Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரணதண்டனை விதிக்கப்பட்ட குட்டி மணியை, பாராளுமன்றத்திற்கு அனுமதிக்காத பாகிர் மாகார் சிறந்த முன்னுதாரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த குட்டி மணி என்கிற செல்வராசா யோகச்சந்திரன், நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், அவரை நாடாளுமன்றத்துக்கு அப்போதிருந்த சபாநாயகர் அனுமதிக்கவில்லை எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ, தற்போதைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அரசமைப்பை மீறியுள்ளாரெனத் தெரிவித்தார்.

 

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து உரையாற்றி அவர் கூறியதாவது,

 

“டெலோ அமைப்பின் முன்னாள் தலைவர் குட்டி மணி என்கிற செல்வராசா யோகச்சந்திரன், 1982ஆம் ஆண்டு நாடாளுமுன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அவரது பெயரை, தேர்தல் ஆணைக்குழு, வர்த்தமாணி அறிவித்தலில் வெளியிட்டிருந்ததோடு, நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்துக்கும் அனுப்பி வைத்திருந்தது.

 

“பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ், குட்டி மணிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்து. அவர், தனக்கு விதிக்கப்பட்டிருந்த மரணதண்டனைக்கு எதிராக மேன்முறையீடு  செய்திருந்தார். அரசமைப்பின் 89, 91ஆம் உறுப்புரிமைக்கு அமைய, மரணதண்டனை விதிக்கப்பட்டவருக்கு நாடாளுமன்றில் இடமளிக்க முடியாதெனக் கூறி, அப்போதிருந்த சபாநாயகர் பாகிர் மாகார், சிறந்த முன்னுதாரணம் ஒன்றை வழங்கியிருந்தார்.

 

“ஆனால், அந்த முன்னுதாரணத்தை மீறி, மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவுக்கு நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ள அனுமதியளித்திருந்தீர்கள். அரசமைப்பின் 89, 91ஆம் உறுப்புரிமைகளை மீறி, மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள நபருக்கு நாடாளுமன்ற உறுப்பினராகச் சத்தியப்பிரமாணம் செய்திருந்தீர்கள். ஏன் இப்படித் தவறான முன்னுதாரணத்தை வழங்கியிருக்கிறீர்கள்? இதனூடாக நீங்கள் அரசமைப்பை மீறியிருக்கிறீர்கள்” எனத் தெரிவித்தார்.

 

இதற்குப் பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன,  “இந்த விவகாரம் தொடர்பில், நீங்கள் நீதிமன்றிலேயே விவாதிக்க வேண்டும். நீதிமன்றம் வழங்கியுள்ளத் தீர்ப்பின் அடிப்படையிலேயே நான் செயற்பட்டிருக்கிறேன்” என்றார்.

 

நீதிமன்றம் தொடர்பிலும் நீதிபதிகள் தொடர்பிலும், தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாகக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாம் அதனைப் பற்றிக் கலந்துரையாடப் போவதில்லை. சபாநாயகர், அரசமைப்பை படிக்க வேண்டுமெனவும் தெரிவித்ததோடு, சபாநாயகருக்கு இது தொடர்பில் ஆலோசனை வழங்கியவர்கள், அரசமைப்பின் 89, 91 உறுப்புரிமைகளைப் படிக்காது ஆலோசனை வழங்கியுள்ளார்கள் எனவும் சாடினார்.

http://www.jaffnamuslim.com/2020/09/blog-post_750.html

  • கருத்துக்கள உறவுகள்

குட்டிமணி பாராளுமன்றுக்கு தெரிவானாரா?

எப்போ? 1977இல் தானே பாராளுமன்ற தேர்தல்?

1982இல் சர்வஜன வாக்கெடுப்பு அல்லவா நடந்தது?

தெரிந்தவர்கள் யாரும் இருந்தால் விளக்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, goshan_che said:

குட்டிமணி பாராளுமன்றுக்கு தெரிவானாரா?

எப்போ? 1977இல் தானே பாராளுமன்ற தேர்தல்?

1982இல் சர்வஜன வாக்கெடுப்பு அல்லவா நடந்தது?

தெரிந்தவர்கள் யாரும் இருந்தால் விளக்க முடியுமா?

