Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ட்ரம்ப்பின் கோரிக்கை நிறைவேறுகிறது: அமெரிக்காவுக்கு மருந்துகளை அனுப்ப இந்தியா முடிவு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ட்ரம்ப்பின் கோரிக்கை நிறைவேறுகிறது: அமெரிக்காவுக்கு மருந்துகளை அனுப்ப இந்தியா முடிவு!

 

 

    by : Litharsan

Trump-And-Modi.jpg

அமெரிக்காவுக்கு ஹைட்ரொக்சிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸால் அமெரிக்காவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு சிகிச்சைகளுக்கு ஹைட்ரொக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை வழங்குவது நல்ல பலனளிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார்.

மலேரியா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ரொக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா அதிக அளவில் வாங்கி வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஹைட்ரொக்ஸிகுளோராகுயின் உள்ளிட்ட சில மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்தது.

இதனால், அமெரிக்கா ஹைட்ரொக்ஸிகுளோராகுயின் மருந்துகளை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசிய டிரம்ப், அமெரிக்கா ஏற்கனவே கேட்டிருந்த ஹைட்ரொகிஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதன் தொடர்ச்சியாக, இந்தியாவைச் சார்ந்துள்ள அண்டை நாடுகள் மற்றும், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஹைட்ரொக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இதேவேளை, ஏற்கனவே கேட்டிருந்த ஹைட்ரொக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்பவில்லை என்றால் தக்க பதிலடி கொடுப்போம் என ட்ரம்ப் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ட்ரம்ப்பின்-கோரிக்கை-நிற/

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சரி இனி இறப்பு விகிதம் டபுள் ட்ரிபிள் ஆகவெல்லா போகிது!😄

டிரம்ப் செய்வது எல்லாம் அரசியல் மட்டுமே. இதன் மூலம் மக்களுக்கு  ஏதோ ஒரு வழியில் மருந்து வருகின்றது போன்ற செய்தியை தருவதே. 

நேற்று ஒரு மாநில ஆளுநர் கூறி இருந்தார் ட்ரம்ப் பத்து வருடத்திற்கு முன் தயாரித்த முக கவசங்களை அனுப்பி வைத்ததாக. இன்னொருவர் சொன்னார், சிறுவர்களுக்கான முக கவசங்களை அனுப்பி வைத்ததாக... 

  • கருத்துக்கள உறவுகள்

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், '10:49 1971ல் இந்திய பாக் போர் நடைபெற்ற வேளையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்திய பெருங்கடலில் USS Enterprises எனும் அமெரிக்கா போர் கப்பலை கொண்டு வந்து நிறுத்தி மிரட்டல் விடுத்தது 24 மணி நேரத்தில் கப்பலை எடுக்காவிட்டால் கப்பலை சுக்குநூறாக உடைப்பேன் என்று அதிபர் ரிச்சர்ட் நிக்சனை எச்சரித்து அமெரிக்க கப்பலை அப்புறப்படுத்தியவர் நேருவின் மகள் இந்திரா.. 10:50' எனக் கூறும் சாத்தியமுள்ள உரை

  • கருத்துக்கள உறவுகள்

மோடி முக்கியமான மருந்த அங்க அனுப்பல (கோமியம்).. ஏமாந்தான் ட்ரம்பு.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/4/2020 at 18:45, ampanai said:

நேற்று ஒரு மாநில ஆளுநர் கூறி இருந்தார் ட்ரம்ப் பத்து வருடத்திற்கு முன் தயாரித்த முக கவசங்களை அனுப்பி வைத்ததாக. இன்னொருவர் சொன்னார், சிறுவர்களுக்கான முக கவசங்களை அனுப்பி வைத்ததாக... 

