Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரை நிறுத்த பிரபாகரன் இணங்கியிருக்க வேண்டும் - எரிக் சொல்ஹெய்ம்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, MEERA said:

கொடுத்த வேலையே புலிகளை முடிக்க வேண்டும் என்பது. திறம்பட செய்து முடித்தார்.

புலிகளுக்கும் அது தெரிந்திருந்தது..

புலிகள் விட்டில் பூச்சிகளா? முடியப்போகின்றோம் என்பது முடிவை மாற்றமுடியாது என்ற் நிலையில்தான் தெரியவந்தது. முன்னரே தெரிந்துமா வான்புலிகளை மிகுந்த செலவு செய்து தயார்படுத்தினார்கள்???

 

  • Replies 69
  • Views 6.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

பாவம் பாலா வரப்போகும் ஆபத்தை அறிந்து முடிந்தளவு முயற்சித்துள்ளார். என் மனதில் இன்னும் ஒரு அடி மேலே போகிறார்🙏🏾

எல்லரையும் விட அவர்தான் தீர்க்கதரிசி. என்ன அதை சொல்லுறதுக்கு யாரும் இல்லை.

அந்தாள் சாகபோகும் போதும் புலிகளை காப்பாற்ற தன்னாலான எல்லாத்தையும் செய்தார்.

எரிக்கரை கூட கூப்பிட்டு பேசினார், என்ன எரிக்கர் தான் கொஞ்சம் கூட வாயை நல்லா ஆவண்டு திறக்கவேணும்.😂

Edited by முதல்வன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
37 minutes ago, goshan_che said:

6. நீங்கள் பக்கத்து வீட்டுகாரரை கொலை செய்யவில்லை. கொலைசெய்தீர்கள் என குற்றசாட்டு எழுந்து, உங்களை போலீஸ் கேள்வி கேட்டால், நீங்கள் ஆணித்தரமாக மறுபீர்களா? அல்லது அது ஒரு துன்பியல் சம்பவம். பக்கத்து வீட்டோடு தொடர்ந்து நல்லுறவை நான் விரும்புகிறேன் என்பீர்களா?

 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

உந்த நடிப்புக்கு சிவாஜிகணேசனே தோத்துப்போவார்.

 

அண்ணையாணை எனக்கு உந்த விசயங்கள் தெரியாது. பாலா அண்ணையை விலத்தி இருக்க சொன்னதும், அவர் உள்ளடி அரசியலுக்கு பலியானார் என்பது மட்டும்தான் எனக்குத் தெரியும்.

உந்த பேட்டிய நான் காணாமல் விட சான்ஸ் இல்லை. மறந்திட்டன்.

இப்போவாவது உங்கள் சந்தேகம் தீர்ந்ததா? அல்லது பாலா அண்ணை சும்மா தமாசுக்கு மன்னிப்பு கேட்டார் எண்டு சொல்ல போறியளா?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

 

அப்ப பாலசிங்கம் சொன்னத நம்பமாட்டியள். ஒரு இந்திய அதிகாரி சொல்றத நம்புவீங்கள்?

இவர் கூட புலிகள் கொண்டார்கள் எண்டுதானே சொல்றார் ஆனால் அவர்கள் மட்டுமே இதில் ஈடுபட்டார்கள் என்கிறார்.

இவர் ஏன் வேறு யாருக்கும் தொடர்பில்லை என்கிறார்?

ஏன்னா இருக்குன்னு சொன்னா

1. அவங்கள ஏன் பிடிக்கலைன்னு கேள்வி வரும்

2. அல்லது இதில் சம்பந்தபட்ட ஏனையோரை காப்பாற்றும் திட்டமாய் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, கிருபன் said:

புலிகள் விட்டில் பூச்சிகளா? முடியப்போகின்றோம் என்பது முடிவை மாற்றமுடியாது என்ற் நிலையில்தான் தெரியவந்தது. முன்னரே தெரிந்துமா வான்புலிகளை மிகுந்த செலவு செய்து தயார்படுத்தினார்கள்???

