Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன்- யாழ். பல்கலை புதிய துணைவேந்தர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன்- யாழ். பல்கலை புதிய துணைவேந்தர்

 

 

பொறுப்புணர்வுடன் எனது கடமைகளைச் செய்வதற்கு அனைவரும் ஒத்துழையுங்கள் என புதிதாக பதவியேற்றுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராசா கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக இன்று (வெள்ளிக்கிழமை) பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “எதிர்காலத்தை வளமாக்குவதற்காக இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது இதுவொரு பொதுவான நிறுவனம். மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டிய பதவியை எனக்கு கொடுத்திருக்கிறார்கள்.

தற்போதைய நிலைமையில் உலகத்திலே என்றுமில்லாத வகையில் விமான நிலையங்கள் கூட மூடப்பட்டுள்ள நிலை காணப்படுகின்றது. அப்படியான சூழ்நிலையில் பல்கலைக்கழகத்தினை நிலைநிறுத்துவது என்பது சவாலான விடயம். எனவே குழுவாக இணைந்து இதனை செயற்படுத்தவுள்ளேன்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இரண்டாயிரம் ஊழியர்கள் கடமையாற்றுகிறார்கள். 11 ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். இது பெரிய குழுவாகும்.

இது கடவுளால் வழங்கப்பட்டுள்ள பதவியாகும். இங்கு கடமையாற்றும் ஊழியர்கள் இந்தப் பல்கலைக் கழகத்தை நேசித்து செயற்படுகின்றார்கள். இந்தப் பல்கலைக்கழகம் எமது மக்களுடைய ஒரு சொத்தாகும்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தொடர்பாக மக்கள் மத்தியில் உள்ள ஆர்வம் மிகப்பெரியது. கல்வியை ஆதாரமாகக் கொண்ட சமூகம் இந்த பல்கலைக்கழகம் மீது மிகவும் ஆர்வமாக செயற்படுகின்றது.

கல்வி பாரம்பரியத்தின் கலைக்கோயில் இந்த பல்கலைக்கழகம். இராமநாதனால் வழங்கப்பட்ட பரமேஸ்வராக் கல்லூரி இன்று பல்கலைக்கழகமாக மிளிர்ந்திருக்கின்றது.

இதேவேளை, ஊடகங்கள் உரிய முறையில் செயற்பட வேண்டும். கருத்து முரண்பாடுகள் பல்கலைக்கழகத்தில் வரவேற்கப்படும். இதுவே கல்வி நடவடிக்கையில் ஒரு முக்கியமான விடயம். அனைத்து விடயங்களும் கலந்தாலோசிக்கப்பட்டு நிறுவனத்தை முன்னிறுத்தி முடிவுகள் எடுக்கப்படும். தனிப்பட்ட ரீதியில் எந்த முடிவும் எடுக்கப்படாது. ஒரு நிறுவனம் சார்ந்து முடிவுகள் எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.

     by : Litharsan

http://athavannews.com/அனைவரது-ஒத்துழைப்பையும-2/

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப மாலை போடப்போகின்றார் ? சகுனம் சரியில்லை. எதற்கும் கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம் 🤔

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 9ஆவது துணைவேந்தராக எஸ்.சிறிசற்குணராஜா  பொறுப்பேற்றார்

 

3 minutes ago, Kapithan said:

எப்ப மாலை போடப்போகின்றார் ? சகுனம் சரியில்லை. எதற்கும் கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம் 🤔

ஏன் அப்படி செல்கின்றீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 9ஆவது துணைவேந்தராக எஸ்.சிறிசற்குணராஜா  பொறுப்பேற்றார்

 

ஏன் அப்படி செல்கின்றீர்கள்

மிகவும் அருமையான வரவேற்கத்தக்க பேச்சு. துணைவேந்தரின் பேச்சை எழுதி பதிவிடுவதில்   மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்: 

