Jump to content

வேலை வாய்ப்புக்கான skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வேலை வாய்ப்புக்கான skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள்.

locakdown காலத்தில் முடங்கி இருக்கும் போது, சும்மா வெட்டியாக பொழுதை போக்காமல், உங்கள் skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள்.

இந்த ஜனவரி மாதம், நிலைமை கொரோனாவுக்குள் சிக்காமல் இருந்திருந்தால், போரிஸ் ஜான்சன் IT skills வேலைகளுக்கு தெரசா மே கொண்டு வந்திருந்த விசா தடைகளை நீக்கி இருப்பார். இந்திய IT  காரர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். கொரோன தடை போட்டுவிட்டது.

அமேரிக்காவில் IT  காரர்களுக்கான H1B விசாவுக்கான புதிய வழிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளன. இந்திய IT காரர்கள்  எதிர்பார்ப்பது போல, பைடேன் பெரிய மாறுதல்களை செய்ய மாட்டார். காரணம் இந்த முடிவுகள் ஒரு ஆய்வுக்குழுவினால் எடுக்கப்பட்டது.

ஆகவே, இந்த அருமையான சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொள்ளுங்கள். கனேடிய, பிரிட்டிஷ் கடவுசீட்டு வைத்திருக்கும் இந்தியர்கள், மிக சரியாக இந்த சந்தர்ப்பங்களை பயன்படுத்துகிறார்கள்.

இன்னும் முக்கியமான விடயம். ஒன்லைன் வேலைகள் மூலமாக, ஒருவர், விசா, இம்மிகிரேஷன் எல்லாம் தாண்டி, பிறிதொரு நாட்டில் வேலை செய்யக் கூடிய சந்தர்ப்பம் உள்ளது என்பதை கவனியுங்கள்.

இன்று Aamazon Web Services (AWS), Azure கிளவுட் தொடர்பான வேலைகள் சும்மா துள்ளி ஆடுது. ஒரு நாளுக்கு, £500 முதல் £1,000 வரை போகிறது.

சும்மா, வெட்டி பொழுதினை போகாமல், உருப்படியாக எதையாவது செய்வோமா?

Software Engineer/Developer - Devops - Cloud - AWS

Location - Remote

Rate - £600 per Day

Our client, a leading bank is looking for a talented Software Engineer/Developer, who has a strong passion for cloud, Devops and AWS.

They are a focused team of exceptionally talented engineers, developers and designers committed to helping deliver value through use of latest technologies and ideas including blockchain, AI, Chatbots, Big Data etc. and developing our team through continued learning and challenging the ways of working to accelerate innovation trough agility, design thinking and hypothesis driven development.

Technical Solutions Architect - Urgent!

Remote - £650 p/Day

ContractPosted by: Cloud Consulting 

Posted: Wednesday, 20 January 2021 

 

IT  என்றவுடன் இந்தியர்கள் என்று நினைப்பதும் தவறு.

தென் ஆப்பிரிக்கர்கள் முதல், சிம்பாபே வரை உள்ளே வருகின்றனர். அண்மையில் நைஜீரியா காரர்கள் அதிகமாக வருகின்றனர்.

நம்மவர்களோ, நியாப்பிளப்புகளிலும், சப்பைக்கட்டுதல்களிலும் பொழுதை போக்குகின்றனர்.

முக்கியமாக, எம்மவர்களின் ஒரே தொழில் தரும், கணக்கியல்துறை, மென்பொருள் வளர்ச்சியினால் பெரும் ஆபத்தினுள் சிக்கி உள்ளது.

கேட்டால், நான் டபிள் அக்கௌன்டன்ட், பீலா வேறு. வருமுன் காப்போன் ஆக  இருங்கள்.

 

Link to comment
Share on other sites

  • Replies 110
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு நாதம்.

அது சரி யாரப்பா உந்த டபுள் எக்கவுண்ட்டன், ஒரு பதிவு போடும் அளவுக்கு உங்கள கடுப்பேத்தி இருக்கிறார்🤣. ரெய்னேற்ஸ் லேன் முடக்கில கடை வச்சிருக்கிறவரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸின் ஏர்பஸ் நிறுவனம் இங்கே லண்டனில் ஒரு ஆள் தேடியது. ஆங்கிலம் போதும், பிரஞ்ச்  தெரிந்திருந்தால் நல்லம்.... இதுதான் அவர்கள் சொன்னது.

நண்பர் ஒருவர் கிளம்பி போனார்.  பிரான்ஸ் தமிழரை, ஒரு இளைஞரை, தனது உதவியாளராக அழைத்துக் கொண்டு.... இவர் தமிழ் பேச, அவர் பிரெஞ்சில் விளாச, அவர்கள் அகமிழந்து போனார்கள்.

நல்ல காசு வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.... 

அது ஒரு உலகம்.

இங்கை பார்த்தால், ஒரே சில்லலெடுப்பா கிடக்குது.... தயவுடன், உந்த பிரயோசனம் இல்லாத,  நியாயப்பிளப்புகளை பார்ட் டைம் வேலையாக்கிப்போட்டு, fulltime வேலை செய்யுங்கோ. 

அடிப்படை ஆங்கில அறிவு உள்ளவர்கள், அங்கே அல்லலுறும் சமூகத்துக்காகவாவது உழையுங்கோ.

suddenly world WENT online and the demand for IT skills shot up like never before!!! 

Power BI Developer

  • London, South East
  • £450.00 - £550.00 per day
  • Hays
  • Contract
  • Posted 3 days ago
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி, கேட்க நல்லா தான் இருக்குது....

எங்க தொடங்கிறது? எண்டுதானே நினைக்கிறியள்?

database ஒன்றை முதலில் படித்து அறிந்து கொள்ளுங்கள். சரி, எங்கே?

youtube தான் உங்களது starting point.

அங்கைபோய் ms sql அல்லது oracle db type  பண்ணி, எதுக்கு, அதி கூடிய likes, நல்ல comments இருக்குது என்று பார்த்து, தொடங்குங்கள்.

முக்கியமாக, this year என பில்டர் பண்ணி, கொள்ளுங்கள், அதன் மூலம், புதிய version என்பதை உறுதிப்படுத்தலாம்.

வாழ்த்துக்கள்..... பட்டையை கிளப்புங்கள்....

நம்மாலும்  முடியும்.... கிளம்புங்கோ...

கனடாவில் நடந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், வந்த கார்கள் அனைத்துமே, மிக விலை கூடிய, தமிழரின், அரசியல், பொருளாதார பலத்தினை காட்டி செல்லுகின்றது என்று குமுறுகிறது சிங்கள பத்திரிகை.

அவனை.... இன்னும் வயித்தெரிச்சல் பட வைப்போம்..... கிளம்புங்கள், அய்யா... கிளம்புங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

Power BI Developer

  • London, South East
  • £450.00 - £550.00 per day
  • Hays
  • Contract
  • Posted 3 days ago

என்னது Power BI க்கே நாளுக்கு 450 பவுண்ட்ஸா ...?
அண்ணை  மாரே யாராவது எனக்கு U.K வீசா  எடுத்து தரமாட்டீர்களா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, அக்னியஷ்த்ரா said:

என்னது Power BI க்கே நாளுக்கு 450 பவுண்ட்ஸா ...?
அண்ணை  மாரே யாராவது எனக்கு U.K வீசா  எடுத்து தரமாட்டீர்களா 

அனுபவம் இருக்குதோ? எங்கை செய்தனியள்?

Link to comment
Share on other sites

நல்ல பதிவு நாதம்.