 

உண்மையைக் கூறுங்கள் கிருபன்.

2005 பேச்சுவார்த்தை தொடங்கும்போது இத்துடன் எல்லாமே முடிவுக்கு வந்தாயிற்று என்று நீங்கள் உணரவில்லையா ? ☹️

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுவார்த்தை 2005 இல் தான் தொடங்கிச்சா.?? கடவுளே நான் என்ன செய்ய.

கப்டன் நீங்களுமா ??

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, முதல்வன் said:

பேச்சுவார்த்தை 2005 இல் தான் தொடங்கிச்சா.?? கடவுளே நான் என்ன செய்ய.

கப்டன் நீங்களுமா ??

அவர் போரை சொல்கிறார். 

ஆனால் 2005 என்ன 2008 வரைகூட “எல்லாம் முடியும்” என்று நான் எதிர் பார்க்கவில்லை. குறைந்த பட்சம் ஒரு 87-90 நிலையாவது இருக்கும் என்றே நம்பினேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, Eppothum Thamizhan said:

சுப தமிழ்ச்செல்வன் 

ஆளுக்கு  ஆள் குற்றம் சொல்வதை விடுத்து மேற்கொண்டு ஆக வேண்டியதை செய்வதே மேல்...

  • கருத்துக்கள உறவுகள்

ஒராள் துரோகி பட்ஜோட இண்டைக்கு கிராஜுவேற் ஆகிற வாய்ப்பு இருக்கெண்டு வானிலை அவதான நிலையம் சொல்லுது! 😇

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

ஒராள் துரோகி பட்ஜோட இண்டைக்கு கிராஜுவேற் ஆகிற வாய்ப்பு இருக்கெண்டு வானிலை அவதான நிலையம் சொல்லுது! 😇

வேற ஏதாவது hint தாங்கோவன். முதல் எழுத்தையாவது சொல்லுங்கோவன். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Eppothum Thamizhan said:

சுப தமிழ்ச்செல்வன் 

அவ‌ர் என்ன‌ ந‌ண்பா செய்தார் , த‌லைவ‌ர் சொல்வ‌த‌ தானே செய்தார் , த‌மிழ் செல்வ‌ன் அண்ணாவை குறை சொல்ல‌ ஏலாது , அவ‌ர் த‌லைவ‌ரின் சொல்லுக்கு க‌ட்டுப் ப‌ட்டு ந‌ட‌ப்ப‌வ‌ர் , த‌மிழ் செல்வ‌ன் அண்ணாவால் த‌னித்து ஒரு முடிவும் எடுக்க‌ முடியாது , ப‌ழ‌சை விடு ந‌ண்பா , அன்ர‌ன் பால‌சிங்க‌ம் ஜ‌யா முன் எடுக்கும் அர‌சிய‌ல் ச‌ரி இல்லை என்று வ‌ன்னி த‌ல‌மை முனு முனுத்த‌வை , இது க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் அவ‌ர்க‌ளின் ஊட‌க‌ங்க‌ளிலே வ‌ந்த‌து , அன்ர‌ன் பால‌சிங்க‌ம் ஜ‌யா சூழ் நிலைக்கு ஏற்ற‌ ப‌டி பேச்சு வார்த்தையை ந‌ல்ல‌ மாதிரி கொண்டு ந‌ட‌த்தின‌வ‌ர் , 

சில‌ ச‌மைய‌ம் எல்லாத்தையும் யோசிச்சு பார்த்தா பையித்திய‌ம் பிடிக்கும் , 

9 minutes ago, முதல்வன் said:

வேற ஏதாவது hint தாங்கோவன். முதல் எழுத்தையாவது சொல்லுங்கோவன். 🤣

ஜ‌ஸ்ரினுக்கு குழ‌ப்ப‌த்த‌ உண்டு ப‌ண்ணுவ‌தில் ஏதோ சுக‌ம் , நீங்க‌ள் க‌ட‌ந்து செல்லுங்கோ ந‌ண்பா 😂😁😀

22 minutes ago, குமாரசாமி said:

ஆளுக்கு  ஆள் குற்றம் சொல்வதை விடுத்து மேற்கொண்டு ஆக வேண்டியதை செய்வதே மேல்...

