Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதைதான் நாங்கள் எதிர்பார்த்தது.  மாறி மாறி கடிபடுங்கள்.  கிழக்கு எங்கள் கைக்கு வந்தாயிற்று.  மன்னாரும் முல்லைத்தீவு ஏறக்குறைய வந்தாயிற்று.  இன்னும் இருபது  வருடங்களில் வடக்கும் வரும்.  நீங்கள் எல்லோரும் மாறி மாறி கடிபடுங்கள்.  நாங்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்கிறோம்.

பாவம் பிரபாகரன்.  அவன் தன்னையும் கொடுத்து,  தனது குடும்பத்தையும் கொடுத்து, தன்னை நம்பி வந்த மக்களையும் கொடுத்தான் இந்த தகுதி இல்லா மனிதருக்கு.  

வெட்ட்கம் கெட்டவர்கள். தூ 

  • Replies 412
  • Views 38.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, satan said:

முதலாம்வகுப்பு மாணவனுக்கு ஐந்தாம் வகுப்பு பாடம் எடுக்க முயல்வது முட்டாள்தனம். அதனாற்தான்  சொல்கிறேன். உதவியை மதத்தோடு விமர்சிக்க முனைந்தால் விளங்குவது கஸ்ரம். எனக்கு தெரிந்த எல்லாவற்றையும்  மற்றவர்கள் விளங்கிக்கொள்வார்கள் என்றோ, விளங்க முடியும் என்றோ நான் எதிர்பார்ப்பதில்லை. தெரியாத ஒன்றை தெரியும் என்றோ, நான் சொல்வது தான் சரி என்றோ அடம் பிடிப்பதும் நேர சக்தி விரயம்.  அவரவர் நம்பிக்கையை மதிப்பது எனது இயல்பு. 


 

இங்கு  நீங்கள் செய்யும் மதமாற்றத்திற்கான உதவிகளை நான் பேசவில்லை.

உங்கள் மதத்தைப்பற்றி, பைபிளைப்பற்றி பேசுகிறேன்.

பைபிளைப்பற்றிய எனது அறிவு, வெறும் கேள்வி ஞானம்தான்.

நீங்கள் பாடமெடுத்தால், நான் மட்டுமல்ல, இங்குள்ள எல்லாரும் பயன் பெறுவார்கள்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, மாங்குயில் said:


 

இங்கு  நீங்கள் செய்யும் மதமாற்றத்திற்கான உதவிகளை நான் பேசவில்லை.

உங்கள் மதத்தைப்பற்றி, பைபிளைப்பற்றி பேசுகிறேன்.

பைபிளைப்பற்றிய எனது அறிவு, வெறும் கேள்வி ஞானம்தான்.

நீங்கள் பாடமெடுத்தால், நான் மட்டுமல்ல, இங்குள்ள எல்லாரும் பயன் பெறுவார்கள்.

 

 

பாடம் எடுக்கும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய அறிவாளி கிடையாது. ஒவொருவரின் நம்பிக்கையை நாம் நினைத்தபடி விமர்சிக்கவோ, விளக்கம் அளிக்கவோ முடியாது என்பதைத்தான் கூற வந்தேன்.   தெரியாததை ஒப்புக் கொள்வதுதான் பெருந்தன்மை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, satan said:

பாடம் எடுக்கும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய அறிவாளி கிடையாது. 


***முதலாம்வகுப்பு மாணவனுக்கு ஐந்தாம் வகுப்பு பாடம் எடுக்க முயல்வது முட்டாள்தனம்****

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்தவ மத குழுக்கள் (புது புது சிறிய குழுக்கள் ) தமிழ் சமூகத்துக்கு செய்வது என்ன ? என்பதை கிறிஸ்தவர்களும் 

மத மாறுவதட்கான காரணம் என்ன  என்பதையும் சைவ சமயத்தவர்களும் சுய பரிசோதனை செய்வது  நன்று.  

 

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Paanch said:

ஈழத் தமிழர்கள் சைவர்கள் அவர்கள் சார்பில் இதுவரை எந்தக் கட்சியும் பேசவில்லை.
தமிழர் சார்பில் பேசுவோர்கள் கிறிஸ்தவர்களே .அவ்வாறு பேசுவோரின் நோக்கம் சைவர்களைக் கிறிஸதவர்கள்; ஆக்குவதே.

இங்கே கூற வரும் செய்தி என்ன இருப்பவர்களும்கிறிஸ்தவர்களாக மாறி விடுங்கள்  என்கிறாரா? அல்லது மாறியவர்கள் சரியானதைத்தான் செய்திருக்கிறார்கள் என்கிறாரா? அவருக்கு தமிழருக்கு உதவி செய்ய விருப்பமில்லை என்பதை காட்டுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, tulpen said:

ஆனால் உங்களை போல் எல்லோரும் இல்லை. பெரும்பான்மை இந்துளாகிய எமது மக்கள் கடவுளை ஆன்மீகத்தை விட மூட நம்பிக்கைகளை தான் நம்புபவர்கள்.  அவ்வாறு நம்ப வைக்கப்படுள்ளார்கள்.  அதனால்  தான் மத மாற்றும் கும்பல்கள் அவர்களை இலகுவில் மாற்ற கூடியதாக உள்ளது என்பதே எனது கருத்து. 

கோயில்களை சாமிக்கு பால் ஊத்துறோம், பக்கத்தில் இருந்து பாலுக்கு அழும் குழந்தையை புறக்கணித்து விட்டு. அங்கே ஏழைகளுக்கு செய்பவர்களை பார்த்து இவ்வாறு சொல்கிறார்கள்  "இந்தச் சின்னஞ் சிறுவருக்கு செய்ததெல்லாம் எனக்கே (கடவுளுக்கே)  செய்தீர்கள்." 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Paanch said:

மதமாற்றம் ஒன்றையே நோக்கமாகக் கொண்ட மெதடித்த சபையில் துணைத் தலைவராக இருப்பவர் ஆபிரகாம் சுமந்திரன்.
மாதந்தோறும் இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்று மதமாற்றப் பணிகளை மட்டுமே மேற்கொள்பவர் அவரது துணைவியார் சாவித்திரி சுமந்திரன்.

