Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சாகும் வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த அன்னை பூபதியின் 33ஆவது நினைவு தினம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாகும் வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த அன்னை பூபதியின் 33ஆவது நினைவு தினம்

சாகும் வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த அன்னை பூபதியின் 33ஆவது நினைவு தினம்

வடக்கு- கிழக்கில் இருந்து இந்திய இராணுவத்தினை வெளியேற்றும் பொருட்டு சாகும் வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 33வது நினைவு தினம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்றது.

அந்தவகையில் மட்டக்களப்பிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில், அன்னை பூபதியின் 33வது நினைவு தினம்,  இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மட்டக்களப்பு- கல்லடி, நாவலடியிலுள்ள சமாதியில் குறித்த நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதன்போது நிகழ்வின் ஆரம்பத்தில் ஈகச்சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தியதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் மட்டு.மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை தவிசாளர் சர்வானந்தா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், பா.அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா, மட்டு.மாநகரசபை உறுப்பினர்களான ஜெயா, இராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் நிகழ்வு நிறைவடைந்து அதன்பின்னர் வருகை தந்தவர்கள், காத்தான்குடி பொலிஸார் மற்றும் நீதிமன்ற தடை உத்தரவுடன் அப்பகுதிக்கு வருகை தந்திருந்தனர்.

மேலும் நிகழ்வு நிறைவடைந்ததும் அங்கு வருகைதந்திருந்த அனைவரும் திரும்பி சென்றதன் காரணமாக பொலிஸார் அங்கிருந்து திரும்பிச்சென்றுள்ளனர்.

இந்திய இராணுவ அடக்குமுறை மற்றும் பொது கோரிக்கைகள் ஆகியவற்றினை முன்வைத்து 1988.03.19 முதல் 1988.04.19 வரை மேற்கொண்ட தொடர் உண்ணா விரத போராட்டத்தில் அன்னை பூபதி உயிர்நீத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

22-4.jpg

33-3.jpg

https://athavannews.com/2021/1210646

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலிகள்..

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

நினைவாஞ்சலிகள்...!!

இந்திய இராணுவம் வெளியேற ஒரு காரணமாக இருந்த அன்னை பூபதி அவர்களுக்கு உண்மையில் சிங்களமும் அதிக அஞ்சலி செலுத்த வேண்டும்.! 

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு அஞ்சலிகள்🙏

  • கருத்துக்கள உறவுகள்

அன்னை பூபதியின் குடும்பத்தினருக்கு காவல்துறையினர் எச்சரிக்கை

 
IMG_0014-1-696x389.jpg
 12 Views

அன்னை பூபதியின் நினைவு தினத்தினை அவரது சமாதிக்கு சென்று அனுஸ்டித்தால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள் என காத்தான்குடி  காவல்துறை தம்மிடம் தெரிவித்துள்ளதாக அன்னை பூபதியின் மூத்த மகள் திருமதி லோகேஸ்வரன் சாந்தி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்  மேலும் தெரிவிக்கையில்,

“எங்களது அன்னையின் நினைவு தினத்தினை நாங்கள் கடந்த மூன்று வருடத்திற்கு மேலாக அனுஸ்டித்து வருகின்றோம். ஆனால் இன்று எங்களது குடும்பத்தினை  அவரது நினைவிடத்திற்குச்  சென்று அஞ்சலி செலுத்த வேண்டாம் எனவும் மீறினால்  கைது செய்யப்படுவீர்கள் என்றும் காத்தான்குடி  காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

எங்களது தாயின் இறப்பினை அவரை புதைத்துள்ள இடத்தில் அனுஸ்டிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதானது மிகவும் கவலைக்குரியது. இது அரசியல் சார்ந்த செயற்பாடு அல்ல. அன்னை பூபதி எனது தாயார் எனது தாயாரின் இறப்பினை நாங்கள் நினைவு கூருகின்றோம். அதில் எந்தவித பயங்கரவாத செயற்பாடும் இல்லை.

எனது தாயார் அன்னையர் முன்னணி என்ற அமைப்பின் ஊடாக இந்திய இராணுவத்திற்கு எதிராகவே போராடி உயிர்துறந்தார். அவர் ஆயுதம் ஏந்தி எந்த போராட்டத்தினையும் நடாத்தவில்லை. இந்த நாட்டிலிருந்து இந்திய படையினரை வெளியேற்றவே போராட்டினார். அவ்வாறானவரை யாரும் பயங்கரவாதியாக சித்திரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

நாங்கள் எந்த அரசியல் கட்சியுடனும் இணைந்து எமது தாயாரை நினைவுகூரவில்லை. நாங்களும் எங்களும் குடும்பமுமே அவரை நினைவு கூருகின்றோம். இவ்வாறான நிலையில் எங்களை குறித்த நினைவினை செய்ய வேண்டாம் என தெரிவிப்பது கவலைக்குரியது.

இன்று உலகம் எங்கும் எங்கள் தாயாருக்கு நினைவு தினம் நடாத்தப்பட்டுவரும் நிலையில், அவரது சமாதியில் எங்களுக்கு நினைவு தினம் நடாத்தமுடியாமல் இருப்பது வேதனையளிக்கின்றது” என்றார்.

 

https://www.ilakku.org/?p=47681

 

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

அன்னை பூபதிக்கு வீர வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்னைக்கு வீரவணக்கம் 

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலிகள் .........!

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலிகள் ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.