Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியாவில் கோர விபத்து: நால்வர் ஸ்தலத்திலேயே உயிரிழப்பு! – வாகனங்களுக்கு தீ வைப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Vavuniya-omantai-Accident-4-People-Dead.jpg

வவுனியாவில் கோர விபத்து: நால்வர் ஸ்தலத்திலேயே உயிரிழப்பு! – வாகனங்களுக்கு தீ வைப்பு!

வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் நால்வர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். அத்துடன்  பலர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பேருந்துக்கு சிலர் தீ வைத்துள்ள நிலையில் விபத்துக்குள்ளான வானும் தீயில் எரிந்துள்ளது. இதன்போது வான் சாரதியும் தீ வித்தில் அகப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வானுமே நேருக்கு நேர் மோதியுள்ளது.

இதன்போது அங்கிருந்தவர்களால் பேருந்துக்கு தீ வைக்கப்பட்ட போது விபத்துக்குள்ளாகிய வானும் தீயில் எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தார்கள் அம்பியூலன்ஸ்களில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் நால்வர் உயிரிழந்துள்ள நிலையில் 20 பேர் காயமடைந்துள்ளதாக அறியமுடிகின்றது.

தீப்பற்றிய வாகனங்கள் தீயணைப்பு படையினரால் அணைக்கப்பட்டுவரும் நிலையில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

http://athavannews.com/வவுனியாவில்-கோர-விபத்து-2/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

UPDATE: வவுனியா கோர விபத்து: வாகனங்களுக்கு தீ வைத்ததில் வான் சாரதி தீயில் எரிந்து உயிரிழப்பு!

வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் நால்வர் உயிரிழந்த நிலையில் வான் சாரதி தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இடம்பெற்றதன் பின்னர் பேருந்த மற்றும் வானுக்கு தீ அங்கிருந்த சிலரால் தீ வைக்கப்பட்ட நிலையில் அந்த தீயில் அகப்பட்டு வான் சாரதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதியின் சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

http://athavannews.com/வவுனியாவில்-கோர-விபத்து-2/

ஒரு விபத்து நடக்கும் போது உடனடியாக அவசர உதவிக்கு பலர் வரலாம்  அல்லது அவசர உதவிப பிரிவுக்கு  தகவல் கூறலாம். அல்லது நேரம் இல்லாமல்  இருந்தால் தன் வேலையை பார்ததுக்கொண்டு அதை கடந்து செல்லலாம்.   விடுத்து விபத்தில் பாதிக்கப்பட்ட வாகனங்களை தீவைத்து கொழுத்துவது எந்த வகையில் நியாயம்.  இவர்கள் கைது செய்யப்பட்டு கடும் தண்டனை வழங்கப்படல் வேண்டும்.  

3 hours ago, tulpen said:

ஒரு விபத்து நடக்கும் போது உடனடியாக அவசர உதவிக்கு பலர் வரலாம்  அல்லது அவசர உதவிப பிரிவுக்கு  தகவல் கூறலாம். அல்லது நேரம் இல்லாமல்  இருந்தால் தன் வேலையை பார்ததுக்கொண்டு அதை கடந்து செல்லலாம்.   விடுத்து விபத்தில் பாதிக்கப்பட்ட வாகனங்களை தீவைத்து கொழுத்துவது எந்த வகையில் நியாயம்.  இவர்கள் கைது செய்யப்பட்டு கடும் தண்டனை வழங்கப்படல் வேண்டும்.  

எந்த வகையில் நியாயம் ? 

இலங்கை மாத்தி நாடுகளில் வாகனம் வைத்திருப்பவர்கள் பொதுவாக பொருளாதார பலம் மாடும் வேறு செல்வாக்குகள்  உள்ளவர்கள்.அதனால், சட்டம் தனது கடமையை சரியாக செய்ய அவர்கள் விடுவதில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கவேண்டிய தீர்வும் கிடைப்பதில்லை. 