இப்படி இரெண்டு இலெட்சம் ரூபாய் சம்பளம் கொடுப்பது அவர்கள் மதக்கடமையை ஒரு  பூசாரி போல செய்வதற்காக. மதம் பரப்புவது கிறீஸ்தவர்களின் மதக்கடமை. அதை செய்யாதே என்பது, சைவ கோவில்களில் திருவிழா செய்யாமல் அந்த பணத்தில் தாழ்த்த பட்ட மக்களுக்கு கழிப்பிடம் கட்டி கொடுங்கள் என்று சொல்வது போலாகும்.

இந்துக்களும் பூசகர்களுக்கும், ஆலய நிருவாகிகளுக்கும் தேர் செய்பவர்களுக்கும் சம்பளம் கொடுக்கிறார்கள் தானே? நல்லூர் திருவிழாவில் எவ்வளவு பணம் புரளுகிறது தெரியுமா? யார் இந்த இந்துமத வியாபாரிகள்? மதத்தின் பெயரால் இவர்கள் அடிக்கும் கொள்ளை என்று நீங்கள் கணக்கு வழக்கை காட்டலாமே?

உலகிலுள்ள கடைந்தெடுத்த மடையர்களே மதமாற்றம் எனும் புறம்போக்கு வியாபாரத்தில் ஈடுபடுகிறார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Lara said:

கத்தோலிக்கரான Ariana Grande அதை கைவிட்டு யூதர்களின் Kabbalah ஐ நோக்கி சென்றதும் “God is a woman” என்ற பாடலை உருவாக்கியது போன்ற கொமடிகளையும் பார்த்து வருகிறேன். 😂

Ariana Grande குட்டை பாவாடையுடன் துள்ளி துள்ளி ஆடுவதை பார்த்து ரசித்துவிட்டு இப்படி உப்பு சப்பில்லாமலா எழுதுவது? வீடியோவும் அல்லவா போட வேண்டும்? எனது தனிப்பட்ட அபிப்பிராயம் God, கடவுள், அல்லா எல்லாருமே உமாதேவியாருடன் லெஸ்பியன் உறவில் இரகசியமாக ஈடுபடும் பெண்கள். இது பற்றி ஒரு குறும்படம் எடுக்கலாம் என்று நினைக்கிறேன், யாருக்காவது ஆட்சேபனை இருக்கிறதா?

11 minutes ago, Rajesh said:

உலகிலுள்ள கடைந்தெடுத்த மடையர்களே மதமாற்றம் எனும் புறம்போக்கு வியாபாரத்தில் ஈடுபடுகிறார்கள்!

நீங்கள் கடையாமலே மிதந்து வந்த மடையர் என்கிறீர்கள், என்ன வியாபாரம் செய்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வாத்தியார் said:

மதத்தை வியாபாரமாக்கிய மிஷினரிகள்: மதமாற்றம் எப்படி நடக்கிறது? நிதி வருவது எப்படி?


 சென்னை: ஆக்ராவில் முஸ்லிம்கள் 200 பேர், இந்துக்களாக மதம் மாறியுள்ள அல்லது மாற்றப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்படும் நிலையில், மதமாற்ற விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த சர்ச்சை காரணமாக, இந்தியாவில் கிறிஸ்தவ மிஷினரிகள் சத்தமே இல்லாமல் நடத்திவரும் மதமாற்றம் குறித்து உளவுத்துறை அளித்துள்ள விவரங்களும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. "ஆப்ரிக்காவுக்கு மிஷினரிகள் வந்தபோது அவர்கள் கைகளில் பைபிள் இருந்தன. எங்களிடம் நிலங்கள் இருந்தன. அவர்கள் சொன்னார்கள்... நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கிறோம் என்று. நாங்களும் கண்களை மூடினோம். ஆனால் கண்களை திறந்து பார்த்தபோது, எங்களிடம் பைபிள்கள் இருந்தன, அவர்களிடம் எங்கள் நிலங்கள் இருந்தன.." என்று வேதனையோடு ஆப்பிரிக்காவில் நடந்த மதமாற்ற மோசடியை வெளி உலகத்திற்கு தெரிவித்தார் மறைந்த கென்ய அதிபர் ஜோமோ கென்யத்தா.

மிஷினரிகளின் மார்க்கெட்டிங் டெக்னிக்குகள்தான், மக்களை கும்பலாக மதம்மாற்றுவதில் முக்கிய பங்காற்றுவதாக கூறுகின்றனர் மதம் மாற்றம் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளோர். உதாரணத்துக்கு 2000மாவது ஆண்டில் இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் 2 கோடியே 40 லட்சமாக இருந்தது கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை. அது கடந்த ஆண்டில் 7 கோடியே 10 லட்சமாக உயர்ந்துள்ளது. வெளியே தெரிவதைவிட மிக கடுமையாக மதமாற்றம் இந்தியாவில் நடைபெற்றுவருவதை அப்புள்ளி விவரம் வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது.

உணவு, வசிப்பிடம் மற்றும் ஆடை போன்ற அடிப்படை தேவைகளுக்காக கஷ்டப்படுவோர்கள்தான் மிஷினரிகளின் முதல் டார்கெட். அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களிலுள்ள ஏழைகளை இவர்கள் எளிதில் மதம் மாற்ற முடிகிறது. அவர்களிடம் நிலவும் கடவுள் மீதான பயம் மற்றும் அறியாமை போன்றவை மிஷினரிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடுகிறது.

