Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

11 மாணவர்களை கடத்தி கொலைசெய்து கடலில் போட்டனர் : பல பரபரப்பு தகவல்களை வெளியிட்டார் பொன்சேகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

11 மாணவர்களை கடத்தி கொலைசெய்து கடலில் போட்டனர் : பல பரபரப்பு தகவல்களை வெளியிட்டார் பொன்சேகா

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பிரஜாவுரிமையை பறித்து அரசாங்கத்திற்கு எதிரான அழுத்தங்களில் இருந்து தப்பித்துக்கொள்ளவே அரசியல் பழிவாங்கல் ஜனாதிபதி ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமல்லாது பதினொரு மாணவர் படுகொலை, அவன்கார்ட் ஊழல் வாதிகள் என முக்கியமான குற்றவாளிகளை விடுதலை செய்யும் நோக்கமும் இவர்களுக்கு உள்ளதென எதிர்க்கட்சி உறுப்பினர் சரத் பொன்சேகா சபையில் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைமீதான முதலாம் நாள் விவாதத்தில்  உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் தலைவர் குறித்தும் இந்த ஆணைக்குழு குறித்தும் நாட்டிற்கு விசர்பூனை ஆணைக்குழு என கூறினால்தான் தெரியும். 

அந்தளவு மோசமான, கிறுக்குத்தனமான ஆணைக்குழுவாகும். நீதிமன்றத்தை பலவீனப்படுத்தி சட்டத்தை ஆணைக்குழு கையில் எடுக்கும் விதமாகவே இது அமைந்துள்ளது. 

இந்த ஆணைக்குழு மூலமாக எதிர்காலத்தில் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தே இன்று பிரச்சினை எழுகின்றது. 

ஆணைக்குழு அறிக்கைக்கு அமைய நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவின் உறுப்பினர்களின்  பிரஜாவுரிமை பறிக்கப்படும் நிலைமையொன்று பாராளுமன்றத்தின் ஊடாக முன்னெடுக்க அரசாங்கம் முயற்சிப்பதாக எமக்கு தெரியவருகின்றது. இதற்கு அரசாங்கத்தில் உள்ள பலர் விருப்பமில்லை என்பதும் எமக்கு தெரியும்.

எதிர்க்கட்சி உறுபினர்களின் பிரஜாவுரிமையை பறிப்பது ஜனநாயக செயற்பாடு அல்ல, இந்த செயற்பாடுகள் பயந்த, பலவீனமான அரசியல் நகர்வுகள் என்றே நாம் கருதுகின்றோம். இந்த ஆணைக்குழுவின் நோக்கம் என்னவெனில், முன்னைய ஆட்சிக்காலத்தில் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டு தற்போது சிறையில் உள்ளவர்கள் மற்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதாகவும். முக்கியமாக முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் அவருடன் நெருக்கமாக செயற்பட்ட தசநாயக, சுமித் ரணசிங்க ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டு ஒன்று உள்ளது. 

பாடசாலை மாணவர்கள் 11 பேரை கடத்தி அவர்களின் பெற்றோரிடம் கப்பம் கேட்ட குற்றச்சாட்டு. இதில் தமிழ் சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் இருந்தனர். இந்த உண்மைகள் வெளிவந்த நேரத்தில் அவர்களை கொலைசெய்து கடலில் போட்டனர்.

இவ்வாறான சம்பவம் இன்று ஆட்சில் உள்ளவர்களின் குடும்பத்தினருக்கு நடந்தால் எவ்வாறு இருக்கும். இவ்வாறான நபர்களை விடுதலை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைப்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயம் ?, இதுவா சட்ட நியாயாதிக்கம் ?, இவ்வாறன செயற்பாடுகளை நாம் ஒருபோதும் ஏற்றுகொள்ள மாட்டோம். 

