Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

     tantra-couples-retreat.jpg         

        

                               இல்லறம்

இருமனம் இணைந்த திருமண வாழ்வில்
   இது ஒரு சுகராகம்
பிரிவினை விரும்பும் இருவரின் வாழ்வில்
   இது ஒரு பெரும் சோகம்
சரிநிகர் என மன உணர்வினை மதித்தால்
   இது ஒரு மலர்த் தோட்டம்
பெரியவர் நான் என ஒரு மனம் நினைத்தால்
   இது ஒரு சிறைக் கூடம்
அன்பெனும் கடலில் இதயங்கள் மிதந்தால்
   இல்லறம் ஒரு சொர்க்கம்
துன்பங்கள் அங்கு தொடர்கதையானால்
   நிரந்தரமாய் நரகம்

வாதங்கள் இல்லா வாழ்க்கையில் என்றும்
   வாசங்கள் பாரங்கள்
பேதங்கள் எல்லாம் நேசங்களாக
   நெஞ்சினில் தாபங்கள்
ராகங்கள் இசைக்க வாத்தியம் தேவை
   தாளங்களும் தேவை
பாசங்கள் நெஞ்சில் பூத்திடும் வேளை
   சோகங்கள் தூரங்கள்

தமிழொடு இனிமை இணைந்தது போல
   தம்பதிகள் இணைந்தால்
அமிழ்தோடு தேனும் அருந்துதல் போல
   ஆனந்தம் பெருகி வரும்
பெருகிடும் அன்புக் கடலினில் இதயம்
   மிதந்து வரும் வாழ்வில்
இருமனம் இணைந்த இல்லறம் என்றும்
   இணைபிரியா இன்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Kavallur Kanmani said:

   

                             இல்லறம்

இருமனம் இணைந்த திருமண வாழ்வில்
   இது ஒரு சுகராகம்
பிரிவினை விரும்பும் இருவரின் வாழ்வில்
   இது ஒரு பெரும் சோகம்
சரிநிகர் என மன உணர்வினை மதித்தால்
   இது ஒரு மலர்த் தோட்டம்
பெரியவர் நான் என ஒரு மனம் நினைத்தால்
   இது ஒரு சிறைக் கூடம்
அன்பெனும் கடலில் இதயங்கள் மிதந்தால்
   இல்லறம் ஒரு சொர்க்கம்
துன்பங்கள் அங்கு தொடர்கதையானால்
   நிரந்தரமாய் நரகம்

கண்மணி அக்கா.... உண்மையான, அருமையான வரிகள். 

  • கருத்துக்கள உறவுகள்

"அன்பெனும் கடலில் இதயங்கள் மிதந்தால்
   இல்லறம் ஒரு சொர்க்கம்
துன்பங்கள் அங்கு தொடர்கதையானால்
   நிரந்தரமாய் நரகம் "

இல்வாழ்வு இனிக்க அன்பும் விட்டுக்   கொடுப்பும் தான்  காரணம்.

 

அழகிய சொல்லாடல் பகிர்வுக்கு நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படித்து கருத்திட்டு எழுத ஊக்குவிக்கும் அனைவருக்கும் நன்றிகள்.
இல்லறத்தை நல்லறமாக புரிந்து வாழ பொறுமையின்றி இன்றைய இளம் தலை முறையினர் அல்லாடுவதைப் பார்க்கும் பொழுது மனம் வேதனைப்படுகிறது. தமிழ்சிறிக்கும் நிலாமதிக்கும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

விருப்பினை புரிந்து வாழுதல் இன்பம் 

விட்டுக் கொடுத்து வாழுதல் பேரின்பம்.....!  😁

  • கருத்துக்கள உறவுகள்

கண்மணி அக்காவுக்கு நேரம் இப்போ அதிகம் இருப்பதைப் பதிவுகள் காட்டுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

சரிநிகர்எனமனஉணர்வினைமதித்தால்

இதுஒருமலர்த்தோட்டம்

அதுஒருகனித்தோட்டம்

கண்மணியின்கவித்தோட்டம்.

 

 

அருமை 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படித்து கருத்திட்ட சுவி சுமே உதயகுமார் அனைவருக்கும் விருப்பிட்ட நிலாமதி குமாரசாமிக்கும் நனறிகள்

  • கருத்துக்கள உறவுகள்
On 4/1/2020 at 8:49 AM, Kavallur Kanmani said:

தமிழொடு இனிமை இணைந்தது போல
   தம்பதிகள் இணைந்தால்
அமிழ்தோடு தேனும் அருந்துதல் போல
   ஆனந்தம் பெருகி வரும்
பெருகிடும் அன்புக் கடலினில் இதயம்
   மிதந்து வரும் வாழ்வில்
இருமனம் இணைந்த இல்லறம் என்றும்
   இணைபிரியா இன்பம்.

கடைசி பந்தி ரொம்பவும் பிடித்திருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் அக்கா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது கவிதையை ரசித்து சுவைத்த ஈழப்பிரியனுக்கும் வாழ்த்திய தனிக்கும் நன்றிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பச்சைதந்த ரதி நிலாமதி இணையவன் ஆகியோருக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்
On 2/4/2020 at 02:49, Kavallur Kanmani said:

இருமனம் இணைந்த இல்லறம் என்றும்
   இணைபிரியா இன்பம்.

