Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விலைகளை உயர்த்தும் எம்மவர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விலைகளை உயர்த்தும் எம்மவர்கள்

90633407_117952596491181_804561543361462

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடை சனம் அணுகுண்டு வெடிச்சாலும் திருந்தாதுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

கொரானா வந்தவுடன்..கூட்டிச் சம்பாதித்த காசுமில்லை சொந்தமும் இல்லை ..அனாதையாய் மஞ்சள்  பையில் போட்டபடி போய்ச் சேரவேண்டியதுதான்...

நோய்த் தொற்றுக்கு பயந்து சனம் அவதிப் படும் நேரத்தில் இப்படி செய்வது சட்டத்துக்கு புறம்பானது மட்டுமில்லை கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.  ஒரே அளவு அரிசியின் விலையை இரண்டு மடங்காக்கியிருக்கிறாங்கள். 

விலைகளை உயர்த்த கடை உரிமையாளருக்கு உரிமை உண்டு. ( முதலாளித்துவம் முதல் , மனிதாபினம் பின்னர்). அதேவேளை, அந்த கடைகளை தவிர்த்து வேறு கடைகளை நாடும் வசதிகளும் இங்கு உண்டு.  

மறுபக்கம், விலையை கூட்டாமல் வைத்தால், நுகர்வோர்களோ எல்லாவற்றையும் வழித்து துடைக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஒரு வீடியோ வந்தது. ஒரு கருப்பு இனத்தவர்... ஒரு சிறிய அங்காடியில் டாய்லட் ரோல் 4 கொண்ட பாக்கெட்டினைக் கொண்டு போய் டில்லில் வைக்கிறார். £9.99 என்கிறார். காசாளர். 

என்னது... கொதித்துப் போகிறார் அவர்... விலை நிர்ணயித்தது நீ இல்லை என்று தெரியும்.... நாளைக்கு உனது பாஸ்சுக்கு கொரோன வந்தா.... இப்படி அநியாயமா அடிச்சிக்கிற காசை அவரது புதைகுழிக்கு கொண்டு போக முடியாது என்று சொல்லு என்று கத்துகிறார். அதனை படம் பிடித்து போட்டிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

விலைகளை உயர்த்த கடை உரிமையாளருக்கு உரிமை உண்டு. ( முதலாளித்துவம் முதல் , மனிதாபினம் பின்னர்). அதேவேளை, அந்த கடைகளை தவிர்த்து வேறு கடைகளை நாடும் வசதிகளும் இங்கு உண்டு.  

மறுபக்கம், விலையை கூட்டாமல் வைத்தால், நுகர்வோர்களோ எல்லாவற்றையும் வழித்து துடைக்கின்றனர்.

அப்படி இல்லை. moral & ethics என்றால் என்ன விலை என்று கேட்பது ஆசியர்கள் வழக்கம். ஆங்கில (இறைச்சி) கடைகளில் விலை இம்மியளவும் மாறவில்லை.

முதலாம், உலகப் போரில், ஆண்கள் யுத்த முனைக்கு சென்றுவிட, அரசாங்கம் உணவுக்கு ஏதாவது செய்யும் என்று வீட்டில் குந்திக் கொண்டிராமல் பெண்கள் திரண்டு, விவசாயங்களையும், கால்நடை பராமரிப்பு, யுத்த தளபாட, குண்டுகள் தயாரிப்பு என்று தம்மை ஈடுபடுத்தினார்.

Image result for wwi women in factory

Image result for wwi women in factory

Image result for wwi women in farmland

awww_nfuonline_com_assets_28939_.jpg

awww_nfuonline_com_assets_28940_.jpg

அந்த பங்களிப்பு காரணமாகவே பெண்களுக்கு (1918) வாக்களிப்பு வழங்கப்பட்டது.

இதுவே இரண்டாம் உலகப்போரில் தொடர்ந்தது. இதுவே இப்பொது நடக்கபோகின்றது. country First. அதனால் தான் உலகத்தினையே கட்டி ஆண்டனர். கட்டியாண்ட நாம், அடிமைகளாக உள்ளோம்.