அதேபோல் அவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி போன்றவர்களை விடுதலை செய்யவும் ஆணைக்குழு வலியுறுத்துகின்றது. இவர்களை காப்பாற்ற அன்றும் எமது தரப்பில் இருந்த சட்டத்தரணிகள் முன்வந்தனர், அவர் இன்று ஜனாதிபதியுடனும் மோதிக்கொண்டுள்ளார். 

அதேபோல் மரண தண்டனை கைதியான துமிந்த சில்வாவை விடுதலை செய்யக்கோரியும் இந்த விசர் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. அதேபோல் சுனில் ரத்நாயக்க உள்ளிட்ட இராணுவத்தினர் கடந்த 2000 ஆம் ஆண்டில் செய்த எட்டுப்பேர் கொலை, அவர்களை தாக்கி தலைகளை வெட்டிய சம்பவம் தொடர்பில் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது.

 ஒரு இராணுவ சிப்பாயாக இருக்கலாம், அல்லது இராணுவ அதிகாரி என்பதற்காக அநாவசியமான கொலைகளை செய்தவர்களை விடுதலை செய்ய முடியாது. 

அதேபோல் குற்றவாளிகளை விடுதலை செய்துவிட்டு இராணுவ வீரர்களை பாதுகாத்தோம் என கூறவும் முடியாது. இதனை எவரும் ஏற்றுகொள்ள முடியாது, கொலைகாரர்களை விடுதலை செய்துவிட்டு எவராலும் புகழாரம் சூட்டிக்கொள்ள முடியாது என்றார். 
 

https://www.virakesari.lk/article/104248

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் கொஞ்சமாய் நான் நீ என்று ஆளையால்  போட்டுகுடுக்கும் காலம் வருகிறது கடைசியாக சரணடைந்த போராளிகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மை வெகுவிரைவில் வரும் .

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

பாடசாலை மாணவர்கள் 11 பேரை கடத்தி அவர்களின் பெற்றோரிடம் கப்பம் கேட்ட குற்றச்சாட்டு. இதில் தமிழ் சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் இருந்தனர். இந்த உண்மைகள் வெளிவந்த நேரத்தில் அவர்களை கொலைசெய்து கடலில் போட்டனர்.

இவ்வாறான சம்பவம் இன்று ஆட்சில் உள்ளவர்களின் குடும்பத்தினருக்கு நடந்தால் எவ்வாறு இருக்கும். இவ்வாறான நபர்களை விடுதலை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைப்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயம் ?, இதுவா சட்ட நியாயாதிக்கம் ?, இவ்வாறன செயற்பாடுகளை நாம் ஒருபோதும் ஏற்றுகொள்ள மாட்டோம். 

அதேபோல் அவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி போன்றவர்களை விடுதலை செய்யவும் ஆணைக்குழு வலியுறுத்துகின்றது. இவர்களை காப்பாற்ற அன்றும் எமது தரப்பில் இருந்த சட்டத்தரணிகள் முன்வந்தனர், அவர் இன்று ஜனாதிபதியுடனும் மோதிக்கொண்டுள்ளார். 

அதேபோல் மரண தண்டனை கைதியான துமிந்த சில்வாவை விடுதலை செய்யக்கோரியும் இந்த விசர் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. அதேபோல் சுனில் ரத்நாயக்க உள்ளிட்ட இராணுவத்தினர் கடந்த 2000 ஆம் ஆண்டில் செய்த எட்டுப்பேர் கொலை, அவர்களை தாக்கி தலைகளை வெட்டிய சம்பவம் தொடர்பில் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது.

 ஒரு இராணுவ சிப்பாயாக இருக்கலாம், அல்லது இராணுவ அதிகாரி என்பதற்காக அநாவசியமான கொலைகளை செய்தவர்களை விடுதலை செய்ய முடியாது. 

அதேபோல் குற்றவாளிகளை விடுதலை செய்துவிட்டு இராணுவ வீரர்களை பாதுகாத்தோம் என கூறவும் முடியாது. இதனை எவரும் ஏற்றுகொள்ள முடியாது, கொலைகாரர்களை விடுதலை செய்துவிட்டு எவராலும் புகழாரம் சூட்டிக்கொள்ள முடியாது என்றார். 

