Jump to content

முள்ளிவாய்க்காலுக்கு மட்டும் தூபி வேண்டாம்; பொதுத்தூபி அமைப்போம்: ஈ.பி.டி.பி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களிற்கு மட்டுமல்லாமல், இதுவரை உயிரிழந்த அனைவருக்குமான நினைவுத்தூபியையே யாழ் மாநகரசபை அமைக்க வேண்டுமென ஈ.பி.டி.பி வலியுறுத்தியுள்ளது.

யாழ் மாநகரசபை அமர்வில் இன்று, முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முடிவினை முன்னாள் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவிக்கையில்,

இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து உரிமைக்காக போராடிய அனைவரையும் நினைவுகூரும் வகையில் ஒரு பொதுவான நினைவு தூபி அமைக்கப்பட வேண்டும். இதுவே எமது கட்சியின் நிலைப்பாடு.

அந்தவகையில் யாழ் பல்கலைக்களக மாணவன் விஜிதரன் படுகொலை மற்றும் அவருக்கு நீீதி கேட்டு போராடிய விமலேந்திரன் உள்ளிட்ட மாணவர்களும் இதில் உள்வாங்கப்பட வேண்டும் என்றும் எனவும் தமது கட்சியின் கருத்தினை பதிவு செய்துள்ளார்.

தொடர்ந்து சபையின் ஏனைய உறுப்பினர்கள் தமது கருத்துக்களை தெரிவித்ததை அடுத்து முதல்வர் சபை அமர்பை ஐந்து நிமிடங்களுக்கு ஒத்திவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐந்து நிமிடத்தின் பின்னர் ஏனைய விடையங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக சபை அமர்பு ஆரம்பிக்கப்பட்டு தற்போதும் நடைபெற்று வருகின்றது.

https://www.pagetamil.com/167774/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈ. பி . டிபியினால் கொல்லப்பட்டவர்களுக்கும் தூபி அமைக்க தயாரா? இந்த நினைவுத்தூபிகள் உங்களது, உங்கள் எஜமானரது மனச்சாட்சியை உறுத்துகிறதா? சாதாரண மக்களை கொன்றுவிட்டு பயங்கரவாதிகளை கொன்றோம் என்று வீராப்பு பேசுவதற்கு இந்த நினவுத் தூபிகள் அச்சுறுத்தலாக உள்ளதோ? உண்மைகள் வெளிப்படும் காலம் நெருங்கிக்கொண்டு வருகிறது. 

Link to comment
Share on other sites

11 minutes ago, satan said:

ஈ. பி . டிபியினால் கொல்லப்பட்டவர்களுக்கும் தூபி அமைக்க தயாரா? இந்த நினைவுத்தூபிகள் உங்களது, உங்கள் எஜமானரது மனச்சாட்சியை உறுத்துகிறதா? சாதாரண மக்களை கொன்றுவிட்டு பயங்கரவாதிகளை கொன்றோம் என்று வீராப்பு பேசுவதற்கு இந்த நினவுத் தூபிகள் அச்சுறுத்தலாக உள்ளதோ? உண்மைகள் வெளிப்படும் காலம் நெருங்கிக்கொண்டு வருகிறது. 

இப்படி ஒவ்வொரு இயக்கமும் 1975 க்கு பிறகு கொலை செய்த எல்லோருக்கும் தனி தனி தூபி என்றால் வடக்கு கிழக்கு முழுவதும் தூபிகள் தான் இருக்கும். அதை விட யுத்த‍த்தில் இறந்த தமிழ் மக்கள் அனைவருக்கும் ஒரே தூபி நல்லது என்றே நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, satan said:

ஈ. பி . டிபியினால் கொல்லப்பட்டவர்களுக்கும் தூபி அமைக்க தயாரா? இந்த நினைவுத்தூபிகள் உங்களது, உங்கள் எஜமானரது மனச்சாட்சியை உறுத்துகிறதா? சாதாரண மக்களை கொன்றுவிட்டு பயங்கரவாதிகளை கொன்றோம் என்று வீராப்பு பேசுவதற்கு இந்த நினவுத் தூபிகள் அச்சுறுத்தலாக உள்ளதோ? உண்மைகள் வெளிப்படும் காலம் நெருங்கிக்கொண்டு வருகிறது. 

முள்ளிவாய்க்கால் தூபிகள்/நினைவுச்சிலைகள் என்பதுதான் அவர்களுக்கு பிரச்சனை. அதை ஏன் பொதுவாக பார்க்க மாட்டார்கள் என்பதிலிருந்தே உங்களுக்கு ஆயிரம் அர்த்தங்கள் விளங்கியிருக்க வேண்டும்.