இப்போதும் பாருங்கள்.... சுகாதாரத்துறையில் வேலைசெய்து எம்மை காக்கும் ஊழியர்களுக்கு காலை 7 முதல் 8 வரை சகல சூப்பர் மார்கெட்டுகலிளும் விசேட திறப்பு நேரம்.

இந்த அர்ப்பணிப்பு எமது விடுதலைப் போராட்டத்தில் கிடைக்கவில்லை.

Edited by Nathamuni

16 minutes ago, Nathamuni said:

அப்படி இல்லை. moral & ethics என்றால் என்ன விலை என்று கேட்பது ஆசியர்கள் வழக்கம். ஆங்கில (இறைச்சி) கடைகளில் விலை இம்மியளவும் மாறவில்லை.

சிறிய கடைகளில், அதாவது ஒருவரின் தனிப்பட்ட கடையில் விலைகள் உயர்ந்து தான் இருக்கின்றன.சிறிய  கடைக்காரர்கள் விலைகளை கூட்டுவதில் தவறில்லை.  
 
பெரிய, சங்கிலி கட்டமைப்பு கடைகளில் விலை கூட வில்லை. அவர்களால் இந்த சுனாமியை தாங்கலாம் 

20 minutes ago, Nathamuni said:

இப்போதும் பாருங்கள்.... சுகாதாரத்துறையில் வேலைசெய்து எம்மை காக்கும் ஊழியர்களுக்கு காலை 7 முதல் 8 வரை சகல சூப்பர் மார்கெட்டுகலிளும் விசேட திறப்பு நேரம்.

சுகாதார துறை கட்டாய வேலை செய்ப்பவர்கள். அவர்கள், வேலைக்கு அமர்த்தப்பட்ட பொழுதே அதை தெரிந்தே சேர்ந்தார்கள். 

பல சூப்பர் மார்கெட்டுகள் நேரத்தை குறைத்துள்ளன, சம்பளத்தை கூட்டி உள்ளன. 

22 minutes ago, Nathamuni said:

இதுவே இரண்டாம் உலகப்போரில் தொடர்ந்தது. இதுவே இப்பொது நடக்கபோகின்றது. country First. அதனால் தான் உலகத்தினையே கட்டி ஆண்டனர். கட்டியாண்ட நாம், அடிமைகளாக உள்ளோம்.

2ஆம் உலகப்போரின் எதிரி கண்ணுக்கு தெரிந்தவன். கோவிட் 19 தெரியாதவன். 


2ஆம் உலகப்போரின் போது எதிரி மக்களை ஒற்றுமைப்படுத்தியனான். தற்பொழுது, கோவிட் 19 ஒரு குறிப்பிட்ட பொருளாதாரா, ஆரோக்கிய வல்லமைக்கு உட்பட்டோரை அழிக்கின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ampanai said:

சிறிய கடைகளில், அதாவது ஒருவரின் தனிப்பட்ட கடையில் விலைகள் உயர்ந்து தான் இருக்கின்றன.சிறிய  கடைக்காரர்கள் விலைகளை கூட்டுவதில் தவறில்லை.  
 
பெரிய, சங்கிலி கட்டமைப்பு கடைகளில் விலை கூட வில்லை. அவர்களால் இந்த சுனாமியை தாங்கலாம் 

 

சிறிய கடைக்காரர் விலைகளை உயர்த்துவது பழைய, வீசி எறிய வைத்திருந்த பொருட்களின் காலாவதி தேதியினை மாத்திய பொருட்களை கூடஎன்பது அறியாமல் எப்படி ஒத்துக்கொள்கிறீர்கள்?

large.Untitled.jpg.57ecbb74f35ede060a8bb4a4a144fdfb.jpgOld Expiry Date 31 Dec 2019 New Expiry date 31 Dec 2021

 

14 minutes ago, ampanai said:

சுகாதார துறை கட்டாய வேலை செய்ப்பவர்கள். அவர்கள், வேலைக்கு அமர்த்தப்பட்ட பொழுதே அதை தெரிந்தே சேர்ந்தார்கள். 

