Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2020 தேர்தல் முடிவுகள்!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nilmini said:

Dr. முரளி வல்லிபுரநாதன் எழுதியது 2020 பாராளுமன்ற தேர்தல்:  பிரபாகரன் பிறந்த மண்ணில் தமிழ்த் தேசியம் தோற்றது.

நில்மினியவர்களே இணைப்புக்கு நன்றி.  

உண்மையிலே தமிழர்கள் பிரிந்துநிற்கக் கூடாது என்ற தொலைநோக்கின் விளைவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும். ஆனால் 2009இன் பின்னான காலத்தில் அவர்கள் ஆற்றிய பணிகளை இருவிதமாக வகுத்தால் 98வீதமான செயற்பாடுகள் சிங்களத்தை  சிறையெடுப்பதிலும் தமிழரது  தன்னாட்சி க் கோட்பாட்டை  நீர்த்துப்போகச் செய்து சிங்களத்தையும் அதனது ஆட்சியதிகாரத்தைக் காப்பதிலும் வெளிநாட்டுச் சந்திப்புகளிற்கூட தமிழரது இனவழிப்பையும் நிராகரித்து  தமிழரை அரசியல் அநாதைகளாக்கவதிலுமே செலவிட்டதன் வாயிலாகத் தமிழர்கள் வேறுதெரிவுகள்  நோக்கி நகரமுற்பட்டுள்ளனர்.  கட்டுரையாசியர் குறிப்பிட்டதுபோல் இது ஒரு அவலமான நிலைதான். ஆனால் மீண்டும்      மீண்டும் கூட்டமைப்பை நம்பி மக்கள் ஏமாறத் தயாரில்லை என்பதைத் தமது வாக்குகளாற் காட்டியுள்ளார்கள். கடந்த பதினொரு ஆண்டுகளில்  ஒரு வகையிற் கசப்பானதாகவும் மறுவகையிற் மாற்றத்தக்கானதுமாக நோக்க வேண்டியுள்ளது. அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இனியாவது தமிழரது அபிலாசைகளை ஏற்று வட-கிழக்கிலே வெற்றிபெற்ற  தரப்புகளோடு புரிந்துணர்வோடு உரையாடி வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மையப்படுத்திய    அரசியற்  செயற்பாடுகளை  முன்னெடுக்க முனையவேண்டும். அதைவிடுத்து  ராயபக்ச ஆட்சியாளருக்கு மூன்றில்இரண்டு பெரும்பான்மைக்குத் தேவைப்படும் 6இருக்கைகளுக்காகப் பத்தாக வருகிறோம் என்று போய்த் தமிழினத்தை அடகுவைக்கக் கூடாது.  அப்படியொருவேளை நிகழ்ந்தால் ஐ.தே.கவுக்கு நடந்தததே அடுத்த தேர்தலில் த.தே. கூட்டமைப்புக்கும் ஏற்படும்.

  • Replies 252
  • Views 52.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Dash said:

என்னைப் பொறுத்தவரை முழு தேர்தலுமே சந்தேகத்துக்குரியது; தமிழர் ஒருவரை வெல்ல வைக்கவே இவ்வளவு முயற்சி எடுத்த கோத்தா கும்பல். சிங்கள பிரதேசங்களில் எல்லம் என்ன செய்திருக்கும்? அதை விட கண்டு கொழும்பு போன்ற இடங்களில் இவர்கள் பெறும் வெற்றிகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன; அதே போல்  எல்லா இடங்களிலும் இவர்கள் சரியாக 70 -72 % பெறுவதும் சந்தேகதுக்குரியது.

மிகவும் நேர்த்தியான தில்லுமுல்லா அல்லது சிங்களத் தேசியவாத அலையின் எழுச்சியா ?

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, முதல்வன் said:

இந்த தேர்தல் முடிவுகள் கூட்டமைப்பை விட இந்தியாவுக்குத்தான் அதிக கலக்கத்தை கொடுத்திருக்கும்.

திருடனுக்கு தேள் கொட்டினமாதிரி இருக்கும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல். பார்க்கவே நல்லா இருக்கு.

அதுக்குள்ளே முதல் ஆளாக வாழ்த்துவேற.

ஈழத்தமிழர்களாகிய நாம் தொடர்ந்தும் கிந்தியா குறித்துத் தவறாகவே கணிப்பிடுகின்றோம்.  தமிழர்கள் குறித்து உண்மையான பார்வையும் நேர்மையான அரசியல் நோக்குமிருந்தால் கிந்தியாவுக்குக் கோத்தாவை அழைத்து விருந்துகொடுத்துத் தமது நலனைமட்டும் பேசியதோடு நிற்காது குறைந்த பட்சம் மாகாணசபைகளின் அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தமாறு கூறியிருக்கலாம். அதற்கான தார்மீகக் கடப்பாடு அவர்களுக்கு உண்டு. ஏனென்றால் தமிழர் தரப்புக்கான தீர்வுதொடரபாகக் கையொப்பம் இட்டிருப்பது கிந்தியாவின் பிரதமாராகும். ஆனால்  எப்போதாவது இது குறித்துக் கடந்த பதினொரு ஆண்டுகளில்  கிந்தியா பேசியிருக்கிறதா?

