Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நினைவுத்தூபி இடிப்பு – ஐ.நா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, tulpen said:

அவர்கள் என்பது உங்களுடன் எந்த தொடர்பும் அற்ற  மூன்றாம் நபர்கள். அவர்களை கேள்வி கேட்க கூடாது என்று சொல்ல மூன்றாம் நபரான உங்களுக்கு சட்டபூர்வ உரிமை இல்லை. .இது General Knowledge. 

நான் எவரது தனி உரிமையையும் மீற வில்லை. ஆகவே நீங்கள் தான் அந்த  General Knowledge ஐ வளர்த்து கொள்ளவேண்டும். 

உண்மையாகவே அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்...

Edited by MEERA

  • Replies 100
  • Views 9.7k
  • Created
  • Last Reply
1 minute ago, விசுகு said:

அவர்கள் தடை செய்ததால் அதை தூங்கக்கூடாது என்பதே நியாயத்துக்கு எதிரானது மானிடத்தை அடக்குமுறைக்கு ஆளாக்குவது. அதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எப்படி எதிர் பார்க்கிறீர்கள்???

விசுகு யாரும் அதை தூக்கக்கூடாது என்று எவருக்கும் கட்டளையிட வில்லை. அதில் உள்ள இடர்பாட்டையும் எமது கோரிக்கள் நிராகரிப்பதற்கு அது காரணமாகிவிடும் என்ற ஆபத்தை பொதுப்படையாக சுட்டிக்காட்டப்பட்டது. அதை தூக்கி செல்லும் முழு உரிமையும் உங்களுக்கு உள்ளது. அதே போல் அதில் உள்ள இடர்பாட்டை பொது தளத்தில் சுட்டிக்காட்டும் உரிமை  எல்லோருக்கும் உள்ளது. 

12 minutes ago, விசுகு said:

அவர் இலாப நட்டம் பார்த்து சிரித்துக் கொண்டே போனார் பணத்தை செலவழித்தார் செலவை கணக்கு பார்த்து இது தனது பணத்தை திருப்பி எடுக்க முடியாத செலவீனம் என்பதால் இடையில் சிரித்துக் கொண்டே பின்வாங்கி விட்டார். அதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. 

ஆனால் எல்லோரும் அவரைப் போலவே கணக்கு பார்த்து விட்டு விலகணும் என்று அவர் சொல்லும் கணக்கு தான் இங்கே பிரச்சினை. ஏனெனில் பணத்தை அல்ல அதற்கும் மேலாக உயிரையும் சதையையும் சாகும் போதும் அக்கொடியை இறுகப் பிடித்தபடியே புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என இறுதி மூச்சை விட்ட ஆயிரம் ஆயிரம் வீரர்களின் பெற்றோரும் உடன் பிறந்தவர்களும் உறவினர்களும் அவர்களது கொடியை கைவிட்டு வருவார்கள் என்று எதிர்பார்ப்பதும் அந்த உணர்வோடு வருவோரை தடுத்து தான் போராட்டம் என்றால் அது எப்படி போராட்டம் ஆகும்???

விசுகு அவர் என்று புறம் கூறாமல் என்னிடம் நேரடியாக கூறியிருக்கலாம். இதில் எந்த இலாப நட்ட கணக்கும் இல்லை. மீரா கேட்ட  தனிப்பட்ட கேள்விக்கு வெளிப்படையாக பதிலளித்தேன் அவ்வளவு தான். 

 போராட்டத்தை வைத்து மில்லியன் கணக்கில் இலாபநட்ட கணக்கை பார்த்த மாபியாக்கள் யார் என்பது எல்லோருக்கும் தெரியும். அதுவும் இங்கு சுவிற்சர்லாந்தில் அனைவருக்கும் தெரிந்த விடயம். என்னை விட உங்களுக்கு மிக அதிகமாகவே தெரியும்.  இதற்கு மேல் இதைபற்றி பேசி திசைமாறி செல்லவேண்டாம். 

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, tulpen said:

விசுகு அவர் என்று புறம் கூறாமல் என்னிடம் நேரடியாக கூறியிருக்கலாம். இதில் எந்த இலாப நட்ட கணக்கும் இல்லை. மீரா கேட்ட  தனிப்பட்ட கேள்விக்கு வெளிப்படையாக பதிலளித்தேன் அவ்வளவு தான். 

 போராட்டத்தை வைத்து மில்லியன் கணக்கில் இலாபநட்ட கணக்கை பார்த்த மாபியாக்கள் யார் என்பது எல்லோருக்கும் தெரியும். அதுவும் இங்கு சுவிற்சர்லாந்தில் அனைவருக்கும் தெரிந்த விடயம். என்னை விட உங்களுக்கு மிக அதிகமாகவே தெரியும்.  இதற்கு மேல் இதைபற்றி பேசி திசைமாறி செல்லவேண்டாம். 

