Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெயந்தன் படையணி என்றால் உங்களுக்கு தெரியும் எதிரிகளுக்கு நடுக்கம் பிடிக்கும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IMG_ORG_1576938499106.jpeg

பாறுக் ஷிஹான்
நான் போராளிகள் அனைவரும் மதிக்கின்றவன் .

 ஜெயந்தன் படையணி என்றால் உங்களுக்கு தெரியும் எதிரிகளுக்கு நடுக்கம் பிடிக்கும் என என  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
 
அக்கரைப்பற்று ஆலயடிவேம்பு  கலாச்சார மண்டபத்தில்  வெள்ளிக்கிழமை(20) மாலை   மக்களுடன் மாபெரும் கலந்துரையாடலில் ஈடுபட்ட போது இவ்வாறு குறிப்பிட்டார்.
 
மேலும் தனது கருத்தில்
 
 
நான் போராளிகள் அனைவரும் மதிக்கின்றவன் . ஏனெனில் எனக்கு தோள் கொடுத்தவர்கள் அவர்கள்தான் .ஜெயந்தன் படையணி என்றால் உங்களுக்கு தெரியும் எதிரிகளுக்கு நடுக்கம் பிடிக்கும். உங்களால் எங்களது படையணிகள் மகுட வாக்கு எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம் வெற்றிபெறுவோம். இப்படித்தான் போராட்ட காலத்தில் படை வைத்திருந்தேன் இந்த படையில் இருப்பவர்கள் மட்டும் அம்பாரை போராளிகள் அது நமக்கு பெருமையான விடயம் பெரும் தியாகத்தை செய்துள்ளோம்.
 
ஜெயசிக்குறு தொடக்கம் ஆனையிறவு சமர் வரை பல வெற்றிகளை கண்ட படை எமது ஜெயந்தன் படை.யுத்தம் செய்ய முடியாமல் யுத்தம் செய்ய முடியாமல் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது அதன்பிறகுதான் ஓஸ்லோ பேச்சுவார்த்தைக்குப் போனோம்.இந்தப் பேச்சு வார்த்தையை ஒரு தளமாக பயன்படுத்தி இந்த தேசத்தில் அமைதியைக் கொண்டு வந்து மேலதிக படுகொலையை நிறுத்தி இதில் ஏதோ ஒரு வெற்றி அடையவேண்டும் என்பதே இந்தக் காருணா அம்மானின்  நோக்கம். நான் அண்டன் பாலசிங்கம் அண்ணா விடம் சொன்னேன்.
 
ஒஸ்லோவில் இடம்பெற்ற முதலாவது கட்ட பேச்சுவார்த்தையின்போது மத்தியஸ்தம் வகித்த நோர்வே அரசு எழுத்துமூல பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. சமஸ்டி முறையான தீர்வுக்கு இரு தரப்பும் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று கூறினர். முதலில் மறுத்த பிரதான பேச்சாளர் அன்டன் பாலசிங்கம் அவர்களிடம் நானே எடுத்துரைத்து ஒப்பமிட வைத்தேன்.ஏனெனில் அந்த சமரின் பின்பு ஐயாயிரத்துக்கு மேற்பட்ட போராளிகள் காயமடைந்தும் மருத்துவ உதாரணங்கள் உடை இன்றி உணவு இன்றி இவற்றையெல்லாம் சீர் செய்ய ஒரு கால அவகாசம் தேவை இதை முன்னிறுத்தியே பேச்சுவார்த்தை செய்வோம் ஒப்பந்தம் வையுங்களேன் வலியுறுத்தினேன் என குறிப்பிட்டார்.
 
இச்சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி அம்பாறை மாவட்ட  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி  ஆதரவாளர்கள்  உடனிருந்தனர்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் இந்த வரலாற்று சிறப்புமிக்க உரைக்கு எங்களை இப்போ என்ன செய்ய சொல்கிறீர்கள்?

யாழ்கள ரதி சார்பில் அண்ணன் என்றால் இவர்தான் அண்ணன்  என்று சொல்லி கை தட்டிவிடவா?

Edited by valavan

  • கருத்துக்கள உறவுகள்

பாலசிங்கத்துக்கே ஆலோசனை??

 அரசியல்வாதியாகவே  மாறிட்டார்..

 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, விசுகு said:

பாலசிங்கத்துக்கே ஆலோசனை??

 அரசியல்வாதியாகவே  மாறிட்டார்..

 

இன்னும் சில நாட்களில் பிரபாகரனுக்கு நானே பயிற்சியளித்துப் போராளியாக்கினேன் என்ற சிறப்புரையும் கருனாவினால் மேடையேற்றப்படும்.😲

  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்பதா / அழுவதா ?

  • கருத்துக்கள உறவுகள்

இனி ஜெயந்தனின் பெயரை வைச்சு  கொஞ்சநாளைக்கு சவாரி ஓட்டப்போறார். எப்படி இருந்தவர் இப்படி ஆகி விட்டாரே.

11 hours ago, colomban said:

இந்த படையில் இருப்பவர்கள் மட்டும் அம்பாரை போராளிகள்

அப்பட்டமான பொய்!

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, விசுகு said:

பாலசிங்கத்துக்கே ஆலோசனை??

 அரசியல்வாதியாகவே  மாறிட்டார்..

 

அண்ணா , அந்த நேரத்தில் இவ் ஒப்பந்தத்தில் திரு அன்ரன் பாலசிங்கம் தலைவரைக் கேட்காமல் தான் கை சாத்திட்டார்... ஊர் திரும்பியவுடன் கருணாவை விசாரணைக்கு கூப்பிட்டது...தலைவருக்கும் ,பாலசிங்கத்திற்கும் விரிசல்கள்  உருவானது இதிலிருந்து தான்.
 

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் உலகப்புகழ் பெற்ற கோகினூர் வைரம் என்றாலும் கீரிடத்தில்  இருக்கும்மட்டும்தான் அழகு புகழ் எல்லாம் இங்கு மண்ணுக்குள் மண்ணுளி பாம் பிடம்  தஞ்சமடைந்து இருந்தவர் எல்லாம் வீரம் பேச வந்திருப்பது வியப்புத்தான் சும்மா ஜெயந்தன் படை அது இது என்று பிசத்தாமல்  அவரின் நென்சுக்கு வஞ்சகமில்லாமல் கிழக்கு தமிழ் மக்களுக்கு விடிவெள்ளியாக இருக்க சொல்லுங்கள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.