Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை: ஆழ்கடலில் 40 நிமிடங்கள் நடந்த திருமணம் - 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய இன்ஜினீயர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: ஆழ்கடலில் 40 நிமிடங்கள் நடந்த திருமணம் - 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய இன்ஜினீயர்!

ஆழ்கடலில் நடந்த திருமணம்

ஆழ்கடலில் நடந்த திருமணம்

சென்னையில் ஆழ்கடலில் மணமகளுக்கு இன்ஜினீயர் மாப்பிள்ளை இன்று அதிகாலையில் தாலி கட்டினார்.

திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் சின்னதுரை. கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் ஸ்வேதா. இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள ஐடி நிறுவனங்களில் வேலைபார்த்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் செய்ய இருவீட்டினரும் முடிவு செய்தனர். சின்னதுரை கடந்த 12 ஆண்டுகளாக ஆழ்கடலில் நீச்சல் பயிற்சி எடுத்து வந்தார். அதனால், தன்னுடைய திருமணத்தையும் வித்தியாசமாக ஆழ்கடலுக்குள் நடத்த விரும்பினார். தன்னுடைய விருப்பத்தை வருங்கால மனைவி ஸ்வேதா மற்றும் வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்தார். அதற்கு அனைவரும் சம்மதம் தெரிவித்தனர்.

ஆழ்கடலில் திருமணம்
 
ஆழ்கடலில் திருமணம்

இதையடுத்து ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளரும் தன்னுடைய உறவினருமான அரவிந்தனிடம் தன்னுடைய விருப்பத்தை சின்னத்துரை கூறினார். உடனடியாக ஆழ்கடலில் திருமணத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. அதற்கு முன் ஸ்வேதாவுக்கு ஆழ்கடலில் நீந்துவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. ஆரம்பத்தில் ஒருவித பயத்துடன் இருந்த ஸ்வேதா, பயிற்சிக்குப் பிறகு தைரியமானார்.

இதையடுத்து இன்று காலை இருவருக்கும் நீலாங்கரை பகுதியில் உள்ள வங்காள விரிகுடா ஆழ்கடலில் திருமணம் நடந்தது. இதற்காக மணமக்கள் இருவரும் பாரம்பரியமிக்க உடைகளை அணிந்து, படகு மூலம் ஆழ்கடலுக்குச் சென்றனர். மணமக்களுக்கு ஆக்சிஜன் சிலண்டர் பொருத்தப்பட்டது. கடலின் மேற்பரப்பிலிருந்து சுமார் 60 அடி ஆழத்தில் மணமக்கள் மாலைகளை மாற்றிக் கொண்டனர். மணமகள் ஸ்வேதாவுக்கு சின்னதுரை கடலுக்கு அடியில் தாலி கட்டினார். பின்னர் இருவரும் படகு மூலம் கரைக்கு வந்தனர். கடலுக்குள் நடந்த திருமணத்தை புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

ஆழ்கடலில் திருமணம்
 
ஆழ்கடலில் திருமணம்

இதுகுறித்து பயிற்சியாளர் அரவிந்தனிடம் பேசினோம். ``என்னுடைய உறவினர்தான் சின்னத்துரை. அவருக்கும் ஸ்வேதாவுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டதும் இந்தியாவில் முதல் முறையாக ஆழ்கடலில் திருமணத்தை நடத்த முடிவு செய்தோம். ஆழ்கடலில் திருமணத்தை நடத்த வேண்டும் என்றால் கடல் அமைதியாக இருக்க வேண்டும். அதற்காக காத்திருந்தோம். ஜனவரி மாதத்தில் தேதி குறிப்பிடாமல் ஒரு திருமண அழைப்பிதழை அச்சடித்தோம். ஆனால், திருமணத்தை நடத்துவதற்கான சூழல் கடலில் இல்லை. அதன்பிறகு தேதி குறிப்பிடாமல் பிப்ரவரி மாதத்துக்கு ஒரு திருமண அழைப்பிதழை அச்சடித்தோம். இந்தநிலையில் இன்று அதிகாலையில் மீனவர் ஒருவர், கடல் அமைதியாக இருப்பதாக எனக்குத் தகவல் தெரிவித்தார். உடனடியாக திருமணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்தோம்.

 

இரண்டு படகுகளில் மணமக்களை அழைத்துக் கொண்டு 12 பேர் கடலுக்குள் சென்றோம். கரையிலிருந்து 5 கி.மீட்டர் தூரத்தில் 60 அடி ஆழத்துக்கு 9 பேர் சென்றோம். படகில் 3 பேர் இருந்தனர். அதன்பிறகு ஆழ்கடலில் தென்னை ஓலையைக் கொண்டு மலர்களைக் கொண்டு அலங்கரித்தோம். மலர்கள் மேலே வராமலிருக்க அலுமினிய குண்டுகளை ஒவ்வொரு மலர்களிலும் இணைத்துக் கட்டினோம். அதைப்போல மணமகளின் சேலையிலும் மணமகளின் வேஷ்டியிலும் பேஸ்ட்களை ஒட்டினோம். அடுத்து தாலி மற்றும் மாலையிலும் அலுமினிய குண்டுகளை இணைத்திருந்தோம். நல்ல நேரத்தில் ஆழ்கடலுக்குள் மாலைகளை மணமக்கள் மாற்றிக் கொண்டனர். பின்னர் ஸ்வேதா கழுத்தில் சின்னதுரை தாலி கட்டினார். சுமார் 40 நிமிடங்கள் இந்தத் திருமண நிகழ்வு நடந்தது. மாப்பிள்ளைத் தோழனாக சந்துருவும் மணமகள் தோழியாக தீபிகாவும், அழகுக் கலை நிபுணர், புகைப்பட நிபுணர் ஆகியோரும் திருமணத்தில் கலந்துகொண்டனர்" என்றார்.