1 hour ago, nochchi said:

மிகவும் நேர்த்தியான தில்லுமுல்லா அல்லது சிங்களத் தேசியவாத அலையின் எழுச்சியா ?

மிகவும் நேர்த்தியான தில்லுமுல்லு. போர் முடிந்தவுடன் ராஜபக்‌ஷவின் செல்வாக்கு உச்சக்கட்டத்தில் இருந்த போது கூட இப்படியான வெற்றியை பெற்றதில்லை.

57 minutes ago, nochchi said:

ஈழத்தமிழர்களாகிய நாம் தொடர்ந்தும் கிந்தியா குறித்துத் தவறாகவே கணிப்பிடுகின்றோம்.  தமிழர்கள் குறித்து உண்மையான பார்வையும் நேர்மையான அரசியல் நோக்குமிருந்தால் கிந்தியாவுக்குக் கோத்தாவை அழைத்து விருந்துகொடுத்துத் தமது நலனைமட்டும் பேசியதோடு நிற்காது குறைந்த பட்சம் மாகாணசபைகளின் அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தமாறு கூறியிருக்கலாம். அதற்கான தார்மீகக் கடப்பாடு அவர்களுக்கு உண்டு. ஏனென்றால் தமிழர் தரப்புக்கான தீர்வுதொடரபாகக் கையொப்பம் இட்டிருப்பது கிந்தியாவின் பிரதமாராகும். ஆனால்  எப்போதாவது இது குறித்துக் கடந்த பதினொரு ஆண்டுகளில்  கிந்தியா பேசியிருக்கிறதா?

எமது போராட்டத்தை அழித்ததே இந்தியா தான் என்பதை கூட உணராத தன்மை .

  • கருத்துக்கள உறவுகள்

கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம்

மீண்டும் ஆரம்பத்திலிருந்தா? அப்போதே எம்மைத்     தனி  நாடு எடுக்க விட்டிருந்தால் இதெல்லம் நடந்திருக்குமா? ஆனால், இப்போதுகூடப் பாருங்கள், தங்கள் இறையாண்மைக்காகத்தான் ஈழத்தமிழரைக் காரணம்காட்டி உதவ வேண்டும் என்கிறார்கள். இவர்கள் திருந்தப்போவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரஞ்சித் said:

மீண்டும் ஆரம்பத்திலிருந்தா? அப்போதே எம்மைத்     தனி  நாடு எடுக்க விட்டிருந்தால் இதெல்லம் நடந்திருக்குமா? ஆனால், இப்போதுகூடப் பாருங்கள், தங்கள் இறையாண்மைக்காகத்தான் ஈழத்தமிழரைக் காரணம்காட்டி உதவ வேண்டும் என்கிறார்கள். இவர்கள் திருந்தப்போவதில்லை. 

நாடுகளின் இறையாண்மைக்காக சிறுபான்மை சமுகங்கள்  கொடுக்கும் விலை அதிகம்.....

சிறிலங்காவின் இறையான்மையும் இந்து சமுத்திரத்தின் ஆட்சியாளர்களின் கையில்

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people

கடந்த பாராளுமன்றில் ஒரேயொரு  முறை மட்டுமே.... 
பாராளுமன்ற அவையில் பேசிய, சித்தார்த்தன். 
மீண்டும், தெரிவு செய்யப் பட்டுள்ளார். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

ஸீனத் தொடர்பு மூலம் தெரிய வந்தது. 

ஹாங் காங் ஐ பிரித்தானிய சீனாவிடம் கையளித்த போது நடந்த கொண்டாட்டமும், உணர்வும், சீன அரசாங்கத்தில் ராஜபக்சேக்களின் வெற்றி உருவாக்கி இருக்கிறது.

வெளிப்படையான, நெஞ்சை முட்டி தட்டி  கொண்டாட்டம் இல்லாவிட்டாலும், சீன அரசாங்கம் வெகு விமிரிசையாக கொண்டாடுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம்

Charity must start at home.

If State of India is serious about its sovereignty, first it must self examine as to why one family's and foreigners' interest prevailed over national interest.

State of India must charge those officials (Kerala Mafia et al.) with treason and prosecute under national security act. 

அறம் வீட்டிலேயே தொடங்க வேண்டும்.

இந்திய அரசு அதன் இறையாண்மையைப் பற்றி தீவிரமாக இருந்தால், முதலில் ஒரு குடும்பத்தின் மற்றும் வெளிநாட்டினரின் நலன் தேசிய நலனைக் காட்டிலும் ஏன் மேலோங்கியது என்பதை சுயமாக ஆராய வேண்டும்.

இந்திய அரசு அந்த அதிகாரிகளிடம் (கேரள மாஃபியா மற்றும் பலர்) அரசுத் துரோக குற்றச்சாட்டு மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும்.

இந்திய அரசு தன்னை குணப்படுத்துவதற்கு, இந்த முதலில் செய்ய வேண்டும்.

