Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பராமரிப்பற்ற காணிகள் நல்லூர் பிரதேச சபைக்கு உடைமையாக்கப்படும்- மயூரன் எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பராமரிப்பற்ற காணிகள் நல்லூர் பிரதேச சபைக்கு உடைமையாக்கப்படும்- மயூரன் எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் பராமரிப்பற்ற காணிகள், காணி உரிமையாளர்களினால் பராமரிக்க தவறினால் குறித்த காணி சபை உடைமையாக்கப்படும் என அப்பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன் தெரிவித்தார்

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பல இடங்களிலுள்ள காணிகள், உரிமையாளர்களால் பராமரிக்கப்படாது புற்கள் வளர்ந்து காடுகளாக காட்சியளிக்கின்றது.

இந்நிலையில் குறித்த காணிகளை பிரதேச சபை உறுப்பினர்களுடன் நேரடியாக களவிஜயம் மேற்கொண்டு பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

மேலும், தற்போது டெங்கு நுளம்பு பரவும் நிலை காணப்படுகின்றது. எனவே நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியினை தூய்மையாகவும் அழகாகவும் பேணுவதற்கு நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட நிலையிலுள்ள காணி உரிமையாளர்கள் தமது காணிகளை உடனடியாக துப்பரவு செய்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்  குறித்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க தவறும் பட்சத்தில் பராமரிப்பற்ற காணிகள் அனைத்தும் நல்லூர் பிரதேச சபையின் உடைமையாக்கபடும் என மயூரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

http://athavannews.com/பராமரிப்பற்ற-காணிகள்-நல்/

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

காணிய ஏலத்துக்கு விடுகிற திகதிய ஒருக்கா சொல்லுங்கப்பூ.. 😉

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிருந்து போனவர்களின் குறியே நல்லூருக்குள் காணி வீடு வாங்குவது இப்ப என்ன செய்ய போகிறார்கள் ?

உடைமையாக்கி விட்டு இங்குவந்து மறந்து போயிருக்கும்கள். அந்த இடத்தில்  ஒரு பரப்பு காணி ஒரு கோடி போனது  என்றும் கேள்விப்பட்டன் . 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

இங்கிருந்து போனவர்களின் குறியே நல்லூருக்குள் காணி வீடு வாங்குவது இப்ப என்ன செய்ய போகிறார்கள் ?

உடைமையாக்கி விட்டு இங்குவந்து மறந்து போயிருக்கும்கள். அந்த இடத்தில்  ஒரு பரப்பு காணி ஒரு கோடி போனது  என்றும் கேள்விப்பட்டன் . 

உண்மை பெருமாள். 

அயலவர் ஒருவர், போர் உக்கிரமாக நடந்த நேரம்... நான்கு பரப்பு காணியை... ஒரு லட்ச ரூபாய்க்கு விற்றவர். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, Kapithan said:

காணிய ஏலத்துக்கு விடுகிற திகதிய ஒருக்கா சொல்லுங்கப்பூ.. 😉

7 minutes ago, பெருமாள் said:

இங்கிருந்து போனவர்களின் குறியே நல்லூருக்குள் காணி வீடு வாங்குவது இப்ப என்ன செய்ய போகிறார்கள் ?

உடைமையாக்கி விட்டு இங்குவந்து மறந்து போயிருக்கும்கள். அந்த இடத்தில்  ஒரு பரப்பு காணி ஒரு கோடி போனது  என்றும் கேள்விப்பட்டன் . 

 

கள்ளக்காணி புடிக்கிற சனங்கள் என்ன நித்திரையே கொள்ளுனம்?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அதிகாரம் பிரதேச சபைக்கு இருக்கிறதா?

 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

இந்த அதிகாரம் பிரதேச சபைக்கு இருக்கிறதா?

 

😡

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

😡

ஏன் கடுப்பாகிறிங்கள் கற்ப்ஸ்.

சிங்களவன் காணியை பிடிக்கிறான் எண்டு கத்தி கொண்டு, இன்னொரு தமிழனின் காணியை அரசுடமையாக்குவோம் என்பது நல்லாவா இருக்கு?

காணியை துப்பராவாக வைக்காதோருக்கு அபராதம் விதிப்போம் என்பது சரி, காணியையே அரசுடமையாக்குவோம் என்றால்?

தனது சொந்த காணியை வெறுங்காணியாக வைத்திருப்பது காணி உரிமையாளர் உரிமை அல்லவா?

