Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தாய்க்கு... பிறந்தவர்கள், அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் – சாணக்கியன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தாய்க்கு பிறந்தவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுங்கள். - Madawala  News Number 1 Tamil website from Srilanka

தமிழ் தாய்க்கு... பிறந்தவர்கள், அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் – சாணக்கியன்

சிங்கள குடியேற்றங்களை அரசாங்கம் ஏற்படுத்துமானால் தமிழ் தாய்க்கு பிறந்தவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுங்கள் என மட்டக்களப்பு மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர்  இராசமாணிக்கம் சாணக்கியன்  தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச சபையின் 33 ஆவது மாதாந்த அமர்வில் புதிய ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் வெற்றி பெற்ற நிலையில் அதில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு இன்று(செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ தமிழ் மக்கள் வாழும் அனைத்து பிரதேசங்களிலும் காணி அபகரிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்காக தமிழ் பேசும் மக்கள் ஒன்று படவேண்டு.

எமது பகுதிகளில் திட்டமிட்ட குடியேற்றங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது இதற்கு எதிராக நாங்கள் குரல் கொடுக்க வேண்டும்.

தமிழ் பேசும் மக்கள் இனிவரும் காலங்களில் பிரிந்து நிற்க கூடாது. தற்போது சிறுபான்மையினருக்கு எதிராக இந்த அரசாங்கம் செயற்பட ஆரம்பித்துள்ளது.

உன்மையில் நீங்கள் தமிழராக இருந்தால், தமிழ் தாய்க்கு பிறந்தவர்களாக இருந்தால் இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராக இடம்பெறும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து  உடனடியாக வெளியேற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன்” என்றார்.

http://athavannews.com/தமிழ்-தாய்க்கு-பிறந்தவர்/

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள குடியேற்றங்களை அரசாங்கம் ஏற்படுத்துமானால் தமிழ் தாய்க்கு பிறந்தவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுங்கள் என மட்டக்களப்பு மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர்  இராசமாணிக்கம் சாணக்கியன்  தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச சபையின் 33 ஆவது மாதாந்த அமர்வில் புதிய ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் வெற்றி பெற்ற நிலையில் அதில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு இன்று(செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ தமிழ் மக்கள் வாழும் அனைத்து பிரதேசங்களிலும் காணி அபகரிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்காக தமிழ் பேசும் மக்கள் ஒன்று படவேண்டு.

எமது பகுதிகளில் திட்டமிட்ட குடியேற்றங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது இதற்கு எதிராக நாங்கள் குரல் கொடுக்க வேண்டும்.

தமிழ் பேசும் மக்கள் இனிவரும் காலங்களில் பிரிந்து நிற்க கூடாது. தற்போது சிறுபான்மையினருக்கு எதிராக இந்த அரசாங்கம் செயற்பட ஆரம்பித்துள்ளது.

உன்மையில் நீங்கள் தமிழராக இருந்தால், தமிழ் தாய்க்கு பிறந்தவர்களாக இருந்தால் இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராக இடம்பெறும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து  உடனடியாக வெளியேற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன்” என்றார்.

59Shares
  •  

http://athavannews.com/தமிழ்-தாய்க்கு-பிறந்தவர்/?fbclid=IwAR1V5lXTJ4hAs0-txauBLrUHFg9c7CootOI6JhKDcLChQtaNanwGqx3LlD8

 

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்திலிருக்கும் தமிழர்கள்: தமிழ்தாயா!!!! யாரது? மாகேஅம்மே........

  • கருத்துக்கள உறவுகள்

கொடுத்த காசுக்கு மேலால கூவுகிறான்டா கொய்யால !

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

சிங்கள குடியேற்றங்களை அரசாங்கம் ஏற்படுத்துமானால் தமிழ் தாய்க்கு பிறந்தவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுங்கள்

அரசாங்கத்துக்கு முண்டு கொடுக்கும் தமிழ் அரசியல்வாதிகளையும் சேர்த்து சொல்லுகிறாரோ? 

இவர் தொடர்ந்தும் இதே நிலைப்பாட்டில் இருப்பாரா என்பதை தொடர்ந்து கவனிக்க வேண்டும். எப்படி இருந்தாலும் தமிழ் தாய்க்கு பிறந்தவர்கள்தான் அரசில் உள்ளவர்களையும் தெரிவு செய்தார்கள். அனாலும் ஒன்று, இவரது பிள்ளைகள் (இருக்குதோ இல்லையோ தெரியவில்லை) சிங்கள தாய்க்குத்தான் பிறந்திருக்கிறார்கள். இவர் சிங்கள பெண்ணைத்தான் மனம் முடித்திருக்கிறார். எனவே தனது பிள்ளைகள் அரசுடன் சேர்ந்து அரசியல் செய்யலாமென்று சொல்லாமல் சொல்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் கூடிக் குலாவுவது மகிந்தா சகோதரர்களுடன்  மற்றவர்களை பார்த்து சவுண்ட் விடுறார் 🤣
 