  

 

  • கருத்துக்கள உறவுகள்

உலகெங்கும் நடந்துவரும் இனப்படுகொலைகளில் மறைகரங்களாக  இருப்பது மேலாதிக்க நாடுகளே. பிரச்சினைகளைத் தமக்குச் சாதகமான நிலைவரை இழுத்துச் சென்று  தமது இலக்கை அடைவதே குறிக்கோள் . இதற்க்குச் சிறந்த எடுத்தக்காட்டாக முன்னாள் யூகோசிலாவியாவும் அதன் உடைவுமாகும். அதற்காக இலங்கைச் சிங்களம் ஒன்றும் தெரியாமல்  மற்றவர் சொல்கேட்டுச் செய்யவில்லை. தமது நிகழ்ச்சி நிரலான தனிச்சிங்கள தேசமாக்குதல்  என்ற இலக்கை அந்தந்தக் கால உலக ஓட்டம் மற்றும் நியாயங்களுக்கப்பால் எரியும் வீட்டிலே புடுங்குவதுபோல் நகர்ந்து தனது நலனை அடைந்துவருகிறது.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

மீண்டும் ஆரம்பத்திலிருந்தா? அப்போதே எம்மைத்     தனி  நாடு எடுக்க விட்டிருந்தால் இதெல்லம் நடந்திருக்குமா? ஆனால், இப்போதுகூடப் பாருங்கள், தங்கள் இறையாண்மைக்காகத்தான் ஈழத்தமிழரைக் காரணம்காட்டி உதவ வேண்டும் என்கிறார்கள். இவர்கள் திருந்தப்போவதில்லை. 

இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள் சில உள்ளன. ஆனால் "செளத் புளக்" எனப்படும் இலங்கையின் கொள்கை வகுப்பாளர்கள் கவனிப்பார்களா(?) என்பதிலேயே இருக்கிறது.          "செளத் புளக்"     தமிழின எதிர்பாளர்களான மலையாளிகளை அதிகமாகக் கொண்டதென எங்கோ படித்த ஞாபகம். 


இலங்கை தொடர்பான முடிவுகளை நடுநிலையோடு நோக்க வேண்டுமென்பதோடு தமிழருக்கான உரிமைகளையும் இணைத்துப் பார்க்கவேண்டும் என்பதையும்  ஒரு ஓய்வுநிலைப் படையதிகாரி கூறுகிறார்.  இந்தியாவின் தென்பகுதியின் பாதுகாப்பு ஈழத்தமிழரின் பாதுகாப்போடு பின்னியிருக்கிறதென்று சொல்கிறார்.அதேவேளை சிங்களத்திற்கு  எங்கே தமிழரோடு இந்திய நடுவனரசு சாய்ந்துவிட்டால்  என்ன செய்வது என்ற  அச்சமும் அதுவே. 
 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் தோல்விக்கும், தமிழ்த் தேசியத்தின் தோல்விக்கும் காரணங்களை உள்ளே தேடாமல், ஒரு பொதுக் கொள்கையில் ஒற்றுமையாக தேர்தலில் நிற்காமல், எல்லாவற்றுக்கும்  வெளியார்தான் காரணம் என்று சொல்லுவதை எப்போது நிறுத்தி வரலாற்றுத் தவறுகளை உணர்கின்றோமா அப்போதுதான் ஒரு படி அரசியலில் முன்னேறலாம்.

ஆனால் அது தமிழர்களால் முடியாதது. எதிர்காலத்தில் ஒரு சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் யாழ்ப்பாணத்தில் தெரிவு செய்யப்படும்போது வெளியாரால்தான் எல்லாப் பாதகங்களும் நடக்கின்றன என்று சொல்லிக்கொண்டே இருப்போம்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

196 உறுப்பினர்களின் விவரங்கள் அடங்கிய வர்த்தமானி வெளியானது

gaz.jpg?189db0&189db0

 

2020 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 196 உறுப்பினர்களின் பெயர் விவரங்கள் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 196 உறுப்பினர்கள் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டனர்.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் விவரங்கள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 128 ஆசனங்கள் – 17 போனஸ் ஆசனங்கள் = 145 மொத்த ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி – 47 ஆசனங்கள் – 7 போனஸ் ஆசனங்கள் = 54 மொத்த ஆசனங்கள்

இலங்கை தமிழரசு கட்சி – 9 ஆசனங்கள் – 1 போனஸ் ஆசனம் = 10 மொத்த ஆசனங்கள்

தேசிய மக்கள் சக்தி – 2 ஆசனங்கள் – 1 போனஸ் ஆசனம் = 3 மொத்த ஆசனங்கள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 2 ஆசனங்கள் – போனஸ் ஆசனம் எதுவும் இல்லை = 2 மொத்த ஆசனங்கள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1 ஆசனம் – 1 போனஸ் ஆசனம் = 2 மொத்த ஆசனங்கள்

தேசிய காங்கிரஸ் – 1 ஆசனம் – போனஸ் ஆசனம் எதுவும் இல்லை = 1 ஆசனம்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி – 1 ஆசனம் – போனஸ் ஆசனம் எதுவும் இல்லை = 1 ஆசனம்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 1 ஆசனம் – போனஸ் ஆசனம் எதுவும் இல்லை = 1 ஆசனம்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் – 1 ஆசனம் – போனஸ் ஆசனம் எதுவும் இல்லை =1 ஆசனம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1 ஆசனம் – போனஸ் ஆசனம் எதுவும் இல்லை = 1 ஆசனம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 1 ஆசனம் – போனஸ் ஆசனம் எதுவும் இல்லை = 1 ஆசனம்

