Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘உறுதிமொழி கிடைத்தால் நான் விலகுவேன்’ - எம்.கே.சிவாஜிலிங்கம்

Featured Replies

எப்படியும் தாயகத்தில் உள்ள மக்கள் சுயமாக சஜித் பிரேமதாசவுக்கு தான் வாக்களிப்பார்கள். தமது வாழ்க்கையை Risk ல ் வைத்திருக்க விரும்ப  மாட்டார்கள் என்று நினைக்கிறேன். 

Edited by tulpen

  • Replies 61
  • Views 5.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஜஸ்டின் அண்ணா,

மாற்றம், மாற்றம் என்று ரஜினி பட டலயாக் எல்லாம் கேட்க நல்லாய் இருக்கும்.

இவர்கள் சுகமாக வெளிநாட்டில் இருந்தபடி, எமது மக்களை சோதனை எலிகளாக்கி மாற்றத்தை பரிதோனை செய்ய நினைக்கும் இவர்களின் பேச்சில் துளியளவும் தார்மீகம் இல்லை.

ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னும் இப்படியானவர்களுடன் நானும் நீங்களும் இன்னும் சிலரும் உண்மையை எடுத்துரைக்க படாதபாடு படுவோம். சங்கு காதில் ஏறவே ஏறாது.

தேர்தல் அன்று, நாம் இங்கே என்ன சொன்னோமோ அதையேதான் மக்களும் சொல்லி இருப்பார்கள்.

2012 வடமாகாண சபை தேர்தலில் இருந்து இதுதான் வழமை.

இவர்களை இப்படியே விட்டுவிடுங்கள். எம் மக்களின் புத்திசாதுரியத்தின் மீது எனக்கு அளப்பரிய நன்மையுண்டு.

நபம்பர் 16இல் எல்லா மாற்ற மாணிக்கங்களுக்கும் மக்கள் மணி கட்டுவார்கள்.

ஜேம்ஸ் குக்கின் மரணம் எப்படி சம்பவித்தது என்பதை தெரிந்தவர்களுக்கு, முட்டாள்தனமாக மாற்றத்தை ஏற்படுத்துவதின் ஆபத்து புரியும் 😂

உண்மை தான்! ஆனால் மனம் கேட்காததால் இப்படி  ஒரே விடயத்தைத் திரும்பத் திரும்ப எழுத வேண்டியிருக்கிறது! கேள்வி கேட்டால் கேட்டவனைத் தாக்குகிறார்களேயொழிய ஒரு லொஜிக்கான பதில் ஒருவரிடமும் இல்லை!

தேர்தல் முடிவின் பிறகு நாம் யாரும் இங்கே வந்து "I told you so!" என்று சொல்லப் போவதில்லை! ஆனால், சிலர் வந்து மக்களை மொக்குக் கூட்டம் என்று திட்டுவார்கள்! இருந்து பாருங்கள்!  

 

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, tulpen said:

எப்படியும் தாயகத்தில் உள்ள மக்கள் சுயமாக சஜித் பிரேமதாசவுக்கு தான் வாக்களிப்பார்கள். தமது வாழ்க்கையை Risk ல ் வைத்திருக்க விரும்ப  மாட்டார்கள் என்று நினைக்கிறேன். 

அதில்... மாற்றுக்  கருத்து இல்லை என்றே... நானும் நம்புகின்றேன். :)
ஆனால்....  சம்பந்தனும், சுமந்திரனும்....
முஸ்லீம் அரசியல்வாதிகளின்..  அரதப்  பழசான...
பாம்புக்கு வாலும், மீனுக்கு தலையையும் காட்டி...   🐍
இரட்டை  குதிரை சவாரி செய்யும்,  சாணக்கியத்தில்... 
இறங்கி, உள்ளார்கள் போல் தெரிகின்றது.
அது... தமிழ் மக்களுக்கு ஆபத்தானது. 💥

  • தொடங்கியவர்

1. ஜேம்ஸ் குக்கின் ஒரு தேடலை கொண்டிருந்தவன். வித்தியாசமாக சிந்த்தித்தவன். அதனால் தான் அவரின் பெயர் கனேடிய வரலாற்றில் உள்ளது. பத்தோடு பதினொன்றாக இறக்கவில்லை.

 2. கடந்த பத்து வருட காலத்திலும் தமிழர் அரசியல் கட்சிக்களால், பெரிதாக ஒன்றும் சாதிக்க முடியாத நிலையில் தான் சிவாசிலிங்கம் போன்றவர்கள் இன்றும் போட்டியிடும் நிலைமை உருவானது. இவர் இல்லாவிட்டால், போட்டியிடாவிட்டால் எமது மக்களின் பிரச்சனைகள் தீர்ந்து போய்விடுவதில்லை.

2 minutes ago, ampanai said:

1. ஜேம்ஸ் குக்கின் ஒரு தேடலை கொண்டிருந்தவன். வித்தியாசமாக சிந்த்தித்தவன். அதனால் தான் அவரின் பெயர் கனேடிய வரலாற்றில் உள்ளது. பத்தோடு பதினொன்றாக இறக்கவில்லை.

 2. கடந்த பத்து வருட காலத்திலும் தமிழர் அரசியல் கட்சிக்களால், பெரிதாக ஒன்றும் சாதிக்க முடியாத நிலையில் தான் சிவாசிலிங்கம் போன்றவர்கள் இன்றும் போட்டியிடும் நிலைமை உருவானது. இவர் இல்லாவிட்டால், போட்டியிடாவிட்டால் எமது மக்களின் பிரச்சனைகள் தீர்ந்து போய்விடுவதில்லை.

10 வருசத்திற்கு முதல் சாதிக்க முடியாத‍தை இப்போது சாதிக்க முடியும் என்று நினைத்தீர்களா? ஏனென்றால் அபோது இருந்த எந்த பலமும் இப்போது இல்லை. பலமிழந்து இருக்கும் நிலையில் எதை சாதிக்க முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ampanai said:

 

 2. கடந்த பத்து வருட காலத்திலும் தமிழர் அரசியல் கட்சிக்களால், பெரிதாக ஒன்றும் சாதிக்க முடியாத நிலையில் தான் சிவாசிலிங்கம் போன்றவர்கள் இன்றும் போட்டியிடும் நிலைமை உருவானது. இவர் இல்லாவிட்டால், போட்டியிடாவிட்டால் எமது மக்களின் பிரச்சனைகள் தீர்ந்து போய்விடுவதில்லை.

இவர் போட்டியிட்டு கோத்தாவை ஜனாதிபதியாக்கா விட்டால் தமிழர்கள் இன்னும் கொஞ்சக் காலம் இலங்கையில் அமைதியாக வாழ வாய்ப்புண்டு என்று சொல்ல நினைக்கிறேன்! ஆனால், உங்களுக்குச் சொல்லி என்ன பயன்? அதனால் எப்படியாவது இருந்து விட்டுப் போங்கள்! தாயக மக்கள் தம் வழியைப் பார்த்துக் கொள்வர்!

