Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரமாண்டமான அணையை கட்ட சீனா முடிவு : இந்தியாவுக்கு பெரும் சிக்கல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரமாண்டமான அணையை கட்ட சீனா முடிவு : இந்தியாவுக்கு பெரும் சிக்கல்

திபெத்தின் மொசோ மாவட்டத்தில் உள்ள பள்ளத் தாக்கில் பிரமாண்ட மான அணை ஒன்றைக்கட்ட சீனா முடிவு செய்துள்ளது. இந்நிலையில், சீனா இந்த அணையை கட்டினால் இந்தியாவுக்கு பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். 

உலகிலேயே மிகவும் நீளமான மற்றும் ஆழமான பள்ளத்தாக்கில் இந்த அணையை சீனா கட்டுகின்றது.

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4 ஆயிரத்து 900 அடி உயரத்தில் இந்த அணையை கட்ட சீனா திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் சேமிக்கும் நீரைக் கொண்டு 30 ஆயிரம் கோடி கிலோவாட்ஸ் மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் 14 ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள இந்த அணை கட்டுமான பணிக்கு சீனா பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் அணையின் கட்டுமானப் பணி தொடங்கப்பட இருக்கிறது.

சீனா இந்த அணையை கட்டினால் இந்தியாவுக்கு பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இமயமலையில் உருவாகும் பிரம்மபுத்திரா நதி திபெத்தில் உற்பத்தியாகி இந்தியா, பங்களாதேஷ்  வழியாக செல்கிறது.

இது ஆசியாவின் வற்றாத ஜீவநதிகளில் ஒன்று. இந்த நதியின் குறுக்கே தான் சீனா கட்டும் பிரம்மாண்ட அணை அமைய இருக்கிறது.

சீனா இந்த அணையை திபெத்தில் கட்டுவதன் மூலம், பிரம்மபுத்திரா நதி இந்தியாவுக்குள் பாய்வதற்கு முன்பே அந்த தண்ணீரை தடுத்து நிறுத்த இருக்கிறது.

இதனால் இந்தியாவில் பாயும் பிரம்மபுத்திரா நதியில் தண்ணீர் வரத்து பாதிக்கப்படும். இது இந்தியாவுக்கு பேரிழப்பாக அமையும்.

சீனா நீர் மின்சாரம் தயாரிப்பதற்காக இந்த அணையை கட்டுவதாக கூறினாலும் இந்தியாவுக்கு பிரம்மபுத்திரா நதி நீர் கிடைக்காமல் தடுக்கவே இந்த சதியில் சீனா இறங்கி உள்ளது என்று நிபுணர்கள் கவலை தெரிவிக்கிறனர்.

இந்த நிலையில், இந்தியா தனது எல்லைக்கு பிரம்ம புத்திரா நதியில் மற்றொரு அணை கட்ட யோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

 

https://www.virakesari.lk/article/103745

சீனா இந்த அணையை சிறந்த முறையில் கட்டி முடிக்க வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

இதனால் இந்தியாவில் பாயும் பிரம்மபுத்திரா நதியில் தண்ணீர் வரத்து பாதிக்கப்படும். இது இந்தியாவுக்கு பேரிழப்பாக அமையும்.

இதையே இந்திய மாநிலங்கள் செய்யும் போது பார்த்துக் கொண்டிருப்பவர்கள்.
சீனா செய்யும் போது ஏன் துள்ளிக் குதிப்பான்.?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

சீனா இந்த அணையை சிறந்த முறையில் கட்டி முடிக்க வாழ்த்துகள்!

நாங்கள் சீன் லங்காவில் இருந்து வாழ்த்திறம் எஙக பெரிய சீனாவை

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே கருத்து எழுதியுள்ள பலரும் பலவிதமாக கொள்கைகள் மற்றும் நோக்கங்களை கொண்டிருந்தபோதும் இந்தியா **** என்பதில் மட்டும் எல்லோரும் ஒரே நிலைப்பாட்டில் இருப்பது தெரிகிறது. அந்த அளவுக்கு பேதமற்று இந்தியா எம்முதுகில் குத்தியிருக்கிறது 

Edited by நிழலி
சில எதிர்பார்ப்புகளை வெளிப்படையாக எழுதுவது பிரச்சினை ஆகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 13/4/2021 at 08:06, கிருபன் said:

30 ஆயிரம் கோடி கிலோவாட்ஸ் மின்சாரம் !!!