பற்றை என்றால் என்ன? இயற்கையான தாவர வளர்ச்சி. அதில் நீர் தேங்கி நுளம்பு பெருகாமல், இதர சுகாதார கேடுகள் வராமல் இருக்கும் வரை காணிக்காரன் பற்றை வளர்க்க விரும்பினால் வளர்க்கட்டுமே.

இது வெறும் வாய்சவாடலாகவே படுகிறது. 

இவர்களது சண்டித்தனம் எல்லாம் சக தமிழர்களோடுதான்.

நல்லூருக்குள்தான் வருகிறது மந்திரிமனை, உருக்குலைந்து, சுவர் எல்லாம் கிறுக்கி, நாய்களும் பஸ், லொறி டிரைவர்மார் தூங்கும் இடமாக இருக்கிறது. அதை பார்க்க வக்கில்லாத பிரதேசசபை தனியார் காணி கண்ணுக்க குத்துது.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும்  ஒன்றரைப்பரப்பு  கிடக்கு

அடக்கி  வாசிப்பம்

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, goshan_che said:

ஏன் கடுப்பாகிறிங்கள் கற்ப்ஸ்.

சிங்களவன் காணியை பிடிக்கிறான் எண்டு கத்தி கொண்டு, இன்னொரு தமிழனின் காணியை அரசுடமையாக்குவோம் என்பது நல்லாவா இருக்கு?

காணியை துப்பராவாக வைக்காதோருக்கு அபராதம் விதிப்போம் என்பது சரி, காணியையே அரசுடமையாக்குவோம் என்றால்?

தனது சொந்த காணியை வெறுங்காணியாக வைத்திருப்பது காணி உரிமையாளர் உரிமை அல்லவா?

பற்றை என்றால் என்ன? இயற்கையான தாவர வளர்ச்சி. அதில் நீர் தேங்கி நுளம்பு பெருகாமல், இதர சுகாதார கேடுகள் வராமல் இருக்கும் வரை காணிக்காரன் பற்றை வளர்க்க விரும்பினால் வளர்க்கட்டுமே.

இது வெறும் வாய்சவாடலாகவே படுகிறது. 

இவர்களது சண்டித்தனம் எல்லாம் சக தமிழர்களோடுதான்.

நல்லூருக்குள்தான் வருகிறது மந்திரிமனை, உருக்குலைந்து, சுவர் எல்லாம் கிறுக்கி, நாய்களும் பஸ், லொறி டிரைவர்மார் தூங்கும் இடமாக இருக்கிறது. அதை பார்க்க வக்கில்லாத பிரதேசசபை தனியார் காணி கண்ணுக்க குத்துது.

காணிய ஏலத்தில எடுக்கிற ஐடியாவுக்கு ஆப்பு வைக்கிறீங்களப்பூ.. 😡

2 hours ago, குமாரசாமி said:

 

கள்ளக்காணி புடிக்கிற சனங்கள் என்ன நித்திரையே கொள்ளுனம்?

ஏன் பழச ஞாபகப் படுத்திறீங்க... 😡

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

காணிய ஏலத்தில எடுக்கிற ஐடியாவுக்கு ஆப்பு வைக்கிறீங்களப்பூ.. 😡

🤣 உந்த சோலியே வேண்டாம் 🤣

ஏலத்தில எடுத்து போட்டு நீங்கள் பிளேன் ஏற, பற்றையா கிடக்கு எண்டு அடுத்த ஏலத்தை ஆரம்பிச்சுடுவாங்கள் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

🤣 உந்த சோலியே வேண்டாம் 🤣

ஏலத்தில எடுத்து போட்டு நீங்கள் பிளேன் ஏற, பற்றையா கிடக்கு எண்டு அடுத்த ஏலத்தை ஆரம்பிச்சுடுவாங்கள் 🤣

திருக்கோணமலையிலுள்ள எங்கள் வீட்டிற்கு இடைக்கிட தண்டம் அடிக்கிறவங்க. பிறகு கதச்சு சரிப்படுத்துறது. கொஞ்சம் பெரிய காணி. பராமரிப்பு கொஞ்சம் கடினம். ஆனாலும் பராமரிக்க முடிந்த அளவு முயற்சிக்கிறது. ஆனாலும் .... முடியல🤣

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Kapithan said:

