Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கையில் எடுத்தது தவறு..!-நளினி ரட்ணராஜா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

TNA யில் போட்டியிட விண்ணப்பித்துள்ளேன்..!
விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கையில் எடுத்தது தவறு..!-நளினி ரட்ணராஜா

 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

TNA யில் போட்டியிட விண்ணப்பித்துள்ளேன்..!
விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கையில் எடுத்தது தவறு..!-நளினி ரட்ணராஜா

 

 

தமிழரசு கட்சி மகளிர் அணி குழம்பியது – சுமந்திரன் மழுப்பல்.

76-620x330.jpg 

இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் யாழ் மாவட்டத்தில் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் களமிறக்கப்பட்டுள்ளது கட்சியின் யாழ்ப்பாணத்து பெண்களிடம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் அரசுக் கட்சியின் மகளிர் அணியின் யாழ் மாவட்ட உறுப்பினர்கள் இன்று கூட்டாக கட்சித் தலைமையை சந்தித்து தமது ஆட்சேபனையை தெரிவித்தனர்.

இன்று பகல் தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை சந்தித்து அவர்கள் தமது அதிருப்தியை தெரிவித்தனர்.

இதனால் தன்னை சுதாகரித்துக்கொண்ட சுமந்திரன் வேட்பாளர்கள் பட்டியல் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என தெரிவித்து மகளிர் அணியினரை சமாளித்து அனுப்பியுள்ளார் .

இதில் அம்பிகாவை சுமந்திரன் தெரிவு செய்திருந்தாலும், ரவிராஜியின் மனைவியான ஆசிரியை சசிகலாவை கட்சியின் தலைவரான மாவை சேனாதிராசாவே தெரிவு செய்து அவரை ஆசிரியர் பணியில் இருந்தும் ஓய்வு பெற செய்தவராவார் .

இரண்டு பெண்களும் தமது பணிகளை நிராகரித்து தேர்தலில் களமிறங்க காத்திருப்பதால் , சுமந்திரன் கூறுவதுபோல் வேட்பாளர்கள் இறுதி செய்யப்படவில்லை என்பது முழுமையான பொய் ஆகும்.

எனவே யாழ்ப்பாண மகளிர் அணியினரை சமாளிப்பதற்காகவே சுமந்திரன் இவ்வாறு பொய்கூறி அவர்களை அனுப்பியுள்ளார் என்று கட்சியின் பெண் உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் .

இதனைவிட மட்டக்களப்பில் தெரிவாகி இருக்கும் நளினி ரட்ணராஜா தன்மேல் சுமத்தப்பட்டிருக்கும் பாலியல் புகார்கள் தொடர்பில் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும், இதுதொடர்பில் தனக்கு நெருக்கமானவர்களிடம் தன் நிலைப்பாடுட்டை கூறி ஆறுதல் தேட விளைவதாகவும் கூறப்படுகிறது .

எதற்கும் பயப்படாமல் தைரியமாக இருக்கும்படி சுமந்திரன் நளினிக்கு ஆறுதல் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன .

https://thamilkural.net/?p=30437

  • கருத்துக்கள உறவுகள்

IMG_0195-720x450.jpg

பெண் என்பதாலேயே என்மீது அவதூறுகள் பரப்பப்படுகின்றன: மனித உரிமை செயற்பாட்டாளர் நளினி

‘பெண்’ என்ற காரணத்தினாலேயே தன் மீது எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவதூறுகள் பரப்பப்படுவதாக மனித உரிமை செயற்பாட்டாளரும் பெண் உரிமை செயற்பாட்டாளருமான திருமதி நளினி ரட்னராஜா தெரிவித்துள்ளார்.

இதனாலேயே பல பெண்கள் அரசியலுக்கு வருவதற்கு அச்சம் கொள்கின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மட்டு. ஊடக அமையத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “இலங்கை முழுவதும் சென்று பெண்கள் அரசியலில் ஈடுபடவேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பான பயிற்சிகளை வழங்கிவரும் நிலையில், நானும் அரசியலில் ஈடுபடுவதன் மூலமே ஏனைய பெண்களையும் ஈடுபடுத்தமுடியும் என்ற அடிப்படையிலேயே தேர்தலில் போட்டியிட முன்வந்தேன்.

ஆனால் என்மீது முகம் தெரியாத, அடையாளம் தெரியாத வலைத்தளங்களில் இருந்து ஒரு பெண் என்ற காரணத்தினால் நடத்தை தொடர்பான அவதூருகளும் அரசியல் ரீதியான அவதூறுகளும் எந்த ஆதாரமும் இல்லாமல் பரப்பப்படுகின்றன.

வடகிழக்கினை எடுத்துக்கொண்டால் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களும் அதிகரித்துள்ளன. அவர்கள் தொடர்பாக பேசவேண்டிய தேவை தமிழ் சமூகத்தில் உள்ள எங்களுக்கு அதிகமாகவுள்ளது.

இவ்வாறான நிலையில், எனக்கு ஊக்கமளிப்பதற்கு பதிலாக என்மீது சேறு பூசும் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டுள்ளன. அனைத்து கட்சிகளும் பல ஆண்கள் போட்டியிடும்போது அவர்கள் பற்றியோ, அவர்களின் நடத்தை பற்றியோ, அவர்களின் குடும்ப நிலை பற்றியோ இங்கு பேசுவதில்லை.