இது பெரு பொது நிறுவனம். மிகவும் பொறுப்புடன் செயல்படவேண்டிய பதவி. 2000 ஊழியர்கள், 11,000 மாணவர்கள் ஒருமித்த குடும்பம். ஒரு மனிதனின் சங்கல்பமும் (திடசங்கற்பம்) இறைவனின் திருவருளும் கூடும்போது காரியங்கள் நடைபெறும். இலங்கையின் மற்றைய பிரதேசங்களில் இருக்கும் சாதாரண மனிதர்களுக்கு அந்த ஊரில் இருக்கும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் யாரென்றே தெரியாமல் இருக்கும். ஆனால் யாழ்ப்பாணத்தில் பேக்கரி தொழிலார்கள் கொண்டு அனைவரும் யார் துணைவேந்தராக தெரிவாவர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தார்கள். யாழ்ப்பாணம் கல்வியை ஆதாரமாக கொண்ட ஒரு சமூகம். ஆகையால்  யாழ் பல்கலைக்கழகம் மக்களின் மனங்களில் ஊடறுத்து நிற்பதில் வியப்பேதும் இல்லை.

ஆதி காலத்தில் இருந்து தமிழர்களின் சொத்து கல்விதான் என்பது யாவரும் அறிந்ததே. சேர் பொன் ராமநாதனால் அன்பளிக்கப்பட்ட     பரமேஸ்வரா கல்லூரி என்று ஒரு கலைக்கோவிலாக வடிவெடுத்துள்ளது .  மிகவும் சோதனையான காலங்களில் துணை வேந்தர் பாலசுந்தரம்பிள்ளை மற்றும் பல ஆர்வலர்களால் அவர்களால் பராமரிக்கப்பட்ட பல்கலைக்கழகம். 1979 ஆம் ஆண்டு நிர்வகிக்கப்பட்டு ஆண்டு மாணவனாக நுழைந்த கலாநிதி சிறிசற்குணராஜா இன்று 37 வருடங்களுக்கு பின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருக்கிறார். யாழ் பல்கலை கழகத்தின் இறைமை, வளர்ச்சி, பெருமை இவைகளை பாதுகாப்பது  ஊடகத்துறையினதும் பொதுமக்களினதும் தலையாய கடமை.  ஒரு துணை வேந்தராக இருந்து வழிநடத்தத்தான் முடியும். மக்கள் தான் பொறுப்பாக நடந்துகொள்ளவேண்டும்.  "Difference opinion is welcome for progressive reasons " . என்றபடியால் கருத்து  வேறுபாடுகள்,எண்ணக்கருத்துக்கள் வரவேற்கத்தக்கவை. இங்கு சித்தாந்தம், முடிந்த  முடிவுகள் என்று ஏதும் இல்லை. நிறுவனத்தை முன்னிறுத்தி எல்லோருடைய கருத்துக்களையும் அரவணைத்து  எல்லோரது நன்மைக்காக முடிவுகள் எடுக்கப்படும். தனிப்பட்ட நபர்களுக்காக அல்ல. "Putting the institution first , not the individual" . யாழ் பல்கலைக்கழகம் தொடர்ந்து செழிப்புடன்  வளர்ந்து பல சாதனைகளை படைத்தது பரிணமித்து வருங்கால சந்ததிகளுக்கு ஒரு சிறந்த கலைக்கூடமாக திகழ எல்லாம் வல்ல இறைந்தவன் துணை புரிவாராக - துணை வேந்தர் Dr . சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா 

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 9ஆவது துணைவேந்தராக எஸ்.சிறிசற்குணராஜா  பொறுப்பேற்றார்

 

ஏன் அப்படி செல்கின்றீர்கள்

அவரின் நெற்றியிலுள்ள திருநீறு அவர் புதிய சிந்தனைகள், நவீன மாற்றங்களை யாழ் பல்கலைக்குள் கொண்டுவருவாரா என்கின்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் நானறிந்த (எங்கட) சற்குரு (Past) இப்படி இருக்கவில்லை. 🤔

தனிப்பட்ட ரீதியில்,  தேசியம் சார்பானவராகத்தான் அவரை (Positive ) எனக்குத் தெரியும். அதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. 👍

ஆனால் நெற்றியியுள்ள திருநீறு அவர் புதிய மாற்றங்களுக்கு தயாரானவரா என்கின்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது 🤥 (சந்தேகம் உண்மையாக இருக்க வேண்டிய தேவை இல்லை என்பதும் உண்மைதான்😀)

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kapithan said:

அவரின் நெற்றியிலுள்ள திருநீறு அவர் புதிய சிந்தனைகள், நவீன மாற்றங்களை யாழ் பல்கலைக்குள் கொண்டுவருவாரா என்கின்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் நானறிந்த (எங்கட) சற்குரு (Past) இப்படி இருக்கவில்லை. 🤔

