Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்பாணத் தமிழர் தெலுங்கு வந்தேறிகளே - ஆய்வாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, tulpen said:

அப்ப மிச்சத்தையும் வேக வைச்சுட்டு வெந்த பின் வந்து வாசித்தால்   எல்லாம் புரியும். 

நீங்கள் எந்த மரத்தில இருந்து இறங்கி ஓடி  டபக்கெண்டு வாரியள்?

உங்களோட கதைக்கவில்லையே...

ஆனால், தலயிலும் பார்க்க குறைவு, நிச்சயமா உங்களிலும் பார்க்க கூட... அதால..... 

Edited by Nathamuni

  • Replies 269
  • Views 26.6k
  • Created
  • Last Reply
3 minutes ago, Nathamuni said:

நீங்கள் எந்த மரத்தில இருந்து இறங்கி ஓடி  டபக்கெண்டு வாரியள்?

உங்களோட கதைக்கவில்லையே...

கோஷானின் பதிவை வாசித்த ரென்சனில் நீங்கள் தாவி விழுந்து எழும்பி ஓடிய அதே மரத்தின் மீது தான் நான் நின்றேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

ஒருத்தருக்கும் உந்த விளக்கம் தேவையில்லையே எண்டது தானே நான் சொல்வது.... 

எனக்கு ஆங்கிலம் தான் தேவை. அது சுட்டாத, சுடாததா, பழுத்ததா, வெந்ததா, அவிச்சதா... இறங்கினதா.... எனக்கென கோதாரிக்கு... அந்த விளக்கம்....

நான் சொல்லுறது பிழையே? 

BTW: சரி, இங்கே இந்த அரபிக், சைனீஸ் தெரிஞ்சவயல் தாரு?

பிழைதான் நாதத்தார் ஆனா இதுக்கு மேல எப்படி விளங்கபடுத்துரெண்டுதான் எனக்கு தெரியேல்ல. சரி விடுங்கோ.

ஒருத்தருக்கே எல்லா மொழியும் தெரியும் என்பதல்ல. அரபிக் இல் North African, Somalian, Middle Eastern dialects உண்டு - ஆகவே நான் சொல்வது அரபிக் தெரிஞ்ச, மத்திய கிழக்கில் வேலை செய்தவர்களுக்கு புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, tulpen said:

கோஷானின் பதிவை வாசித்த ரென்சனில் நீங்கள் தாவி விழுந்து எழும்பி ஓடிய அதே மரத்தின் மீது தான் நான் நின்றேன். 

தேவை இல்லாமல் எதுக்கையா, இந்த வேலை?

நான் கோசனுடன் பேசுவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?

போய் மரத்தில் மீண்டும் ஏறிக் கொள்ளுங்கோ. நான் தவிர்க்க விரும்பும் சிலரில் நீங்கள் முக்கியமானவர். ஆகவே உங்கள் கருத்துக்கு நன்றி.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு அரசியல் மாறி விட்டது. இதனை அறிந்துதான் வைகோ எம்பி பதவிக்கு போட்டியிட்டு டெல்லி போய்விட்டார். இன்னமும் இதில நிண்டு மினக்கட வேண்டாம். 😃 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, இசைக்கலைஞன் said:

தமிழ்நாட்டு அரசியல் மாறி விட்டது. இதனை அறிந்துதான் வைகோ எம்பி பதவிக்கு போட்டியிட்டு டெல்லி போய்விட்டார். இன்னமும் இதில நிண்டு மினக்கட வேண்டாம். 😃 

வைகோ தனியா நிண்டு ஒரு போதும் ஜெயிக்கல்ல 🤣 ஆக அதை வைத்து மட்டும் மாற்றத்தை கணிக்க முடியாது. அப்படி என்றால் மாற்றம் 1993 லேயே தொடங்கி விட்டது.

ஆனால் மாற்றம் நடக்கிறது என்பது உண்மை. 

உதாரணதுக்கு ஹரி நாடார் இன் பனங்காட்டு படையின் எழுச்சி 😂

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

ஒருத்தருக்கே எல்லா மொழியும் தெரியும் என்பதல்ல. அரபிக் இல் North African, Somalian, Middle Eastern dialects உண்டு - ஆகவே நான் சொல்வது அரபிக் தெரிஞ்ச, மத்திய கிழக்கில் வேலை செய்தவர்களுக்கு புரியும்.

அப்படி போடு (ங்க) தல... 😁

சாப்பிடப்போறன்... பிறகு சந்திப்போம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

அப்படி போடு (ங்க) தல... 😁

சாப்பிடப்போறன்... பிறகு சந்திப்போம்.

சந்திப்பம். அரட்டைய திண்ணைக்கு மாத்துவம். நிர்வாகம் கடுப்பாக போகுது.🙏🏾

9 minutes ago, இசைக்கலைஞன் said:

தமிழ்நாட்டு அரசியல் மாறி விட்டது. இதனை அறிந்துதான் வைகோ எம்பி பதவிக்கு போட்டியிட்டு டெல்லி போய்விட்டார். இன்னமும் இதில நிண்டு மினக்கட வேண்டாம். 😃 

வைகோ டெல்லி போனது  இப்போது அல்ல. 1987 ல் தலைவர் பிரபாகரனை சந்தித்து அவருக்கு சகல உதவிகளையும் செய்யும் போதே அவர் டெல்லியில் ராஜ்யசபை உறுப்பினராகத்தான் இருந்தார். 

27 minutes ago, Nathamuni said:

தேவை இல்லாமல் எதுக்கையா, இந்த வேலை?

நான் கோசனுடன் பேசுவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?

போய் மரத்தில் மீண்டும் ஏறிக் கொள்ளுங்கோ. நான் தவிர்க்க விரும்பும் சிலரில் நீங்கள் முக்கியமானவர். ஆகவே உங்கள் கருத்துக்கு நன்றி.