Cutting Edge International and the CoFounder of Billion Soul Network என்ற முன்னணி கிறிஸ்தவ அமைப்பின் நிறுவனர், டாக்டர். ஜேம்ஸ் ஓ டேவிஸ் கூறுகையில், "இந்தியாவில் 6 கோடி கிறிஸ்தவர்கள் உள்ளனர். உலகிலேயே அதிகமாக கிறிஸ்தவர்கள் வாழும் இரண்டாவது தேசம் இந்தியா. உலகிலேயே அதிகம் கிறிஸ்தவர்கள் வசிக்கும் நாடாக இந்தியா மாறும்" என்கிறார். இரு குழந்தைகள் முறையை பின்பற்றும் கிறிஸ்தவ குடும்பங்கள் எப்படி இப்படி பல்கி பெருகியுள்ளன என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். ஜேம்ஸ் ஓ டேவிஸ் நடத்திவரும் அமைப்பு மேலும் 2 ஆயிரம் கிறிஸ்தவ அமைப்புகளுடன் சேர்ந்து இதுவரை 4 லட்சத்து 75 ஆயிரம் சர்ச்சுகளை மிகுந்த செலவு செய்து கட்டியுள்ளதாம்.

நிதி பெறுவது யார்? கிறிஸ்தவ மதமாற்றங்கள் குறித்து உளவுத்துறை சேகரித்த தகவல்கள் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் உள்ளன. இந்தியாவில்.. அதிலும் தமிழகத்திலுள்ள என்.ஜி.ஓக்கள் எனப்படும் தன்னார்வ அமைப்புகள், மக்களை மதம்மாற்ற வெளிநாடுகளில் இருந்து அதிகப்படியாக நிதி பெறுவது அதில் தெரியவந்துள்ளது.

ஆண்டுதோறும் சுமார் பத்தாயிரத்து 500 கோடி ரூபாய் இந்திய என்ஜிஓக்களுக்கு வருகிறது. மதம் மாற்றுவது, நாட்டின் கலாசாரத்தை உருக்குலைப்பது மட்டுமே இந்த நிதியின் நோக்கம். உள்துறை அமைச்சக தகவல்படி, கன்னியாகுமரியை சேர்ந்த Tuticorin Diocesan Association மற்றும் Tuticorin Multipurpose Social Service Society ஆகிய இரண்டும் அதிக அளவில் நிதி உதவி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இவற்றுக்கு அடுத்தபடியாக Rural Uplift Centre மற்றும் Association(TDA) of the Latin Catholic Diocese of Tuticorin ஆகிய என்ஜிஓக்கள் அதிகம் நிதி உதவி பெற்றுள்ளன.

இந்த என்ஜிஓக்களுக்கு பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருந்துதான் அதிகப்படியான நிதி வந்துள்ளதும் உள்துறை அமைச்சகத்திற்கு தெரியவந்துள்ளது. ரூ.44.16 கோடி, ரூ.20.60 கோடி, ரூ.10.30 கோடி, 5.15 கோடி, ரூ.3.22 கோடி என பல கட்டங்களாக இவ்வமைப்புகளுக்கு நிதி வந்துள்ளது. இந்த நிதியை ஏன் பெறுகிறார்கள் என்று சம்மந்தப்பட்ட என்ஜிஓக்களிடம் அதிகாரிகள் விசாரித்தபோது, அவை சுகாதார முகாம்கள், அநாதைகள் நல திட்டங்கள், மத போதகர்களுக்கான சம்பளம் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்பட்டதாதக தெரிவித்துள்ளன.
 
மார்க்கெட்டிங்!
மதமாற்றம் என்பது மார்க்கெட்டிங் போல மாற்றப்பட்டுள்ளது. பிரபல மதபோதகர் பென்னிஹின் பெங்களூருவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வந்து கூட்டம் நடத்தியபோது இந்து அமைப்புகள் அதை எதிர்த்து போராட்டங்களை நடத்தின. ஆயினும் அவரது கூட்டத்திற்கு அப்போதைய காங்கிரஸ் அரசு பாதுகாப்பு அளித்திருந்தது. அக்கூட்டத்தில் பென்னி ஹின் மைக்கேல் ஜாக்ஷனை போலத்தான் மேடையில் என்ட்ரி ஆனார். ராக் பாடல்கள் காதை கிழித்தன.

அக்கூட்டத்தில், தள்ளுவண்டியில் அழைத்துவரப்பட்ட மாற்றுத்திறனாளிகள், பென்னிஹின் 'ஆசீர்வதித்ததும்' எழுந்து நடந்து சென்றதை நிருபர்கள் பார்க்க முடிந்தது. இதைப்போன்ற கண்கட்டி வித்தைகளை பார்க்கும் பகுத்தறிவில்லாத மனிதர்கள், மதமாற்றத்திற்கு உள்ளாகிறார்கள் என்கின்றனர் பகுத்தறிவாளிகள். ஆனால் அறிவியல் ரீதியாகவோ, நடைமுறையிலோ முடியாத ஒரு செயலை பென்னிஹின் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்..? என்ற கேள்வியின் பின்னால்தான் மார்க்கெட்டிங் டெக்னிக் ஒளிந்துள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/india/marketing-religion-india-who-does-it-how-they-do-it-216874.html

 

வாத்தியார் இதைவிட பாரிய ஆபத்தான விடயெமெல்லலாம் இதன் பின்னால் இருக்கிறது 
பல மதங்களை உருவாக்கியது அமெரிக்க உளவு துறையான சி ஐ ஏ தான். வேறு  யாரோ உருவாக்கிய 
மதங்களிலும் இவர்களின் ஊடுருவல் மேல்மட்டம்வரை இருக்கிறது. 

