Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்று ஆட்டுக்கு கொத்தை காட்டி அழைத்து செல்கிறார்கள் எங்கோ ஒரு இடத்தில் அறுக்கப்பட போகிறார்கள் என்று சொன்னோம்... அதுவே இன்று நடந்திருக்கிறது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

asmi.jpg

- நூருல் ஹுதா உமர்-

சேர் பொன்னம்பலம் ராமநாதன் தொடங்கி பிரபாகரன் வரைக்கும் காலத்துக்கு காலம் வந்த தமிழ் தலைமைகள்

எந்த வகையான கழுத்தறிப்புகளை முஸ்லிம் சமுகத்திற்கு செய்தார்களோ அதையே சாணக்கியனும் செய்கிறார். இதை பார்த்து வியந்து பேசவோ ஆச்சரியப்படவோ வேண்டியதில்லை என்று இழப்பீட்டுக்கான  ஆய்வு மையத்தின் தலைவரும் அக்கரைப்பற்று மாநகர சபைக்கு உறுப்பினருமான அஸ்மி அப்துல் கபூர் தெரிவித்தார். அக்கரைப்பற்று இழப்பீட்டுக்கான ஆய்வு மைய காரியாலயத்தில் இடம்பெற்ற வருடாந்த நிர்வாகிகள் தேர்வு நடைபெற்ற பின்னர் உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

 

 

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் தனியான இனம் என்பதை 85களில் தமிழ் மொழி மாநிலமாக ஆரம்பித்த போராட்டம் 90களில் தமிழ் இனத்துக்கான போராட்டமாக மாற்றமடைந்த போதே உணர்ந்து கொண்டோம். ஆயிரக்காணக்கான முஸ்லீம் இளைஞர்கள் தமிழ் ஈழம் வேண்டி தமது உயிரை மாய்த்த போதும் இரவோடு இரவாக வடக்கு முஸ்லீம்களை அகதிகளாக வெளியேற்றி துரோகமிழத்தனர். பள்ளிகளில் குண்டுகளை வீசி நுற்றுக் கணக்கான உயிர்களை காவு கொண்டீர்கள் இதில் கருணா பிள்ளையான் பிரபாகரன் என பேதமில்லாமல் கழுத்தறுப்பு செய்தனர்.

 

ஏறாவூரில் அழிஞ்சு பொத்தானையில் மூதூரில் அக்கரைப்பற்று வயல்களில் முஸ்லீம்களை கொன்று குவித்ததை நாங்கள் மறந்து போக வில்லை. கர்ப்பிணி தாய்மார்கள் என்றும் பார்க்காமல் வயிற்றிலிருந்த சிசுக்களை வெளியில் எடுத்து கொலை செய்த படுபாதகம் எங்கும் நிகழ்ந்திருக்குமா? இது தங்களின் கோசத்தின் பின்னால் மட்டை தூக்கிய தேநீர் உசார் முஸ்லிம் இளைஞனுக்கோ  அரசியல்வாதிகளுக்கோ தெரிய வாய்ப்புக்கள் இல்லை நாடு கடந்த தமிழ் ஈழத்தின் ஏற்பாட்டில் P to P  வரைக்குமான நடை பவணியின் போது அட்டாளைச்சேனையில் ஜனாசா எதிர்ப்பு கோசமும் காரைதீவில் வடக்கு கிழக்கு இணைப்பு கோசமும் வருகின்ற போது  சொன்னோம் ஆட்டுக்கு கொத்தை காட்டி அழைத்து செல்கிறார்கள் எங்கோ ஒரு இடத்தில் அறுக்கப்பட போகிறார்கள் என்று அதுவே நடந்திருக்கிறது.

 

கல்முனையில் தனியான RDHS இருப்பது முஸ்லீம்களுக்கு மட்டுமா? மட்டக்களப்பில் தனியான கல்வி வலயம் இருப்பதால் தங்களது இனத்துக்கு ஏதும் நஷ்டம் ஏற்படுகின்றதா? ஐந்து கிலோ மீட்டரில் வைத்தியசாலை இருந்தால் தமிழ் இனம் ஏன் எதிர்க்க வேண்டும்? இவையெல்லாம் உருவாக பிரபாகரனும் அவர் ஏந்தி இருந்த ஆயுதமும் தான் காரணம் என்பதை சாணக்கியன் புரிந்து கொள்ள வேண்டும்.

 

சிங்கள இனத்துடன் முஸ்லீம்களை பிரித்தாளும் பணியை டயஸ்போராக்கள் மிக தெளிவாக செய்திருக்கிறார்கள் அதற்கு எங்களது தலைவர்களும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. கடந்த நல்லாட்சியின் போது ரவூப் ஹக்கீமும் சம்பந்தனும் அதிகாரத்தில் இருந்த போது கல்முனைக்கான தீர்வு எட்டப்பட வில்லை ஏன்?இன்னும் வெற்று அரசியல் சுயநலத்துக்காக மக்களை சூடாக்கி வைத்திருக்க பார்க்கிறீர்கள்? காலம் சாணக்கியனை மட்டு மல்ல அனைத்து நிஜங்களையும் தோலுரித்து காட்டும் மிகப்பெரிய சக்தி மிக்கது என்றார்.

https://www.madawalaenews.com/2021/05/blog-post_590.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களும் முஸ்லிம் ஊர்காவல் படையால் கொல்லப்பட்டு,  ஊரை விட்டு விரட்டப்படார்களே?