30 ஆயிரம் x கோடி x  கிலோ வாட்ஸ்= 30000x10000000x1000 W = 300000000000000 W = 300000 GW

ஒரே அணைக்கட்டில் கிடைக்கும் நீர் மின்சார உற்பத்தியில் இந்த தொகை சாத்தியமற்ற மிகப் பெரிய அளவு மின்சாரம்.

இங்கு 3 ஆயிரம் கோடி வாட்ஸ் = 3000x10000000 = 30000000000 W = 30 GW என்பதை மாறி பிழையாக எழுதியிருக்கலாம். தெரிந்தவர்கள் சரிபார்க்கவும்.

இன்று உலகின் மிகபெரிய நீர்மின் உற்பத்தி நிலையம் சீனாவில் உள்ளது அது 22,5 GW  மின்சாரத்தையே உற்பத்தி செய்கிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, vanangaamudi said:

30 ஆயிரம் x கோடி x  கிலோ வாட்ஸ்= 30000x10000000x1000 W = 300000000000000 W = 300000 GW

ஒரே அணைக்கட்டில் கிடைக்கும் நீர் மின்சார உற்பத்தியில் இந்த தொகை சாத்தியமற்ற மிகப் பெரிய அளவு மின்சாரம்.

இங்கு 3 ஆயிரம் கோடி வாட்ஸ் = 3000x10000000 = 30000000000 W = 30 GW என்பதை மாறி பிழையாக எழுதியிருக்கலாம். தெரிந்தவர்கள் சரிபார்க்கவும்.

இன்று உலகின் மிகபெரிய நீர்மின் உற்பத்தி நிலையம் சீனாவில் உள்ளது அது 22,5 GW  மின்சாரத்தையே உற்பத்தி செய்கிறது.

 

கணக்கு சரியாக வரும் பாருங்கள் வருடமொன்றுக்கு 300 பில்லியன் கிலோ வாட்ஸ் சக்தி பிறப்பிக்கப்படும் என்கிறார்கள் .

இமயமலை சூப்பர் அணை திட்டம்

https://phys.org/news/2021-04-china-himalayan-super-stoke-india.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழினத்திற்கு துரோகம் செய்தவர்கள் நிம்மதியாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இனத்துக்கு..... துரோகம் செய்த,  காங்கிரஸ் கட்சி நல்ல உதாரணம்.

35 minutes ago, குமாரசாமி said:

தமிழினத்திற்கு துரோகம் செய்தவர்கள் நிம்மதியாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தமிழினத்திற்கு துரோகம் செய்தவர்கள் நிம்மதியாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.

அப்ப ராஜபக்ச குடும்பம் எப்படி இந்த லிஸ்டில் இல்லையா அண்ண??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்ப ராஜபக்ச குடும்பம் எப்படி இந்த லிஸ்டில் இல்லையா அண்ண??

போகப்போகத்தானே தெரியும். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சீனா பிரம்மபுத்திராவின் பாதையை திருப்பவில்லைத் தானே?

திருப்பவும் முடியாது, ஏனெனில் பாதை முழுவதுமே இயற்கையான மலை பள்ளத்தாக்கின் ஊடான பாதை.

 நீர் தேகத்தை காட்டினால் தான், பிரம்மபுத்திரா கிந்தியவிற்கு வரும் தண்ணீரின் அளவு குறையும்.
இது நீர் மின்சாரம் என்பதால், அணையை கட்டி, தண்ணீரை ஏந்தி, மீண்டும் அதை ஓட  விடுவதன் முலம்  தான் மின் பிறப்பிக்க  முடியும்.

மாற்றம் இருக்கலாம். ஆனால் பாதிக்க கூடிய அளவு மாற்றம் இருக்குமா என்பது கேள்வியே?


மேழும், சீனா  இதுவரையில் கட்டிய நீர் மின்பற்றப்பக்கம் எல்லாமே ஒப்பிடலாவில் மென்மையான புவி அமைப்பு கொண்ட பகுதிகள்.

பிரம புதிற்ற போன்று நதியின் பாதை முழுவதும், இயற்கையாக  மலைகளால் ஆனா பள்ள தாக்கால்  பாய்ந்து வரும் நதிகள் அல்ல.

 சீனாவால் திட்டமிடும் அளவிற்கு கட்டமுடியாமல் போகலாம்.

சீன பல சார்வாஹதேச பிரகடனம், உடன்படிக்கைகளை இயற்கை வளம், உணவு பாதுகாப்பு போன்றவற்றில் ஏற்று இருக்கிறது.