Power BI, Big data போன்றவற்றுக்கான அடிப்படைகளை படிப்பதற்கும் இன்னும் ஏராளமான துறைசார் படிப்பின் ஆரம்ப கட்டங்களை கற்பதற்கும் பின்வரும் இலவச இணையம் நன்கு உதவுகின்றது. 

https://www.coursera.org/

IT துறைக்கு மட்டுமல்ல எண்ணற்ற விடயங்களை கற்க முடியும் இந்த தளத்தில். என் நண்பன் ஜூட் பிரகாஷ் இதன் மூலம் யூதர்களின் வரலாற்றை படித்து Certificate ஒன்றையும் பெற்று இருக்கின்றான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நிழலி said:

நல்ல பதிவு நாதம்.

Power BI, Big data போன்றவற்றுக்கான அடிப்படைகளை படிப்பதற்கும் இன்னும் ஏராளமான துறைசார் படிப்பின் ஆரம்ப கட்டங்களை கற்பதற்கும் பின்வரும் இலவச இணையம் நன்கு உதவுகின்றது. 

https://www.coursera.org/

IT துறைக்கு மட்டுமல்ல எண்ணற்ற விடயங்களை கற்க முடியும் இந்த தளத்தில். என் நண்பன் ஜூட் பிரகாஷ் இதன் மூலம் யூதர்களின் வரலாற்றை படித்து Certificate ஒன்றையும் பெற்று இருக்கின்றான்.

சிறப்பு,

ஆனாலும், யூதர்களின் வரலாற்றில் சான்றிதழ் வாங்கி பயன் தான் என்ன என்று புரியவில்லையே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைப்பற்றி நேற்று  எனது  மக்களுடன் உரையாடியபோது...

தற்பொழுதே கிட்டத்தட்ட இதே  சம்பள நிலையில் தான் தாங்களும் உள்ளார்கள்  என்றும்

ஆனால் என்ன சில  நிறுவனங்கள் இவர்களை எடுத்து  தாமும் பங்கிட்ட உழைத்துக்கொள்கின்றன.

இவர்களுக்கு வேலைக்கு  கரண்டி மற்றும் அழுத்தம் குறைவு என்பதால்

தாம்  இதையே  விரும்புவதாகவும்  தொடர்வதாகவும் சொன்னார்கள்

 

நன்றி  நாதம் பதிவுக்கும்  நேரத்துக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விசுகு said:

 

ஆனால் என்ன சில  நிறுவனங்கள் இவர்களை எடுத்து  தாமும் பங்கிட்ட உழைத்துக்கொள்கின்றன.

நீங்க சொல்வது கன்சல்டண்சி நிறுவனங்கள். 

இதனைதான் இந்திய கன்சல்டண்சி நிறுவனங்கள் செய்கின்றன. விசா எடுத்து, கூட்டி வந்து, பெரும் பணத்தினை வாங்கி, கச்சான் கொட்டைகளை வீசி எறிந்து  விட்டு, தாம்  கொழுப்பது. 😳

மொழி, கலாசாரம், குடியுரிமை உள்ள நம்மவர்கள், நேரடியாக களத்தில் குதிக்க வேண்டும்.  

இதிலை, படிப்புக்கு அப்பால், வியாபாரம் உள்ளது.

அக்கினியத்திரா சொன்னதை கவனித்தீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

அனுபவம் இருக்குதோ? எங்கை செய்தனியள்?

அண்ணை நமது துறையே அதுதான் 
நான் .Net Full stack developer
(ASP .NET MVC, Web API) 
front end: Jquery frameworks (nodeJS,React, Angular),Tweeter Bootstrap
Cloud:  Azure devops, 
பிசினஸ் இன்டெலிஜென்ஸிற்கு SSRS,Crystal Reports ,Power BI 
Backend: Entitiy Framework (ORM),MS SqlServer and OracleDB 
இவற்றில் தான் நமது முழு நேர வேலையே, Power BI க்கே இவ்வளவு கொடுக்கினம் என்றால் 
நாமெல்லாம் அங்கேயிருந்தால் ஓவர்நயிட்டில அம்பானி தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

நல்ல பதிவு நாதம்.

Power BI, Big data போன்றவற்றுக்கான அடிப்படைகளை படிப்பதற்கும் இன்னும் ஏராளமான துறைசார் படிப்பின் ஆரம்ப கட்டங்களை கற்பதற்கும் பின்வரும் இலவச இணையம் நன்கு உதவுகின்றது. 

https://www.coursera.org/

IT துறைக்கு மட்டுமல்ல எண்ணற்ற விடயங்களை கற்க முடியும் இந்த தளத்தில். என் நண்பன் ஜூட் பிரகாஷ் இதன் மூலம் யூதர்களின் வரலாற்றை படித்து Certificate ஒன்றையும் பெற்று இருக்கின்றான்.

ஜூட் ஏ எல் சோதனையையே கதறடிச்ச மண்டைய்காய் உதை படிக்காமலே பாஸ் பண்ணி இருப்பார் 👍🏿

1 hour ago, Nathamuni said:

சிறப்பு,

ஆனாலும், யூதர்களின் வரலாற்றில் சான்றிதழ் வாங்கி பயன் தான் என்ன என்று புரியவில்லையே?

முதுகில் நடுவில் கடிக்கும் போது இலகுவாக சொறிய உதவும் நாதம்.

எப்போதும் எல்லாரும் படிப்பை பணம் பார்க்கும் கருவியாக மட்டும் பார்ப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை நமது துறையே அதுதான் 
நான் .Net Full stack developer
(ASP .NET MVC, Web API) 
front end: Jquery frameworks (nodeJS,React, Angular),Tweeter Bootstrap
Cloud:  Azure devops, 
பிசினஸ் இன்டெலிஜென்ஸிற்கு SSRS,Crystal Reports ,Power BI 
Backend: Entitiy Framework (ORM),MS SqlServer and OracleDB 
இவற்றில் தான் நமது முழு நேர வேலையே, Power BI க்கே இவ்வளவு கொடுக்கினம் என்றால் 
நாமெல்லாம் அங்கேயிருந்தால் ஓவர்நயிட்டில அம்பானி தான் 

அக்னி,

எங்கட கிருபன் ஜியும் உந்த துறைதான். பாருங்கோவன் ஆறுமாதத்தில ஆள் பிரைவெட் ஜெட் வாங்காட்டி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Nathamuni said:

பிரான்ஸின் ஏர்பஸ் நிறுவனம் இங்கே லண்டனில் ஒரு ஆள் தேடியது. ஆங்கிலம் போதும், பிரஞ்ச்  தெரிந்திருந்தால் நல்லம்.... இதுதான் அவர்கள் சொன்னது.

நண்பர் ஒருவர் கிளம்பி போனார்.  பிரான்ஸ் தமிழரை, ஒரு இளைஞரை, தனது உதவியாளராக அழைத்துக் கொண்டு.... இவர் தமிழ் பேச, அவர் பிரெஞ்சில் விளாச, அவர்கள் அகமிழந்து போனார்கள்.

நல்ல காசு வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.... 

அது ஒரு உலகம்.

இங்கை பார்த்தால், ஒரே சில்லலெடுப்பா கிடக்குது.... தயவுடன், உந்த பிரயோசனம் இல்லாத,  நியாயப்பிளப்புகளை பார்ட் டைம் வேலையாக்கிப்போட்டு, fulltime வேலை செய்யுங்கோ. 

அடிப்படை ஆங்கில அறிவு உள்ளவர்கள், அங்கே அல்லலுறும் சமூகத்துக்காகவாவது உழையுங்கோ.

suddenly world WENT online and the demand for IT skills shot up like never before!!! 

Power BI Developer

  • London, South East
  • £450.00 - £550.00 per day
  • Hays
  • Contract
  • Posted 3 days ago

இது உண்மையா ?...இப்போது வேலை வாய்ப்புக்கள் தொடர்பாக போலி விளம்பரங்கள் இணையத்தில்  வெளி வருகின்றது என்று கேள்விப்பட்டேன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இது உண்மையா ?...இப்போது வேலை வாய்ப்புக்கள் தொடர்பாக போலி விளம்பரங்கள் இணையத்தில்  வெளி வருகின்றது என்று கேள்விப்பட்டேன் 

 

அக்காவுக்கு  எல்லாத்துக்கும் சந்தேகப்படுவது ...
என்பதை கடலாக கற்று வைத்திருக்கிறார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இது உண்மையா ?...இப்போது வேலை வாய்ப்புக்கள் தொடர்பாக போலி விளம்பரங்கள் இணையத்தில்  வெளி வருகின்றது என்று கேள்விப்பட்டேன் 

அக்கா, அது வேறு உலகம் என்று சொல்லி விட்டேனே....

