Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் மாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை காலமானார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மதபோதனையோடு உங்கள் வாழ்வை சுருக்கிக்கொள்ளாமல் நீதி, நிஞாயத்துக்காக, ஒடுக்கப்பட்ட மக்களுக்குகாக எந்தவித சோரமும் போகாமல் குரல் கொடுத்தீர்கள். பிரிந்தவர்களை ஒன்றுசேர்த்து பலமடைய உழைத்தீர்கள். ஏழைகளை தேடிச்சென்று ஆறுதல் அளித்தீர்கள். பல வலிகளை மனமுவந்து சுமந்தீர்கள். வையத்துள்  வாழ்வாங்கு வாழ்ந்த உங்களை  வானுறையும் தெய்வம் அழைத்துக்கொண்டார் மகுடம் சூட்ட. கண்ணீரோடு வழி அனுப்புகிறோம் உங்களை,  இறைவனில் மகிமையடைய சென்றாலும்  மக்களின் மனங்களில்  வீற்றிருங்கள்.  

  • Replies 58
  • Views 5.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

684811-DB-421-C-49-D9-A9-A0-A2-EB1462803

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக தலைவர்களில் ஒருத்தர் மட்டும்தான் இரங்கல் தெரிவித்து உள்ளார் பேரை போட்டால் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று புறு புறுப்பு வரும் .

மௌனித்தது ஈழத் தமிழர்களின் உரிமைக்குரல் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திங்கட்கிழமையை அரசு துக்க நாளாக அறிவிக்க வேண்டும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை

  •  

மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவவர்களின் இறுதி அடக்க நாளான எதிர் வரும் திங்கட்கிழமையை அரசு துக்க நாளாக அறிவிக்க வேண்டும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமரிடம் அவசர கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று (1) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் அவர்களின் மறைவு தமிழினத்திற்கு பேரிழப்பாகும்.இதற்காக தமிழர்கள் அனைவரும் எதிர் வரும் மூன்று நாட்களுக்கு துக்க தினம் அனுஸ்டிக்க வேண்டும்.

யுத்த காலத்தில் இன, மத , மொழி பேதம் பாராமல் மனிதம் மட்டுமே மேன்மை என கருதி அனைத்து மக்களுக்குமான சேவைகளை வழங்கியவர் மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை.

 

ஆண்டகை அவர்கள் சுகயீனம் காரணமாக இன்று (1)அதிகாலையில் இயற்கை எய்தினார். அவரது இழப்பானது எமது தமிழ் சமூகத்திற்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.

ஆயர் அவர்கள் அனைத்து மதங்களையும் ஒரே மாதிரியாகவே பார்த்து வந்துள்ளார். இதனால் மதத்தலைவர்கள் பிற மதத்தவர்களின் அன்பை அதிகமாக பெற்றவர் இராயப்பு ஜோசப் ஆண்டகை என்றால் அது மிகையாகாது.

யுத்த காலத்தில் தமிழ் மக்களுக்காக அயராது பாடுபட்டவர். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காகவும் அரசியல் கைதிகளுக்கும் ஓடி ஓடி உழைத்தவர்.

தமிழ் மக்கள் அனைவரும் நிம்மதியாகவும் சுய கௌரவத்துடனும் வாழ வேண்டுமென்பதில் உறுதியான பற்றோடு இருந்தவர். இன்று அவர் எம்மை விட்டு பிரிந்து உள்ளார். ஆகவே எமது ஆயரின் ஆன்மா சாந்தி அடைவதற்காக அனைத்து மக்களின் வீடுகளிலும் கருப்புக் கொடிகளை பறக்கவிட்டு மூன்று நாட்கள் துக்க தினமாக அனுஸ்டிக்க வேண்டும் .

மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு இன்று வியாழக்கிழமை அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளேன்.
மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் அவர்களின் இறுதி நல்லடக்க நாளான திங்கட்கிழமையை (5) ஒரு துக்க நாளாக அறிவிக்கும் படி கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளேன்.

பிரதமர் அவர்கள் ஆயர் அவர்களை நன்கு அறிந்தவர். அந்த வகையில் எதிர் வரும் திங்கட்கிழமையை துக்க நாளாக அறிவிக்க வேண்டும்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன் பௌத்த மத தலைவர் ஒருவர் மரணித்த போது அவரது இறுதி அடக்க நாளை துக்க நாளாக அரசு அறிவித்து இருந்தது.

அதே போன்று மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களின் இறுதி அடக்க நாளான திங்கட்கிழமையை துக்க நாளாக அரசு அறிவிக்க வேண்டும்.குறித்த கோரிக்கையை பிரதமரிடம் முன் வைத்துள்ளேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.
 

 

https://www.meenagam.com/திங்கட்கிழமையை-அரசு-துக்/

  • கருத்துக்கள உறவுகள்

மனிதநேயத்தின் உன்னத பண்பாளர் பேராயர் இராயப்பு ஜோசப்’ – ரிஷாட்

மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை பேராயர் மதிப்புக்குரிய இராயப்பு ஜோசப், மதத்துக்கு அப்பாலும் மனித நேயத்துடன் வாழ்ந்த பண்பாளர் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

93158959_3415446991804805_65462931729290

பேராயரின் மறைவு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அனுதாப அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை பேராயர் மதிப்புக்குரிய இராயப்பு ஜோசப் அவர்களின் இழப்பானது, அனைத்து இன மக்களுக்கும் அதிர்ச்சியையும் கவலையையும் தருகிறது.

WhatsApp_Image_2021-04-01_at_2.41.33_PM.

