Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில் காந்தியின் பிறந்த தினம் அனுஷ்டிப்பு:- தமிழ் அரசியல் தலைவர்கள் பங்கேற்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகாத்மா காந்தியின் 151வது பிறந்த தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக அமைந்துள்ள காத்தியின் நினைவு தூபியில் இன்று (02) அனுஷ்டிக்கப்பட்டது.

யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாடடில் நடைபெற்ற இந்நிகழவில் காந்தியின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், த.சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்ளான சுரேஸ் பிரேமசந்திரன், ஈ.சரவணபவன், எம்.கே.சிவாஜிலிங்கம், மாவை சோ.சேனாதிராசா, மாகாண சபை அவைத் தலைவர் சிவஞானம், முன்னாள், மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன், எதிர்கட்சி தலைவரின் இணைப்பு செயலாளர் உமாசந்திரா பிரகாஷ், யாழ் பல்கலைகழக துணைவேந்தர் சிறிசற்குணராசா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது காந்திய வழியை பின்பற்றியதாக மாணவி ஒருவருரை கௌரவித்து துணைதூதுவரால் பாரிசிலும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

வட கிழக்கில் மூலைக்கு மூலை சிலை வைக்கும் கலாச்சாரத்தை(மத, அரசியல், சினிமா) இல்லாமல் செய்ய வேண்டும்..

😏

எமக்கும் இந்த காந்திக்கும் என்ன சம்பந்தம்? அப்படியானால் நாங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

ஹாந்தி பிரித்தானிய காலனித்துவ அடக்குமுறைக்கு எதிராகப் போராடியவர்.. 

திலீபன் சொந்த இன மக்கள் மீதான.. சிங்கள.. ஹிந்திய கூட்டு அடக்குமுறைக்கு எதிராகப் போராடியவர்..

ஹாந்தி உண்ணா நோன்பிருந்ததை... சாத்வீகப் போராட்ட மூலம் எதைச் சாதிக்க முடியும் என்று கேட்கவல்ல.. ஹெகலிய ரம்புக்வல போன்ற பிரித்தானியர்கள் இல்லாததால்... யாரும் குறை சொல்லவில்லை..

திலீபனின் உண்ணா நோன்பிருந்ததையும் அதன் மூலம் வீரச்சாவடைந்ததையும் தமிழர்களின் சாத்வீகப் போராட்டங்களையும்.. ஹாந்தி தேசம் உட்பட சிங்கள தேசம் ஈறாக யாரும் மதிப்பதாக இல்லை.

ஹாந்தியை மகாத்மா என்போர்.. திலீபனை பயங்கரவாதி என்கின்றனர்..

ஹாந்தி சாத்வீக வழியில் போராடி இருப்பினும்.. மக்களின் மரணங்கள் நிகழவே செய்ததது. அதனை யாரும் ஹாந்திக்கு எதிராக எழுதித் தள்ளி ஹாந்திய சுயவிமர்சனம் என்ற போர்வையில்.. கீழ்த்தரமாகச் சித்தரிக்க முயலவில்லை.

ஆனால்.. திலீபனை அவரின் தியாகத்துக்கு அப்பால் சென்று சொந்த இனத்தில் இருக்கும் துரோகிகள்.. ஒட்டுக்குழுக்கள் உட்பட.... கீழ்த்தரமாக விமர்சிப்பதைக் காணலாம்.

ஹாந்தியின் பிறந்த நாள்.. நினைவு தினத்தைக் கொண்டாட யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதி தடைவிதிக்கவில்லை..

ஆனால்.. திலீபனுக்கு தடை.

மொத்தத்தில்.. ஈழத்தமிழன்.. சுயமா மூத்திரம் பெய்வதில்லை. ஹிந்தியனுக்கு சிங்களவனுக்காகவே மூத்திரம் பெய்கிறான். இதில்.. யாழ் நீதிமன்ற நீதிபதி என்ற புண்ணாக்கும் அடங்கும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nedukkalapoovan said:

ஹாந்தி பிரித்தானிய காலனித்துவ அடக்குமுறைக்கு எதிராகப் போராடியவர்.. 

திலீபன் சொந்த இன மக்கள் மீதான.. சிங்கள.. ஹிந்திய கூட்டு அடக்குமுறைக்கு எதிராகப் போராடியவர்..

ஹாந்தி உண்ணா நோன்பிருந்ததை... சாத்வீகப் போராட்ட மூலம் எதைச் சாதிக்க முடியும் என்று கேட்கவல்ல.. ஹெகலிய ரம்புக்வல போன்ற பிரித்தானியர்கள் இல்லாததால்... யாரும் குறை சொல்லவில்லை..

திலீபனின் உண்ணா நோன்பிருந்ததையும் அதன் மூலம் வீரச்சாவடைந்ததையும் தமிழர்களின் சாத்வீகப் போராட்டங்களையும்.. ஹாந்தி தேசம் உட்பட சிங்கள தேசம் ஈறாக யாரும் மதிப்பதாக இல்லை.