அமெரிக்காவில் முகக் கவசங்கள் கிடைக்காமல் குப்பைக் கூடைக்குப் பயன்படுத்தப்படும் பாலித்தின் பேப்பர்களையும் பழைய மழைக்கோட்டுகளையும் வைத்து முகக் கவசம் தயாரித்து  நோயாளிகளைக் காப்பாற்றுவதாக அருந்ததி ராய் தெரிவிக்கிறார். அதோடு ஒப்பிடும் போது பத்து வருடத்திற்கு முன் தயாரித்த முக கவசங்கள் சிறுவர்களுக்கான முக கவசங்கள் பரவாயில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ampanai said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், '10:49 1971ல் இந்திய பாக் போர் நடைபெற்ற வேளையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்திய பெருங்கடலில் USS Enterprises எனும் அமெரிக்கா போர் கப்பலை கொண்டு வந்து நிறுத்தி மிரட்டல் விடுத்தது 24 மணி நேரத்தில் கப்பலை எடுக்காவிட்டால் கப்பலை சுக்குநூறாக உடைப்பேன் என்று அதிபர் ரிச்சர்ட் நிக்சனை எச்சரித்து அமெரிக்க கப்பலை அப்புறப்படுத்தியவர் நேருவின் மகள் இந்திரா.. 10:50' எனக் கூறும் சாத்தியமுள்ள உரை

அதுதான் ஆளை போட்டு தள்ளியது ஆதாரம் ஒரு பொருளாதார அடியாளின்  வாக்கு மூலம் .

https://books.google.co.uk/books/about/Confessions_of_an_Economic_Hit_Man.html?id=nJFFrLX-924C&printsec=frontcover&source=kp_read_button&redir_esc=y#v=onepage&q&f=false

  • கருத்துக்கள உறவுகள்
On 7/4/2020 at 17:45, ampanai said:

டிரம்ப் செய்வது எல்லாம் அரசியல் மட்டுமே. இதன் மூலம் மக்களுக்கு  ஏதோ ஒரு வழியில் மருந்து வருகின்றது போன்ற செய்தியை தருவதே. 

நேற்று ஒரு மாநில ஆளுநர் கூறி இருந்தார் ட்ரம்ப் பத்து வருடத்திற்கு முன் தயாரித்த முக கவசங்களை அனுப்பி வைத்ததாக. இன்னொருவர் சொன்னார், சிறுவர்களுக்கான முக கவசங்களை அனுப்பி வைத்ததாக... 

https://www.dailymail.co.uk/news/article-8198351/Donald-Trump-sends-200-ventilators-UK-London-called-say-needed-desperately.html?ito=social-facebook&fbclid=IwAR1D4mB_lqwxOw24mGkn55bMUVpjkdM2IBWB2nXVqCRSiyqdKzdw3GMitDE

உலகமெல்லாம் வெருட்டி வாங்கிய 200 வெண்டிலேட்டர் uk  வருது வேலை செய்யுமா ?

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

https://www.dailymail.co.uk/news/article-8198351/Donald-Trump-sends-200-ventilators-UK-London-called-say-needed-desperately.html?ito=social-facebook&fbclid=IwAR1D4mB_lqwxOw24mGkn55bMUVpjkdM2IBWB2nXVqCRSiyqdKzdw3GMitDE

உலகமெல்லாம் வெருட்டி வாங்கிய 200 வெண்டிலேட்டர் uk  வருது வேலை செய்யுமா ?

 

😁  நம்பமுடியாது

இங்குள்ள வைத்தியரிடம் கதைக்கும் போது சொன்னார். மிகவும் வயதானவர்கள் தாங்களவே சொல்கின்றார்களாம் தங்களுக்கு வெண்டிலேட்டர் வேண்டாமென்று, இளைஞர்களுக்கு பாவிக்குமாறு கேட்கின்றார்கள். அதனால் இங்கு 2 மிகவும் வயதானவர்கள் வெண்டிலேட்டர் இல்லாமல் இறந்து போனர்கள்

 

8 hours ago, ampanai said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், '10:49 1971ல் இந்திய பாக் போர் நடைபெற்ற வேளையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்திய பெருங்கடலில் USS Enterprises எனும் அமெரிக்கா போர் கப்பலை கொண்டு வந்து நிறுத்தி மிரட்டல் விடுத்தது 24 மணி நேரத்தில் கப்பலை எடுக்காவிட்டால் கப்பலை சுக்குநூறாக உடைப்பேன் என்று அதிபர் ரிச்சர்ட் நிக்சனை எச்சரித்து அமெரிக்க கப்பலை அப்புறப்படுத்தியவர் நேருவின் மகள் இந்திரா.. 10:50' எனக் கூறும் சாத்தியமுள்ள உரை