நான் கோஷானை ப்பபாவல் ஏற்றுகிறேன் என்று நக்கல. பண்ணும் போது இந்த “தவிர்கக விரும்பும்” என்ற வார்ததை நினைவுக்கு வரவில்லையா? 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, tulpen said:

நான் கோஷானை ப்பபாவல் ஏற்றுகிறேன் என்று நக்கல. பண்ணும் போது இந்த “தவிர்கக விரும்பும்” என்ற வார்ததை நினைவுக்கு வரவில்லையா? 

உங்கள் பெயரை பாவிக்கவிலையே, எதுக்கு தொப்பியை உங்கள் தலையில் போடுகிறீர்கள். இதுதான் தவிர்ப்புக்கு காரணம். புரிதல் இல்லாமல் பொங்கி எழுவது..

10 hours ago, goshan_che said:

பதிலுக்கு நன்றி.

என்னை பொறுத்தவரை இது முற்றிலும் தவறான புரிதல்.

1. திராவிட அரசியல் தெலுங்கு சாதிகளை முன் தள்ளி தமிழ் சாதிகளை ஒடுக்கியது என்பது தவறான பார்வை. திராவிட ஆட்சியில் பிராமணருக்கு அடுத்த நிலையில் இருந்த சாதிகள் முந்தள்ள பட்டன என்பதே உண்மை. இதில் இயற்கையாகவே ஒரு காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த நாயக்க சாதி முன் தள்ளபட்டது. ஆனால் அதே போல் முக்குலத்தோரும், கொங்கு வேளாளரும் இதர போர்வோர்ட் பிளாக் சாதிகளும் முன் தள்ளபட்டனர் என்பதும் உண்மையே. அதே போல் இட ஒதுக்கீடும் கருணாநிதி தான் நினைத்த விதத்தில் செய்யவும் இல்லை. அப்படி செய்யவும் முடியாது. தகுந்த ஆய்வு அறிக்கைகளின் பிரகாரம், இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு அமையவே இட ஒதுக்கீடு இடம்பெற்றது. ஒரு இம்மியளவு பிசகினாலும் உச்சநீதிமன்றம் தலையிடும். 

 

Quote

 

உண்மையில் சீமான் ஒரு தமிழ் தேசியவாதியாக இருந்தால் இதைதான் தெலுங்கு சாதிகளிடம் செய்ய வேண்டும். எவ்வாறு கதிர்காம வேலனை சுவீகரித்து ஸ்கந்த தெய்யோ ஆக்கினார்களோ அப்படி கட்டபொம்மனை முற்றாக சுவீகரியுங்கள். 

நீங்கள் தமிழ் நாயக்கர் என்று இன்னொரு social construct ஐ நிறுவுங்கள். ஆனால் இதை மேடை போட்டு செய்யாதீர்கள். அவர்களை உங்கள் பங்குதாரர் ஆக்கி, அவர்களை 600 வருடங்களின் பின்னாவது உங்கள் மண்ணின் மைந்தர்கள் ஆக்குங்கள். முடியுமா? நிச்சயம் முடியும்.

 

 

இதை ஏன் சீமான் செய்யவேணும் ? அவர்கள் தங்களை தமிழர்கள் என்றுதானே அடயாளப்படுத்தி   அரசியல் அதிகாரங்கள்  இட ஒதுக்கீடு  நிலங்கள் சிறுவணிகம் பெரு வணிகம் என அனைத்தையும்  கைப்பற்றுகின்றார்கள். அதுதானே அடிப்படை பிரச்சனை.  ஆந்திரா கர்நாடகா மகராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தமிழர்கள் வாழ்வதுபோல் அவர்கள் தங்களை தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கர்கள் என்று கூறியிருந்தால் ஒரு பிரச்சனையும் இல்லையே!!  நாயுடு நாயக்கர் ரெட்டிகள் அனைவரையும் மட்டுமல்ல கட்டபொம்முலுவை கூட வீரபாண்டிய கட்ட பொம்மன் என்று தமிழர்கள் உள்வாங்கி சுவீகரித்து ரொம்பகாலமாகிவிட்டது. இவ்வாறு சுவீகரித்ததின் விழைவில் இருந்துதான் " வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு ஆழும் உரிமை தமிழருக்கே " என்ற நிலை உருவாகின்றது. நீங்கள் சொல்வதுபோல் புதிதாக அவர்களை தமிழ்த்தேசீயத்துள் இணைப்பதற்கு என்ன இருக்கின்றது?  இதுவரை காலமும் தமிழக அரசியல் அதிகாரம் அவர்கள் கைகளில்தான் இருக்கின்றது.திராவிடம் என்ற போர்வையில் இருக்கின்றது. நீங்கள் சுருக்கமாக சொல்ல வருவது இந்த நிலையை அப்படியே விட்டுவிடுவது. சீமானின் தமிழ்த்தேசீய எழுச்சி தேவையற்றது என்பதைத்தான். 

 

Quote

அதே போல் இட ஒதுக்கீடும் கருணாநிதி தான் நினைத்த விதத்தில் செய்யவும் இல்லை. அப்படி செய்யவும் முடியாது. தகுந்த ஆய்வு அறிக்கைகளின் பிரகாரம், இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு அமையவே இட ஒதுக்கீடு இடம்பெற்றது. ஒரு இம்மியளவு பிசகினாலும் உச்சநீதிமன்றம் தலையிடும்.

இந்திய நீதிமன்றங்கள் நீங்கள் நினைப்பதுபோல் என்றைக்கும் நடப்பதில்லை. நீதித்துறையே  பிரமணர்கள் கைகளில்தான் இருக்கின்றது. இம்மியளவு பிசகினாலும்  நீதிமன்றம் தலையிடும் என்றால் இட ஒதுக்கீட்டு போராட்டங்களில் மக்கள் இறந்திருக்கவேண்டிய அவசியம் என்ன இருக்கின்றது  பெரும்பான்மை அதிகாரம் சார்ந்த அரசு பணிகள் தெலுங்கு சாதிகளுக்கு எப்படி சாத்தியமானது போன்ற  பல கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கும். உச்ச நீதிமனறங்களோ சட்டங்களோ சற்று சரியாக நடந்திருந்தால் கூட  கருணாநிதி வகையறாக்கள் தனிப்பட்ட ரீதியில் கூட இவ்ளவு சொத்தை குவித்திருக்க முடியாது. 