இதிலை என்ன சுத்து மத்து இருக்கேலும்..... 

லிங்க்ட் இன் என்று ஒரு சமூக வலைத்தளம் கேள்விபட்டிருப்பியல்.... அதுவழியே தான் தொடர்புகள் வரும்.

நீங்கள் சொல்வது... அடிப்படை வகை வேலை வாய்ப்புகள் என்று நினைக்கிறேன்....  🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

அக்னி,

எங்கட கிருபன் ஜியும் உந்த துறைதான். பாருங்கோவன் ஆறுமாதத்தில ஆள் பிரைவெட் ஜெட் வாங்காட்டி.

😂

நான் ஒருபோதும் contractor ஆக வேலை செய்யவில்லை! எனவே பிரைவேற் ஜெற் எல்லாம் வாங்கமுடியாது.🤣🤣

Data analytics, ML, AI எல்லாம் இப்போது hot topics என்பதால் அவற்றில் கால் பதிப்பது நல்லது. 

தமிழில் கற்க மிகவும் நல்ல தளம் கணியம் http://www.kaniyam.com

மிகவும் பிரயோசனமான பல தொழில்நுட்பங்களைப் பற்றி முற்றிலும் இலவசமான தகவல்கள் உள்ளன.

கம்பனி ஊடாகவே பலவற்றை LinkedIn learning மூலம் கற்கலாம். அப்படி வசதி உள்ளவர்கள் எப்படியும் ஒரு மணி நேரமாவது தினமும் கற்பதற்கு பாவியுங்கள்.

லொக்டவுன் என்பதால் நேரம் கிடைக்கும், பலதையும் கற்கலாம் என்று போன மார்ச்சில் நினைத்தது ஒரு வாரத்திலேயே பிழைத்துவிட்டது. வீட்டில் குஷியாக இருப்பவர்களுக்கு Broadband ஐ சீராகக் கொடுக்கும் வேலையில் இருப்பதால், சேவையில் தடங்கல் வரும் பலரின் கோபத்தையும், பழிகளையும் குறைக்கும் வழிவகைகளை ஆராய்ச்சி எல்லாம் நம் தலையில் விழுந்து உள்ளது!  சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவில் இருந்து வந்த புதிய CEO இன் connectivity பிரச்சினையைத் தீர்ப்பதிலும், அதற்கு விளக்கம் கொடுப்பதிலும் கடந்த இரண்டுநாள் போய்விட்டது.! 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

😂

நான் ஒருபோதும் contractor ஆக வேலை செய்யவில்லை! எனவே பிரைவேற் ஜெற் எல்லாம் வாங்கமுடியாது.🤣🤣

Data analytics, ML, AI எல்லாம் இப்போது hot topics என்பதால் அவற்றில் கால் பதிப்பது நல்லது. 

தமிழில் கற்க மிகவும் நல்ல தளம் கணியம் http://www.kaniyam.com

மிகவும் பிரயோசனமான பல தொழில்நுட்பங்களைப் பற்றி முற்றிலும் இலவசமான தகவல்கள் உள்ளன.

கம்பனி ஊடாகவே பலவற்றை LinkedIn learning மூலம் கற்கலாம். அப்படி வசதி உள்ளவர்கள் எப்படியும் ஒரு மணி நேரமாவது தினமும் கற்பதற்கு பாவியுங்கள்.

லொக்டவுன் என்பதால் நேரம் கிடைக்கும், பலதையும் கற்கலாம் என்று போன மார்ச்சில் நினைத்தது ஒரு வாரத்திலேயே பிழைத்துவிட்டது. வீட்டில் குஷியாக இருப்பவர்களுக்கு Broadband ஐ சீராகக் கொடுக்கும் வேலையில் இருப்பதால், சேவையில் தடங்கல் வரும் பலரின் கோபத்தையும், பழிகளையும் குறைக்கும் வழிவகைகளை ஆராய்ச்சி எல்லாம் நம் தலையில் விழுந்து உள்ளது!  சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவில் இருந்து வந்த புதிய CEO இன் connectivity பிரச்சினையைத் தீர்ப்பதிலும், அதற்கு விளக்கம் கொடுப்பதிலும் கடந்த இரண்டுநாள் போய்விட்டது.! 

 

 

சரி ஜெட் வேண்டாம் ஒரு கப்பலாவது வாங்கி தேம்சில நிப்பாட்டுங்கோ, அடுத்த ஒன்றுகூடலை நடத்தலாம்🤣.

அமெரிக்கன் சீஈஓ எண்டால் கடுமையா வேலை வாங்குவாங்களே?

சம்பளம் கூட என்று அமெரிக்க கொம்பனிக்கு போய், இதுக்கு கேரளாவுக்கு அடிமாடாய் போகலாம் என்ற நிலைக்கு ஆகின சிலரை எனக்கு தெரியும்.

ஒப்பந்த வேலைக்கு போவதில்லை என்பது சரியான முடிவே.

ஒரு வயசுக்கு மேல் work-life balance ரொம்ப முக்கியம். Contract வேலையில் இது கஸ்டம்.

மேலே விசுகு அண்ணாவின் பிள்ளைகள் மிக தெளிவாக சொன்னதும் இதைதான்.

வாழும் வயதில், வாழாமல் இரவு பகலாக ஓடிவிட்டு, 65க்கு மேல் நோய் சூழ, care-homeஇல் இருந்து பாங் பலன்சை பார்த்து இன்புறுவதில் என்ன பயன்🤣.

சும்மா இருப்பதே சுகம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Nathamuni said:

அக்கா, அது வேறு உலகம் என்று சொல்லி விட்டேனே....

இதிலை என்ன சுத்து மத்து இருக்கேலும்..... 

லிங்க்ட் இன் என்று ஒரு சமூக வலைத்தளம் கேள்விபட்டிருப்பியல்.... அதுவழியே தான் தொடர்புகள் வரும்.

நீங்கள் சொல்வது... அடிப்படை வகை வேலை வாய்ப்புகள் என்று நினைக்கிறேன்....  🙂

ஓ நீங்கள் படித்த ஆட்கள் எல்ல😉 தெரியாத்தனமாய் வந்திட்டன் ...மறந்து போயிட்டன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

சரி ஜெட் வேண்டாம் ஒரு கப்பலாவது வாங்கி தேம்சில நிப்பாட்டுங்கோ, அடுத்த ஒன்றுகூடலை நடத்தலாம்🤣.

அமெரிக்கன் சீஈஓ எண்டால் கடுமையா வேலை வாங்குவாங்களே?

சம்பளம் கூட என்று அமெரிக்க கொம்பனிக்கு போய், இதுக்கு கேரளாவுக்கு அடிமாடாய் போகலாம் என்ற நிலைக்கு ஆகின சிலரை எனக்கு தெரியும்.

ஒப்பந்த வேலைக்கு போவதில்லை என்பது சரியான முடிவே.

ஒரு வயசுக்கு மேல் work-life balance ரொம்ப முக்கியம். Contract வேலையில் இது கஸ்டம்.

மேலே விசுகு அண்ணாவின் பிள்ளைகள் மிக தெளிவாக சொன்னதும் இதைதான்.

வாழும் வயதில், வாழாமல் இரவு பகலாக ஓடிவிட்டு, 65க்கு மேல் நோய் சூழ, care-homeஇல் இருந்து பாங் பலன்சை பார்த்து இன்புறுவதில் என்ன பயன்🤣.