தனிப்பட்ட ரீதியில்,  தேசியம் சார்பானவராகத்தான் அவரை (Positive ) எனக்குத் தெரியும். அதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. 👍

ஆனால் நெற்றியியுள்ள திருநீறு அவர் புதிய மாற்றங்களுக்கு தயாரானவரா என்கின்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது 🤥 (சந்தேகம் உண்மையாக இருக்க வேண்டிய தேவை இல்லை என்பதும் உண்மைதான்😀)

ஒருவர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள். 

சைவர் திருநீறு அணிவதில் என்ன தவறு?

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே எல்லாத்தயும், எல்லாரையும் குத்தி கிளறிக்கொண்டு இருக்க சிங்களவன் இருக்கிற மிச்ச சொச்சத்தையும் கொத்திக்கொண்டு போக நாங்கள் ஆண்டி ஆகவேண்டியதுதான் 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, MEERA said:

ஒருவர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள். 

சைவர் திருநீறு அணிவதில் என்ன தவறு?

யோவ்,

திருந்தவே மாட்டீங்களா ? 😡

சமயத்துடன் இவரது செயலை இணைத்துப்பார்க்கவில்லை. வயது கூடிக்கொண்டுபோகும்போது சமய நம்பிக்கை அதிகமாகும் ஒருவர் புதிய மாற்றங்களை உள்வாங்குவாரா ? என்பதுதான் எனக்கு ஏற்பட்ட கேள்வி. மற்றும்படி சற்குரு சைவசமயத்தவராயிருப்பது எனக்கு பெருமையே தவிர சிறுமை அல்ல.👍

திருந்துங்கோ 😡

சிந்தனைகளை விசாலமாக்குங்கள் 😡

 

1 minute ago, nilmini said:

இப்படியே எல்லாத்தயும், எல்லாரையும் குத்தி கிளறிக்கொண்டு இருக்க சிங்களவன் இருக்கிற மிச்ச சொச்சத்தையும் கொத்திக்கொண்டு போக நாங்கள் ஆண்டி ஆகவேண்டியதுதான் 

குத்திக் கிளறவில்லை அக்கா. யாழ் பல்கலையின் தரம் உயரவேண்டும் என அதிகமாக ஆசைப்படுகிறேன். 

எங்கே எனது எதிர்பார்ப்பு பொய்த்துப்போய்விடுமோ என்கின்ற எச்சரிக்கை உணர்வு. வேறொன்றுமல்ல. 🤔

யாழ் பல்கலை உயர்ந்தால் மகிழ்ச்சியடைவதில் முதலாளாக இருப்பது நான்தான். ஏனென்றால் எனது படமும் அங்கே  மாட்டப்பட்டுள்ளது 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

யோவ்,

திருந்தவே மாட்டீங்களா ? 😡

சமயத்துடன் இவரது செயலை இணைத்துப்பார்க்கவில்லை. வயது கூடிக்கொண்டுபோகும்போது சமய நம்பிக்கை அதிகமாகும் ஒருவர் புதிய மாற்றங்களை உள்வாங்குவாரா ? என்பதுதான் எனக்கு ஏற்பட்ட கேள்வி. மற்றும்படி சற்குரு சைவசமயத்தவராயிருப்பது எனக்கு பெருமையே தவிர சிறுமை அல்ல.👍

திருந்துங்கோ 😡

சிந்தனைகளை விசாலமாக்குங்கள் 😡

 

யோவ் திருந்த வேண்டியது நீங்கள்...

அவரது திருநீறு உங்களை குடைகிறது...அதை மேற்கோள் காட்டியது நீங்கள்

சமய நம்பிக்கை உடைய ஒருவர் புதிய மாற்றங்களை உள்வாங்க மாட்டார் என்று  எப்படி கூறுகிறீர்கள்?

உங்கள் சிந்தனைகளை விலாசமாக்கி முன்னுக்கு வாருங்கள்...0

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

யோவ் திருந்த வேண்டியது நீங்கள்...

அவரது திருநீறு உங்களை குடைகிறது...அதை மேற்கோள் காட்டியது நீங்கள்

சமய நம்பிக்கை உடைய ஒருவர் புதிய மாற்றங்களை உள்வாங்க மாட்டார் என்று  எப்படி கூறுகிறீர்கள்?