என்ன எலி அண்டர்வெயருடன் ஓடுது ....? நல்லதுக்கில்லையே ..
ஆணைக்குழு நமது பக்கமும் திரும்பி திரும்ப கம்பியெண்ண வைத்துவிடுமோ  என்ற பயத்தில்  நங்கூரத்தை கொஞ்சம் பலமாக  போட்டுப்பார்க்கிறார் பொன்சி   

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே, தன்னாலே வெளிவரும் தயங்காதே, தலைவன் இருக்கின்றான் மயங்காதே. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.

  • கருத்துக்கள உறவுகள்

பொன்சேகா.... கூறியதற்கு, மறுப்பு தெரிவிக்கக் கூட தமிழ் ஆட்கள் இருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொன்சேகாவுக்கு ஏதோ ஒண்டு நடக்கப்போதெண்டு தெரிஞ்சிட்டுது. 
ஆர்மேனிய படுகொலைகளை அமெரிக்க சனாதிபதி இரண்டு மூண்டு நாளைக்கு முதல் தூசு தட்டியிருக்கிறாராம்.

7 minutes ago, தமிழ் சிறி said:

பொன்சேகா.... கூறியதற்கு, மறுப்பு தெரிவிக்கக் கூட தமிழ் ஆட்கள் இருக்கின்றார்கள்.

மறுப்பு தெரிவிக்கிறதென்ன எதிர்த்து வழக்கே போடுவினம். சிங்கள மக்களின் துரோகி எண்டு எழுதினாலும் எழுதுவினம் ஐ மீன் சிங்கல காக்கை வன்னிய..

  • கருத்துக்கள உறவுகள்

இதில் தமிழ் சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் இருந்தனர்.

 

தமிழ் மாணவர்கள் மட்டும் இருந்து இருந்தால்????

  • கருத்துக்கள உறவுகள்

மிருசுவிலில் 8 பேரின் கழுத்தை அறுத்து கொன்றது சுனில் ரத்னாயக்க – சரத் பொன்சேகா

 
sarath-fonseka.png
 32 Views

சுனில் உள்ளிட்ட இராணுவ சிப்பாய்கள் மிருசுவிலில் 8 பேரை கொலைசெய்து,கழுத்தை அறுத்து புதைத்தனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் வைத்து நேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில் –

மரண தண்டனை கைதியாக தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் எம்.பி துமிந்த சில்வாவை விடுதலை செய்யவும் அரசியல்பழிவாங்கல்தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

ஒருமரணதண்டனைக் கைதியைவிடுவிக்கசிலபொறிமுறைகள் உள்ளன.இங்குஅவைபின்பற்றப் படவில்லை. ஜனாதிபதி பின்கதவால்தீர்மானங்களைஎடுக்கின்றார். மரணதண்டனைக் கைதியை விடுவிக்க சிறைச்சாலைகள் ஆணையாளர் பரிந்துரை முன்வைக்கவேண்டும்.பின்னர்ஓய்வு பெற்ற சட்டமா அதிபர் அடங்கிய குழுவை நியமிக்க வேண்டும். பாரியகுற்றம்செய்தவர்தொடர்பில் ஜனாதிபதிக்கு சமூகப் பொறுப்பு இருக்க வேண்டும்.

நன்னடத்தை தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும். ஆனால் இவை அனைத்தும் இங்கு பின்பற்றப்படவில்லை. இந்த அரசாங்கம் மரண தண்டனை கைதி சுனில் ரத்நாயக்கவுக்கு மன்னிப்பளித்து விடுதலை செய்தது. சுனில் உள்ளிட்ட இராணுவ­ ­ சிப்பாய்கள்­ ­மிருசுவிலில் 8 பேரை கொலை செய்து, கழுத்தை அறுத்துப் புதைத்தனர்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட அவரை விடுதலை செய்துள்ளீர்கள். நீங்கள் எவ்வாறு அத்தகைய செயல்களை அங்கீகரிப்பீர்கள்? கொலைகாரன் கொலைகாரன்தான். பிரேமாவதி மனம்பேரியை கொன்றதும் இராணுவ சிப்பாயே. அவர் தூக்கு மேடைக்கு அனுப்பப்பட்டார்.இராணுவவீரரர் களை விடுவிக்கின்றோம் என நீங்கள் கொடி தூக்க முடியாது” என அவர் தெரிவித்தார்.