சும்மா இருப்பதே சுகம்🤣

5 நாளைக்கு 7 மணித்தியால வேலை

வருடத்துக்கு 9 கிழமை சம்பளத்துடன்  லீவு

மதியம் 12 இலிருந்து 2 மணிவரை சாப்பாட்டு நேரம்

அதில்  உடற்பயிற்சியிலிருந்து நீச்சல்  வரை  இலவசம்

(பக்கத்தில்  உதை பந்தாட்டத்துக்கும்  போய்வந்து நீச்சலடித்தபின் வேலைக்கு  திரும்பலாம்)

வேலைக்கு  உத்தரவாதம்

வேலை இல்லாவிட்டாலும்  சம்பளம்

இதை விட பெரியவனுக்கு  விருப்பமில்லை

ஆனால்  சின்னவருக்கு அண்ணனை சம்பளத்தில்  முந்த வேண்டும்  என்றால்.....???😂

பார்க்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, விசுகு said:

5 நாளைக்கு 7 மணித்தியால வேலை

வருடத்துக்கு 9 கிழமை சம்பளத்துடன்  லீவு

மதியம் 12 இலிருந்து 2 மணிவரை சாப்பாட்டு நேரம்

அதில்  உடற்பயிற்சியிலிருந்து நீச்சல்  வரை  இலவசம்

(பக்கத்தில்  உதை பந்தாட்டத்துக்கும்  போய்வந்து நீச்சலடித்தபின் வேலைக்கு  திரும்பலாம்)

வேலைக்கு  உத்தரவாதம்

வேலை இல்லாவிட்டாலும்  சம்பளம்

நாடு பிரான்ஸ் அல்லது இத்தாலி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

நாடு பிரான்ஸ் அல்லது இத்தாலி. 

பிரான்ஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் சொல்லுறது விசுகு அண்ணை, நாலு வருச படிப்பு கஷ்டம் தான், ஆனால் 40 வருச  சுகசீவனம்.

காரணம், மானேஜர் வைத்திருக்கிற மென்பொருளுக்கு, எப்ப பிரச்சனை வரும் எண்டு தெரியாது. பிரச்சனை மாதக்கணக்கில் வராமலும் போகலாம். சரி காசை ஏன் செலவழிப்பான் எண்டு நம்மை மாதிரி ஆட்களை வெளியே அனுப்பி, அடுத்த கிழமையே, நாங்கள் உள்ள வைத்து விட்டு வாற  சின்ன மென்பொருள் கன்னிவெடியல் வெடிக்க, கூப்பிடுவார் பாருங்கோ, அலறிக்கொண்டு....

அப்ப நாங்க விடுவோம் அருக்கானம்.... வேற வேலை தொடங்கீட்டன்.... பின்னேரம் ஏலுமெண்டா பார்ப்பம்.... அதுக்கு காரணம், காசை இன்னும் கூடக் கேட்க தான்....

ஒரு மணித்தியாலம், வேலை தடைப்பட்டாலும், தேவையான ஆளை, தயாராக வைத்திருக்காவிடில், மானேஜர் வேலை காலி. அவரிண்ட காசும் இல்லை. கம்பெனி காசு.... அதாலை.... கட்டாயம் ஒரு ஆள் வேணும்.... வைத்திருப்பார்.

மேனேஜர் வெள்ளை எண்டால், சிட்டில இருக்கிற, மசாலா தோசை கடைக்கு கொண்டு போய், இரண்டு தோசை வார்த்து விட, மனுசன் சிரிச்சு கொண்டு திரியும். அடுத்த முறை, நான் தான், காசு கொடுப்பேன்...ஆங்....

நான் முந்தியும் சொல்லி இருக்கிறேன். வேலையில போய், இன்டர்நெட்டில், கோசனோடை கும்மாங்குத்து, போட்டாலும் காசு விழும்.

இதனை புளுகளுக்கு சொல்லவைல்லை. IT நல்ல வேலை, நல்ல சம்பளம். வழமையான மானேஜர் மாரின் சொறி சேட்டைகள் இருக்காது. மிக முக்கியமாக, மிகப் பெரிய கம்பனிகளின் வாசல்கள் திறக்கும்.

இங்கிலாந்தில் இரண்டு நிறுவனங்கள் மதிய உணவு இலவசம். ஒன்று சாராய வியாபாரம்... கின்னஸ். அங்கே பார்க் றோயலில் வேலை செய்திருக்கிறேன். அடுத்தது பிபி பெட்ரோல் வியாபாரம். போனவருடம் சந்தர்ப்பம் வந்தது.... வேலை செய்து கொண்டிருந்த கொம்பனி மானேஜர் விடவில்லை. ஆகையால் போக வில்லை.

கின்னசில், வெள்ளிக்கிழமைகளில் ஸ்டாப் சோப் இல் 20% வரை கழிவு. காலையில் இருந்து, நண்பர்கள், லிஸ்ட் அனுப்புவார்கள்.....  இந்த கின்னஸ்  நிறுவனத்தில் நான் உள்ளே போகும் போது, நான் மட்டுமே பைனான்சில் 32 பேரில், வேறு நிறம். ஒரு கணக்காளனாக அங்கே போக எந்த சந்தர்ப்பமும் கிடையாது.

சிட்டில, சில காப்புறுதி நிறுவனங்கள், மாதத்தின் கடைசி வெள்ளி , காலை உணவு மட்டும் இலவசம்.

கனேரிவார்ப் HSBC வங்கியின் தலைமையகதின் கீழ்தளத்தில், பெரிய உணவு கூடம் உண்டு. எங்குமே பார்க்க முடியாத வகையில் பல உணவு தயாரிப்பு கவுன்டர்கள் இருக்கும். சீன, ஜப்பானிய, மெக்ஸிகோ, இந்திய, இத்தாலிய  என்று விரும்பிய கவுண்டர் போய், ஆர்டர் பண்ண, சமைத்தோ, தயார் செய்தோ தருவார்கள். subsidised price 

அது வேறு உலகம்.

பிச்சல் புடுங்கள், புண்ணாக்கு வேலை ஊரிலேயே செய்திருக்கலாம். இங்கை வந்தால், வந்த நோக்கத்துக்கு பலன் இருக்க வேண்டும் என்பதனை மறவாமல், வலு மிக்க உள உறுதியுடன் தயாராகுங்கள். 

****

உண்மையில், ஒரு சீக்கிய சிங்கனுடன் அசிஸ்டன்ட் அக்கௌன்ட் என்ற பரதேசி வேலையில் குமுறிக்கொண்டிருந்தேன். நான் கணக்கியல் துறையை சொல்லவில்லை. அந்த வேலையை, நான் இருந்த நிலையினை சொல்கிறேன்.

ஒரு தமிழக, சிவகாசி நண்பர், என்ன சார், டெய்லி லேட்டா வாறீங்க... என்ன பிளாட்போர்ம் என்றார்.... அப்படீன்னா என்ன என்றேன்?

அவருக்கு புரிந்து விட்டது. அப்புறம் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டு... தலையில் அடித்துக் கொண்டார். நாமெல்லாம் விசாவுக்கு அல்லாடுறோம்.... நீங்க பாஸ்போர்ட் வைத்துக்கொண்டே வேஸ்ட் சார் என்றார்.

இன்று அவர் தமிழகம் திரும்பி விட்டார். இனிய நண்பர். அவர் சொன்னதேயே திரும்பி சொன்னேன் மேலே. 

பிச்சல் புடுங்கள், புண்ணாக்கு வேலை ஊரிலேயே செய்திருக்கலாம். இங்கை வந்தால், வந்த நோக்கத்துக்கு பலன் இருக்க வேண்டும் என்பதனை மறவாமல், வலு மிக்க உள உறுதியுடன் தயாராகுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

இதைத்தான் சொல்லுறது விசுகு அண்ணை, நாலு வருச படிப்பு கஷ்டம் தான், ஆனால் 40 வருச  சுகசீவனம்.