அவர் சகல இன மக்களினதும் கௌரவத்துக்கு உரியவராகவும் நன்மதிப்பை பெற்றவராகவும் இருந்தார். அது மாத்திரமின்றி அவர் அனைவராலும் நேசிக்கப்பட்டவர். இன, மத பேதங்களுக்கு அப்பால் மாவட்டத்தின் அபிவிருத்தியில் கூடிய கரிசனை செழுத்திய பேராயர், துன்பப்பட்ட மக்களுக்கு எந்தவிதமான பேதமுமின்றி உதவி புரிந்தவர்.

அவர் ஏழை மக்களின் அன்புத் தோழனாக இருந்தது மாத்திரமின்றி, இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும் விரும்பினார். அதற்காக அரும்பாடுபட்டார். அனைத்து மத பெரியார்கள், அரசியல் பிரதிநிதிகள், சாதாரண மக்கள் ஆகியோருடன் நல்லுறவைப் பேணி, சமூக முன்னேற்றத்துக்காக உழைத்தார். கத்தோலிக்க மக்களுக்கு அன்னார் ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் விளங்கினார்.

அவரது இழப்பு கத்தோலிக்க சமூகத்துக்கு மாத்திரமின்றி நாட்டு மக்களுக்கும்  பேரிழப்பாகும்” என்றார். 

மனிதநேயத்தின் உன்னத பண்பாளர் பேராயர் இராயப்பு ஜோசப்’ – ரிஷாட் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் துயரத்தை வெளியுலகிற்கு கொண்டு வந்ததில் ஆயருக்கு பெரும் பங்கு உண்டு 

அதி வணக்கத்திற்கு உரியவர்  ஆழ்ந்த இரங்கல்கள்  

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினம் ஆயர் இராயப்பு ஜோசப்புக்கு கடமைப்பட்டதாக இருக்கின்றது- கோவிந்தன் கருணாகரம்

 
12-696x387.jpg
 28 Views

தமிழினம் ஆயர் இராயப்பு ஜோசப்புக்கு கடமைப்பட்டதாக இருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

எதிர்வரும் திங்கட்கிழமையை எமது இனத்தின் துக்ககரமான நாளாகப் பிரகடணப்படுத்தி முடிந்தளவு எமது வீடுகளிலும், வியாபார நிலையங்களிலும் வெள்ளைக் கொடிகளையோ கறுப்புக் கொடிகளையோ பறக்க விட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள்விடுத்தார்.

இன்று மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தலகள் மிக விரைவில் நடத்தப்பட்டு அந்த அந்த மாகாண மக்கள் தங்களைத் தாங்களே ஆளக்கூடிய ஒரு சூழலை இந்த அரசு ஏற்பத்திக் கொடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

நேற்று முன்தினம் புதன்கிழமை மாவட்ட அரசாங்க அதிபர் தொடர்புகொண்டு உங்களை இந்த கூட்டத்திற்கு அழைக்கவேண்டாம் என்று கூறியிருக்கின்றார்கள்,அதனால் அந்த கூட்டத்திற்கு சமுகமளிக்கவேண்டாம் என்று கூறினார்.பின்னர் நேற்று வியாழக்கிழமை காலையில் தொலைபேசியில் அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு வந்துள்ளதாக தெரிவித்தார்.

மட்டக்களப்புக்கு விஜயம் செய்த அமைச்சர் நாமல் ராஜபக்ஸ இதனை கூறினாரா அல்லது இந்த மாவட்டத்தில் அரசியல் கட்சி சார்ந்து செயற்படும் இராஜாங்க அமைச்சர் இருக்கின்றார், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர் இருக்கின்றார். யார் கூறினார்கள் என்பதை அரசாங்க அதிபர் வெளிப்படையாக கூறவேண்டும் எனவும் தெரிவித்தார்.

 

https://www.ilakku.org/?p=46242

  • கருத்துக்கள உறவுகள்

எதிரிகளே புகழும் அளவுக்கு அவரது மனித நேய செயற்பாடுகள் உண்மையாகவும், வெளிப்படையாகவும் இருந்தன. அவரே உயர்ந்த மனிதர்.  

  • கருத்துக்கள உறவுகள்

 

May be an image of 2 people and people standing
 
 
 
 
"தமிழ்த்தேசத்தின் கொடியை ஏற்றுவது தவறல்ல. அது விடுதலைப் புலிகளின் கொடி அல்ல தமிழ்மக்களின் கொடி" என வெளிப்படையாக குறிப்பிட்டவர் வணக்கத்துக்குரிய ஆண்டகை இராசப்பு ஜோசப் அவர்கள்.
"There is nothing wrong in the Tamil nation raising its national flag. The Tamil national flag is not the Tigers’ flag but it is the Tamil people’s flag"
சிறிலங்காவின் எல்எல்ஆர்சி விசாரணைக்குழுவுக்கு வழங்கிய தனது சாட்சியத்திலும் 146, 679 பேருக்கு இறுதிப்போரில் என்ன நடைபெற்றது என்று தெரியவில்லை வெளிப்படையாக பதிவு செய்தவர் அவர்.
அதன் பின்னரும் தமிழ்த்தேசியத்தை தொடர்ந்து நிலைநிறுத்துவதில் அயராது தன்னால் இயன்றவரை பல முயற்சிகளை மேற்கொண்டவர்.
இறைமகனாக வாழ்ந்து மக்கள் மனதில் உறையும் ஆண்டகைக்கு தமிழ்த்தேசத்தின் இறுதி வணக்கங்கள்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பிழம்பு said:

மனிதநேயத்தின் உன்னத பண்பாளர் பேராயர் இராயப்பு ஜோசப்’ – ரிஷாட்

மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை பேராயர் மதிப்புக்குரிய இராயப்பு ஜோசப், மதத்துக்கு அப்பாலும் மனித நேயத்துடன் வாழ்ந்த பண்பாளர் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

93158959_3415446991804805_65462931729290

பேராயரின் மறைவு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அனுதாப அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை பேராயர் மதிப்புக்குரிய இராயப்பு ஜோசப் அவர்களின் இழப்பானது, அனைத்து இன மக்களுக்கும் அதிர்ச்சியையும் கவலையையும் தருகிறது.