Nomination to the parliament[edit]

Before his death, Kuttimani was officially nominated to the Vaddukoddai constituency in 15 October 1982, when the then sitting member of TULF party, T.Thirunavukkarau died on 1 August 1982. However the legal sources, then under the control of President J. R. Jayewardene, ruled that Kuttimani's nomination as a member of parliament was invalid.[4] The then Prisons Commissioner Priya Delgoda announced on 16 October 1982 that Kuttimani would not be released from prison to take his oaths at the parliament. Kuttimani's appointment was gazetted while he was under a sentence of death. In a statement issued to explain the reasons for nominating Kuttimani to the vacant parliamentary seat, the TULF officials included five. Among these are two prominent reasons: (1) Kuttimani's nomination is a token protest against the state terrorism perpetrated from time to time through the agencies of the police and military personnel especially on the young Tamils of the country. (2) It is a protest against the death penalty imposed on Kuttimani and Jegan. Subsequently, on 4 February 1983, Kuttimani's death sentence was commuted to life imprisonment under the general amnesty proclaimed by President Jayewardene. After this, Kuttimani resigned his Vaddukoddai seat in the parliament, to which he was nominated.[4]

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Eppothum Thamizhan said:

Nomination to the parliament[edit]

Before his death, Kuttimani was officially nominated to the Vaddukoddai constituency in 15 October 1982, when the then sitting member of TULF party, T.Thirunavukkarau died on 1 August 1982. However the legal sources, then under the control of President J. R. Jayewardene, ruled that Kuttimani's nomination as a member of parliament was invalid.[4] The then Prisons Commissioner Priya Delgoda announced on 16 October 1982 that Kuttimani would not be released from prison to take his oaths at the parliament. Kuttimani's appointment was gazetted while he was under a sentence of death. In a statement issued to explain the reasons for nominating Kuttimani to the vacant parliamentary seat, the TULF officials included five. Among these are two prominent reasons: (1) Kuttimani's nomination is a token protest against the state terrorism perpetrated from time to time through the agencies of the police and military personnel especially on the young Tamils of the country. (2) It is a protest against the death penalty imposed on Kuttimani and Jegan. Subsequently, on 4 February 1983, Kuttimani's death sentence was commuted to life imprisonment under the general amnesty proclaimed by President Jayewardene. After this, Kuttimani resigned his Vaddukoddai seat in the parliament, to which he was nominated.[4]

நன்றி எபொத.

இது எனக்கு இதுவரை தெரியாது.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

Nomination to the parliament[edit]

Before his death, Kuttimani was officially nominated to the Vaddukoddai constituency in 15 October 1982, when the then sitting member of TULF party, T.Thirunavukkarau died on 1 August 1982. However the legal sources, then under the control of President J. R. Jayewardene, ruled that Kuttimani's nomination as a member of parliament was invalid.[4] The then Prisons Commissioner Priya Delgoda announced on 16 October 1982 that Kuttimani would not be released from prison to take his oaths at the parliament. Kuttimani's appointment was gazetted while he was under a sentence of death. In a statement issued to explain the reasons for nominating Kuttimani to the vacant parliamentary seat, the TULF officials included five. Among these are two prominent reasons: (1) Kuttimani's nomination is a token protest against the state terrorism perpetrated from time to time through the agencies of the police and military personnel especially on the young Tamils of the country. (2) It is a protest against the death penalty imposed on Kuttimani and Jegan. Subsequently, on 4 February 1983, Kuttimani's death sentence was commuted to life imprisonment under the general amnesty proclaimed by President Jayewardene. After this, Kuttimani resigned his Vaddukoddai seat in the parliament, to which he was nominated.[4]

எனக்கும் இது வரை தெரியாது ...மக்களது ஆதரவு இவருக்கு இருந்த படியால் தான் .....யால் காட்டிக் கொடுக்கப்பட்டாரா 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரதி said:

எனக்கும் இது வரை தெரியாது ...மக்களது ஆதரவு இவருக்கு இருந்த படியால் தான் .....யால் காட்டிக் கொடுக்கப்பட்டாரா 

என்னடா வெள்ளிகிழமையும் அதுவுமா சுமூகமா போகுதேன்னு யோசிச்சன்🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

என்னடா வெள்ளிகிழமையும் அதுவுமா சுமூகமா போகுதேன்னு யோசிச்சன்🤣

நீங்களே சொல்லுங்கள் உண்மையில் குட்டிமணி பிடிபடாமல் இருந்திருந்தால் இந் நேரத்திற்கு  ஒரு தீர்வு கிடைத்திருக்குமா இல்லையா ?
 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

நீங்களே சொல்லுங்கள் உண்மையில் குட்டிமணி பிடிபடாமல் இருந்திருந்தால் இந் நேரத்திற்கு  ஒரு தீர்வு கிடைத்திருக்குமா இல்லையா ?
 