இன்னொரு நாட்டுக்குள் இலகுவாக உட் புகுந்துகொள்ள மதம்போல வேறு நல்ல வேடம் 
பிறிதில்லை அத்தோடு அச்சு வேறு ஆணி வேறாக பிரித்து உண்மையான நிலைமையை 
திரட்டி பாதுகாப்பாக கொண்டுவரவும் மதம் பயன்பெறுகிறது.

வாத்திகான் என்பது இன்னொரு உலகவங்கி என்றுகூட சொல்லலலாம் 
முற்றும் பொருளாதாரம் சார்ந்துதான் அங்கு இருக்கிறது. பல நாடுகளில் சண்டைகளை 
உருவாக்கி சொத்துக்களை தமது உதிரி கிளைகளின் பெயரில் பதிந்து கொள்வது என்பது 
பல ஆண்டுகளாக நடந்துகொண்டிருப்பது. எண்ணெய் கொம்பனிகளில் பாரிய முதலீடுகளை 
வத்திக்கான் செய்துஉள்ளது ....... சிறுவர்களை பாலியல் பயன்பாட்டில் ஈடுபடுத்துவது என்பது 
மேல்மட்டம் தொடங்கி ஏற்கனவே தெரிந்து இருந்ததோடு அப்படியான பிரியாமானவர்களை 
அவ்வாறான இடங்களுக்கு அனுப்பி புத்துணர்ச்சி கொடுத்து வந்து என்பதை இப்போதைய 
பாப்பரசரே ஒத்துக்கொள்ள வேண்டிய அளவில் இருந்து இருக்கிறது. கன்னியாஸ்திரிகளை விபாச்சாரம் வரை 
கொண்டு சென்று இருக்கிறது இவை பற்றி பல தரமான டாக்குமெண்டரிகள் இருக்கு .....
இங்கு இந்த குத்துப்பாடு முடியவிட்டு இணைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, வாத்தியார் said:

மதத்தை வியாபாரமாக்கிய மிஷினரிகள்: மதமாற்றம் எப்படி நடக்கிறது? நிதி வருவது எப்படி?


 சென்னை: ஆக்ராவில் முஸ்லிம்கள் 200 பேர், இந்துக்களாக மதம் மாறியுள்ள அல்லது மாற்றப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்படும் நிலையில், மதமாற்ற விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த சர்ச்சை காரணமாக, இந்தியாவில் கிறிஸ்தவ மிஷினரிகள் சத்தமே இல்லாமல் நடத்திவரும் மதமாற்றம் குறித்து உளவுத்துறை அளித்துள்ள விவரங்களும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. "ஆப்ரிக்காவுக்கு மிஷினரிகள் வந்தபோது அவர்கள் கைகளில் பைபிள் இருந்தன. எங்களிடம் நிலங்கள் இருந்தன. அவர்கள் சொன்னார்கள்... நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கிறோம் என்று. நாங்களும் கண்களை மூடினோம். ஆனால் கண்களை திறந்து பார்த்தபோது, எங்களிடம் பைபிள்கள் இருந்தன, அவர்களிடம் எங்கள் நிலங்கள் இருந்தன.." என்று வேதனையோடு ஆப்பிரிக்காவில் நடந்த மதமாற்ற மோசடியை வெளி உலகத்திற்கு தெரிவித்தார் மறைந்த கென்ய அதிபர் ஜோமோ கென்யத்தா.

மிஷினரிகளின் மார்க்கெட்டிங் டெக்னிக்குகள்தான், மக்களை கும்பலாக மதம்மாற்றுவதில் முக்கிய பங்காற்றுவதாக கூறுகின்றனர் மதம் மாற்றம் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளோர். உதாரணத்துக்கு 2000மாவது ஆண்டில் இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் 2 கோடியே 40 லட்சமாக இருந்தது கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை. அது கடந்த ஆண்டில் 7 கோடியே 10 லட்சமாக உயர்ந்துள்ளது. வெளியே தெரிவதைவிட மிக கடுமையாக மதமாற்றம் இந்தியாவில் நடைபெற்றுவருவதை அப்புள்ளி விவரம் வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது.

உணவு, வசிப்பிடம் மற்றும் ஆடை போன்ற அடிப்படை தேவைகளுக்காக கஷ்டப்படுவோர்கள்தான் மிஷினரிகளின் முதல் டார்கெட். அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களிலுள்ள ஏழைகளை இவர்கள் எளிதில் மதம் மாற்ற முடிகிறது. அவர்களிடம் நிலவும் கடவுள் மீதான பயம் மற்றும் அறியாமை போன்றவை மிஷினரிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடுகிறது.

Cutting Edge International and the CoFounder of Billion Soul Network என்ற முன்னணி கிறிஸ்தவ அமைப்பின் நிறுவனர், டாக்டர். ஜேம்ஸ் ஓ டேவிஸ் கூறுகையில், "இந்தியாவில் 6 கோடி கிறிஸ்தவர்கள் உள்ளனர். உலகிலேயே அதிகமாக கிறிஸ்தவர்கள் வாழும் இரண்டாவது தேசம் இந்தியா. உலகிலேயே அதிகம் கிறிஸ்தவர்கள் வசிக்கும் நாடாக இந்தியா மாறும்" என்கிறார். இரு குழந்தைகள் முறையை பின்பற்றும் கிறிஸ்தவ குடும்பங்கள் எப்படி இப்படி பல்கி பெருகியுள்ளன என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். ஜேம்ஸ் ஓ டேவிஸ் நடத்திவரும் அமைப்பு மேலும் 2 ஆயிரம் கிறிஸ்தவ அமைப்புகளுடன் சேர்ந்து இதுவரை 4 லட்சத்து 75 ஆயிரம் சர்ச்சுகளை மிகுந்த செலவு செய்து கட்டியுள்ளதாம்.