முஸ்லிம் தேசிய கூட்டணி – 1 ஆசனம் – போனஸ் ஆசனம் எதுவும் இல்லை = 1 ஆசனம்

ஐக்கிய தேசிய கட்சி – ஆசனங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை – 1 போனஸ் ஆசனம் = 1 ஆசனம்

அபே ஜன பல கட்சி – ஆசனங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை – 1 போனஸ் ஆசனம் = 1 ஆசனம்

இதேவேளை, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் விவரங்கள் பின்வருமாறு,

  1. யாழ் மாவட்டம்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி
அங்கஜன் ராமநாதன் – 36,365 வாக்குகள்

இலங்கை தமிழரசு கட்சி
சிவஞானம் ஶ்ரீதரன் – 35,884 வாக்குகள்
எம்.ஏ சுமந்திரன் – 27,834 வாக்குகள்
தர்மலிங்கம் சித்தார்த்தன் – 23,840 வாக்குகள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
டக்லஸ் தேவனந்தா – 32,146 வாக்குகள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
கஜேந்திர குமார் பொன்னம்பலம் – 31,658 வாக்குகள்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி
சி.வி விக்னேஸ்வரன் – 21,554 வாக்குகள்

  1. வன்னி மாவட்டம்

ஐக்கிய மக்கள் சக்தி
ரிஷாட் பதியுதீன் – 28,203 வாக்குகள்

இலங்கை தமிழரசு கட்சி
சார்ல்ஸ் நிர்மலநாதன் – 25,668 வாக்குகள்
செல்வம் அடைகலநாதன் – 18,563 வாக்குகள்
யோகராஜலிங்கம் – 15,190 வாக்குகள்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி
காதர் மஸ்தான் – 13,454 வாக்குகள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
குலசிங்கம் திலீபன் – 3,203 வாக்குகள்

  1. திருகோணமலை மாவட்டம்

ஐக்கிய மக்கள் சக்தி
எஸ்.எம் தௌபீக் – 43, 759
இம்ரான் மஹ்ரூப் – 39,029

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
கபில நுவன் அத்துகோரல – 30, 056

இலங்கை தமிழரசு கட்சி
ஆர்.சம்பந்தன் – 21, 422

  1. மட்டக்களப்பு மாவட்டம்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள்
சிவனேசதுறை சந்திரகாந்தன் – 54,198

இலங்கை தமிழரசு கட்சி
சாணக்யா ராஹுல் – 33,332
கோவிந்தன் கருணாகரன் – 26, 382

ஶ்ரீங்கா பொதுஜன பெரமுன
சதாசிவம் வியாழேந்திரன் – 22,218

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
அஹமட் செய்னுலாப்தீன் நசீர் – 17,599

  1. திகாமடுல்ல மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
விமலவீர திஸாநாயக்க – 63,594
டீ.சி வீரசிங்க – 56,00
திலக் ராஜபக்ஷ 54,203

ஐக்கிய மக்கள் சக்தி
எம்.எச்.எம் ஹரீஸ் – 36,850
பைஸல் காசிம் -29,423
தேசிய காங்கிரஸ்
ஏ.எச்.எம் அதாவுல்ல – 35,697

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
மொஹமட் முஸரப் -18,389

  1. கண்டி மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
திலும் அமுனுகம – 171,758
மஹிந்தானந்த அளுத்கமகே – 161,471
லொஹன் ரத்வத்த – 140,917
அநுராத ஜயரத்ன – 140,798
கெஹலிய ரம்புக்வெல்ல – 110,832
வசந்த யாபா பண்டார – 108,940
குணதிலக ராஜபக்ஷ – 49,317
உதயன சாமிந்த கிரிந்திகொட – 39,904

ஐக்கிய மக்கள் சக்தி
ரவூப் ஹக்கீம் – 83,398
அப்துல் ஹலீம் – 71,063
எம். வேலுகுமார் – 57,445
லக்ஷமன் கிரியெல்ல – 52,311

  1. நுவரெலியா மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
ஜீவன் தொண்டமான் – 109,155 வாக்குகள்
சீ.பீ ரத்நாயக்க – 70,871 வாக்குகள்
எஸ்.பீ திஸாநாயக்க – 66,045 வாக்குகள்
மருதபாண்டி ரமேஸ்வரன் – 57,902 வாக்குகள்
நிமல் பியதிஸ்ஸ – 51,225 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி
பழனி திகாம்பரம் – 83,392 வாக்குகள்
வேலுசாமி இராதாகிருஸ்ணன் – 72,167 வாக்குகள்
மயில்வாகனம் உதயகுமார் – 68,119 வாக்குகள்