அக்காச்சி,

நானெல்லாம் அவர் பிடிபட்டேக்க நிசமாவே ஒரு குட்டிமணிதான்🤣.

ஆனபடியால் இதை தெளிவாக நம்ம குமாரசாமி அண்ணை போல் அப்போ களத்தில் நின்றவர்கள்தான் சொல்ல முடியும்🤣

 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

அக்காச்சி,

நானெல்லாம் அவர் பிடிபட்டேக்க நிசமாவே ஒரு குட்டிமணிதான்🤣.

ஆனபடியால் இதை தெளிவாக நம்ம குமாரசாமி அண்ணை போல் அப்போ களத்தில் நின்றவர்கள்தான் சொல்ல முடியும்🤣

 

நம்பிட்டேன் ,நம்பிட்டேன் tw_lol:
 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ரதி said:

எனக்கும் இது வரை தெரியாது ...மக்களது ஆதரவு இவருக்கு இருந்த படியால் தான் .....யால் காட்டிக் கொடுக்கப்பட்டாரா 

தேர்தலில் நிற்கவில்லை  இறந்தவருக்கு பதிலாக இவரை நியமித்தார்கள் என நினைக்கிறேன்....மக்கள் ஆதரவு என சொல்ல முடியாது ...தற்பொழுது மகிந்தா சிறையில் இருக்கும் இருவரை (ஒருவரை தமிழர்களுக்கும் மற்றவரை சிங்கள் எதிர்க்ட்சிக்கும் )வாக்குகள் மூலம் வெற்றியடை செய்து கெத்து காட்டுவது போன்று
அன்று தமிழர்விடுதலை கூட்டணி குட்டிமணியை பா.உ வாக்கி ஒரு கெத்தை காட்டினார்கள்...
 

  • கருத்துக்கள உறவுகள்

1981 என நினைக்கின்றேன் வல்லிபுரக்கோவில்  மணல் காட்டு பகுதியில் படகில் வந்த சிலரை பருத்தித்துறை  போலீசார் கைது செய்து எந்த பரபரப்பும் இல்லாமல்  பருத்தித்துறை போலீஸ் நிலையத்தில் வைத்து இருந்தனர். அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை தாம் கைது செய்திருப்பது குட்டிமணி என்று . பின்பு குற்ற புலனாய்வு அதிகாரிகள் விசாரித்ததில் இவர்தான் குட்டிமணி என்று அறிந்தார்கள். பருத்தித்துறை போலீஸ் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. அங்கிருந்து கொழும்புக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பு வழங்கும் போது நீதிபதி குட்டிமணியை பார்த்து ஒரு வேளை ஜனாதிபதி ஜேயார், உங்கள் மரண தண்டனையை மாற்ற பரிசீலிக்கலாம் என்றார். அதை மறுத்த குட்டிமணி சொன்னார் உலகமே தமிழ் ஈழம் என்றோரு நாட்டின் விடிவுக்காக காத்திருக்கிறது என்று கூறி ,  என் மரணத்திற்கு பின் எனது இரு கண்களையும் பார்வை இழந்த தமிழருக்கு கொடுக்கவும். பிறக்க போகும் தமிழ் ஈழத்தை எனது இரு கண்கள் ஊடாகவும் பார்ப்பேன் என்றார்.  வரலாற்று சிறப்பு மிக்க குட்டிமணியின் நீதி மன்ற உரை அப்போது பல இளைஞர்கள் நெஞ்சில் ஆழமாக பதிந்தது. அதே போல் சிங்கள கொலை வெறியர்களும் குட்டிமணியை வெலிக்கடையில் கொலை செய்யும் போது அவரது கண்ணை முதலில்  தோண்டி எடுத்தார்கள் என்று வாசித்தது ஞாபகம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 minutes ago, Ahasthiyan said:

பிறக்க போகும் தமிழ் ஈழத்தை எனது இரு கண்கள் ஊடாகவும் பார்ப்பேன் என்றார்.  

இந்த கண்ணால் தானே ஈழத்தை பார்க்கப்போகின்றாய் என கேட்டு கண்ணை தோண்டி எடுத்ததாக பத்திரிகைகளில் வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, colomban said:

மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த குட்டி மணி என்கிற செல்வராசா யோகச்சந்திரன், நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், அவரை நாடாளுமன்றத்துக்கு அப்போதிருந்த சபாநாயகர் அனுமதிக்கவில்லை எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ, தற்போதைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அரசமைப்பை மீறியுள்ளாரெனத் தெரிவித்தார்.

