Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

20 வருடமாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் செல்வம் அடைக்கலநாதன் செய்த பணி என்ன? பிள்ளையான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 20 வருடமாக நாடாளுமன்றம் செல்லும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மக்களுக்கு எதனையும் செய்யவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் ,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது.

சர்வதேச விவசாயிகள் தினத்தினை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

 

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இங்கு ஆராயப்பட்டது.

அறுவடை காலத்தில் விவசாயிகள் நிர்ணய விலையில் நெல்லை விற்பதற்கு முடியாத நிலையிலிருப்பதாகவும், அரசாங்கத்தின் மூலம் நிர்ணய விலையில் நெல் கொள்வனவுக்கு நடவடிக்கையெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அத்துடன் விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எதிர்காலத்தில் விவசாய செய்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து இங்கு ஆராயப்பட்டது.

அத்துடன் நீர்பாசன வசதிகள், நெல்லை காயவைப்பதற்கான வசதிகள் மற்றும் நெல் நடுதல், அறுவடை உட்பட விவசாயிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இங்கு ஆராயப்பட்டது.

இதன்போது விவசாயிகள் தினத்தை முன்னிட்டு மூத்த விவசாயி ஒருவர் கௌரவிக்கப்பட்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினரும் விவசாயிகளினால் கௌரவிக்கப்பட்டார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் இருந்தால் பாதுகாக்கப்படும். ஆனால் மக்களுக்கான பிரச்சினை என்றால் அது தொடர்பாக அரசாங்கத்துடன் பேசி தீர்த்து வைக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கின்றது.

அது போன்று மேய்ச்சல் தரை என்பதும் மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லையிலே கால்நடை வளர்ப்பாளர்களுக்கும், பண்ணையாளர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருக்கின்றது.

இதை தொடர்ந்தும் நீடித்துக்கொண்டு செல்ல முடியாது. இது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருக்கின்றேன். அரசாங்க முக்கியஸ்தர்களுடன் பேசியிருக்கின்றேன்.

இந்த விடயத்தை விரைவாக முடித்து சுமூக நிலைக்கு கொண்டு வந்து பாரம்பரியமான கால்நடை வளர்ப்பை ஊக்கப்படுத்தி வளர்த்தெடுப்போம் என நான் நம்புகின்றேன். இந்த பணியை முன்னின்று செய்வதற்கு தயாராக இருக்கின்றேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மட்டக்களப்பு மேய்ச்சல் தரைக்கு அன்று தான் வந்துள்ளார். பிள்ளையான், வியாழேந்திரன் என்ன செய்கின்றார்கள் என அவர் பேசுவது மிக வேடிக்கையானது.

20 வருடமாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நீங்கள் வன்னி மாவட்டத்தில் செய்த பணி என்ன? அரசியலுக்காக இங்கு வந்து யாரும் பேச வேண்டிய தேவை கிடையாது.

எங்களுடைய மக்களை இந்த மண்ணை நம்பி வாழுகின்ற மக்களை காப்பாற்றி முன்னுக்கு கொண்டு வரவேண்டிய பொறுப்பு, கடமை எங்களுக்கிருக்கின்றது.

ஆகவே நாங்கள் தலைமை ஏற்றுச்செய்வோம். அரசாங்கத்துடன் பேசுவோம். நீங்கள் சொல்லுவதற்காக நாங்கள் அரசாங்கத்துடன் முரண்பட்டு வெளியேறுகின்ற நிலைமை வராது என நம்புகின்றேன்.

அதேவேளை,இது தொடர்பாக இப்போது வந்த புதிய அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக நான் இன்று இருக்கின்றேன் என்பதற்காக என்மீது குற்றம் சாட்டுவது என்பது காலத்துக்கு பொருந்தாத விடயம் என்றும் தெரிவித்துள்ளார்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

https://www.tamilwin.com/politics/01/264718?ref=home-latest

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கான பதில் இதோ; 

 

தம்பி கஞ்சா கடத்துவதற்கு அண்ணன் உதவி செய்தார். அம்புட்டுதே.. 😜

  • கருத்துக்கள உறவுகள்

செல்வம் மட்டுமல்ல, அவரோடு சேர்ந்த எல்லோருமே சைட் பிசினஸ் ஒன்று வைத்திருக்கிறார்கள். அது பணம் வாங்கிக் கொண்டு அரச தொழில் வாங்கி கொடுப்பது. இதை விட 90 களில் இடைத்தங்கல் முகாமென்ற பெயரில் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை சிங்களப் படைகள்  வன்னியில் தடுத்து வைத்திருந்த போது, அவர்களை விடுவிப்பதற்கும் செல்வம், வினோகராதலிங்கம் போன்றோர் பணம் வாங்கிக் கொண்டு பாதுகாப்புப் படையினரிடம் பேசி விடுவித்தனர்.