ஓம் தாத்தா , 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

புலிகள் விட்டில் பூச்சிகளா? முடியப்போகின்றோம் என்பது முடிவை மாற்றமுடியாது என்ற் நிலையில்தான் தெரியவந்தது. முன்னரே தெரிந்துமா வான்புலிகளை மிகுந்த செலவு செய்து தயார்படுத்தினார்கள்???

 

ஜி உங்களுக்கு பல விடயங்கள் தெரியும் ஆனாலும் தெரியாத மாதிரி நடிக்கிறீங்கள்.

ஆகாய ஆயுத வரத்திற்காகவே முயற்சி செய்தார்கள். அத்துடன் ஆனையிறவு தீச்சுவாலை நடவடிக்கையுடன் ஆயுத இருப்பும் குறைந்து விட்டது. ஓர் கட்டத்தில் அதாவது இறுதிக்கட்ட போர் ஆரம்பிக்க முன்னரே தலைமை உணர்ந்து விட்டது இனி ஆயுதங்கள் தம்மை வந்தடையாது என்று.

  • கருத்துக்கள உறவுகள்

வெதர் மேன் ஜஸ்டீன் கணிப்பு வழமையா பிழைக்காது?🤔

2 minutes ago, MEERA said:

ஜி உங்களுக்கு பல விடயங்கள் தெரியும் ஆனாலும் தெரியாத மாதிரி நடிக்கிறீங்கள்.

ஆகாய ஆயுத வரத்திற்காகவே முயற்சி செய்தார்கள். அத்துடன் ஆனையிறவு தீச்சுவாலை நடவடிக்கையுடன் ஆயுத இருப்பும் குறைந்து விட்டது. ஓர் கட்டத்தில் அதாவது இறுதிக்கட்ட போர் ஆரம்பிக்க முன்னரே தலைமை உணர்ந்து விட்டது இனி ஆயுதங்கள் தம்மை வந்தடையாது என்று.

இது உங்களுக்கும் 2005 மாவிலாறு நேரமே தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் TS அரசியல் துறைக்குள் வந்த பின்னர் தமிழ் மக்களுக்கான போராட்டம் தலைவருக்கான போராட்டமாக மாற்றப்பட்டது. அரசியல் துறையினரின் பிரச்சாரங்கள் கூட்டங்கள் எல்லாம் தலைவருக்கான போராட்டமாக மாறியது. போராளிகள் மத்தியில் நடைபெற்ற உரையாடல் கூட  அண்ணை கேட்கிறார் அண்ணை சொல்கிறார் என்று மாற்றம் பெற்றது.

8 minutes ago, goshan_che said:

இது உங்களுக்கும் 2005 மாவிலாறு நேரமே தெரியுமா?

மாவிலாறு பிரச்சனை தொடங்கியது 2006 இல்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

மேலும் TS அரசியல் துறைக்குள் வந்த பின்னர் தமிழ் மக்களுக்கான போராட்டம் தலைவருக்கான போராட்டமாக மாற்றப்பட்டது. அரசியல் துறையினரின் பிரச்சாரங்கள் கூட்டங்கள் எல்லாம் தலைவருக்கான போராட்டமாக மாறியது. போராளிகள் மத்தியில் நடைபெற்ற உரையாடல் கூட  அண்ணை கேட்கிறார் அண்ணை சொல்கிறார் என்று மாற்றம் பெற்றது.

மாவிலாறு பிரச்சனை தொடங்கியது 2006 இல்.