7 hours ago, விசுகு said:

பேய்க்கும் பிசாசுக்குமிடையில்   நான் வித்தியாசத்தை  காணவில்லை

சில விடயங்களை

கண்ணுக்கு தெரிதல்

கண்ணுக்க தெரியாமையை  வைத்து

வரலாற்றுக்கணிப்புக்களை  செய்வது மிகமிக ஆபத்தானது

காலம் தான்  பதில்  தரும்

நாமெருவரும்  கூட அதை  பார்க்காது   போகலாம்

மாறி மாறி பேய்களோடும் பிசாசுகளோடும் வாழ்வதற்கென்றே ஒரு சிலர் இருக்கத்தான் செய்யீனம்!

குடுகுடுப்பைகாரங்கள்ட தொழிலே பேயை விட பிசாசு திறம் என்டும், பிறகு பிசாசை விட பேய் திறம் என்டும் கூவிக் கூவி ஏமாறக்கூடிய சனங்களை ஏமாத்துறது தானே!

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Justin said:

தேர்தல் புறக்கணிப்பால், அல்லது அரும்பொட்டில் சிவாஜி அவர்கள் பெறும் தமிழ் வாக்குகளால் கோத்தா ஆட்சிக்கு வந்தால் அது தாயக மக்களுக்கு நாசம் இல்லையென்று நீங்கள் நினைத்தால் நான் உங்களுக்கு மேலதிகமாக  எதுவும் சொல்ல முடியாது!  

ஒரு தரப்பின் மீதான வெறுப்பு ஒரு நாளும் அரசியல் கொள்கையாக முடியாது! 

இங்கே கூட்டமைப்பு மீதும், ரணில் மீதும், கிழக்கில் முஸ்லிம்கள்  மீதும் இருக்கும் வெறுப்பே, வெள்ளைவான் வந்தாலும் பரவாயில்லை, இந்த மூன்று தரப்புகளையும் பழிவாங்குவோம் என்று பலரைப் பேச வைக்கிறது. இது அழிவுப் பாதை என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை

வெள்ளை வான் ...வெள்ளை வான் என்று எத்தனை நாளைக்கு இந்த பூச்சாண்டி எடுபடும் என்று நினைக்கிறியள் 
அண்ணை ...?
அப்படி புடுங்கத்தான் தமிழரிடம் (வடக்கு ,கிழக்கு ) என்ன இருக்கு ...வேணுமென்றால் கொழும்பு மேற்தட்டு தமிழ் பிசினஸ் மேன்களுக்கு வயிற்றில் புளியை கரைக்கலாம், தங்களுடைய பிள்ளைகளுக்கு செலுத்தப்போகும் கப்பத்தை நினைத்து  .சிங்களவர்களுடன் நுனி நாக்கில் சிங்களம் பேசி  பெயரையும் சிங்களவன் போல மாற்றி சகலமும் பெற்று சௌபாக்யமாக வாழ்ந்த அவர்கள் எப்போதும் தம்மை தமிழர்களாக அடையாளப்படுத்தியதில்லை, அதனால் எங்களுக்கு கவலையும் இல்லை.
மற்றும்படி வெள்ளை வேனை வைத்து மக்களை/போராளிகளை  கும்பல் கும்பலாக தூக்கி கூண்டில் அடைத்து மூன்று வேளை சாப்பாடு போட்டு பராமரிக்க இலங்கை திறைசேரி ஒன்றும் அந்தளவு Strong இல்லை  ,
ஒன்று கொலை செய்யவேண்டும் ,யுத்தகாலத்தில் அதற்க்கு சாக்கு இருந்தது பொதுமக்களையும் பயங்கரவாதிகள் ஆக்கி தப்பித்தனர் இனி இந்த விளையாட்டு வேலைக்காகாது என்பது தெரியாத மண்டு இல்லை கோத்தா, பொன்சேக்காவிற்க்கே வாக்கு போட்டு எமது Credibility யை இழந்த நாம் கோத்தாவோடு குத்தி முறிவது தான் வேடிக்கையிலும் வேடிக்கை, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் சரி ஒரு மண்ணும் நடக்காது என்பது தான் தாயக தமிழரின் நிலைமை ,வேணுமென்றால் இன்னும் கொஞ்சநாளைக்கு சம்மின் ராசதந்திரத்தையும் அதுக்குப்பிறகு சும்மின் சாணக்கியத்தையும் ரசிச்சு ருசிச்சு புழுகி புளங்காகிதமடையலாம். 

3 hours ago, அக்னியஷ்த்ரா said:

வெள்ளை வான் ...வெள்ளை வான் என்று எத்தனை நாளைக்கு இந்த பூச்சாண்டி எடுபடும் என்று நினைக்கிறியள் 
அண்ணை ...?
அப்படி புடுங்கத்தான் தமிழரிடம் (வடக்கு ,கிழக்கு ) என்ன இருக்கு ...வேணுமென்றால் கொழும்பு மேற்தட்டு தமிழ் பிசினஸ் மேன்களுக்கு வயிற்றில் புளியை கரைக்கலாம், தங்களுடைய பிள்ளைகளுக்கு செலுத்தப்போகும் கப்பத்தை நினைத்து  .சிங்களவர்களுடன் நுனி நாக்கில் சிங்களம் பேசி  பெயரையும் சிங்களவன் போல மாற்றி சகலமும் பெற்று சௌபாக்யமாக வாழ்ந்த அவர்கள் எப்போதும் தம்மை தமிழர்களாக அடையாளப்படுத்தியதில்லை, அதனால் எங்களுக்கு கவலையும் இல்லை.
மற்றும்படி வெள்ளை வேனை வைத்து மக்களை/போராளிகளை  கும்பல் கும்பலாக தூக்கி கூண்டில் அடைத்து மூன்று வேளை சாப்பாடு போட்டு பராமரிக்க இலங்கை திறைசேரி ஒன்றும் அந்தளவு Strong இல்லை  ,
ஒன்று கொலை செய்யவேண்டும் ,யுத்தகாலத்தில் அதற்க்கு சாக்கு இருந்தது பொதுமக்களையும் பயங்கரவாதிகள் ஆக்கி தப்பித்தனர் இனி இந்த விளையாட்டு வேலைக்காகாது என்பது தெரியாத மண்டு இல்லை கோத்தா, பொன்சேக்காவிற்க்கே வாக்கு போட்டு எமது Credibility யை இழந்த நாம் கோத்தாவோடு குத்தி முறிவது தான் வேடிக்கையிலும் வேடிக்கை, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் சரி ஒரு மண்ணும் நடக்காது என்பது தான் தாயக தமிழரின் நிலைமை ,வேணுமென்றால் இன்னும் கொஞ்சநாளைக்கு சம்மின் ராசதந்திரத்தையும் அதுக்குப்பிறகு சும்மின் சாணக்கியத்தையும் ரசிச்சு ருசிச்சு புழுகி புளங்காகிதமடையலாம். 

தமிழர்களை கும்பல் கும்பலாக தூக்குவது 3 வேளை சாப்பாடு போடுவதற்கு அல்ல. சித்திரவதை செய்து கொலை செய்வதற்கு.

புலிகள் மீள உருவாக நினைக்கிறார்கள் என கூறி விட்டே கோத்தா தனது தமிழின அழிப்பை தொடர்வார்.