இவரைப்போல் ஒருவர் இனி இந்தியாவில் தலைவராக இருக்க முடியாது

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, உடையார் said:

 

 

இவரைப்போல் ஒருவர் இனி இந்தியாவில் தலைவராக இருக்க முடியாது

இவரை போல் இல்லாதவர்கள் ஆளும் நாடு உடையனும் என்று பலமுறை சொல்லியுள்ளேன் 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

இவரை போல் இல்லாதவர்கள் ஆளும் நாடு உடையனும் என்று பலமுறை சொல்லியுள்ளேன் 

அதுதான் பல நாட் கனவு, உடைந்தால் தான் தமிழன் ஆள  ஒரு நாடு வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, உடையார் said:

இங்குள்ள வைத்தியரிடம் கதைக்கும் போது சொன்னார். மிகவும் வயதானவர்கள் தாங்களவே சொல்கின்றார்களாம் தங்களுக்கு வெண்டிலேட்டர் வேண்டாமென்று, இளைஞர்களுக்கு பாவிக்குமாறு கேட்கின்றார்கள். அதனால் இங்கு 2 மிகவும் வயதானவர்கள் வெண்டிலேட்டர் இல்லாமல் இறந்து போனர்கள்

இந்த செய்தியை வடக்கு கிழக்கில் வெளிநாட்டுக்கு வந்தே ஆகணும் என்கிற கிறுக்குகளுக்கு தெரியப்படுத்தனும் மனிதம் செத்து விட்ட நாடுகள் தங்கள் சொந்த குடிகளை கூட ஒரு பிரச்சனை என்றவுடன் கை  விட்ட வர்கள் இவர்களை விட ஸ்கண்டிநேவிய நாடுகள் எவ்வளவோ மேல் .

  • கருத்துக்கள உறவுகள்

92010119_1571195116392132_74001580846953

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் தடை நீக்கம்: நரேந்திர மோதிக்கு டிரம்ப், பிரேசில் அதிபர் நன்றி

  •  
கடந்த திங்கட்கிழமை அன்று, இந்தியா ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்காவிட்டால் ‘தக்க பதிலடி’ கொடுக்க நேரிடும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கடந்த திங்கட்கிழமை அன்று, இந்தியா ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்காவிட்டால் ‘தக்க பதிலடி’ கொடுக்க நேரிடும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து மீதான தடையை விலக்கிய இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும் இந்தியர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

உலக நாடுகளை புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தைக் குறைப்பதற்கு இதுவரை மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் அதை கட்டுப்படுத்துவதற்கு மலேரியா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டுவரும் ஒரு வகை மருந்தான ஹைட்ராக்ஸிகுளோரோகுயினை பயன்படுத்தலாம் என்று கடந்த வாரம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் பரிந்துரை செய்திருந்தது.

இந்த நிலையில், கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட நாடாக விளங்கி வரும் அமெரிக்கா இந்த வகை மருந்துகளை இந்தியாவில் இருந்து பெறுவதற்கு திட்டமிட்டிருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு கடந்த மாத இறுதியில் இந்திய அரசு தடை விதித்தது.

இதையடுத்து கடந்த சனிக்கிழமை இந்திய பிரதமர் நரேந்திர மோதியை தொலைபேசி வாயிலாக அழைத்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

Hydroxychloroquineபடத்தின் காப்புரிமை Getty Images

டிரம்பின் இந்த கோரிக்கை தொடர்பாக இந்திய அரசு உடனடியாக எந்த அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று, இந்தியா ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்காவிட்டால் ‘தக்க பதிலடி’ கொடுக்க நேரிடும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இந்த வகை மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதாக இந்திய அரசு அறிவித்தது.

