Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.மணியந்தோட்டம் இளைஞனின் வங்கி கணக்கிற்கு கனடாவிருந்து வைப்பிலிடப்பட்ட நூறு கோடி ரூபாய் பணம்..! அதிர்ச்சியில் மத்தியவங்கி.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.மணியந்தோட்டம் இளைஞனின் வங்கி கணக்கிற்கு கனடாவிருந்து வைப்பிலிடப்பட்ட நூறு கோடி ரூபாய் பணம்..! அதிர்ச்சியில் மத்தியவங்கி.!

headline_CANADIAN_DOLLAR_3-JPG.jpg

யாழ்.மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த இளைஞனின் வங்கி கணக்கில் சுமார் பல நூறு கோடி ருபாய் பணம் கனடாவில் இருந்து வைப்பிலிடப்பட்டுள்ள நிலையில்

குறித்த இளைஞனுக்கு தெரிந்த யாரேனும் ஒருவர் இணைய வங்கி ஊடாக சுருட்டிய பணம் இவ்வாறு வைப்பிலிடப்பட்டிருக்கும் என்ற கோணத்தில் புலனாய்வு பிரிவு சந்தேகம் வெளியிட்டுள்ளது.

சுமார் 490 கோடி கனேடியன் டொலர் என்ற அடிப்படையில் 4 தடவைகளுக்கு குறையாமல் வைப்பிலிடப்பட்டுள்ளது.

இந்த பணம் இலங்கைக்குள் அனுமதிக்கப்பட்டால் இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடையும் என கூறப்படுகிறது.

மேலும் இந்த பணத்தை நாட்டுக்குள் அனுமதிப்பது தொடர்பாக மத்திய வங்கியும், புலனாய்வு பிரிவும் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் குறித்த இளைஞன் மத்திய வங்கியுடன் தொடர்பு கொண்ட நிலையில் கிராம சேவகர் ஊடாகவும், பிரதேச செயலர் ஊடாகவும் அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு கூறப்பட்டுள்ளது.

மறுபக்கம் அரசியல் பின்புலம் உள்ள சிலரும், போலி ஊடகவியலாளர்கள் சிலரும் குறித்த பணத்தை "கிளியர் " பண்ணி தருவதாக கூறி இளைஞனை சுற்ற தொடங்கியுள்ளனர்.

நன்றி:- கலைக்கதிர்

https://jaffnazone.com/news/23303

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அரசியல் பின்புலம் உள்ள சிலரும், போலி ஊடகவியலாளர்கள் சிலரும் குறித்த பணத்தை "கிளியர் " பண்ணி தருவதாக கூறி இளைஞனை சுற்ற தொடங்கியுள்ளனர்.

உள்ளூர்  ஆட்களுக்கு முதல்....  
மத்திய வங்கி... இந்தக் காசை ஆட்டையை போட்டு விடும்.  

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

உள்ளூர்  ஆட்களுக்கு முதல்....  
மத்திய வங்கி... இந்தக் காசை ஆட்டையை போட்டு விடும்.  

ஆளை தெரிந்தால் எனக்கு கொஞ்சத்தை திருப்ப செல்லுங்களன் சரியான விலைவாசியா கிடக்கு இங்க

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஆளை தெரிந்தால் எனக்கு கொஞ்சத்தை திருப்ப செல்லுங்களன் சரியான விலைவாசியா கிடக்கு இங்க

"கூகிள்ளை" சனம் எல்லாம்,  யாழ்.மணியந்தோட்டம்,  
எங்கை இருக்குது... எண்டு தேடிக் கொண்டு இருக்கிறார்களாம்.  🤣

100 கோடி ரூபா 6.5 மில்லியன் கனடிய டொலர்கள்.
பெரிய தொழிலதிபர் ஒருவர் இந்தத் தொகையைச் சம்பாதிக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

100 கோடி ரூபா 6.5 மில்லியன் கனடிய டொலர்கள்.
பெரிய தொழிலதிபர் ஒருவர் இந்தத் தொகையைச் சம்பாதிக்க முடியும்.

சுமார் 490 கோடி கனேடியன் டொலர் என்ற அடிப்படையில் 4 தடவைகளுக்கு குறையாமல் வைப்பிலிடப்பட்டுள்ளது.

490*4= 1960 millions CAD $? 

 

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி மூலத்தை ஒருமுறை பார்த்துவிட்டு ..... எதற்கும் எச்சரிக்கையுடன்.. 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

செய்தி மூலத்தை ஒருமுறை பார்த்துவிட்டு ..... எதற்கும் எச்சரிக்கையுடன்.. 😂

ஆதாரம் எதுவும் இல்லை. ஊகம் எண்டு, தாராவது ஒரு மட்டு இதை பூட்ட போகினம். 😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

சுமார் 490 கோடி கனேடியன் டொலர் என்ற அடிப்படையில் 4 தடவைகளுக்கு குறையாமல் வைப்பிலிடப்பட்டுள்ளது.

490*4= 1960 millions CAD $? 

இப்படியான  தொகை தான், நாணயமாற்று வீதத்தை பாதிக்க கூடியது.

சொறி சிங்கள பாங்கிங் system இல் ஏறத்தாழ 1.96 பில்லியன் cad வரவு நிலுவையில் இருப்பதால், அது தனியாரின் வங்கி கணக்கில் இருப்பினும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

ஆதாரம் எதுவும் இல்லை. ஊகம் எண்டு, தாராவது ஒரு மட்டு இதை பூட்ட போகினம். 😁

கணக்கு உள்ள நபருக்கு உண்மையிலே அந்த வங்கியில் கணக்கு இருப்பது தெரியுமா என்று விசாரிக்கணும். அநேகமா அவருக்கு இப்படியொரு விடயம் நடப்பதுவே தெரியாமல் இருக்கலாம் இப்படியானவர்களை C என்ற கோட் வேர்ட் பாவிப்பார்கள் சில கொம்பனிகளை பொறுத்தவரை பிளாக்கை வெள்ளையாக்க விடயத்தை சொல்லியே மாதம் சம்பளம் போல் கொடுப்பார்கள் இணைய  வழி  களவெடுத்தல் சம்பந்தப்பட்ட நபருக்கு தெரியாமலே நடக்கும் .