Edited by Lara

ஒவ்வோரு நாளும் தூக்கத்தில் இருந்து எழுந்தவுடன்  உறுதி மொழி கிடைத்து விட்டாதா என்று பார்பபேன். இன்னும் கிடைக்கவில்லை போல் இருக்கிறது. சரி நாளைக்கு பார்போம். 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

ஜஸ்டின் அண்ணா,

மாற்றம், மாற்றம் என்று ரஜினி பட டலயாக் எல்லாம் கேட்க நல்லாய் இருக்கும்.

இவர்கள் சுகமாக வெளிநாட்டில் இருந்தபடி, எமது மக்களை சோதனை எலிகளாக்கி மாற்றத்தை பரிதோனை செய்ய நினைக்கும் இவர்களின் பேச்சில் துளியளவும் தார்மீகம் இல்லை.

ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னும் இப்படியானவர்களுடன் நானும் நீங்களும் இன்னும் சிலரும் உண்மையை எடுத்துரைக்க படாதபாடு படுவோம். சங்கு காதில் ஏறவே ஏறாது.

தேர்தல் அன்று, நாம் இங்கே என்ன சொன்னோமோ அதையேதான் மக்களும் சொல்லி இருப்பார்கள்.

2012 வடமாகாண சபை தேர்தலில் இருந்து இதுதான் வழமை.

இவர்களை இப்படியே விட்டுவிடுங்கள். எம் மக்களின் புத்திசாதுரியத்தின் மீது எனக்கு அளப்பரிய நன்மையுண்டு.

நபம்பர் 16இல் எல்லா மாற்ற மாணிக்கங்களுக்கும் மக்கள் மணி கட்டுவார்கள்.

ஜேம்ஸ் குக்கின் மரணம் எப்படி சம்பவித்தது என்பதை தெரிந்தவர்களுக்கு, முட்டாள்தனமாக மாற்றத்தை ஏற்படுத்துவதின் ஆபத்து புரியும் 😂

 

கருத்துக்களை  வைக்கும்போது  எழுந்தமானத்துக்கு 

எம்மை வெளிநாட்டில்  வாழ்வதால்  என்று அடைமொழிக்குள்  நீங்களாகவே எம்மை புகத்தி எழுதாதீர்கள்

அப்படியாயின்  எம்மாலும் உங்களைப்பற்றி  எழுதமுடியும்

இங்கு  நியாயமாக  தமிழ்  மக்களின் நீண்டநாள் பிரச்சினைகளுக்கு  தீர்வை  எவ்வாறு யாரால்  பெற்றுத்தரமுடியும்

இதுவரை  முடிந்திருக்கிறதா? 

முடியாதவரை  என்ன  செய்வது என்று  ஆதங்கத்துடனேயே  கருத்துக்களை  வைக்கின்றோம் 

அவற்றை  உதாசீனப்படுத்தி 

ஏதோ  எமது சுயநலங்களுக்காக சண்டையை  விரும்புகின்றோம்  என்பது எம்மை  மட்டுமல்ல  உங்களை  நீங்களே ஏமாற்றிக்கொள்வது தான்.

கீழே முகநூலில்  ஒருவர்  எழுதியதை  பதிகின்றேன்

இவரது  கருத்துக்கும் எமக்கு  எழுதியது போல்  நீங்கள் பதிலளிக்கமுடியாது

காரணம்  அவர்  அதே  நிலத்திலிருந்:து எழுதுகிறார்.

 

தேர்தலைப் புறணிப்பது பற்றி கதை எடுத்தால் சில பயலுகள் உடனே கேட்கிறாங்கள்,

"2005 இலே பகிஸ்கரித்ததாலே வந்த விளைவு தெரியும்தானே?" என்று.

ஆனால் பகிடி என்னவென்றால், அப்பிடி கேட்கிறவர்கள் எல்லாம், "எப்படா இந்த சண்டை முடியும் என்று காத்திருந்தவர்கள். 2009க்குப் பின்னரான சூழலை, நிம்மதி எனக் கொள்பவர்கள், முத்தையா முரளிதரன் சொன்னதையே தம் மனதுக்குள் தினமும் நினைப்பவர்கள்..."

அந்த அடிப்படையில் பார்த்தால் இவர்களும் முரளி மாதிரி மகிந்த ரெஜிமுக்குத்தான் நன்றி சொல்ல வேணும்!

ஆனால் இவர்கள் என்னடாவெண்டால், "இந்த நாட்டில் ஆர் யுத்தத்தத்தை ஆரம்பித்து வைத்தார்களோ அவர்களை நம்புகிறார்கள்"

இந்த முரண்நகை எனக்கு விளங்குதில்லை!
இந்த விசயத்திலை, சும்மா சொல்லக்கூடாது, முரளியின் வெளிப்படைத் தன்மையைப் பாராட்ட வேணும்!

ஒருவேளை இன்னொரு யுத்தம் வேண்டும் என நினைக்கிறார்களோ?

 

https://www.facebook.com/gnanadas.kasinathar

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, அக்னியஷ்த்ரா said:

வெள்ளை வான் ...வெள்ளை வான் என்று எத்தனை நாளைக்கு இந்த பூச்சாண்டி எடுபடும் என்று நினைக்கிறியள் 
அண்ணை ...?
அப்படி புடுங்கத்தான் தமிழரிடம் (வடக்கு ,கிழக்கு ) என்ன இருக்கு ...வேணுமென்றால் கொழும்பு மேற்தட்டு தமிழ் பிசினஸ் மேன்களுக்கு வயிற்றில் புளியை கரைக்கலாம், தங்களுடைய பிள்ளைகளுக்கு செலுத்தப்போகும் கப்பத்தை நினைத்து  .சிங்களவர்களுடன் நுனி நாக்கில் சிங்களம் பேசி  பெயரையும் சிங்களவன் போல மாற்றி சகலமும் பெற்று சௌபாக்யமாக வாழ்ந்த அவர்கள் எப்போதும் தம்மை தமிழர்களாக அடையாளப்படுத்தியதில்லை, அதனால் எங்களுக்கு கவலையும் இல்லை.
மற்றும்படி வெள்ளை வேனை வைத்து மக்களை/போராளிகளை  கும்பல் கும்பலாக தூக்கி கூண்டில் அடைத்து மூன்று வேளை சாப்பாடு போட்டு பராமரிக்க இலங்கை திறைசேரி ஒன்றும் அந்தளவு Strong இல்லை  ,
ஒன்று கொலை செய்யவேண்டும் ,யுத்தகாலத்தில் அதற்க்கு சாக்கு இருந்தது பொதுமக்களையும் பயங்கரவாதிகள் ஆக்கி தப்பித்தனர் இனி இந்த விளையாட்டு வேலைக்காகாது என்பது தெரியாத மண்டு இல்லை கோத்தா, பொன்சேக்காவிற்க்கே வாக்கு போட்டு எமது Credibility யை இழந்த நாம் கோத்தாவோடு குத்தி முறிவது தான் வேடிக்கையிலும் வேடிக்கை, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் சரி ஒரு மண்ணும் நடக்காது என்பது தான் தாயக தமிழரின் நிலைமை ,வேணுமென்றால் இன்னும் கொஞ்சநாளைக்கு சம்மின் ராசதந்திரத்தையும் அதுக்குப்பிறகு சும்மின் சாணக்கியத்தையும் ரசிச்சு ருசிச்சு புழுகி புளங்காகிதமடையலாம். 