இதைத்தான் முதலிலேயே எழுதியிருந்தேன். வெள்ளி திரையில் கறுப்பு புள்ளியை தேடுபவர் என்று. உங்களுக்கு மாபியாக்களை ஒரு சிலரை தெரியும்.  எனக்கு நாட்டுக்காக உழைத்த இன்றும் விசா வீடு குடும்பம் இல்லாமல் வாழும் நூற்றுக்கணக்கானவர்களை தெரியும். எதை மோப்பம் பிடிக்கிறோமோ அதுவே மூக்கில் மணக்கும். 

6 minutes ago, விசுகு said:

இதைத்தான் முதலிலேயே எழுதியிருந்தேன். வெள்ளி திரையில் கறுப்பு புள்ளியை தேடுபவர் என்று. உங்களுக்கு மாபியாக்களை ஒரு சிலரை தெரியும்.  எனக்கு நாட்டுக்காக உழைத்த இன்றும் விசா வீடு குடும்பம் இல்லாமல் வாழும் நூற்றுக்கணக்கானவர்களை தெரியும். எதை மோப்பம் பிடிக்கிறோமோ அதுவே மூக்கில் மணக்கும். 

ஒரு சாதாரண பொதுமக்களில்  ஒருவனான என்னை பற்றி இலாபம் பார்கிறேன் என்று புறம் சொல்லும் போது  கறுப்பு புள்ளியை தேடும் உதாரணம் உங்களுக்கு ஞாபகம் வரவில்லையா?

உங்களுடன் கருத்தியல் ரீதியாக ஒத்து போகாத நபர்  என்றால் இந்த உதாரணம் பொருந்தாதோ?

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

துல்பன் சொல்வதில் என்ன பிழை இருக்கு? இப்படி மினக்கெட்டு ஆர்ப்பாட்டங்களுக்கு போறதிற்கு ஒரு பலன் இருக்க வேண்டாமா ?....எல்லாரும் போச்சினம் ,நானும் போனன் என்று போகாமல் எங்களுக்கு கிடைக்க வேண்டிய பலனை தான் பார்க்க வேண்டும் ...புலிக் கொடியை தீர்வு கிடைத்த பிறகும் ஏ த்தலாம் யாரும் கேட்க போறதில்லை 
 

சும்மா கிடந்த நாச்சியாருக்கு அரைப்பண  தாலி போதாது எண்டது போலை கிடக்குது கதை.

கொடி பிடிக்கக்கூடியவையள் தான் , குளிரை பெரிசா நினையாமல் போகக்கூடியதாக இருந்தது, போராட்டத்துக்கு.

அவையள் போனதும், கொடி பிடிச்சதும் பிழை எண்டால், ஈசி சேறிலை  இருந்து, எழும்பி ஓடி போய், கொடியை பிடியாமல் நில்லுங்கோ, எண்டது தான், நாம சொல்லுற கதை.

யுத்த குற்றவாளிகள் அரசு இடிக்கிறது சரி, கொடி பிடிக்கிறது பிழை எண்டால் எப்படி?  

இங்க பிளந்து காட்டாமல், தம்பியவையள்  கொடிய பிடியாதைங்கப்பு என்று அன்பா ஆலோசனை சொல்லுறது தானே.... பெரிசு, குளிருக்கை கிளம்பி உணர்வோட ஓடி வந்திருக்கப்பா எண்டு, சொல்லுறதை கேட்பீனம் தானே.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

அதே கேள்விதான் இங்கும், 

அவர்களை கேள்வி கேட்கும் உரிமையை உங்களுக்கு யார் தந்தது?

அவர்கள் கொடியுடன் போவார்கள், அதை கேள்விக்கு உட்படுத்தும் உரிமை உங்களுக்கு இல்லை.

கொடி பிடிக்கும் போராட்டத்திற்கு போவாராம், அங்கு போவதற்கு உரிமை உண்டாம் ஆனால் கொடி பிடிக்க மாட்டாராம்.

ஏனையா இரட்டை வேடம்?

ஒரு பொது விஷத்தை தானே மீரா கருத்தாடல் செய்கிறோம்.
தனிப்பட்ட முறையில் துல்பெனிடம் கேள்விகள் தொடுப்பது சரியாக இல்லை.
அவரும் ஒரு ஈழ ஆதரவாளர் தான். அவரின் சிந்தனை வேறு வடிவமாய் இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

விசுகர்,

அது தமிழருக்கு நெருக்கமான கொடி,

ஆனால் ஐரோப்பாவிலும் ஏனைய இடங்களிலும் தடை செய்யப் பட்ட கொடி! ஐ.நா அலுவலகம் இருக்கும் ஐரோப்பிய கண்டத்தில் இந்தக் கொடியைத் தாங்கிக் கொண்டு முள்ளிவாய்க்கால் தூபிக்கு நியாயம் கேட்க இயலுமா என்றால் ஒரு பதில் தான் யோசிக்கத் தெரிந்தவர்களுக்குக் கிடைக்கும்! 

 எவரும் செய்வதை "திரி திறந்து தாரை தப்பட்டை அடிக்காவிட்டால் அவர்கள் எதுவும் செய்வதில்லை" என்ற புரிதல் மிக அற்புதமாக உங்கள் தமிழ்க் குணத்தைக் காட்டுகிறது🤣!