உங்கள் சிந்தனைகளை விலாசமாக்கி முன்னுக்கு வாருங்கள்...0

என்னைக் குடைவதற்கு திருநீறு என்ன drilling machine ஓ 😂

திரும்பவும் எனது கருத்தை ஒருமுறை எனது வாசியுங்கள். குறிப்பாக முதலாவது கருத்தின் இறுதி வரியை. 

சமயத்தையும் சாதியையும் விட்டு வெளியே வரவே வர வேண்டாம். அப்படியே அந்தச் சேற்றில் மூழ்கி இருங்கோ😏😏

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kapithan said:

என்னைக் குடைவதற்கு திருநீறு என்ன drilling machine ஓ 😂

திரும்பவும் எனது கருத்தை ஒருமுறை எனது வாசியுங்கள். குறிப்பாக முதலாவது கருத்தின் இறுதி வரியை. 

சமயத்தையும் சாதியையும் விட்டு வெளியே வரவே வர வேண்டாம். அப்படியே அந்தச் சேற்றில் மூழ்கி இருங்கோ😏😏

சமயத்தை தூக்குவது தாங்களே.

திருநீறு பூசியவன் புதிய மாற்றங்களுக்கு தயாரானவனில்லை என்று எங்காவது எழுதி உள்ளதா?

 

8-BA0-F35-F-1312-47-B3-A293-AC27-C0-A80-

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

குத்திக் கிளறவில்லை அக்கா. யாழ் பல்கலையின் தரம் உயரவேண்டும் என அதிகமாக ஆசைப்படுகிறேன். 

எங்கே எனது எதிர்பார்ப்பு பொய்த்துப்போய்விடுமோ என்கின்ற எச்சரிக்கை உணர்வு. வேறொன்றுமல்ல. 🤔

யாழ் பல்கலை உயர்ந்தால் மகிழ்ச்சியடைவதில் முதலாளாக இருப்பது நான்தான். ஏனென்றால் எனது படமும் அங்கே  மாட்டப்பட்டுள்ளது 😂

வணக்கம் Kapithan. அக்கா என்று சொல்லி குறிப்பிட்டதால் ஒரு சின்ன அறிவுரை சொல்லலாம் என்று நினைத்தேன்.

உங்களது பெயரும் பல்கலைக்கழக வரலாற்றில் பதிந்திருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். அந்த காரணத்திலாலும், எமது பல்கலைக்கழகம் நல்ல முறையில் முன்னேற்றத்தை நோக்கி வளரவேண்டும் என்று நீங்கள் நினைப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. அதே காரணத்தால்தான் உங்கள் மனதில் ஒரு பயமும் தலை தூக்கியுள்ளது.

எனது கருத்து என்னவென்றால் எமக்கு வயது கூடிகொண்டுபோக கடவுள் பக்தியும் அதிகமாகும். அதனை நான் உற்பட எல்லோருக்கும் வரக்கூடிய ஒன்று. சிலபேருக்கு வராமல் போகக்கூடும். மற்றது புலம் பெயர் தேசங்களில் போயிருந்துவிட்டு ஊருக்குதிரும்புபவர்கள் நிறையபேர் எமது கலாச்சாரம், நாம் வாழ்ந்த வாழ்க்கை போன்றவற்றை ஊரில் இருப்பவர்களில் பார்க்க அதிகமாக இழந்து வாழ்ந்ததால் அதன் அருமை விளங்கி அவற்றை மீண்டும் பெற்ற சந்தோசத்தில் கொஞ்சம் கூடுதலாகவே கடைபிடிப்பார்கள். நான் அடிக்கடி எனது மகன்மாருக்கு இதனை சொல்லிவருகிறேன். எப்படா இந்த ஜீன்ஸ், பாண்ட்டுகளை விட்டுட்டு சீலை உடுத்து பொட்டு திருநீறு பூசிக்கொண்டு வேலைக்கு போகலாம் என்று இருக்கிறேன் என்று. முக்கியமாக, அவர் வீட்டில் இருந்தே எல்லாம் பூசிக்கொண்டு வரவில்லை. அங்கு நடந்த பூசையின்போது பூசிக்கொண்டவைதான் . கவனிக்க தவறிவிட்டீர்களோ தெரியவில்லை. 