எல்லாம் புலி வக்கிரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இருந்த போது இவங்களுக்கு தலைவர் சிம்ம சொப்பனுன்னு சொல்லித் திரிஞ்சாங்க..

புலிகள் இல்லாத போது.. தமிழ் மக்களே சிம்ம சொப்பனுன்னு சொல்லிக்கிட்டு திரியுதுங்க..

அடிப்படையில்.. இவர்கள் புலிகளுக்கு மட்டும் எதிரிகள் அல்ல. ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும் எதிரிகளாவர். எப்படி சிங்கள.. ஹிந்திய எஜமானர்களை கூல் பண்ணி தங்களின் கூலியை வசூலித்துக் கொள்வது மட்டுமே இவர்களின் ஆயுத அரசியல் கொள்கை ஆகும்.

இவர்கள் எப்பவுமே மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்கள் அல்ல... என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்கள். ஆனால் மக்கள் தான் மந்தைகளாக இவர்களுக்கும் வாக்குப் போட்டுக்கிட்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, tulpen said:

இப்படி ஒவ்வொரு இயக்கமும் 1975 க்கு பிறகு கொலை செய்த எல்லோருக்கும் தனி தனி தூபி என்றால் வடக்கு கிழக்கு முழுவதும் தூபிகள் தான் இருக்கும். அதை விட யுத்த‍த்தில் இறந்த தமிழ் மக்கள் அனைவருக்கும் ஒரே தூபி நல்லது என்றே நினைக்கிறேன். 

இப்போது இடிக்கப்பட்டிருப்பது முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கானதும், பல்கலைக்கழக மாணவர்களுக்கானதுமான நினைவித்தூபி. ஆகவே, அதை இருந்த இடத்தில், இருந்த வடிவில் மீள அமைப்பதே நியாயம். பிறகு வேண்டுமென்றால் கொல்லப்பட்ட அனைவருக்காகவும் ஒரு பொதுவான இடத்தில் ஒரு நினைவுத்தூபியினைக் கட்டலாம்.

முள்ளிவாய்க்காலில் நடந்தது மற்றைய இடங்களில் நடந்ததைப் போல ஒன்றல்ல. அது ஒரு திட்டமிட்ட இனவழிப்பு , ஆகவே வேறுபடுத்திக் காட்டப்படவேண்டியது அவசியம். அப்படி அவசியம் இல்லை, கொல்லப்பட்ட அனைத்து இலங்கையர்களுக்காகவும் தூபி கட்டுங்கள் என்று கேட்பது திட்டமிட்ட இனவழிப்பினை மறைக்கும் நடவடிக்கையே. 

இதை டக்கிளஸ் கேட்டது ஆச்சரியமில்லை, இங்கே சிலர் வழிமொழிவதுதான் விசித்திரமாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

8 hours ago, ரஞ்சித் said:

முள்ளிவாய்க்காலில் நடந்தது மற்றைய இடங்களில் நடந்ததைப் போல ஒன்றல்ல. அது ஒரு திட்டமிட்ட இனவழிப்பு ,

முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்ட இனம் ஈழத்தமிழர்.
வடக்கு-கிழக்கில் பெரும்பான்மையான இனம் இலங்கைத்தமிழர்.

மலையகத்தில் வாழ்பவர்கள் இந்தியத் தமிழர் என்ற இனம்.
சுமந்திரன், கஜேந்திரக்குமார் பொன்னம்பலம், விக்னேஸ்வரன் ஆகியோர் கொழும்புத்தமிழர் என்ற இனம். இந்த மற்ற இனத்தவர் அழிக்கப்பட்ட இனத்துக்காக குரல் கொடுக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, tulpen said:

இப்படி ஒவ்வொரு இயக்கமும் 1975 க்கு பிறகு கொலை செய்த எல்லோருக்கும் தனி தனி தூபி என்றால் வடக்கு கிழக்கு முழுவதும் தூபிகள் தான் இருக்கும். அதை விட யுத்த‍த்தில் இறந்த தமிழ் மக்கள் அனைவருக்கும் ஒரே தூபி நல்லது என்றே நினைக்கிறேன். 

அதை நான் சொல்லவில்லை, சிங்களத்தின் அடிமைகள் தமது திட்டம் நீத்துப்போனதால் சொல்கிறார்கள். பொதுவான தூபி அமைப்பதன்மூலம் முள்ளிவாய்க்கால் அவலத்தை மறைத்து விடலாம் என்கிற கனவில். 