அதை மாற்றுவதில் எனக்கு அக்கறை கிடையாது!

ஜஸ்டின் கனடாவில் புலிக்கொடிக்கு தடை இல்லை.  
நன் மேலே சொன்னது போல; பல தரப்பு வெளிநாட்டு ராஜதந்திரிகளுடனும் கதைத்து, வெள்ளை கொடி பிடித்தவர்களை ஈனத்தனமான சுட்டு படுகொலை செய்த இலங்கை அரசாங்கத்துடன் இனமும் பேரம் பேசும் அரசியல் நாடகங்கள் நடக்கிறது.  
நிலைமை அப்படி இருக்க இங்கே புலிக்கொடி பிடித்தார்கள் என்றும் அதனால் தான் நமக்கு ஒருவருமே உதவவில்லை என்று கருத்து வருவதும் எனக்கு இன்னமும் புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அவர்கள் தடை செய்ததால் அதை தூக்கக்கூடாது என்பதே நியாயத்துக்கு எதிரானது மானிடத்தை அடக்குமுறைக்கு ஆளாக்குவது. அதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எப்படி எதிர் பார்க்கிறீர்கள்???

நோக்கம் சர்வதேசத்திடம் உதவி கேட்பதாக இருந்தால் அவர்கள் தடை செய்த கொடியோடு போய் நிற்க்கக் கூடாது என்று யோசிப்பது புத்திசாலித்தனம்.

அது தான் இந்த "கவன" ஈர்ப்பின் நோக்கமென நினைத்தேன், இல்லையோ?

 மாவீரர் தினம் போல நிகழ்வுகளில் கொடிகள் எங்கள் இஷ்டப் படி பிடிக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா 
இந்த விவாதம் ஒரு நல்ல விடயமே. நானும் கூட நிறையவே பலருடன் இது பற்றி கதைத்திருக்கிறேன். ஆனாலும் இன்னமும் ஒரு தெளிவு இல்லை.
ஆக தனிப்பட்ட முறையில் யாரையும் சாடாமல் கருத்துக்களை மட்டும் வைக்கலாமே.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Sasi_varnam said:

ஜஸ்டின் கனடாவில் புலிக்கொடிக்கு தடை இல்லை.  
நன் மேலே சொன்னது போல; பல தரப்பு வெளிநாட்டு ராஜதந்திரிகளுடனும் கதைத்து, வெள்ளை கொடி பிடித்தவர்களை ஈனத்தனமான சுட்டு படுகொலை செய்த இலங்கை அரசாங்கத்துடன் இனமும் பேரம் பேசும் அரசியல் நாடகங்கள் நடக்கிறது.  
நிலைமை அப்படி இருக்க இங்கே புலிக்கொடி பிடித்தார்கள் என்றும் அதனால் தான் நமக்கு ஒருவருமே உதவவில்லை என்று கருத்து வருவதும் எனக்கு இன்னமும் புரியவில்லை.

 சுவிஸில் நடந்ததைப் பற்றிப் பேசுகிறோம்.

சரி புலிக் கொடிக்கு கனடாவில் தடை இல்லை. ஆனால், புலிகள் அமைப்பிற்கு தடை இருக்கிறதா? தடை செய்யப் பட்ட அமைப்பிற்குரிய கொடியைத் தாங்கிய ஒரு ஊர்வலம் அந்த அமைப்பின் நலன் தேடும் நிகழ்வாகத் தானே பார்க்கப் படும்? 

எனவே தான், புலிகளின் நினைவுத் தூபியை உடைத்தோம் என்ற சிங்கள பொய்ப்பிரசாரத்திற்கு இத்தகைய கொடி முன்னுரிமை வலுச் சேர்க்கும் என்ற ரீதியில்  நான் கருத்துரைத்தேன்! 

நானோ ருல்பெனோ சொன்னதில் புலி நீக்கக் கருத்தோ புலிக்கொடி நீக்கக் கருத்தோ இல்லை! வருடாந்தம் இதே கொடிக்கு நானும் மாவீரர் நாளில் எழுந்து நின்று மரியாதை செலுத்தித் தான் வருகிறேன். எந்த நடவடிக்கையை எதற்குச் செய்கிறோம் என்ற தெளிவில்லாமல் இருப்பதால் இது போன்ற கருத்துகள் ஏனைய உறுப்பினர்களிடமிருந்து வருகின்றன.   
 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Justin said:

நோக்கம் சர்வதேசத்திடம் உதவி கேட்பதாக இருந்தால் அவர்கள் தடை செய்த கொடியோடு போய் நிற்க்கக் கூடாது என்று யோசிப்பது புத்திசாலித்தனம்.

அது தான் இந்த "கவன" ஈர்ப்பின் நோக்கமென நினைத்தேன், இல்லையோ?

 மாவீரர் தினம் போல நிகழ்வுகளில் கொடிகள் எங்கள் இஷ்டப் படி பிடிக்கலாம்!