  1. பதுளை மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
நிமல் சிறிபால த சில்வா – 1,41,901
சுதர்ஷன தெனிபிட்டிய – 71,766
தேனுக விதானகமகே – 68,338
சாமர சம்பத் தஸநாயக்க – 66,393
டிலான் பெரேரா – 53,081
ஜானக திஸ்ஸகுட்டியாராச்சி – 50,151

ஐக்கிய மக்கள் சக்தி
வடிவேல் சுரேஸ் – 49,762
அரவிந்தகுமார் – 45,491
சமிந்த விஜேசிறி – 36,291

  1. காலி மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
ரமேஷ் பத்திரன – 205,814 வாக்குகள்
சம்பத் அத்துகோரல – 128,331 வாக்குகள்
மொஹன் சில்வா – 111,626 வாக்குகள்
சந்திம் வீரக்கொடி – 84,984 வாக்குகள்
இசுறு தொடங்கொட – 71,266வாக்குகள்
ஷான் விஜயலால் த சில்வா – 67,793 வாக்குகள்
கீதா குமாரசிங்க – 63,357வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி
கயந்த கருணாதிலக – 50,097 வாக்குகள்
மனூஷ நாணயக்கார – 47,399 வாக்குகள்

  1. மாத்தறை மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
நிபுன ரணவக்க – 131,010 வாக்குகள்
கருணாதாஸ கொடிதுவக்கு – 114,319 வாக்குகள்
டலஸ் அழகப்பெரும – 103,534 வாக்குகள்
காஞ்சன விஜசேகர – 96,033 வாக்குகள்
மஹிந்த யாப்ப அபேவர்தன – 80,595 வாக்குகள்
வீரசுமன வீரசிங்க – 77,968 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி
புத்திக பத்திரன – 44,839 வாக்குகள்

  1. ஹம்பாந்தோட்டை மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
நாமல் ராஜபக்ஷ – 166,660
டி.வி ஷானக்க – 128,805
மஹிந்த அமரவீர – 123,730
சமல் ராஜபக்ஷ – 85,330
உபுல் கலப்பத்தி – 63,369
அஜித் ராஜபக்ஷ – 47,375

ஐக்கிய மக்கள் சக்தி
திலிப் வெதாராச்சி – 25,376

  1. பொலன்னறுவ மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
மைத்திரிபால சிறிசேன – 111,137 வாக்குகள்
ரொஷான் ரணசிங்க – 90,615 வாக்குகள்
சிறிபால கம்லத் – 67,917 வாக்குகள்
அமரகீர்த்தி அதுகோரல – 45,939 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி
கிங்ஸ் நெல்சன் – 22,392 வாக்குகள்

  1. மொனராகல மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
சசீந்திர ராஜபக்ஷ – 104,729 வாக்குகள்
குமாரசிறி ரத்னாயக்க – 91,530 வாக்குகள்
விஜித பெருகொட – 68,984 வாக்குகள்
ஜகத் புஷ்பகுமார – 66,176 வாக்குகள்
கயாஷான் விஜேசிங்க – 45,384 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி
தர்மசேன விஜேசிங்க – 20,662 வாக்குகள்

  1. மாத்தளை மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
ஜனக பண்டார தென்னகோன் – 73,296 வாக்குகள்
நாலக பண்டார கோட்டோகொட – 71,404 வாக்குகள்
பிரமித பண்டார தென்னகோன் – 67,776 வாக்குகள்
ரோஹண திஸாநாயக்க – 50,368 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி
ரோஹினி குமாரி கவிரத்ன – 27,587 வாக்குகள்

  1. கேகாலை மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
கனக ஹேரத் – 128,592 வாக்குகள்
ரஞ்சித் சியாபலாபிட்டிய – 103,300 வாக்குகள்
தாரக பாலசூரிய – 96,763 வாக்குகள்
ராஜிகா விக்ரமசிங்க – 68,802 வாக்குகள்
துஷ்மன்த மித்ரபால – 58,306 வாக்குகள்
சுதத் மஞ்சுல – 45,970 வாக்குகள்
உதயகாந்த குணதிலக – 46,628 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி
கபீர் ஹசீம் – 58,716 வாக்குகள்
சுஜித் சஞ்சய – 28,082 வாக்குகள்

  1. கண்டி மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
திலும் அமுனுகம – 171,758
மஹிந்தானந்த அளுத்கமகே – 161,471
லொஹன் ரத்வத்த – 140,917
அநுராத ஜயரத்ன – 140,798
கெஹலிய ரம்புக்வெல்ல – 110,832
வசந்த யாபா பண்டார – 108,940
குணதிலக ராஜபக்ஷ – 49,317
உதயன சாமிந்த கிரிந்திகொட – 39,904

ஐக்கிய மக்கள் சக்தி
ரவூப் ஹக்கீம் – 83,398
அப்துல் ஹலீம் – 71,063
எம். வேலுகுமார் – 57,445
லக்ஷமன் கிரியெல்ல – 52,311

  1. களுத்துறை மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
விதுர விக்ரமநாயக்க – 147,958
ரோஹித அபேகுணவர்தன – 147,472
சஞ்சீவ எதிரிமான்ன – 105,973
பியல் நிஷாந்த – 103,904
ஜயந்த சமரவீர – 100,386
அனூப பஸ்குவல் – 97,777
லலித் எல்லாவல – 76,705
மஹந்த சமரசிங்க – 58,514