Link to comment
Share on other sites

3 hours ago, satan said:

அதை நான் சொல்லவில்லை, சிங்களத்தின் அடிமைகள் தமது திட்டம் நீத்துப்போனதால் சொல்கிறார்கள். பொதுவான தூபி அமைப்பதன்மூலம் முள்ளிவாய்க்கால் அவலத்தை மறைத்து விடலாம் என்கிற கனவில். 

ஈழத்தமிழரின் எதிரி “சிங்களம்” அல்ல. அதை புரிந்து கொண்டு உண்மையான எதிரியை ஈழத்தமிழர் அடையாளம் காணும்வரை ஈழத்தமிழர் அழிவதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கற்பகதரு said:

முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்ட இனம் ஈழத்தமிழர்.
வடக்கு-கிழக்கில் பெரும்பான்மையான இனம் இலங்கைத்தமிழர்.

மலையகத்தில் வாழ்பவர்கள் இந்தியத் தமிழர் என்ற இனம்.
சுமந்திரன், கஜேந்திரக்குமார் பொன்னம்பலம், விக்னேஸ்வரன் ஆகியோர் கொழும்புத்தமிழர் என்ற இனம். இந்த மற்ற இனத்தவர் அழிக்கப்பட்ட இனத்துக்காக குரல் கொடுக்கிறார்கள். 

கண்டிச் சிங்கள இனம், கரையோரச் சிங்கள இனம், மத்திய மலைநாட்டுச் சிங்கள இனம் என்பன ஒன்றாகச் சேர்ந்து சிங்களம் என்கின்ற இனத்துக்காக ஒன்றாக  குரல் கொடுக்கின்ற போது,

படித்த என்று தங்களைத் தாங்களே கூறிக் கொள்கின்ற, சமூகத்தில் தாங்களே பெரியவா என்று தங்களைத் தாங்களே கூறிக் கொள்கின்ற, பதவிக்காகவும் காசுக்காகவும் எசமானரை மகிழ்விக்கவும் சொந்த இனத்தை இழிவுபடுத்த வெறுப்பைக் கக்க ஆயத்தமாக ஒரு இனம் எப்போதும் உள்ளதுதான் விசித்திரம்.. ☹️

1 hour ago, கற்பகதரு said:

ஈழத்தமிழரின் எதிரி “சிங்களம்” அல்ல. அதை புரிந்து கொண்டு உண்மையான எதிரியை ஈழத்தமிழர் அடையாளம் காணும்வரை ஈழத்தமிழர் அழிவதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.

யார் அந்த எதிரி என்று வெளிப்படையாகக் கூறலாமே.. 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

26 minutes ago, Kapithan said:

கண்டிச் சிங்கள இனம், கரையோரச் சிங்கள இனம், மத்திய மலைநாட்டுச் சிங்கள இனம் என்பன ஒன்றாகச் சேர்ந்து சிங்களம் என்கின்ற இனத்துக்காக ஒன்றாக  குரல் கொடுக்கின்ற போது,

படித்த என்று தங்களைத் தாங்களே கூறிக் கொள்கின்ற, சமூகத்தில் தாங்களே பெரியவா என்று தங்களைத் தாங்களே கூறிக் கொள்கின்ற, பதவிக்காகவும் காசுக்காகவும் எசமானரை மகிழ்விக்கவும் சொந்த இனத்தை இழிவுபடுத்த வெறுப்பைக் கக்க ஆயத்தமாக ஒரு இனம் எப்போதும் உள்ளதுதான் விசித்திரம்.. ☹️

யார் அந்த எதிரி என்று வெளிப்படையாகக் கூறலாமே.. 🤥

 

நாங்க 

அன்றும்  இன்றும்  என்றும்  மதில்  மேல  தான்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, tulpen said:

இப்படி ஒவ்வொரு இயக்கமும் 1975 க்கு பிறகு கொலை செய்த எல்லோருக்கும் தனி தனி தூபி என்றால் வடக்கு கிழக்கு முழுவதும் தூபிகள் தான் இருக்கும்.

