Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெலோ முன்னாள் தலைவர் ஸ்ரீசபாரெத்தினத்தின் 35வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டெலோ முன்னாள் தலைவர் ஸ்ரீசபாரெத்தினத்தின் 35வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு!

 

DSCN0013.jpg
(துதி)
தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீசபாரெத்தினம் அவர்களின் 35வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு நேற்றைய தினம் மட்டக்களப்பில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்க காரியாலயத்தில் அதன் உபதலைவரும், கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளருமான இந்திரகுமார் பிரசன்னா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை பிரதி மேயர் க.சத்தியசீலன், மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேச சபைத் தவிசாளர் ஞா.யோகநாதன், மாநகரசபை உறுப்பினர்களான த.இராஜேந்திரன், சீ.ஜெயந்திரகுமார், பு.ரூபராஜ், ச.கமலரூபன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மறைந்த தலைவரின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, ஈகைச் சுடரேற்றப்பட்டதுடன், தலைவருடன் இணைந்து மறைந்த அத்தனை இயக்க உறுப்பினர்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
DSCN0023.jpg
 
DSCN0016.jpg
DSCN0007.jpg
 
DSCN0003.jpg
 
 

spacer.png

 

http://www.battinews.com/2021/05/35.html

 

  • கருத்துக்கள உறவுகள்

பலருக்கு வயது போன பின் சுடலை ஞாணம் கிடைத்து விட்டுது ஆக்கும் இணைய தளம்களில் உண்மையை எழுகின்றார்கள் என்று எழுதுகிறார்கள் இலங்கை அரசை விட முக்கியமா புலிகளைதான் முதன்மை எதிரியாக அனைத்து இயக்கமும் பார்த்துள்ளார்கள் சகோதர படுகொலைகளை ஆரம்பித்தவர்களும் அவர்கள் தான் அப்படி சாகோதர படுகொலைகளை செய்து விட்டு வெளிநாடுகளில் ஓடி வந்து ஒழித்துக்கொண்டு கந்தன் கருணை என்று இணையம்களில் ஒப்பாரி வைத்துக்கொண்டு இருக்கினம் .

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

பலருக்கு வயது போன பின் சுடலை ஞாணம் கிடைத்து விட்டுது ஆக்கும் இணைய தளம்களில் உண்மையை எழுகின்றார்கள் என்று எழுதுகிறார்கள் இலங்கை அரசை விட முக்கியமா புலிகளைதான் முதன்மை எதிரியாக அனைத்து இயக்கமும் பார்த்துள்ளார்கள் சகோதர படுகொலைகளை ஆரம்பித்தவர்களும் அவர்கள் தான் அப்படி சாகோதர படுகொலைகளை செய்து விட்டு வெளிநாடுகளில் ஓடி வந்து ஒழித்துக்கொண்டு கந்தன் கருணை என்று இணையம்களில் ஒப்பாரி வைத்துக்கொண்டு இருக்கினம் .

தமிழ் என்ற அடையாளத்தை நிலைநாட்ட மரணித்த சகல தமிழ் போராளிகளுக்கும் அஞ்சலிகள் ...

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, putthan said:

தமிழ் என்ற அடையாளத்தை நிலைநாட்ட மரணித்த சகல தமிழ் போராளிகளுக்கும் அஞ்சலிகள் ...

நான் கூட பல சமயங்களில்  உங்களை போலவே சிந்தித்தேன் தீருவிலில்  குமரப்பா புலேந்தி அம்மான் தூபிக்கு அருகில் அனைத்து இயக்க மாவீரர்க்கும் பொது  தூபி வேணும் என்று கொடுக்கு கட்டிக்கொண்டு சிவாஜிலிங்கம் அடிபட  அவர்களும் நாடு காண என்றுதானே கிளம்பினவர்கள் என்ற பரிதாப பார்வை இருந்தது .