இந்த மாதிரியான ஊர்வலங்கள், கண்டன பேரணிகளில் பார்த்திருக்கிறேன் அநேகருக்கு இந்த புலிக்கொடி விஷயம் அவர்களின் உயிரோடு கலந்த ஒன்றை போலத்தான் பார்ப்பார்கள். அவ்வளவு அபிமானமும், பக்தியும். எதற்காகவும் விட்டுக்கொடுக்க அவர்கள் தயாராய் இல்லை. அவர்களை பொறுத்தவரை போராட்டத்தின் அடையாளம்.  அவர்களை கொடியை களைந்துவிட்டு வாருங்கள் என்றால் அதுவே ஒரு போராட்டமாக மாறும் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிப்பை கண்டிக்க ஐநாவிடம் ICPPG அவரச கோரிக்கை!

 
135470969_3851595364903506_5476466146007
 32 Views

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிப்பை கண்டிக்க ஐநாவிடம் ICPPG அவரச கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது.

கடந்த 8ம் திகதி இரவு யாழ். பல்கலைக்கழகத்தில்,  இலங்கை இறுதிப் போரில் இலங்கை அரசால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்கள் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி இலங்கை அரசின் அழுத்தம் காரணமாக பல்கலை நிர்வாகத்தால் இடித்தழிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்கலை மாணவர்கள், தமிழ் அரசியல் தலைவர்கள், முஸ்லீம் அமைப்புக்கள்,பொது மக்கள்,  புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள், தமிழகத்தில் உள்ள அரசியல் அமைப்புக்கள், சர்வதேச நாடுகள் என கடுமையான கண்டனங்களை வெளியிட்டிருந்தன.

இதைத் தொடர்ந்து, பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகளில் இலங்கை அரசாங்கம் தலையிடுவதனை தவிர்க்க வேண்டுமென்பதை அரசுக்கு வலியுறுத்துமாறு கோரி ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்திற்கு இனப்படுகொலையை தடுத்தல் மற்றும் தண்டித்தலுக்கான சர்வதேச மையத்தினால் (ICPPG) மகஜர் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ICPPG என்ற அமைப்பு ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள மகஜரில்,

“கடந்து 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இறுதிப்போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களால் அமைக்கப்பட்டதே முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (08.01.2021) இரவு இல.ங்கை இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர்; ஆகியோர் இணைந்து பல்கலைக்கழக வாயில் மூடப்பட்ட நிலையில நினைவு தூபி இடித்தழிக்கப்பட்டமையானது தமிழின உணர்வாளர்கள் மத்தியில் பல அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது.

இது வெறுமனே கல் மற்றும் மண்ணால் கட்டியெழுப்பப்பட்ட கட்டடம் அல்ல. உணர்ச்சிகளின் உறைவிடம். ஆந்தவகையில் இறந்தவர்களை நினைவு கூறும் அடிப்படை உரிமையைக்கூட இலங்கை அரசு பறித்து வருகின்றது. தவிர தமிழர்களின் பூர்வீக இடங்களில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி வருவதுடன் தமிழர்களின் கலாச்சார மத அடையாளங்களையும் அழித்து வருகின்றது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு காரணமான அரசே தற்போது மீண்டும் ஆட்சியிலுள்ளது. அது இனப்படுகொலைக்கான ஆதாரங்களை அழித்துவருகின்றது.

இதன் ஒரு பகுதியாகவே முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்தை கவனமாகவும் சீராகவும் அகற்ற திட்டமிட்டுள்ளது. இதனாலேயே முள்ளி வாய்க்கால் நினைவு சின்னத்தை அகற்ற ஒத்துழைக்காத முன்னாள் துணைவேந்தரை பதவிநீக்கம் செய்து அதற்கு ஒத்துழைத்த தற்போதைய துணைவேந்தரை நியமித்து அதனை அரங்கேற்றியுமுள்ளது.

இத்தகைய செயல்களை இலங்கை அரசு திட்டமிட்டு அரங்கேற்றி வருவதுடன் யுத்தம் முடிவடைந்து 12 ஆண்டுகள் ஆனபோதிலும் உண்மை நீதி மற்றும் பொறுப்புக்கூறலில் அவர்களில் தொடர்ச்சியான நிராகரிப்பை வெளிப்படுத்தி நிற்கின்றன.

கடந்த காலங்களில் சிங்கள பேரினவாதம் தமிழ் மக்களிற்கு எதிராக இழைத்த அதியுச்ச இனவழிப்பே முள்ளிவாய்க்கால் படுகொலை. தமிழ் மக்களைக் முள்ளிவாய்க்காலில் கொன்றொழித்தது மட்டுமன்றி அவர்களை நினைவுகூர்ந்து எமது உணர்வுகளை வெளிப்படுத்துவதனைக் கூட தடைசெய்வது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாது.