சைவசமயத்தினருக்கு கோயில் வழிபாடு, திருநீறு, குங்குமம் இவை எல்லாம் ஒரு வாழ்க்கை முறையே ஒழிய சமய அடையாளம் இல்லை. எல்லா சைவர்களையும் பற்றி கதைக்க வரவில்லை. ஆனால் இதுதான் பெரும்பாலான யாழ் சைவர்களுக்கு பொருந்தும். 

மற்றது மனிதர்கள் எப்போதும் ஒரே மாதிரி இல்லை. நல்லவர்கள் கெட்டவர்கள் ஆவதும், கெட்டவர்கள் நல்லவர் ஆவதும் மனித இன  வழக்கு. அத்துடன்  உங்களுக்கு பிடித்த ஒருவர் இன்னொருவருக்கு எதிரியாக இருப்பதையும் அனுபவபூர்வமாக பார்த்திருப்பீர்கள். உங்கள் பார்வையில் அவர் அப்ப ஒருமாதிரியும் , இப்ப மாதிரியும் தெரிகிறார். இது உங்கள் மனத்தில்,  பார்வையில்தான் தங்கியிருக்குது. என்னை பொறுத்தவரை அவர் முதல் இருந்ததை பார்க்கவும்  பண்பட்டு , அனுபவம் வாய்ந்த ஒரு தலைவராக உருவெடுத்திருக்கக்கூடும்  என்று நினைக்கிறன் . 

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் சிங்களவரை நியமிக்க வில்லை இல்லாட்டால்  அதுக்கும் திட்டியிருப்பம் 😏

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, nilmini said:

வணக்கம் கொழும்பான். அக்கா என்று சொல்லி குறிப்பிட்டதால் ஒரு சின்ன அறிவுரை சொல்லலாம் என்று நினைத்தேன்.

உங்களது பெயரும் பல்கலைக்கழக வரலாற்றில் பதிந்திருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். அந்த காரணத்திலாலும், எமது பல்கலைக்கழகம் நல்ல முறையில் முன்னேற்றத்தை நோக்கி வளரவேண்டும் என்று நீங்கள் நினைப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. அதே காரணத்தால்தான் உங்கள் மனதில் ஒரு பயமும் தலை தூக்கியுள்ளது.

எனது கருத்து என்னவென்றால் எமக்கு வயது கூடிகொண்டுபோக கடவுள் பக்தியும் அதிகமாகும். அதனை நான் உற்பட எல்லோருக்கும் வரக்கூடிய ஒன்று. சிலபேருக்கு வராமல் போகக்கூடும். மற்றது புலம் பெயர் தேசங்களில் போயிருந்துவிட்டு ஊருக்குதிரும்புபவர்கள் நிறையபேர் எமது கலாச்சாரம், நாம் வாழ்ந்த வாழ்க்கை போன்றவற்றை ஊரில் இருப்பவர்களில் பார்க்க அதிகமாக இழந்து வாழ்ந்ததால் அதன் அருமை விளங்கி அவற்றை மீண்டும் பெற்ற சந்தோசத்தில் கொஞ்சம் கூடுதலாகவே கடைபிடிப்பார்கள். நான் அடிக்கடி எனது மகன்மாருக்கு இதனை சொல்லிவருகிறேன். எப்படா இந்த ஜீன்ஸ், பாண்ட்டுகளை விட்டுட்டு சீலை உடுத்து பொட்டு திருநீறு பூசிக்கொண்டு வேலைக்கு போகலாம் என்று இருக்கிறேன் என்று.

சைவசமயத்தினருக்கு கோயில் வழிபாடு, திருநீறு, குங்குமம் இவை எல்லாம் ஒரு வாழ்க்கை முறையே ஒழிய சமய அடையாளம் இல்லை. எல்லா சைவர்களையும் பற்றி கதைக்க வரவில்லை. ஆனால் இதுதான் பெரும்பாலான யாழ் சைவர்களுக்கு பொருந்தும். 