ஐக்கிய மக்கள் சக்தி
ராஜித சேனாரத்ன – 77,476
குமார வெல்கம – 77,083

  1. இரத்தினபுரி மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
பவித்ரா வன்னியாராச்சி – 200,977
பிரேமலால் ஜயசேகர – 104,237
ஜானக வக்கும்புர – 101,225
காமினி வலேபொட – 85,840
அகில எல்லாவல – 71,179
வாசுதேவ நாணயக்கார – 66,991
முதிதா பிரியாந்தி – 65,923
ஜோன் செனவிரத்ன – 58,514

ஐக்கிய மக்கள் சக்தி
ஹேஷான் விஜய விதானகே – 60,426
வருண பிரியந்த லியனகே – 47,494
தலதா அதுகோரல – 45,105

  1. அநுராதபுரம் மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
எஸ்.எம் சந்திரசேன – 139,368
சன்ன ஜயசுமன – 133,980
உத்திக பிரேமரத்ன – 133,550
செஹான் சேமசிங்க – 119,878
துமிந்த திஸாநாயக்க – 75,535
எச். நந்தசேன – 53,618
எஸ். குமாரசிறி – 49,030

ஐக்கிய மக்கள் சக்தி
இசாக் ரஹ்மான் – 49,290
ரோஹண பண்டார – 39,520

  1. குருணாகலை மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மஹிந்த ராஜபக்ஷ – 527,364
ஜொன்ஸ்டன் பெரேரா – 199,203
குணபால ரத்னசேகர – 141,991
தயாசிறி ஜயசேகர – 112,452
அசங்க நவரத்ன – 82,779
சமன்பிரிய ஹேரத் – 66,814
டீ.பி.ஹேரத் – 61,954
அநுர பிரியதர்ஷன யாபா – 59,696
பியரத்ன ஹேரத் – 54,351
ஷாந்த பண்டார – 52,086
சுமித் உடுகும்புர – 51,134

ஐக்கிய மக்கள் சக்தி
நளின் பண்டார – 75,631
ஜே.சி அலவதுவல – 65,956
அசோக் அபேசிங்க – 54,512
துஷார இந்துனில் – 49,364

  1. கொழும்பு மாவட்டம்
    ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சரத் வீரசேகர – 328,092
    விமல் வீரவங்ச – 267,084
    உதய பிரபாத் கம்மன்பில – 136,331
    விஜேதாஸ ராஜபக்ஷ – 120,626
    பந்துல குணவர்தன – 101,644
    பிரதீப் சமன் குமார – 91,958
    தினேஸ் சந்திர ரூபசிங்க குணவர்தன – 85,287
    மதுர விதானகெ – 70,205
    பிரேமனாத் சீ தொலவத்த – 69,055
    காமினி குலவங்ச லொகுகே – 62,543
    சுசில் பிரேமஜயந்த – 50,321
    ஜகத் குமார – 47,693

ஐக்கிய மக்கள் சக்தி
சஜித் பிரேமதாஸ – 305,744
எஸ்.எம் மரிக்கார் – 96,916
முஜிபுர் ரஹ்மான் – 87,589
ஹர்ஷ த சில்வா – 82,845
பாட்டாலி சம்பிக்க ரணவக்க – 65,574
மனோ கணேஷன் – 62,091

  1. கம்பஹா மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
நாலக்க கொடஹேவா – 325,479
பிரசன்ன ரணதுங்க – 316,544
இந்திக்க அனுருத்த – 136,297
சிசிர ஜயகொடி – 113,130
நிமல் லன்சா – 108,945
பிரதீப் வித்தான – 97,494
சுதர்ஷனி பெர்னாண்டோ – 89,329
பிரசன்ன ரணவீர – 83,203
ஹர்ஷனி குணவர்தன – 77,922
லசந்த அலகியவன்ன – 73,061
நலின் பெர்னாண்டோ – 69,800
மிலான் ஜயதிலக்க – 68,449
உபுல் மஹேந்திரா – 67,756

ஐக்கிய மக்கள் சக்தி
சரத் பொன்சேகா – 110,555
ரஞ்சன் ராமநாயக்க – 103,992
ஹர்ஷன ராஜகருணா – 73,612
காவிந்த ஜயவர்தன – 52,026

தேசிய மக்கள் சக்தி
விஜித ஹேரத் – 37,008

https://newuthayan.com/196-உறுப்பினர்களின்-விவரங்/

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களிலேயே... அதிக வாக்கு எடுத்தவர், 
ஜீவன் தொண்டமான் – நுவரெலியா மாவட்டம் (109,155 வாக்குகள்)  போலுள்ளது.

அரசியலுக்கு வந்து.. இரண்டு மாதங்களில்,  இவ்வளவு வாக்குகள்.
எல்லாம்... அப்பாவினதும், தாத்தாவினதும்... வாக்குகள். :)

6 hours ago, தமிழ் சிறி said:

தமிழர்களிலேயே... அதிக வாக்கு எடுத்தவர், 
ஜீவன் தொண்டமான் – நுவரெலியா மாவட்டம் (109,155 வாக்குகள்)  போலுள்ளது.