பல சூப்பர் மார்கெட்டுகள் நேரத்தை குறைத்துள்ளன, சம்பளத்தை கூட்டி உள்ளன. 

நான் சொன்னதென்ன, நீங்கள் சொல்வதென்ன?

வேலை முடிந்து பல்பொருள் அங்காடிக்கு வரும்போது, வெறும் ஷெல்புகளை மட்டுமே பார்ப்பதாகவும், மிக முக்கியமான வேலை செய்யும் தங்களுக்கும்,  பசியும், குடும்பமும் உள்ளது என்று அவர்கள் சொன்னதனால் தான் அவர்களுக்கான இந்த சிறப்பு வசதி. 

அது social responsibility 

எதிரி குறித்து பேசவில்லை ஐயா.

இக்கட்டான காலங்களில் மக்களின் தேசிய கடமை செய்யும் உணர்வு குறித்தே சொன்னேன். 

14 minutes ago, ampanai said:

2ஆம் உலகப்போரின் எதிரி கண்ணுக்கு தெரிந்தவன். கோவிட் 19 தெரியாதவன். 


2ஆம் உலகப்போரின் போது எதிரி மக்களை ஒற்றுமைப்படுத்தியனான். தற்பொழுது, கோவிட் 19 ஒரு குறிப்பிட்ட பொருளாதாரா, ஆரோக்கிய வல்லமைக்கு உட்பட்டோரை அழிக்கின்றது. 

எதிரி குறித்து பேசவில்லை ஐயா.

இக்கட்டான காலங்களில் மக்களின் தேசிய கடமை செய்யும் உணர்வு குறித்தே சொன்னேன். 

Edited by Nathamuni

1 minute ago, Nathamuni said:

சிறிய கடைக்காரர் விலைகளை உயர்த்துவது பழைய, வீசி எறிய வைத்திருந்த பொருட்களின் காலாவதி தேதியினை மாத்திய பொருட்களை கூடஎன்பது அறியாமல் எப்படி ஒத்துக்கொள்கிறீர்கள்?

சகோ, நான் மேலே காலாவதியான பொருட்களை விற்பது பற்றி எதுவுமே கூறவில்லை. 

காலாவதியான பொருட்களை விற்பது சட்டத்திற்கு எதிரானது, அதை திருவாளர் பொதுமகன் இல்லை பொதுமகள் அதிகாரிகளிடம் ஆதாரத்துடன் முறையிட வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் பண தண்டனை விதிக்கப்படும்.  

7 minutes ago, Nathamuni said:

நான் சொன்னதென்ன, நீங்கள் சொல்வதென்ன?

வேலை முடிந்து பல்பொருள் அங்காடிக்கு வரும்போது, வெறும் ஷெல்புகளை மட்டுமே பார்ப்பதாகவும், மிக முக்கியமான வேலை செய்யும் தங்களுக்கும்,  பசியும், குடும்பமும் உள்ளது என்று அவர்கள் சொன்னதனால் தான் அவர்களுக்கான இந்த சிறப்பு வசதி. 

அது social responsibility 

நீங்கள் எழுதியதற்கான பதில் : "இப்போதும் பாருங்கள்.... சுகாதாரத்துறையில் வேலைசெய்து எம்மை காக்கும் ஊழியர்களுக்கு காலை 7 முதல் 8 வரை சகல சூப்பர் மார்கெட்டுகலிளும் விசேட திறப்பு நேரம்." 

9 minutes ago, Nathamuni said:

நான் சொன்னதென்ன, நீங்கள் சொல்வதென்ன?

வேலை முடிந்து பல்பொருள் அங்காடிக்கு வரும்போது, வெறும் ஷெல்புகளை மட்டுமே பார்ப்பதாகவும், மிக முக்கியமான வேலை செய்யும் தங்களுக்கும்,  பசியும், குடும்பமும் உள்ளது என்று அவர்கள் சொன்னதனால் தான் அவர்களுக்கான இந்த சிறப்பு வசதி. 