இதைத்தான் நான் சொல்லி சொல்லி வளர்த்தேன் பிள்ளைகளை. 

இனி வாழ்வும் முடிவும் அவர்கள் கையில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதம்ஸ்.... நல்லதொரு பதிவிற்கு நன்றி. 
எனக்குத் தெரிந்தவர்கள்,  IT சம்பந்தப் பட்ட துறைகளில்,
கல்வி கற்காததால்... அவர்களுக்கு, இது சரிவராது என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
    • பிற்சேர்க்கை III வெஸ்டேர்ன் மெடிசின் Vs வெதமாத்தையா  அடுத்த பாகத்தை கொடுக்க பிந்தியமைக்கு மன்னிக்கவும். படங்களை போட்டது திரியை எழுத்தில் இருந்து படங்கள் நோக்கி திருப்பி விட்டது. ————— இலங்கை போவதில் ஒரு வசதி - கொஞ்சம் காசை செலவழித்து ஒரு புல் மெடிக்கல் செக்கப் செய்துகொண்டு வரலாம். அதுவும் நவலோக்க, டேர்டன்ஸ், ஆசிரி, லங்கா ஹொஸ்பிட்டல் போன்ற முதல் தர வைத்தியசாலைகளிலேயே £230 க்குள் ஒரு டோட்டல் மெடிக்கல் செக்கப்பை செய்துகொள்ளலாம்.. முன்னர் ஒரு காலம் இருந்தது யூகே NHS என்றால் உலகிற்கே முன்மாதிரி, ஆனால் இப்போ அப்படி இல்லை. எல்லாம் 14 வருட வலதுசாரி மகாராசாக்களின் ஆட்சி தந்த “முன்னேற்றம்”. இப்போதெல்லாம் ஜீ பி யிடம் அப்பாயின்மெண்ட் வாங்குவதை விட நோயில் சாகலாம் என்ற நிலை. அப்படியே ஜி பி யை சந்திக்க முடிந்தாலும், அவர் refer பண்ணி ஒரு ஸ்கான் எடுப்பதற்குள் சித்திரகுப்தன் சீட்டை கிழிக்க ரெடியாகி விடுவார். அத்தோடு இலவசம் என்பதால் கண்ட மாதிரி speculative டெஸ்டுகளும் எடுக்க refer பண்ண மாட்டார்கள். முதலில் தண்ணீர் குடியுங்கள், ரெஸ்ட் எடுங்கள் என்றே சொல்லி அனுப்புவார்கள். ஆகவே உடனடி கவனிப்பு தேவை எனில், ஒன்றில் கணிசமான அளவு பணத்தை கட்டி யூகேயில் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைக்க வேண்டும்.  அல்லது….இலங்கை அல்லது இந்தியா (பல்லு கட்ட போலந்து, துருக்கி) போன்ற நாடுகளுக்கு போய் இப்படி ஒரு செக்கப்பை செய்து வரலாம். இந்த ரிப்போர்ட்டுகள் எல்லாம் எடுக்க ஒரு நாள் செலவாகும். பின்னர் இதை வைத்து ஒரு கன்சல்டண்டுடன் உங்களுக்கு அப்பாயின்மெண்ட்டும் தருவார்கள். இதில் நன்மை என்னவென்றால் - இந்த டெஸ்டுகளில் ஏதாவது கோளாறாக கட்டினால் - அதை நேரடியாக இங்கே ஜி பி யிடம் காட்டும் போது - நோயின் தார்பரியம் அறிந்து வேலை கட…. கட…. என நடக்கும். எனக்கு தெரிந்த சிலர் முன்பே இவ்வாறு செய்திருந்தாலும், இதுவரை நான் செய்ததில்லை. இந்த முறை வயதும் 45 இன் அடுத்த பக்கத்துக்கு போய் விட்டதாலும், கடந்த 3 வருடத்தில் ஜி பி க்கள் தந்த அனுபவத்தினாலும் - ஒரு டெஸ்டை செய்ய முடிவு செய்தேன். இந்தியா போல் அல்லாது, இலங்கையில் health tourism த்தின் பெறுமதி இன்னும் வடிவாக அறியப்படவில்லை. விலைகளும் உள்ளூர் ஆட்களை குறிவைத்தே உள்ளன (வடை, கொத்து, சிகிரியா டிரிக்ஸ் இன்னும் இங்கே வரவில்லை).  ஒவ்வொரு ஆஸ்பத்திரியும், பல வகை வகையான packages வைத்திருக்கிறார்கள்.  ஒன்றிற்கு மூன்றாக தெரிந்த வைத்தியர்களிடம் கதைத்து - ஒரு package ஐ நானும் ஒரு முண்ணனி வைத்தியசாலையில் தெரிந்து கொண்டேன். டெஸ்ட் எடுக்கும் நாள் அதிக நிகழ்வுகள் இன்றி கழிந்தது. ஒவ்வொரு உடல் பகுதிக்குமுரிய இடத்துக்கு அந்த டெஸ்டுக்காக போகும் போது, அவை உள்ளூர் வாசிகளால் நிரம்பியே இருந்தது. எந்த நாட்டிலும், எந்த நிலையிலும் உணவுக்கு அடுத்து நல்ல பிஸினஸ் மருத்துவம் என்பது புரிந்தது. எல்லாம் முடிந்து கன்சல்டேசன் போனால் -கன்சல்டன் - எடுத்த எடுப்பிலேயே எந்த நாடு என்று கேட்டார் - டாக்டரிடம் பொய் சொல்ல கூடாதாமே? ஆகவே எனது “யாழ்பாணம்/மாடகளப்பு/வன்னி/இந்தியா” உத்தியை கைவிட்டு யூகே என உண்மையை சொன்னேன். கண்ணாடிக்கு மேலால் ஒரு பார்வை பார்த்து விட்டு, நான் அங்கேதான் மேற்படிப்பு படித்தேன், “இப்படி ஒரு முழுமையான டெஸ்டை அங்கே உன்னால் செய்யவே முடியாது அல்லவா”, என அவருக்கு ஏலவே தெரிந்த விடயத்தை என்னிடம் உறுதி செய்தார். என்ன இருந்தாலும் என் குஞ்சல்லவா? விட்டு கொடுக்க முடியாதே? ஆம், ஆனால் இங்கும் அரச வைத்தியசாலையில் இப்படி ஒரு முழுமையான டெஸ்டை செய்யமாட்டீர்கள்தானே என்றேன். உனக்கு வாயில் கொலஸ்டிரோல் கூட என்பதை போல் ஒரு பார்வை பார்த்து விட்டு, ரிப்போர்ட்டுக்கான வியாக்கியானத்தை ஆரம்பித்த வைத்தியர். 40 நிமிட கன்சல்டேசனின் பின், ஏலவே தெரிந்த விடயங்களை தவிர வேறு ஏதும் கோளாறு இல்லை என்பது நிம்மதியாக இருந்தாலும்…. இவ்வளவு செலவழித்துள்ளேனே…ஒன்றும் இல்லையா என இன்னொரு மனம் மொக்குத்தனமாய் ஒரு கணம் சிந்திக்கவும் செய்தது🤣. கடைசியாக…எனி அதர் குவெஸ்சன்ஸ் க்கு வைத்தியர் வர, என் நெடுநாள் உபாதையான சயாடிக்கா கால் வலியை பற்றி சொன்னேன். அக்கம் பக்கம் பார்த்த வைத்தியர், மெல்லிய குரலில் “இதுக்கு இங்கே உள்ள வெதமாத்தையாதான் சரி” என கூற, யாரையாவது ரெக்கெமெண்ட் பண்ண முடியுமா என நான் அவரை விட மெல்லிய குரலில் கேட்டேன். கன்சல்டேசன் அறையை விட்டு கிளம்பும் போது எனது போனில் ஒரு பிரபல வெதமாத்தையாவின் தொடர்பிலக்கமும், விலாசமும் சேமிக்கப்பட்டிருந்தது. ———————- ஆவலோடு காத்திருங்கள்! பிற்சேர்க்கை IV வெதமாத்தையாவும் ஆவா குரூப்பும்