சத்தியமாக அக்னி, நீங்கள் ஊரில தான் இருந்தனீங்களே? அல்லது மகிந்த இருந்த போது கோமா கீமாவில இருந்தனீங்களோ?😂

  • தொடங்கியவர்
Just now, Justin said:

சத்தியமாக அக்னி, நீங்கள் ஊரில தான் இருந்தனீங்களே? அல்லது மகிந்த இருந்த போது கோமா கீமாவில இருந்தனீங்களோ?😂

சகோ,
இப்படியான ஒரு கேள்வியை நீங்கள் உங்கள் அம்மைவை இல்லை வேளையில் உங்கள் உறவை பார்த்து கேட்பீர்களா? இல்லை. பிறகு ஏன் இங்கே வைத்து கேட்க்கிறீர்கள்? 

உங்களல் முடிந்தால் ஆரோக்கியமாக பண்பாக மறுதலித்து கருத்தை முன்வையுங்கள். 

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

 

கருத்துக்களை  வைக்கும்போது  எழுந்தமானத்துக்கு 

எம்மை வெளிநாட்டில்  வாழ்வதால்  என்று அடைமொழிக்குள்  நீங்களாகவே எம்மை புகத்தி எழுதாதீர்கள்

அப்படியாயின்  எம்மாலும் உங்களைப்பற்றி  எழுதமுடியும்

இங்கு  நியாயமாக  தமிழ்  மக்களின் நீண்டநாள் பிரச்சினைகளுக்கு  தீர்வை  எவ்வாறு யாரால்  பெற்றுத்தரமுடியும்

இதுவரை  முடிந்திருக்கிறதா? 

முடியாதவரை  என்ன  செய்வது என்று  ஆதங்கத்துடனேயே  கருத்துக்களை  வைக்கின்றோம் 

அவற்றை  உதாசீனப்படுத்தி 

ஏதோ  எமது சுயநலங்களுக்காக சண்டையை  விரும்புகின்றோம்  என்பது எம்மை  மட்டுமல்ல  உங்களை  நீங்களே ஏமாற்றிக்கொள்வது தான்.

கீழே முகநூலில்  ஒருவர்  எழுதியதை  பதிகின்றேன்

இவரது  கருத்துக்கும் எமக்கு  எழுதியது போல்  நீங்கள் பதிலளிக்கமுடியாது

காரணம்  அவர்  அதே  நிலத்திலிருந்:து எழுதுகிறார்.

 

தேர்தலைப் புறணிப்பது பற்றி கதை எடுத்தால் சில பயலுகள் உடனே கேட்கிறாங்கள்,

"2005 இலே பகிஸ்கரித்ததாலே வந்த விளைவு தெரியும்தானே?" என்று.

ஆனால் பகிடி என்னவென்றால், அப்பிடி கேட்கிறவர்கள் எல்லாம், "எப்படா இந்த சண்டை முடியும் என்று காத்திருந்தவர்கள். 2009க்குப் பின்னரான சூழலை, நிம்மதி எனக் கொள்பவர்கள், முத்தையா முரளிதரன் சொன்னதையே தம் மனதுக்குள் தினமும் நினைப்பவர்கள்..."

அந்த அடிப்படையில் பார்த்தால் இவர்களும் முரளி மாதிரி மகிந்த ரெஜிமுக்குத்தான் நன்றி சொல்ல வேணும்!

ஆனால் இவர்கள் என்னடாவெண்டால், "இந்த நாட்டில் ஆர் யுத்தத்தத்தை ஆரம்பித்து வைத்தார்களோ அவர்களை நம்புகிறார்கள்"

இந்த முரண்நகை எனக்கு விளங்குதில்லை!
இந்த விசயத்திலை, சும்மா சொல்லக்கூடாது, முரளியின் வெளிப்படைத் தன்மையைப் பாராட்ட வேணும்!

ஒருவேளை இன்னொரு யுத்தம் வேண்டும் என நினைக்கிறார்களோ?

 

https://www.facebook.com/gnanadas.kasinathar

விசுகர், 2005 தேர்தல் புறக்கணிப்பின் விளைவை இவர் வன்னியில் 2009 இல் வாழ்ந்து  விட்டு இப்படி முழங்குகிறாரா அல்லது யாழ்ப்பாணத்திலோ கொழும்பிலோ சக்தி ரிவி பார்த்துக் கொண்டிருந்து விட்டு எழுதுகிறாரா என்று கேட்டுச் சொல்லுங்கள்! 

மறுவளமாக, 2009 இனப்படுகொலை 10 வருடங்கள் பழசு! அதையே மறக்கும் படி இவர் போன்ற முகமூடி போட்ட மகிந்த ஆதரவாளார்கள் எப்படி 30 வருடத்திற்கு பின்னோக்கி நினைவு படுத்தக் கேட்கலாம்?  
 

3 minutes ago, ampanai said:

சகோ,
இப்படியான ஒரு கேள்வியை நீங்கள் உங்கள் அம்மைவை இல்லை வேளையில் உங்கள் உறவை பார்த்து கேட்பீர்களா? இல்லை. பிறகு ஏன் இங்கே வைத்து கேட்க்கிறீர்கள்? 

உங்களல் முடிந்தால் ஆரோக்கியமாக பண்பாக மறுதலித்து கருத்தை முன்வையுங்கள். 

 

சகோ, இதில் எங்கே பண்புக் குறைவு? இந்த ஆட்களை "பண்பு பொலிஸ் வேலை " செய்து கொம்பு சீவி விடும் வேலையை விட்டு விட்டு அவர் எழுதிய கருத்தின் கேனைத்தனத்தைப் பாருங்கள்: 

மேல்தட்டு ஆட்களுக்கு தான் ஆபத்து என்கிறார், வெள்ளைவானில் கொண்டு செல்லப் பட்டோருக்கு காசு செலவழித்து சோறு போட்டார்களாம் என்கிறார்! தலையில்லாத முண்டங்களாக உடல்கள் கிடைத்ததையும், வெறும் ஐம்பதினாயிரம் ரூபாய்க்காகவே மனிதர்கள் கொல்லப் பட்டதையும் அறிந்தவர்களுக்கு விசர் வராதா இதைக் கேட்டால்?

உங்களுக்குப் புரியாது, உங்களுக்கு ஊரில் இப்ப நடப்பதும் தெரியாது 2009௨015 இல் நடந்ததும் தெரியாது. 
 

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Justin said:

விசுகர், 2005 தேர்தல் புறக்கணிப்பின் விளைவை இவர் வன்னியில் 2009 இல் வாழ்ந்து  விட்டு இப்படி முழங்குகிறாரா அல்லது யாழ்ப்பாணத்திலோ கொழும்பிலோ சக்தி ரிவி பார்த்துக் கொண்டிருந்து விட்டு எழுதுகிறாரா என்று கேட்டுச் சொல்லுங்கள்! 