அரசமைப்பை மீறியது என்று குற்றச்சாட்டு சொல்பவர்கள்

குட்டிமணி உட்பட 54 தமிழர்களை அடித்தே கொன்று 
குட்டிமணி உட்பட மூவரின் கண்களையும் தோண்டி எடுத்தது

ஐக்கிய தேசியக்கட்சி அரசில் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

அரசமைப்பை மீறியது என்று குற்றச்சாட்டு சொல்பவர்கள்

குட்டிமணி உட்பட 54 தமிழர்களை அடித்தே கொன்று 
குட்டிமணி உட்பட மூவரின் கண்களையும் தோண்டி எடுத்தது

ஐக்கிய தேசியக்கட்சி அரசில் தான்.

இதை விக்நேஸ்வரன் பாராளுமன்றத்தில் சொல்ல வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கற்பகதரு said:

இதை விக்நேஸ்வரன் பாராளுமன்றத்தில் சொல்ல வேண்டும். 

எனக்கு சொல்லி நான் என்ன செய்வது?
முடிந்தால் அவருடன் தொடர்பு கொண்டு கதையுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:
3 hours ago, ஈழப்பிரியன் said:

அரசமைப்பை மீறியது என்று குற்றச்சாட்டு சொல்பவர்கள்

குட்டிமணி உட்பட 54 தமிழர்களை அடித்தே கொன்று 
குட்டிமணி உட்பட மூவரின் கண்களையும் தோண்டி எடுத்தது

ஐக்கிய தேசியக்கட்சி அரசில் தான்.

இதை விக்நேஸ்வரன் பாராளுமன்றத்தில் சொல்ல வேண்டும்.

அவர் எங்கே தமிழர்கள் தான் இலங்கையின் ஆதிவாசிகள் என்பதை உறுதிபடுத்துவதில் தான் பிஸி.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Ahasthiyan said:

1981 என நினைக்கின்றேன் வல்லிபுரக்கோவில்  மணல் காட்டு பகுதியில் படகில் வந்த சிலரை பருத்தித்துறை  போலீசார் கைது செய்து எந்த பரபரப்பும் இல்லாமல்  பருத்தித்துறை போலீஸ் நிலையத்தில் வைத்து இருந்தனர். அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை தாம் கைது செய்திருப்பது குட்டிமணி என்று . பின்பு குற்ற புலனாய்வு அதிகாரிகள் விசாரித்ததில் இவர்தான் குட்டிமணி என்று அறிந்தார்கள். பருத்தித்துறை போலீஸ் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. அங்கிருந்து கொழும்புக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பு வழங்கும் போது நீதிபதி குட்டிமணியை பார்த்து ஒரு வேளை ஜனாதிபதி ஜேயார், உங்கள் மரண தண்டனையை மாற்ற பரிசீலிக்கலாம் என்றார். அதை மறுத்த குட்டிமணி சொன்னார் உலகமே தமிழ் ஈழம் என்றோரு நாட்டின் விடிவுக்காக காத்திருக்கிறது என்று கூறி ,  என் மரணத்திற்கு பின் எனது இரு கண்களையும் பார்வை இழந்த தமிழருக்கு கொடுக்கவும். பிறக்க போகும் தமிழ் ஈழத்தை எனது இரு கண்கள் ஊடாகவும் பார்ப்பேன் என்றார்.  வரலாற்று சிறப்பு மிக்க குட்டிமணியின் நீதி மன்ற உரை அப்போது பல இளைஞர்கள் நெஞ்சில் ஆழமாக பதிந்தது. அதே போல் சிங்கள கொலை வெறியர்களும் குட்டிமணியை வெலிக்கடையில் கொலை செய்யும் போது அவரது கண்ணை முதலில்  தோண்டி எடுத்தார்கள் என்று வாசித்தது ஞாபகம்.

படகில் இந்தியா போவதற்காக அந்த இடத்தில் [கரையோரத்தில்[  காத்துக் கொண்டு இருந்ததாகவும், காட்டிக் கொடுக்கப்பட்டு தான் பிடிப்பட்டதாக சொல்லப்படுவது பொய்யா ?

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள், தமிழ்நாட்டில் குட்டிமணி அவர்களது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும்போது எடுக்கப்பட்ட ஒர் அரிய புகைப்படம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.