நீங்கள்  சொன்னது சரியே.
ஒரு பொதுவான நினைவு தூபி அமைக்கப்படுவது ஒரு நல்ல யோசனை. ஆனால் இங்கே எதிர்ப்புகள் இருக்கிறபடியால் முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்கு என்று ஒரு தனி தூபியும் யுத்தத்தில் கொல்லபட்டவர்களுக்கு என்று ஒரு தனி தூபியுமாக இரண்டு தூபிகள் அமைக்கலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனக்கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுத்தூபி அமைக்க  சிங்கள அரசு அனுமதிக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

இனக்கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுத்தூபி அமைக்க  சிங்கள அரசு அனுமதிக்குமா?

இனக்கலவரங்கள் சாதி கலவரங்களில் உயிரிழப்பவர்களுக்கு நினைவுத்தூபி அமைக்கபடுவதில்லை.
இந்தியாவில் ஒவ்வொரு வருடமே இனகலவரங்கள் நடைபெறும்.

 

Link to comment
Share on other sites

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

இனக்கலவரங்கள் சாதி கலவரங்களில் உயிரிழப்பவர்களுக்கு நினைவுத்தூபி அமைக்கபடுவதில்லை.
இந்தியாவில் ஒவ்வொரு வருடமே இனகலவரங்கள் நடைபெறும்.

 

சாதிச்சண்டைகளும் வரலாற்று நிகழ்வுகள் தானே? ஏன் நினைவுத்தூபி அமைத்து வருடாவருடம் எங்கள் சாதிக்கு ஏற்பட்ட இழப்புகளை நினைவுகூர்ந்து இந்த இழப்புகளை பற்றி எமது அடுத்த சந்ததி அறிந்திருக்க வழிசெய்யக்கூடாது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:

சாதிச்சண்டைகளும் வரலாற்று நிகழ்வுகள் தானே? ஏன் நினைவுத்தூபி அமைத்து வருடாவருடம் எங்கள் சாதிக்கு ஏற்பட்ட இழப்புகளை நினைவுகூர்ந்து இந்த இழப்புகளை பற்றி எமது அடுத்த சந்ததி அறிந்திருக்க வழிசெய்யக்கூடாது?

இப்ப முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்கு நினைவுத் தூபி அமைக்க வேண்டுமா இல்லையா..  அதைக் கூறுங்கள் முதலில். 

பின்னர் ஆணவக் கொலைகள் தொடர்பாக ஒரு முடிவுக்கு வருவோம்.. 🤥

4 hours ago, விளங்க நினைப்பவன் said:

இனக்கலவரங்கள் சாதி கலவரங்களில் உயிரிழப்பவர்களுக்கு நினைவுத்தூபி அமைக்கபடுவதில்லை.
இந்தியாவில் ஒவ்வொரு வருடமே இனகலவரங்கள் நடைபெறும்.

 

இன அழிப்பிற்கு வைக்கலாம் அல்லவா.. 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விசுகு said:

 

 

நாங்க 

அன்றும்  இன்றும்  என்றும்  மதில்  மேல  தான்....

சிங்களம் JVP கிளர்ச்சிக் காலத்தில் கொல்லப்பட்ட JVPயினருக்கு நினைவுத் தூபி அமைக்க அனுமதிக்கிறது. 

ஆனால் ஒரு இனப்படுகொலை நடைபெற்றதை நினைவு கூர்வதற்கு சொந்த இனத்திற்குள்ளேயே நக்கலும் நையாண்டியும் செய்யும் இவர்களெல்லாம் யார்.. 

எல்லாம் எலிக் காச்சல்தான்... 😂

ஏனென்றால் இனப்படுகொலையை நினைவு கூரும்போது இனப்படுகொலைக் கெதிராகப் போராடிய விடுதலைப் புலிகளுமல்லவா நினைவுகூரப்படுவர்.

அத்தனை காழ்ப்புணர்வு.. வேறென்ன.. 🤮

 

Link to comment
Share on other sites

On 13/1/2021 at 22:53, ரஞ்சித் said:

இப்போது இடிக்கப்பட்டிருப்பது முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கானதும், பல்கலைக்கழக மாணவர்களுக்கானதுமான நினைவித்தூபி. ஆகவே, அதை இருந்த இடத்தில், இருந்த வடிவில் மீள அமைப்பதே நியாயம். பிறகு வேண்டுமென்றால் கொல்லப்பட்ட அனைவருக்காகவும் ஒரு பொதுவான இடத்தில் ஒரு நினைவுத்தூபியினைக் கட்டலாம்.

