Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாயை துரத்தி சென்ற சிறுத்தை நாயுடன் சேர்ந்து 7 மணி நேரமாக கழிவறைக்குள் சிக்கி கொண்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நாயை துரத்தி சென்ற சிறுத்தை நாயுடன் சேர்ந்து 7 மணி நேரமாக கழிவறைக்குள் சிக்கி கொண்டது
 
நாயை துரத்தி சென்ற சிறுத்தை நாயுடன் சேர்ந்து  7 மணி நேரமாக கழிவறைக்குள் சிக்கி கொண்டது
 

கர்நாடகாவின் தட்சிண கன்னட மாவட்டத்தின்  பிலினேல் கிராமத்தில்  சிறுத்தை ஒன்று  நாயை துரத்தி உள்ளது. நாய்  ரெகப்பா  என்பவரின் வீட்டின் கழிவறைக்குள் புகுந்தது தொடர்ந்து சிறுத்தையும் கழிறைக்குள் புகுந்து.

சிறுத்தை கழிவறைக்குள் நுழைந்ததை பார்த்ததும் அந்த வீட்டு பெண்மணி  உடனடியாக கழிவறையின் கதவைப் பூட்டி பக்கத்து  வீட்டுகாரர்களை அழைத்து உள்ளார்.

உடனடியாக போலீஸ் அதிகாரிகளுக்கும் வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. கழிவறையில் நாயும், சிறுத்தையும் சிக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

இதுகுறித்து வனத்துறை சரகர் கரிகலன் கூறியதாவது:-

‘ரெகப்பா என்பவர் வீட்டின் கழிவறையில் நாயும், சிறுத்தையும் இருப்பதாகவும், அதனை பூட்டி வைத்திருப்பதாகவும் வனத்துறை தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வனத்துறை ஊழியர்கள் சென்று சிறுத்தை மற்றும் நாயை வெளியேற்ற முயற்சிகளை மேற்கொண்டனர். கழிப்பறைக்கு வெளியே ஒரு கூண்டு வைக்கப்பட்டு, அதனை சுற்றி ஒரு வலையும் அமைக்கப்பட்டது.

நீண்ட போராட்டத்திற்கு பின் சிறுத்தை வெளியே வந்தது. நாங்கள் வைத்திருந்த கூண்டுக்குள் சிக்கியது. சிறுத்தை வெளியே வந்த சில நிமிடங்களில் நாயும் வெளியே வந்தது. கிட்டதிட்ட 7 மணி நேர போராட்டத்திற்கு பின் நாயையும், சிறுத்தையையும் வெளியேற்றினோம். 

வனப்பகுதியில் சுற்றித் திரிந்த நாயை துரத்திக் கொண்டு குடியிருப்பு பகுதிக்கு சிறுத்தை வந்துள்ளது. ஒருகட்டத்தில் நாயானது கழிவறைக்குள் நுழைந்ததால், சிறுத்தையும் தொடர்ந்து சென்று நுழைந்து உள்ளது. 

இதில் வேடிக்கை என்னவென்றால் 7 மணி நேரமாக ஒரே அறைக்குள் இருந்த சிறுத்தை, அந்த நாயை கொல்லவில்லை என்பதுதான். மீட்பு நடவடிக்கையின் போதும் எவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. மீட்கப்பட்ட சிறுத்தை வனப்பகுதிக்குள் விடப்பட்டது என கூறினார்.

 

https://www.dailythanthi.com/News/India/2021/02/04171600/Dog-trapped-with-leopard-inside-toilet-in-Karnataka.vpf

 

  • கருத்துக்கள உறவுகள்

காட்டுக்க வைச்சு நாய் நக்கல் அடிச்சிருக்கு போல!

அது தான் கோவத்தில துரத்திப்போட்டு கழிவறைக்குள் சிக்கியதும் நட்பாயிற்று!

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் பெருமாளின் கதையில் வந்த சிறுத்தை நண்பர்களே!

"நாய்க்கு என்னை நிரூபிக்க அவசியமில்லை, இங்கிருந்து தப்பினால் போதும்" என்று ஒதுங்கியிருக்கிறது!

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Justin said:

இது தான் பெருமாளின் கதையில் வந்த சிறுத்தை நண்பர்களே!