மற்றது மனிதர்கள் எப்போதும் ஒரே மாதிரி இல்லை. நல்லவர்கள் கெட்டவர்கள் ஆவதும், கெட்டவர்கள் நல்லவர் ஆவதும் மனித இன  வழக்கு. அத்துடன்  உங்களுக்கு பிடித்த ஒருவர் இன்னொருவருக்கு எதிரியாக இருப்பதையும் அனுபவபூர்வமாக பார்த்திருப்பீர்கள். உங்கள் பார்வையில் அவர் அப்ப ஒருமாதிரியும் , இப்ப மாதிரியும் தெரிகிறார். இது உங்கள் மனத்தில்,  பார்வையில்தான் தங்கியிருக்குது. என்னை பொறுத்தவரை அவர் முதல் இருந்ததை பார்க்கவும்  பண்பட்டு , அனுபவம் வாய்ந்த ஒரு தலைவராக உருவெடுத்திருக்கக்கூடும்  என்று நினைக்கிறன் . 

நன்றி அக்கா, எனக்கு பதில் எழுதியதற்கு.

உண்மையில் சற்குரு துணைவேந்தராக நியமிக்கப்பட்டதில் எனக்கு மிகுந்த மகிழ்வே. அவரும்  அவரது துணைவியாரும் எனக்கு நன்கு பரீட்சயமானவர்கள். 

என்னுடைய எதிர்பார்ப்பெல்லாம் சற்குரு போன்ற தலைசிறந்த கல்வியாளர்கள் யாழ் பல்கலையை தூக்கி நிறுத்தவேண்டும் என்பதுதான். இளவயது கணித துறைசார் நிபுணர்களில் இவரும் ஒருவர் (Past) என்பது என் நினைவு. அவர் விளையாட்டுத் துறையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள தேசியத்தில் விருப்புக்கொண்ட ஒருவர் என்பது என் அனுபவம்.

இங்கே எனக்குத் தெரிந்த சற்குரு முன்னர் இவ்வாறு திருநீறு அணிந்தவர் அல்ல. திருநீறை பூசிக்கொள்வதும் ஒரு விடயமே அல்ல. ஏனென்றால் சைவக் கோவில்களுக்குப் போகும்போது நானே அவற்றை எனக்குப் பூசிக்கொள்வேன். சந்தணம் குங்குமமுட்பட.  எனவே சமயத்தை இங்கே ஒரு பொருட்டாக நான் கருதவேயில்லை.

எனது பயம் என்னவென்றால் இப் பல்கலை புதிய மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதற்கு சிறந்த சிந்தனையுள்ளவர்கள் வரவேண்டும் . சற்குரு வெளிநாட்டில் கல்வி கற்றவர். மாற்றங்களை நிறையவே கண்டிருப்பார். ஆனால் சமயத்தில் ஊறிய பலர் புற உலக மாற்றங்களுக்கு ஈடு கொடுப்பதில்லை. இவர் அவ்வாறு இருக்கக் கூடாது என்பதுதான் என் பயமே.

ஏனென்றால் 

அவரிடம் எனக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. 👍

15 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நல்ல காலம் சிங்களவரை நியமிக்க வில்லை இல்லாட்டால்  அதுக்கும் திட்டியிருப்பம் 😏

உமக்கு சந்தேகமிருந்தால் என்னிடம் கேட்கலாம்(உடையார் போல). அதைவிட்டுவிட்டு இப்படியொரு முடிவுக்கு வருவது சரியாகப்படவில்லை ☹️

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

குத்திக் கிளறவில்லை அக்கா. யாழ் பல்கலையின் தரம் உயரவேண்டும் என அதிகமாக ஆசைப்படுகிறேன். 

எங்கே எனது எதிர்பார்ப்பு பொய்த்துப்போய்விடுமோ என்கின்ற எச்சரிக்கை உணர்வு. வேறொன்றுமல்ல. 🤔

யாழ் பல்கலை உயர்ந்தால் மகிழ்ச்சியடைவதில் முதலாளாக இருப்பது நான்தான். ஏனென்றால் எனது படமும் அங்கே  மாட்டப்பட்டுள்ளது 😂

மன்னிக்கவும் . பெயரை பிழையாக எழுதி இப்ப திருத்தி உள்ளேன் தம்பி  Kapithan 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kapithan said:

இங்கே எனக்குத் தெரிந்த சற்குரு முன்னர் இவ்வாறு திருநீறு அணிந்தவர் அல்ல. திருநீறை பூசிக்கொள்வதும் ஒரு விடயமே அல்ல. ஏனென்றால் சைவக் கோவில்களுக்குப் போகும்போது நானே அவற்றை எனக்குப் பூசிக்கொள்வேன். சந்தணம் குங்குமமுட்பட.  எனவே சமயத்தை இங்கே ஒரு பொருட்டாக நான் கருதவேயில்லை.