நிதி பெறுவது யார்? கிறிஸ்தவ மதமாற்றங்கள் குறித்து உளவுத்துறை சேகரித்த தகவல்கள் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் உள்ளன. இந்தியாவில்.. அதிலும் தமிழகத்திலுள்ள என்.ஜி.ஓக்கள் எனப்படும் தன்னார்வ அமைப்புகள், மக்களை மதம்மாற்ற வெளிநாடுகளில் இருந்து அதிகப்படியாக நிதி பெறுவது அதில் தெரியவந்துள்ளது.

ஆண்டுதோறும் சுமார் பத்தாயிரத்து 500 கோடி ரூபாய் இந்திய என்ஜிஓக்களுக்கு வருகிறது. மதம் மாற்றுவது, நாட்டின் கலாசாரத்தை உருக்குலைப்பது மட்டுமே இந்த நிதியின் நோக்கம். உள்துறை அமைச்சக தகவல்படி, கன்னியாகுமரியை சேர்ந்த Tuticorin Diocesan Association மற்றும் Tuticorin Multipurpose Social Service Society ஆகிய இரண்டும் அதிக அளவில் நிதி உதவி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இவற்றுக்கு அடுத்தபடியாக Rural Uplift Centre மற்றும் Association(TDA) of the Latin Catholic Diocese of Tuticorin ஆகிய என்ஜிஓக்கள் அதிகம் நிதி உதவி பெற்றுள்ளன.

இந்த என்ஜிஓக்களுக்கு பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருந்துதான் அதிகப்படியான நிதி வந்துள்ளதும் உள்துறை அமைச்சகத்திற்கு தெரியவந்துள்ளது. ரூ.44.16 கோடி, ரூ.20.60 கோடி, ரூ.10.30 கோடி, 5.15 கோடி, ரூ.3.22 கோடி என பல கட்டங்களாக இவ்வமைப்புகளுக்கு நிதி வந்துள்ளது. இந்த நிதியை ஏன் பெறுகிறார்கள் என்று சம்மந்தப்பட்ட என்ஜிஓக்களிடம் அதிகாரிகள் விசாரித்தபோது, அவை சுகாதார முகாம்கள், அநாதைகள் நல திட்டங்கள், மத போதகர்களுக்கான சம்பளம் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்பட்டதாதக தெரிவித்துள்ளன.
 
மார்க்கெட்டிங்!
மதமாற்றம் என்பது மார்க்கெட்டிங் போல மாற்றப்பட்டுள்ளது. பிரபல மதபோதகர் பென்னிஹின் பெங்களூருவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வந்து கூட்டம் நடத்தியபோது இந்து அமைப்புகள் அதை எதிர்த்து போராட்டங்களை நடத்தின. ஆயினும் அவரது கூட்டத்திற்கு அப்போதைய காங்கிரஸ் அரசு பாதுகாப்பு அளித்திருந்தது. அக்கூட்டத்தில் பென்னி ஹின் மைக்கேல் ஜாக்ஷனை போலத்தான் மேடையில் என்ட்ரி ஆனார். ராக் பாடல்கள் காதை கிழித்தன.

அக்கூட்டத்தில், தள்ளுவண்டியில் அழைத்துவரப்பட்ட மாற்றுத்திறனாளிகள், பென்னிஹின் 'ஆசீர்வதித்ததும்' எழுந்து நடந்து சென்றதை நிருபர்கள் பார்க்க முடிந்தது. இதைப்போன்ற கண்கட்டி வித்தைகளை பார்க்கும் பகுத்தறிவில்லாத மனிதர்கள், மதமாற்றத்திற்கு உள்ளாகிறார்கள் என்கின்றனர் பகுத்தறிவாளிகள். ஆனால் அறிவியல் ரீதியாகவோ, நடைமுறையிலோ முடியாத ஒரு செயலை பென்னிஹின் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்..? என்ற கேள்வியின் பின்னால்தான் மார்க்கெட்டிங் டெக்னிக் ஒளிந்துள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/india/marketing-religion-india-who-does-it-how-they-do-it-216874.html

 

இது ஒரு பக்கம் இருக்கட்டும் இதனால் எமக்கு ஒரே ஒரு இழப்பது 
எமது மத்தில் ஆள்குறைவு மட்டும்தான் 

ஆனால் எமது அழிவுக்கெல்லாம் காரணி இந்துமதமும் பார்பனீயமும் என்பதுதான் 
இங்கு தெளிவாக பேசவேண்டியது. இந்துக்கள் யார்? பார்பனியர் யார்?
இவர்கள் இந்தியாவில் இருந்த சைவம் புத்தம் போன்ற மதங்களை எவ்வாறு அழித்தார்கள்?
போன்றவைதான் ஏன் ஈழப்போர் அழிக்கபட்டது அதன் பின்னணியில் யார் இருந்தார்கள் என்ற 
கேள்விக்கு விடையை கொடுக்கும்.  பார்ப்பான் யூதன் என்பது இங்கு இந்துமத காவடி ஆடும் பலருக்கு தெரியாது ...... இவர்களுக்கு காவடி ஆடுவது ஒன்றே தெரியும் .... அவன் உடுக்கு எடுத்தால் போதும். 