திருக்கோணமலையிலுள்ள எங்கள் வீட்டிற்கு இடைக்கிட தண்டம் அடிக்கிறவங்க. பிறகு கதச்சு சரிப்படுத்துறது. கொஞ்சம் பெரிய காணி. பராமரிப்பு கொஞ்சம் கடினம். ஆனாலும் பராமரிக்க முடிந்த அளவு முயற்சிக்கிறது. ஆனாலும் .... முடியல🤣

கொஞ்ச செலவழிச்சு வாசலில் “இயற்கை வேளாண் மூலிகை பண்ணை” என்று ஒரு போர்ட்ட போடுங்கோ😀

  • கருத்துக்கள உறவுகள்

தெல்லிப்பளையில் பல காணிகள் பெருமளவில் பற்றை வளர்ந்து பாம்புப் புற்றுகளோடு, எங்கிருந்து எப்படி வந்தனவோ தெரியவில்லை...! பன்றிகளும் குடிகொள்ளத் தொடங்கியிருந்தன. காணிகளுக்குரியவர்கள் அனேகமானவர்கள் மேட்டுக்குடித் தடிப்புக் கொண்டவர்கள். கொழும்பு, வெளிநாடென்று வதிவிடம் தேடிக்கொண்டார்கள். அந்த நேரத்தில் இராணுவத்தினர் வந்து வெற்றுக் காணிகளைப் படம்பிடித்துச் சென்றதாக ஒரு கதை அங்கு அடிபட்டது. அது உண்மையா? யாராவது பரப்பினார்களா? என்று தெரியவில்லை, அடுத்த சில நாட்களில் காணிகள் அனைத்தும் துப்பரவாகித் தோட்டம் துரவுகள் ஆனது. 

1 hour ago, goshan_che said:

காணியை துப்பராவாக வைக்காதோருக்கு அபராதம் விதிப்போம் என்பது சரி, காணியையே அரசுடமையாக்குவோம் என்றால்?

அபராதம்தானே, கொழும்பிலும், வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு பணம் ஒரு பொருட்டல்ல. அரசுடமை ஆகிறதென்றால் அடித்துப் பிடித்து ஓடிவருவார்கள். யாழ்ப்பாண மேட்டுக்குடித் தமிழர்களைப் பற்றி என்னென்னவோ எழுதுகிறீர்கள், அவர்கள் குணநலம் பற்றி எதுவும் தெரியாதுபோல் உள்ளது.   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

கொஞ்ச செலவழிச்சு வாசலில் “இயற்கை வேளாண் மூலிகை பண்ணை” என்று ஒரு போர்ட்ட போடுங்கோ😀

Brennnessel pflanzen und pflegen - Mein schöner Garten

குப்பைமேனியின் மருத்துவபயன்கள்.

ஆஹா.... இது, நல்ல ஐடியாவாக இருக்கே... 👍 :grin:
காஞ்சோண்டி, குப்பை மேனி... எல்லாம் மருத்துவ தாவரங்கள் தானே... 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Paanch said:

தெல்லிப்பளையில் பல காணிகள் பெருமளவில் பற்றை வளர்ந்து பாம்புப் புற்றுகளோடு, எங்கிருந்து எப்படி வந்தனவோ தெரியவில்லை...! பன்றிகளும் குடிகொள்ளத் தொடங்கியிருந்தன. காணிகளுக்குரியவர்கள் அனேகமானவர்கள் மேட்டுக்குடித் தடிப்புக் கொண்டவர்கள். கொழும்பு, வெளிநாடென்று வதிவிடம் தேடிக்கொண்டார்கள். அந்த நேரத்தில் இராணுவத்தினர் வந்து வெற்றுக் காணிகளைப் படம்பிடித்துச் சென்றதாக ஒரு கதை அங்கு அடிபட்டது. அது உண்மையா? யாராவது பரப்பினார்களா? என்று தெரியவில்லை, அடுத்த சில நாட்களில் காணிகள் அனைத்தும் துப்பரவாகித் தோட்டம் துரவுகள் ஆனது. 

