Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

இனி இளவேனில் காலம் - நிழலி

வெயில் சரம் பிடித்து 
நிலம் நோக்கி
இறங்குகின்றது

வானை வகுந்தெடுத்து
பெரும் காற்று வீசுகின்றது
பனிக்காலத்தை பெயர்த்து
இளவேனில் விதைகளை
விதைத்து செல்கின்றது

வசந்தகாலத்தின் முதல்
பாடல்களை சுமந்த வண்ணம்
வனக் குருவிகள்
ஊர் திரும்புகின்றன
குளிர்காலம்
இராப்பாடகனின்
தொலைதூர குரலை போல்
மெல்ல தேய்கின்றது

முதன் முதலில்
குறுக்கு கட்டியவளின்
மார்பின் சரிவுகளில்
தேங்கிய நீர்த் துளி போல்
இலைகள் துளிர்க்க
தொடங்குகின்றன

வனம் இனி 
சூல் கொள்ளும்
சிற்றாறுகள் உறைவிலிருந்து
உருக்கொள்ளும்
முத்தங்களுக்கிடையில் பரிமாற
ரோசாக்கள் பூக்கத்தொடங்கும்

கட்டைக் கால் தாராக்கள்
குஞ்சுகளுடன் வெளிவரும்
ரக்கூன்கள் குட்டிகளுடன்
முற்றத்தில் வந்து நின்று
விடுப்பு பார்க்கும்
ஒரு நாளும்
கேட்காத பாடல்களை
சிறுகுருவிகள் பாட
புதிய காலைகள் மலரும்

பகல் ஒரு நீண்ட
ரயிலாக வளைந்து
செல்ல
இரவு கடைசிப் பயணியாக
வந்து அமரும்

காலம் மீண்டும்
தப்பாமல்
இளவேனில் காலத்தை
கொண்டுவரும்


(இன்று நீண்ட நாட்களின் பின் வெப்பநிலை நேர் 11 இற்கு வருகின்றது. என் சிறு பூந்தோட்டத்தின் செடியில் இவ் வருத்தின் முதல் துளிர் தெரிகின்றது)
 

Edited by நிழலி
ஒரு எழுத்து திருத்தப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்

வனம் இனி சூல்  கொள்ளும்
சிற்றாறுகள் உறைவிலிருந்து
உருக்கொள்ளும்
முத்தங்களுக்கிடையில் பரிமாற
ரோசாக்கள் பூக்கத்தொடங்கும்

 

அழகான வர்ணனை பாராட்டுக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

காலம் மீண்டும்
தப்பாமல்
இளவேனில் காலத்தை
கொண்டுவரும்

மொத்தத்தில் ஊரை மறந்திருக்கும் காலம் வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை இது கவிதை.......எத்தனை கவிஞர்கள் எத்தனை முறை பாடியபோதும் வசந்தம் சலிப்பதில்லை......!  👍

  • கருத்துக்கள உறவுகள்

இளவேனில் காலத்தை இனிமையாக காணப்போகிறோம் என்ற வர்ணனை இனிமையாக இருக்கின்றது. அருமையான வரிகள் பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிழலி said:

முதன் முதலில்
குறுக்கு கட்டியவளின்
மார்பின் சரிவுகளில்
தேங்கிய நீர்த் துளி போல்
இலைகள் துளிர்க்க
தொடங்குகின்றன

கவிஞனின் கற்பனைக்குக் கரை இருக்கக் கூடாது என்று நம்புவர்களில் நானும் ஒருவன்...!

அரும்புகளை ஒப்பிட்ட விதம் அருமை...!

மார்பின் மெல்லிய சாய்வுகளில்....நீர்த்துளி தங்கும் போது ...எவ்வாறு இருக்கும் என்ற சிந்தனையிலேயே எனது இன்றைய பொழுது கழியப்போகின்றது...!

7 hours ago, நிழலி said:

இன்று நீண்ட நாட்களின் பின் வெப்பநிலை நேர் 11 இற்கு வருகின்றது. என் சிறு பூந்தோட்டத்தின் செடியில் இவ் வருத்தின் முதல் துளிர் தெரிகின்றது

எனது வீட்டு மாதுளம் மரத்தின்....முதலாவது இலையில்...மெல்லிய மஞ்சள் நிறம் தெரிகின்றது...!

மொழியால்...பிறப்பால் ஒரு இனமாகப் பிறந்து....வெவ்வேறு துருவங்களில் வாழ்கின்றோம் என்பதை நினைக்க நம்ப முடியாமல் உள்ளது! இது வளர்ச்சியா...அல்லது இழப்பா என்று முடிவு செய்ய இயலாமல் உள்ளது..!