-----

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, சண்டமாருதன் said:

 

இதை ஏன் சீமான் செய்யவேணும் ? அவர்கள் தங்களை தமிழர்கள் என்றுதானே அடயாளப்படுத்தி   அரசியல் அதிகாரங்கள்  இட ஒதுக்கீடு  நிலங்கள் சிறுவணிகம் பெரு வணிகம் என அனைத்தையும்  கைப்பற்றுகின்றார்கள். அதுதானே அடிப்படை பிரச்சனை.  ஆந்திரா கர்நாடகா மகராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தமிழர்கள் வாழ்வதுபோல் அவர்கள் தங்களை தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கர்கள் என்று கூறியிருந்தால் ஒரு பிரச்சனையும் இல்லையே!!  நாயுடு நாயக்கர் ரெட்டிகள் அனைவரையும் மட்டுமல்ல கட்டபொம்முலுவை கூட வீரபாண்டிய கட்ட பொம்மன் என்று தமிழர்கள் உள்வாங்கி சுவீகரித்து ரொம்பகாலமாகிவிட்டது. இவ்வாறு சுவீகரித்ததின் விழைவில் இருந்துதான் " வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு ஆழும் உரிமை தமிழருக்கே " என்ற நிலை உருவாகின்றது. நீங்கள் சொல்வதுபோல் புதிதாக அவர்களை தமிழ்த்தேசீயத்துள் இணைப்பதற்கு என்ன இருக்கின்றது?  இதுவரை காலமும் தமிழக அரசியல் அதிகாரம் அவர்கள் கைகளில்தான் இருக்கின்றது.திராவிடம் என்ற போர்வையில் இருக்கின்றது. நீங்கள் சுருக்கமாக சொல்ல வருவது இந்த நிலையை அப்படியே விட்டுவிடுவது. சீமானின் தமிழ்த்தேசீய எழுச்சி தேவையற்றது என்பதைத்தான். 

 

இந்திய நீதிமன்றங்கள் நீங்கள் நினைப்பதுபோல் என்றைக்கும் நடப்பதில்லை. நீதித்துறையே  பிரமணர்கள் கைகளில்தான் இருக்கின்றது. இம்மியளவு பிசகினாலும்  நீதிமன்றம் தலையிடும் என்றால் இட ஒதுக்கீட்டு போராட்டங்களில் மக்கள் இறந்திருக்கவேண்டிய அவசியம் என்ன இருக்கின்றது  பெரும்பான்மை அதிகாரம் சார்ந்த அரசு பணிகள் தெலுங்கு சாதிகளுக்கு எப்படி சாத்தியமானது போன்ற  பல கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கும். உச்ச நீதிமனறங்களோ சட்டங்களோ சற்று சரியாக நடந்திருந்தால் கூட  கருணாநிதி வகையறாக்கள் தனிப்பட்ட ரீதியில் கூட இவ்ளவு சொத்தை குவித்திருக்க முடியாது. 

-----

 

 

 

சண்டமாருதன்,

நம் இருவரது சம்பாசணைகளையும் அடுத்தடுத்து வாசிக்கும் போது - ஒரே விடயத்தை நாம் இருவரும் பார்க்கும் கோணங்கள் வேறு என்பது தெளிவாகிறது.

நீங்கள் இப்போ சொன்னவைக்கான பதில் என்னிடம் இருப்பினும் - அது என் பார்வையினாலான பதிலாகவே இருக்கும். அதற்கான உங்கள் பதிலும் உங்கள் பார்வையினாலே இருக்கும்.

இதில் நம்மிருவரும் அவரவர் பார்வையே சரி என்று நினைக்கும் வரை நமது வாதி பிரதிவாதங்கள் முடியப்போவதில்லை.

தவிரவும் இந்த திரி - ஒரு குறித்த வரலாற்று எடுகோளை மையப்படுத்தியது - நமது விவாதம் இதன் பின்புலத்தை அலசுகிறதே ஒழிய - விவாதப் பொருளை அல்ல.

இந்த காரணங்களுக்க்கா - இந்த சம்பாசணையை இத்துடன் முடிக்கிறேன்.

உங்கள் நேரத்துக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

குறை நினைக்க கூடாது, கோசன்... ஒரு கேள்வி...

நீங்கள் தமிழ் அறிந்த தெலுங்கரா, சிங்களவரா அல்லது தமிழரா? 

Get Cool with both Custom and Default WordPress Smilies and Emoticons

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே எனக்கு மிக அதிசயமான ஒன்று இது தான்:  பல தடவைகள் சிங்களவர் தெலுங்கர் என்ற வாதத்தை நிரூபிக்க வைக்கப் பட்ட ஆதாரங்கள் நேரெதிர் வாதமான இலங்கையில் வாழும் தமிழரும் சிங்களவரும் தெலுங்கரோடு/ஏனைய இந்தியரோடு தொடர்புடையோர் என்ற வாதத்திற்குத் தான் வலுச் சேர்த்திருக்கிறது. இதற்குப் பிறகும் இங்கே போலி ஆதாரங்களைக் கேள்வி கேட்பவன் ஏதோ தமிழ் தேசியத்தை நலிவடையச் செய்ய முயல்வோராக சிலர் கோபம் கொள்கின்றனர்.  

உண்மையில்,  ஒரு சிங்கள இனவாத வரலாற்றாய்வாளர் யாழ் களத்திற்குள் வந்து இந்த திரியைப் பார்த்தால், அவர் மிக்க மகிழ்ச்சி கொள்வார்! ஏன்? போலித் தரவுகளாலும், இணையக் குப்பையில் கிடைக்கும் காணொளிகளாலும் நாம் எங்கள் இன அடையாளத்திற்கு முட்டுக் கொடுப்பதால் அதன் நொய்மை அவருக்கு விளங்கும்! அவரும் சேர்ந்தே இந்த மோட்டு வாதத்திற்கு விசிலடித்து உருவேற்றுவார்!