சின்னதுரை, ஸ்வேதா
 
சின்னதுரை, ஸ்வேதா

மணமகன் சின்னதுரை கூறுகையில், ``நான் 12 ஆண்டுகளாக நீச்சல் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். ஸ்வேதாவிடம் ஆழ்கடலில் திருமணத்தை நடத்தலாம் என்று கூறியபோது முதலில் தயங்கினார். அதன்பிறகு நீச்சல் குளத்தில் 3 நாள்கள் பயிற்சி கொடுத்தோம். அதன்பிறகு கடலுக்கு அழைத்துச் சென்று பயிற்சி அளித்தோம். அதன்பிறகு என்னை விட ஸ்வேதா தைரியமாகிவிட்டார். எங்கள் திருமணத்தை ஆழ்கடலில் நடத்த இன்னொரு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது. பிளாஸ்டிக் மற்றும் சில பொருள்களால் கடல் மாசுபட்டு வருகிறது. மாசுவிலிருந்து கடலைப் பாதுகாக்க வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தத்தான் ஆழ்கடலில் திருமணத்தை நடத்தியிருக்கிறோம். இந்த அனுபவம் வித்தியாசமானது" என்றார்.

https://www.vikatan.com/lifestyle/miscellaneous/chennai-engineer-speaks-about-his-marriage-held-under-60-feet-in-sea

https://www.facebook.com/vikatanweb/videos/905434816894226/

 

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய சுறா.... வந்திருந்தால், இரண்டு பேரையும்... கவ்விக் கொண்டு போயிருக்கும்.

எல்லாம்... பணத்திமிர் விளையாட்டு.

மந்திரம் ஓத.... ஐயர் வந்தாரா?

Edited by தமிழ் சிறி

1 hour ago, உடையார் said:

கடலின் மேற்பரப்பிலிருந்து சுமார் 60 அடி ஆழத்தில் மணமக்கள் மாலைகளை மாற்றிக் கொண்டனர். மணமகள் ஸ்வேதாவுக்கு சின்னதுரை கடலுக்கு அடியில் தாலி கட்டினார்.

அன்பு ஆழமானது என்பதை உணர்த்தவா? அல்லது திருமண வாழ்க்கை ஆழ்கடலில் முக்குளிப்பது போலக் கடினமானது என்பதை உணர்த்தவா? 

எது எப்படியோ மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படியோ, சுறாவும் வரவில்லை, சிறீலங்கா கடற்படையும் வரவில்லை. 

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!!

குழந்தையையும் கடலுக்குள் (நீருக்குள்) பெற்றெடுப்பது குழந்தையின் உடல்கூறுகளின் நல்வளர்ச்சிக்கு ஆரோக்கியமானது என்று செய்தி படித்துள்ளேன். 🧐

  • கருத்துக்கள உறவுகள்

சம்சாரக்கடலில் மூழ்குவதற்கு ஆழ்கடலில் திருமணம் செய்வது சிம்பாலிக்கா வெகு பொருத்தம்.....மணமக்கள் வாழிய பல்லாண்டு.....!   💐

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

எல்லாம்... பணத்திமிர் விளையாட்டு.

அதே தான். அம்பானியின் குடும்பத்தை சேர்ந்தவர்களாம் 🤣
கடல் மாசுபட்டு வருகிறது கடலைப் பாதுகாக்க வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தகிறார்களாம் என்ற காதில் பூ சுத்துதல் வேறு

  • கருத்துக்கள உறவுகள்

உற்றார் உறவினர் இருக்கும் இடத்தில் தண்ணிக்கு மேலே திருமணத்தை நடத்திவிட்டு 
வேறு விடயங்களை ஆள் நடமாட்டம் இல்லாத தண்ணிக்கு கீழே வைத்திருக்கலாமே? 

இதென்ன பிரமாதம். இங்கை சுவிற்சர்லாந்திலை எத்தனையோ  திருமண வைபவங்கள் தண்ணிலை நடந்துருக்கு. 😂

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Maruthankerny said:

உற்றார் உறவினர் இருக்கும் இடத்தில் தண்ணிக்கு மேலே திருமணத்தை நடத்திவிட்டு 
வேறு விடயங்களை ஆள் நடமாட்டம் இல்லாத தண்ணிக்கு கீழே வைத்திருக்கலாமே? 

அது சரி வராது என்டு கேள்விப்பட்டேன்.உண்மையோ.🤣

5 hours ago, சுவைப்பிரியன் said:

அது சரி வராது என்டு கேள்விப்பட்டேன்.உண்மையோ.🤣

அதுவும் சரிப்பட்டு வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, சுவைப்பிரியன் said:

அது சரி வராது என்டு கேள்விப்பட்டேன்.உண்மையோ.🤣

 

3 hours ago, நிழலி said:

அதுவும் சரிப்பட்டு வரும்.

பெரியவா.... அனுபவ ரீதியாக சொன்னால், நாம் நம்பத்தான் வேண்டும். :grin: 😜

17 hours ago, உடையார் said:

கடலுக்குள் நடந்த திருமணத்தை புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

ஆழ்கடலில் திருமணம்
 
ஆழ்கடலில் திருமணம்

கடலுடன் கலந்த நதியினைப் போல் அன்புடை நெஞ்சம் கலந்ததென்ன! 😍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.