சரிதான். 2006 லே உங்களுக்கு தெரிந்து விட்டதா இதுதான் நிலமை என்று?

ஏன் கேட்கிறேன் என்றும் சொல்லி விடுகிறேன். 

2005 மாவீரர் தின உரை, டிசம்பரில் மகிந்தவை வெல்ல வைத்தது, மாவிலாறில் விட்டு கொடாமல் நிண்டது எல்லாம், புலிகள் வலிந்து போரை விரும்பிய தோற்றத்தையே தந்தது.

1. நிலமை சாதகம் இல்லை எனில் ஏன் தொடர்ந்து பேச்சு வார்தையில் நேரத்தை கடத்தவில்லை.

2. ஏன் ஒரு குறித்தளவு போராளிகளையாவது கெரில்லா முறைக்கு தயார் படுத்தி, யுத்த களத்துக்கு வெளியே அனுப்பவில்லை?

87-89 செயல்பட்டது போல் செயல்பட ஏன் திட்டமிடவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

சரிதான். 2006 லே உங்களுக்கு தெரிந்து விட்டதா இதுதான் நிலமை என்று?

கோசான் உங்களுடன் தர்க்கம் செய்வது நோக்கம் அல்ல.

 

  • கருத்துக்கள உறவுகள்

2006 இல் இருந்து 2009 வரை புலிகள் ஒருதலைப் பட்சமாக எத்தனை தரம் போர் நிறுத்தம் செய்தார்கள்..?! எரிக் சொல்கைமுக்கு இது தெரியாதா அல்லது தெரியாத மாதிரி நடிக்கிறாரா..??!

மேலும்.. காயமடைந்த பொதுமக்களை வெளியேற்ற செஞ்சிலுவை சங்கத்தை அனுமதிக்கச் சொன்னதை மறுத்தது யார்.. ஏன் வணங்காமுடி நிவாரணக் கப்பலைக் கூட அனுமதிக்க மறுத்தமை எல்லாம் யார்..???

போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவுக்கு அறிவிக்காமல்.. தாக்குதல்களை முன்னெடுத்தது புலிகளா.. சிங்கள அரசா..??!

சமாதான காலத்தில் புலிகள் எத்தனை கப்பல்கள் அழிக்கப்பட்டன.. இது சொல்கைமுக்கு தெரியுமா இல்ல.. நடிப்பா..??! அதென்ன கதிர்காமர் கொலை மட்டும் தான்.. கண்ணுக்குத் தெரியுதோ..?!

பரராஜ சிங்கம்.. ரவிராஜ்..கெளசல்யன்.. மகேஸ்வரன்.... நடேசன்.. சிவராம்.. தமிழ்செல்வன்..இப்படி எத்தனையோ கொலைகள் நடத்தப்பட்டனவே.. இவையும் புலிகளால் தானோ...??!

சொல்கைம்.. சமாதானத்தூதவர் ஆக வந்திருந்தார் என்றால்... இன்னும் சாமாதானத்துக்கான தீர்வே வரவில்லையே... ஏன் அதனை தொடரவே இல்லை..

கடந்து 10 வருடங்களாக இனப்படுகொலை தொடர்பில் பேசப்படும் போது எதற்கு சொல்கைம் மெளனம் காத்தார்..??!

ராஜீவ் கொலைக்கும் சொல்கைமின் இலங்கை சமாதானத் தூதுவர் பங்களிப்புக்கும் என்ன சம்பந்தம்.. ஏன் பாலசிங்கத்துடன் நடந்த தனிப்பட்ட சம்பாசணைகளை இப்போ அவர் இல்லாத சமயத்தில் சொல்லனும்..???!

நோக்கம் என்ன.. சொறீலங்காவையும்.. அதன் இனப்படுகொலை கூட்டுப் பங்காளி ஹிந்தியாவையும்.. நியாயப்படுத்தவா..???!