அரசியலுக்கு வந்து.. இரண்டு மாதங்களில்,  இவ்வளவு வாக்குகள்.
எல்லாம்... அப்பாவினதும், தாத்தாவினதும்... வாக்குகள். :)

தோட்டத் தொழிலாளர்கள் பலர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு இதான் காரணம்: உணர்ச்சி அரசியல். அந்த 1000/= சம்பளத்தை பெற்றுக் கொடுத்தாலாவது பிரியோசனப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, உடையார் said:

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
குலசிங்கம் திலீபன் – 3,203 வாக்குகள்

இதெப்படி சாத்தியப்பட்டது. இவர் மட்டுமே சில ஆயிரம் விருப்பு வாக்கோடு வெற்றி பெற்றுள்ளார். இது எங்கு பெறப்பட்ட வெற்றி..????! 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

தமிழர்களிலேயே... அதிக வாக்கு எடுத்தவர், 
ஜீவன் தொண்டமான் – நுவரெலியா மாவட்டம் (109,155 வாக்குகள்)  போலுள்ளது.

அரசியலுக்கு வந்து.. இரண்டு மாதங்களில்,  இவ்வளவு வாக்குகள்.
எல்லாம்... அப்பாவினதும், தாத்தாவினதும்... வாக்குகள். :)

உஸ்
குடும்ப சொத்து.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, உடையார் said:
  1. வன்னி மாவட்டம்

ஐக்கிய மக்கள் சக்தி
ரிஷாட் பதியுதீன் – 28,203 வாக்குகள்

இலங்கை தமிழரசு கட்சி
சார்ல்ஸ் நிர்மலநாதன் – 25,668 வாக்குகள்
செல்வம் அடைகலநாதன் – 18,563 வாக்குகள்
யோகராஜலிங்கம் – 15,190 வாக்குகள்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி
காதர் மஸ்தான் – 13,454 வாக்குகள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
குலசிங்கம் திலீபன் – 3,203 வாக்குகள்

 

18 minutes ago, nedukkalapoovan said:
16 hours ago, உடையார் said:

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
குலசிங்கம் திலீபன் – 3,203 வாக்குகள்

இதெப்படி சாத்தியப்பட்டது. இவர் மட்டுமே சில ஆயிரம் விருப்பு வாக்கோடு வெற்றி பெற்றுள்ளார். இது எங்கு பெறப்பட்ட வெற்றி..????

 

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியிலே பெறப்பட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

உஸ்
குடும்ப சொத்து.

இவரின் அரசியல் நகர்வுகள்... தந்தை வழியில் இருக்குமா? தாத்தா வழியில் இருக்குமா?
என்று சில நாட்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம். :)

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, தமிழ் சிறி said:

இவரின் அரசியல் நகர்வுகள்... தந்தை வழியில் இருக்குமா? தாத்தா வழியில் இருக்குமா?
என்று சில நாட்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம். :)

இந்தியா என்ன சொல்லுதோ அதே தான் அவரின் வழி.

  • தொடங்கியவர்
 
 
21 hours ago, தமிழ் சிறி said:

தமிழர்களிலேயே... அதிக வாக்கு எடுத்தவர், 
ஜீவன் தொண்டமான் – நுவரெலியா மாவட்டம் (109,155 வாக்குகள்)  போலுள்ளது.

அரசியலுக்கு வந்து.. இரண்டு மாதங்களில்,  இவ்வளவு வாக்குகள்.
எல்லாம்... அப்பாவினதும், தாத்தாவினதும்... வாக்குகள். :)

 

15 hours ago, Dash said:

தோட்டத் தொழிலாளர்கள் பலர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு இதான் காரணம்: உணர்ச்சி அரசியல். அந்த 1000/= சம்பளத்தை பெற்றுக் கொடுத்தாலாவது பிரியோசனப்படும்.

 

7 hours ago, ஈழப்பிரியன் said:

உஸ்
குடும்ப சொத்து.

 
 
 
 
இவரின் தந்தையின் திருவிளையாடல்களில் ஒன்று  கீழே 
மாதத்துக்கு ஒரு  தமிழ் நாட்டு நடிகைகளோடு ஜல்ஸா பண்ணுறவர்  தான் இவரின் தந்தை 
###########################################################################
மலையகத்தின் நுவரெலியா மாவட்டத்திலிருக்கும் கோயில் அர்ச்சகர் ஒருவரின் மகள். இந்த சமூகம் அழகு என வரைவிலக்கணப்படுத்திருக்கும் எல்லா இயல்புகளுக்கும் மிக அதிகமாக பொருந்தி விடும் அழகி.
 