இங்கே யார் ஐயா தமிழ் தேசியத்தை வேரறுப்பது? நிறுவக்கூடிய விடயங்களில் அறிவுபூர்வமாக கவனம் செலுத்துங்கள் என்போரா அல்லது இணையத்தில் குப்பனும் சுப்பனும் சொல்வதை வைத்தாவது தமிழ் தேசியத்தை முன்னிலைப் படுத்துங்கள் என்போரா? 

 தமிழ் தேசிய அடையாளத்தின் தூண்கள் எவை? இதை நான் ஏற்கனவே என் பின்லாந்துக் கதைக் கட்டுரையில் கேட்டிருக்கிறேன்! உலகின் ஏழாயிரம் மொழிகளில் ஏழே மொழிகள் தான் தொன்மையும் சிறப்பும் நிரூபணமான மொழிகள்! அந்த ஏழில் தமிழ் ஒன்று. இந்த தமிழ் தான்  எங்கள் தமிழ் தேசியத்தின் ஒரு தூண்! 

தமிழ் தேசியத்தின் இன்னொரு தூண் என்று நான் கருதுவது தமிழர்களின் அறிவுடைமை! அது புராதன காவியங்களாக இருந்தாலும் சரி முறைசார் கல்வியிலும் நுண்ணறிவிலும் அண்மைய நூற்றாண்டுகளில் நாம் காட்டிய மேன்மையாக இருந்தாலும் சரி, அது அறிவுடைமை தான்! 

இந்த பொய் ஆய்வுகளால் தமிழ் தேசியத்திற்கு நீர் வார்க்கிறேன் என்று கிளம்பியிருப்பேர் செய்வதெல்லாம் அந்த அறிவுடைமையை தங்கள் quackery ஆல் நீர்த்துப் போகச் செய்வது மட்டும் தான்! இது எப்போது உங்களுக்கெல்லாம் விளங்கப் போகுது? 

6 minutes ago, Justin said:

இங்கே எனக்கு மிக அதிசயமான ஒன்று இது தான்:  பல தடவைகள் சிங்களவர் தெலுங்கர் என்ற வாதத்தை நிரூபிக்க வைக்கப் பட்ட ஆதாரங்கள் நேரெதிர் வாதமான இலங்கையில் வாழும் தமிழரும் சிங்களவரும் தெலுங்கரோடு/ஏனைய இந்தியரோடு தொடர்புடையோர் என்ற வாதத்திற்குத் தான் வலுச் சேர்த்திருக்கிறது. இதற்குப் பிறகும் இங்கே போலி ஆதாரங்களைக் கேள்வி கேட்பவன் ஏதோ தமிழ் தேசியத்தை நலிவடையச் செய்ய முயல்வோராக சிலர் கோபம் கொள்கின்றனர்.  

உண்மையில்,  ஒரு சிங்கள இனவாத வரலாற்றாய்வாளர் யாழ் களத்திற்குள் வந்து இந்த திரியைப் பார்த்தால், அவர் மிக்க மகிழ்ச்சி கொள்வார்! ஏன்? போலித் தரவுகளாலும், இணையக் குப்பையில் கிடைக்கும் காணொளிகளாலும் நாம் எங்கள் இன அடையாளத்திற்கு முட்டுக் கொடுப்பதால் அதன் நொய்மை அவருக்கு விளங்கும்! அவரும் சேர்ந்தே இந்த மோட்டு வாதத்திற்கு விசிலடித்து உருவேற்றுவார்!

இங்கே யார் ஐயா தமிழ் தேசியத்தை வேரறுப்பது? நிறுவக்கூடிய விடயங்களில் அறிவுபூர்வமாக கவனம் செலுத்துங்கள் என்போரா அல்லது இணையத்தில் குப்பனும் சுப்பனும் சொல்வதை வைத்தாவது தமிழ் தேசியத்தை முன்னிலைப் படுத்துங்கள் என்போரா? 

 தமிழ் தேசிய அடையாளத்தின் தூண்கள் எவை? இதை நான் ஏற்கனவே என் பின்லாந்துக் கதைக் கட்டுரையில் கேட்டிருக்கிறேன்! உலகின் ஏழாயிரம் மொழிகளில் ஏழே மொழிகள் தான் தொன்மையும் சிறப்பும் நிரூபணமான மொழிகள்! அந்த ஏழில் தமிழ் ஒன்று. இந்த தமிழ் தான்  எங்கள் தமிழ் தேசியத்தின் ஒரு தூண்! 

தமிழ் தேசியத்தின் இன்னொரு தூண் என்று நான் கருதுவது தமிழர்களின் அறிவுடைமை! அது புராதன காவியங்களாக இருந்தாலும் சரி முறைசார் கல்வியிலும் நுண்ணறிவிலும் அண்மைய நூற்றாண்டுகளில் நாம் காட்டிய மேன்மையாக இருந்தாலும் சரி, அது அறிவுடைமை தான்! 

இந்த பொய் ஆய்வுகளால் தமிழ் தேசியத்திற்கு நீர் வார்க்கிறேன் என்று கிளம்பியிருப்பேர் செய்வதெல்லாம் அந்த அறிவுடைமையை தங்கள் quackery ஆல் நீர்த்துப் போகச் செய்வது மட்டும் தான்! இது எப்போது உங்களுக்கெல்லாம் விளங்கப் போகுது? 