அது social responsibility 

சமூக சிந்தனை எல்லோருக்கும் இருக்காது. ஒருவரின் வேலை 'அத்தியாவசியம்' என முத்திரை குத்தப்படாத இடத்தில் அவரால் அந்த வேலையை நிராகரிக்கும் உரிமை உள்ளது. அதனால் தான் பலரும் அதிக சம்பளம், பாதுகாப்பு கொடுத்து வேலைக்கு வர வைக்கிறார்கள், அங்காடிகளில். 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nunavilan said:

விலைகளை உயர்த்தும் எம்மவர்கள்

90633407_117952596491181_804561543361462

இதில் ஒன்று பஸ்மதி என்றும் மற்றையது புரியாணி அரிசி என்றும் போட்டிருக்கு.இரண்டுக்கும் வேறுபாடு இருக்கலாம்.

மேற்குலக பொருளாதாரம் என்பது கேள்வியும் சந்தையும். 

சந்தையில் கேள்வி அதிகரிக்கும் பொழுது விலையும் அதிகரிக்கும். 

போனமாதம் விற்ற விலைக்கு முகமூடியும் இல்லை கைகளை கழுவும் கிருமி நாசினியும் இல்லை. 

முடிந்தால் யாரும் தயாரித்து இல்லை இறக்குமதி செய்தும் உதவலாம் / உழைக்கலாம். 

மேற்குலக பொருளாதாரம் என்பது 'ரிஸ்க்; எடுப்பதும் பணம் சம்பாதிப்பதும் 

1 hour ago, ampanai said:

மேற்குலக பொருளாதாரம் என்பது கேள்வியும் சந்தையும். 

சந்தையில் கேள்வி அதிகரிக்கும் பொழுது விலையும் அதிகரிக்கும். 

போனமாதம் விற்ற விலைக்கு முகமூடியும் இல்லை கைகளை கழுவும் கிருமி நாசினியும் இல்லை. 

முடிந்தால் யாரும் தயாரித்து இல்லை இறக்குமதி செய்தும் உதவலாம் / உழைக்கலாம். 

மேற்குலக பொருளாதாரம் என்பது 'ரிஸ்க்; எடுப்பதும் பணம் சம்பாதிப்பதும் 

 

உங்கள் கருத்து  குழப்பமாகவே இருக்கின்றது.  Walmart , superstore, Safeway , no frills  என எந்த கனேடிய கடைகளி விலைகளை நெருக்கடிகளை பயன்படுத்தி  ஏற்றவிலலை.  பொருட்கள் தீர்ந்து போகின்றது ஆனால் மறுபடி அவை  கடைகளுக்கு கொண்டுவரப்பட்டு அடுக்கப்படுகின்றது ஆனால் விலையில் மாற்றம் இல்லை. மேலும்  அவர்கள் காலாவதியான பொருட்களை அப்புறப்படுத்துகின்றார்களே தவிர திகதியை மாற்றி விற்பதும் இல்லை   மேலும் அவர்கள் தங்களுக்கெனறு சாப்பாட்டுக்கடைகள்  வைத்து தங்கள் கடைகளில் வாடிப்போகும் காய்கறிகளை சாம்பாராக்குவதையும்  பழுதான மீன்களை பொரிப்பதும் எஞ்சும் இறச்சியை  கறிவைப்பதையும் கேள்விப்படவும்  இல்லை. 

உற்பத்தி மறறும இறக்குமதி தடைப்படும் போது இவைகளில் மாற்றம் வரலாம். அவை ஏற்றுக் கொள்ளக் கூடியது. ஆனால் நெருக்கடி நிலை ஏற்பட்ட  உடனேயே  இருப்பில் இருக்கும் பொருட்களை இரட்டிப்பாக்குவது கேவலமானது. 