பெண் என்ற காரணத்தினால் அவரின் நடத்தையையே குறை சொல்வதையே பெரிய காரணமாக கொள்கின்றனர். இவ்வாறான நிலையிலேயே பல பெண்கள் அரசியலுக்கு வருவதற்கு அச்சம்கொள்கின்றனர்” என மேலும் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/பெண்-என்பதாலேயே-என்மீது/

  • கருத்துக்கள உறவுகள்

உதெல்லாம் எங்கட தலையெழுத்து.

நாங்கள் முன்னரே சுயவிமர்சனம் செய்து , எங்களை நாங்களே அடையாளம் கண்டு செய்ய வேண்டியதை செய்திருந்தால் , உந்த காளான்கள் எல்லாம் எங்களுக்கு போதிக்க வேண்டி வந்திராது...

 

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஆணென்றும் பெண்ணென்றும் எங்கே வந்தது ??😡

 

சேவை செய்ய வந்தால் சேவையைச் செய்து போட்டுப் போறது ।।😡

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ சம் சும் கும்பலின் கொசுக்களின் தொல்லை தாங்க முடியவில்லை. 

 

சுமந்திரன் செய்வதும் சகோதரப் படுகொலை தான்.. வித்தியாதரன். (காணொளியின் 19.20 நிமிடத்தில் இருந்து பாருங்கள்.)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இவை போன்ற ஆட்களுக்கு அரசியலில் நல்ல தொழில் வாய்ப்பு. இது தேறாது.

விடுதலைப்புலிகள் ஆயுதம் தூக்கியது தவறா , இல்லையா எண்டு ஆராச்சி செய்து இப்போது கிடைக்கும் பலன் ஒன்றுமே இல்லை। வீண் வார்த்தைப்பிரயோகங்களுக்கு இது ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கி இருக்கிறதே ஒழிய ஒரு ஐந்து சத்துக்கும் உதவாத பேச்சு இது।

இது எல்லாவற்றையும்விட இப்போது தமிழன் ஒற்றுமையாக இருக்கிறானா எண்டு பார்த்து அதை சரி செய்யுங்கள்। முதலில் தமிழ் பேசும் சோனவனை வெளியேற்றினோம்। அல்லது அவர்களாகவே வெளியேறினார்கள்।

அடுத்தது தமிழ் பேசும் கத்தோலிக்கர்/கிறிஸ்தவர்கள் வெளியேற வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானியுங்கள்। அதை விட்டுப்போட்டு முடிந்த கதைகளை ஏன் கிளறிக்கொண்டிருக்கிறீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

F4925319-E918-47-EE-BD80-8-B266-CE2-D19-

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ரவிராஜியின் மனைவியான ஆசிரியை சசிகலாவை கட்சியின் தலைவரான மாவை சேனாதிராசாவே தெரிவு செய்து அவரை ஆசிரியர் பணியில் இருந்தும் ஓய்வு பெற செய்தவராவார் .

எல்லாம் முடிந்து இப்போது அனுதாப வாக்கையும் தேடுகின்றார்கள்.

13 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தமிழ் அரசுக் கட்சியின் மகளிர் அணியின் யாழ் மாவட்ட உறுப்பினர்கள் இன்று கூட்டாக கட்சித் தலைமையை சந்தித்து தமது ஆட்சேபனையை தெரிவித்தனர்.

சுமந்திரன்ட தோஸ்து பெண்கள் தான் தேர்தல்ல நிக்கலாம். இது தான் சம்பந்தன்-சுமந்திரன் ஜனநாயகம்.

அதுவும் சுத்துமாத்து வேலைகள்ல அத்துப்படியா இருக்கணும். அப்பிடி பெண்கள் யாழில இல்லையாமே. அல்லது சுமந்திரன் கண்களில அப்பிடி பெண்கள் படேல்லை போல இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

பெண் என்ற காரணத்தினால் அவரின் நடத்தையையே குறை சொல்வதையே பெரிய காரணமாக கொள்கின்றனர். இவ்வாறான நிலையிலேயே பல பெண்கள் அரசியலுக்கு வருவதற்கு அச்சம்கொள்கின்றனர்” என மேலும் தெரிவித்துள்ளார்.

பெண்களின் வாக்குக்கு குறிவைக்கிறா அடுத்த சுமந்திரன் இவ. உங்களை கொண்டுவர துடிக்கும் பின்புலமே சந்தேகத்தை எழுப்புது. தங்கள் உரிமையை பெறுவதற்கு ஆயுதம் தூக்குவதற்கு முன்பு இருந்த அரசியற் சூழ்நிலையையும், ஆயுதம் ஏன் தூக்கினார்கள் என்கிற காரணத்தையும் அம்மணிக்கு யாராவது எடுத்துச் சொல்லுங்கோடாப்பா. ஏதோ வேலையில்லாமல் ஆயுதம் தூக்கினமாதிரி கதையளக்கிறா. 

  • கருத்துக்கள உறவுகள்

சம்சும் கும்பல் எல்லோருக்கும் குழிதோண்டி முடிச்சி இப்போ தங்களுக்கும் கூட்டமைப்புக்கும் குழிதோண்டுறாங்க. அவங்க முடிவுகள் கட்சியின் மகளிர் அணியின் எதிர்ப்பை பெறுகிறதென்றால் அம்மணிகள் தேர்தலில் தோற்பது நிச்சயம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.