லண்டனில் முன்பு 15 ஆண்டுகளுக்கு முன்பு  பாரிய கட்டிட விற்பனையில்  இடை தரகராக இருக்கும் புராகிராசிகளின்  நடு நிலை வங்கியில்  கட்டிடம் வாங்கும் வங்கி முழு பணத்தையும் செலுத்தி விடும் அதையே பாங்க்  கொலிடே வரும் வீக்கெண்டில் வருமாறு பார்த்து கொள்ளுவார்கள் செவ்வாய் கிழமை அந்த வங்கி இலக்கத்தில் ஒரு பென்னி இருக்காது அப்படியே இங்கிலாந்தை விட்டு வேறு நாடுகளில் உள்ள இப்படியான வங்கி  கணக்கில் போய்  சேர்ந்து விடும் ஹாக்கிங் மூலம்தான் எல்லாம் இந்தியாவின் சகோதர நாட்டு  காரர்கள் இதில் சூரர்கள் .

அந்த அரச பழசான டெக்ணிக்கை கனடா வில் உள்ள யாரோ ஒரு  எஸ்டேட் முகவர் செய்து இருக்கிறார் .இங்கும் நம்ம சிங்கள கூட்டத்துக்கும்  எந்த தமிழன் கணக்கில் கூடிய தொகை பிரளுது என்று கண்ணுக்குள் எண்ணெய்  ஊத்தி  தேடும் வங்குரோத்து நிலை . மாட்டுப்பட்டது  கணக்கு .

இதை தூக்கினால்  யாழுக்குத்தான்  நட்டம்  காரணம் இங்கு உள்ள முக்கிய விடயங்கள் வேறு ஊடகங்கள் முகப்பில் போட்டு காசு பார்க்கினம். பகிடி என்னவென்றால் இங்கு எதிர்க்கருத்து வள்ளல் யாழை ஒரு கூட்டம் தான் பார்க்குது என்று எழுத அதுக்கு பாய்ந்து விழுந்து பச்சை வேறு போடுகினம் .😃

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா இளைஞனின் வங்கிக் கணக்கில் ஒரு லட்சம் கோடி பணம்? பொலிஸாரின் விசாரணைகளில் வெளியான பகீர் தகவல்கள்

 

0SHARES
 

ஒரு லட்சம் கோடி வெளிநாட்டு பணவிவகாரம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய இவர்கள் மடக்கிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் விசாரணைகளின் மூலம் தெரியவருவதாவது,

வவுனியாவை சேர்ந்த இளைஞர் ஒருவரிற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய சிலர் தாம் மத்திய வங்கியில் இருந்து கதைப்பதாக தெரிவித்ததுடன், அவரது வங்கிக்கணக்கில் பத்தாயிரம் கோடி ரூபாய் பணம் அமெரிக்க நாட்டிலிருந்து வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், அதனை வெளியில் எடுப்பதற்கு உதவி செய்வதாகவும் தெரிவித்து, 7500 கோடியை தங்களுக்கு தருமாறும் 2500 கோடியை குறித்த இளைஞருக்கு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக அந்த இளைஞரும் கடந்த வருடம் 6 ஆம் மாதத்திலிருந்து அந்த குழுவினருடன் இணைந்து கொழும்பில் தங்கிவந்துள்ளார். இதேவேளை கொழும்பில் வைத்து அவரது வங்கிகணக்கில் ஒரு இலட்சம்கோடி மதிப்பிலான இலங்கைரூபாய் வங்கி கணக்கில் வைப்பில் இடப்பட்டுள்ளதாக அந்த குழு இளைஞரிடம் தெரிவித்துள்ளது.

எனினும் பணம் எடுக்கமுடியாத நிலையில் மீண்டும் அவர் வவுனியாவிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றையதினம் அந்த இளைஞரை மீண்டும் தொடர்புகொண்ட அந்த குழுவினர் பணத்தை மீட்பதற்காக கொழும்பு செல்வதாக தெரிவித்து அவரை வாகனம் ஒன்றில் ஏற்றி அழைத்துச்சென்றுள்ளனர். குறித்த இளைஞர் அவர்களுடன் செல்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இளைஞனின் நண்பன் வழங்கிய தகவலிற்கமைய வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாரிற்கு இவ்விடயம் தெரியப்படுத்தப்பட்டது. பொலிசார் அந்த குழுவினரை கைதுசெய்தனர்.

இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் அந்த இளைஞனிடம் வாக்குமூலத்தை பெற்றுள்ளதுடன், இது தொடர்பாக மத்திய வங்கிக்கும் தெரியப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட 6 நபர்களும் கொழும்பு, அவிசாவளை, குருநாகல், மற்றும் வவுனியா போன்ற பகுதிகளை வசிப்பிடமாக கொண்டுள்ளதுடன், அவர்கள் பயன்படுத்திய மூன்று சொகுசு வாகனங்களும் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.

அந்த இளைஞர் அவர்களுடன் செல்வதற்கு மறுப்பு தெரிவித்தால் அவரை கடத்திச்செல்லும் நோக்குடன் அந்த குழு வந்திருக்கலாம் என பொலிஸ் தரப்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/159942?ref=home-imp-parsely

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி இங்கு சிலருக்கு நடந்திருக்கு, கவனமாக இருக்க வேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.