யூதனுக்கும் பார்ப்பானுக்கு இடையில் நான்தான் மூத்ததவன் என்ற வாக்குவாதம் பலகாலமாக இருந்தது 
நன்றாக பிழைப்பு பார்க்க தெரிந்த பார்ப்பான் வசதியாகிக்கொண்டு இருந்த யூதனிடம் நீதான் மூத்தவன் 
என்பதை ஒப்புக்கொண்டான் இதன்மூலம் இந்திராகாந்தியின் ரஷ்ய உறவு நெருக்கமாக இருந்தபோதே பார்ப்பான் இந்தியாவை இஸ்ரேலுக்கு காட்டிக்கொடுக்கும் வேலையை செய்து வந்து இருக்கிறான்.
இவர்களுக்கு இடையில் ரகசியமாகவும் பப்ளிக்காகவும் பல ஒன்று கூடல்கள் இந்தியாவிலும் இஸ்ரேலிலும் ஒவ்வரு வருடமும்  நடந்துகொண்டு இருக்கிறது, இந்திய மத்திய அரசை எவ்வாறு கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பது  மூடர்களுக்கு எவ்வாறு இந்துமத குழை அடித்து மெருகூட்டி வைத்திருப்பது போன்றவை இந்த சந்திப்புகளில்  முக்கிய விடயமாக ஆராய படுகின்றது. 

இவர்கள் இங்கு அமெரிக்காவில் பல வருடம் முன்பு ஆய்வுகள் செய்து யூதர்கள் மூத்தவர்கள் என்றும் 
பார்ப்பனர்கள் இஸ்ரேலில் இருந்து கிளம்பியவர்கள் என்றும் முடிவுக்கு வந்தார்கள் இந்த ஆய்வு பற்றி 
வேதாவும் தோராவும்  என்று புத்தகம் வெளியிடடார்கள் ஒன்லைனில் இருக்கு வாங்கி வாசியுங்கள். இதில் யூதர்களின்  தோராவுக்கும்  பார்ப்பானின் வேதாவுக்கும் உள்ள நெருங்கிய தொடர்புகள் ஆதாரமாக இருக்கிறது. யூதர்களின் மூத்த கடவுளான பிரம் + சாரா தான் இந்தியாவில் பார்ப்பனனால்  பிரம்மன் + சரஸ்வதி  என்று ஆக்கப்பட்டது என்பது தெளிவாக இருக்கிறது. ரிக் வேதம் பல இடங்களில் ஜெஹோவா என்று கடவுளை  குறிப்பிடுகிறது. 

இன்று திடீர் திடீரென அனுமான் கோவில்கள் எமது ஊரில் எவ்வாறு முளைக்கிறது?
என்று யோசிக்க நிறைய இருக்கிறது. 

 

Picture 3 of 10

  • கருத்துக்கள உறவுகள்

 

2 hours ago, Jude said:

Ariana Grande குட்டை பாவாடையுடன் துள்ளி துள்ளி ஆடுவதை பார்த்து ரசித்துவிட்டு இப்படி உப்பு சப்பில்லாமலா எழுதுவது? வீடியோவும் அல்லவா போட வேண்டும்?

அவா நிர்வாணமா எல்லோ வாறா. 😂 2.24 இல் வரும் குரல் மடோனாவினுடையது. 

கத்தோலிக்கரான மடோனாவும் யூதர்களின் Kabbalah ஐ பயின்றவர். பல கிறிஸ்தவ எதிர் பாடல்களும் எடுத்தவர். இது அதில் ஒன்று. இதில் சிலுவை எரியும் காட்சியும் வருகிறது.

 

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Lara said:

அவா நிர்வாணமா எல்லோ வாறா. 😂 2.24 இல் வரும் குரல் மடோனாவினுடையது. 

கத்தோலிக்கரான மடோனாவும் யூதர்களின் Kabbalah ஐ பயின்றவர். பல கிறிஸ்தவ எதிர் பாடல்களும் எடுத்தவர். இது அதில் ஒன்று. இதில் சிலுவை எரியும் காட்சியும் வருகிறது.

 

நன்றி லாரா. நீங்கள் Last Temptation of Christ என்ற படத்தை பாருங்கள். இது பல நாடுகளில் தடை செய்யப்பட்டது. கிறீஸ்தவர்களும் இப்படி கருத்துகளை பிரபலப்படுத்துவார்கள். இந்த விடயத்தில் கிறீஸ்தவர்களுக்கு உள்ள சுதந்திரம் முற்றிலும் சுதந்திரமான இந்துக்களுக்கு கூட இல்லை.

16 hours ago, Maruthankerny said:

ஏற்கனவே ஒரு மதத்தில் இருந்து இருக்கிறார்கள் ....
அந்த மத்தில் கொள்கை ஏதும் இருந்து இருந்தால் ... இப்படி போயிருக்க மாடடார்களே?
ஒன்றும் இல்லாதவற்றில் ... தொற்றிக்கொண்டு நிர்ப்பதைவிட அங்கு அற்ப சலுகைக்காவது 
ஏதாவது கொடுப்பதாக நீங்கள் சொல்கிறீர்கள் ... அங்கு போவதுதானே சரியானது. 

சலுகைக்காக மாறுபவர்களை எப்படி இந்து மதத்தில் கொள்கை இல்லாமல் மாறுகின்றனர் என்று முடிவு செய்வீர்கள்? அவர்களுக்கு சலுகை தான் முக்கியம். 

கொள்கையை விட சலுகை தான் முக்கியம் என்று மதம் மாறுபவர்கள் எந்த மதத்துக்கும் விசுவாசமாக இருக்க மாட்டார்கள். இவர்களை விட நாத்திகர்கள் எவ்வளவோ மேலானவர்கள். 

நீங்களும் சலுகைக்காக மாறுவது சரியென்று சொல்வது நீங்களும் ஒரு கொள்கை இல்லாதவர் என்பதையே தெளிவுபடுத்துகிறது.

16 hours ago, Maruthankerny said:

உங்கள் பதில் வெறும் குழப்பமாக இருக்கிறது ...