அதே வேளை யாழ் என்னும் பாலம்...எத்தனை பேரை...நூல் அறுந்து போன பட்டங்கள் போல அல்லாது....எவ்வாறு இணைத்து வைத்திருக்கின்றது என்பதையிட்டு மிகவும் பெருமையாக உள்ளது...!

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா அற்புதமான கவிதை. நீண்ட நாட்களின்பின்  இன்றைய காலநிலையை அனுபவித்து வெளியே சென்ற நடைப்பயிற்சி செய்து வந்தேன். இந்த இளவேனிலுடன் எம் இன்னல்கள் மறைந்து இலைதுளிர்காலம்போல் எம் வாழ்வும் துளிர்க்க உங்கள் கவிதை இளவேனிலை வரவேறகிறது. நிழலியின் கவிதை அருமை.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நிழலி said:

இனி இளவேனில் காலம் -

உங்களுக்கு இளவேனில் காலம் எங்களுக்கு இலையுதிர்காலம் வரபோகின்றது ...அருமையான கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றிகள் தோழர்..👍

  • தொடங்கியவர்
On 10/3/2021 at 10:19, நிலாமதி said:

வனம் இனி சூல்  கொள்ளும்
சிற்றாறுகள் உறைவிலிருந்து
உருக்கொள்ளும்
முத்தங்களுக்கிடையில் பரிமாற
ரோசாக்கள் பூக்கத்தொடங்கும்

 

அழகான வர்ணனை பாராட்டுக்கள் 

நன்றி நிலாமதி அக்கா. 

ஆரம்பத்தில் நான் 'சூழ்' என்று எழுதியிருந்தேன், ஆனால் நீங்கள் சரியாக அதை 'சூல்' என்று குறிப்பிட்டு உள்ளீர்கள். நான் இக் கவிதையை என் முகனூலில் பகிரும் போது நண்பரும் ஊடகவியலாளருமான விக்கினேஸ்வரன் இவ் எழுத்து பிழையை (சூழ் எனும் போது அர்த்தமும் பிழைக்கின்றது) குறிப்பிட்ட பின்னரே நான் உணர்ந்து கொண்டு திருத்தி விட்டேன்.

On 10/3/2021 at 10:25, ஈழப்பிரியன் said:

மொத்தத்தில் ஊரை மறந்திருக்கும் காலம் வருகிறது.

நன்றி ஈழப்பிரியன் அண்ணா

இளவேனில் காலம் ஊர் தொடர்பான பல நினைவுகளை கொண்டு வரவும் தயங்குவதில்லை. முக்கியாம பிள்ளைகள் ஊஞ்சல் ஆடும் காட்சி எப்பவும் என் சிறு வயது நினைவுகளை கொண்டு வருவன.

21 hours ago, suvy said:

கவிதை இது கவிதை.......எத்தனை கவிஞர்கள் எத்தனை முறை பாடியபோதும் வசந்தம் சலிப்பதில்லை......!  👍

உண்மை.. .இளவேனில் காலம் அப்பதான் தலையில் முழுகி முடித்து ஈரத்துவாயை தலையில் சுற்றி வந்து நிற்கும் இளம்பெண் போன்று அழகானதுது

21 hours ago, பசுவூர்க்கோபி said:

இளவேனில் காலத்தை இனிமையாக காணப்போகிறோம் என்ற வர்ணனை இனிமையாக இருக்கின்றது. அருமையான வரிகள் பாராட்டுக்கள்

நன்றி பசுவூர்கோபி. உங்களது கவிதைகளுக்கு நானும் ரசிகன்

17 hours ago, Kavallur Kanmani said:

ஆகா அற்புதமான கவிதை. நீண்ட நாட்களின்பின்  இன்றைய காலநிலையை அனுபவித்து வெளியே சென்ற நடைப்பயிற்சி செய்து வந்தேன். இந்த இளவேனிலுடன் எம் இன்னல்கள் மறைந்து இலைதுளிர்காலம்போல் எம் வாழ்வும் துளிர்க்க உங்கள் கவிதை இளவேனிலை வரவேறகிறது. நிழலியின் கவிதை அருமை.

நன்றி அக்கா

நானும் ஜக்கெட் போடாமல் ஒரு மெல்லிய சுவற்றர் மட்டும் போட்டு காலாற வெளியில் சென்று நடந்து வந்தேன்.