பல வழிகள் இருக்கிறது, சீனாவுடன் பிரச்சனையை அணுகுவதற்கு.    

பிரச்னை என்னவென்றால், இப்படி பிரச்சனையை அணுகினால், உள்ளே இருக்கும் காவிரி பிரச்சனைகளும் இது போன்ற சர்வதேச பிரகடனம் என்பதற்குள் வந்து விடும்.

கிந்தியா அதனால் தான் சட்டியில் போட்ட உயிர் மீனை போலா துடிக்கிறது என்றே நம்ப வேண்டி உள்ளது?  
 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

போகப்போகத்தானே தெரியும். :grin:

ம் பார்க்கலாம்  

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kadancha said:

இதில் சீனா பிரம்மபுத்திராவின் பாதையை திருப்பவில்லைத் தானே?

திருப்பவும் முடியாது, ஏனெனில் பாதை முழுவதுமே இயற்கையான மலை பள்ளத்தாக்கின் ஊடான பாதை.

 நீர் தேகத்தை காட்டினால் தான், பிரம்மபுத்திரா கிந்தியவிற்கு வரும் தண்ணீரின் அளவு குறையும்.
இது நீர் மின்சாரம் என்பதால், அணையை கட்டி, தண்ணீரை ஏந்தி, மீண்டும் அதை ஓட  விடுவதன் முலம்  தான் மின் பிறப்பிக்க  முடியும்.

மாற்றம் இருக்கலாம். ஆனால் பாதிக்க கூடிய அளவு மாற்றம் இருக்குமா என்பது கேள்வியே?


மேழும், சீனா  இதுவரையில் கட்டிய நீர் மின்பற்றப்பக்கம் எல்லாமே ஒப்பிடலாவில் மென்மையான புவி அமைப்பு கொண்ட பகுதிகள்.

பிரம புதிற்ற போன்று நதியின் பாதை முழுவதும், இயற்கையாக  மலைகளால் ஆனா பள்ள தாக்கால்  பாய்ந்து வரும் நதிகள் அல்ல.

 சீனாவால் திட்டமிடும் அளவிற்கு கட்டமுடியாமல் போகலாம்.

சீன பல சார்வாஹதேச பிரகடனம், உடன்படிக்கைகளை இயற்கை வளம், உணவு பாதுகாப்பு போன்றவற்றில் ஏற்று இருக்கிறது.

பல வழிகள் இருக்கிறது, சீனாவுடன் பிரச்சனையை அணுகுவதற்கு.    

பிரச்னை என்னவென்றால், இப்படி பிரச்சனையை அணுகினால், உள்ளே இருக்கும் காவிரி பிரச்சனைகளும் இது போன்ற சர்வதேச பிரகடனம் என்பதற்குள் வந்து விடும்.

கிந்தியா அதனால் தான் சட்டியில் போட்ட உயிர் மீனை போலா துடிக்கிறது என்றே நம்ப வேண்டி உள்ளது?  
 

புரியாமல் புழுங்குகிறார்கள், சங்கிகள்...

பாய்ந்து ஓடும் தண்ணீரை தடுத்து நிறுத்த முடியாது. அதன் பாய்ச்சலில் ஒரு பகுதியை, தேக்கி, ஒழுங்கு படுத்தி, அதன் நிச்சயமாக்கப்பட்ட, பாய்ச்சல் பாதையில், மின் பிறப்பாக்கியினை வைத்து, மின்சாரம் உருவாக்குவதே திட்டம். 

இதனால், நீர்வரத்து குறையாது. ஏற்கனவே, மழை பெய்தால், பெரு வெள்ளத்தில், தவிக்கும் சீனாவில், ஓடும் ஆற்றின் பாதையினை தடுத்தால், பெரு நாசம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
On 13/4/2021 at 08:06, கிருபன் said:

இதில் சேமிக்கும் நீரைக் கொண்டு 30 ஆயிரம் கோடி கிலோவாட்ஸ் மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது வருடமொன்றுக்கான மின் உற்பத்தியின் அளவு என்ற தரவு செய்தியின் தமிழாக்கத்தில் தரப்படவில்லை என்பதை கவனிக்க. நீங்கள் காட்டிய இணையத்தில் காணப்படும் ஆங்கில பதிவில் இந்த விபரத்துடன் கூடிய செய்தி உள்ளது. நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.