"நாய்க்கு என்னை நிரூபிக்க அவசியமில்லை, இங்கிருந்து தப்பினால் போதும்" என்று ஒதுங்கியிருக்கிறது!

வேறு திரிகளில் கதைப்பதை,  மற்ற திரிக்கு... காவிக் கொண்டு வருவது,
யாழ். களத்தில், குற்றமான செயல் என நினைக்கின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

வேறு திரிகளில் கதைப்பதை,  மற்ற திரிக்கு... காவிக் கொண்டு வருவது,
யாழ். களத்தில், குற்றமான செயல் என நினைக்கின்றேன். 

உங்கள் விதி அக்கறையை நினைக்க மயிர் சிலிர்க்குது தமிழ் சிறி! ஆனால், எல்லாரையும் இப்படிப்  "பொலிஸ்" செய்யுறனீங்களோ அல்லது ஜஸ்ரினுக்கு மட்டும் தான் நீங்க "ஏட்டைய்யா" வோ?😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

காட்டுக்க வைச்சு நாய் நக்கல் அடிச்சிருக்கு போல!

அது தான் கோவத்தில துரத்திப்போட்டு கழிவறைக்குள் சிக்கியதும் நட்பாயிற்று!

சிறிய கற்பனை;

நாய்; .. .. . சிரிலங்கா

சிறுத்தை; .  இந்தியா

கழிவறை/ஓய்வறை;.  சீனா

மிகுதி உங்கள் கற்பனைக்கு

😜

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

இதில் வேடிக்கை என்னவென்றால் 7 மணி நேரமாக ஒரே அறைக்குள் இருந்த சிறுத்தை, அந்த நாயை கொல்லவில்லை என்பதுதான். மீட்பு நடவடிக்கையின் போதும் எவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. மீட்கப்பட்ட சிறுத்தை வனப்பகுதிக்குள் விடப்பட்டது என கூறினார்.

இதில் உண்மை என்னவென்றால் அவை உண்மையான மிருகங்கள்.

மனித மிருகங்களல்ல. 🧐

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

உங்கள் விதி அக்கறையை நினைக்க மயிர் சிலிர்க்குது தமிழ் சிறி! ஆனால், எல்லாரையும் இப்படிப்  "பொலிஸ்" செய்யுறனீங்களோ அல்லது ஜஸ்ரினுக்கு மட்டும் தான் நீங்க "ஏட்டைய்யா" வோ?😂

திரி ... சூடாக, பத்தி எரியட்டும் என்று, சும்மா தமாசுக்கு  பதிந்தேன் ஜஸ்ரின். :grin:
அதை பார்த்து.. உங்களுக்கு, மயிர் சிலிர்த்ததை பார்க்க, இன்னும் சிரிப்பாக இருக்கு.  🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, தமிழ் சிறி said:

திரி ... சூடாக, பத்தி எரியட்டும் என்று, சும்மா தமாசுக்கு  பதிந்தேன் ஜஸ்ரின். :grin:
அதை பார்த்து.. உங்களுக்கு, மயிர் சிலிர்த்ததை பார்க்க, இன்னும் சிரிப்பாக இருக்கு.  🤣

 சரி, சரி..விடுங்கோ! இங்க கடந்து போன பனிப்புயலால் கடுங்குளிர்- அது தான் சிலிர்க்கிறது! 
(எல்லாரும் பெற்றோல் கேனோட தான் திரியிறாங்கள்!😂)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தமிழ் சிறி said:

வேறு திரிகளில் கதைப்பதை,  மற்ற திரிக்கு... காவிக் கொண்டு வருவது,
யாழ். களத்தில், குற்றமான செயல் என நினைக்கின்றேன். 

யாழ்களத்தில் திரிக்கு திரி சட்டங்களை காவித்திரிந்து மற்றவர்களுக்கு தடைகள் வாங்கி கொடுத்தவர்களுக்கு தாங்கள் என்ன செய்கின்றோம் என தெரிவதில்லை. அந்த நபரால் நான் இந்த யாழ்களத்தில் அதிகம் பாதிக்கப்பட்டவன்.தேவையில்லாத சீண்டல்களை திணித்து சக உறவுகளை வெளியேற்ற உதவியவர்.