அதனால், மக்கள் தங்கள் கையில் சட்டத்தை எடுக்கிறார்கள். அது சரி என்று வாதாடவில்லை. யதார்த்தம் இது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, tulpen said:

ஒரு விபத்து நடக்கும் போது உடனடியாக அவசர உதவிக்கு பலர் வரலாம்  அல்லது அவசர உதவிப பிரிவுக்கு  தகவல் கூறலாம். அல்லது நேரம் இல்லாமல்  இருந்தால் தன் வேலையை பார்ததுக்கொண்டு அதை கடந்து செல்லலாம்.   விடுத்து விபத்தில் பாதிக்கப்பட்ட வாகனங்களை தீவைத்து கொழுத்துவது எந்த வகையில் நியாயம்.  இவர்கள் கைது செய்யப்பட்டு கடும் தண்டனை வழங்கப்படல் வேண்டும்.  

சரியான தீர்ப்பும் நீதியும் கிடைக்கும் நாடுகளில் இப்படியான செயல்கள் நடப்பதில்லை என தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

ஒரு விபத்து நடக்கும் போது உடனடியாக அவசர உதவிக்கு பலர் வரலாம்  அல்லது அவசர உதவிப பிரிவுக்கு  தகவல் கூறலாம். அல்லது நேரம் இல்லாமல்  இருந்தால் தன் வேலையை பார்ததுக்கொண்டு அதை கடந்து செல்லலாம்.   விடுத்து விபத்தில் பாதிக்கப்பட்ட வாகனங்களை தீவைத்து கொழுத்துவது எந்த வகையில் நியாயம்.  இவர்கள் கைது செய்யப்பட்டு கடும் தண்டனை வழங்கப்படல் வேண்டும்.  

👍 

நியாயமான கருத்து. தீவைத்து கொழுத்துவது உடைத்து நொருக்குவது  அவர்களுக்கு ஒரு இன்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

இழப்பின், உழைப்பின்  வலி  தெரியாமல் அடுத்தவர் உழைப்பில் வாழ்ந்துகொண்டு வம்பளப்பவர் வேலை. 

வான் சாரதியைக் காப்பாற்றாம தீ வைச்ச ஆட்கள் மிக மோசமான மனநிலை உடையவங்கள். தீ வைச்ச ஆட்கள் அடையாளம் காணப்பட்டு கடுமையா தண்டிக்கப்பட வேண்டும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல் நான்கு மரணங்கள்... விபத்து என்று கடந்து சென்று விட்டாலும்,
ஐந்தாவது சாரதியின் மரணம்.... கொலை. என்றே கூற  வேண்டும்.
அவரின் குடும்பத்தை.... வீணாக, நடுத்தெருவில் தள்ளி விட்டார்கள்.🥺

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: night and fire

வவுனியா கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்த தகவல் வெளியானது

வவுனியா- பன்றிக்கெய்த குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த ஐவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற குறித்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கிப்பயணித்த அரச பயணிகள் பேருந்தும் எதிர் திசையில் பயணித்த பஜிரோ ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில்  நேற்று இரவு, விபத்து நிகழ்ந்தது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் அவர்கள் பயணித்த வாகனத்தை செலுத்திச் சென்ற நபரும் உயிரிழந்துள்ளனர்.

காரைநகரைச் சேர்ந்த பிரபல கோடீஸ்வர வர்த்தகரான பார் சோமர் என்று அழைக்கப்படும் ராமலிங்கம் சோமசுந்தரம் (வயது 83), ஆறுமுகம் தேவராஜா (வயது 62), தேவராஜா சுகந்தினி (வயது 51), தேவராஜா சுதர்சன் (வயது 30) மற்றும் சாரதியான விஜயகுமார் ரொசாந்தன் (வயது 24) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் சோமசுந்தரம் லக்சனா (வயது 29) காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

http://athavannews.com/வவுனியா-கோர-விபத்தில்-உய/

Edited by தமிழ் சிறி

இங்கு நடக்கும் விபத்துக்களை பார்க்கும்போது வருங்காலத்தில் ஒரு அதிவேக பாதை அமைத்தால் என்ன நடக்குமென்றே சொல்ல முடியாது।

இந்த பாதையில் பொதுவாக அதி கூடிய வேகம் , மற்றும் பாதைகள் வளைவுகளை சரியாக அறியாதவர்களால்தான் விபத்துக்கள் கூடுதலாக நடக்கின்றது। மேலும் களைப்பு தூக்கமும் ஒரு கரணம்। இருந்தாலும் இது இரவு எட்டு மணியளவில் நடந்திருக்கிறது।