    • 1994 இல் மயிலாப்பூர் சட்டமன்றத்துக்கும் இன்னுமொரு சட்டமன்றத்துக்கும் இடைக்கால தேர்தல் நடைபெற்றது.  யாராவது MLA காலமானால் அல்லது வேறு சில காரணங்களுக்காக இடைக்கால தேர்தல் நடைபெறும். தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெறாமல் ஒன்று இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவதினால் முக்கிய தலைவர்களை இத்தொகுதிகளில் அடிக்கடி காணலாம். நான் அடையார் , Besant நகர் பகுதியில் எனக்கு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு செல்வதுண்டு. அப்பொழுது பல தலைவர்களை பார்த்திருக்கிறேன். பாட்டாளி மக்கள் தலைவர் இராமதாஸ் சென்ற வாகனத்தில் மன்சூர் அலிகானை வந்திருந்தார். ‘ பிரபாகரன் கிரேட், இராவணன் கிரேட்’ என்று அவர் உரையாற்றினார்.  வைகோவுடன் எஸ் எஸ் சந்திரன் வந்திருந்தார்.  நடிகர் எஸ் எஸ் சந்திரன் மதிமுகவில் அப்பொழுது இருந்தார் கலைஞ்சர் கருணாநிதிஐக்கண்டதும் பல ஆதரவாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட சொன்னார்கள். ஒரு பிள்ளைக்கு ‘ கனிமொழி’ என்று பெயர் சூட்டினார். இன்னுமொரு பிள்ளைக்கு ‘இளவரசன்’ என்று பெயர் சூட்ட, ‘இவர் பெண் குழந்தை’ என்று குழந்தையின் தகப்பனார் சொல்ல ‘இளவரசி’,என்று கலைஞர் பெயர் சூட்டினார்.  ‘அவர்கள் லட்டினுள் மோதிரம் வைத்து குடுக்கிறார்கள் ( அதிமுக கட்சி) . வாங்குங்கள் . ஆனால் வாக்குகளை எமக்கு அளியுங்கள்’ என்றார். பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தருகில் துவிச்சக்கரவண்டியில் வரும்போது காவல்துறையினர் என்னையும் சேர்ந்து பலரை மறித்து நிறுத்தினார்கள். சில நிமிடங்களில் ‘அதோ அந்த பறவை போல’  பாடலை Band குழு ஒன்று இசை அமைக்க வாகனம் ஒன்று வந்தது. பின்னால் வந்த இன்னுமொரு வாகனத்தில் ஜெயலலிதா அவர்கள் துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்பு படைகளுடன் வந்து உரையாற்றினார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் வீட்டின் அருகே செல்லும் போது எப்போதும்கண்டும் காணாமல் மாதிரி செல்வார்.  ஆனால் தேர்தல் என்றதினால் கை குப்பி என்னை பார்த்து வணங்கினார். தமிழக பத்திரிகைகளில் தேர்தல் செய்திகள் வாசிப்பதுண்டு. இதனால் ஓரளவு ஆர்வம்
    • "மாற்றம்" [யாழ்ப்பாணத்து மருத்துவ மாணவனின் கதை]   துடிப்பான நகரமான யாழ்ப்பாணத்தில், இலங்கையின் வடபகுதியில், பரபரப்பான தெருக்களுக்கும், யாழ்ப்பாணக் கடல் நீரேரியின் [கடற்காயல் அல்லது வாவி] அமைதியான கடற்கரைக்கும் நடுவே, குறளரசன் என்ற இறுதியாண்டு மருத்துவ மாணவர் வாழ்ந்து வந்தான். தீவின் வரலாற்றில் வேரூன்றிய நீண்ட பரம்பரையுடன் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த குறளரசன், பல நூற்றாண்டுகளின் பாரம்பரியத்தின் எடையையும் 'மாற்றத்திற்காக' ஏங்கும் மக்களின் அபிலாஷைகளையும் [ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பையும்] தனக்குள் சுமந்தான். குறளரசன் மருத்துவம் படிக்கும் மாணவன் மட்டுமல்ல; அவன் தனது தமிழ் சமூகத்தின் உரிமைகள் மற்றும் அங்கீகாரத்திற்காக ஒரு தீவிர சமூக உழைப்பாளியாகவும் இருந்தான். தமிழரின் வாழ்வில் ஏற்பட்ட பின்னடைவுகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தின் வரலாற்று கதைகளிலும் மற்றும் இன்று நடைபெறும் அரசியல் அழுத்தங்களிலும் வளர்க்கப்பட்ட அவன், ஒரு அரசியல் 'மாற்றம்' தேவை என்பதை விரும்பியது  மட்டுமல்ல, தனது மக்களின் வாழ்வு மற்றும் செழிப்புக்கு அது இன்றியமையாதது என்றும்  நம்பினான். குறளரசன் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், இலங்கை வாழ் தமிழ் இளைஞர்களின், சமூகத்தின்  நம்பிக்கையின் விளக்காக நின்றது. இங்குதான் சிங்கள வம்சாவளியைச் சேர்ந்த, அனுராதபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட,  முதலாம் ஆண்டு மருத்துவ மாணவியான ருவனிக்காவை [Ruwanika] அவன் முதல் முதல் சந்தித்தான். அவர்களின் நட்பு இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டி ஆழமான ஒன்றாக மலர்ந்தது. ஆனால் அவர்களின் பாசத்தின் அரவணைப்பில் கூட, குறளரசனால் அவர்களது சமூகத்தை ஆட்கொண்ட ஆழமான வேரூன்றிய பிளவுகளின் நிழலை மறக்க  முடியவில்லை. அவன் அதில் உறுதியாக நின்றான்.  குறளரசன் தனது படிப்பில் ஆழமாக இருந்தாலும், தன் இலங்கை மக்களின் வரலாற்றை சரியாக அறிவதிலும் முழுமையாக தன் கவனத்தை செலுத்தினான். தமிழ் சிறுபான்மை யினருக்கும் சிங்கள பெரும்பான்மை அரசாங்கத்திற்கும் இடையிலான உறவில், அரசாங்க தலைவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும், பின் அவ்வாற்றில் முக்கியமான ஒன்றையேனும் நிறைவேற்றாமல் உடைக்கப்பட்டு கிடங்கில் போட்டத்தையும் மற்றும் ஒவ்வொரு முறையும் தமிழர்களின் சுதந்திரம், கல்வி, உரிமைகள், காணிகள், வழிபாடுகள் மேலும் மேலும் பறிக்கப்படத்தையும், மறுக்கப்படத்தையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் தொல்லைகளையும்  சிதைந்த கனவுகளையும் பற்றி அவன் அடிக்கடி சிந்தித்தான். 1957 பண்டாரநாயக்கா - செல்வநாயகம் உடன்படிக்கையில் இருந்து தொடர்ந்து பல தசாப்தங்களில் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான தோல்வியுற்ற முயற்சிகள் வரை, குறளரசன் காட்டிக்கொடுப்பு மற்றும் ஏமாற்றங்களின் தொடர்ச்சிகளைக் கண்டான்.  ஆனாலும், விரக்தியின் மத்தியில், புத்தரின் உண்மையான போதனைகளில் குறளரசன் ஆறுதல் கண்டான். ஞானம் பெற்றவர் போதித்த இரக்கம், சகிப்புத்தன்மை, புரிதல் ஆகிய கொள்கைகளை அவன் நம்பினான். இனம் மற்றும் மதத்தின் தடைகளைத் தாண்டி, இந்த விழுமியங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஒரு சமூகத்திற்காக அவன் ஏங்கினான். நீண்ட காலமாக தனது மக்களை ஒடுக்கிய ஒரு மகாவம்சம் என்ற புராண கதையின் கனத்துடனும் போராடினான். குறிப்பாக புத்த சமயத்தை போதிக்கும் துறவிகள், உண்மையில் இலங்கையில் முறையாக பின்பற்றுகிறார்களா என்று தனக்குத் தானே கேள்வி கேட்டான்?   