கள்

அதிலுள்ள   என்ன  அநியாயமாக  இருந்தாலும்  கண்ணை  மூடிக்கொண்டு பின்  பற்றுவார்கள்

தனது  மாணவர்களின்  படிப்பு  பாழாகும்   என்பதெல்லாம்  இவர்களுக்கு????

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Justin said:

நாதமுனி, மாட்டைப் பற்றிக் கேள்வி கேட்டால், மாடு கட்டிய மரத்தைப் பற்றி விளாவாரியாக எழுதியிருக்கிறீர்கள்!, நன்றி. இந்த vigilante கள் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்வதும், அதை நாங்கள் வெளிநாட்டில் இருந்து முஸ்லிம் விரோதக் கருத்துகளால் சிலாகிப்பதும் பயங்கரவாதத் தாக்குதல்களை உடனடியாகத் தடுக்கவும் உதவாது, நீண்ட காலப் போக்கிலும் குறைக்காது, வேண்டுமானால் பாதிக்கப் படும் சாதாரண முஸ்லிம்கள் எதிர்காலத்தில் இது போன்ற தாக்குதல்களை நடத்தவோ அல்லது தெரிந்தும் தகவல் தெரிவிக்காமல் இருக்கவோ இது தூண்டும்! கீழ்வரும் கேள்விகளை உங்களுக்கும், இங்கே முஸ்லிம் விரோதம் பரப்பும் நண்பர்களுக்கும் முன்வைக்கிறேன். பதில்கள் தேவையில்லை, ஆனால் உங்கள் reflection இற்காக மட்டும் இவை:

1. தாக்குதல் குழுவின் முன்னைய செயல்பாடுகள் பற்றி அசாத் சாலி என்ற முஸ்லிம் தலைவர் உட்பட சாதாரண முஸ்லிம்களும் முன்னரே தகவல் கொடுத்திருக்கிறார்கள் என்பது fact. இதுவே இந்தத் தாக்குதல்களை அவர்கள் ஆதரிக்கவோ பாராட்டவோ இல்லை என்பதன் ஆதாரமாக இருக்கும் போது, வேறென்ன சாதாரண முஸ்லிம்கள் மேலதிகமாகச் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

2.சாதாரண தமிழர்களைச் சந்தேகநபர்களாகச் சிங்களவர்கள் பார்த்ததால் நாம் இலங்கையில் பட்ட துன்பங்கள், அவமானங்கள், கைதுகள் நினைவிருக்கிறதா? இதை இன்னொரு சமூகம் மீது திணிக்க ஏன் நாம் சந்தோஷப் படுகிறோம்? இந்த சாதாரண தமிழர்கள் பலர் இன்றும் அரசியற் கைதிகளாக இருக்கும் நிலையில், இந்த முஸ்லிம் குரோதம் எங்களுக்கே கூசவில்லையா? இந்த உரிமை மீறல்களைக் காட்டித் தானே நாங்கள் சிறந்த வாழ்நிலைமைகள் கொண்ட நாடுகளுக்கு வந்து வாழ ஆரம்பித்தோம்?

3. உலகின் வேறு எந்த நாட்டில், இப்படி பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்பற்ற சாதாரண மக்களைத் துன்புறுத்துவதும் demonize செய்வதும்  அமைதியைக் கொண்டு வந்திருக்கிறது? மேற்கில் 2001 இல் இருந்து தடுக்கப் பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் எல்லாம் அடிப்படைவாத அமைப்புகளுள் ஊடுருவி உளவு பார்த்த முஸ்லிம்களால் தான் தடுக்கப் பட முடிந்தது என்பதை அறிவீர்களா? இதற்காகவே முஸ்லிம்களை அன்னியப்படுத்துவதை மேற்கு நாடுகளின்பாதுகாப்புத் துறையினர் எதிர்க்கிறார்கள் என்றாவது அறிவீர்களா?