எனது பயம் என்னவென்றால் இப் பல்கலை புதிய மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதற்கு சிறந்த சிந்தனையுள்ளவர்கள் வரவேண்டும் . சற்குரு வெளிநாட்டில் கல்வி கற்றவர். மாற்றங்களை நிறையவே கண்டிருப்பார். ஆனால் சமயத்தில் ஊறிய பலர் புற உலக மாற்றங்களுக்கு ஈடு கொடுப்பதில்லை. இவர் அவ்வாறு இருக்கக் கூடாது என்பதுதான் என் பயமே

 

நான் பதின்ம வயதில் இருக்கும்போது அவர் எப்படி இருந்தார் என்பது தெரியும். சிறியவர்களான எங்களுடன் சகஜமாக பம்பல் பண்ணி பழகினாலும் பல்கலைக் கழகத்தில் கறாராக இருப்பார் என்பது எமது ஊரில் இருந்து யாழ் பல்கலையில் அப்போது படித்தவர்களே சொல்லுவார்கள். அதாவது இடம், பொருள், ஏவல், சேவல்!

1998/1999 இல் இலண்டன்  வந்தபோது எப்படி ஆன்மீகவாதியானீர்கள் என்று நேரடியாகவே கேட்டிருந்தேன். அதற்கும் தகுந்த விளக்கம் தந்திருந்தார். எல்லோரையும் இழுத்துவிழுத்தி சுயநலமாக செயற்படும் பலர் உள்ள இடத்தில் அவர் பல சவால்களைச் சந்தித்தாலும் மாற்றங்களைக் கொண்டுவருவார் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

 

  • கருத்துக்கள உறவுகள்

குறைகளோடு வாழாவிட்டால் அவன் மனிதனில்லை

குறைகள் கண்டு பிடித்து வாழாவிட்டால் அவன் தமிழன் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

 

நான் பதின்ம வயதில் இருக்கும்போது அவர் எப்படி இருந்தார் என்பது தெரியும். சிறியவர்களான எங்களுடன் சகஜமாக பம்பல் பண்ணி பழகினாலும் பல்கலைக் கழகத்தில் கறாராக இருப்பார் என்பது எமது ஊரில் இருந்து யாழ் பல்கலையில் அப்போது படித்தவர்களே சொல்லுவார்கள். அதாவது இடம், பொருள், ஏவல், சேவல்!

1998/1999 இல் இலண்டன்  வந்தபோது எப்படி ஆன்மீகவாதியானீர்கள் என்று நேரடியாகவே கேட்டிருந்தேன். அதற்கும் தகுந்த விளக்கம் தந்திருந்தார். எல்லோரையும் இழுத்துவிழுத்தி சுயநலமாக செயற்படும் பலர் உள்ள இடத்தில் அவர் பல சவால்களைச் சந்தித்தாலும் மாற்றங்களைக் கொண்டுவருவார் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

 

நன்றி கிருபன்.

உண்மையில் இப்படியான நம்பிக்கையூட்டும் பின்னூட்டங்களையே எதிர்பார்த்திருந்தேன். நன்றி கிருபன். 🙏

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, கிருபன் said:

 

நான் பதின்ம வயதில் இருக்கும்போது அவர் எப்படி இருந்தார் என்பது தெரியும். சிறியவர்களான எங்களுடன் சகஜமாக பம்பல் பண்ணி பழகினாலும் பல்கலைக் கழகத்தில் கறாராக இருப்பார் என்பது எமது ஊரில் இருந்து யாழ் பல்கலையில் அப்போது படித்தவர்களே சொல்லுவார்கள். அதாவது இடம், பொருள், ஏவல், சேவல்!