 

10 hours ago, putthan said:

உங்களுக்கு இளவேனில் காலம் எங்களுக்கு இலையுதிர்காலம் வரபோகின்றது ...அருமையான கவிதை

நன்றி புத்தன்.

அங்கும் இலையுதிர் காலத்தில் இலைகள் பழுப்பு, மஞ்சள், சிவப்பு என்று நிறம்மாறி அழகாக காட்சி தருமா?

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதையில் இரண்டு இடத்தில் எழுத்துப் பிழை இருந்தது (சுழ்)சூல் மற்றும் இன்னும் ஒன்று திருத்த படாமலே இருக்கிறது..இறுதி வரிகளில் இவ் வருத்தின்(வருடத்தின்)நான் திருத்தி வாசித்து விட்டு போய் விட்டேன்.🌻👋🤭

Edited by யாயினி

  • தொடங்கியவர்
18 hours ago, புங்கையூரன் said:

கவிஞனின் கற்பனைக்குக் கரை இருக்கக் கூடாது என்று நம்புவர்களில் நானும் ஒருவன்...!

அரும்புகளை ஒப்பிட்ட விதம் அருமை...!

மார்பின் மெல்லிய சாய்வுகளில்....நீர்த்துளி தங்கும் போது ...எவ்வாறு இருக்கும் என்ற சிந்தனையிலேயே எனது இன்றைய பொழுது கழியப்போகின்றது...!

எனது வீட்டு மாதுளம் மரத்தின்....முதலாவது இலையில்...மெல்லிய மஞ்சள் நிறம் தெரிகின்றது...!

மொழியால்...பிறப்பால் ஒரு இனமாகப் பிறந்து....வெவ்வேறு துருவங்களில் வாழ்கின்றோம் என்பதை நினைக்க நம்ப முடியாமல் உள்ளது! இது வளர்ச்சியா...அல்லது இழப்பா என்று முடிவு செய்ய இயலாமல் உள்ளது..!

அதே வேளை யாழ் என்னும் பாலம்...எத்தனை பேரை...நூல் அறுந்து போன பட்டங்கள் போல அல்லாது....எவ்வாறு இணைத்து வைத்திருக்கின்றது என்பதையிட்டு மிகவும் பெருமையாக உள்ளது...!

எழுதத் தொடங்கும் போது எதைப்பற்றி எழுதப்போகின்றேன் என்ற கரு மட்டுமே மனதில் இருக்கும், வார்த்தைகளும் வரிகளும் அதன் போக்கில் இழுத்துச் சென்று எழுத வைக்கின்றன. முதன் முதலாக குறுக்கு கட்டியவள் என்ற படிமம், அது எழுதும் போது தானாக வந்த படிமம்.

மாதுளளையின் தளிரின் நிறத்தை மனசு அணுகின்றது. எவ்வளவு நாட்கள் அதைப் பார்த்து...!

நாம் வெவ்வேறு துருவங்களில் வாழக்கிடைத்ததன் பின்னாலும் எமக்கு தெரியாத ஒரு காரணம் இருக்கலாம். சில தசாப்தங்களின் பின் நாம் ஒரு பெரும் பொருளாதார பலமிக்க, நன்கு கற்ற, பல நுட்பங்கள் அறிந்த ஒரு இனமாக நாளை எழுவதற்காகத்தான் இன்று இப்படி சிதறுண்டு வாழ்கின்றோமோ என்று அடிக்கடி நினைப்பதுண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, புங்கையூரன் said:

மார்பின் மெல்லிய சாய்வுகளில்....நீர்த்துளி தங்கும் போது ...எவ்வாறு இருக்கும் என்ற சிந்தனையிலேயே எனது இன்றைய பொழுது கழியப்போகின்றது

மாவுக்கட்டுடன் இன்றைய பொழுது கரையப்போகின்றது. 😁

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா அற்புதமான இளவேனில் கவிதை, வர்ணனை சூப்பர், 👌

  • கருத்துக்கள உறவுகள்
On 12/3/2021 at 02:35, நிழலி said:

 

 

நன்றி புத்தன்.

அங்கும் இலையுதிர் காலத்தில் இலைகள் பழுப்பு, மஞ்சள், சிவப்பு என்று நிறம்மாறி அழகாக காட்சி தருமா?

இங்கும் உண்டு அதிகம் தலைநகர் கன்பராவில் இப்படியான காட்சிகளை காணலாம்,சிட்னி நகரமாயமாக்கப்பட்டமையால் குறைவு என சொல்லலாம்

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை. உங்கள் அயல்தான் இந்தக் கவிதை எழுதிய வைத்ததோ ???

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.