தமிழ் தேசியத்தை, தமிழ் மக்களின் அறிவுடைமை பற்றி இங்கு எவருக்கும் அக்கறை இல்லை. தமிழ் அறிவியல் மொழியாக வேண்டும் என்றும் அடுத்த கட்டத்திற்கு தயாராக வேண்டும் என்றும் பழமைவாத பக்தி இலக்கியங்களுடன் மட்டும் தமிழ் தங்கி விடக்கூடாது என்று எடுத்துக்  கூறி இன்று நாம் பாவிக்கும் தமிழ் எழுத்துருவில் உள்ள சீர்திருத்த வடிவை 1934 ம் ஆண்டே தனது பத்திரிகையில் பாவித்து அதை ஊக்குவித்த பெரியாரையே தமிழின் எதிரி என்று நாகூசாமல் இனவெறுப்பு   பொய்கதைகளை கூறிய கூட்டம் தானே இது. 

ஈழத்தின் மூத்த அரசியல் ஆய்வாளர் திரு மு. திருநாவுக்கரசு சொன்னது போல் தமிழ் தேசியம் என்ற எண்ணக்கருவை  ஒட்டுமொத்த மக்கள் மத்தியில் அறிவுடைமை என்ற ஊடகத்தின் மூலம் கொண்டு செல்லாமல் முட்டாள் தனமாக சந்திகளின் நின்று கத்தும் அரசியல்வாதிகள் கையில்  எடுத்து ஒட்டு மொத்த தமிழ் மக்களையும்  படிப்பறிவற்ற முட்டாள்களாக நடுதெருவுக்கு கொண்டு வரும் அரசியலே நடக்கிறது. ஈழத்தில்  அது தான் நடந்த‍து.  தமிழக மக்களையும் துரத்துகிறது அந்த பிசாசு. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Nathamuni said:

குறை நினைக்க கூடாது, கோசன்... ஒரு கேள்வி...

நீங்கள் தமிழ் அறிந்த தெலுங்கரா, சிங்களவரா அல்லது தமிழரா? 

Get Cool with both Custom and Default WordPress Smilies and Emoticons

இது நாள் வரை தமிழன் என்றே நினைத்திருந்தேன். 

பண்டாரவன்னியன் நாடகம் எழுதி வீரவசனம் எல்லாம் போட்டு தோள் நிமிர்த்தி நின்றேன்.

பேசப்படும் மொழிகளில் என் மூத்த மொழி என இறுமாந்திருந்தேன்.

கீழடி என் மரபுரிமை என மார்தட்டினேன்.

ஏழரைக்கோடி (அதில எத்தனை கோடி நாய்க்கரோ 🤣) என “எண்ணி” இருந்தேன்.

5 மொழிகளின் தாய் என் மொழி என்றேன்.

இலங்கை தீவின் முதல் மொழி என் மொழி என்றேன்.

நித்திரை விட்டு முழிச்சிப்பார்த்தா ...

என்னை சுற்றி என் உறவுகள் நிற்கிறார்கள்..

செல்வநாயகம், ராஜநாயகம், கனகநாயகம், வேதநாயகம், வேல்நாயகம், பேரின்பநாயகம்...........

உங்கள் பண்டார”நாயக்க” தியரி நினைவுக்கு வந்து தொலைத்தது...

கூடவே ஒரு Encyclopedia Brittanica printout யாழ்பாண அரசு விஜய நகரத்துக்கு திறை செலுத்தியது ......

குழம்பி நிற்கிறேன் நான் தமிழனா, தெலுங்கனா....

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இது நாள் வரை தமிழன் என்றே நினைத்திருந்தேன். 

பண்டாரவன்னியன் நாடகம் எழுதி வீரவசனம் எல்லாம் போட்டு தோள் நிமிர்த்தி நின்றேன்.

பேசப்படும் மொழிகளில் என் மூத்த மொழி என இறுமாந்திருந்தேன்.

கீழடி என் மரபுரிமை என மார்தட்டினேன்.

ஏழரைக்கோடி (அதில எத்தனை கோடி நாய்க்கரோ 🤣) என “எண்ணி” இருந்தேன்.

5 மொழிகளின் தாய் என் மொழி என்றேன்.

இலங்கை தீவின் முதல் மொழி என் மொழி என்றேன்.

நித்திரை விட்டு முழிச்சிப்பார்த்தா ...

என்னை சுற்றி என் உறவுகள் நிற்கிறார்கள்..

செல்வநாயகம், ராஜநாயகம், கனகநாயகம், வேதநாயகம், வேல்நாயகம், பேரின்பநாயகம்...........

உங்கள் பண்டார”நாயக்க” தியரி நினைவுக்கு வந்து தொலைத்தது...

கூடவே ஒரு Encyclopedia Brittanica printout யாழ்பாண அரசு விஜய நகரத்துக்கு திறை செலுத்தியது ......

குழம்பி நிற்கிறேன் நான் தமிழனா, தெலுங்கனா....

சட்டுபுட்டெண்டு ஒரு முடிவுக்கு வாருங்கோ...

இனொரு விசயம் சொல்லவேணும்...  😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Justin said:

இங்கே எனக்கு மிக அதிசயமான ஒன்று இது தான்:  பல தடவைகள் சிங்களவர் தெலுங்கர் என்ற வாதத்தை நிரூபிக்க வைக்கப் பட்ட ஆதாரங்கள் நேரெதிர் வாதமான இலங்கையில் வாழும் தமிழரும் சிங்களவரும் தெலுங்கரோடு/ஏனைய இந்தியரோடு தொடர்புடையோர் என்ற வாதத்திற்குத் தான் வலுச் சேர்த்திருக்கிறது. இதற்குப் பிறகும் இங்கே போலி ஆதாரங்களைக் கேள்வி கேட்பவன் ஏதோ தமிழ் தேசியத்தை நலிவடையச் செய்ய முயல்வோராக சிலர் கோபம் கொள்கின்றனர்.  

உண்மையில்,  ஒரு சிங்கள இனவாத வரலாற்றாய்வாளர் யாழ் களத்திற்குள் வந்து இந்த திரியைப் பார்த்தால், அவர் மிக்க மகிழ்ச்சி கொள்வார்! ஏன்? போலித் தரவுகளாலும், இணையக் குப்பையில் கிடைக்கும் காணொளிகளாலும் நாம் எங்கள் இன அடையாளத்திற்கு முட்டுக் கொடுப்பதால் அதன் நொய்மை அவருக்கு விளங்கும்! அவரும் சேர்ந்தே இந்த மோட்டு வாதத்திற்கு விசிலடித்து உருவேற்றுவார்!

