Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சமூக ஊடகங்களும் செய்தித்தளங்களும் சமூக அக்கறையுடன் செயற்பட வேண்டும் -யாழ் பல்கலை மாணவர்கள் வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமூக ஊடகங்களும் செய்தித்தளங்களும் சமூக அக்கறையுடன் செயற்பட வேண்டும் -யாழ் பல்கலை மாணவர்கள் வேண்டுகோள்

உள்நாட்டிலும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் யாழ் பல்கலைக்கழகம் அதிகமாக கவனம் பெறும் இடமாக காலங்காலமாக அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது.எனவே இங்கே இடம்பெறும் சிறிய தவறுகளும் உடனடியாக ஊடக வெளிகளில் படம்போட்டு காட்டப்படுகின்றன. அவ்வாறான ஒரு விடயமாகவே இந்த பகிடிவதை சம்பவமும் அமைந்திருக்கின்றது.குறித்த பகிடிவதை குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மாணவர்கள் ஒழுக்காற்று அதிகாரிகளினால் பூரணமாக விசாரணை செய்யப்பட்டு குற்றம் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.குறித்த விடயம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் திரிவுபடுத்தப்பட்ட கருத்துக்களும் சம்பவங்களும் தொடர்பில் சமூக ஊடக உரிமையாளர்களும் செய்தித்தளங்களும் சமூக அக்கறையுடன் செயற்பட வேண்டுமென்றும் யாழ் பல்கலை மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் தொழிநுட்பப்பிரிவுக்கு புதுமுக மாணவர்களாக வரவிருப்போரை சிரேஸ்ட மாணவர்கள் தொலைபேசி மூலமாக பகிடிவதையில் ஈடுபடுத்தியதாக செய்திகள் வெளியாகியிருந்தது.இந்நிலையில் தமிழர் விவகாரங்கள் தொடர்பாகவும் தமிழ் சமூகத்தின் சார்பிலும் குரல் கொடுத்துவரும் ஓர் அடையாளமாக யாழ் பல்கலைக்கழகம் காணப்படுகிறது என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.(15)

http://www.samakalam.com/செய்திகள்/பகிடி-வதை-விவகாரம்-சமூக-ஊ/

 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கிருபன் said:

குறித்த பகிடிவதை குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மாணவர்கள் ஒழுக்காற்று அதிகாரிகளினால் பூரணமாக விசாரணை செய்யப்பட்டு குற்றம் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்

ஊடகங்களில் படம் போட்டு காட்டும்வரை நிர்வாகம் என்ன செய்து கொண்டிருந்தது?

19 hours ago, கிருபன் said:

தமிழர் விவகாரங்கள் தொடர்பாகவும் தமிழ் சமூகத்தின் சார்பிலும் குரல் கொடுத்துவரும் ஓர் அடையாளமாக யாழ் பல்கலைக்கழகம் காணப்படுகிறது என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

நீங்களும் அதற்குள் அடக்கம். அது உங்கள் கடமை. அதற்காக நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றோ, சமுதாயம் கண்ணை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் என்றோ எதிர்பார்த்தால் அது உங்கள் தவறு. உங்கள் வக்கிரங்களை தட்டிகேட்கும் கடமை சமுதாயத்திற்கும் உண்டு.  

பல்கலைக்கழக சமூகம், தமிழினம் என்ற போர்வையில் தமிழ் மாணவ காடையர்கள் உலாவுவதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது.

தமிழ் மாணவ காடையர்களை காப்பாற்ற முனையும் எந்தவொரு மாணவ அமைப்பும் தமிழ் சமூக விரோத அமைப்பாகவே கருதப்படும்.

இந்த மாணவ அமைப்புகள் பகிடிவதை செய்த மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களை மக்கள் முன் நிறுத்தி, அவர்களை பல்கலைக்கழகத்தை விட்டு நிரந்தரமாக வெளியேற்றிய பின்னர் மக்கள் முன் அறிக்கைகளுடன் வரட்டும்.

 

அதே பல்கலைகழகத்தில் அதே காடையன் உறவுகள் கல்வி கற்க வந்து தற்கொலை செய்தால் அதன் வலி புரியுமோ பல்கலைகழக முன்னாள் மாணவனாக தலைகுனியும் அவமானம் என்னை போல் உள்ளே அழும் மனிதரகள் நிறைய குப்பி விளக்கில் படித்தபோது இந்த வக்கிரம் இல்லையே

  • கருத்துக்கள உறவுகள்

தாங்கள் காத்திருந்து புதிய மாணவர்கள் மீது நடத்தும் வக்கிரக வதைகள் வெளிவந்து விட்டதே என்ற கவலை அவர்களுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இதை பகிடிவதை என்று சுருக்காதீர்கள் .........
இது ஒரு கொடிய பாலியல் வக்கிரம் 
இவர்களுக்கு கிடைக்கும் தண்டனையே ... இனி எப்படி எண்ணுபவர்களுக்கு 
ஒரு நடுக்கத்தை கொடுக்க வேண்டும். 