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் இன்னமும் தொடங்கவேயில்லை 
அதுக்குள்ளேயே இப்பிடி அலறினால் எப்படி? 

நீங்கள் சிங்களவருக்கும் உண்மையாக இருக்கப்போவதில்லை 
தமிழர்களுக்கும் உண்மையாக இருக்கபோவதில்லை.

எரிகிற வீட்டில் புடுங்குற உங்கள் வியாபார புத்தி 
வாழ்கிறது என்பதுக்கு உங்கள் புத்தி காரணம் இல்லை 

சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் 
உங்களை போன்ற ஈன புத்தி இல்லாததுதான் காரணம். 

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவது புரிந்து கொள்ள வேண்டும் இல்ல புட்டு , தேங்காய் பூ என்றால் இதுவும் பேசுவானுகள் இன்னமும் பேசுவானுகள் அடேய் காரைதீவில போகக்குள்ள வடக்கு கிழக்க இணை என கத்தவில்லையடா கேண

அதுசரி ஆயிரணக்கணக்கான முஸ்லீம் இளைஞர்கள் போராடினார்கள்  ?? இதுவே முழு பொய்யிடா மாங்கா மடையா

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இனத்துடன், முஸ்லிம்களை பிரிப்பதை டயஸ்போறாக்கள் தெளிவாக செய்கிறார்கள்.....

அடப்பாவி.... வெடி போட்டு, நூற்றுக்கணக்கான பக்தர்களை, அவர்களது வணக்க தளத்தில் கொல்ல சொன்னது, டயஸ்போறாக்கள் தானே...

இவனுகளுக்கு, சிங்களவன் இன்னும் ஆப்பு வைத்தால் தான் சரி.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவும் கூட இந்த சிங்களவர் எம்மை அணைக்க மாட்டினமா சேர்க்க மாட்டினாமா என்று ஓடி ஓடி திரியினம்..சேர்த்தால் தமிழனை கருவறுக்கலாம் என்பதே ஒவ்வொரு முசுலிமின் சிந்தனையும் ..அதற்காக  அவன் கோவணத்தை உருவினாலூம் பரவாயில்லை என்று  ஓடுப்பட்டு திரியினம்....இப்ப அவர்கள்   இவையின்ரை  பாவாடை சட்டையையே கழட்டிவிட்டுட்டாங்கள்.. இது தெரியாமல் கல்முனையையும் காத்தான் குடியையும் கட்டிபிடிச்சு அழுகினம்...

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, colomban said:

கர்ப்பிணி தாய்மார்கள் என்றும் பார்க்காமல் வயிற்றிலிருந்த சிசுக்களை வெளியில் எடுத்து கொலை செய்த படுபாதகம் எங்கும் நிகழ்ந்திருக்குமா?

இது புதுசாயிருக்கே....  யாராவது கேள்விப்பட்டதுண்டோ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

இது புதுசாயிருக்கே....  யாராவது கேள்விப்பட்டதுண்டோ?

இலங்கை முஸ்லீம் கறி கம கம என்று  மணக்கவேண்டுமென்றால், கொஞ்சம் இந்திய குஜராத்  மசாலாவையும் தூவத்தான் வேண்டும்  

17 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இனியாவது புரிந்து கொள்ள வேண்டும் இல்ல புட்டு , தேங்காய் பூ என்றால் இதுவும் பேசுவானுகள் இன்னமும் பேசுவானுகள் அடேய் காரைதீவில போகக்குள்ள வடக்கு கிழக்க இணை என கத்தவில்லையடா கேண

அதுசரி ஆயிரணக்கணக்கான முஸ்லீம் இளைஞர்கள் போராடினார்கள்  ?? இதுவே முழு பொய்யிடா மாங்கா மடையா

மச்சி 
இந்த லட்சணத்தில்  எங்கடை கூத்தமைப்பு அப்புக்காத்துமார் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்குகிறதில் மட்டும் செம பிசி, வேண்டித்தின்ற பிரியாணிக்காவது உண்மையாக இருக்கட்டும்  

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, அக்னியஷ்த்ரா said:

இலங்கை முஸ்லீம் கறி கம கம என்று  மணக்கவேண்டுமென்றால், கொஞ்சம் இந்திய குஜராத்  மசாலாவையும் தூவத்தான் வேண்டும்  

இன்னும்  அபத்தமான கலப்பு  கதைகளை எதிர்பார்க்கலாம் என்கிறேள். 