ஆனால் அவர்கள்  கொடுக்கும் ஒப்புதல் வாக்கு மூலம்களை படித்தபின் எமக்குள் இவ்வளவு குரூரர்கள் இருந்தனரா  ? அப்படியானவர்களை புலிகள் அழித்ததில் எந்த பிழையும் என்னால் காண முடியவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான போராளிகள் தாயக கனவுடன் கிளம்பியவர்களுக்கு மரியாதை கொடுக்கத்தான் வேணும் . ஆனால்  டெலோவிலும் புளொட்டிலும் ஆரம்ப காலங்களில் சகோதர படுகொலை கொலை கொள்ளை வல்லுறவு செய்துவிட்டு முன்பே ஓடிவந்து இங்குள்ள நாடுகளில் கிழடு தட்டி  இருக்கின்றனர் அவர்களின் முகம்களும்  வெளிச்சத்துக்கு வரணும் . இல்லாவிட்டால் கோடியக்கரை சவுக்கம் காடுகளில் தாம் ஏன் கொல்லப்படுகின்றோம் என்று கூட தெரியாமல் கும்பல் கும்பலாக வெறும்புலி உளவாளி  சந்தேகத்தில் கொல்லப்பட்டு பாரிய கிடங்குகளில் போட்டு புதைக்கப்பட்ட மாற்று இயக்க உண்மையான போராளிகளின் ஆன்மா சாந்தியடையாது .

உணரவுடன் போராட சென்று உயிர் நீத்த அனைத்து போராளிகளும் நினைவு மரியாதை செய்யத்தக்கவர்களே. அந்த வகையில் ஶ்ரீசபாரத்தினம் என ற போராளிக்கும் அவருடன் மாவீரர் களான அனைவருக்கும் நினைவு வணக்கங்கள். குரூரர்களும் கொலைஞர்களும் எல்லா இயக்கங்களிலும் இருந்தார்கள். அதேபோல தம்மை அர்பணித்த தியாக சீலர்களும் எல்லா இயக்கங்களிலும் இருந்தார்கள். 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

. குரூரர்களும் கொலைஞர்களும் எல்லா இயக்கங்களிலும் இருந்தார்கள். அதேபோல தம்மை அர்பணித்த தியாக சீலர்களும் எல்லா இயக்கங்களிலும் இருந்தார்கள். 

 

மட்டக்களப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு உடல்களை யாருமே தொடக்கூடாது அப்படி தொட்டால் தொட்டவரும் சுடப்படுவார் என எச்சரிக்கை கொடுத்தே மாறி மாறி சுட்டுக்கொன்றார்கள். உழவு இயந்திரத்தில் உடல்களை  கட்டி இழுத்த சம்பவங்களும் உண்டு எல்லாம் எமது சகோதரர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

35 வருடங்களின் பின் இப்போதும் என்ன எம்மிடையே சகோதரத்துவம் வளர்ந்துவிட்டதா.. என்ன?

யூனியன் கல்லூரி மாணவர்களின் தலையில் அண்மையில் விழுந்த பொல்லாங்கட்டையே எமது இப்போதைய நிலை பற்றி பல விடயங்களை சொல்லாமல் சொல்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

35 வருடங்களின் பின் இப்போதும் என்ன எம்மிடையே சகோதரத்துவம் வளர்ந்துவிட்டதா.. என்ன?

யூனியன் கல்லூரி மாணவர்களின் தலையில் அண்மையில் விழுந்த பொல்லாங்கட்டையே எமது இப்போதைய நிலை பற்றி பல விடயங்களை சொல்லாமல் சொல்கின்றது.

இதுக்கு லாடம் கட்ட மீரா தான் சரி .

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து இயக்கங்களும் இருந்த சமகாலத்தில் ,

ஆயுதவளம் இயங்குநிலை போராளிகள் எண்ணிக்கை என்ற வகையில் தமிழீழத்தில் பலம் வாய்ந்த ராணுவமாக முதலிடத்தில் இருந்தது  ரெலோதான்.

இரண்டாம் இடத்தில்தான் ஆயுதம்,போராளிகள் எண்ணிக்கையில் புலிகள் இருந்தார்கள்.

உறுப்பினர்களில் மட்டும் பெரிதாக வைத்துக்கொண்டு எந்த இயங்கு நிலையிலும்  இருந்திராத புளொட்டை எல்லாம் பெரிய இயக்கம் என்று எந்த கணக்கிலும் எடுக்க முடியாது .

ஆனால் ரெலோ ஓரிரு தாக்குதல்களை தவிர தம்மிடம் இருந்த எந்த வளங்களையும் போராட்டத்துக்கு பயன்படுத்தவில்லை.

ரெலோவின் போராளிகளிடம் போர்க்குணம் என்பது அறவே இல்லாமல்போய் ஊருக்குள்ள கலர் காட்டுவதே அவர்கள் போராட்டமாய் போனதால் எளிதாக புலிகளால் துடைத்து அகற்றப்பட்டார்கள்.

ரெலோவின் யாழ்மாவட்ட பொறுப்பாளராக இருந்த பொபியின் தான் தோன்றிதனமான....நடவடிக்கைகளுக்குசன்மானமாக  சல்லடையாக்கப்பட்டதுதான் ஸ்ரீ சபாரத்தினத்தின் உடல்,.