நம்பிக்கை .  நாணயம்  . பொருளின் தரம் .  வியாபாரத்தில் அறம்  என எந்த தகுதியும் இல்லாத கடைகள் அவை எம்மவர் கடைகளாக இருந்தாலும்  அவற்றை தவர்ப்பதுதான் ஆரோக்கியமானது. 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இதில் ஒன்று பஸ்மதி என்றும் மற்றையது புரியாணி அரிசி என்றும் போட்டிருக்கு.இரண்டுக்கும் வேறுபாடு இருக்கலாம்.

அக்கோய்.... அதுதானக்கா வியாபார தந்திரம்.. இரண்டுக்கும் வேறுபாடு இல்லை....

என்ன விலை கூடிப்போச்சு எண்டு கேட்ட்டால்.... நீங்கள் சொன்ன பதில் தான் கிடைக்கும்..

அது சரி.... நீங்களும் கடை வைத்திருந்த படியால், பாம்பின் கால் பாம்பறியும்... சரியோ?

3 minutes ago, சண்டமாருதன் said:

உங்கள் கருத்து  குழப்பமாகவே இருக்கின்றது

சொல்லுங்கள், இதில் குழப்பம் என்று. என் கருத்தை பின்வைக்கின்றேன்.

குறிப்பு : ஒரு விடயத்தை மற்றும் முன்வைத்தால் கருத்தாட இலகுவாக இருக்கும். பல கருத்துக்களை ஒரே நேரத்தில் வைப்பது குழப்பம் தரலாம். 

2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இதில் ஒன்று பஸ்மதி என்றும் மற்றையது புரியாணி அரிசி என்றும் போட்டிருக்கு.இரண்டுக்கும் வேறுபாடு இருக்கலாம்.

 

13 minutes ago, Nathamuni said:

அக்கோய்.... அதுதானக்கா வியாபார தந்திரம்.. இரண்டுக்கும் வேறுபாடு இல்லை....

என்ன விலை கூடிப்போச்சு எண்டு கேட்ட்டால்.... நீங்கள் சொன்ன பதில் தான் கிடைக்கும்..

அது சரி.... நீங்களும் கடை வைத்திருந்த படியால், பாம்பின் கால் பாம்பறியும்... சரியோ?

நாதம்,

இங்கு தமிழ் கடைகள் பலவற்றில் இந்த இரண்டு வகை அரிசிகளையும் தனிதனியாகத்தான் விற்பார்கள். புரியாணி  அரிசி (இது பாஸ்மதி அல்ல)  எப்பவும் மிகவும் தரம் குறைவாகவும் விலை குறைவாகவுமே இருக்கும். மற்றது தரமானதாகவும் 10 டொலர் அல்லது அதற்கும் மேலாகவே விற்பார்கள் (ரில்டா என்றால் 18 இல் இருந்து 21 வரைக்கும்). கடைக்கு கடை இந்த விலைகள் மாறுபடும். பெரும் வணிக நிலையங்களுக்கிடையில் கூட விலை வித்தியாசம் பெருமளவுக்கு காணப்படும்.

இங்கு குறிப்பிடப்பட்டு இருக்கும் இரா சுப்பர் மார்க்கெட், தமிழ் வாடிக்கையாளர்களின் நன் மதிப்பை பெற்ற ஒரு கடை. ஸ்பைஸ்லாண்ட் போன்ற போராட்டத்துக்கு சேர்த்த பணத்தில் வியாபாரத்தை பெருக்காமல் குடும்பமாக உழைத்து முன்னேறியவர்கள் என பரவலாக நம்பப்படுவதால் மதிக்கத்தக்க கடைகளில் ஒன்று.