மறுவளமாக, 2009 இனப்படுகொலை 10 வருடங்கள் பழசு! அதையே மறக்கும் படி இவர் போன்ற முகமூடி போட்ட மகிந்த ஆதரவாளார்கள் எப்படி 30 வருடத்திற்கு பின்னோக்கி நினைவு படுத்தக் கேட்கலாம்?  
 

அந்த மாதிரி விளக்கம்

நன்றி  வணக்கம் ஐயா

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விவகாரம் எனக்கு உணர்ச்சிபூர்வமான விவாதமாகி மாறி சிலரைத் திட்ட வேண்டிய அளவுக்கு வந்து விட்டது! அக்னி மன்னிக்க வேண்டும்! 

நேற்றே கோசான் விட்டு விடும்படி சொன்ன போது கேட்டிருக்க வேண்டும்! 

கோத்தாவை வரவைக்கும் எந்த நடவடிக்கையும் path to perdition என்பதே இது பற்றிய என் கடைசிப் பதிவு! அனைவரும் தொடர்ந்து உரையாடுங்கள்! 

  • தொடங்கியவர்
On ‎10‎/‎11‎/‎2019 at 7:14 AM, ampanai said:

ஜனாதிபதித் தேர்தலில் களம் இறங்கியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு, தனது சொந்தப் பணத்திலேயே கட்டுப்பணம் செலுத்தியதாகத் தெரிவித்த வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன்,  மாறாக நான் எந்தவொரு ராஜபக்ஷ ஆட்களையும் சந்திக்கவில்லையெனவும் தான் ராஜபக்ஷ தரப்புகளை சந்தித்தேன்; அவர்களின் பின்னணியில் தான் இயங்குகிறேன் எனக் குற்றம் சுமத்துபவர்கள் ஆதாரத்துடன் நிரூபிக்குமாறும் சவால் விடுத்தார்.

நல்லூரில் அமைந்துள்ள யாழ். பாடி விருந்தினர் விடுதியில், .ன்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Ananthy's statement in Tamil follows:
 

Ananthy Sasitharan
Ananthy Sasitharan
 

1977 இல் ஒற்றையாட்சி அரசின் நேரடி, மறைமுக அனுசரணையுடன் இலங்கைத் தீவு முழுவதும் இனப் படுகொலை ஒன்று கட்டவிழ்த்து விடப்பட்டபோது, அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த அப்போதைய பிரதம மந்திரி, ஜே. ஆர் ஜெயவர்த்தனா, போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் என்று பதிலளித்தார்.

இதை அவர் சொல்லி ஒரு வருடத்தில், அதாவது 1978 இல் இலங்கைத் தீவின் ஒற்றையாட்சி அரசின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நாட்டின் அரசியலமைப்பையே ஜே. ஆர். ஜெயவர்த்தனா மாற்றியமைத்தார்.

அன்று தொடக்கம் இலங்கை ஒற்றையாட்சி அரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிதான் முப்படைகளின் தளபதியாகவும் இருந்துவருகிறார்.

ஈழத்தமிழர்கள் மீதான சிங்களப் பேரினவாத ஒற்றையாட்சி அரசு தொடுத்திருக்கும் போரின் வடிவம் காலத்துக்குக் காலம் மாறிவந்திருக்கிறது. புதிய, புதிய வடிவங்களில் அந்தப் போர் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

தொடருகின்ற இந்தப் போருக்கு ஜனாதிபதியாக ஆட்சிக்கட்டிலில் வீற்றிருப்பவரே தளபதியாக இருந்துவருகிறார்.

1987 இல் இந்தியப் படை இங்கு வந்தபோது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்த ஜே. ஆர் தனது சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்தியாவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போரை உருவாக்கினார்.

இந்தியப் படை வெளியேறட்டும் என்று சொல்லிப் பதவிக்கு வந்த ரணசிங்க பிரேமதாசவும், ஈழம் தவிர எல்லாம் தருவேன் என்று சொல்லி, ஆறாம் சட்டத்திருத்தத்தை மாற்றலாம் என்றும் சொல்லி, பின்னர் அதை மாற்றாது தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மறுதலித்தார். போரை நோக்கி நகர்ந்தார்.

பின்னர், சமாதானப் புறாவாகத் தன்னைக் காட்டிக்கொண்டு ஜனாதிபதிப் பதவிக்கு வந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கொடிய போர் ஒன்றைக் கட்டவிழ்த்துவிட்டார்.

அவரைத் தொடர்ந்து வந்த மகிந்த ராஜபக்ச இன அழிப்புப் போரின் உச்சிக்கே சென்றார்.

பின்னர் வந்த மைத்திரிபால சிறிசேன நல்லாட்சி என்ற பெயரில் தமிழர் தாயகத்தின் மீது ஒரு மரபுரிமை இன அழிப்புப் போரையே தொடுத்திருக்கிறார். அநுராதபுரத்தையும் பொலநறுவையையும் மையமாகக் கொண்டது அவரது சிந்தனை. இது வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாக உடைக்கும் திட்டம். நல்லிணக்கம் என்ற பெயரில் நடாத்தப்படும் ஒரு புதுவிதமான போர்.

இதற்குக் கிழக்கில் கன்னியாவும் வடக்கில் நீராவியடியும் சாட்சி.

இந்தப் போர்கள் எல்லாம் ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்பின் ஒவ்வொரு பரிமாணங்களாக, அடுத்தடுத்த கட்டப் படிமுறைகளாக விரிகின்றன.

தொடரும் இந்தப் போர்களின் அடுத்த வடிவத்தை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்ற போட்டியே தற்போது தென்னிலங்கையில் நடக்கவிருக்கிறது.

இந்தத் தருணத்தில் ஈழத் தமிழர்களான நாங்கள் மேற்கொள்ளவேண்டிய தெரிவு என்ன? சொல்லவேண்டிய செய்தி தான் என்ன?

கோத்தபாய ராஜபக்ச, சஜித் பிரேமதாச மற்றும் ஜே.வி.பியின் அநுரா குமார திசநாயக்க போன்றவர்கள் சிங்களப் பேரினவாதத்தை ஒருபோதும் கைவிடப்போவதில்லை.

இவர்களுடன் தமிழர் தரப்பு பேரம் பேசவேண்டும் என்று சிலர் வாதிடுகிறார்கள். பேரம் பேசும்போது அவர்கள் தரும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்பதற்கு எந்தவிதச் சர்வதேச உத்தரவாதமும் இல்லாமல் பேரம் பேசுவதில் உண்மையில் ஒரு பலனும் இல்லை.

சிங்களப் பேரினவாதத் தலைவர்களுடன் பேரம் பேசுதல் என்பது தற்போதைய நிலையில் செல்லாக்காசு போன்றது.

எழுதிய ஒப்பந்தங்களையே கிழித்துப் போடும் சிங்களப் பேரினவாதத் தலைவர்களுடன் பேரம் பேசுவதில் பலன் ஏதும் இல்லை. மாறாக, இவர்களை இயக்கும் சர்வதேச சக்திகளுடன் தான் நாங்கள் பேரம் பேசவேண்டும்.