18 hours ago, Robinson cruso said:

இவர் தொடர்ந்தும் இதே நிலைப்பாட்டில் இருப்பாரா என்பதை தொடர்ந்து கவனிக்க வேண்டும். எப்படி இருந்தாலும் தமிழ் தாய்க்கு பிறந்தவர்கள்தான் அரசில் உள்ளவர்களையும் தெரிவு செய்தார்கள். அனாலும் ஒன்று, இவரது பிள்ளைகள் (இருக்குதோ இல்லையோ தெரியவில்லை) சிங்கள தாய்க்குத்தான் பிறந்திருக்கிறார்கள். இவர் சிங்கள பெண்ணைத்தான் மனம் முடித்திருக்கிறார். எனவே தனது பிள்ளைகள் அரசுடன் சேர்ந்து அரசியல் செய்யலாமென்று சொல்லாமல் சொல்கிறார்.

இவர் எப்ப கல்யாணம் கட்டினவர்?
 

5 hours ago, ரதி said:

இவர் கூடிக் குலாவுவது மகிந்தா சகோதரர்களுடன்  மற்றவர்களை பார்த்து சவுண்ட் விடுறார் 🤣
 

இவர் எப்ப கல்யாணம் கட்டினவர்?
 

இவர் எப்ப கல்யாணம் காட்டினர் எண்டு எனக்கு தெரியாது. அல்லது நாகரீகமாக(?) சேர்ந்து வாழ்கிறாரோ தெரியவில்லை. ஆனால் இவர் குடும்பம் நடத்துவது என்னவோ சிங்கள பெண்மணியுடன்தான்.  

  • கருத்துக்கள உறவுகள்
On ‎12‎-‎11‎-‎2020 at 00:49, Robinson cruso said:

இவர் எப்ப கல்யாணம் காட்டினர் எண்டு எனக்கு தெரியாது. அல்லது நாகரீகமாக(?) சேர்ந்து வாழ்கிறாரோ தெரியவில்லை. ஆனால் இவர் குடும்பம் நடத்துவது என்னவோ சிங்கள பெண்மணியுடன்தான்.  

அவர் சிங்கள பெண்ணை காதலிக்கிறார் ...இன்னும் சேர்ந்து வாழவும் இல்லை ...கல்யாணம் கட் டவும் இல்லை 
 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்தாய்க்கு பிறந்தவர்கள் அரசாங்க உத்தியோகம் எடுக்கலாமோ?

5 hours ago, ரதி said:

அவர் சிங்கள பெண்ணை காதலிக்கிறார் ...இன்னும் சேர்ந்து வாழவும் இல்லை ...கல்யாணம் கட் டவும் இல்லை 
 

அதாவது காதலிக்கிறார், கலயாணம் பண்ணமாடடார் என்று சொல்ல வருகிறீர்கள். ஒருவர் பேசும்போது நிதானமாக பேச வேண்டும். தமிழ் தாய்க்கு பிறந்தவர்கள் அரசாங்கத்தில் இருக்க கூடாது என்பவர்கள் , தமிழனுக்கு பிறக்காதவர்களை காதலிக்கலாமா? அப்படி என்றால் தமிழை இதட்குள் இழுத்திருக்க கூடாது. போதனை அல்ல , சாதனையே முக்கியம்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Robinson cruso said:

அதாவது காதலிக்கிறார், கலயாணம் பண்ணமாடடார் என்று சொல்ல வருகிறீர்கள். ஒருவர் பேசும்போது நிதானமாக பேச வேண்டும். தமிழ் தாய்க்கு பிறந்தவர்கள் அரசாங்கத்தில் இருக்க கூடாது என்பவர்கள் , தமிழனுக்கு பிறக்காதவர்களை காதலிக்கலாமா? அப்படி என்றால் தமிழை இதட்குள் இழுத்திருக்க கூடாது. போதனை அல்ல , சாதனையே முக்கியம்.

அவர் சொன்ன இந்த கருத்தில் எனக்கும்  உடன்பாடு இல்லை . ஆனால் அதற்காக அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கதைக்க தேவையில்லை 

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கதைப்பது தேவையில்லைதான். ஆனால் முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரன் வீட்டில் பேரப்பிள்ளைகளோடு சிங்களத்தில் கதைக்கிறார், உண்ணாவிரதமிருப்போர் வயிறுமுட்ட சாப்பிட்டுவிட்டு வந்து இருப்பார்கள் என்று விமர்சிப்பது எந்த விதத்தில் நிஞாயமாகும்? அதுவும் அவரவர் தனிப்பட்ட விஷயமாச்சே. 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தாய்க்கு... பிறந்தவர்கள்
தமிழர்களிடையே அரசியல் செய்வதற்கு கவர்ச்சியான வசனமாக இருக்கும் என்று நம்புகிறார் சாணக்கியன்.