இங்கே யார் ஐயா தமிழ் தேசியத்தை வேரறுப்பது? நிறுவக்கூடிய விடயங்களில் அறிவுபூர்வமாக கவனம் செலுத்துங்கள் என்போரா அல்லது இணையத்தில் குப்பனும் சுப்பனும் சொல்வதை வைத்தாவது தமிழ் தேசியத்தை முன்னிலைப் படுத்துங்கள் என்போரா? 

 தமிழ் தேசிய அடையாளத்தின் தூண்கள் எவை? இதை நான் ஏற்கனவே என் பின்லாந்துக் கதைக் கட்டுரையில் கேட்டிருக்கிறேன்! உலகின் ஏழாயிரம் மொழிகளில் ஏழே மொழிகள் தான் தொன்மையும் சிறப்பும் நிரூபணமான மொழிகள்! அந்த ஏழில் தமிழ் ஒன்று. இந்த தமிழ் தான்  எங்கள் தமிழ் தேசியத்தின் ஒரு தூண்! 

தமிழ் தேசியத்தின் இன்னொரு தூண் என்று நான் கருதுவது தமிழர்களின் அறிவுடைமை! அது புராதன காவியங்களாக இருந்தாலும் சரி முறைசார் கல்வியிலும் நுண்ணறிவிலும் அண்மைய நூற்றாண்டுகளில் நாம் காட்டிய மேன்மையாக இருந்தாலும் சரி, அது அறிவுடைமை தான்! 

இந்த பொய் ஆய்வுகளால் தமிழ் தேசியத்திற்கு நீர் வார்க்கிறேன் என்று கிளம்பியிருப்பேர் செய்வதெல்லாம் அந்த அறிவுடைமையை தங்கள் quackery ஆல் நீர்த்துப் போகச் செய்வது மட்டும் தான்! இது எப்போது உங்களுக்கெல்லாம் விளங்கப் போகுது? 

 

11 minutes ago, tulpen said:

தமிழ் தேசியத்தை, தமிழ் மக்களின் அறிவுடைமை பற்றி இங்கு எவருக்கும் அக்கறை இல்லை. தமிழ் அறிவியல் மொழியாக வேண்டும் என்றும் அடுத்த கட்டத்திற்கு தயாராக வேண்டும் என்றும் பழமைவாத பக்தி இலக்கியங்களுடன் மட்டும் தமிழ் தங்கி விடக்கூடாது என்று எடுத்துக்  கூறி இன்று நாம் பாவிக்கும் தமிழ் எழுத்துருவில் உள்ள சீர்திருத்த வடிவை 1934 ம் ஆண்டே தனது பத்திரிகையில் பாவித்து அதை ஊக்குவித்த பெரியாரையே தமிழின் எதிரி என்று நாகூசாமல் இனவெறுப்பு   பொய்கதைகளை கூறிய கூட்டம் தானே இது. 

ஈழத்தின் மூத்த அரசியல் ஆய்வாளர் திரு மு. திருநாவுக்கரசு சொன்னது போல் தமிழ் தேசியம் என்ற எண்ணக்கருவை  ஒட்டுமொத்த மக்கள் மத்தியில் அறிவுடைமை என்ற ஊடகத்தின் மூலம் கொண்டு செல்லாமல் முட்டாள் தனமாக சந்திகளின் நின்று கத்தும் அரசியல்வாதிகள் கையில்  எடுத்து ஒட்டு மொத்த தமிழ் மக்களையும்  படிப்பறிவற்ற முட்டாள்களாக நடுதெருவுக்கு கொண்டு வரும் அரசியலே நடக்கிறது. ஈழத்தில்  அது தான் நடந்த‍து.  தமிழக மக்களையும் துரத்துகிறது அந்த பிசாசு. 

ஜஸ்டின் அண்ணா, துல்பென்,

கருத்துகளுக்கு நன்றி. இந்த தமிழ் தேசியத்தின் தூண்கள் (Pillars of Tamil Nationalism) என்ற பதம் என்னை மிகவும் ஈர்கிறது.

இஸ்லாத்தில் இப்படி 5 தூண்கள் உண்டு. இன்றளவும் இஸ்லாம் முகமது சொன்னதை விட்டு விலகாமல் இருக்க இவை பெரிதும் உதவுகிறன.

இப்படி தூண்களை தமிழ் தேசியத்துக்கும் அமைத்து, எது தமிழ் தேசியம் என்பதை கொள்கை அளவிலாவது வரையறுத்தால் - தமிழ் தேசியத்தை corrupt பண்ணுவது கடினமாகும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் ஊரில இரன்டு பாலத்தை கட்டுங்கோ புண்ணியமாய் போகும்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

இது நாள் வரை தமிழன் என்றே நினைத்திருந்தேன். 

பண்டாரவன்னியன் நாடகம் எழுதி வீரவசனம் எல்லாம் போட்டு தோள் நிமிர்த்தி நின்றேன்.

பேசப்படும் மொழிகளில் என் மூத்த மொழி என இறுமாந்திருந்தேன்.

கீழடி என் மரபுரிமை என மார்தட்டினேன்.

ஏழரைக்கோடி (அதில எத்தனை கோடி நாய்க்கரோ 🤣) என “எண்ணி” இருந்தேன்.

5 மொழிகளின் தாய் என் மொழி என்றேன்.

இலங்கை தீவின் முதல் மொழி என் மொழி என்றேன்.

நித்திரை விட்டு முழிச்சிப்பார்த்தா ...

என்னை சுற்றி என் உறவுகள் நிற்கிறார்கள்..

செல்வநாயகம், ராஜநாயகம், கனகநாயகம், வேதநாயகம், வேல்நாயகம், பேரின்பநாயகம்...........