அமெரிக்காவும் இந்தியாவும் இன்று இறுக்கமாகப் பின்னிப் பிணைந்த ஓர் அணியாகச் செயற்படுகின்றன. இந்து-பசிபிக் கடற் போர்முனையில் சீனாவுக்கெதிரான வியூகம் வகுப்பதில் அமெரிக்காவும் இந்தியாவும் ஜப்பானுடனும் அவுஸ்திரேலியாவுடனும் நான்முனைச் சக்திகளாக இணைந்திருக்கின்றன. இந்து சமுத்திரம் போர்ச் சூட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கிறது.

2009 இல் இருந்த பூகோளப் போட்டா போட்டியை விட தற்போதைய இந்து சமுத்திரக் கேந்திர முக்கியத்துவம் பலமடங்கு வீச்சாகியிருக்கிறது.

அமெரிக்காவும் இந்தியாவும் நினைத்திருந்தால் கோட்டபாய ராஜபக்சவை தேர்தலில் போட்டியிட முடியாத சூழலை இலகுவாகத் தோற்றுவித்திருக்கலாம். ஆனால், அதை அவர்கள் செய்யவில்லை.

இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்ட போது அதைக் கண்டித்த சர்வதேசத் தரப்புகள், ஐ.நாவில் சமாதானப் படைக்கான இலங்கையின் பங்களிப்பைக் குறைக்கவுள்ளதாக இலங்கை அரசுக்கு ஒரு செய்தியைச் சொல்லி மிரட்டிய சர்வதேசச் சமூகம், சவேந்திர சில்வாவுக்கே நடைமுறையில் கட்டளைத் தளபதியாக இருந்த கோட்டபாய ராஜபக்சவை ஜனாதிபதித் தேர்தலில் களமாட அனுமதித்தது மட்டும் ஏன் என்ற கேள்வி எழுகிறது.

அமெரிக்காவிலே கோட்டபாய ராஜபக்சவுக்கு எதிராக வழக்குகள் மனித உரிமை நிறுவனங்களால் தொடுக்கப்பட்டிருக்கின்றன. இதைக் காரணம் காட்டி அமெரிக்க அரசு அவரது அமெரிக்கப் பிரஜாவுரிமையை இரத்துச் செய்யமுடியாது என்று மறுத்திருக்கலாம். அதை வெளிப்படையாகவே ஒரு அறிக்கையிட்டுச் சொல்லியிருக்கலாம். ஏன் செய்யவில்லை?

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் கொழும்புக்கு வந்து உரையாற்றிய அமெரிக்காவின் முன்னாள் இலங்கைத் தூதுவர் ரொபர்ட் பிளேக், கோட்டபாய ராஜபக்சவைப் மெச்சிப் பேசியதையும் நாங்கள் கவனித்திருக்கிறோம்.

மறுபுறத்தில் சஜித் பிரேமதாச போட்டியாளராக முன்னிலைப்படுத்தப்படுகிறார். அவரும் அம்பாந்தோட்டையின் பிரதிநிதி.

ஜனாதிபதி ஆட்சியின் நிறைவேற்று அதிகாரத்தை மட்டுப்படுத்தவேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்கா போன்றவர்கள் விரும்புவது போலத் தெரிந்தாலும், அப்படியெல்லாம் செய்வதாகத் தான் ஒத்துக்கொள்ளவில்லை என்ற தோரணையிலேயே சஜித் பிரேமதாச இயங்குகிறார்.

ஒற்றையாட்சியைக் கைவிடப் போவதில்லை என்றும் அவர் சொல்லியிருக்கிறார். ஒற்றையாட்சியை மாற்றாமல் அதிகளவு அதிகாரப் பரவலாக்கம் என்று அவர் சொல்லியிருப்பது ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு வெற்றுக் கோசமே. அவரின் தகப்பன் சொன்ன “எல்லாம் தருவேன் ஈழம் தவிர என்பதை” வரலாற்றில் பார்த்து வந்தவர்கள் தான் நாம் என்பதை மறந்துவிடக் கூடாது.

தென்னிலங்கையைப் பொறுத்தவரை இனவாத அரசியலை யார் அதிகம் பேசுகிறார்களோ அவர்களைத் தெரிந்தெடுக்கவேண்டும் என்ற மன நிலை சிங்கள மக்கள் மத்தியில் நெடுங்காலமாகவே இருந்து வருகிறது.

அது மட்டுமன்றி ஏப்ரல் மாதம் தீவை உலுக்கிய ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு, “தேசிய பாதுகாப்பு” மற்றும் “பயங்கரவாதத் தடைச் சட்டம்” என்ற பழைய விடயங்களுக்கெல்லாம் புதிய முலாம் பூசப்பட்டிருக்கிறது.

ஆகவே, இந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள இனவாத சக்திகளுக்குள்ளே ஒரு சிக்கலான போட்டியை சர்வதேச சக்திகள் தோற்றுவித்திருக்கின்றன.

சீனாவின் பக்கம் போக முடியாத ஒரு சிக்கலான நிலைமையைச் சிங்களப் பேரினவாத சக்திகளிடையே உருவாக்கும் போக்காகவும் இதை நாங்கள் பார்க்கலாம்.

தமிழர்களைப் பொறுத்தவரை “அனுபவித்த பிசாசுக்கும், அனுபவிக்காத பேய்க்கும்” இடையே நடைபெறும் போட்டியாகவே கோட்டபாயவுக்கும் சஜித்துக்கும் இடையே நடைபெற இருக்கும் போட்டி இருக்கப்போகிறது. சிங்களப் பேரினவாத வாக்குகளை உடைக்கும் மூன்றாவது வேட்பாளராக ஜே.வி.பியின் அநுரா திசநாயகவும் விளங்கப்போகிறார்.

இந்தப் பொறிக்குள் தமிழர்களின் வாக்குகள் விழுந்து நாம் அர்த்தமற்ற பலிக்கடாக்களாகப் பயன்படுத்தப்படாது, எமது அணுகு முறை சுய நிர்ணய உரிமையை மையப்படுத்தியாக இருக்கச் செய்வதன் மூலம் சர்வதேச சக்திகளுடன் தமிழர்கள் பேரம்பேசும் நிலையை நாங்கள் வலுப்படுத்தலாம்.

ஆகவே, சர்வதேச சமூகத்துடன் பேரம் பேசாது மௌனமாக இருந்து செல்லப்பிள்ளை அரசியல் செய்வதால் பலன் ஏதும் இல்லை என்ற நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதான தெரிவை மேற்கொள்ள நான் முடிவெடுத்தேன்.

இதே சிந்தனையை சிவாஜிலிங்கம் அண்ணாவும் வலியுறுத்தினார். என்னைப் போட்டியிட வைப்பதற்கு ஒரு கட்சியை நாடினார். ஆனால், அதற்கு அந்தக் கட்சி சம்மதிக்கவில்லை.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவேண்டுமானால் ஒன்றில் ஒரு பதியப்பட்ட கட்சியின் வேட்பாளராக நான் தெரிவுசெய்யப்படவேண்டும் அல்லது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கவேண்டும். கட்சி கிடைக்காத நிலையில் என்னால் போட்டியிட முடியாத நிலை தோன்றியது.