முன்னர் கப்பம், பின்னர் வெள்ளை வேட்டியோடு நன்கொடை! 

  • கருத்துக்கள உறவுகள்

20 வருசமா அவங்க அரசியல் பேசிட்டே இருக்காங்க சனமும் ஓட்டு போட்டுக்கொண்டே இருக்கு திரு பிள்ளையான் அவர்களே 

22 minutes ago, Kapithan said:

அதற்கான பதில் இதோ; 

தம்பி கஞ்சா கடத்துவதற்கு அண்ணன் உதவி செய்தார். அம்புட்டுதே.. 😜

:grin::grin:

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் ஒவ்வொரு தேர்தலின் போது தான் திருகோணமலை போகிறார் . அதுவும் தேர்தல் பிரச்சாரத்துக்காக. மக்களும் எவ்வளவு  காலம் தான் பொறுமை காப்பது?

  • கருத்துக்கள உறவுகள்

அவர் இருக்கட்டும்.. இவர் இப்ப 16 ஆண்டுகளா அவர் செய்யுற அதே ஒட்டுக்குழு ஆயுத அரசியலை தான் செய்கிறார். இவர் என்னத்தை வெட்டிக்கிழித்தார்.. கிழக்கிற்கு..??!

வடக்கில் டக்கிளஸ் செய்த மணல் பிசினஸை.. கிழக்கில் இவர் செய்தது தான் கண்ட அபிவிருத்தி. கிழக்கின் விடியல்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆளை ஆள் சாட்டிக்கொண்டிருக்க வேண்டியதுதான்...பாவம் சனங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

20 வருடமாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நீங்கள் வன்னி மாவட்டத்தில் செய்த பணி என்ன?

 

4 hours ago, பெருமாள் said:

இது தொடர்பாக இப்போது வந்த புதிய அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக நான் இன்று இருக்கின்றேன் என்பதற்காக என்மீது குற்றம் சாட்டுவது என்பது காலத்துக்கு பொருந்தாத விடயம் என்றும் தெரிவித்துள்ளார்.

 

2 hours ago, nedukkalapoovan said:

அவர் இருக்கட்டும்.. இவர் இப்ப 16 ஆண்டுகளா அவர் செய்யுற அதே ஒட்டுக்குழு ஆயுத அரசியலை தான் செய்கிறார். இவர் என்னத்தை வெட்டிக்கிழித்தார்.. கிழக்கிற்கு..??!

 

4 hours ago, பெருமாள் said:

அரசாங்கத்துடன் பேசுவோம். நீங்கள் சொல்லுவதற்காக நாங்கள் அரசாங்கத்துடன் முரண்பட்டு வெளியேறுகின்ற நிலைமை வராது என நம்புகின்றேன்.

அவர்களும் உங்களைப்போல் அரசாங்கத்துடன் முரண்பட்டு, அரசாங்கத்தை கைவிட்டு வெளியேற விரும்பாமல் பேசிக்கொண்டும், கடிதம் எழுதிக்கொண்டும், அறிக்கை விட்டுக்கொண்டும், வெறும் உறுதி அளித்துக்கொண்டும் இருக்கிறாக. அதுதான் மீண்டும் நீங்கள் வந்துவிட்டீர்கள் தொடருங்கள் உங்கள் ஆட்டத்தை, பார்க்க ஆவலாயுள்ளோம். 

  • கருத்துக்கள உறவுகள்

வன்னிப பிரச்சனையை தீர்க்க வழியில்லை கிழக்கு பிரச்சனையை தீர்க்க வந்திட்டார் 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

வன்னிப பிரச்சனையை தீர்க்க வழியில்லை கிழக்கு பிரச்சனையை தீர்க்க வந்திட்டார் 

அட..

இது எங்க ஏரியா உள்ள வராத... 😝

  • கருத்துக்கள உறவுகள்

திருந்த இடமில்லை 😡

(எழுத்துப்பிழை திருத்தப்பட்டது)

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி இவங்களை எல்லாம் அரசியலுக்கு அனுப்பியவர்கள் எங்கே.....?? செவ்வாயாக் கிரகத்திற்கா சென்றுவிட்டார்கள்......???🧐 ஆனால் நீ எங்கே என்று என்னைக் கேட்கக்கூடாது. நான் அனுப்பியவரிடம் ஒரு கடிதம்வாங்கி யேர்மனிக்கு வந்துவிட்டேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.