முள்ளிவாய்க்காலில் நடந்தது மற்றைய இடங்களில் நடந்ததைப் போல ஒன்றல்ல. அது ஒரு திட்டமிட்ட இனவழிப்பு , ஆகவே வேறுபடுத்திக் காட்டப்படவேண்டியது அவசியம். அப்படி அவசியம் இல்லை, கொல்லப்பட்ட அனைத்து இலங்கையர்களுக்காகவும் தூபி கட்டுங்கள் என்று கேட்பது திட்டமிட்ட இனவழிப்பினை மறைக்கும் நடவடிக்கையே. 

இதை டக்கிளஸ் கேட்டது ஆச்சரியமில்லை, இங்கே சிலர் வழிமொழிவதுதான் விசித்திரமாக இருக்கிறது.

ரஞ்சித், நீங்கள. கூறியது போல் முள்ளிவாய்க்கால்  விசேடமானது தான் அதை நினைவு கூரும் நினைவு சின்னம் நிச்சயம் அவசியமானது. அதில் எவருக்கும்  மாற்று கருத்து இருக்கமுடியாது.

ஆனால்  அதே வேளை மாகாண சபையோ அல்லது மாநகரசபையோ யுத்ததத்தில் இறந்த அத்தனை  மக்களுக்குமான ஒரு நினைவு சின்னத்தை அமைத்து அதை பராமரிப்பதோடு அங்கு இதுவரை இறந்த அனைத்து பொது மக்களினதும் அனைத்து இயக்க போராளிகளினதும் பெயர் விபரங்கள் கொல்லப்பட்ட திகதி, எந்த சந்தர்பத்தில் இறந்தார்  போன்ற விபரங்களை டிகிட்டல் முறையில் பார்வையிடக்கூடிய விதத்தில் அமைப்பது சாலச்சிறந்தது. தற்போதைய நிலையில் உடனடி சாத்தியமற்றதென்றாலும் அதை படிப்படியாக நிறைவேற்ற கூடியவிதத்தில் விபரங்களை சேகரித்து அதன் முன்னேற்பாடுகளை செய்யலாம். ஆனால் செயவதை  அனைவரது ஒத்துழைப்புடன் நிதானமாக சட்டபூர்வ அங்கீகாரத்துடன் செய்வது நல்லது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/1/2021 at 00:02, கற்பகதரு said:

சாதிச்சண்டைகளும் வரலாற்று நிகழ்வுகள் தானே? ஏன் நினைவுத்தூபி அமைத்து வருடாவருடம் எங்கள் சாதிக்கு ஏற்பட்ட இழப்புகளை நினைவுகூர்ந்து இந்த இழப்புகளை பற்றி எமது அடுத்த சந்ததி அறிந்திருக்க வழிசெய்யக்கூடாது?