சிவாஜி அண்ணா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் போட்டியிடும் வாய்ப்பு இருந்தது. அதை அவர் செய்ய முன்வந்த போது நானும் அவருக்குப் பக்கபலமாக நிற்பதாக முடிவெடுத்தேன்.

ஆகவே, சர்வதேச சக்திகள் தமிழர்களுடன் பேரம் பேசுவதற்கான ஒரு வாய்ப்பை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். அதைச் செய்வதற்கு விரும்பும் சக்திகள் எம்மை அணுகலாம். ஈழத்தமிழர்களின் அபிலாசை குறித்த நலனை மையப்படுத்தியே எமது பேரம் பேசல் அமைந்திருக்கும்.

அதேவேளை, இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும் என்ற கருத்துடையவர்களுக்கும் எங்கள் நிலைப்பாட்டுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

சிவாஜி அண்ணாவுக்கு முதலாவது வாக்கையும், ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிப்பதாகச் சொல்லும் பேரினவாத மனநிலை இல்லாத ஒரு வேட்பாளருக்கு விருப்பு வாக்கையும் செலுத்தும் போது தேர்தல புறக்கணிப்புக்கு ஒப்பான கருத்துநிலையையே ஒரு தமிழ் வாக்களார் வெளிப்படுத்துவார்.

குறிப்பாக, மூன்று பிரதான சிங்களப் போட்டியாளர்களும் சிங்கள பௌத்த பேரினவாதத்தையை முன்னெடுப்பார்கள் என்பதாலும், இவர்கள் ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்காத படியாலும், இவர்களுக்கு எமது வாக்குச் செல்லக்கூடாது என்பதே எனது நிலைப்பாடு.

இந்த அடிப்படையிலேயே எமது பேரம் பேசல் சர்வதேசச் சக்திகளுடன் அமையவேண்டும் என்பதே எனது கருத்து.

ஆனால், நான் தேர்தலில் போட்டியிடவில்லை. எனது கருத்துக்கு ஒப்பான கருத்தை சிவாஜி அண்ணா கொண்டிருக்கிறார் என்று நான் பூரணமாக நம்புகிறேன்.

சர்வதேச சக்திகளுடன் தான் பேரம் பேசல், வெற்றுப் பேச்சு வேட்பாளர்களிடம் அல்ல என்ற நிலைப்பாட்டிலும், முழுமையான, எந்தவிதத் தேய்வும் இல்லாத சுயநிர்ணய உரிமை என்ற நிலைப்பாட்டிலும் அவர் உறுதியாக இருப்பார் என்ற நம்பிக்கையிலும் அவரை முன்னிலைப்படுத்திச் செயற்பட நான் களம் இறங்க முடிவெடுத்தேன்.

அடுத்ததாக, பொதுவேட்பாளர் என்ற முயற்சிகளில் இறுதி நாட்களில் கூட்டங்களை நடாத்தியவர்கள் எங்களை அழைத்து முறையாகப் பேசியிருக்கவில்லை.

ஆனால், ஒரு விடயத்தில் நானும் சிவாஜி அண்ணாவும் தெளிவாக இருந்தோம். இது துணிந்து செயற்பட வேண்டிய தருணம். மதில் மேல் பூனையாக இறுதிவரை இருந்துவிட்டு எதுவித பலனும் இல்லாத ஊடக அறிக்கைகளை வெளியிட்டு இயலாமைக்குப் பலியாகாமால், வேட்பாளர் பத்திரத்தை கால வரையறை தாண்டமுதல் தாக்கல் செய்வோம். போட்டியிடுவதா இல்லையா என்பது அடுத்த கட்டம் என்ற முனைப்பிலேயே நாங்கள் களமிறங்கினோம்.

தேர்தலை நிராகரியுங்கள் என்று சொல்பவர்களுக்கும் அர்த்தமுள்ளவகையில் நிராகரிக்கும் வாய்ப்பை உருவாக்கியிருக்கிறோம். பொதுவேட்பாளரை நிறுத்தவேண்டும் என்ற கருத்துடையவர்களுக்கும் சரியான வாய்ப்பொன்றை உருவாக்கித்தந்திருக்கிறோம்.

பொதுவேட்பாளராக சிவாஜி அண்ணாவைக் கருதி அவரோடு கருத்துப் பரிமாற அனைத்துத் தரப்புகளையும் எதுவித பாரபட்சமும் இன்றி நாங்கள் அழைக்கிறோம்.

அனைத்து ஈழத்தமிழர்களும் நடைமுறையில் ஒரு கருத்துநிலைக்குப் பலம் சேர்க்க முன்வரவேண்டும் என்றும் இத்தால் வேண்டுகோள் விடுக்கிறோம்.

உண்மையான பேரம் பேசல் யாரோடு என்பதில் சிவாஜி அண்ணா தெளிவாக இருக்கும் வரை அவருக்குப் பக்கபலமாக நான் இயங்குவேன்.

ஒற்றுமை, ஒன்றிணைந்த கொள்கை என்பதை மக்கள் முடிவெடுப்பதற்கான ஒரு வாய்ப்பாகவும் இது அமையும் என்று நான் நம்புகிறேன்.

நன்றி

https://tamilnet.com/art.html?catid=79&artid=39602

  • கருத்துக்கள உறவுகள்

இராட்சத பெருச்சாளிகளின் முன் ஒரு சிறிய சுண்டெலியின் முனகல்.. எடுபடாது.

மீண்டும்.. வேதாளம் முருங்கைமரத்தில் ஏறி வசதியாக உட்கார்ந்து கொண்டது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை நிலமைகொஞசம் வித்தியாசமாக இருக்கும் போல இருக்குது.தமிழ் முஸ்லிம் மக்களும் இரன்டு பகுதிக்கும் பிரிந்து வாக்களிப்பார்கள் போல் உள்ளது.

5 hours ago, ampanai said:

அதேவேளை, இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும் என்ற கருத்துடையவர்களுக்கும் எங்கள் நிலைப்பாட்டுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

சிவாஜி அண்ணாவுக்கு முதலாவது வாக்கையும், ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிப்பதாகச் சொல்லும் பேரினவாத மனநிலை இல்லாத ஒரு வேட்பாளருக்கு விருப்பு வாக்கையும் செலுத்தும் போது தேர்தல புறக்கணிப்புக்கு ஒப்பான கருத்துநிலையையே ஒரு தமிழ் வாக்களார் வெளிப்படுத்துவார்.

குறிப்பாக, மூன்று பிரதான சிங்களப் போட்டியாளர்களும் சிங்கள பௌத்த பேரினவாதத்தையை முன்னெடுப்பார்கள் என்பதாலும், இவர்கள் ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்காத படியாலும், இவர்களுக்கு எமது வாக்குச் செல்லக்கூடாது என்பதே எனது நிலைப்பாடு.

இந்நிலைப்பாடு கோத்தாவுக்கு சாதகமானது.