உங்கள் பண்டார”நாயக்க” தியரி நினைவுக்கு வந்து தொலைத்தது...

கூடவே ஒரு Encyclopedia Brittanica printout யாழ்பாண அரசு விஜய நகரத்துக்கு திறை செலுத்தியது ......

குழம்பி நிற்கிறேன் நான் தமிழனா, தெலுங்கனா....

இவ்வளவும் வந்து தொலைக்கும் போது முள்ளிவாய்க்கால் நினைவுக்கு வராதது வேதனையாக உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

இவ்வளவும் வந்து தொலைக்கும் போது முள்ளிவாய்க்கால் நினைவுக்கு வராதது வேதனையாக உள்ளது.

சில ரணங்கள் மறக்கவே முடியாதவை ஆகவே நினைவுக்கு வர தேவையும் இல்லாதவை. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

பெருமாள், ஐரோப்பிய வரலாறு போல்  அல்லாது எமது இலங்கை இந்திய வரலாறுகள் தெளிவானவை அல்ல. வரலாற்றை பேணி பாதுகாக்கும் தன்மை அற்ற முன்னோர்கள் வரலாற்று சரியாக குறித்து வைக்காத‍தால்  எமது வரலாறுகளில் புனைவுகள் இருப்பது உண்மையே. அதனால் தான் சிலர் தமது அரசியல் என்ற திரைப்படத்திற்கு வில்லன் தேவை என்பதால் புதிய புதிய வில்லன்களை தயார் செய்ய கட்டுகதைகளை உருவாக்கி புதிய வில்லன்களை உருவாக்கி அதை  வரலாறு என்று நடுச்சந்தியில் நின்று உளர அதை பிடித்துகொண்டு சில விசிலடிச்சான் குஞ்சுகள் சமூக வலை தளங்களில் பரப்ப வரலாறு எது புனைவு எது என்று வித்தியாசம் தெரியாத நிலை எமக்கு.  ஆனால் கோஷான் பலவற்றை வாசித்து சரியான தகவல்களை தர முயற்சிக்கிறார் என்றே எனக்கு படுகிறது. 

tulpen நான் கேட்பது இவரின் ஆய்வுக்கு எடுத்த மூல  புத்தகங்கள் எவை அவை யாரால் எழுதப்பட்டது ?

போன்ற விபரங்களை தான்  பலவற்றை வாசித்து இருக்கலாம் ஆனால் அவை திரிபுகளாகவோ புனைக்கதைகளாகவோ அதுவும் இந்த புளுகு முகநூல் காலத்தில் ஒரு சில நிமிடங்களில் உலகம் முழுக்க பரவி விடும் ஆபத்து உள்ளது .

உலகில் நீதி  நியாயம் தர்மம் உண்மை விசுவாசம் நன்றிக்கடன்  என்பதெல்லாம் நாடுகளுக்கு கிடையாது அவற்றை அடிப்படையாக கொண்டு நாடுகள் இயங்குகின்றன என்று எண்ணுவது கூட அபத்தமானது. ஐரோப்பிய வரலாறுகள் பலவற்றில் மிகைபடுத்தப்பட்ட புனைவுகள் உண்டு நீங்கள்  இங்கு இணைக்கும் உலகயுத்தம் சம்பந்தப்பட்ட திரி ஒன்றில் உண்மைக்கு மாறான திப்பிலியாட்டம் உண்டு அவை போரில் வென்றவர்கள் சொல்லிய கதைகளையே சொல்லும் உண்மைகளை கொஞ்சமே தான் தொட்டு செல்வார்கள் உலகில் போரில் தோற்பவர்களுக்கு  என்ற கதைகள் உண்டு  அவை இதுவரை மாற்றமில்லாத ஒன்று அது நாங்கள் தோற்கும் போது  மட்டும் அப்படி நடக்காது என்று எண்ணுவது சுத்த முட்டாள்தனமானது. விழுவது மனிதனுக்கு ஒன்றும் புதுசு அல்ல 2009 மே 18ல் விழுந்தவர்கள்  இன்னும் எழும்பவில்லை அன்கொன்றும் இன்கொன்றுமாய் எழும்பி எமக்காக சத்தமிடுபவர்களையும் திரும்பவும் விழுந்து போ என்று சபிக்கிறோம் தூற்றுகிறோம் இதே வேலையைத்தான் பிரபாகரனுக்கும் ஓட்டுக்குழு  எனும் பெயரில் செய்தார்கள் சீமான் தமிழுக்காகத்தானே கத்துகிறான்  உங்க வீட்டில் அல்லது எங்கவீட்டிலோ சீமான் உண்டியலுடன் வந்து நிக்கவில்லை  விட்டு விடுங்கள் தமிழதேசிய முன்னனி  இல்லை சைக்கிள்.

சீமான் பிழைவிட்டால் அவர் இடத்தில் மற்ற ஒருவர் காலம் வேகமானது முதலில் எழுந்துகொள்வம் .

25 minutes ago, பெருமாள் said:

tulpen நான் கேட்பது இவரின் ஆய்வுக்கு எடுத்த மூல  புத்தகங்கள் எவை அவை யாரால் எழுதப்பட்டது ?

போன்ற விபரங்களை தான்  பலவற்றை வாசித்து இருக்கலாம் ஆனால் அவை திரிபுகளாகவோ புனைக்கதைகளாகவோ அதுவும் இந்த புளுகு முகநூல் காலத்தில் ஒரு சில நிமிடங்களில் உலகம் முழுக்க பரவி விடும் ஆபத்து உள்ளது .