நேற்று இக் கடையை (இரா சுப்பர்மார்கெட்) தம் போட்டியாளர்களாக நினைக்கும் இன்னொரு தமிழ் கடைக்காரர்கள் இரா சுப்பர் மார்க்கெட்டில் பணி புரியும் ஒருவருக்கு கொரோனோ வைரஸ் என்று கதை கட்டி அதனை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுக் கொண்டு இருந்தார்கள். விசாரித்து பார்த்ததில் அப்படி எதுவும் இல்லை, வேண்டும் என்றே பரப்பப்பட்டது என அறிய முடிந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

நேற்று இக் கடையை (இரா சுப்பர்மார்கெட்) தம் போட்டியாளர்களாக நினைக்கும் இன்னொரு தமிழ் கடைக்காரர்கள் இரா சுப்பர் மார்க்கெட்டில் பணி புரியும் ஒருவருக்கு கொரோனோ வைரஸ் என்று கதை கட்டி அதனை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுக் கொண்டு இருந்தார்கள். விசாரித்து பார்த்ததில் அப்படி எதுவும் இல்லை, வேண்டும் என்றே பரப்பப்பட்டது என அறிய முடிந்தது.

போலீசில் முறைப்பாடு செய்ய வேண்டும்.

இன்று இங்கு வீதியால் போன வயதான தம்பதிகளை கலாயப்பதாக நினைத்து, அவர்கள் அருகில் போய் வேண்டுமென்றே இருமி விளையாடிய 15, 16, 17 வயது பொடியள், உள்ளுக்கு இருக்கினம்.

7 minutes ago, Nathamuni said:

போலீசில் முறைப்பாடு செய்ய வேண்டும்.

இன்று இங்கு வீதியால் போன வயதான தம்பதிகளை கலாயப்பதாக நினைத்து, அவர்கள் அருகில் போய் வேண்டுமென்றே இருமி விளையாடிய 15, 16, 17 வயது பொடியள், உள்ளுக்கு இருக்கினம்.

இதை முறையிட்டு, பொலிஸ் நடவடிக்கை எடுக்க அலைவதை விட அவர்கள் இதனை அலட்சியம் செய்யவே முனைவர்.

மற்றது, அனேகமாக இன்றுடனோ இன்னும் சில நாட்களிலோ பல தமிழ் கடைகள் தற்காலிகமாக பூட்டப்படும் என நம்புகின்றேன்.  அரசு விதிகளை மீறி கூட்டமாக கூட செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க விருப்பதாலும், விற்பதற்கான பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் இருப்பதாலும் தற்காலிகமாக பூட்ட போகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வளர்ந்த நாட்டில் இப்படி செய்வது ஆச்சரியாமக உள்ளது. தங்கள் தஞ்சமடைந்த நாட்டிலுள்ள் எந்தவித வியாபார யும் பின்பற்றாத இவர்களை என்ன செய்வது. இங்கு 1 கிலோ tilda பாஸ்மதி அரிசிவிலை CAD 8 மட்டுமே.
LULU எனும் சுப்ப்ர் மார்கட்டில் எல்லா பொருட்களும் எந்த வித தட்டுப்படும் இன்றி மிக மலிவாக‌ கிடைக்கின்றது.

கிட்டத்தட்ட  ஒரு சிக்கன் லெபானான் ஷ‌வர்மா  வேண்டியளவு சலாட் கிட்டதட்ட CAD 3 அந்த மாறி ருசி

 

50 minutes ago, colomban said:

ஒரு வளர்ந்த நாட்டில் இப்படி செய்வது ஆச்சரியாமக உள்ளது. தங்கள் தஞ்சமடைந்த நாட்டிலுள்ள் எந்தவித வியாபார யும் பின்பற்றாத இவர்களை என்ன செய்வது. இங்கு 1 கிலோ tilda பாஸ்மதி அரிசிவிலை CAD 8 மட்டுமே.
LULU எனும் சுப்ப்ர் மார்கட்டில் எல்லா பொருட்களும் எந்த வித தட்டுப்படும் இன்றி மிக மலிவாக‌ கிடைக்கின்றது.