அத்துடன் இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்திற்கான அடிக்கல் மீண்டும் அதே இடத்தில் நாட்டுவதற்கு துணைவேந்தர் அளித்த வாக்குறுதியை வரவேற்பதோடு அதனை குறிப்பிட்ட காலத்தினுள் உரிய குழுக்களை அமைத்து விரைவில் பூர்த்திசெய்யவேண்டியும் வலியுறுத்துகிறோம்” என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/?p=39478

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் செயற்பாடு கவலை அளிக்கின்றது – ஐரோப்பிய ஒன்றியம்

 
1-106-696x392.jpg
 51 Views

யாழ் .பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடிப்புச் சம்பவம் பெரிதும் கவலையளிப்பதாகத் தெரிவித்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியம், இவ்வாறானதொரு பின்னணியில் நல்லிணக்கம் மற்றும் சிறுபான்மையினருக்கான நியாயாதிக்கம் என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தயாராக  இருப்பதாக கூறியிருக்கிறது.

இது குறித்து இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில்,

“போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் விதமாக யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னம் இடித்து அகற்றப்பட்டமை கவலையளிக்கிறது.

 

இந்தச் சம்பவம் மற்றும் அண்மைய காலங்களில் இடம்பெற்ற வேறு பல சம்பவங்கள் தொடர்பில் அவதானம் தெலுத்தப்பட்டுள்ளது.

இவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் காலத்தில் நடைபெறவிருக்கும் உயர் மட்டப் பிரதிநிதிகளின் கூட்டத்தின் போது ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கான நியாயாதிக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/?p=39475

  • கருத்துக்கள உறவுகள்

2009க்குப் பின்னர் புலம்பெயர் நாடுகளில் அரசியல் செயற்பாட்டாளர்களின்  பங்களிப்பு குறைந்துவிட்டது. அதனால் ஒரு போராட்டத்தை ஒழுங்குபடுத்தவும், பதாகைகள் தயாரிக்கவும் பெரிதாக ஆட்கள் இல்லை. அதனால் திடீரென ஒழுங்குபடுத்தப்படும் போராட்டங்களுக்கு ஸ்ரொக்கில் இருக்கும் பழைய பதாகைகளைப் பாவிக்கவேண்டிய நிலை இருக்கின்றது. முன்னர் யாழ் களம்கூட பதாகை தயாரிக்கவும், சுலோகங்களை எழுதவும் உதவி செய்திருந்தது. இப்போது சும்மா இருக்கின்றதுதானே!

பழைய ஸ்ரொக்கை விற்பதைப் பற்றியும் விமர்சனம் உள்ளது. நண்பர் ஒருவரின் பதிவில் இருந்து சில பகுதிகள்.

—-

அண்ணை எங்களுக்கும் ஒரு கொடி தாங்கோ புலிக்கொடியும் மாஸ்க்கும் 20 $ அதில போய் வாங்குங்கோ எனஒழுங்கு படுத்தலில் நிற்பவர் கூறுகிறார். ஆக இந்த போராட்டம் புலிக்கொடி 20 $ டாலருக்கு விற்பதற்கானபோராட்டமா? ......

புலிக்கொடி விற்கத் தெரிந்த நாதாரிகளுக்கு நாம் என்ன பிரச்சினைக்கு இந்த எதிர்ப்பு இயக்கத்தைநடாத்துகிறோம் என்கிற வாசகங்களையாவது சரிவர எழுதி அதை காட்சிப்படுத்த முடியவில்லையே. 

அங்காங்கு சிறிய எழுத்துக்களில் எழுதப்பட்ட விடயங்களைத் தாண்டி புலிக்கொடிகளே மிதந்து நின்றதைகாண முடிந்தது. 

அவையும் வேறு போராட்டங்களுக்கு ஏற்கனவே தயாரிக்கப்பட்ட stop genocide என்கிற வாசகமே 😢

இருப்பினும் மக்கள்  ஒரு எதிர்ப்புக் குரல் என்கிற வகையில்  உணர்வு பூர்வமாக கலந்து கொள்கின்றதைபார்க்கும் போது என்னால் அந்த புலிக்கொடி விடயத்தை பெரிதாக அலட்டிக் கொள்ள முடியவில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

இலங்கையின் செயற்பாடு கவலை அளிக்கின்றது – ஐரோப்பிய ஒன்றியம்

 
1-106-696x392.jpg
 51 Views

யாழ் .பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடிப்புச் சம்பவம் பெரிதும் கவலையளிப்பதாகத் தெரிவித்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியம், இவ்வாறானதொரு பின்னணியில் நல்லிணக்கம் மற்றும் சிறுபான்மையினருக்கான நியாயாதிக்கம் என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தயாராக  இருப்பதாக கூறியிருக்கிறது.

இது குறித்து இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில்,

“போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் விதமாக யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னம் இடித்து அகற்றப்பட்டமை கவலையளிக்கிறது.

 

இந்தச் சம்பவம் மற்றும் அண்மைய காலங்களில் இடம்பெற்ற வேறு பல சம்பவங்கள் தொடர்பில் அவதானம் தெலுத்தப்பட்டுள்ளது.

இவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் காலத்தில் நடைபெறவிருக்கும் உயர் மட்டப் பிரதிநிதிகளின் கூட்டத்தின் போது ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கான நியாயாதிக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/?p=39475

கிட்டத்தட்ட 11 வருசமா கவலைப்படுறியள் இன்னும் கவலைப்பட்டு முடியேலைப் போலை

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Sasi_varnam said:

விசுகு அண்ணா 
இந்த விவாதம் ஒரு நல்ல விடயமே. நானும் கூட நிறையவே பலருடன் இது பற்றி கதைத்திருக்கிறேன். ஆனாலும் இன்னமும் ஒரு தெளிவு இல்லை.
ஆக தனிப்பட்ட முறையில் யாரையும் சாடாமல் கருத்துக்களை மட்டும் வைக்கலாமே.

 

நன்றி சகோ

இங்கே  எம்  போன்றோரை அமைதியாக்கும்  வேலை  தான்  நடக்கிறதே  தவிர

செயற்பாடு ஏதுமில்லை

இங்கே உங்களது  செயற்பாடுகள் என்ன என்பதும் தனிப்பட எவரையும்  சுட்டிக்காட்டுவதல்ல  சகோ....

அப்படி  ஏதாவது இருந்தால்  நல்லது என்பதே....

அவர்கள் எம்மை கேள்வி  கேட்கலாம்

நாம்  உங்களது  செயற்பாடுகள் பற்றிக்கேட்டால்  அது தனி நபர்  சார்ந்ததாக்கி விடுவார்கள்

வீட்டுக்குள்ளிருந்து ஒரு கையை  தட்டினன்

சத்தமாக  இருந்தது என்பதையும் ஏற்க அறிவு வேண்டுமாம்

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, விசுகு said:

 

நன்றி சகோ

இங்கே  எம்  போன்றோரை அமைதியாக்கும்  வேலை  தான்  நடக்கிறதே  தவிர

செயற்பாடு ஏதுமில்லை

இங்கே உங்களது  செயற்பாடுகள் என்ன என்பதும் தனிப்பட எவரையும்  சுட்டிக்காட்டுவதல்ல  சகோ....

அப்படி  ஏதாவது இருந்தால்  நல்லது என்பதே....

அவர்கள் எம்மை கேள்வி  கேட்கலாம்

நாம்  உங்களது  செயற்பாடுகள் பற்றிக்கேட்டால்  அது தனி நபர்  சார்ந்ததாக்கி விடுவார்கள்

வீட்டுக்குள்ளிருந்து ஒரு கையை  தட்டினன்

சத்தமாக  இருந்தது என்பதையும் ஏற்க அறிவு வேண்டுமாம்

 

உங்களை அமைதியாக்க வேண்டிய தேவை யாருக்கும் இல்லை.

ஆனால், எங்கே அடிபட்டாலும் ஒரே உறுப்பைத் தூக்குவது போல, எந்த விமர்சனம் வந்தாலும் "நீ என்ன செய்தாய்?" என்ற தனிப் பட்ட கேள்வி வருவது உங்கள் போன்ற சிலரிடம் இருந்து மட்டும் தான். 

பாரியளவில் நடந்த  விடுதலை முயற்சியில் உயிரையும் உடல் அங்கங்களையும் கொடுத்தவர்கள் தவிர வேறு எவரும் "நான் செய்தேன்/கொடுத்தேன்" என்று பெருமையுடன் கூறத் தகுதியற்றோர் என்பது பொதுவான அபிப்பிராயம் விசுகர்!

நான் ஏற்கனவே ஒரு கருத்தில் சுட்டிக் காட்டியது போல, புலம் பெயர்ந்தோரின் சாமத்தியவீடு, கல்யாணவீடு படாடோபம் போல போராட்டத்திற்குக் கொடுத்த சில நூறு யூரோக்களையும் விலாசமாக அணிந்து கொள்வது எங்கள் தமிழ்க்குணம்! அப்படி விலாசம் காட்டாதவர்கள் சும்மா இருக்கிறார்கள் என்று நினைப்பதும் ஊர்க்குணம்! 

அனேக யாழ் வாசகர்கள் இதை எளிதாகப் புரிந்து கொள்வர்! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

எங்கே அடிபட்டாலும் ஒரே உறுப்பைத் தூக்குவது போல, 

மற்றவர்களுக்கு பாடம் எடுக்க முன்/மற்றவர்களின் கருத்துக்களை பெட்டிசம் போடும் முன் ஒரு சிலர் தங்களை பரிசோதனை செய்தால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

மற்றவர்களுக்கு பாடம் எடுக்க முன்/மற்றவர்களின் கருத்துக்களை பெட்டிசம் போடும் முன் ஒரு சிலர் தங்களை பரிசோதனை செய்தால் நல்லது.