இதையடுத்து இந்தியர்களுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும் நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள டிரம்ப் அதில், “அசாதாரண சூழலில்தான் நண்பர்களுக்கு இடையே அதிகமான ஒத்துழைப்பு தேவை. ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்த இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி. இந்த உதவியை அமெரிக்க மக்கள் என்றும் மறக்கமாட்டார்கள். கொரோனா வைரஸுக்கு எதிரான இந்த போராட்டத்தில் இந்தியாவுக்கு மட்டுமல்ல, மனிதநேயத்திற்கும் உதவுவதில் உங்கள் வலுவான தலைமைக்கு நன்றி, பிரதமர் நரேந்திர மோதி” என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் டிரம்பின் கருத்திற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதி, “உங்களது கருத்துடன் நான் முற்றிலும் உடன்படுகிறேன். இதுபோன்ற நேரங்களில் நண்பர்களுக்கிடையேயான கூட்டுறவு அதிகரிக்கிறது. இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் வலுவாக உள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் மனித குலத்துக்கு தேவையான தன்னாலான எல்லாவித உதவிகளையும் இந்தியா செய்யும். இதை நாம் ஒன்றிணைந்து வெல்லவேண்டும்” என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்

நன்றி தெரிவித்த பிரேசில் அதிபர்

பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூபடத்தின் காப்புரிமை Getty Images
Image caption பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரேசில் மக்களிடம் உரையாற்றிய அந்த நாட்டின் அதிபர் சயீர் பொல்சனாரூ, ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கான தடையை நீக்கியதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்

“இந்திய பிரதமருடனான எனது நேரடி உரையாடலின் விளைவாக, கோவிட்-19 தொற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கு தேவைப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துக்கான மூலப்பொருட்களை இந்தியாவிடமிருந்து பெறவுள்ளோம்” என்று அவர் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/global-52226471

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

92228709_10213540135217508_7560418334009

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனவிற்கு பயன்படுத்தி வரும் மருந்து… ஆபத்தானது; அதிரவைக்கும் ஆய்வின் முடிவு

கொரோனா வைரஸிற்கு தற்போது பயன்படுத்தி வரும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து வைரஸை கட்டுப்படுத்தவில்லை என்ற முக்கிய தகவல், அமெரிக்காவின் ஆய்வுக் கட்டுரை ஒன்றில் தெரியவந்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் பிடியில் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகளின் வரிசையில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது.

இந்நாட்டில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு அதிகமாக உள்ளது. இதுவரை கொரோனா வைரஸிற்கு முறையான சிகிச்சை முறையும், மருத்தும் கண்டுபிடிக்காத நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து பயன்படும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் ஹைட்ராக்ஸி குளோரோசில் மருந்து ஏற்றுமதி செய்ய இருந்த தடையை நீக்குமாறும் கூறியிருந்தார்.

இதையடுத்து மத்திய அரசு அமெரிக்காவிற்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பற்றி அமெரிக்காவின் பிலடெல்பியாவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையின் தொற்று நோய் பிரிவு மருத்துவர் பால் ஆபிட் எழுதியுள்ள கட்டுரையில் ஹைட்ராக்ஸி குளோரோசில் மருந்து கொரோனாவை கட்டுப்படுத்தவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில், கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு போதைப் பொருட்களால் ஏற்படும் பக்கவிளைவுகள் இருந்ததாகவும் இதயம் முழுவதும் நச்சுத்தன்மையுடன் காணப்பட்டதாகவும் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் எடுத்த 2 புள்ளி 8 விழுக்காடு பேர் இறந்துள்ளனர்.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் எடுத்துக் கொள்ளாத நோயாளிகளில் 4 புள்ளி 6 விழுக்காடு பேர் இறந்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த எண்ணிக்கையிலிருந்து பார்க்கப்போனால் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து கொரோனா நோயாளிகளுக்கு ஓரளவுக்குத்தான் உதவுமே தவிர இது மருந்து அல்ல எனவும், இதை முழுமையாக நம்பி நாம் எல்லோருக்கும் இதை அளிக்க முடியாது, இதயத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் எனவும் பால் ஆபிட் தனது ஆய்வு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

http://thinakkural.lk/article/38883

 

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.