கிட்டத்தட்ட  ஒரு சிக்கன் லெபானான் ஷ‌வர்மா  வேண்டியளவு சலாட் கிட்டதட்ட CAD 3 அந்த மாறி ருசி

 

நான் குறிப்பிட்ட Tilda விலையானது ஒரு கிலோ விற்கானது அல்ல. 4.5 கிலோ ( பத்து இறாத்தல்) இற்கான விலை. நீங்கள் குறிப்பிட்ட அங்குள்ள விலைப் படி பார்த்தால் CAD 36 இற்கும் மேல் வரும் 4.5 கிலோவுக்கு. எனவே இங்கு மலிவு.

அரிசிக்கு இங்கு வரி இல்லை. ஆனால் ஷவர்மாவுக்கு உண்டு. அதை விற்கும் விற்பனையாளருக்கு வேறு வரிகளும் உண்டு, எனவே வரிகள் இல்லாத மத்திய கிழக்கு நாடுகள் போல் 3 டொலருக்கு விற்க முடியாது. 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

Clampdown on shops exploiting customers amid coronavirus pandemic.

https://www.itv.com/news/2020-03-20/watchdog-to-clamp-down-on-retailers-exploiting-coronavirus/

எம்மவர் கடைகளில் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நின்று பார்த்தேன், இடையில் ஒருவர் ஊடறுத்து இடம் எடுத்துவிட்டார். அவருக்கு அண்மையில் போய் கதைக்கவும் மனம் விரும்பவில்லை. அதேவேளை, நேற்று ஒரு கோப்பிக்கடையில் நின்றபொழுது ஒரு வட இந்தியரும் அதையே செய்தார். வரிசையில் நிற்கிறேன் என்றேன், அசடு வழிய சென்றார். 

பணத்தை செலுத்தும் பொழுது, காசாளாரிடம் மெதுவாக சொன்னேன். இந்த சமூக இடைவெளி பற்றி ஒரு அறிவித்தலை போடலாம் என்றேன். அத்துடன், பொருட்களை விற்பதற்கு நன்றியும் சொன்னேன்.  நாளைக்கு பணம் இருந்தாலும் பொருட்கள் இல்லாத நிலை வரலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ampanai said:

எம்மவர் கடைகளில் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நின்று பார்த்தேன், இடையில் ஒருவர் ஊடறுத்து இடம் எடுத்துவிட்டார். அவருக்கு அண்மையில் போய் கதைக்கவும் மனம் விரும்பவில்லை. அதேவேளை, நேற்று ஒரு கோப்பிக்கடையில் நின்றபொழுது ஒரு வட இந்தியரும் அதையே செய்தார். வரிசையில் நிற்கிறேன் என்றேன், அசடு வழிய சென்றார். 

பணத்தை செலுத்தும் பொழுது, காசாளாரிடம் மெதுவாக சொன்னேன். இந்த சமூக இடைவெளி பற்றி ஒரு அறிவித்தலை போடலாம் என்றேன். அத்துடன், பொருட்களை விற்பதற்கு நன்றியும் சொன்னேன்.  நாளைக்கு பணம் இருந்தாலும் பொருட்கள் இல்லாத நிலை வரலாம். 

துருக்கிக் காரர்களுக்கும்,அந்த இடைவெளி... தமக்காக, ஒதுக்கி  விடப்பட்டது 
என நினைக்கும் மனோநிலையில் இருப்பவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, colomban said:

கிட்டத்தட்ட  ஒரு சிக்கன் லெபானான் ஷ‌வர்மா  வேண்டியளவு சலாட் கிட்டதட்ட CAD 3 அந்த மாறி ருசி

 

என்ன இருந்தாலும் ஓமணக்குட்டியின்ர சாப்பாடு மாதிரி வராதே...

  • கருத்துக்கள உறவுகள்
On 3/22/2020 at 8:00 PM, சண்டமாருதன் said:

நோய்த் தொற்றுக்கு பயந்து சனம் அவதிப் படும் நேரத்தில் இப்படி செய்வது சட்டத்துக்கு புறம்பானது மட்டுமில்லை கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.  ஒரே அளவு அரிசியின் விலையை இரண்டு மடங்காக்கியிருக்கிறாங்கள். 

மிகச் சரியான வார்த்தைப் பிரயோகம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.