6 hours ago, ரதி said:

அவர் சொன்ன இந்த கருத்தில் எனக்கும்  உடன்பாடு இல்லை . ஆனால் அதற்காக அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கதைக்க தேவையில்லை 

அவர் பேசியது மற்றவர்களது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியது. எனவே முதலில் அவருக்கு ஆலோசனை கூறுங்கள். பின்னர் மற்றவர்களுக்கு போதிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 10/11/2020 at 15:24, தமிழ் சிறி said:

தமிழ் தாய்க்கு... பிறந்தவர்கள், அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் – சாணக்கியன்

வெளியில் வந்து ....
உங்களை மாதிரி ஒரு  வெத்து வேட்டாக வயிறு புடைக்க கத்தி கத்தி நாசமாக போகவேண்டும் 
போனதடவை ராஜபக்ஷே மாபியாவுடன் கூடிக்குலாவும் போது  தமிழ் தாயை  வேறொருத்தன் லவட்டிக்கிட்டு போயிட்டான் போல 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Robinson cruso said:

அவர் பேசியது மற்றவர்களது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியது. எனவே முதலில் அவருக்கு ஆலோசனை கூறுங்கள். பின்னர் மற்றவர்களுக்கு போதிக்கலாம்.

அவர் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி கதைத்தார் சொல்லுங்கள் பார்ப்போம் 
 

21 hours ago, satan said:

ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கதைப்பது தேவையில்லைதான். ஆனால் முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரன் வீட்டில் பேரப்பிள்ளைகளோடு சிங்களத்தில் கதைக்கிறார், உண்ணாவிரதமிருப்போர் வயிறுமுட்ட சாப்பிட்டுவிட்டு வந்து இருப்பார்கள் என்று விமர்சிப்பது எந்த விதத்தில் நிஞாயமாகும்? அதுவும் அவரவர் தனிப்பட்ட விஷயமாச்சே. 

சாணக்கியன் இது வரை வீட்டில சிங்களம் கதைத்து கொண்டு வெளியில் வந்து ஆட்களை உசுப்பேத்தல. அப்படி உசுப்பேத்த தொடங்கும் போது அவரையும் விமர்சிப்பேன் ...காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடியிற உண்ணா விரதம் எப்படி பட்டதாய் இருக்கும் என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை ...நான் எப்பவுமே சொல்லி வருவது  அவர் எப்பவுமே தன்னை உயர்த்தவும் ,பதவிக்காகவுமே அரசியலில் சேர்ந்தார் .
 

6 hours ago, ரதி said:

அவர் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி கதைத்தார் சொல்லுங்கள் பார்ப்போம் 
 


 

ஒருவர் தனது தனிப்படட வாழ்விலிருந்து பொது வாழ்வுக்கு வந்தால் விமர்சிக்கப்படுவார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அது இலங்கையை இருக்கலாம், அமெரிக்காவாக இருக்கலாம் அல்லது வேறு எந்த நடக்கவும் இருக்கலாம். அவர்களது தனிப்படட வழக்கை விமர்சிக்கப்படும்.

பொது வாழக்கையில் ஈடுபடுபவர்கள் ஒழுக்கம் உள்ளவர்களாகவும், முன்மாதிரியானவர்களாகவும் இருக்கவேண்டும் என்பது ஒரு பொதுவான எதிர்பார்ப்பும். ஆனால் இங்கு 90 % மானவர்கள் எதிர்மாறானவர்களாகவே இருக்கிறார்கள். அது வேறு விடயம்.

இங்கு கருத்துக்களத்தில் ஆண்டாண்டுகளாக தனிப்படட விதமாகவே விமர்சனங்கள் வைக்கப்படடன. பொது வாழ்க்கைக்கு வந்தவர்களை யாருமே விமர்சிக்கவேண்டாமென்று கூற முடியாது. அது தனிப்பட்ட்தாக இருக்கலாம் அல்லது பொதுவானதாக இருக்கலாம். எனவே உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ் தாய்க்கு பிறந்தவர்கள் அரசில் இருந்து வெளியேற வேண்டுமென்று யாரை கூறுகிறார்? அவர்கள் வெளியேறா விடடால் தமிழ் தாய்க்கு பிறக்கவில்லை என்று சொல்ல வருகிறாரா ? இது தனிப்படட விதமாக அரசுடன் உள்ள தமிழ் அரசியல்வாதிகளை தாக்குவதாக இல்லையா? எனவே பொது வாழக்கைக்கு வந்த பின்னர் எல்லாவற்றிட்கும் முகம் கொடுக்க தயாராக வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.