மலையகத்தில் தலைவர் என அறியப்பட்ட இராக் கூத்தாடி ஒருவரின் வாகன அணிவகுப்பு சென்ற நாளொன்றில் அந்த பெண் வீதியில் சென்று விட்டார்.
அந்த இராக் கூத்தாடி தலைவர் தமிழ்நாட்டு சினிமா பாணியில் அந்த பெண் வேண்டும் என கேட்க, சுத்தி கூலிக்கு மாராடிக்கும் அல்லக்கை கூட்டம் செயலில் இறங்கி இருக்கின்றது.
முதலில் அர்ச்சகரின் வீட்டை இரவோடு இரவாக அடித்து நொருக்கி இருக்கின்றார்கள். காலையில் இராக் கூத்தாடி தலைவரின் அல்லைக் கைகள் அர்ச்சகருக்கு உதவுவதற்கு வந்திருக்கின்றார்கள். முன்பே ஏற்பாடு செய்ததின் படி பொலிஸ் உதவவில்லை.
அல்லக்கைகள் ஆலோசனை செய்து பிரச்சினையை இராக்கூத்தாடி தலைவரிடம் கொண்டு செல்கின்றது. உடனே அவர் பிரச்சினையை தீர்க்கின்றார். அர்சகருக்கு தொடர்ந்து பிரச்சினைகள். அனைத்தையும் இராக்கூத்தாடி தலைவர் தீர்த்து வைத்து உதவுகின்றார். கூடவே, அர்ச்சகரின் மகளுக்கு இராக்கூத்தாடியின் பிரத்தியேக செயலனியில் வேலையும் கொடுக்கின்றார்.
பின் வேலை விசயமாக இந்தியா அழைத்து சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்திருக்கின்றார்.
அதிகாரத்தின் கோரக் கரங்களினால் அல்லோலகல்லோலப் படுத்தப்பட்ட அந்த பெண் இப்போது, எதுவும் செய்ய முடியாது கட்டாயத்தின் பேரில் வயோதிபர் ஒருவரை மணந்து வாழ்ந்து வருகிறாராம்.
 
 
  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, அபராஜிதன் said:

இவரின் தந்தையின் திருவிளையாடல்களில் ஒன்று  கீழே 
மாதத்துக்கு ஒரு  தமிழ் நாட்டு நடிகைகளோடு ஜல்ஸா பண்ணுறவர்  தான் இவரின் தந்தை 

இவர் சாப்பாடு இல்லாமல்இருந்தாலும் பொண்ணுகள் இல்லாமல் இருக்கமாட்டார் என கேள்விப்பட்டுள்ளேன்.

2 hours ago, அபராஜிதன் said:
 
 

 

 

 
 
 
 
இவரின் தந்தையின் திருவிளையாடல்களில் ஒன்று  கீழே 
மாதத்துக்கு ஒரு  தமிழ் நாட்டு நடிகைகளோடு ஜல்ஸா பண்ணுறவர்  தான் இவரின் தந்தை 
###########################################################################
மலையகத்தின் நுவரெலியா மாவட்டத்திலிருக்கும் கோயில் அர்ச்சகர் ஒருவரின் மகள். இந்த சமூகம் அழகு என வரைவிலக்கணப்படுத்திருக்கும் எல்லா இயல்புகளுக்கும் மிக அதிகமாக பொருந்தி விடும் அழகி.
 
மலையகத்தில் தலைவர் என அறியப்பட்ட இராக் கூத்தாடி ஒருவரின் வாகன அணிவகுப்பு சென்ற நாளொன்றில் அந்த பெண் வீதியில் சென்று விட்டார்.
அந்த இராக் கூத்தாடி தலைவர் தமிழ்நாட்டு சினிமா பாணியில் அந்த பெண் வேண்டும் என கேட்க, சுத்தி கூலிக்கு மாராடிக்கும் அல்லக்கை கூட்டம் செயலில் இறங்கி இருக்கின்றது.
முதலில் அர்ச்சகரின் வீட்டை இரவோடு இரவாக அடித்து நொருக்கி இருக்கின்றார்கள். காலையில் இராக் கூத்தாடி தலைவரின் அல்லைக் கைகள் அர்ச்சகருக்கு உதவுவதற்கு வந்திருக்கின்றார்கள். முன்பே ஏற்பாடு செய்ததின் படி பொலிஸ் உதவவில்லை.
அல்லக்கைகள் ஆலோசனை செய்து பிரச்சினையை இராக்கூத்தாடி தலைவரிடம் கொண்டு செல்கின்றது. உடனே அவர் பிரச்சினையை தீர்க்கின்றார். அர்சகருக்கு தொடர்ந்து பிரச்சினைகள். அனைத்தையும் இராக்கூத்தாடி தலைவர் தீர்த்து வைத்து உதவுகின்றார். கூடவே, அர்ச்சகரின் மகளுக்கு இராக்கூத்தாடியின் பிரத்தியேக செயலனியில் வேலையும் கொடுக்கின்றார்.
பின் வேலை விசயமாக இந்தியா அழைத்து சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்திருக்கின்றார்.
அதிகாரத்தின் கோரக் கரங்களினால் அல்லோலகல்லோலப் படுத்தப்பட்ட அந்த பெண் இப்போது, எதுவும் செய்ய முடியாது கட்டாயத்தின் பேரில் வயோதிபர் ஒருவரை மணந்து வாழ்ந்து வருகிறாராம்.
 
 

மாற்று சக்திகளை தேர்ந்தெடுக்க பழக வேணும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.