WhatsApp_Image_2021-04-01_at_2.41.33_PM.

அவர் சகல இன மக்களினதும் கௌரவத்துக்கு உரியவராகவும் நன்மதிப்பை பெற்றவராகவும் இருந்தார். அது மாத்திரமின்றி அவர் அனைவராலும் நேசிக்கப்பட்டவர். இன, மத பேதங்களுக்கு அப்பால் மாவட்டத்தின் அபிவிருத்தியில் கூடிய கரிசனை செழுத்திய பேராயர், துன்பப்பட்ட மக்களுக்கு எந்தவிதமான பேதமுமின்றி உதவி புரிந்தவர்.

அவர் ஏழை மக்களின் அன்புத் தோழனாக இருந்தது மாத்திரமின்றி, இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும் விரும்பினார். அதற்காக அரும்பாடுபட்டார். அனைத்து மத பெரியார்கள், அரசியல் பிரதிநிதிகள், சாதாரண மக்கள் ஆகியோருடன் நல்லுறவைப் பேணி, சமூக முன்னேற்றத்துக்காக உழைத்தார். கத்தோலிக்க மக்களுக்கு அன்னார் ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் விளங்கினார்.

அவரது இழப்பு கத்தோலிக்க சமூகத்துக்கு மாத்திரமின்றி நாட்டு மக்களுக்கும்  பேரிழப்பாகும்” என்றார். 

மனிதநேயத்தின் உன்னத பண்பாளர் பேராயர் இராயப்பு ஜோசப்’ – ரிஷாட் | Virakesari.lk

ஆயருக்குக் கொலைப்பயமுறுத்தல் விட்ட அந்த ரீசாத்தா இது?

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமான  ஒருவரின் அனுதாபச் செய்திக்காக காத்திருக்கிறேன்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலக நீதி அரங்கில், தமிழர்களின் முதல் சாட்சி இராயப்பு ஜோசப் ஆண்டகை – மனோ!

April 3, 2021

Mannar-Pishap-Rayappu-joshop.jpg

“உலக நீதிமன்றத்தில், இலங்கை வாழ் தமிழர்களின் முதல் வழக்கு தொடருனரும், முதல் சாட்சியும் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள்தான். ஆனால், அவர் தொடர்ந்த வழக்கு இன்னமும் முடிவுறவில்லை. அதற்குள் ஏன் போனார் என்றும் தெரியவில்லை.

2005 முதல் 2009 வரையிலான மிக நெருக்கடியான மனித உரிமை பாழ்பட்டு போன கால கட்டத்தில் அவர் எனக்கும், எமது சிவில் மக்கள் கண்காணிப்பு குழுவுக்கும் தந்த உபதேசங்கள் என் மனதுள் இன்றுவரை ஆளப்பதிந்துள்ளன. தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி, மக்கள் கண்காணிப்பு குழு ஆகிய அமைப்புகளின் சார்பில் எங்கள் அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என தமுகூ தலைவர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள அனுதாப செய்தியில்,

“ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களது நேர்மையும், ஆளுமையும், துணிச்சலும் பல சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டுள்ளன. போரின் இறுதி கட்டங்களில் கொல்லப்பட்டோர், காணாமல் போனோர், காயமடைந்தோர் பற்றிய கணக்கீடுகள் தொடர்பில் சர்வதேச சமூகமும், குறிப்பாக ஐநா அமைப்புகளும், ஏனைய சிவில் அமைப்புகளும், இலங்கை அரசும் இழுபறிபட்டுக்கொண்டு இருந்த வேளையில், ஆயரின் குரல் உறுதியாகவும், தர்க்கரீதியாகவும் ஒலித்தது.

அவரது குரலுக்கும், தர்க்கரீதியான ஆவணங்களுக்கும் இறுதிவரை இலங்கை அரசும், ஐநாவும் பதில் கூறவில்லை என்பதை இங்கே கூறியே ஆகவேண்டும். அது மட்டுமல்ல, போரின் இறுதி காலகட்டங்களில் ஐநா சபை அப்பாவி மக்களை பாதுகாக்க தவறி விட்டது என்ற மனக்கிலேசதத்தையும் அவர் கொண்டிருந்தார்.

நியாயம், நீதி, உண்மை, அமைதி, சமத்துவம், சமாதனம் ஆகியவற்றின் பேரில் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் நடத்தி வந்த போராட்டம் இன்னமும் நிறைவடையவில்லை. உலகின் மனசாட்சியை தட்டி எழுப்பி அவர் தொடுத்த வழக்கு இன்னமும் முடிவுறவில்லை. அங்கே அவர் நேர்பட அளித்த சாட்சியத்துக்கு பதிலுரை வழங்கப்படவில்லை. அதற்குள் ஆயர் ஐயா, ஏன் போனார் எனவும் தெரியவில்லை.

ஆனால், அவரது சிவில் தலைமைத்துவத்தை முன்மாதிரியாக கொண்டு இன்று வடக்கு கிழக்கிலேயே சிவில் சமூகம் கட்டமைக்கப்பட்டு செயற்பட ஆரம்பித்துள்ளமை நம்பிக்கை ஒளியை தருகிறது. இதுவே அவருக்கான அர்த்தமுள்ள அஞ்சலி என நான் நினைக்கின்றேன்.”