முதலில் மாறுவோரை ஒருவரும் கட்டிவைக்கவில்லை என்கிறீர்கள் 
பின்பு கண்டிக்கிறோம் என்கிறீர்கள் 

ஏன் ஒரு தரிசனமான  முடிவை எடுத்து சொல்லமுடியாமல் இருக்கிறீர்கள் என்பது புரியவில்லை?

நான் விளக்கமாக எழுதியும் உங்களுக்குப் புரியவில்லை என்றால் உங்கள் புரிதலில் தான் தவறு இருக்கிறது.

மதமாற்ற வியாபாரத்தைக் கண்டித்தேன். தாமாகவே சலுகைகளை எதிர்பராமல் ஒரு கொள்கையோடு மாறுவோரை நான் எதிர்க்கவில்லை. ஆனால், சலுகைக்காக ஒரு கொள்கையும் இல்லாமல் மதம் மாறுபவர்களே மிக மிக அதிகம். இதை விமர்சிக்கும் உரிமை எமக்கு உண்டு.

மீண்டும் நான் எழுதிய பதிலை முழுமையாக வாசியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, மல்லிகை வாசம் said:

சலுகைக்காக மாறுபவர்களை எப்படி இந்து மதத்தில் கொள்கை இல்லாமல் மாறுகின்றனர் என்று முடிவு செய்வீர்கள்? அவர்களுக்கு சலுகை தான் முக்கியம். 

கொள்கையை விட சலுகை தான் முக்கியம் என்று மதம் மாறுபவர்கள் எந்த மதத்துக்கும் விசுவாசமாக இருக்க மாட்டார்கள். இவர்களை விட நாத்திகர்கள் எவ்வளவோ மேலானவர்கள். 

நீங்களும் சலுகைக்காக மாறுவது சரியென்று சொல்வது நீங்களும் ஒரு கொள்கை இல்லாதவர் என்பதையே தெளிவுபடுத்துகிறது.

அதுதானே எனது கேள்வியே .......
ஏன் அப்போ நீங்கள் எல்லோரும் குத்தி முறிக்கிறீர்கள்?
அவர்கள்தான் உங்கள் மதத்தில் இருக்கவில்லை என்று சொல்கிறீர்கள் 
அவர்கள் எங்குபோனால் உங்களுக்கு என்ன? 

16 hours ago, Maruthankerny said:

எனது பார்வையில் அவர்கள் கொஞ்சம் அன்பை ஆதரவை என்றாலும் கொடுக்கிறார்கள் 
நீங்கள்தான் எதுவுமே கொடுக்காது வீம்புக்கு இழுத்துவைத்து வன்முறை செய்கிறீர்கள். 

சைவமோ, இந்து மதமோ அன்பை வலியுறுத்துகிறது. ஆனால் உங்கள் பார்வையில் அன்பு என்பது அற்ப சலுகைகள் தான். அது தான் உண்மையான அன்பா? அதையும் தாண்டிய அன்பு நெறி நமது செயல்களில் பின்னிப் பிணைந்துள்ளது. இதனுடன் கிறிஸ்தவ மத மாற்ற வியாபாரத்தை ஒப்பிட வேண்டாம்.

அன்பே சிவம் என்பதை உணர்ந்து தான் நாம் வாழ்கிறோம்.

16 hours ago, Maruthankerny said:

எனது கேள்வி உங்கள் தனிப்பட நம்பிக்கை சார்ந்தது அல்ல ...
மாறாக உங்கள் மதத்தில் இருந்து மந்திகள்போல பிற மதத்துக்கு அதிகமாக 
கூட்ட்டம் கூட்டமாக சேர்கிறார்களே? அவர்கள் பற்றியது 
சேர்ப்பவர்கள் இறைவன் கூறுகிறார் என்று பைபிள் என்று ஒரு புததகத்தை கொண்டு வருகிறார்கள் 
அப்படி இலகுவாக உங்கள் மதம் பற்றி நான் சொல்லிக்கொடுக்க உங்களிடம் ஏதும் புத்தகம் இருக்கிறதா? 
ஒன்றை வாசித்து உங்கள் மதம் பற்றி அறிய தெளிவுபெற என்று ஏதாவது இருக்கிறதா? 

எண்ணற்ற நூல்கள் உள்ளனவே இந்து மதத்தை, சைவ சமயத்தை அறிந்து கொள்ள.

பெரிய புராணம் நாயன்மார்கள் வரலாற்றைச் சொல்கிறது. திருமூலரின் திருமந்திரம், பஞ்ச புராணங்கள் என நிறையவே உண்டு. இவற்றின் விளக்கவுரைகள் அடங்கிய நூல்களே ஏராளம் உண்டு. இது தெரியாமல் தான் இத்தனை விமர்சனம் செய்கிறீர்களா?

13 minutes ago, Maruthankerny said:

அதுதானே எனது கேள்வியே .......
ஏன் அப்போ நீங்கள் எல்லோரும் குத்தி முறிக்கிறீர்கள்?
அவர்கள்தான் உங்கள் மதத்தில் இருக்கவில்லை என்று சொல்கிறீர்கள் 
அவர்கள் எங்குபோனால் உங்களுக்கு என்ன? 

ஒரு மதம் வியாபார ரீதியாகப் பரப்பப்படும் போது, கொள்கையற்ற, பண்பாடற்ற ஓர் சமுதாயம் நம் தாய்மண்ணில் உருவாகும் நிலை ஏற்படுகிறது. சலுகைக்காக மதம் மாறுவதை ஊக்குவித்தல் காசுக்காக எதையும் செய்யும் செயலை ஊக்குவித்தலாகும். இதைத் தான் நீங்கள் விரும்புகிறீர்களா?