கதை உண்மை என்றே சொல்கிறார்கள் ஆனால் குத்தகை இலவசம் என்றாலும் தோட்டம் போட  ஆட்கள் தேட வேண்டி உள்ளது என்று நண்பர் கவலைப்படுகிறார் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

தெல்லிப்பளையில் பல காணிகள் பெருமளவில் பற்றை வளர்ந்து பாம்புப் புற்றுகளோடு, எங்கிருந்து எப்படி வந்தனவோ தெரியவில்லை...! பன்றிகளும் குடிகொள்ளத் தொடங்கியிருந்தன. காணிகளுக்குரியவர்கள் அனேகமானவர்கள் மேட்டுக்குடித் தடிப்புக் கொண்டவர்கள். கொழும்பு, வெளிநாடென்று வதிவிடம் தேடிக்கொண்டார்கள். அந்த நேரத்தில் இராணுவத்தினர் வந்து வெற்றுக் காணிகளைப் படம்பிடித்துச் சென்றதாக ஒரு கதை அங்கு அடிபட்டது. அது உண்மையா? யாராவது பரப்பினார்களா? என்று தெரியவில்லை, அடுத்த சில நாட்களில் காணிகள் அனைத்தும் துப்பரவாகித் தோட்டம் துரவுகள் ஆனது. 

அபராதம்தானே, கொழும்பிலும், வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு பணம் ஒரு பொருட்டல்ல. அரசுடமை ஆகிறதென்றால் அடித்துப் பிடித்து ஓடிவருவார்கள். யாழ்ப்பாண மேட்டுக்குடித் தமிழர்களைப் பற்றி என்னென்னவோ எழுதுகிறீர்கள், அவர்கள் குணநலம் பற்றி எதுவும் தெரியாதுபோல் உள்ளது.   

அப்படி இல்லை ஐயா,

காணி உரிமை என்பது தனியே உடமை உரிமை மட்டும் அல்ல. ஒருவரின் அடையாளத்துடன் பின்னி பிணைந்தது. அதில் கைவைக்கப்படாது.சிங்களவர்கள் அதில் கைவைக்க வெளிகிட்டுத்தான் இவ்வளவும்.

நல்லூரில் காணிகளை முஸ்லீமுக்கு வித்தால் - இரெண்டு மடங்கு விலைக்கு போகும்? எப்படி வசதி? வித்துப்போட்டு கொழும்பில் ஒரு பிளட் வேண்டி விட்டால், மாத வாடகையும் வரும். சும்மா பத்தைக்கு ஏன் காசை வீணாக்குவான்? நீங்கள் சொல்லும் மேட்டுகுடிகள் இப்படித்தான் சிந்திப்பார்கள். ஆனால் காணியை வைத்திருப்பவர்கள் - சொந்த ஊரில் ஒரு பிடிப்பு வேணும். அதுக்குத்தான் பலர் இந்த காணிகளை வைத்திருக்கிறார்கள்.

வேணும் எண்டால் - காணியின் மொத்த பெறுமதியில் தண்டம் 5% என்று அறிவித்தால் கதறி கொண்டு வருவினம்.

தவிர தெல்லிபழை மாரி இல்லை. நல்லூரில் ஆங்காங்கே இருக்கும் காணிகள் சூழ மதிலோடுதான் இருக்கு. அல்லது வேலியாவது. பாம்பு குடி கொள்ளும் அளவில் இல்லை.

1 hour ago, பெருமாள் said:

கதை உண்மை என்றே சொல்கிறார்கள் ஆனால் குத்தகை இலவசம் என்றாலும் தோட்டம் போட  ஆட்கள் தேட வேண்டி உள்ளது என்று நண்பர் கவலைப்படுகிறார் .

இலவசமா பலன் எடுங்கள் என்று காணியை குதகைக்கு கொடுத்தாலும், குத்தகைக்கு கொடுத்த காணியை மீட்க, காணி வித்தால் வாற காசு கொடுக்க வேணும்🤣.

இதுதான் நிலமை. இதுக்கு பயந்துதான் பலர் காணிகளையும் வீடுகளையும் பூட்டி வைக்கிறார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் வெளிநாட்டு உரிமயைாளர்களுக்கு விடியுது.இன்னும்  இன்னும் அரசியல் பறையுங்கோ.விழங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

ஏன் கடுப்பாகிறிங்கள் கற்ப்ஸ்.

சிங்களவன் காணியை பிடிக்கிறான் எண்டு கத்தி கொண்டு, இன்னொரு தமிழனின் காணியை அரசுடமையாக்குவோம் என்பது நல்லாவா இருக்கு?

காணியை துப்பராவாக வைக்காதோருக்கு அபராதம் விதிப்போம் என்பது சரி, காணியையே அரசுடமையாக்குவோம் என்றால்?

தனது சொந்த காணியை வெறுங்காணியாக வைத்திருப்பது காணி உரிமையாளர் உரிமை அல்லவா?