நீஙகள் மறுகன்னத்தை காட்ட விரும்புவீர்கள், ஜஸ்டின். என்னால் முடியவில்லை நண்பா. 

மைத்திரி சொல்வது போல் நாட்களாகலாம்.

முஸ்லீங்களுக்கு பிரச்சணை சிங்களவருடன் தானே.

மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல, சவளைப்பிள்ளை, தமிழன் தான் கிடைத்தானா?

தமிழனுக்கு அடிச்சு, அதன் மூலம் சிங்களவருக்கு பயம் காட்டுகிறார்களா?

எல்லாம் கொழும்பில், பக்கத்தில் நீர்கொழும்பில் வெடித்ததே. ஒன்று மட்டும் மட்டக்களப்பில் வெடிக்க காரணம் என்ன? 

இறந்தவரில் அதிகம் குழந்தைகள். நல்லவேளை, அவனது முதல் இலக்கு சிக்கி இருந்தால் அழிவு அதிகமாயிருக்கும்.

பயம் காட்டுதலன்றி வேறென்ன.

வாப்பா, வாப்பா என்று கத்திய அந்த பிஞ்சுக்குழந்தையை பெறாமலே அல்லாவிடம் போயிருக்கலாமே அந்த கிராதகன்.

சவூதி பணத்தை எறிந்து பலரது, சிங்கள அதிகாரிகளதும், கண், காது மூடப்பட்டது.

கிஸ்புல்லாவின், றிஸாதின் ஆட்டத்தை ரசித்ததின் பலன் அறுவடையாகிறது.

இது இப்போது முடியாது. இன்னும் வரும்.

முஸ்லீம்கள் அதிகம், தகவல் தருவதில்லை, கராமாம்.

பிரித்தானிய புலனாய்வு இயக்கத்தின் வெற்றிமுறையை, இப்போது பிரான்ஸ், ஜேர்மனி பின்பற்றுகிறது.

இலங்கையில் இப்போது எட்டு நாடுகளின் புலனாய்வு அமைப்புகள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

 நடுநிலை சிங்கம்:  சேவை மனப்பான்மையுடைய யாராவது வடக்கு கிழக்கிலிருந்தோ அல்லது புலத்தில் இருந்தோ போய்த் தான் ஆசிரியர் வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் போல?

தேசிக்காய்கள்: "புது ஆசிரியர்களைத் தேடித் தர வேண்டியது சிறிலங்கா அரசின் பொறுப்பல்லவா? அதைச் செய்யாமல் விடுவதால் அவர்கள் தான் தமிழர்களின் கல்வியைக் கருவறுக்கும் சூத்திரதாரிகள் (எங்களுக்கு முஸ்லிம் ஆசிரியர்களைத் துரத்த மட்டும் தான் தெரியும்!)"  

இவர்கள் படிப்பிக்காவிட்டால் பறவாயில்லை முதலில் நன்கு தமிழை கற்றுவந்து படிப்பித்தால் நன்றாக இருக்கும்  தமிழ் படிப்பித்தால் தமிழ் வருதில்லை தமில்தான் வருது . மற்றது வெள்ளிகிழமை தொழுகைக்கு செல்ல வேண்டும் ஹஜ்ஜிக்கு செல்ல வேனும் உம்றாவுக்கு செல்ல வேண்டும் அது போக 44 நாள் லீவு வேண்டும்  இவர்களின் வெற்றிடத்தை நிரப்ப தேவையில்லை அது வெற்றிடமாக இருக்கிறது அரச தொழிலுக்காக ஓர் தொழில் மற்றபடி பெறு பேறு என்பதெல்லம் இவர்கள் கற்பிக்கும் தமிழ் பாடசாலைகளில்  கேட்டறிந்து கொள்ளுங்கள் . பாடசாலை நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பார்களால் இந்த பிரச்சினை வந்திருக்காது  அதை நீங்கள் புரிந்து கொள்ள போவதில்லை மத ரீதியான கலாச்சாரங்கள் அவர் வீட்டில் இருக்கலாம் ஊரில் இருக்கலாம் ஆனால் பாடசாலை நிர்வாகத்திற்குள் கொண்டுவர முடியாது  பாடசாலை  ,சமூகத்திற்கு கட்டுப்பட்டு ஆகவேண்டும் அப்படி நடந்தால்தான் அவர் உன்மையான குரு  அப்படி நடக்க அவர்கள் தயார் இல்லை எங்கள் பாடசாலை ஏன் கிழக்கில் பல பாடசாலைகளின் சுய விருப்பில் மாற்றம் பெற்று செல்கிறார்கள்  அதுவும் நல்லது போல் தெரிகிறது 