நான் சொன்ன இதே உதாரணம் பல முறை உங்கள் நட்பு வட்டத்தில் இருப்போரால்  ஏனையோரை நோக்கிச் சொல்லப்பட்ட போது இந்த "அக்கறை" வந்ததோ??🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, Justin said:

நான் சொன்ன இதே உதாரணம் பல முறை உங்கள் நட்பு வட்டத்தில் இருப்போரால்  ஏனையோரை நோக்கிச் சொல்லப்பட்ட போது இந்த "அக்கறை" வந்ததோ??🤣

அந்த வசனத்தை நீக்கவும். இல்லையேல் நிழலி அல்லது   நிர்வாகத்துக்கு அறிவிக்கட்டுமா?

யாழ்களவிதிகளுக்கு முரணான வசனம் அது.. விளங்காவிடில் கள விதிகளை ஆரம்பத்திலிருந்து படியுங்கள்.

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

உங்களை அமைதியாக்க வேண்டிய தேவை யாருக்கும் இல்லை.

ஆனால், எங்கே அடிபட்டாலும் ஒரே உறுப்பைத் தூக்குவது போல, எந்த விமர்சனம் வந்தாலும் "நீ என்ன செய்தாய்?" என்ற தனிப் பட்ட கேள்வி வருவது உங்கள் போன்ற சிலரிடம் இருந்து மட்டும் தான். 

பாரியளவில் நடந்த  விடுதலை முயற்சியில் உயிரையும் உடல் அங்கங்களையும் கொடுத்தவர்கள் தவிர வேறு எவரும் "நான் செய்தேன்/கொடுத்தேன்" என்று பெருமையுடன் கூறத் தகுதியற்றோர் என்பது பொதுவான அபிப்பிராயம் விசுகர்!

நான் ஏற்கனவே ஒரு கருத்தில் சுட்டிக் காட்டியது போல, புலம் பெயர்ந்தோரின் சாமத்தியவீடு, கல்யாணவீடு படாடோபம் போல போராட்டத்திற்குக் கொடுத்த சில நூறு யூரோக்களையும் விலாசமாக அணிந்து கொள்வது எங்கள் தமிழ்க்குணம்! அப்படி விலாசம் காட்டாதவர்கள் சும்மா இருக்கிறார்கள் என்று நினைப்பதும் ஊர்க்குணம்! 

அனேக யாழ் வாசகர்கள் இதை எளிதாகப் புரிந்து கொள்வர்! 

 

திரும்பவும்  முதலில்  இருந்தா  சகோ

ஒரு  செயலை  விமர்சிக்கும் போது அதற்கான  மறு செயலை கேட்பது இயற்கையே??

பிழை  என்றால் சரியான  செயலை  நீங்கள்  எந்தளவுக்கு செயற்படுத்துகிறீர்கள்  என்பதில் தான் செய்பவர்கள்  தமது தவறை  உணரவோ  மாற்றவோ வழி.

உண்மையில் ஒரு  விடயத்தை செய்பவரின் பிழையை கேட்பதற்கு முன்னதாகவே 

அதை பிழை  என்பவர்களிடம் செயலும் விளக்கமும்  இருப்பதே உகந்தவழி  மாற்றுவழி

அதுவும்  பொது நலன் சாந்தது  தான்.  திருப்பிக்கேட்டால் தனிநபர் ஆகிவிடமுடியாது

இங்கே நீ என்று  ஒருவரை விரல்  காட்டி நான்  பேசியதில்லை

நீங்கள் என்பதற்குள் அது  சார்ந்த மாற்றுவழியை தொடர்பவர்கள் இருக்கிறார்கள்

அந்த  மாற்றுவழி  என்பது சில வருடங்களுக்கு முன்புவரை புலிகள்  விடுகிறார்கள் இல்லை இல்லாது விட்டால்  நாம் கிழித்து விடுவோம்  என்பதாக  இருந்தது

இப்பொழுது அவர்கள்  இல்லாதபோதும் மேடை  சரியில்லை வேசம் பொருந்தலை கலர் பிடிக்கலை என்று  தொடர்கிறது.

அந்த  வருத்தத்தில் வரும் வார்த்தைகளே அன்றி தனிப்பட எவர் மீதும் ஊர்க்குணத்தை  பாவிப்பதில்லை  அந்த  வயதுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, விசுகு said:

 

திரும்பவும்  முதலில்  இருந்தா  சகோ

ஒரு  செயலை  விமர்சிக்கும் போது அதற்கான  மறு செயலை கேட்பது இயற்கையே??

பிழை  என்றால் சரியான  செயலை  நீங்கள்  எந்தளவுக்கு செயற்படுத்துகிறீர்கள்  என்பதில் தான் செய்பவர்கள்  தமது தவறை  உணரவோ  மாற்றவோ வழி.