மகாவம்சம், பாளி மொழியில் எழுதிய, புத்தமதத்தை முன்னிலைப்படுத்திய வரலாற்றின் புராணக் கதையாகும். மகாவிஹரா துறவிகள் கி பி 5ம் அல்லது கி பி 6ம் நூற்றாண்டில், புத்த மதத்தை பின்பற்றும் அரசனின் ஆதரவுடன், புத்த மதத்தை பின்பற்றும் வெவேறு இனக்குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு இனமாக, புராண விஜயனை பின்பற்றுபவர்களாக, சிங்கத்தின் வழித்தோன்றலாக, உருவாக்க முன், இலங்கையில் ஒரு சிங்கள இனம் என்று ஒன்றும் இருக்கவில்லை என்பது வரலாற்று உண்மையாகும். அதனை  முதல் வில்ஹெய்ம் கெய்கர் பாளி மொழியில் இருந்து ஜெர்மன் மொழிக்கும் பின்னர், 1912ல் ஆங்கிலத்திற்கும் மொழிப்பெயர்ப்பு செய்தனர், அதன் பின்பு தான் சிங்கள மொழிபெயர்ப்பு வந்தது, அதுவரை இலங்கையில் சிங்கள - தமிழ் வேறுபாடுகிடையாது, அதன் பின் தமிழருக்கு எதிரான கருத்துக்கள் தீவின் மீது நீண்ட நிழலைப் போட்டு இன்றைய நிலைக்கு இட்டுச் சென்றது. எனவேதான் குறளரசன் மற்றும் தமிழ் சமூகத்திற்கு, மகாவம்சம் ஒரு வரலாற்று புராண நூல் மட்டுமல்ல; அது ஒடுக்கு முறைக்கான ஒரு கருவி, ஓரங்கட்டப்படுதல் மற்றும் பாகுபாடுகளை நியாயப்படுத்த பயன்படுத்தப் பட்ட ஆயுதம் ஆக அது தென்பட்டது, அதனால் தான் பொய்யான புராண கதையில் இருந்து உண்மையான தொல்பொருள் மற்றும் வரலாறுச் சான்றுகள் கூடிய இலங்கை வரலாறு 'மாற்றம்' காணவேண்டும், உண்மையின் அடிப்படையில், இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ் பேசி வாழும் இலக்கை தமிழர்களின் மேல் அரசு கொண்டு இருக்கும் நிலையில் 'மாற்றம்' வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக புத்தரின் போதனைகளை போதிப்பவர்கள், அவர் வழியில் தங்கள் வாழ்க்கையை அமைக்கும்  'மாற்றம்' தேவைப்படுகிறது. இந்த மூன்று மாற்றங்களையும் தான் குறளரசன் காணத் துடித்தான்.   சிறுவயதிலிருந்தே, மகாவம்சத்தின் உண்மைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கும் பல வரலாற்று உண்மைகளை கற்றுக் கொண்டான், உண்மையை மறைக்கும் கட்டுக்கதைகள் மற்றும் பிரச்சாரத்தின் அடுக்குகளையும் அது முன்வைக்கும் ஆபத்தான முறையில் தவறாக வழிநடத்தும், வெறும் பக்கச்சார்பான விவரிப்புகளையும் அறிந்தான். இது சிங்கள புத்த  தலைமுறைகளின் மனதை விஷமாக்கும் பொய்கள் என்பதை அவன் உண்மையான சான்றுகளுடன் அறிந்தான். அதனால்த் தான் 'மாற்றம்' உடனடியாகத் தேவை என்கிறான்!  ஆனால் மகாவம்சத்தின் வஞ்சகத்தால் பாதிக்கப்பட்டது தமிழர்கள் மட்டும் அல்ல. இந்த வரலாற்று சூழ்ச்சிக்கு சிங்கள சாமானிய மக்களும் எப்படி பலியாகினர் என்பதை குறளரசன் இலங்கையின் இன்றைய நிகழ்வுகளில் நேரில் கண்டான். மற்ற சமூகங்களின் பங்களிப்புகள் மற்றும் இருப்பை அழிக்கும் அரசியல் மற்றும் மத தலைவர்களின் செயல்களில்! அது தான் 'மாற்றத்துக்காக' ஏங்குகிறான்!  புத்தர், ஞானம் பெற்றவர், இரக்கம் மற்றும் அகிம்சையின் செய்தியைப் போதித்தார், ஆனால் அவரது போதனைகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு சேவை செய்ய திரிக்கப்பட்டன. உலகளாவிய அன்பு மற்றும் புரிதல் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட ஒரு மதம், மற்றவர்களை ஒதுக்கி வைப்பதையும் ஒடுக்குவதையும் நியாயப்படுத்த எப்படி இன்று ஒத்துழைக்கப்பட்டது என்று குறளரசனால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. குறளரசனும் ருவனிக்காவும்  தங்களின் உறவின் சிக்கல்களை சிலவேளை எதிர் கொள்ளவேண்டி இருந்தது. அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள தப்பெண்ணங்கள் மற்றும் பாரபட்சங்களை அடிக்கடி எதிர்கொண்டனர். கடந்த காலத்தின் பாவங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டு, திருத்தப்பட்டு, மன்னிப்பு கேட்டு, அனைத்து சமூகங்களும் நல்லிணக்கத்துடனும், பரஸ்பர மரியாதையுடனும் இணைந்து வாழக்கூடிய எதிர்காலத்தை, இவ்வாறான அதி முக்கிய 'மாற்றத்தை' இருவரும் எதிர் பார்த்தனர்.  "இருஇனம் வாழும் ஒரு நாட்டில்  இருக்கையை பிடுங்கி எடுத்து தனதாக்கி இறுமாப்புடன் வரலாற்றையும் திருத்தி எழுதி இதயமற்று நசுக்குவது பெருமை அல்ல? "  "இச்சை படுத்துவதை உணர்ந்து நிறுத்தி  இணக்கம் கண்டு இதயம் பரிமாறி  இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு  இனியாவது மன்னிப்பு கேள் நாடுமுன்னேறும்! " இந்த 'மாற்றம்' தான் அவன் சுருக்கமாக எதிர்பார்ப்பது. எது எப்படியானாலும்,  அவர்களின் காதல் ஒரு இணக்கமான சகவாழ்வு சாத்தியம் என்பதற்கு ஒரு சான்றாக இருந்தது, கருத்து வேறுபாடு இலங்கையில் நிலவினாலும், அவர்களின் வாழ்க்கை என்ற கடலில், நம்பிக்கை கலங்கரை விளக்காக இருந்தது. வருடாந்த ஜெனிவா தலையீடுகள் குறளரசனுக்கும் அவரது சமூகத்திற்கும் ஒரு நம்பிக்கையை அளித்தன. இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் அமைப்பு ரீதியான அநீதிகளுக்கு தீர்வு காண சர்வதேச சமூகம் இங்குதான் கூடுகிறது. குறளரசன் அர்த்த முள்ள 'மாற்றத்திற்காகவும்', தனது கடமைகளை மதிக்கும் மற்றும் அனைத்து குடிமக்களின் கண்ணியத்தை நிலைநிறுத்தும் ஒரு அரசாங்கத்திற்காகவும் உருக்கமாக பிரார்த்தனை செய்தான். அவனுடன் அவனின் காதலி ருவனிக்காவும்  இணைந்து கொண்டாள். என்றாலும் குறளரசனும் ருவனிக்காவும் பாவத்தில் இருந்து இலங்கையை மீட்பதற்கான பாதை தடைகள் நிறைந்தது என்பதை உணர்ந்தனர். மேலும் 'மாற்றம்' எளிதில் வராது என்பது  குறளரசக்குத் தெரியும். அறியாமை மற்றும் தப்பெண்ணத்தின் தூக்கத்திலிருந்து ஒரு நாள் முழு சமூகமும் விழித்து, கடந்த கால தவறுகளை உணர்ந்து, நல்லிணக்கம் மற்றும் நீதியை நோக்கி ஒரு புதிய பாதையை உருவாக்குமா? அல்லது அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் அங்கீகரிக்கும் அதிகாரங்களை கட்டாயப்படுத்த சர்வதேச சமூகத்தின் இடைவிடாத அழுத்தம் தேவைப்படுமா?. அவன் மனம் அலை பாய்ந்தது. இந்த கவலையிலும், மற்றும் படிப்பாலும், அவன் சிலவேளை தனிமையை விரும்பினான். இதனால் அவன் ருவனிக்காவை சந்திப்பதும் குறையத் தொடங்கியது. இது அவளுக்கு ஒரு தவிப்பைக் கொடுத்தது.  