  • தொடங்கியவர்
3 minutes ago, Lara said:

இந்நிலைப்பாடு கோத்தாவுக்கு சாதகமானது.

இந்த கூற்று பற்றிய உங்கள் கருத்து என்ன ?

குறிப்பாக, மூன்று பிரதான சிங்களப் போட்டியாளர்களும் சிங்கள பௌத்த பேரினவாதத்தையை முன்னெடுப்பார்கள் என்பதாலும், இவர்கள் ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்காத படியாலும், இவர்களுக்கு எமது வாக்குச் செல்லக்கூடாது என்பதே எனது நிலைப்பாடு.

2 minutes ago, ampanai said:

இந்த கூற்று பற்றிய உங்கள் கருத்து என்ன ?

குறிப்பாக, மூன்று பிரதான சிங்களப் போட்டியாளர்களும் சிங்கள பௌத்த பேரினவாதத்தையை முன்னெடுப்பார்கள் என்பதாலும், இவர்கள் ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்காத படியாலும், இவர்களுக்கு எமது வாக்குச் செல்லக்கூடாது என்பதே எனது நிலைப்பாடு.

அனந்தி எந்த காரணமும் கூறட்டும். ஆனால் அந்நிலைப்பாடு வாக்குகள் பிரிவதன் அடிப்படையில் கோத்தாவுக்கு சாதகமானது.

இது தெரியாத அளவுக்கு அனந்தி பேபி அல்ல.

  • தொடங்கியவர்
1 minute ago, Lara said:

அனந்தி எந்த காரணமும் கூறட்டும். ஆனால் அந்நிலைப்பாடு வாக்குகள் பிரிவதன் அடிப்படையில் கோத்தாவுக்கு சாதகமானது.

இது தெரியாத அளவுக்கு அனந்தி பேபி அல்ல.

யார் கூறினார் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.  மறுபக்கம், அந்த கூற்றில் ஒரு நியாயம் உள்ளதா இல்லையா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் உள்ளது.

இந்த மூன்று பேருக்குள் ஒருவர் இன்னொருவரை விட மோசமாக தமிழினத்தை பொறுத்தவரை இருப்பார்கள். அது கோத்தாவாக இருக்கும், இல்லாமல் இருக்கும். மற்றைய இருவர் பற்றியும் ஓரளவிற்கு தான் தெரியும்.

மீண்டும் அந்த கூற்றில் உள்ள செய்தி : இந்த மூவரும் எந்த உரிமைகளையும் தமிழருக்கு தர மாட்டார்கள்.

மாறாக, மூன்றில் ஒருவருக்கு அளிக்கும் வாக்கு இந்த மூன்று பேரையும், தமிழர்கள் ஏற்றார்கள் என்றுதான் சிங்களமும் உலகமும் பார்க்கும் என்பது தான் அந்த கூற்று.   

2 hours ago, ampanai said:

யார் கூறினார் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.  மறுபக்கம், அந்த கூற்றில் ஒரு நியாயம் உள்ளதா இல்லையா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் உள்ளது.

இந்த மூன்று பேருக்குள் ஒருவர் இன்னொருவரை விட மோசமாக தமிழினத்தை பொறுத்தவரை இருப்பார்கள். அது கோத்தாவாக இருக்கும், இல்லாமல் இருக்கும். மற்றைய இருவர் பற்றியும் ஓரளவிற்கு தான் தெரியும்.

மீண்டும் அந்த கூற்றில் உள்ள செய்தி : இந்த மூவரும் எந்த உரிமைகளையும் தமிழருக்கு தர மாட்டார்கள்.

மாறாக, மூன்றில் ஒருவருக்கு அளிக்கும் வாக்கு இந்த மூன்று பேரையும், தமிழர்கள் ஏற்றார்கள் என்றுதான் சிங்களமும் உலகமும் பார்க்கும் என்பது தான் அந்த கூற்று.   

யார் கூறினார் என்பது பற்றி அல்ல, அவரது நிலைப்பாடு பற்றியே என் கருத்து அமைந்தது.

மூவரில் யாரும் தமிழருக்கு உரிமையை தருவார்கள் என நானும் கூறவில்லை.

ஆனால் மூவருக்கும் வாக்களிக்காமல் வேறு ஒருவருக்கு வாக்களிப்பதால் அந்நபரை ஜனாதிபதியாக அமர்த்தப்போவதில்லை. எப்படியோ சஜித் அல்லது கோத்தா தான் ஜனாதிபதி.

மூவரில் ஒருவருக்கு வாக்களிப்பதால் அவர்களை தமிழர்கள் ஏற்றார்கள் என சர்வதேசமும் சிங்களமும் கருதப்போவதில்லை. அவர்களுக்கு தமிழர்கள் சிங்களவர்களை ஏற்கவில்லை, வேறு வழியில்லாமல் தான் வாக்களிக்கிறார்கள் என்ற உண்மை தெரியும். (கோத்தாவுக்கு வாக்களித்தால் மட்டும் வித்தியாசமாக பார்ப்பார்கள்).

ஒரு பேச்சுக்கு மைத்திரியும் சஜித்தும் வேட்பாளர்களாக இருந்து அனந்தி இவ்வாறான நிலைப்பாட்டை எடுத்தால் பரவாயில்லை.

கோத்தா ஒரு ஜனாதிபதி வேட்பாளராக உள்ள போது, இந்நிலைப்பாடு கோத்தாவுக்கு சாதகமானது என தெரிந்து கொண்டே இவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பதானது கோத்தாவின் வெற்றியை ஆதரிப்பதற்கு சமனானது.

அனந்தி சுதந்திரக்கட்சியுடன் இணைந்து செயற்படப்போவதாக தெரிவித்த போது நானும் அவருக்கு சார்பாக கருத்து எழுதியிருந்தேன். ஆனால் ஜனாதிபதி தேர்தல் நேரம் இவ்வாறு குழப்பங்களை உருவாக்குவார் என எதிர்பார்த்திருக்கவில்லை.

https://yarl.com/forum3/topic/231195-ஸ்ரீலங்கா-சுதந்திரக்-கட்சியுடன்-இணைந்து-செயற்படவுள்ளதாக-அனந்தி-அறிவிப்பு/#comments

Edited by Lara

5 hours ago, சுவைப்பிரியன் said:

இந்த முறை நிலமைகொஞசம் வித்தியாசமாக இருக்கும் போல இருக்குது.தமிழ் முஸ்லிம் மக்களும் இரன்டு பகுதிக்கும் பிரிந்து வாக்களிப்பார்கள் போல் உள்ளது.

2015 ஜனாதிபதி தேர்தலில்,

யாழ்ப்பாணத்தில்

மைத்திரி - 253,574

மகிந்த - 74,454

வன்னியில்

மைத்திரி - 141,417

மகிந்த - 34,377

மட்டக்களப்பில்

மைத்திரி - 209,422

மகிந்த - 41,631

அம்பாறையில்

மைத்திரி - 233,360

மகிந்த - 121,027

திருகோணமலையில்

மைத்திரி - 140,338

மகிந்த - 52,111

இம்முறை என்ன நடக்கப்போகிறதோ. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.