மக்களை புலிகள் வெளியேற விடவில்லையா.. அல்லது மக்களைக் கொலை செய்யும் நோக்கில் கோத்தபாய சர்வதேச அமைப்புக்களை வெளியேற்றினாரா..??! சர்வதேச ஊடகங்களுக்கு தடை விதித்து யார்..??! சர்வதேச செஞ்சிலுவைக்கு தடை விதித்தது யார்..??! 

புலிகளா.. போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவை வெளியேற்றினார்கள்..??! சிங்கள அரசு தானே..!! 

5 minutes ago, MEERA said:

கோசான் உங்களுடன் தர்க்கம் செய்வது நோக்கம் அல்ல.

 

உண்மை. இது தர்க்கிதங்களுக்கு  அப்பாற்பட்டது. சிலர் வழமையான தமது ஒருபக்கப் பல்லவியை பாடுவதோடு சரி. 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, MEERA said:

கோசான் உங்களுடன் தர்க்கம் செய்வது நோக்கம் அல்ல.

 

சத்தியமாக தர்கிக்கும் நோக்கில் கேட்கவில்லை. உண்மையிலேயே எனக்குள் எழும் சந்தேகத்யே எழுதி உள்ளேன்.

தவிர முரண்படும் நோக்கம் இல்லை. பதில் சொல்ல விரும்பாவிட்டாலும் ஓகே.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே நான் புரிந்து கொள்ள விழைவது யாரால் யுத்தம் ஏற்பட்டது என்பதையோ, யாரால் அதிக மீறல் செய்யப்பட்டது என்பதையோ அல்ல.

உண்மையிலேயே இந்த யுத்தம் தொடங்கும் போது -2006 இல்- , இனி கப்பல் வராது, தம் ஆயுத கையிருப்பும் போதாது என்பதையும் இதன் முடிவு தமது இயக்கத்தின் பூரண அழிவில் முடியலாம் என்றும் புலிகள் தலைமைக்கு தெரிந்து இருந்தததா?

அப்படியாயின் ஏன் 87-89 இல் போனதை போல் ஒரு சிறு பிரிவையாவது ஏன் கெரில்லா முறைக்கு திருப்பி விடவில்லை?

 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

இங்கே நான் புரிந்து கொள்ள விழைவது யாரால் யுத்தம் ஏற்பட்டது என்பதையோ, யாரால் அதிக மீறல் செய்யப்பட்டது என்பதையோ அல்ல.

உண்மையிலேயே இந்த யுத்தம் தொடங்கும் போது -2006 இல்- , இனி கப்பல் வராது, தம் ஆயுத கையிருப்பும் போதாது என்பதையும் இதன் முடிவு தமது இயக்கத்தின் பூரண அழிவில் முடியலாம் என்றும் புலிகள் தலைமைக்கு தெரிந்து இருந்தததா?

அப்படியாயின் ஏன் 87-89 இல் போனதை போல் ஒரு சிறு பிரிவையாவது ஏன் கெரில்லா முறைக்கு திருப்பி விடவில்லை?

 

புலிகள் வீரச்சாவடைந்தவர்களுக்கே பதவி நிலைகளை அறிவித்து வந்தார்கள். ஆனால் ஜெயசிக்குறு முறியடிப்பின் பின்னர் தளபதிகளுக்கு பதவி நிலைகளை வழங்கினார்கள். (நான் நினைக்கின்றேன் தென்னாபிரிக்காவில்(?) இருந்து வந்த ஒருவர் “ இவ்வளவு பெரிய முறியடிப்பு சமரை செய்திருக்கிறீர்கள், தளபதிகளுக்கு பதவி நிலைகளை இராணுவத்தில் உள்ளது போல் வழங்குங்கள்” என்ற ஆலோசனையே அது.)