தவிரவும், எப்படி சில தொழிற்சாலைகள் நமது இயற்கைச் சூழலை மாசுபடுத்துகிறனவோ, அவ்வாறே சலுகைகள், அதிகாரம் மூலம் மதமாற்றம் செய்யும் மத நிறுவனங்களும் நாம் வாழும் வாழ்க்கைச் சூழலுக்குக் குந்தகம் விளைவிக்கின்றன.

இந்நிலையில் அச்சூழல் பற்றிய அக்கறை உள்ளோர் இவற்றை விமர்சிப்பது இயல்பு.

16 hours ago, Maruthankerny said:

அவர்கள் பற்றியது 
சேர்ப்பவர்கள் இறைவன் கூறுகிறார் என்று பைபிள் என்று ஒரு புததகத்தை கொண்டு வருகிறார்கள் 
அப்படி இலகுவாக உங்கள் மதம் பற்றி நான் சொல்லிக்கொடுக்க உங்களிடம் ஏதும் புத்தகம் இருக்கிறதா? 

அப்படி இலகுவாகச் சொல்லிக் கொடுக்க Fast-food மதமல்ல சைவமோ, இந்து மதம்! புத்தகங்கள் மூலம் மட்டுமல்ல மக்களின் வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்தது தொன்மையான நமது மதம். 😊

16 hours ago, Maruthankerny said:

சைவமதம் இந்துமதத்தின் ஒரு கிளை என்று எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சொல்கிறீர்கள்?

நாம் சிறுவயதில் கற்று வளர்ந்தது இவ்வாறே. இதற்காக புதிதாக ஆதாரம் ஒன்றும் தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

Image result for hindu torchering kids

Related image

Related image

Related image

Related image

அவர்கள் விளைவிக்கும் குந்தகங்களை வாசித்து அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன் ......

16 hours ago, Maruthankerny said:

இந்துமதம் என்பது என்ன? இதுக்கு ஏதும் வரையறை இருக்கிறதா? இதுக்கு கிளைகள் இருக்கிறது என்றால் 
இதன் ஆதி அதாவது தொடக்கம் என்ன? 

ஆதி சொல்ல முடியாத பழைமையானது. கிறிஸ்துவுக்கும், நபிக்கும், புத்தனுக்கும் முற்பட்டது. சைவம், சாக்தம், வைணவம், காணபத்தியம், கௌமாரம், சௌரம் என ஆறு பிரிவுகள் இந்து மதத்தில் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, மல்லிகை வாசம் said:

ஒரு மதம் வியாபார ரீதியாகப் பரப்பப்படும் போது, கொள்கையற்ற, பண்பாடற்ற ஓர் சமுதாயம் நம் தாய்மண்ணில் உருவாகும் நிலை ஏற்படுகிறது. சலுகைக்காக மதம் மாறுவதை ஊக்குவித்தல் காசுக்காக எதையும் செய்யும் செயலை ஊக்குவித்தலாகும். இதைத் தான் நீங்கள் விரும்புகிறீர்களா?

தவிரவும், எப்படி சில தொழிற்சாலைகள் நமது இயற்கைச் சூழலை மாசுபடுத்துகிறனவோ, அவ்வாறே சலுகைகள், அதிகாரம் மூலம் மதமாற்றம் செய்யும் மத நிறுவனங்களும் நாம் வாழும் வாழ்க்கைச் சூழலுக்குக் குந்தகம் விளைவிக்கின்றன.

இந்நிலையில் அச்சூழல் பற்றிய அக்கறை உள்ளோர் இவற்றை விமர்சிப்பது இயல்பு.

நீங்கள் திரும்ப திரும்ப என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரியவில்லை 

இப்போ அவர்கள் பண்பட்டு கிடக்கிறார்கள் என்கிறீர்களா?
அதையும் இல்லை என்கிறீர்கள் ....
அவர்களை பண்படுத்த நீங்கள் எதாவது அல்லது உங்கள் மதம் எதாவது செய்கிறதா?
என்றால் எல்லாம் புததகத்தில் இருக்கு என்கிறீர்கள் ...
அவர்கள் மதுக்கு விசுவாசம் இல்லை என்கிறீர்கள் 

பண்படாதவன்தானே .......... அங்கு போனால் என்ன?
இங்கு இருந்தால் என்ன?

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?

16 hours ago, Maruthankerny said:

உங்கள் மதம் யாருக்கு தேவை? 
இருக்கிறது இருக்கிறது என்று சப்பை கட்டு காட்டுகிறீர்கள் ... என்ன இருக்கு என்று கொஞ்சத்தை 
எடுத்துவிடுங்கள் என்றால் ... உங்களை நீங்களே தொடர்புகொள்ளுங்கள் என்கிறீர்கள்

உங்கள் ஆன்மீக இலக்கை அடைய (வசதி வாய்ப்புகள், பணம் இவையல்ல!) எந்த மதம் உங்களுக்கு உங்களுக்கு உண்மையான நோக்கில் உதவி செய்யுமோ என்பதை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை விளக்கவே உங்களை நீங்கள் தான் தொடர்புகொள்ள வேண்டும் என்று கூறினேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, மல்லிகை வாசம் said:

ஆதி சொல்ல முடியாத பழைமையானது. கிறிஸ்துவுக்கும், நபிக்கும், புத்தனுக்கும் முற்பட்டது. சைவம், சாக்தம், வைணவம், காணபத்தியம், கௌமாரம், சௌரம் என ஆறு பிரிவுகள் இந்து மதத்தில் உண்டு.

உங்களுடைய ஹிந்தி மதத்துக்கும் சைவமதத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை 
இது பார்ப்பான் பரப்பிய பொய் ... ஆதாரம் இருந்தால் பகிரவும்.
அல்லது மேலே நீங்கள் எழுதியதுபோல சிறுவயதில் படித்தோம் என்று எழுதுங்கள் போதும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.