 

https://www.ilakku.org/?p=48061

 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

பொன்சேகா என்ன..! நான்தான் செய்தேன் என்று கோத்தபாய வந்து சொன்னாலும்....!! சிங்கள அரசை அரவணைக்க இந்தியா பாய் விரித்தால்.... சீனா பட்டு மெத்தை விரிக்கும் நிலைமையே இன்று உள்ளது.

பிடன் நிர்வாகம் இலங்கை தமிழ் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை அடுத்த நிர்வாகத்திற்கு அனுப்பும்.
வெள்ளை மாளிகை மெமோ கசிந்தது.
இலங்கைக்கு 1948 சுதந்திரம் கிடைத்ததிலிருந்து 1.2 மில்லியனுக்கும் அதிகமான தமிழர்கள் தங்கள் உயிரை இழந்ததாக வெள்ளை மாளிகை மதிப்பிட்டுள்ளது.
இலங்கை தமிழ் இனப்படுகொலை குறித்து இந்தியாவுக்கு முழுமையும் பொறுப்பும் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எவ்வளவோ இருக்குது மாத்தையா! அவ்வளவும் உங்கள் வாயால் வெளிவருவதே பொருத்தமானதாகும். எதுவும் மறைந்து போவதில்லை, தக்கநேரம் வரை பாத்திருக்கும். அன்று 
எங்கள் கண்ணீரில் நீங்கள் சேர்ந்து  கூடிக்குதூகலிக்கும்போது நினைத்திருப்பீர்களா இன்று எதிரெதிர் வரிசையில் நின்று செய்த அனிஞாயங்களை அசைபோட்டு பாப்போம் என்று? காலம் எப்படி உங்களை பொறிவைத்து பிடித்திருக்கிறது. ஆஹா..... நாங்கள் கடலை கொறித்துக்கொண்டு, வடியும் கண்ணீரையும் துடைத்துக்கொண்டு, தொடர்கதை கேட்க ஆயத்தமாக இருக்கிறோம் தொடக்கி வைத்து விட்டீர்கள், முடிவுரை வரை தொடர்ந்து இருக்க வேண்டும். இடையில் விலகாமல் இருப்பதற்கு உங்களுக்கு சர்வதேச பாதுகாப்பு வேண்டுமே? 

  • கருத்துக்கள உறவுகள்

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கினால் நீங்கள் பாராளுமன்றம் செல்ல வாய்ப்பு இருக்குமோ தெரியாது சொல்லவேண்டியதை எல்லாம் இப்பவே சொல்லுங் கோ மாத்தையா....

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, putthan said:

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கினால் நீங்கள் பாராளுமன்றம் செல்ல வாய்ப்பு இருக்குமோ தெரியாது சொல்லவேண்டியதை எல்லாம் இப்பவே சொல்லுங் கோ மாத்தையா....

அந்தகொதியிலதான் மெதுவாய் வாயை திறந்திருக்கிறார். நிரந்தரமாய் வாயை திறக்காமல் செய்யப்போறானுகள். ஒரு வாகன விபத்தை ஏற்பாடு செய்தால் போச்சு.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

அந்தகொதியிலதான் மெதுவாய் வாயை திறந்திருக்கிறார். நிரந்தரமாய் வாயை திறக்காமல் செய்யப்போறானுகள். ஒரு வாகன விபத்தை ஏற்பாடு செய்தால் போச்சு.

விஜயதாச ராஜபக்சாவின் மகனை வெறுட்டின மாதிரி 😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.