சாதி பெருமைகள் பேசி சாதி இழப்புகளை நினைவுகூரும் எதிர்கால திட்டங்கள் வைத்திருப்பார்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி: 06        [1] குமரிக் கண்டம் :        தெற்கே அவுஸ்திரேலியா, மேற்கே ஆபிரிக்கா, வடக்கே தற்போது உள்ள இந்தியா முதலியவற்றை தொட்டுக் கொண்டு இலங்கையையும் உள்ளடக்கிக் கிடந்தது குமரிக்கண்டம் என்று வாதாடுபவர்கள் இன்னும் சிலர் உள்ளனர்.  இதுவே உலக நாகரிகத்தின் தொட்டில்; கன்னித் தமிழ் முன்னோரின் இருப்பிடம் என்று அதற்கு ஒரு மதிப்பும் கொடுக்கிறார்கள். எப்படி பூம்புகார் நகரம் கடலில் மூழ்கியதோ, அப்படி, இதுவும், ஆனால் மாபெரும் அனர்த்தத்தால் மூழ்கியிருக்கலாம் என நம்புகிறார்கள்??       ஸ்பென்சர் வேல்ஸ் [Spencer Wells] இனதும் பிச்சப்பன் [Pitchappan] இனதும் இந்த ஆய்வு மட்டும் கல்விமான்களின் கவனத்தை இந்திய [குறிப்பாக தமிழ் நாடு] பக்கம் திருப்பவில்லை. பிரித்தானிய கடல் துறை தொல் பொருள் ஆய்வாளர் கிரகம்ஹன்கொக் [Graham Hancock]  பூம்புகாரின் கடற்கரையிலிருந்து 3கி.மீ. தூரத்தில் 75 அடி ஆழத்தில் 2012ல் ஆய்வு மேற்கொண்டார். அங்கு, ஆய்வின் பொழுது, கடலடியில்  நகரம் ஒன்றைக் கண்டார். அது 9500 ஆண்டுகள் முதல் 11,500 ஆண்டுகள் வரை பழமையானது என்று கருதப் படுகிறது. அவருடைய கருத்தை டர்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளன் மில்னே [Dr.Glen Milne  / The Durham geologists] உறுதி செய்துள்ளார். எனவே, பூம்புகார் நாகரிகம் இக்கால ஈராக்கில் இருந்த சுமேரியா நாகரிகத்தை விடவும்  சிந்துவெளி நாகரிகத்தை விடவும், அதாவது அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடவும் பழமையானவை ஆகும் என்று மேலும் கருத்து கூறினார். முன்பு பனி யுகம் [ICE AGE  / பனி உருக்கு காலம்] எனப்படும் பனி உருகி கடல் மட்டம் உயர்வது நடந்து உள்ளதாக வரலாறு கூறும். அதாவது வடதுருவப் பனி உருகி பல நாடுகளின் பகுதிகள் கடலில் மூழ்கின என அறிகிறோம். அவ்வாறே, கடைசி பனி உருகும் காலத்தில், அதாவது 17000 இற்கும் 7000 ஆண்டிற்கும் இடையில் பூம்புகாரின் நாகரிகம் கடலடியில் முழ்கியுள்ளது என்கிறார்.     தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் என்ற நிறுவனம் 1980 ஆம் ஆண்டு தொடக்கம் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகரக் கடற்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டது. அப்பொழுது அங்கே கண்டு பிடிக்கப் பட்டவை, கிரகம்ஹன்கொக்கின் கொள்கையை மேலும் வலுவூட்டியது. ஆய்வின் போது, பூம்புகார் கடற் பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர குதிரை குளம்பு வடிவில் அமைந்த கட்டட பகுதியும்  கண்டறியப் பட்டன [படம்: 01]. இவை அனைத்தும் பூம்புகார் கடற் பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கி இருக்கக் கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருகிறது. சங்க காலத்தைச் சேர்ந்தது என கருதப்படும் சுட்ட செங்கற்களால்லான  கட்டிட அமைப்பு கடல்வற்றும் போது வானகிரி போன்ற பகுதிகளில் இன்னும் காணக் கூடியதாக உள்ளது.      இங்கு புதைந்து கிடப்பது ஒரு பட்டினம் மட்டுமல்ல. தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றின் தொன்மையும் கூட என நாம் கருத இடம் உண்டு. பூம்புகாருக்கு அருகில் உள்ள மேலப் பெரும்பள்ளத்தில் ஒரு முதுமக்கள் தாழியும் கிடைத்துள்ளது. 2700-2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த புறநானூறு 228, 256 முதுமக்கள் தாழி [burial urn] பற்றிய குறிப்பைத் தருகிறது.     "கலம் செய்கோவே கலம் செய்கோவே அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய சிறு வெண் பல்லி போலத் தன்னொடு சுரம் பல வந்த எமக்கும் அருளி வியன் மலர் அகன் பொழில் ஈமத் தாழி அகலிது ஆக வனைமோ நனந்தலை மூதூர்க் கலம் செய்கோவே."    [புறநானூறு 256]     ஒருபெண் தன் கணவனுடன் சென்று கொண்டிருந்தாள். அவர்கள் சென்று கொண்டிருந்த வழியில், போரில் அவள் கணவன் இறந்தான். கணவனை இழந்த அப்பெண், இறந்தாரை அடக்கம் செய்யும் தாழி செய்யும் குயவனை நோக்கி, “தாழி செய்யும் குயவனே! நான் வண்டியின் உருளையில் உள்ள ஆர்க்காலைப் [ஆரம் = ஆர்க்கால்] பற்றிக்கொண்டு வந்த பல்லிபோல் என் கணவனுடன் இங்கு வந்தேன். வந்த இவ்விடத்தில் அவன் போரில் இறந்தான். அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி ஒன்று தேவைப் படுகிறது. நீ அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி செய்யும் பொழுது, நானும் அவனுடன் உறையும் அளவுக்குப் பெரிய தாழியை எனக்காக அருள் கூர்ந்து செய்வாயாக” என்று அவள் வேண்டுவதாக இப்பாடலில் புலவர் கூறுகிறார்.     குமரிக்கண்டம் என்பது பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் கூறப்பட்ட கடலில் மூழ்கிப்போன ஒரு கண்டம் அல்லது பெரு நிலப்பரப்பாகும். இது இந்தியா கடலில், இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தெற்கே, ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக் காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பு என நம்பப்படுகிறது. இது பின் மூழ்கிப் போனதாக கருதப்படுகிறது. இந்த நிகழ்விற்கான சொல் அவர்களிடம் இருந்துள்ளது. அது தான் கடற் கோள் ஆகும் . இதன் கருத்து கடல் நிலத்தை விரைவாக விழுங்குதல் ஆகும்.     தேசிய கடலாராய்ச்சி நிறுவனம் மார்ச் 7, 1991ல் தரங்கம்பாடிக்கும் பூம்புகாருக்கும் இடையே உள்ள பகுதியில் கடல் ஆய்வு செய்தது. சோனோகிராப் [Sonography] எனப்படும் கருவியை இதற்குப் பயன்படுத்தினர். இந்தக் கருவி கடலில் மிதக்கும் போது, கடலுக்கடியில் கட்டடமிருந்தால் ஒலி எழுப்பக் கூடியது. அப்போது 23 மீ. ஆழத்தில் ஆங்கில எழுத்தான U வடிவத்தில் [குதிரைலாட  வடிவத்தில்] கட்டுமானம் ஒன்றைக் கண்டுபிடித்தனர். அதன் இரண்டு முனைகளுக்கும் மிடையில் 20 மீட்டர் தூரம் இருக்கும். அது கோயிலாகவோ அல்லது கோட்டை மதில் சுவராகவோ இருக்கலாம்?  இந்த கட்டுமானம் கிறிஸ்துக்கு முன் 9000 ஆண்டளவில் மூழ்கியிருக்கலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 11000 வருடங்களுக்கு முன் ஆகும். ஆகவே இந்த கட்டுமானம் மெசொப்பொத்தாமியா கட்டமைப்பை விட 5000 - 5500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த தொல்பொருள், புவியியல் சான்றுகள், முதலாவது தமிழ் சங்க காலத்தில், தமிழ் நாகரிகம் ஒரு உச்ச கட்டத்தில் இருந்ததை உறுதி படுத்துகின்றது. அப்பொழுது இலங்கை, தென் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. சில ஆராய்ச்சி யாளர்கள் கிறிஸ்துக்கு முன் 6000 க்கும் 3000 க்கும் இடைபட்ட காலத்தில் இவை பிரிந்து இருக்கலாம் என முடிவு செய்துள்ளார்கள். அதன் பின் தற்போதைய பாக்கு நீரினை தோன்றியிருக்கலாம் என்கின்றனர். ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாகவும் கோவலன், கண்ணகி வாழ்ந்த நகரமாகவும் விளங்கிய பூம்புகார் பல்வேறு சிறப்புகளைக் கொண்டதென இலக்கியத்தில் படித்திருக்கிறோம். சோழப் பேரரசின் தலைநகராக இருந்த பூம்புகார் ஊருக்கு காவிரிப்பூம் பட்டினம் என்றும் இன்னொரு பெயர் உண்டு. அப்படிப்பட்ட இந்த  நகரத்தை முழுமையாக அறிந்துகொள்ள பூம்புகார் குறித்த ஆய்வு மேலும் தீவிரப்பட வேண்டும் என்று எண்கிறேன்.     பாளி புத்த காப்பியம் 'மகாவம்சம்', புத்தர் காலத்தில் இலங்கையில் மனித இனத்திற்குக் கீழ்ப்பட்ட உயிரினமே [sub-human beings] இருந்ததாக குறிப்பிட்டு இருந்தாலும், உண்மையில் அங்கு மனிதர்கள் வாழ்ந்ததாக தொல் பொருள் ஆய்வு உறுதிப்படுத்தி உள்ளது. இலங்கையின் பாகியன் குகையில் (Fa Hien Cave), மேற்கொண்ட ஆய்வுகளில் அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆதி மனிதயெலும்புகள், அப்பெரிய குகையில் 37 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் துவங்கி 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்வரை, தொடர்ச்சியாகப் பல தலைமுறையினர் வாழ்ந்தனர் என்பது காணப்பட்டுள்ளது. மேலும் சில குகைகளிலும் இப்படி காணப்பட்டுள்ளன. அத்துடன் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகளும் அங்கு அவர்களின் சமூக வாழ்வை உறுதிப் படுத்து கின்றன. இவர்களை பலாங்கொடை மனிதன் (Homo sapiens balangodensis, Balangoda Man) என்று அழைக்கிறார்கள். இந்த பலாங்கொடை மனிதன் 174 செ.