இது இனி பல்கலைக்கழ வளாகம்    ... ஒழுக்காற்று அதிகாரிகள் 
விடயமல்ல ........ அவர்களை அங்கு வைத்தருப்பதா? இல்லையா என்பதில் வேண்டுமானால் 
அவர்கள் ஒரு முடிவை எடுக்கலாம் அது மட்டுமே உங்கள் பிரச்சனை. 

இது இனி சமூக விடயம் 
இனி உள்நாட்டு சட்டம்தான் இதை கையாள வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Maruthankerny said:

இதை பகிடிவதை என்று சுருக்காதீர்கள் .........
இது ஒரு கொடிய பாலியல் வக்கிரம் 
இவர்களுக்கு கிடைக்கும் தண்டனையே ... இனி எப்படி எண்ணுபவர்களுக்கு 
ஒரு நடுக்கத்தை கொடுக்க வேண்டும். 

இது இனி பல்கலைக்கழ வளாகம்    ... ஒழுக்காற்று அதிகாரிகள் 
விடயமல்ல ........ அவர்களை அங்கு வைத்தருப்பதா? இல்லையா என்பதில் வேண்டுமானால் 
அவர்கள் ஒரு முடிவை எடுக்கலாம் அது மட்டுமே உங்கள் பிரச்சனை. 

இது இனி சமூக விடயம் 
இனி உள்நாட்டு சட்டம்தான் இதை கையாள வேண்டும். 

அவர்கள் மீது ஒரு நடவடிக்கையும் எடுக்க பட மாட்டாது...வேண்டுமானால் ஒரு 6 மாசம் யூனிக்கு போக  கூடாது என்று தடை விதிப்பினம் ...அங்கு இருக்கும் விரிவுரையாளார்களே அப்படி இருக்குமிடத்து மாணவர்களை எப்படி தண்டிப்பினம்? ...இதில் சம்மந்த பட்ட மாணவிகளுக்கு தான் ஏதோ ஒருவிதத்தில் தண்டனை கிடைக்கும்...மேலும் பாதிக்கப்பட போவது அவர்களாய்த் தான் இருக்கும் 
 

8 hours ago, ரதி said:

அவர்கள் மீது ஒரு நடவடிக்கையும் எடுக்க பட மாட்டாது...வேண்டுமானால் ஒரு 6 மாசம் யூனிக்கு போக  கூடாது என்று தடை விதிப்பினம் ...அங்கு இருக்கும் விரிவுரையாளார்களே அப்படி இருக்குமிடத்து மாணவர்களை எப்படி தண்டிப்பினம்? ...இதில் சம்மந்த பட்ட மாணவிகளுக்கு தான் ஏதோ ஒருவிதத்தில் தண்டனை கிடைக்கும்...மேலும் பாதிக்கப்பட போவது அவர்களாய்த் தான் இருக்கும் 
 

நீங்கள் சொன்னது சரி। ஒரு சில நடவடிக்கைகள் எடுத்தாலும் அது முழுமையாக இருக்காது। கண் துடைப்புக்காக எதாவது செய்வார்கள்। அங்குள்ள விரிவுரைய்லர்களுக்கு எதிராக சில காலத்துக்கு முன்னர் சில குற்ற சாட்டுக்கள் வந்தது। என்ன நடவடிக்கைகள் எடுத்தார்கள்। அப்படி இருக்கும்போது இவர்களிடம் இருந்து சரியான தீர்ப்பை, நீதியை எதிர்பார்க்க முடியாது। யாழ் பல்கலைக்கழக மாணவர்களே இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றுதான் தோன்றுகிறது।

On 2/8/2020 at 1:08 PM, கிருபன் said:

சமூக ஊடகங்களும் செய்தித்தளங்களும் சமூக அக்கறையுடன் செயற்பட வேண்டும் -யாழ் பல்கலை மாணவர்கள் வேண்டுகோள்

யாழ் பல்கலைக்கழக மாணவர்களோ யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களோ இன்றுவரை தங்கட பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சில மாணவர்களின் காட்டுமிராண்டிச் செயலை பகிரங்கமா கண்டிக்க முன்வராதது ஏனோ?

அதை விட்டு சமூக ஊடகங்கள் மேல பாய்வது ஏனோ?

இதன் மூலம் நீங்க சமூகத்தின் மேல உண்மையான அக்கறை இல்லாத ஆட்கள் என்டு சொல்லலாமோ?

மாணவர்களே தங்களுக்குள்ள இருக்கிற காவாலிகளை களையெடுக்கா விட்டா நேற்று நடந்த மாதிரி காவலிகளின் வீடுகளை சமூகம் தாக்க தொடங்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

திருமதி சாள்ஸ் பாதிக்கப்பட்ட யாரும் முன்வந்து  தமக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை தெரிவிக்கவில்லையாம். பாதிப்புக்களை முன்வந்து தெரிவித்தால்  தான் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் என்கிறார்.

5 hours ago, nunavilan said:

திருமதி சாள்ஸ் பாதிக்கப்பட்ட யாரும் முன்வந்து  தமக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை தெரிவிக்கவில்லையாம். பாதிப்புக்களை முன்வந்து தெரிவித்தால்  தான் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் என்கிறார்.

அப்படி என்றால் எதுவுமே நடக்கப்போவதில்லை । மக்கள்தான் சட்டத்தை கையிலெடுக்க நேரிடும்।

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.