பற்றை என்றால் என்ன? இயற்கையான தாவர வளர்ச்சி. அதில் நீர் தேங்கி நுளம்பு பெருகாமல், இதர சுகாதார கேடுகள் வராமல் இருக்கும் வரை காணிக்காரன் பற்றை வளர்க்க விரும்பினால் வளர்க்கட்டுமே.

இது வெறும் வாய்சவாடலாகவே படுகிறது. 

இவர்களது சண்டித்தனம் எல்லாம் சக தமிழர்களோடுதான்.

நல்லூருக்குள்தான் வருகிறது மந்திரிமனை, உருக்குலைந்து, சுவர் எல்லாம் கிறுக்கி, நாய்களும் பஸ், லொறி டிரைவர்மார் தூங்கும் இடமாக இருக்கிறது. அதை பார்க்க வக்கில்லாத பிரதேசசபை தனியார் காணி கண்ணுக்க குத்துது.

அபராதாரம் யாருக்கு விதிப்பது?....காணி உரிமையாளர்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டு 5 வருசம் அல்லது 10 வருடத்திற்கு ஒருக்கால் ஊருக்கு போனால் 
காணியை பாராமரிக்காததால் தான் டெங்கு, மலேரியா போன்றவை வேகமாய் பரவுகின்றன.
அதை விட பாம்புகள் ...காணிகளை போய் பராமரிக்க முடியாதவர்கள் உறவுகளின் கையில் ஒப்படைக்க வேண்டும் ...இனி மேல் செய்வார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

அபராதாரம் யாருக்கு விதிப்பது?....காணி உரிமையாளர்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டு 5 வருசம் அல்லது 10 வருடத்திற்கு ஒருக்கால் ஊருக்கு போனால் 
காணியை பாராமரிக்காததால் தான் டெங்கு, மலேரியா போன்றவை வேகமாய் பரவுகின்றன.
அதை விட பாம்புகள் ...காணிகளை போய் பராமரிக்க முடியாதவர்கள் உறவுகளின் கையில் ஒப்படைக்க வேண்டும் ...இனி மேல் செய்வார்கள் 

இப்படி செய்தால் இது இலங்கை அரசுக்கு சாதகாமான செயல் என்று சொல்ல மாட்டார்களா  தவிசாளர துரோகி என்று சொல்லமாட்டார்களா ??

 

நீங்க வேற நான் ஊரில் (எங்க ஊர் உங்களுக்கு தெரியும்) அவர்கள் அனைவரும் வெளிநாடு அவர்களது உறவினர்கள் மூலம் அழைப்பை ஏற்படுத்தி வீடு , விற்பது என்றாலோ அல்லது வாடகைக்கு கொடுப்பது என்றாலோ கொடுங்கள் என்று கேட்டேன். கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டார்கள் இப்பவரைக்கும் பாழடைந்துதான் கிடக்கிறது , ( வீடில்லாத நிலங்கள் கூட) குறைந்த விலையை சொல்லுங்கள் என்றால் கூட கோடிக்கணக்கில் தான் சொல்கிறார்கள் அப்பதான் வாங்க மாட்டார்களாம் என்றால் பாருங்கோவன் இதுவரைக்கும் 10 வருடங்களுக்கு ஒரு முறைதான் வருவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அவர்கள் அனைவரும் வெளிநாடு அவர்களது உறவினர்கள் மூலம் அழைப்பை ஏற்படுத்தி வீடு , விற்பது என்றாலோ அல்லது வாடகைக்கு கொடுப்பது என்றாலோ கொடுங்கள் என்று கேட்டேன். கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டார்கள் இப்பவரைக்கும் பாழடைந்துதான் கிடக்கிறது , ( வீடில்லாத நிலங்கள் கூட) குறைந்த விலையை சொல்லுங்கள் என்றால் கூட கோடிக்கணக்கில் தான் சொல்கிறார்கள் அப்பதான் வாங்க மாட்டார்களாம் என்றால் பாருங்கோவன் இதுவரைக்கும் 10 வருடங்களுக்கு ஒரு முறைதான் வருவார்கள்.

இது பற்றி நானும்  தெரிந்துள்ளேன். தாங்களும் வீடு காணியை அனுபவிக்கமாட்டார்கள் மற்றவர்களுக்கு விற்கவும் மாட்டார்கள்  வெளிநாட்டில் இருந்து கொண்டு யாழ்பாணத்தில் வீடு காணி வைத்திருப்பதில் தான் மிகவும் ஆசை. 🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.