சில சந்தர்ப்பங்களில் பிள்ளைகள் அவர்களை வெறுக்க நினைக்கிறார்கள்  2009 ற்கு பிறகு பிறந்தவர்கள் 

நானும் ஓர் பாடசாலையில் தான் இருப்பதால் சொல்லிக்கிறன் சார்

 

புது ஆசிரியர்களை தரவேண்டியது அரசின் கடமை அவர்களின் திறமையை அவர்கள் ஊரில் காட்டட்டும் மற்றது மலையகத்தில் படிப்பிக்க சென்றவர்கள் உன்மையான ஆசிரியர்கள் அல்ல அரசின் கோரிக்கையில் உயர்தரத்தில் 3 பாடங்கள் சித்தி பெற்று 10 வருடங்கள் கஸ்ரப் பிரதேசங்களில் வேலை செய்தாகவேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை செய்பவர்களும் இருக்கிறார்கள் ஆனால் பட்டதாரிகள் வேலை இல்லாமல் ஊர் சுற்றுகிறார்கள் இதுவும் நாட்டு நிலமைதான். 

 

Edited by தனிக்காட்டு ராஜா

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, விசுகு said:

 

இவர்கள்  குறானுக்கு  மட்டுமே கட்டுப்படுவார்கள்

அதிலுள்ள   என்ன  அநியாயமாக  இருந்தாலும்  கண்ணை  மூடிக்கொண்டு பின்  பற்றுவார்கள்

தனது  மாணவர்களின்  படிப்பு  பாழாகும்   என்பதெல்லாம்  இவர்களுக்கு????

விசுகர், வர வர நீங்கள் ஒரு ஜோக்கராகவே மாறி வருகிறீர்கள்! தேமேயென்று வழமை போல படிப்பிக்கப் போன ஆசிரியரை பயங்கரவாதிமாதிரி தெருவில் வைத்து அவமதித்தது உங்களுக்கு உறைக்கவேயில்லை! அவர்கள் வெறுத்துப் போய் மாற்றல் வாங்கிப் போனது பெரிய குறையாகப் போய் விட்டது! நானாக இருந்திருந்தால் இந்த பெற்றோர் மீது வழக்குப் போட்டு கோர்ட்டுக்கு அலைய விட்டிருப்பேன்! அவர்கள் தாமாக விலகி விட்டது டீசண்டானவர்கள் என்று காட்டுகிறது! 

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Nathamuni said:

நீஙகள் மறுகன்னத்தை காட்ட விரும்புவீர்கள், ஜஸ்டின். என்னால் முடியவில்லை நண்பா. 

மைத்திரி சொல்வது போல் நாட்களாகலாம்.

முஸ்லீங்களுக்கு பிரச்சணை சிங்களவருடன் தானே.

மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல, சவளைப்பிள்ளை, தமிழன் தான் கிடைத்தானா?

தமிழனுக்கு அடிச்சு, அதன் மூலம் சிங்களவருக்கு பயம் காட்டுகிறார்களா?

எல்லாம் கொழும்பில், பக்கத்தில் நீர்கொழும்பில் வெடித்ததே. ஒன்று மட்டும் மட்டக்களப்பில் வெடிக்க காரணம் என்ன? 