ஒரு நாள் அவள், அவனின் காதில் விழக்கூடியதாக தன் தவிப்பை ஒரு சிங்கள பாடலை முணுமுணுத்து எடுத்துக் காட்டினாள். 'සිහිනෙන් වගේ ඇවිදින් ආයෙත් සැගවී හිටියේ කොහෙදෝ? මදකින්  පෙනී නොපෙනී ගියේ මේ ආදරේ හැටිදෝ  ?' 'නෙත සනසනා නුඹගේ සිනා මා රැය පුරා එය සිහි කලා නිදි දෙවු දුවත් අද නෑ ඇවිත් ඈතින් ඉදන් සරදම් කලා.'. 'නෙතු වෙහෙසිලා  දහවල  පුරා නුඹ සොය සොයා සිත දුර ගියා  මදකින්  පෙනී නොපෙනී ගියේ මෙ ආදරේ හැටිදෝ  ?'   குறளரசன் மௌனமாக கண்ணீர் சிந்தி, அதே பாடலை தமிழில் முணுமுணுத்தான். "மீண்டும் வருவாயோ கனவில் அணைப்பாயோ? எங்கே மறைந்தாய் ? எந்தத் தொலைவில் ? திடீரெனத் தோன்றுவாய்? சடுதியாக மறைவாய்? உண்மைக் காதலா?, வெறும் நாடகமா?" "சோர்ந்த கண்களுக்கு புன்னகை தைலம் இரவின் மடியில் முகத்தைக் காண்கிறேன்  இரவுதேவதை என்னைத் தழுவ மறுக்கிறாள்?  தூர விலகி கிண்டல் செய்கிறாள்?." "பகலில் கண்கள் சோர்வு அடையுதே  இதயம் அலைந்து உன்னைத் தேடுதே!  கண்ணுக்குள் அகப்படாதா காதலா இது? கணப்பொழுதில் கடக்கும் கனவின் மகிழ்ச்சியா ?" குறளரசன் தனது மருத்துவப் பயிற்சியின் இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அவன் நம்பிக்கைக்கும் விரக்திக்கும் இடையே கிழிந்துக் கொண்டு இருந்தான். முன்னோக்கி, செல்லும் நேரிய பாதை சவால்கள் நிறைந்ததாக இருந்தது, ஆனால் அவன் ஒரு சிறந்த நாளைய கனவுகளை என்றும் கைவிட மறுத்துவிட்டான். கல்வி, சுறுசுறுப்பு மற்றும் அன்பு ஆகியவற்றின் சக்தியை அவன் நம்பினான். பிளவு மற்றும் அவநம்பிக்கையால் பிளவுபட்ட சமூகத்தின் குழப்பங்களுக்கு மத்தியில் அவர்களின் காதல் மலர்ந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக முற்றங்களில் மற்றும் மாலை நேர உலாக்களில் அவர்கள் ஒருவருக்கொருவர் கைகளில் ஆறுதலைக் கண்டார்கள், அவர்களின் காதல் வெளியில் வீசும் புயல்களிலிருந்து ஒரு தற்காலிக அடைக்கலமாக இருந்தது.  "மாலை நேர தென்றல் என்ன பாடுதோ என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ?" "பூ விரிந்த சோலை என்ன எண்ணுதோ இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ தங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு?" ஒரு சிங்கள குடும்பத்தின் மகளான ருவனிக்காவுக்கு, குறளரசனை நேசிப்பது என்பது பிறப்பிலிருந்தே அவளிடம் சூழ்நிலை காரணமாக வேரூன்றியிருந்த தப்பெண்ணங்கள் மற்றும் பக்கசார்புககளின் தாக்கங்களை கலையத் தொடங்கியது. குறளரசனின் தமிழ் மக்கள் சமூகத்தின் விளிம்புநிலையில் நலிந்தபோது, எழுபத்தி ஆறு ஆண்டுகளாக, சலுகை மற்றும் அதிகாரத்தால் பயனடைந்த ஒரு சமூகத்தைச் தான் சேர்ந்தவர் என்ற குற்ற உணர்வுடன் அவள் சிலவேளை மல்யுத்தம் செய்தாள். ஆனால் குறளரசனிடம், அவள் ஒரு காதலியாக மட்டுமல்ல, நீதி மற்றும் சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஒரு பங்காளியாகவும் இருந்தாள். ஒன்றாக, காதல் இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டிய எதிர்காலத்தை கற்பனை செய்யத் துணிந்தனர், அங்கு கடந்த கால பாவங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டு பரிகாரம் செய்யப்பட்டன. அவர்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தின் வாசலில் நிற்கும் போது, குறளரசனும் ருவனிக்காவும் ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டனர், அவர்களின் காதல் இருள் கடலில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது. ஏனென்றால், அவர்களின் கூட்டணியில், மகாவம்சத்தின் எதிரொலிகள் மௌனமாகி, ஒற்றுமை, சமத்துவம் மற்றும் புரிந்துணர்விற்காக அழைப்பு விடுக்கும் குரல்களின் சேர்ந்திசையால் [கோரஸால்] பதிலீடு செய்யப்பட்ட எதிர்காலம் பற்றிய வாக்குறுதி இருந்தது. யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், குழப்பமான கடந்த காலத்தின் எதிரொலிகள் மற்றும் நிச்சயமற்ற எதிர்காலத்தின் கிசுகிசுக்களின் மத்தியில், குறளரசன் தனது மக்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உயர்ந்து நின்றான். மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய அவனது அசைக்க முடியாத நம்பிக்கையில், ஒரு நாள், தமிழர்களின் குரல்கள் கேட்கப்படும், அவர்களின் கனவுகள் நனவாகும், 'மாற்றம்' கட்டாயம் நிகழும் என்ற நம்பிக்கை, மற்றும் இரவீந்தரநாத் தாகூரின் கீதாஞ்சலி பாடல் [“Where the mind is without fear and the head is held high; Where knowledge is free;] அவனின் போராட்டத்தைத் தொடர ஊக்கம் & கொடுத்தது.  வலிமையைக் கொடுத்தது. "இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ, குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால் வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே  உடைபட்டுத் துண்டுகளாய்ப் போய்விட படவில்லையோ, வாய்ச் சொற்கள் எங்கே மெய்நெறிகளின் அடிப்படையிலிருந்து வெளிப்படையாய் வருகின்றனவோ, விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி பூரணத்துவம் நோக்கி தனது கரங்களை நீட்டுகிறதோ, அடிப்படை தேடிச் செல்லும் தெளிந்த அறிவோட்டம்  எங்கே பாழடைந்த பழக்கம் என்னும் பாலை மணலில் வழி தவறிப் போய்விட வில்லையோ, நோக்கம் விரியவும், ஆக்கவினை புரியவும் இதயத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ,  அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில் எந்தன் பிதாவே! விழித்தெழுக என் தேசம்!" [கீதாஞ்சலி / தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா] நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.