 

https://globaltamilnews.net/2021/158872/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களின் உரிமைக்குரலொன்று ஓய்ந்தது - தமிழீழ விடுதலைப் புலிகள்.

03.04.2021

ஈழத்தமிழர்களின் உரிமைக்குரலொன்று ஓய்ந்தது

 

மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் வணக்கத்துக்குரிய கலாநிதி இராயப்பு யோசப் ஆண்டகை 01.04.2021 அன்று சாவடைந்தார் என்ற செய்தி ஈழத்தமிழ் மக்களாகிய எம்மைப் பெரும்துயரில் ஆழ்த்தியுள்ளது. இன ஒடுக்குமுறைகளுக்குள்ளாகித் துயரம் சுமந்துநிற்கும் தமிழ்மக்களின் உண்மையான விடுதலையுணர்வைப் புரிந்தும் தெரிந்தும் கொண்டிருந்தவர் இந்தப் பெருமகனார். ஆன்மீகத் தலைவராக அல்லாமல், தன் இனத்தின்மீது பேரன்புகொண்ட தூய மனிதராக வாழ்ந்தவர்.  தமிழ்மக்கள் பாதிக்கப்படுகின்ற ஒவ்வொரு தடைவையும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உரத்த குரல் எழுப்பிய உன்னதமானவர் இவர். மக்களின் துயர்துடைக்கும் பணிகளை ஆர்வத்தோடு முன்னெடுத்தவர். 

சிங்கள இனவாத அரசின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது,எம்மினத்தின் மீது பெரும் இனப்படுகொலை புரிந்த அரசின் செயல்களை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டியவர். போரின்போதும் 2009ற்குப் பின்னரும் துணிச்சலுடன் உண்மையின் குரலாக> தமிழின அழிப்பின் சாட்சியாக நின்று> வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நீதிக்காவும் அரசியல்கைதிகளின் விடுதலைக்காகவும் தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டியும் மக்களுடன் இணைந்து போராடிய இன உணர்வாளர். 

தமிழின அழிப்பின் சாட்சியங்களைத் திரட்டி,ஆவணமாக்கிச் சிங்கள அரசிற்கு துணிவுடன் சுட்டிக்காட்டியதோடு,உலகிற்கும் வெளிப்படுத்தியவராவார். போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகள்,உறுப்பிழந்தவர்கள்,பெண்தலைமைத்துவக் குடும்பங்கள் போன்றோரிற்கான உதவித்திட்டங்களை வழங்கியது மட்டுமல்லாது அவற்றிற்கான அமைப்புக்களையும் உருவாக்கி நெறிப்படுத்தியிருந்தார். 

இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கும் இராணுவமயமாக்கல், நிலஅபகரிப்பு,சிங்களக்குடியேற்றம்,சிங்களமயமாக்கல்,புத்தமயமாக்கல், மனிதஉரிமை மீறல்களையும் எதிர்த்து,தமிழினத்தின் உரிமைக்காகவும் நீதிக்காகவும் குரல்கொடுத்த வணக்கத்துக்குரிய கலாநிதி இராயப்பு யோசப் ஆண்டகையின் இழப்பு ஈழத்தமிழ்மக்களுக்கு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகவே அமைந்துள்ளது. இவரது இழப்பால் துயருற்றிருக்கும் தமிழ்மக்களோடு இணைந்து இவ் இழப்புத்துயரில் நாமும் பங்கெடுத்துக்கொள்கின்றோம். 

‘‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

அனைத்துலகத் தொடர்பகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்.

dBTVkMJlamb3kIaJuiwZ.jpg

https://www.thaarakam.com/news/fab816ac-565d-4346-aa03-17be73aeefe2

  • கருத்துக்கள உறவுகள்

 

இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடலுக்கு பல்லாயிரக் கணக்கானோர் அஞ்சலி!

மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடலுக்கு பல்லாயிரக் கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து பேரணியாக நேற்று மன்னார் ஆயர் இல்லத்திற்கு ஆயரின் பூதவுடல் எடுத்துச்செல்லப்பட்டதுடன் மக்களின் அஞ்சலிக்காக ஆயர் இல்லத்தின் சிற்றாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) பல்லாயிரக் கணக்கான மக்கள் இன, மத பேதமின்றி ஆயருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் என அரசியல் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதேவேளை, நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை மூன்று மணியளவில் ஆயிரின் பூதவுடல் மன்னார் ஆயர் இல்லத்திலிருந்து பவனியாக மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

அங்கு, நாளை மாலை முதல் நாளைமறுதினம் திங்கட்கிழமை மதியம் இரண்டு மணிவரை பேராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை மாலை மூன்று மணியளவில் பேராலயத்தில் இலங்கையின் அனைத்து ஆயர்களும் இணைந்து கூட்டுத் திருப்பலியை ஒப்புக்கொடுக்கவுள்ளதுடன் பூதலுடல் பேராலயத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

இதேவேளை, ஆயருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வரும் திங்கட்கிழமையை துக்க தினமாக அனுஷ்டிக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், மன்னார் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்களை மூடி முஸ்லிம் சமூகமும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

thousands-pay-tribute-to-the-late-Joseph-Andakai-2.jpg

thousands-pay-tribute-to-the-late-Joseph-Andakai-3.jpg

thousands-pay-tribute-to-the-late-Joseph-Andakai-4.jpg

thousands-pay-tribute-to-the-late-Joseph-Andakai-6.jpg

thousands-pay-tribute-to-the-late-Joseph-Andakai-1.jpg

https://athavannews.com/2021/1207071

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமான ஒருவரின் இரங்கற் செய்தியை வாசிக்க ஆவலாய் காத்திருக்கிறேன்.   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல திருநாட்களில் நல்ல மறைவு.
சென்று வாருங்கள் குருவே.
இறைவனடியில் தமிழினத்தின் கோரிக்கையை முன் வையுங்கள் ஆண்டகையே.