இறந்தவரில் அதிகம் குழந்தைகள். நல்லவேளை, அவனது முதல் இலக்கு சிக்கி இருந்தால் அழிவு அதிகமாயிருக்கும்.

பயம் காட்டுதலன்றி வேறென்ன.

வாப்பா, வாப்பா என்று கத்திய அந்த பிஞ்சுக்குழந்தையை பெறாமலே அல்லாவிடம் போயிருக்கலாமே அந்த கிராதகன்.

சவூதி பணத்தை எறிந்து பலரது, சிங்கள அதிகாரிகளதும், கண், காது மூடப்பட்டது.

கிஸ்புல்லாவின், றிஸாதின் ஆட்டத்தை ரசித்ததின் பலன் அறுவடையாகிறது.

இது இப்போது முடியாது. இன்னும் வரும்.

முஸ்லீம்கள் அதிகம், தகவல் தருவதில்லை, கராமாம்.

பிரித்தானிய புலனாய்வு இயக்கத்தின் வெற்றிமுறையை, இப்போது பிரான்ஸ், ஜேர்மனி பின்பற்றுகிறது.

இலங்கையில் இப்போது எட்டு நாடுகளின் புலனாய்வு அமைப்புகள்.

உயிரோடிருக்கும் தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு தூக்கு விதிக்க வேண்டும் என்கிறேன் நான்! இதில் எங்கே மறுகன்னம் காட்டல் இருக்கிறது நாதமுனி? இனி இப்படி ஒரு அவலம் நடக்காமல் இருக்க இங்கே நீங்கள் ஆதரிக்கும் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகள் சிறிதும் உதவாது என்பதே என் வாதம்! இது உங்களுக்கும் புரியும், ஆனால் ஏதோ உங்கள் புத்தியை மறைக்கிறது இப்போதைக்கு! அது விலகும் போது யோசியுங்கள்! மற்றபடி நீங்கள் எழுதியிருக்கும் காசு, சவூதி, எல்லாம் சதிக் கோட்பாட்டுக் காரர்களின் பிதற்றல்கள். நடந்தது உலகத்திற்கு இப்போது நன்கு பரிச்சயமாகி விட்ட ஐசிஸ்-தூண்டிய கொடூரம் என்பது தான் இப்போது எம் முன்னே உள்ள தகவல்களின் அடிப்படையிலான முடிவு! அதை எப்படித் தடுப்பது என்ற யோசிப்பை இந்தப் பிதற்றல்கள் இலகுவாக வழி மாற்றிவிடும், அவர்கள் மீண்டும் வந்து வெடிப்பார்கள்! இது நல்ல "புத்தி சாலித்தனமாக" தான் தெரியுது எனக்கு!  

  • கருத்துக்கள உறவுகள்
On 5/9/2019 at 7:11 AM, nedukkalapoovan said:

மக்கள் தங்கள் பாதுகாப்பை நோக்கி எடுக்கும் நடவடிக்கைகளை யாரும் தடுக்க முடியாது.

மக்கள் எடுக்கும் நடவடிக்கைகள் அந்தந்த மக்கள் இனத்தைப் பொறுத்து இலங்கையில் மாறுபடுகிறது. அங்கு நான் வாழ்ந்த காலத்தில் கண்டுபெற்ற அனுபவம்:-

1. தமிழர்களின் ஊரில் ஒரு தமிழ்ச் சண்டியன் உருவானால்,  அந்த ஊர் அவனை மதிக்காது, அடக்கவே முயற்சி செய்யும்.

2. சிங்களரின் ஊரில் ஒரு சிங்களச் சண்டியன் உருவானால்,  அந்த ஊர் அவனுக்குப் பயந்து விலகியிருக்கவே முற்படும்.

3. முசுலீம்களின் ஊரில் ஒரு முசுலீம் சண்டியன் உருவானால், பெரியோர் தொடங்கிக் குஞ்சு குருமான்வரை  அவனுக்குப் பின்னால் ஊர்வலமாகச் செல்லும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.