உண்மையில் ஒரு  விடயத்தை செய்பவரின் பிழையை கேட்பதற்கு முன்னதாகவே 

அதை பிழை  என்பவர்களிடம் செயலும் விளக்கமும்  இருப்பதே உகந்தவழி  மாற்றுவழி

அதுவும்  பொது நலன் சாந்தது  தான்.  திருப்பிக்கேட்டால் தனிநபர் ஆகிவிடமுடியாது

இங்கே நீ என்று  ஒருவரை விரல்  காட்டி நான்  பேசியதில்லை

நீங்கள் என்பதற்குள் அது  சார்ந்த மாற்றுவழியை தொடர்பவர்கள் இருக்கிறார்கள்

அந்த  மாற்றுவழி  என்பது சில வருடங்களுக்கு முன்புவரை புலிகள்  விடுகிறார்கள் இல்லை இல்லாது விட்டால்  நாம் கிழித்து விடுவோம்  என்பதாக  இருந்தது

இப்பொழுது அவர்கள்  இல்லாதபோதும் மேடை  சரியில்லை வேசம் பொருந்தலை கலர் பிடிக்கலை என்று  தொடர்கிறது.

அந்த  வருத்தத்தில் வரும் வார்த்தைகளே அன்றி தனிப்பட எவர் மீதும் ஊர்க்குணத்தை  பாவிப்பதில்லை  அந்த  வயதுமில்லை.

முதலில் இருந்து ஓட வேண்டிய தேவை இல்லை: மீரா ருல்பெனின் தனிப்பட்ட செயல்பாடுகளை கேட்டு, அதற்கு அவரது பதிலை நையாண்டி செய்து, பின்னர் சசி வந்து அமைதிப் படுத்தியமைக்கு நீங்கள் ஒரு பதில் எழுதியிருக்கிறீர்கள். அதில் என்ன எழுதினீர்கள் என்று அதற்குள் மறந்து விட்டீர்களா?🤔 

எனவே தான் என் கருத்தில் தெளிவாக சொல்லியிருக்கிறேன்: ஒருவர் தன் செயல்களை தோள்பட்டை நட்சத்திரம் போல அணிந்து கொள்வதும் அணியாமல் விடுவதும் அவர் விருப்பம்! அதை வெளிக்காட்டினால் தான் கருத்து வைக்கலாம்/ விமர்சிக்கலாம் என்ற ஒரு கற்பிதத்தை இங்கே உருவாக்குவதில் துரதிர்ஷ்ட வசமாக உங்களுக்கு பெரிய பங்கு இருக்கிறது! இது உங்களுக்கே தெரியாமல் நியூசாக இருப்பது தான் என் ஆச்சரியம்!  

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Justin said:

முதலில் இருந்து ஓட வேண்டிய தேவை இல்லை: மீரா ருல்பெனின் தனிப்பட்ட செயல்பாடுகளை கேட்டு, அதற்கு அவரது பதிலை நையாண்டி செய்து, பின்னர் சசி வந்து அமைதிப் படுத்தியமைக்கு நீங்கள் ஒரு பதில் எழுதியிருக்கிறீர்கள். அதில் என்ன எழுதினீர்கள் என்று அதற்குள் மறந்து விட்டீர்களா?🤔 

எனவே தான் என் கருத்தில் தெளிவாக சொல்லியிருக்கிறேன்: ஒருவர் தன் செயல்களை தோள்பட்டை நட்சத்திரம் போல அணிந்து கொள்வதும் அணியாமல் விடுவதும் அவர் விருப்பம்! அதை வெளிக்காட்டினால் தான் கருத்து வைக்கலாம்/ விமர்சிக்கலாம் என்ற ஒரு கற்பிதத்தை இங்கே உருவாக்குவதில் துரதிர்ஷ்ட வசமாக உங்களுக்கு பெரிய பங்கு இருக்கிறது! இது உங்களுக்கே தெரியாமல் நியூசாக இருப்பது தான் என் ஆச்சரியம்!  

 

ஆளுக்காள் விம்பம்  வைக்கவோ

நட்சத்திரம்  அணியவோ

தம்பட்டம் அடிக்கவோ

எந்த  தேவையும் இல்லை  சகோ..

இதே யாழில்  உங்கள்  பாகம்  என்ன  என்றும் என்னால்  பந்தி  பந்தியாக  எழுதமுடியும்?

ஆனால்  எனது  நூக்கம் அதுவல்ல

எனது  நேரமும்  அதற்காக  இல்லை

எனவே டொட்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

 

ஆளுக்காள் விம்பம்  வைக்கவோ

நட்சத்திரம்  அணியவோ

தம்பட்டம் அடிக்கவோ

எந்த  தேவையும் இல்லை  சகோ..

இதே யாழில்  உங்கள்  பாகம்  என்ன  என்றும் என்னால்  பந்தி  பந்தியாக  எழுதமுடியும்?

ஆனால்  எனது  நூக்கம் அதுவல்ல

எனது  நேரமும்  அதற்காக  இல்லை

எனவே டொட்.

விசுகு... சில ஆட்களுடன், விவாதிப்பதால்   உங்களது, நேரம் தான்...  விரயம் ஆகும்.

“நேரம் பொன்னானது” அதனை கருத்தில் கொண்டு.... சூதனமாக நடந்து கொள்ளுங்கப்பு. 😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.