அன்றுடன் தளபதிகளுக்கிடையே ஈகோ பிரச்சனை தொடங்கியது. அரசியல் துறையினருக்கும் சண்டைக்காரருக்கும் ஒரே பதவி நிலையா என்ற பிரச்சனை வேறு ஏற்பட்டது.

சமாதானகாலத்துடன் தளபதிகளுக்கு சண்டைக்கு போக விருப்பமில்லை. அவர்களுக்கு அந்த சொகுசு வாழ்க்கையே தேவைப்பட்டது. 

தலைவரும் பொட்டம்மானும் இல்லாத புலிகளே இருக்க வேண்டும் என இந்தியா முடிவெடுத்தது. 

இப்படி பல காரணங்கள் தலைமையை வேறு விதமாக சிந்திக்க தூண்டியது.

 

  • கருத்துக்கள உறவுகள்

பதிலுக்கு நன்றி மீரா.

நீங்கள் சொல்வதை வைத்து - இயக்கத்தை “ஊதி பெருக்க” வைத்து, சிறுக்க முடியாததாக்கி, அழித்தார்கள் என நான் விளங்கி கொள்கிறேன்.

ஆனால் இந்த தந்திரத்தை பிரபா நிச்சயம் விளங்கி கொண்டிருப்பார். ஆகவே 90% அணியை இறுதி யுத்தத்தில் அடிபட விட்டு விட்டு, ஒரு 10% யாவது கெரில்லா முறைக்கு திருப்பும் எண்ணம் ஏன் எழவில்லை?

இந்த கேள்விக்கான பதில் உங்களுக்கோ வேறு யாருக்குமோ தெரியாததாக கூட இருக்கலாம். ஆனால் என் மனதில் பட்டதை கேட்கிறேன் அவ்வளவே.

நேரத்துக்கு நன்றி.

 

14 minutes ago, MEERA said:

புலிகள் வீரச்சாவடைந்தவர்களுக்கே பதவி நிலைகளை அறிவித்து வந்தார்கள். ஆனால் ஜெயசிக்குறு முறியடிப்பின் பின்னர் தளபதிகளுக்கு பதவி நிலைகளை வழங்கினார்கள். (நான் நினைக்கின்றேன் தென்னாபிரிக்காவில்(?) இருந்து வந்த ஒருவர் “ இவ்வளவு பெரிய முறியடிப்பு சமரை செய்திருக்கிறீர்கள், தளபதிகளுக்கு பதவி நிலைகளை இராணுவத்தில் உள்ளது போல் வழங்குங்கள்” என்ற ஆலோசனையே அது.)

அன்றுடன் தளபதிகளுக்கிடையே ஈகோ பிரச்சனை தொடங்கியது. அரசியல் துறையினருக்கும் சண்டைக்காரருக்கும் ஒரே பதவி நிலையா என்ற பிரச்சனை வேறு ஏற்பட்டது.

சமாதானகாலத்துடன் தளபதிகளுக்கு சண்டைக்கு போக விருப்பமில்லை. அவர்களுக்கு அந்த சொகுசு வாழ்க்கையே தேவைப்பட்டது. 

தலைவரும் பொட்டம்மானும் இல்லாத புலிகளே இருக்க வேண்டும் என இந்தியா முடிவெடுத்தது. 

இப்படி பல காரணங்கள் தலைமையை வேறு விதமாக சிந்திக்க தூண்டியது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

இங்கே நான் புரிந்து கொள்ள விழைவது யாரால் யுத்தம் ஏற்பட்டது என்பதையோ, யாரால் அதிக மீறல் செய்யப்பட்டது என்பதையோ அல்ல.

உண்மையிலேயே இந்த யுத்தம் தொடங்கும் போது -2006 இல்- , இனி கப்பல் வராது, தம் ஆயுத கையிருப்பும் போதாது என்பதையும் இதன் முடிவு தமது இயக்கத்தின் பூரண அழிவில் முடியலாம் என்றும் புலிகள் தலைமைக்கு தெரிந்து இருந்தததா?