உலகில் நீதி  நியாயம் தர்மம் உண்மை விசுவாசம் நன்றிக்கடன்  என்பதெல்லாம் நாடுகளுக்கு கிடையாது அவற்றை அடிப்படையாக கொண்டு நாடுகள் இயங்குகின்றன என்று எண்ணுவது கூட அபத்தமானது. ஐரோப்பிய வரலாறுகள் பலவற்றில் மிகைபடுத்தப்பட்ட புனைவுகள் உண்டு நீங்கள்  இங்கு இணைக்கும் உலகயுத்தம் சம்பந்தப்பட்ட திரி ஒன்றில் உண்மைக்கு மாறான திப்பிலியாட்டம் உண்டு அவை போரில் வென்றவர்கள் சொல்லிய கதைகளையே சொல்லும் உண்மைகளை கொஞ்சமே தான் தொட்டு செல்வார்கள் உலகில் போரில் தோற்பவர்களுக்கு  என்ற கதைகள் உண்டு  அவை இதுவரை மாற்றமில்லாத ஒன்று அது நாங்கள் தோற்கும் போது  மட்டும் அப்படி நடக்காது என்று எண்ணுவது சுத்த முட்டாள்தனமானது. விழுவது மனிதனுக்கு ஒன்றும் புதுசு அல்ல 2009 மே 18ல் விழுந்தவர்கள்  இன்னும் எழும்பவில்லை அன்கொன்றும் இன்கொன்றுமாய் எழும்பி எமக்காக சத்தமிடுபவர்களையும் திரும்பவும் விழுந்து போ என்று சபிக்கிறோம் தூற்றுகிறோம் இதே வேலையைத்தான் பிரபாகரனுக்கும் ஓட்டுக்குழு  எனும் பெயரில் செய்தார்கள் சீமான் தமிழுக்காகத்தானே கத்துகிறான்  உங்க வீட்டில் அல்லது எங்கவீட்டிலோ சீமான் உண்டியலுடன் வந்து நிக்கவில்லை  விட்டு விடுங்கள் தமிழதேசிய முன்னனி  இல்லை சைக்கிள்.

சீமான் பிழைவிட்டால் அவர் இடத்தில் மற்ற ஒருவர் காலம் வேகமானது முதலில் எழுந்துகொள்வம் .

பெருமாள் எவரது சாபத்தாலும் ஈழத்தில் தமிழ் தேசியம் தோற்கவில்லை.  அதை நடத்தியவர்களின் சுயநலம், ஒற்றுமையின்மை, ஜதாரத்த‍த்திற்கு மாறான சிந்தனை போன்ற இன்னாரென்ன தவறகளாலேயே வீழ்ந்தோம். (நான் புலிகளை மட்டும் குறிப்பிடவில்லை அதற்கு முன்பும் பின்பும் அரசியல் செய்பவர்களையும் சேர்த்து தான் கூறுகிறேன்) மீண்டும் அதே தவறை செய்து சுயநலவாதிகளை நம்ப வேண்டிய அவசியம் எமக்கு இல்லை என்ற தாயக மக்களின் சிந்தனை  மாற்றமே  கடந்த தேர்தலில் காட்டியது. 

நடந்த தவறுகளை களைந்து புதிய தலைமுறை தமது அறிவாற்றலால் தமிழ் தேசியத்தை ஈழத்தில் ஒளிரவைக்க முயலவேண்டுமே தவிர முட்டாள்தனமாக  எமது இழப்பை காட்டி  அங்கும் இனவெறுப்பை விதைத்து இலாபமடைய நினைக்கும் மாய மான் களை நம்பி ஏமாற வேண்டிய எந்த அவசியமும் ஈழத்தமிழ் மக்களுக்கு கிடையாது.  அதில் தாயக மக்கள் உறுதியாகவே உள்ளனர்.

அந்த மாயமான்களை தமிழக மக்கள் கணக்கெடுக்கவே மாட்டார்கள் என்பது நிம்மதி. 

Edited by tulpen

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, tulpen said:

பெருமாள் எவரது சாபத்தாலும் ஈழத்தில் தமிழ் தேசியம் தோற்கவில்லை.  அதை நடத்தியவர்களின் சுயநலம், ஒற்றுமையின்மை, ஜதாரத்த‍த்திற்கு மாறான சிந்தனை போன்ற இன்னாரென்ன தவறகளாலேயே வீழ்ந்தோம். (நான் புலிகளை மட்டும் குறிப்பிடவில்லை அதற்கு முன்பும் பின்பும் அரசியல் செய்பவர்களையும் சேர்த்து தான் கூறுகிறேன்) மீண்டும் அதே தவறை செய்து சுயநலவாதிகளை நம்ப வேண்டிய அவசியம் எமக்கு இல்லை என்ற தாயக மக்களின் சிந்தனை  மாற்றமே  கடந்த தேர்தலில் காட்டியது. 

நடந்த தவறுகளை களைந்து புதிய தலைமுறை தமது அறிவாற்றலால் தமிழ் தேசியத்தை ஈழத்தில் ஒளிரவைக்க முயலவேண்டுமே தவிர முட்டாள்தனமாக  எமது இழப்பை காட்டி  அங்கும் இனவெறுப்பை விதைத்து இலாபமடைய நினைக்கும் மாய மான் களை நம்பி ஏமாற வேண்டிய எந்த அவசியமும் ஈழத்தமிழ் மக்களுக்கு கிடையாது.  அதில் தாயக மக்கள் உறுதியாகவே உள்ளனர்.

அந்த மாயமான்களை தமிழக மக்கள் கணக்கெடுக்கவே மாட்டார்கள் என்பது நிம்மதி. 

துல்பென்,

பெருமாளின் பிரச்சனை வேற. நான் ஏற்கனவே கூறிவிட்டேன்.

இங்கே உண்மையாக என்னிடம் உரையாடியவர்களுக்கு நான் என் நேரத்தை செலவழித்து முடிந்தளவு விளக்கம் கொடுத்துள்ளேன். ஆனா இது போன்றவ “என்ன கைய பிடிச்சி இழுத்தியா” கேள்விகளுக்கு நான் பதிலளிக்கப் போவதில்லை.

ஆகவே பெருமாளிடம் “டீல்” பண்ணுவதை உங்களிடமே விட்டு விடுகிறேன். 

பெஸ்ட் ஓவ் லக் 😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.