மீ. (ஐந்து அடி எட்டு அரை அங்குலம்) உயரம் உடையவனாகவும் காணப்படுகிறது. திரு R. பிரேமாதிலகே [Mr. R. Premathilake recorded in his paper presented at the seminar on ‘First Farmers in Global Perspective’] தனது 'உலகளாவிய பார்வையில் முதலாவது விவசாயிகள்' என்ற ஆய்வு கட்டுரையில், ஆரம்ப இரும்பு  காலத்தில், கி மு 900 ஆண்டில், குதிரை வளர்ப்பு, இரும்பு உற்பத்தி, மற்றும் நெல் சாகுபடி அனுராதபுரத்தில் காணப்பட்டதாகவும்,  கி மு 15,500 ஆண்டு அளவில் அங்கு பார்லி / வாற்கோதுமை மற்றும் ஓட்ஸின் / காடைக்கண்ணியின் [barley and oats] தொடக்க மேலாண்மை இருந்ததாகவும் கூறுகிறார் . அதே போல,   பேராசிரியர் T. W. விக்ரமநாயகே [Prof T. W. Wikramanayake] தனது 'வியயனின் வருகைக்கு முன் இலங்கையில் விவசாயம்' [‘Pre-Vijayan Agriculture in Sri Lanka’] என்ற புத்தகத்தில், வரலாற்றுக்கு முந்தைய குடியேற்றங்கள் இலங்கையில் 40,000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்றும், ஹோமோ சேபியன்ஸ் [Homo sapiens] தென் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உலவி இருப்பார்கள் என்றும், இலங்கையும் தென் இந்தியாவும் துண்டிக்கப் பட்ட பின்பும் கூட, அவைகளுக்கு இடையில், கடல் மட்டம் வீழ்ச்சியடைந்த போதெல்லாம், நில பாலங்கள் [land bridges] உண்டாகி இருக்கும் என்றும், எனவே தங்கு  தடை இன்றி, மரபணு ஓட்டம் அல்லது பரம்பரையலகு ஓட்டம் [gene flow] நடை பெற்று இருக்கும் என்றும், எனவே கட்டாயம் அங்கு தென் இந்தியருக்கும் இலங்கையருக்கும் ஒரு இனக் கலப்பு [complex patterns of miscegenation, between the pre-historical people of South India and Sri Lanka] நடை பெற்று இருக்கும் என்று வாதாடுகிறார்.  இவை எல்லாம், தென் இந்தியாவும் இலங்கையும் ஒரு நிலப்பரப்பாக இருந்ததையும், ஒரே மொழி பேசும் இன மக்கள் [ திராவிடம் அல்லது தமிழ்] இரு இடமும் உலாவியதையும், புத்தர் காலத்துக்கு முன்பே இலங்கையில் நாகரிக மக்கள் இருந்ததையும் எடுத்து காட்டுகிறது.      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]     பகுதி :07 தொடரும்       பி கு : படம் 02 : பூம்புகாரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி / burial urn found at Poompuhar         
    • 😀........ நீங்கள் இலங்கை அணியை மட்டும் தான் சொல்கிறீர்களா அல்லது இலங்கை அணி தோற்க வேண்டும் என்று இங்கு கும்பிட்ட 21 பேரையும் சேர்த்தும் சொல்கிறீர்களா என்று கொஞ்சம் குழப்பமாக இருக்குது........🤣.
    • எல்லோருக்கும் நன்றி  "புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு"  
    • உண்மை தான்.. ஆசிரியர் மாணவர்களும் நல்ல கட்டுப்பாடு. அதற்கு பிறகு எல்லாம் ஒரே மேய்ச்சல்.   அதிபரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
    • எங்களுக்கு தகவல்கள் துண்டு துண்டாகவே கிடைக்கின்றன. முழுமையான தகவல்களுடன் செய்தி வருவதும் குறைவு, செய்தியை பிரசுரம் செய்பவர்களும் அக்கறை எடுப்பது இல்லை. செய்தியை கிரகிப்பவர்களும் மட்டுப்படுத்தப்பட்ட  அறிவுடன் தமக்கு தெரிந்ததை விளங்கிக்கொள்கின்றார்கள்.  கல்வித்திணைக்களத்தின்/பரீட்சை திணைக்களத்தின் பங்கு இங்கு உள்ளது. நான் நினைக்கின்றேன் விசாரணைகளின் பின் பரீட்சை முடிவுகள் வெளிவிடப்படும். அல்லது இம்மாணவர்களுக்கு மீண்டும் பிரத்தியேக பரீட்சை வைக்கவேண்டும்.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.