Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊரெங்கும் வலுக்கும் எதிர்ப்பு.. பாதுகாப்பு கேட்ட ரஜினி தரப்பு.. போயஸ் கார்டனில் குவிந்தது போலீஸ்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினி எப்படி

ஊரெங்கும் வலுக்கும் எதிர்ப்பு.. பாதுகாப்பு கேட்ட ரஜினி தரப்பு.. போயஸ் கார்டனில் குவிந்தது போலீஸ்!

பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசிய தவறான கருத்துக்கு எதிராக இன்று அவர் வீடு முன் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் போராட்டம் நடத்த உள்ளனர். இதனால் ரஜினிகாந்த் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. இதில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய நபர்கள், பல்வேறு பாஜகவினர், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நடிகர் ரஜினி பெரியார் குறித்து பேசினார். அதில், பெரியாரை கடுமையாக விமர்சித்தவர் சோ. இந்துக்கடவுளுக்கு எதிராக பெரியார் பேரணி செய்தார். இந்து கடவுள்களை பெரியார் விமர்சித்ததை பற்றி யாருமே எழுதவில்லை. ஆனால் சோ மட்டும் தைரியமாக துக்ளக்கில் எழுதினார். அப்போதைய முதல்வர் கருணாநிதி அதை கடுமையாக எதிர்த்தார்.இதனால் துக்ளக் பத்திரிக்கை நாடு முழுக்க பிரபலம் அடைந்தது, என்று ரஜினி குறிப்பிட்டார்.

பெரியாரின் போராட்டம் குறித்து ரஜினி சொன்ன கருத்துக்கள் சில தவறானது ஆகும். வரலாற்று ரீதியாக தவறாக சில தகவல்களை ரஜினி குறிப்பிட்டுள்ளார். ரஜினியின் இந்த கருத்துக்கு எதிராக பல இடங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திராவிட விடுதலை கழகம், பெரியார் திராவிட கழகம் உட்பட அமைப்புகள் ரஜினி மீது போலீசில் புகார் அளித்துள்ளது. மொத்த 3 போலீஸ் நிலையங்களில் ரஜினி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ரஜினிக்கு எதிராக போராட்டம் நடத்தவும் திட்டங்கள் போடப்பட்டுள்ளது. ரஜினி வீடு முற்றுகைப் போராடம் தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பாக நாளை நடப்பதாக இருந்தது. ஆனால் இன்று காலையிலேயே இந்த போராட்டத்தை நடத்த இருக்கிறார்கள். ரஜினிக்கு எதிராக பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் நாளை திராவிடர் விடுதலை கழகம் ரஜினி வீடு முன் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளனர். அதனால் இன்றும் நாளையும் ரஜினி வீடு முன் பெரிய அளவில் போராட்டங்கள் நடக்கலாம் என்று கூறப்பட்டுகிறது. இதனால் ரஜினி சார்பாக போலீசில் பாதுகாப்பு கோரப்பட்டது.

இதையடுத்து தற்போது சென்னை போலீஸ் சார்பாக ரஜினி வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 15க்கும் அதிகமான போலீஸ் அதிகாரிகள் ரஜினியின் போயஸ் கார்டன் வீடு முன் பாதுகாப்பிற்கு நிற்கிறார்கள். ஷூட்டிங் இப்போது இல்லாத காரணத்தால் ரஜினி வீட்டில்தான் இருக்கிறார் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/police-protection-increased-in-front-of-rajinikanth-house-after-his-remark-against-periyar-374622.html

  • கருத்துக்கள உறவுகள்

 

 

84270822_2943826382294804_11661077070405

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழே தெரியாத ,தமிழ் கலாச்சாரம் தெரியாத/தெரிய மறுக்கும்,தமிழ் வரலாறு தெரியாத கூத்தாடியை வைத்து தமிழகம் அல்லோலகல்லோலப்படுகின்றது.
இவர் ஒரு சந்தர்ப்பவாதி.இவர் ஒரு சுயநலவாதி.

  • கருத்துக்கள உறவுகள்

ரஜனி, கமல் அரசியலை பற்றி சீமான் சொன்னதுதான் ஞாபகம் வருகிறது. இவர்கள் இருவரும் சந்தர்ப்ப அரசியல் செய்கின்றார்கள், கருணாநிதி, ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இவர்கள் அரசியல் பக்கம் வந்திருப்பார்களா? இந்த இரு பெரும் மலைகளுடன் மோதும் திராணி இவர்களுக்கு வருமா? விஜயகாந்தை போல் துணிவு இவர்களுக்கு இல்லை.மக்களுக்கு சேவை செய்யாமல் சுய நல அரசியல் லாபம் தேட முனைகிறார்கள்.முதல்வர் கதிரை காலியாக இவர்களுகென்று இருக்கிறதாக நினைக்கிறார்கள். 60 வருடங்களாக அரசியல் செய்யும் தி மு க வெறும் 26% வாக்கு வாங்கியே வைத்திருக்கிறது.இத்தனைக்கும் அரசியலுக்கு வராமலே ரஜனி சொல்கிறார் தனக்கு 21% வாக்கு வங்கி இருக்கென்று சொல்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Ahasthiyan said:

ரஜனி, கமல் அரசியலை பற்றி சீமான் சொன்னதுதான் ஞாபகம் வருகிறது. இவர்கள் இருவரும் சந்தர்ப்ப அரசியல் செய்கின்றார்கள், கருணாநிதி, ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இவர்கள் அரசியல் பக்கம் வந்திருப்பார்களா? இந்த இரு பெரும் மலைகளுடன் மோதும் திராணி இவர்களுக்கு வருமா? விஜயகாந்தை போல் துணிவு இவர்களுக்கு இல்லை.மக்களுக்கு சேவை செய்யாமல் சுய நல அரசியல் லாபம் தேட முனைகிறார்கள்.முதல்வர் கதிரை காலியாக இவர்களுகென்று இருக்கிறதாக நினைக்கிறார்கள். 60 வருடங்களாக அரசியல் செய்யும் தி மு க வெறும் 26% வாக்கு வாங்கியே வைத்திருக்கிறது.இத்தனைக்கும் அரசியலுக்கு வராமலே ரஜனி சொல்கிறார் தனக்கு 21% வாக்கு வங்கி இருக்கென்று சொல்கிறார்.

வழமையாக தமிழர் அல்லாதோர் காற்றுப் பறிஞ்சாலே எகிறி குதிக்கும் பிஜேபி C டீம் கேப்டன் சீமான், இந்த விடயத்தில் ரொம்பவே அடக்கி வாசிக்கிறார்.

பிஜேபி A டீம் கேப்டனை பற்றி காரசாரமாக ஏதும் இல்லை.

எல்லாம் குருமூர்தி உத்தரவு.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

வழமையாக தமிழர் அல்லாதோர் காற்றுப் பறிஞ்சாலே எகிறி குதிக்கும் பிஜேபி C டீம் கேப்டன் சீமான், இந்த விடயத்தில் ரொம்பவே அடக்கி வாசிக்கிறார்.

பிஜேபி A டீம் கேப்டனை பற்றி காரசாரமாக ஏதும் இல்லை.

எல்லாம் குருமூர்தி உத்தரவு.

கோசான் அண்ணை... 
"காற்றுப் பறிதல்",
"காற்றில், பறந்த தமிழரின் கலாச்சாரம்"
இரண்டுக்கும்... ஏதாவது,  "தொப்புள் கொடி"  தொடர்பு இருக்குமோ....  🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

கோசான் அண்ணை... 
"காற்றுப் பறிதல்",
"காற்றில், பறந்த தமிழரின் கலாச்சாரம்"
இரண்டுக்கும்... ஏதாவது,  "தொப்புள் கொடி"  தொடர்பு இருக்குமோ....  🤣

எல்லாம் கரியமி(ம)லவாயு செய்தவேலையோ😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 1/23/2020 at 10:07 PM, goshan_che said:

வழமையாக தமிழர் அல்லாதோர் காற்றுப் பறிஞ்சாலே எகிறி குதிக்கும் பிஜேபி C டீம் கேப்டன் சீமான், இந்த விடயத்தில் ரொம்பவே அடக்கி வாசிக்கிறார்.

பிஜேபி A டீம் கேப்டனை பற்றி காரசாரமாக ஏதும் இல்லை.

எல்லாம் குருமூர்தி உத்தரவு.

சீமான் மூலம் மக்கள் விழிப்படைய ஆரம்பித்து விட்டார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, குமாரசாமி said:

சீமான் மூலம் மக்கள் விழிப்படைய ஆரம்பித்து விட்டார்கள்.

 

இது எனது நப்பாசையும்தான். மக்கள் விழிப்புணர்வு என்பது காட்டாறு போல,  சில நேரம் அலையின் நுனியில் நிப்பவர் அலையை தன் சுயவிருப்பில் செலுத்தலாம் என்ற கள்ள எண்ணத்தில் நிற்க, அலை ஆளை தூக்கி வீசிவிட்டுதன்பாட்டில் ஓடும் (அமிர்தலிங்கத்துக்கு நடந்தது போல).

சீமான் பிடிக்கும் குரங்கு, பிள்ளையார் ஆகினால் எனக்கும் சந்தோசமே.

ஆனால் இது சீமானை மீறி நடந்தாலே ஒழிய வேறு வழியில்லை:

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்கு உபதேசம் சொல்லிய, கருணாநிதியின். கடைசி வாழ்க்கை.
இன்னுமா.... தமிழகம்..... அவர்களை, நம்புகின்றது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓ ... கடவுளே....
இந்த,  இழவுகளை.. நம்பவும்,  தமிழ் நாட்டில்... ஒரு கோஷ்ட்டி  இருக்குமே.    

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 1/23/2020 at 10:07 PM, goshan_che said:

வழமையாக தமிழர் அல்லாதோர் காற்றுப் பறிஞ்சாலே எகிறி குதிக்கும் பிஜேபி C டீம் கேப்டன் சீமான், இந்த விடயத்தில் ரொம்பவே அடக்கி வாசிக்கிறார்.

பிஜேபி A டீம் கேப்டனை பற்றி காரசாரமாக ஏதும் இல்லை.

எல்லாம் குருமூர்தி உத்தரவு.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.