அப்படியாயின் ஏன் 87-89 இல் போனதை போல் ஒரு சிறு பிரிவையாவது ஏன் கெரில்லா முறைக்கு திருப்பி விடவில்லை?

 

அது கைகொடுக்கும் என்ற எண்ணம்தான் தப்பாகி போயிருந்தது 

உங்களுக்கு இப்போது  கூட  உள்ளிருந்து தகவல் பெற முடியாது இருந்தால் 
உங்களுக்கும் புலிகளுக்குமான இடைவெளி ரொம்ப தூரம்.

மணலாறு எவ்வாறு சிங்கள இராணுவத்தால் வெற்றிகொள்ள பட்டது என்று எண்ணுகிறீர்கள்?
இரசாயன தாக்குதல் அப்போதே தொடங்கிவிட்ட்து 
முன்னரங்கு அணிக்கு என்ன நடந்தது என்பது பின்னிலைக்கு தெரிய முன்னரே 
இராணுவம் முன்னேறி வந்துவிடும்.

சிங்களவருடனான போராக அது இருக்கவில்லை 
உள்ளுக்குள்ளும் இரகசியமாக எதையும் செய்ய பேச முடியாத அளவில் 
துரோகம். அமெரிக்க ஜப்பான் இந்தியா நேரடியாகவே போர்முனையில் இருந்தன 

இன்றைய அத்தனை இராணுவ தொழிநுட்பமும்  பயன்பாட்டில் இருந்தது 
நேரடி லைவ் சட்டலைட் வியூ அணிகளை எங்கும் நகர்த்த முடியாது தளபதிகள் யாரும் 
வாகனம் பாவிப்பதே இல்லை. சிலர் கொழும்பில் காசுடனும் சில ஆயுதங்களுடனும் இருந்தார்கள் 
கருணாவின் காட்டிக்கொடுப்பால் பிடிபட்டவர்கள் அதிகம் ரமணனின் தொடர்பு இல்லது போனதும் 
அவர்கள் யாரும் துரோகம் செய்யவில்லை .. அவர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை 
சிலர் உயிருக்காக கட்டார் சவூதி என்று இருந்த காசை கொடுத்து சென்றுவிட்டார்கள் 

Sri Lanka War Crimes-Genocide with West Complicity: an Analysis -  Salem-News.Com

Sri Lanka : Sri Lanka Navy and US Army conduct Joint Combined Exchange  Training

2002 சமாதான உடன்படிக்கையே  புலிகளை அழிப்பதுக்கான நிகழ்ச்சி நிரல்தான் 
இலங்கை வந்த ஒவ்வரு முறையும் எரிக் சொல்ஹெய்ம் டெல்லி போய்தான் நோர்வே திரும்பியது 
உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். 

உளவியல் யுத்தம் மிக பெரியது இதில் யூதரை வெல்வது கடினம் 
அவர்கள் மனித மூளையை கரைத்து குடித்து இருக்கிறார்கள் 
என்னையும் உங்களையும் மூளை சலவை செய்ய அவர்களுக்கு 2 நாள் போதும் 

கருணா பிரிவு யாரும் எதிர்பார்க்காத அளவு வெற்றி அவர்களுக்கு.
மாத்தையாவையே மாற்றியவர்கள் யுத்த நேரத்தில் 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் கொக்கரிப்பதுபோல இது கொத்தாவோ அவரின் அப்பரோ செய்ததில்லை 
புலிகளை அழிப்பது எனும் திட்டம் 2000த்திலேயே சர்வதேச மடத்தில் எடுக்கப்பட்ட முடிவு 
கடல்புலிகளின் வளர்ச்சிதான் முக்கிய காரணம் .... அதோடு கெட்ட காலத்துக்கு 
விமான படையும் தோற்றுவிக்க தொடங்கியது காரணமாயிற்று 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.