  • கருத்துக்கள உறவுகள்

பாதிக்கப் பட்டவர்கள் எனக் கருதுவோர் முறையிடலாம்! பொய்களை ஆணித்தரமாக மறுத்தல் என்பது சீண்டலாகாது!

ஆனால், நேரே மதம், தொழில், படிப்பு ஆகியவற்றைக் குறிப்பிட்டுத் திட்டுவது சீண்டல்! இதையெல்லாம் செய்து விட்டு புள்ளி, தடை வாங்கினால் உள்நோக்கிப் பார்த்துத் திருந்த வேண்டும்! எங்களுக்கு அது இல்லா விட்டால், மற்றவன் மேல் பழியைப் போட்டு பரிதாபம் தேட வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

பாதிக்கப் பட்டவர்கள் எனக் கருதுவோர் முறையிடலாம்! பொய்களை ஆணித்தரமாக மறுத்தல் என்பது சீண்டலாகாது!

ஆனால், நேரே மதம், தொழில், படிப்பு ஆகியவற்றைக் குறிப்பிட்டுத் திட்டுவது சீண்டல்! இதையெல்லாம் செய்து விட்டு புள்ளி, தடை வாங்கினால் உள்நோக்கிப் பார்த்துத் திருந்த வேண்டும்! எங்களுக்கு அது இல்லா விட்டால், மற்றவன் மேல் பழியைப் போட்டு பரிதாபம் தேட வேண்டும்!

justin ஐக் காணவில்லையே என்றிருந்தேன். .. 😀

  • கருத்துக்கள உறவுகள்

நானில்லாமலே நம்ம  தலையை உருட்டி விளையாடுவது சிலருக்கு சந்தோசம் .

அப்ப  இங்கும் ஒரு கதையை போட்டுவிடுவம் இங்கு ஒரு மாபெரும் தத்துவம் ஒளிந்து இருக்கு அதாவது வீட்டில் சண்டை வந்தால் திடிரென சைலண்டா  பம்மிக்கொண்டு இருந்தால் காணும் உயிர்தப்ப  சான்ஸ் இருக்கு புருசாண்டிகளுக்கு  அதை விட்டு உள்ளேயும் இருந்து நாய் போல் குரைத்தால் கதை பஞ்சராயிடும் .

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியாவது உயிர் தப்புதலே அந்த நேரத்தில் முக்கியம் ...அதன் பின்னர் தான் பசி , சாப்பாடு எல்லாம் 

 
 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரதி said:

எப்படியாவது உயிர் தப்புதலே அந்த நேரத்தில் முக்கியம் ...அதன் பின்னர் தான் பசி , சாப்பாடு எல்லாம் 

 
 

உண்மைதான் Life of Pi யில் அருமையாக சொல்லியிருப்பார்கள் .கீழே அந்த படத்தின் முக்கிய கட்டங்கள் .

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 4/2/2021 at 18:26, தமிழ் சிறி said:

திரி ... சூடாக, பத்தி எரியட்டும் என்று, சும்மா தமாசுக்கு  பதிந்தேன் ஜஸ்ரின். :grin:
அதை பார்த்து.. உங்களுக்கு, மயிர் சிலிர்த்ததை பார்க்க, இன்னும் சிரிப்பாக இருக்கு.  🤣

இதை யாழ்ப்பாணத்தில் முகத்தில் தகடு கட்டி விடுறது எண்டுறது... :grin: 

சில விசயங்கள் கந்தர்மடத்துக்காரர்களுக்கு தான் புரியும். 👍

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

அகப்பட்ட் நாயும்   புலியும் பாதுகாப்பாக வெளியே  எடுத்து விடடார்கள் . இதற்குள் விழுந்தவர்கள்  எப் போது வெளியேறுவார்கள்  . ? 😀

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, நிலாமதி said:

அகப்பட்ட் நாயும்   புலியும் பாதுகாப்பாக வெளியே  எடுத்து விடடார்கள் . இதற்குள் விழுந்தவர்கள்  எப் போது வெளியேறுவார்கள்  . ? 😀

அந்த விலங்கின் பெயருக்கு அவ்வளவு மவுசு அக்கா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.