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறவுகள்
On 2/4/2021 at 22:42, ரஞ்சித் said:

ஆயருக்குக் கொலைப்பயமுறுத்தல் விட்ட அந்த ரீசாத்தா இது?

ஓம்.

சாத்தான் அப்பப்ப வேதமும் ஓதும்

  • கருத்துக்கள உறவுகள்
On 3/4/2021 at 14:54, satan said:

முக்கியமான  ஒருவரின் அனுதாபச் செய்திக்காக காத்திருக்கிறேன்.  

யார் அது?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியத்தின் சிறந்த வழிகாட்டியை இழந்து நிற்கின்றோம் – வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் கூட்டறிக்கை!

தமிழ் தேசியத்தின் சிறந்த வழிகாட்டியை இழந்து நிற்கின்றோம் – வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் கூட்டறிக்கை!

தமிழ் தேசியத்தின் சிறந்த வழிகாட்டியை இழந்து நிற்கின்றோம் என மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவ குறித்து வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.

குறித்த அறிக்கையில்,

மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை, கடந்த 01/04/2021இல் இயற்கை எய்திய செய்தியானது தமிழர் தேசத்தினை ஆழாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.

ஆயரின் இழப்பானது தமிழர் தேசத்திற்கு அளவிட முடியாத ஒரு பேரிழப்பாகும். அவரின் இழப்பால் தமிழ் தேசியம் ஒரு சிறந்த வழிகாட்டியை இழந்து நிற்கின்றது. தமிழரின் உரிமைக்காக மதங்களைக் கடந்து தேசியத்தின் பால் ஓங்கி ஒலித்த குரலை தமிழர் தேசம் இன்று இழந்து நிற்கின்றது.

16.04.1940இல் தீவகத்தில் பிறந்த இவர் தனது 27ஆவது வயதில் தன்னை ஆன்மீகத்திற்கு அர்ப்பணித்த காலம் தொட்டு சமயப் பணியோடு சமூகப் பணியையும் காலத்தின் தேவையை உணர்ந்து தமிழ் தேசியப் பணியையும் ஒருங்கே சமநோக்கோடு முன்னெடுத்துச் செயற்பட்டவர்.

1992ஆம் ஆண்டு ஆயராக திருநிலைப்படுத்தப்பட்ட இவர் ஓய்வு நிலைக்கு வரும் வரையான காலங்களில் மன்னார் மாவட்டத்தில் மட்டுமல்லாமல் வன்னி எங்கும் பரந்துபட்ட பல்வேறு சமூக சிந்தனைகளோடும் கல்வி, கலை, மறுவாழ்வு, சமூக சீர்திருத்தம் மற்றும் மனித உரிமை செயற்பாடுகளையும் தனது மூச்சாகக் கொண்டு தனது ஆயர் பணிக்கு மேலான பணிப்பொறுப்புகளாக அவற்றை ஒட்டுமொத்த பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் சமூகங்களுக்கும் அரும்பணி ஆற்றியவர்.

குறிப்பாக 2009இற்கு பின்னர் திக்கற்றிருந்த தமிழ் சமூகத்தின் மீட்புக்காக எல்லைகளைக் கடந்து செயற்பட்டுவந்த மிகச் சிறந்த மனிதர். மனித நேயத்தோடு மட்டுமல்லாது பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் நேர்நின்று ஒட்டுமொத்த தமிழினத்தின் விடுதலைக்காக பல்வேறு பரிமாணங்களில் தனது ஆற்றல்களை வெளிப்படுத்தி சொற்களோடு மட்டுமல்லாது அவைளுக்கு செயல் வடிவம் கொடுத்து செயற்பட்டு வாழ்ந்து காட்டிய மகத்தான தமிழ் தேசிய இனத்தின் கலங்கரை விளக்காக இறுதிக்காலம் வரை செயற்பட்ட ஒரு கர்ம வீரர்.

தமிழ் சமூகம் காலத்துக்கு காலம் சவால்களைச் சந்தித்த போதெல்லாம் அவற்றைக் கடந்து செல்வதற்கான சவால்களை ஏற்று அந்த இடங்களெல்லாம் எமது இனத்தைக் கடந்துசெல்ல நல்வழி காட்டியவரும் அறவழி அன்பும் கருணையும் இரக்கமும் தேசப்பற்றும் இவரிடம் அளவில்லாத ஆளுமைகள் வளர்வதற்குக் காரணமாக இருந்தன.

உண்மையான விடயங்களை எதுவித தயக்கமும் இன்றி வெளி உலகிற்கு எடுத்துச் சொன்ன போதெல்லாம் பலவிதமான இடர்களை சந்தித்தவர். இதனால், இனவாதிகளினால் எதிரியாகவும், பயங்கவாதியாகவும் கூட இவர் சித்தரிக்கப்பட்டார்.

ஸ்ரீலங்கா அரசு இன்னும் பல சர்வதேச நாடுகளும் இணைந்து தமிழினத்தின் மீதான இறுதிப் போரை கண்மூடித்தனமாக முன்னெடுத்து மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தின. பின்னர், அதனால் ஏற்பட்ட இழப்புகளையும் மனித உரிமை மீறல்களையும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மிகக் காத்திரமாகவும், ஆதாரபூர்வமாகவும் வெளிப்படுத்திய ஆன்மீகவாதி.