ஆம் ஸ்ரீ சபாவின் உடலில் 28 குண்டுகள் பாய்ந்திருந்ததாக பேசிக்கொள்வார்கள். அதாவது ஏறத்தாள ஒரு ஏகே-யின் முழு மகசீனும் முடியும்வரை கிட்டர் ஸ்ரீக்கு ஓட்டோவில் பிடிச்சிருக்கிறார்.

புலிகளின் நடவடிக்கையின்போது ரெலோ என்ற பெயரில் அழிந்தது எந்த பக்கம் ஓடுறது எண்டு தெரியாமல் சிக்கிக்கொண்ட மட்டக்களப்பு திருமலை மன்னார் போராளிகள்தான், சிகரெட்டும் கொக்கோகோலாவுடனும் வாழ்ந்த யாழ்ப்பாணத்து ரெலோ வீரர்கள் ஒழுங்கைகளினால் ஓடிதப்பி இந்தியா உட்பட்ட  வெளிநாடுகளில் தஞ்சமடைந்தார்கள்.

இலங்கை ராணுவத்துக்கு எதிரான ஓரிரு பாரிய தாக்குதல்களை வழிநடத்திய அந்த ஸ்ரீசபாரத்தினத்துக்கு மட்டும் எப்போதும் அஞ்சலிகள் இருக்கும்.

அஞ்சலிகள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, valavan said:

இலங்கை ராணுவத்துக்கு எதிரான ஓரிரு பாரிய தாக்குதல்களை வழிநடத்திய அந்த ஸ்ரீசபாரத்தினத்துக்கு மட்டும் எப்போதும் அஞ்சலிகள் இருக்கும்.

வயது  போய்க்கொண்டு இருக்குதுசிறி சபா எங்கு தாக்குதல் இலங்கை ராணுவத்துக்கு எதிராக செய்தார் என்று மறந்து விட்டது சொல்ல முடியுமா ? இப்படியான விடயங்களுக்கு கம்பர் மலை புவனியார் விளக்கம் தருவார் அவரும் மாரடைப்பில் இறந்து விட்டார் .

  • கருத்துக்கள உறவுகள்

ஓரு  போலீஸ் நிலைய தாக்குதல், வங்கிகள் மீதான தாக்குதல், ரயில் வண்டி தொடர் மீதான தாக்குதல் நினைவில் இருக்கிறது. மேலதிக விபரங்கள் தெரியவில்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Sasi_varnam said:

ஓரு  போலீஸ் நிலைய தாக்குதல், வங்கிகள் மீதான தாக்குதல், ரயில் வண்டி தொடர் மீதான தாக்குதல் நினைவில் இருக்கிறது. மேலதிக விபரங்கள் தெரியவில்லை. 

அவையெல்லாம் உடுப்பிட்டி தாஸ் முன்னின்று செய்த தாக்குதல்கள். பொபி தாஸை யாழ் ஆஸ்பத்திரியில் வைத்து சுட்டது மட்டும்தான் செய்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

ஓரு  போலீஸ் நிலைய தாக்குதல், வங்கிகள் மீதான தாக்குதல், ரயில் வண்டி தொடர் மீதான தாக்குதல் நினைவில் இருக்கிறது. மேலதிக விபரங்கள் தெரியவில்லை. 

சாவகச்சேரி  காவல்நிலைய தாக்குதலின் தொடராக நாவற்குழி ராணுவ தொடரணிமீதான தாக்குதல், முறிகண்டி ராணுவ தொடரூந்து மீதான தாக்குதல், மற்றும் கொக்காவில் கிளிநொச்சி ராணுவ முகாம்கள்மீதான தாக்குதல் முயற்சியென்று  குறிப்பிடதக்க ராணுவ நடவடிக்கைகளில் ரெலோ இறங்கியிருக்கிறது,

ஆனால் கிருபன் சொன்னதுபோல் அவை அனைத்தும் ரெலோவின் வடமராட்சி பிரிவான தாஸ்குரூப்பினால்தான் செய்யப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, valavan said:

சாவகச்சேரி  காவல்நிலைய தாக்குதலின் தொடராக நாவற்குழி ராணுவ தொடரணிமீதான தாக்குதல், முறிகண்டி ராணுவ தொடரூந்து மீதான தாக்குதல், மற்றும் கொக்காவில் கிளிநொச்சி ராணுவ முகாம்கள்மீதான தாக்குதல் முயற்சியென்று  குறிப்பிடதக்க ராணுவ நடவடிக்கைகளில் ரெலோ இறங்கியிருக்கிறது,

ஆனால் கிருபன் சொன்னதுபோல் அவை அனைத்தும் ரெலோவின் வடமராட்சி பிரிவான தாஸ்குரூப்பினால்தான் செய்யப்பட்டது.