எனவே வாகனம் செலுத்துவோர் வேக கட்டுப்படடை ஓரளவு கடைப்பிடித்தால் இப்படியான விபத்தை தடுக்கலாம்। இருந்தாலும் தீ வைத்ததினால் அந்த வாகனத்தின் சாரதி உயிரிழக்க நேர்ந்துள்ளது। இவர்களுக்கு எதிராக அரசு சடட நடவடிக்கை எடுக்கவேண்டும்।

8 hours ago, ampanai said:

எந்த வகையில் நியாயம் ? 

இலங்கை மாத்தி நாடுகளில் வாகனம் வைத்திருப்பவர்கள் பொதுவாக பொருளாதார பலம் மாடும் வேறு செல்வாக்குகள்  உள்ளவர்கள்.அதனால், சட்டம் தனது கடமையை சரியாக செய்ய அவர்கள் விடுவதில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கவேண்டிய தீர்வும் கிடைப்பதில்லை. 

அதனால், மக்கள் தங்கள் கையில் சட்டத்தை எடுக்கிறார்கள். அது சரி என்று வாதாடவில்லை. யதார்த்தம் இது. 

இப்படியான சம்பவங்கள் யதார்தமாக நடப்பதாக இவ்வாறான வன்முறைகளுக்கு  மறைமுக ஆதரவு நீங்கள் கொடுத்தாலும் இவை உண்மையில் யதார்த்தமாக நடப்பதில்லை என்பதே உண்மை. வன்முறை செய்வதில் இன்பம் காணும் கலாச்சாரம் பரவிவருகிறது என்பதே யதார்ததம். ஒரு விபத்து நடந்தால் அந்த இடத்தில் எவ்வாறு அவர்களுக்கு உதவி சநயலாம் என்பதே சாதாரண மனித கலாச்சாரம். 

  • கருத்துக்கள உறவுகள்

வாகனம் வைத்திருப்பவரகள் வசதியானவர்கள் இல்லை பெரும்பாலும் லீசிங்கில் வாங்கியவைதான்.தீ வைப்புக்கு காரனம் வன்மமும் வக்கிர புத்தியும்தான்.

1 hour ago, சுவைப்பிரியன் said:

வாகனம் வைத்திருப்பவரகள் வசதியானவர்கள் இல்லை பெரும்பாலும் லீசிங்கில் வாங்கியவைதான்.தீ வைப்புக்கு காரனம் வன்மமும் வக்கிர புத்தியும்தான்.

 

19 hours ago, tulpen said:

விபத்தில் பாதிக்கப்பட்ட வாகனங்களை தீவைத்து கொழுத்துவது எந்த வகையில் நியாயம்.  இவர்கள் கைது செய்யப்பட்டு கடும் தண்டனை வழங்கப்படல் வேண்டும்.  

விபத்தில இறந்த ஆக்கள் காரைநகரை சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகர் குடும்பமாம்.

அங்கு கூடிய மக்கள் வான் டிரைவரை காப்பாற்ற முயற்சித்த போது கசிந்த எரிபொருள் சூடான எஞ்சினில் வழிந்து எதிர்பாராம வான் தீப்பிடித்ததாகவும்  அதிலிருந்து தீ பஸ்ஸுக்கு பரவியதாகவும் சொல்றார்கள்.

ஜீப் வலப்பக்கம் திரும்பும் சிக்னலுடன் பாதையின் மத்திக்கு நகர்ந்தததால் குழம்பிய பஸ் டிரைவர் மோதுவதை தவிர்க்க முடியாம போனதா சொல்றார்கள்.

எனவே தமிழ் மக்கள் விபத்துக்குள்ளான வாகனத்துக்கு தீ வைக்குமளவு நாகரிகமற்றவர்கள் இல்லை.

எனவே தமிழ் மக்கள் விபத்துக்குள்ளான வாகனத்துக்கு தீ வைக்குமளவு நாகரிகமற்றவர்கள் இல்லை.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.