ஜதார்த்தமான உண்மைகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் புத்தன்.

பச்சைப் புள்ளியிட்ட நந்தன் உடையார் ஆகியோருக்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்
On 1/4/2020 at 17:32, Kavallur Kanmani said:

படித்து கருத்திட்டு எழுத ஊக்குவிக்கும் அனைவருக்கும் நன்றிகள்.
இல்லறத்தை நல்லறமாக புரிந்து வாழ பொறுமையின்றி இன்றைய இளம் தலை முறையினர் அல்லாடுவதைப் பார்க்கும் பொழுது மனம் வேதனைப்படுகிறது. தமிழ்சிறிக்கும் நிலாமதிக்கும் நன்றிகள்.

திருமணம் என்பது பொறுப்பு, சமூகக் கடமை என்பதை பெற்றவர்கள்தான் பிள்ளைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.

திருமணத்திற்கு முந்திய காதல்  என்பது மகிழ்ச்சியை , இன்பத்தை மட்டும் இலக்காகக் கொண்டது என்பதையும் திருமணம் இன்பம் துன்பம் பொறுப்பு மூன்றையும் சமனாகக் கொண்டது என்கின்ற வேறுபாட்டை பிள்ளைகளுக்கு ஊட்டவேண்டும். 

சூப்பராக இருக்கிறது. 
இல்லறம் ஒரு நல்லறம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் பெற்றவர்கள் ஊட்டி வளர்த்தாலும் காதல் என்று வந்து விட்டால் பெற்றவர்கள் மற்றவர்கள் சொல்வதெல்லாம் காதில் ஏறாது. இணைபவர்கள் பெண்ணோ பையனோ சரியாக அமைந்து விட்டால் அவர்கள் வெற்றி பெற்று வாழ்க்கை முழுவதும் இணைபிரியாது வாழ்கின்றனர். இரு சக்கரத்தில் ஒன்று பிழையாக அமைந்து விட்டால் வாழ்க்கை நரகமாகி விடுகிறது. சில சமயங்களில் இது இறைவன் கொடுத்த வரம் என்றே எண்ணத் தோன்றுகிறது. நன்றிகள் கபிதன்.
படித்து கருத்திட்டமைக்கு காளிக்கு என் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்
On 1/4/2020 at 17:49, Kavallur Kanmani said:

    பெருகிடும் அன்புக் கடலினில் இதயம்
   மிதந்து வரும் வாழ்வில்
இருமனம் இணைந்த இல்லறம் என்றும்
   இணைபிரியா இன்பம்.

குணம் நாடி மனம் தேடி வாழ்வு கூடிய காலம் அன்று
பணம் தேடி பரவசமடைந்து கூடிக் குழம்பிடும் காலம் இன்றாகிவிட்டது. வாழ்த்தும் பாராட்டும் உரித்தாகுக.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 9/4/2020 at 18:23, Kavallur Kanmani said:

என்னதான் பெற்றவர்கள் ஊட்டி வளர்த்தாலும் காதல் என்று வந்து விட்டால் பெற்றவர்கள் மற்றவர்கள் சொல்வதெல்லாம் காதில் ஏறாது. இணைபவர்கள் பெண்ணோ பையனோ சரியாக அமைந்து விட்டால் அவர்கள் வெற்றி பெற்று வாழ்க்கை முழுவதும் இணைபிரியாது வாழ்கின்றனர். இரு சக்கரத்தில் ஒன்று பிழையாக அமைந்து விட்டால் வாழ்க்கை நரகமாகி விடுகிறது. சில சமயங்களில் இது இறைவன் கொடுத்த வரம் என்றே எண்ணத் தோன்றுகிறது. நன்றிகள் கபிதன்.
படித்து கருத்திட்டமைக்கு காளிக்கு என் நன்றிகள்

நீங்கள் சொல்வது உண்மைதான். இங்கே காதலித்து  மணம் முடித்தவர்கள் தொங்கு பொறியிலும் வாழ்கின்றார்கள்.நேர் கோட்டிலும் வாழ்கின்றார்கள்.நானும் சில நேரங்களில் இறைவன் கொடுத்த வரம் என நினைப்பதுண்டு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் நொச்சி குணம் நாடி மனம் தேடி கூடி வாழ்பவர்கள் இப்போ குறைவுதான். அழகு கவர்ச்சி பணம் தொழில் இவையே இன்று வாழ்க்கைத் துணையை தீர்மானிக்கும் காரணிகளாக பார்க்கப்படுகின்றன. கண்கெட்டபிறகுதான் சூரிய நமஸ்காரம் செய்ய நினைக்கிறார்கள். கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதலித்து திருமணம் செய்பவர்கள் எல்லோரும் கடைசிவரை சந்தோசமாக வாழ்திறார்களா என்றால் அதுவுமில்லை. அதே சமயம் பெற்றவர்கள் பேசி செய்யும் திருமணங்களும் தொங்கு பொறியில்தான் உள்ளன. இப்போதெல்லாம் சில வாலிபப்பிள்ளைகள் திருமணம் என்ற பேச்சை கேட்டாலே  பயப்படுகிறாா்கள். அவர்களைச் சுற்றி நடப்பவற்றைப் பார்த்து மனம் வெறுத்துப்போயுள்ள பல பிள்ளைகளை பார்க்கிறோம்.  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் குமாரசாமி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.