தாஸ் இல்லையென்றால் டெலோ இல்லை அந்த வீர மாமனிதனுக்கு முழங்காலிட்டு அஞ்சலி செலுத்தும் மாற்று இயக்க நபர்களில்  தாஸ் ஒருத்தர் சிறியர் என்ன செய்தவர் என்பதை இன்னும் அறிய ஆவல் .அவருக்கு காலில் வெடிபோட்டவர் கனடாவில் இருக்கிறார் ? 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

யூனியன் கல்லூரி மாணவர்களின் தலையில் அண்மையில் விழுந்த பொல்லாங்கட்டையே எமது இப்போதைய நிலை பற்றி பல விடயங்களை சொல்லாமல் சொல்கின்றது.

அது இரண்டு சபைக்கு இடையிலான பிரச்சனை என்று சொல்வினம் இங்க சிலர்

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பெருமாள் said:

தாஸ் இல்லையென்றால் டெலோ இல்லை அந்த வீர மாமனிதனுக்கு முழங்காலிட்டு அஞ்சலி செலுத்தும் மாற்று இயக்க நபர்களில்  தாஸ் ஒருத்தர் சிறியர் என்ன செய்தவர் என்பதை இன்னும் அறிய ஆவல் .அவருக்கு காலில் வெடிபோட்டவர் கனடாவில் இருக்கிறார் ? 

 சிறி எதுவுமே தாஸுக்கு கொடுக்கவில்லை,

தாஸுக்கும் ரெலோவுக்கும் சம்பந்தமேயில்லை,

தாஸுக்கு தலைவராக குன்னகுடி வைத்தியநாதன் இருந்தார்.

தாஸ் தானாக போராளிகளை சேர்த்து பயிற்சி கொடுத்து சொந்தமா  கொட்டன் பொல்லுகள்  சீவி மற்றும் அலவாங்கு மண்வெட்டி  போன்ற கனரக ஆயுதங்களை செய்து அவற்றைக்கொண்டு  இலங்கை பாதுகாப்புபடைகளின்மீது தாக்குதல் செய்தார் .

உங்கள் ஆவலை பூர்த்தி செய்ததில் ஆனந்தம்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, valavan said:

 சிறி எதுவுமே தாஸுக்கு கொடுக்கவில்லை,

தாஸுக்கும் ரெலோவுக்கும் சம்பந்தமேயில்லை,

தாஸுக்கு தலைவராக குன்னகுடி வைத்தியநாதன் இருந்தார்.

தாஸ் தானாக போராளிகளை சேர்த்து பயிற்சி கொடுத்து சொந்தமா  கொட்டன் பொல்லுகள்  சீவி மற்றும் அலவாங்கு மண்வெட்டி  போன்ற கனரக ஆயுதங்களை செய்து அவற்றைக்கொண்டு  இலங்கை பாதுகாப்புபடைகளின்மீது தாக்குதல் செய்தார் .

உங்கள் ஆவலை பூர்த்தி செய்ததில் ஆனந்தம்.

ரென்சன் ஆக வேண்டாம் இன்றும் பழைய டெலோ ஆட்களுடன் நல்ல நட்ப்புடனே  உள்ளேன் சரித்திரம் மாற கூடாது பாருங்க .

  • கருத்துக்கள உறவுகள்

46-B3-FBA5-2-B22-405-D-9656-2-AB6-FD8-AB

8 minutes ago, valavan said:

 சிறி எதுவுமே தாஸுக்கு கொடுக்கவில்லை,

தாஸுக்கும் ரெலோவுக்கும் சம்பந்தமேயில்லை,

தாஸுக்கு தலைவராக குன்னகுடி வைத்தியநாதன் இருந்தார்.

தாஸ் தானாக போராளிகளை சேர்த்து பயிற்சி கொடுத்து சொந்தமா  கொட்டன் பொல்லுகள்  சீவி மற்றும் அலவாங்கு மண்வெட்டி  போன்ற கனரக ஆயுதங்களை செய்து அவற்றைக்கொண்டு  இலங்கை பாதுகாப்புபடைகளின்மீது தாக்குதல் செய்தார் .

உங்கள் ஆவலை பூர்த்தி செய்ததில் ஆனந்தம்.