2009ஆம் ஆண்டு யுத்தம் மெளனிக்கப்பட்ட பின்னர் தமிழர்கள் திக்கற்றவர்களாக நின்ற நேரம் அவர்களுக்கு நம்பிக்கை ஒளியாக விளங்கியவர். தமிழினத்தின் மீதான இனப் படுகொலையை, இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பொது மக்களின் எண்ணிக்கையை பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலும் பொது வெளியிலும் சர்வதேசத்திலும் அறுதியிட்டு தெரிவித்தவர்.

வன்னிப் போர்ப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் வாழ்ந்த தமிழர்களின் எண்ணிக்கையை இந்திய அரசும் ஸ்ரீலங்கா அரசும் குறைத்துக்கூறி மக்களைப் பட்டினிச்சாவுக்கும் இனவழிப்புக்கும் உள்ளாக்கியதை ஸ்ரீலங்கா அரசின் முல்லைத்தீவின் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரின் அறிக்கையை வைத்து உலகிற்கு அம்பலப்படுத்தி ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 469 தமிழர்கள் 2009 யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட போது கணக்கில் இல்லாது போனதை (Unaccounted) ஐ.நா. முதல் அகிலம் வரை அறியச்செய்தார். பாதிக்கப்பட்ட தமிழினத்தின் நீதிக்குரலாக, சாட்சியாக இருந்த மிகப்பெரும் ஆளுமையை நாம் இன்று இழந்து நிற்கின்றோம்.

ஆயர் அவர்கள் 1994ஆம் ஆண்டு தனது ஜேர்மனிய விஜயத்தின்போது புலம்பெயர் சமூகத்துடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்தார். அன்றைய காலகட்டத்தில் அவரே அரசு-புலிகள் பேச்சுவார்த்தைக்கு மூலகாரணமாயிருந்தார். அன்றுதொட்டு அவர் அமெரிக்க வெளிநாட்டமைச்சர் ஜோன் ஹரியைச் சந்திக்கச் செல்லுமட்டும் தன் ஆன்மீகக் கடமைகளோடு தன் தமிழினக் கடமைகளையும் உறுதியோடும் நேர்மையோடும் அதீத அக்கறையோடும் செய்து வந்தார். ஜோன் ஹரியைச் சந்திக்கச் செல்லும் வழியில் உடல்நலம் குன்றினார். இது சதியா அல்லது விதியா என நாமறியோம்.

யுத்த காலத்திலும் யுத்த மெளனிப்புக் காலத்திலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவச் சிறார்களுக்காக புலம்பெயர் நாடுகளில் ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு மாணவரைப் பொறுப்பெடுக்கவைத்து அவர்களின் கல்விக்கு உதவினார். பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல புதிய கிராமங்களை, வீட்டுத் திட்டங்களை அமைத்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றினார்.

அவர் ஒடுக்கப்பட்ட இனத்தின் காவலனாக விளங்கியது மட்டுமல்லாமல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான எமது போராட்டத்தின் தொடக்கமுமாக அவரே இருந்தார். மீளக் குடியமர்ந்த பின்பு பலரும் காணாமல்போன தமது உறவுகளைத் தேடி அலைந்து திரிந்த போது அவர்களுக்கு ஆறுதலாகவும் வழிநடத்துபவராகவும் இருந்து அவர்களைப் பாதுகாத்தவர்.

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் உருவாகுவதற்கு மூல காரணமாக விளங்கியவர். இதன்மூலம் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினையை சர்வதேசத்திற்கு வெளிக்கொண்டு வருவதில் மிகப்பெரும் பங்காற்றியவர்.

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்திலும் ஆயர் மிகக்காத்திரமான பங்காற்றியுள்ளார். சகல சிறைச்சாலைகளுக்கும் நேரடியாகவே சென்று தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்து அவர்களுக்கு நம்பிக்கையும் தைரியமும் ஊட்டியவர். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக சகல தரப்பினரோடும் தொடர்புகளை ஏற்படுத்தி பல வழிகளிலும் கடும் முயற்சிகளை மேற்கொண்டார்.

இந்நிலையில், இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு எமது இறுதி வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன் ஆயரின் இழப்பால் துயறுற்றிருக்கும் அனைவருடனும் துயர் பகிர்ந்து கொள்கின்றோம்.

ஆண்டகை அவர்களின் மறைவையொட்டி அவரால் தமிழ் தேசியத்திற்கு ஆற்றிய சேவைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக வரும் ஐந்தாம் திகதி திங்கட்கிழமையை தமிழ் தேசிய துக்க தினமாக ஏற்கனவே பிரகடனப்படுத்தப்படுத்தியிருந்தோம்.

இதற்கு தமிழ் தேசியக் கட்சிகள், பொது மக்கள் அனைவரும் ஆதரவு வழங்குவதுடன் அனைவரும் தங்களின் வீடுகளிலும் பொது இடங்களிலும் வணிக நிலையங்களிலும் கறுப்புக் கொடிகளைப் பறக்கவிட்டும் தங்கள் உடைகளில் கறுப்புப் பட்டிகளை அணிந்தும் துக்கத்தை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அதேநாளில், தமிழகம் மற்றும் புலம்பெயர் தேசம் எங்கும் வாழும் தமிழ் மக்களும் கறுப்புப்பட்டி அணிந்து தங்கள் துக்கத்தை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவில் சமூக அமைப்புகளின் விபரம்,

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம்

வட-கிழக்கு சிவில் சமூக சம்மேளனம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம்