ஹாந்தியை மகாத்மா என்போர்.. திலீபனை பயங்கரவாதி என்கின்றனர்..

ஹாந்தி சாத்வீக வழியில் போராடி இருப்பினும்.. மக்களின் மரணங்கள் நிகழவே செய்ததது. அதனை யாரும் ஹாந்திக்கு எதிராக எழுதித் தள்ளி ஹாந்திய சுயவிமர்சனம் என்ற போர்வையில்.. கீழ்த்தரமாகச் சித்தரிக்க முயலவில்லை.

ஆனால்.. திலீபனை அவரின் தியாகத்துக்கு அப்பால் சென்று சொந்த இனத்தில் இருக்கும் துரோகிகள்.. ஒட்டுக்குழுக்கள் உட்பட.... கீழ்த்தரமாக விமர்சிப்பதைக் காணலாம்.

ஹாந்தியின் பிறந்த நாள்.. நினைவு தினத்தைக் கொண்டாட யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதி தடைவிதிக்கவில்லை..

ஆனால்.. திலீபனுக்கு தடை.

மொத்தத்தில்.. ஈழத்தமிழன்.. சுயமா மூத்திரம் பெய்வதில்லை. ஹிந்தியனுக்கு சிங்களவனுக்காகவே மூத்திரம் பெய்கிறான். இதில்.. யாழ் நீதிமன்ற நீதிபதி என்ற புண்ணாக்கும் அடங்கும். 

அருமை... நெடுக்ஸ். 
ஒரு, உண்மையான தமிழனின் ஆதங்கத்தை... அழகாக பதிந்தமைக்கு நன்றி. 👍

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Dash said:

எமக்கும் இந்த காந்திக்கும் என்ன சம்பந்தம்? அப்படியானால் நாங்கள் 

காந்தி மானம்காக்க துண்டாவது கட்டினார். நாங்கள் கோமணத்தையும் இழந்து நிற்கிறோம்.😵

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Paanch said:

காந்தி மானம்காக்க துண்டாவது கட்டினார். நாங்கள் கோமணத்தையும் இழந்து நிற்கிறோம்.😵

கோவணத்தை ஏனப்பு உருவ விட்டீர்கள்..? 😒

வடக்கு யாழில் பாருங்கள் எவ்வளவு தமிழர்கள் "பாரத் மாதா கீ ஜே..!" என கூடி கூவுகிறார்கள்..! நாங்கள் கூட அப்படி சொல்வது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர்.... ❤️

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் ஒன்றுகூடிய காந்தி சிலக்கு முன்னால் அமைந்திருக்கும் யாழ் வைத்திய சாலயில்தான் இந்திய ஆமிக்காரன் புகுந்து பலரைக்கொன்று சன்னதமாடினவன். அப்போது இந்தப் படத்தில முன்னாள் இந்தியாக்காரனுடன் சிரிச்சுக்கொண்டு நிக்கிற சுரேசர் மண்டையன் குழு நடத்தினவர்.

டிஸ்கி 

இதேகாலப்பகுதியில் முத்திரச்சந்தியடியில் மண்டலேஸ்வரன் என்பவர் இசைக்குழு வைத்திருந்தான் நல்ல எக்கோடியன் எனும் வாத்தியம் வாசிப்பார் கொஞ்சம் என்ன நல்லாவே அவருக்கு வாக்குக் கண். எதோ ஒரு கோயிலில திருவிழாவுக்கு இசை நிகழ்சிக்குப் போன இடத்தில யாரோ ஒரு மைக் ஜக்சன் ஆர்வக்கோளாறில மைக்கைப் பறிச்சு மண்டலேஸ்வரன் குழு எனச்சொல்வதற்குப்பதிலாக மண்டையன் குழு எனச்சொல்லிப்போட்டார் மண்டலேஸ்வரன் வெலவெலத்துப்போட்டார்.
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 யாழ்ப்பாணத்திலை என்ன கோதாரிக்கு காந்தி சிலை.அம்பாந்தோட்டை,அனுராதபுரம் பக்கங்களிலை வைக்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் எங்கள்விடுதலை உணர்வை மழுங்கடித்து, திசை திருப்பத்தான் உந்த ஆரவாரம் எல்லாம்.    

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

கோவணத்தை ஏனப்பு உருவ விட்டீர்கள்..? 😒

நாங்கள் தனக்கென வாழாப் பிறர்குரியாளர்கள், எங்கள் மானம் போனாலும் பிறர்மானம் காப்பவர்கள். மனிதர்களை மட்டுமல்ல மரம் செடி கொடிகளையும் காப்போம். முல்லைக்கும் தேர்கொடுத்த தமிழ்மன்னர் பரம்பரையில் வந்துவிட்டு இப்படிக் கேள்வியும் கேட்டுவிட்டீர்களே ஐயா! 😭

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.