சிறி தாசுக்கு எதுவுமே கொடுக்க வில்லையா..... 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

35 வருடங்களின் பின் இப்போதும் என்ன எம்மிடையே சகோதரத்துவம் வளர்ந்துவிட்டதா.. என்ன?

யூனியன் கல்லூரி மாணவர்களின் தலையில் அண்மையில் விழுந்த பொல்லாங்கட்டையே எமது இப்போதைய நிலை பற்றி பல விடயங்களை சொல்லாமல் சொல்கின்றது.

தலைப்பிற்கு தொடர்பில்லாத விடயங்களைத் தவிர்ப்பது தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்க உதவும். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

தலைப்பிற்கு தொடர்பில்லாத விடயங்களைத் தவிர்ப்பது தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்க உதவும். 

உங்கட கண்ணிற்கு இப்படியானவை மட்டும்  தெரிந்து விடுகிறது.... 😂

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, MEERA said:

46-B3-FBA5-2-B22-405-D-9656-2-AB6-FD8-AB

சிறி தாசுக்கு எதுவுமே கொடுக்க வில்லையா..... 

சத்தமாக பேசாதீர்கள் அப்புறம் யாராவது இதேபோல ஒரு போஸ்டரை இங்கே கொண்டுவந்து ஒட்டிவிட்டு  கருணாவிற்கும் மாத்தையாவிற்கும் தலைவர் எதுவுமே கொடுக்கவில்லையா என்று கேட்டுவிடபோகிறார்கள்.

காட்சிகள் ஒன்றாகதான் அனைத்து இயக்கங்களிலும் இருந்தது, காரணங்கள்தான் வேறுவேறாக சொல்லப்பட்டது.

தாஸ்குரூப்பின் அழிவை நடத்தியதே பொபி என்பது பலருக்கும் தெரிந்திருக்கும், யாழ்ப்பாணத்தில் ரெலோ என்பது 100% பொபியின் கட்டுப்பாட்டிலேயே இயங்கியது, தாஸ் பொபி பிரிவின் முன்னர் இந்தியாவிலிருந்தபடி பலமான ரெலோவை வழிநடத்தியது ஸ்ரீ. இந்தியாவிலிருந்து யாழ் வந்தபின் ஸ்ரீயும் பல்லு புடுங்கிய பாம்பாக பொபி கட்டுப்பாட்டில் ஏறக்குறைய சூழ்நிலை கைதி நிலையிலேயே இருந்தார் என்பது வரலாறு.

 

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, MEERA said:

உங்கட கண்ணிற்கு இப்படியானவை மட்டும்  தெரிந்து விடுகிறது.... 😂

மீரா,

சாதி சமயத்தில எனக்கு நம்பிக்கையில்ல, உங்களுக்கிருக்கெண்டா நான் என்ன செய்யிறது....😏

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் இறந்ததை நினைவு கூற அவர் சார்ந்தோருக்கு உரிமை உண்டு. 

ஆனால்.. இவர் என்ன வீரத்தைச் செய்தற்காக வீரவணக்கம் செய்யினம்..??! நினைவஞ்சலி செய்யுங்கோ அது தப்பில்ல.

ஆனால்.. மக்களுக்கு முன் வீரர்களாக்க நினைக்க வேண்டாம்.. துரோகிகளை. 

3 minutes ago, nedukkalapoovan said:

ஒருவர் இறந்ததை நினைவு கூற அவர் சார்ந்தோருக்கு உரிமை உண்டு. 

ஆனால்.. இவர் என்ன வீரத்தைச் செய்தற்காக வீரவணக்கம் செய்யினம்..??! நினைவஞ்சலி செய்யுங்கோ அது தப்பில்ல.

ஆனால்.. மக்களுக்கு முன் வீரர்களாக்க நினைக்க வேண்டாம்.. துரோகிகளை. 

நீங்கள் கூறுவது சரி என்றால் கோத்தபாய கூறுவதும் சரி என்று ஆகிவிடும். யார் தியாகி , யார் துரோகி என்று முடிவெடுத்து,  சான்றிதழ் கொடுக்கும் உரிமையை நீங்கள் யாரிடம் இருந்து எப்போது பெற்றீர்கள்?   ஶ்ரீசபாரத்தினமும் மக்களுக்காக போராடவந்து அநியாயமாக கொல்லப்பட்ட ஒரு போராளிதான். எமக்காக போராடி இறந்த ஒரு போராளிக்கு வீரவணக்கம் செய்வதில் கூட பாரபட்சம் காட்டுவீரகள் என்றால் இதை விட கோத்தபாய மேல்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.