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு

பல்சமயங்களின் ஒன்றியம், மட்டக்களப்பு

சிவகுரு ஆதீனம், யாழ்ப்பாணம்

முதியோர் சம்மேளனம், மட்டக்களப்பு

வெண்மயில் அமைப்பு, மட்டக்களப்பு

அமெரிக்கன் மிஷன், மட்டக்களப்பு

சடோ லங்கா நிறுவனம், மட்டக்களப்பு

தமிழ் இளையோர் மக்கள் இயக்கம், வன்னி

அரச சாரா தொண்டு நிறுவனங்களின் இணையம்

தமிழர் நலன் காப்பகம், மட்டக்களப்பு

தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு, மட்டக்களப்பு

புழுதி சமூக உரிமைக்கான அமைப்பு, திருகோணமலை

குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு, யாழ்ப்பாணம்

உலக தமிழர் மாணவர் ஒன்றியம்

இராவண சேனை, திருகோணமலை

கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம்

தாய்நிலம் அறக்கட்டளை, சாவகச்சேரி

முல்லை மாவட்ட பிரஜைகள் உரிமைக்கான அமையம்

YMCA மட்டக்களப்பு

வாலை அம்மன் சனசமூக நிலையம் – திருநெல்வேலி கிழக்கு

வடக்கு விளையாட்டு கழகம்

மகளிர் அபிவிருத்தி நிலையம்

வடக்கு கிழக்கு பொது அமைப்புகள், மற்றும் சம்மேளனங்கள்.

https://athavannews.com/2021/1207425

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு மறைந்த ஆயருக்கு இறுதி மரியாதை

 
IMG_9891-696x464.jpg
 41 Views

மன்னார் ஆயர் இல்லத்தின் சிற்றாலயத்தில் வைக்கப்பட்டிருந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் இன்று   மன்னார் தூய செபஸ்தியார் போராலயத்திற்கு அஞ்சலிக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.

IMG_9887.jpg

ஆயர் இல்லத்தில் இருந்து  மன்னார் பொது வைத்தியசாலை சந்தியூடாக  மன்னார் பொது விளையாட்டு மைதான சந்தியை குறித்த ஊர்வலம் சென்றடைந்தது.

அங்கிருந்து பெரிய கடை வழியாக மன்னார் நகரப்பகுதியில் வந்தடைந்தது. அங்கிருந்து மன்னார் நகரப்பகுதியில் உள்ள வீதி சுற்றுவட்டம் வழியாக சென்று மன்னார் புனித செபஸ்ரியார் பேராலய  வீதியூடாக டெலிகொம் சந்தியை சென்றடைந்தது.

IMG_9885.jpg

அங்கிருந்து ஆயரின் திருவுடல் தாங்கிய ஊர்தி செபஸ்தியார் பேராலயத்தினை சென்றடைந்தது.

IMG_9888.jpg

குறித்த ஊர்வலத்தில் அருட்தந்தையர்கள்,பாடசாலை மாணவர்கள் மக்கள்,என பல ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர். பேராலயத்தில் மக்களின் அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்படுள்ள நிலையில், நாளை திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் இலங்கையில் உள்ள மறைமாவட்ட ஆயர்களின் இரங்கல் திருப்பலியுடன், ஆலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

IMG_9892.jpg

மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாகங்களிலும் கருப்பு,வெள்ளை கொடிகள் பறக்கவிடப்பட்ட நிலையில் மன்னார் மறைமாவட்டம் சோக மயமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

 

https://www.ilakku.org/?p=46414

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரஞ்சித் said:

யார் அது?

கொஞ்சம் பொறுத்திருங்கள் நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“நீதியின் குரல்”இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மரியாதை வணக்கம்!

April 5, 2021

NEETHIYIN-KURAL-1.jpg

இடர் வரினும் அஞ்சாமல் உண்மையும் நீதியும் தேடும் அர்ப்பணிப்புடன் தீரமிகு உன்னத வாழ்க்கை வாழ்ந்து, மறைந்த அதிவணக்கத்துக்குரிய இராஜப்பு ஜோசப் ஆண்டகைக்கு ‘நீதியின் குரல்’ என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை புகழ்வணக்கம் செலுத்திக் கொண்டது.

2009ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக சிறிலங்காவின் இனஅழிப்புப் போர்,பெருந்திரளான வன்கொடுமைக் குற்றங்களாகும் என்பதை நிறுவுவதில் இராஜப்பு ஆண்டகை முக்கியப் பங்கு வகித்தவர் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அரசவையில் குறிப்பிட்டிருந்தார்.

அனைத்துலக சமூகத்தின் சாட்சிகளின்றி நிகழ்த்தப்பட்ட இனவழிப்பின் வலுமிக்க சாட்சியாக ஆண்டகை இருந்வர் என்பதோடு, 146,678 பேர் கொல்லப்பட்டனர் என்ற புள்ளிவிவரக் கணக்கீடுகளின் அடிப்படையில் அவர் தெரிவித்த முடிவை யாராலும் மறுத்துப் பேச முடியவில்லை எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் குறித்துரைத்திருந்தார்.

மேலும் அவர் தனதுரையில், 2011ம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கம் அமைத்திருந்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம், இறுதிப்போரின் நிகழ்ந்த பாரிய குற்றங்கள், மனித உரிமைமீறல்கள் தொடர்பில், ஆணைக்குழுவினை அமைத்திருந்த அரசுக்கு எதிராக, ஏனைய உயர்நிலை கத்தோலிக்கக் குருமார்களுடன் சேர்ந்து ஆண்டகை அவர்கள் வாக்குமூலம் அளித்திருந்தமையானது பெருந்துணிச்சலான செயலாக அமைந்தது.

வாழ்நாள் முழுக்க அவர் அதிகாரத்தில் இருந்தவர்களிடம் பகிரங்கமாகவும் ஒளிவுமறைவின்றியும் உண்மை உரைத்திருந்தார்.

முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கு நீதி கோரும் தமிழர் குரலின் ஆளுருவமாகத் திகழ்ந்தவர் ஆயர் இராஜப்பு.

விடுதலைக்கும், அரசியல் இறைமைக்குமான தமிழர் அரசியல் பெருவிருப்பு கோரிக்கையின் உருவமாகத் இராஜப்பு ஆண்டகை திகழ்ந்தவர் என்பதோடு, ஈழத்தமிழர் விடுதலைஅரசியலில் முக்கியப் பங்கு வகித்தவர்.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்ற நமது கோரிக்கையில், உலகெங்கும் தமிழர்கள் இன்று ஒன்றுபட்டிருக்கும் இந்த நேரத்தில், ஆயரின் குரலை நாம் இழந்து விட்ட போதிலும் அவரது தொலைநோக்கும் பெரும்பணியும் நம்முள் உயிர்ப்புடன் இருக்கும்.

எந்தக் குற்றங்களை அம்பலமாக்கவும் கண்டிக்கவும் ஆயர் தம்முயிரைப் பணயம் வைத்துப் பாடுபட்டாரோ, அந்தக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதி செய்ய நம்மை அர்ப்பணித்துக் கொள்வதே இராயப்பு ஆண்டகை நமக்கு விட்டுச்சென்ற மரபுக்கு நாம் செலுத்தக் கூடிய, செலுத்த வேண்டிய மதிப்பின் ஆகச் சிறந்த அடையாளமாகும் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்திருந்தார்.


நீதியின் ஒரு குரலிலிருந்து பல குரல்கள் எழும்.

இராஜப்பு ஆண்டகையின் மறைவு ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் இழப்பாகும் எனத் தெரிவித்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை துணைத்தலைவர் ரஜினிதேவி செல்லத்துரை அவர்கள், போரின் இறுதிக் கட்டங்களில் 146,679 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற அவர் சாட்சியத்தை எவராலும் நிராகரிக்க முடியவில்லை என தனது இரங்கல் உரையில் தெரிவித்திருந்தார்.

ஆயர் இராஜப்பு ஆண்டகை அவர்கள், தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நிழலாக விளங்கினார் எனத் தெரிவித்த தாயக தொடர்பாடலுக்கான அமைச்சர் விஜிதரன் அவர்கள், தமிழர் போராட்டத்தின் நியாயத்தைப் பன்னாட்டுச் சமுதாயத்துக்கு எடுத்டுரைப்பவராகவும், தமிழினவழிப்பின் சாட்சியாகவும் இருந்தார் என்றார். இறுதி வரை தமிழர் போராட்டத்தின் வழிகாட்டியாக இருந்து தமிழ்த் தேசியத்துக்கு உரமூட்டியிருந்ததோடு, என்றார். இறுதிப்போரின் போது தமிழர்க்கு ஏற்பட்ட இழப்புகளைத் துல்லியமாகக் கணக்கிட்டுச் சொல்லி உலகின் மனசாட்சியை ஓங்கி அறைந்தார் என தனது இரங்கலில் தெரிவித்திருந்தார்.

போர்க் காலத்தில் சிறிலங்கா அரசு திட்டமிட்ட முறையில் சில ஆயிரம் மக்கள் மட்டுமே இருப்பதாகச் சொல்லி தமிழ்மக்களுக்கான உணவையும் ,மருந்தையும் குறைத்து நேரடியாகத் தமிழர்களை அழிக்க முயன்ற போது, சிறிலங்கா அரச திணைக்களங்களின் அறிக்கைகளைக் எடுத்க்காட்டி, சிறிலங்கா அரசாங்கத்தினை உண்மை முகத்தினை உலகின் முன் ஆண்டகை அவர்கள் அம்பலமாக்கினார் என பிரதமர் பணிமனை பணிப்பாளர் நாயகம் கலாநிதி தவேந்திர ராஜா அவர்கள் தெரிவித்திருந்தார்.

தாயகத்திலுள்ள மக்கள் ஆயர் இராயப்பு ஆண்டகைக்கு ‘புனிதர்’ என்ற சிறப்பை வழங்கும்படி பொப்பாண்டகையினை வேண்டிக் கொள்ள வேண்டுமென துணை அமைச்சர் கலையழகன் தனது இரங்கலுரையில் தெரிவித்திருக்க, நாடுகடந்த தமிழீழ அரசங்கமும் இக்கோரிக்கையினை பொப்பாண்டகைக்கு விடுக்க வேண்டுமென கோரிய அரசவை உறுப்பினர் லிங்க ஜோதி அவர்கள்,தமிழர் ஆன்மிகத்திற்கும் சான்றாக ஆண்டகை அவர்கள் திகழ்ந்திருந்தார் என குறித்துரைத்திருந்தார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடக அறிக்கை – அப்படியே பிரசுரிக்கப்படுகிறது.

 

https://globaltamilnews.net/2021/158920/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு

மறைந்த ஆயர் மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று (05.04.2021) கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது. 

IMG20210405074209.jpg

IMG20210405074754.jpg

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி கிளையின்  ஏற்பாட்டில் பசுமை பூங்கா வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், சிம்மயா மிசன் சுவாமிகள் பங்கு தந்தையர்கள் மற்றும்  மதத்தலைவர்கள்  கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

IMG20210405075425.jpg

IMG20210405075606.jpg

இனத்தின் குரலாக தன் இறுதிக்கணம் வரை  சாட்சியமாய்  சத்தியவழியில் பயணித்து மறைந்த ஆண்டகையின் ஆத்ம இளைப்பாற்றுதலுக்கான அஞ்சலிப் பிரார்த்தனையில் பலரும் கலந்து கொண்டு வணக்கம் செலுத்தினர்.

https://www.virakesari.lk/article/103290

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.