1998/1999 இல் இலண்டன்  வந்தபோது எப்படி ஆன்மீகவாதியானீர்கள் என்று நேரடியாகவே கேட்டிருந்தேன். அதற்கும் தகுந்த விளக்கம் தந்திருந்தார். எல்லோரையும் இழுத்துவிழுத்தி சுயநலமாக செயற்படும் பலர் உள்ள இடத்தில் அவர் பல சவால்களைச் சந்தித்தாலும் மாற்றங்களைக் கொண்டுவருவார் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

 

உண்மை கிருபன். பல்கலைக்கழக மாணவர்களுக்கு இவரிடம் ஒருவித பயம் கலந்த மரியாதை இருப்பதை நானும் அவதானித்துள்ளேன். நல்ல கலகலப்பாக எங்களுடன் பழகினாலும் ஆள் சரியான ஸ்ட்ரிக்ட் ..ஸ்ட்ரிக்ட்..ஸ்ட்ரிக்ட்.

  • கருத்துக்கள உறவுகள்
On 28/8/2020 at 22:41, Kapithan said:

உமக்கு சந்தேகமிருந்தால் என்னிடம் கேட்கலாம்(உடையார் போல). அதைவிட்டுவிட்டு இப்படியொரு முடிவுக்கு வருவது சரியாகப்படவில்லை ☹️

உன்மையில் சிங்களவன் பறவாயில்லை கபிதான் 

தொப்பி அளவானவர்கள் போட்டுக்கொள்ளலாம் 😜

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

உன்மையில் சிங்களவன் பறவாயில்லை கபிதான் 

தொப்பி அளவானவர்கள் போட்டுக்கொள்ளலாம் 😜

அவரவர்களின் கிரகிப்பு, வாசிப்பின் அளவு, வெளியுலக அனுபவங்களைப்பொறுத்துத்தான் புரிதலின் அளவும் இருக்கும். 

தெளிவாக கூறியபின்பும் இதே நிலைப்பாடென்றால் என்னால் இதற்குமேல் உங்களுக்கு உதவ முடியாது ☹️

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

உன்மையில் சிங்களவன் பறவாயில்லை கபிதான் 

தொப்பி அளவானவர்கள் போட்டுக்கொள்ளலாம் 😜

இப்படித்தான் வவுனியா ஆசிரியர் கல்லூரியில்  இருந்த  வேர்னால்ட்  கூட மோசம் என்றார்கள் ஆனால் திறம்பட நடத்தி சென்றவர் அவர் 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.பல்கலையில் தமிழில் பட்டம் வாங்கினால் இங்கே மட்டுமல்ல உலகம் முழுதும் ஒரு மதிப்பு இருக்கு . நான் சொல்லவில்லை என்னுடைய தமிழ் பேராசிரியர்மாரெ சொல்லினம் .. ரொம்ப ஸ்ரிக்டோ ..கொமட்டையில் குத்தி சொல்லி தருவினமோ..? 👌

டிஸ்கி: 

தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அய்யா..👍

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இப்படித்தான் வவுனியா ஆசிரியர் கல்லூரியில்  இருந்த  வேர்னால்ட்  கூட மோசம் என்றார்கள் ஆனால் திறம்பட நடத்தி சென்றவர் அவர் 

யாழ் யூனியைப் பற்றி அறிந்தவர்களுக்கும் அதில் ஈடுபாடு உள்லவர்களுக்கும் யாழ் யூனியைப்பற்றி அறியாதவர்களின் கருத்துக்களுக்கும் இடையே வேறுபாடு அதிகம். யாழ் யூனியை நன்கு அறிந்தவர்கள், அக்கறையுள்ளவர்களுக்கு எனது கவலை புரியும்.🙂

 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kapithan said:

யாழ் யூனியைப் பற்றி அறிந்தவர்களுக்கும் அதில் ஈடுபாடு உள்லவர்களுக்கும் யாழ் யூனியைப்பற்றி அறியாதவர்களின் கருத்துக்களுக்கும் இடையே வேறுபாடு அதிகம். யாழ் யூனியை நன்கு அறிந்தவர்கள், அக்கறையுள்ளவர்களுக்கு எனது கவலை புரியும்.🙂

யாழ் யூனி மட்டக்களப்பு யூனிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை ஒருவருக்கு பிடிக்கவில்லை என்றால் மற்ற எல்லோருக்கும் பிடிக்க கூடாது என்ற நினைப்பே தவறு

மழைக்கு கூட அந்தப்பக்கம் ஒதுங்காதவன் நான் ( யூனி)🙂 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.