  • கருத்துக்கள உறவுகள்+
On 10/5/2021 at 06:12, colomban said:

ஆயிரக்காணக்கான முஸ்லீம் இளைஞர்கள் தமிழ் ஈழம் வேண்டி தமது உயிரை மாய்த்த போதும்

🤣🤣 போறபோக்கில கண்டதையும் அடிச்சு விட வேண்டியது தான்...

நான் எண்ணிய வரைக்கும்...

-->தவிபு இல் இருந்து வீரச்சாவடைந்த ஒட்டு மொத்த முசிலீம் மாவீரர் எண்ணிக்கை 50 இற்கு கிட்ட. கிடைத்த பெயர் குறிப்புகள் அவ்வளவே.. ஏதேனும் விடுபட்டிருந்தால் எனக்குத் தெரியாது. (இவர்களை நான் என்றென்றும் போற்றுவேன்.. மாற்றுக்கருத்துக்கு இடமில்லை)

-->ஏனைய இயக்கங்கள் பற்றித் தெரியாது.. ஒரு அண்ணளவாக ஒட்டு மொத்தமாக 100 இற்குள்தான் இருக்கலாம் என்று எண்ணுகீறேன்.

கதை இப்பிடி இருக்க இந்த சோனிக்கு எங்கிருந்து 1000 வந்தது?

ஒட்டு மொத்த கட்டுரைக்கும்....

May be an image of 1 person and text that says "தம்பி பொய் சொல்லலாம் ஆனா ஏக்கர் கணக்குல எல்லாம் பொய் சொல்ல கூடாது..."

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, அக்னியஷ்த்ரா said:

மச்சி 
இந்த லட்சணத்தில்  எங்கடை கூத்தமைப்பு அப்புக்காத்துமார் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்குகிறதில் மட்டும் செம பிசி, வேண்டித்தின்ற பிரியாணிக்காவது உண்மையாக இருக்கட்டும்  

முதலமைச்சர் கனவாம் என்று கேள்விப்பட்டன் பின்னர் அது கலைந்து விட்டதாம் 

  • கருத்துக்கள உறவுகள்
On 10/5/2021 at 12:12, colomban said:

கர்ப்பிணி தாய்மார்கள் என்றும் பார்க்காமல் வயிற்றிலிருந்த சிசுக்களை வெளியில் எடுத்து கொலை செய்த படுபாதகம் எங்கும் நிகழ்ந்திருக்குமா?

 

9 hours ago, satan said:

இது புதுசாயிருக்கே....  யாராவது கேள்விப்பட்டதுண்டோ?

 

4 hours ago, நன்னிச் சோழன் said:

🤣🤣 போறபோக்கில கண்டதையும் அடிச்சு விட வேண்டியது தான்...

"ரமழான்  நோன்பு"   இருந்து கொண்டு....  பச்சைப் பொய் சொல்லுறார்.  
இப்பிடி செய்தால்.... 
இந்தாள், பிடிக்கிற விரதத்தை... அந்தாள் ஏற்காமல் நரகத்துக்கு.. அனுப்பி விடும்.  🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

"ரமழான்  நோன்பு"   இருந்து கொண்டு....  பச்சைப் பொய் சொல்லுறார்.  
இப்பிடி செய்தால்.... 
இந்தாள், பிடிக்கிற விரதத்தை... அந்தாள் ஏற்காமல் நரகத்துக்கு.. அனுப்பி விடும்.  🤣

பொய் சொன்ன வாய்க்கு போஜனமும் கிடைக்காது பொரியலும் கிடைக்காது.😁

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, alvayan said:

இப்பவும் கூட இந்த சிங்களவர் எம்மை அணைக்க மாட்டினமா சேர்க்க மாட்டினாமா என்று ஓடி ஓடி திரியினம்..சேர்த்தால் தமிழனை கருவறுக்கலாம் என்பதே ஒவ்வொரு முசுலிமின் சிந்தனையும் ..அதற்காக  அவன் கோவணத்தை உருவினாலூம் பரவாயில்லை என்று  ஓடுப்பட்டு திரியினம்....இப்ப அவர்கள்   இவையின்ரை  பாவாடை சட்டையையே கழட்டிவிட்டுட்டாங்கள்.. இது தெரியாமல் கல்முனையையும் காத்தான் குடியையும் கட்டிபிடிச்சு அழுகினம்...

தமிழர்கள் அவலத்தில், நல்லா அனுபவித்தார்கள். ஷாக்ரான் கெடுத்து போட்டார்.  மீசைக்கும் ஆசை, கூழுக்கும் ஆசை நிலைமையா போட்டுது.

அப்ப, பழையபடி சாரத்தோடை திரியினமே?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

"ரமழான்  நோன்பு"   இருந்து கொண்டு....  பச்சைப் பொய் சொல்லுறார்.  
இப்பிடி செய்தால்....

அவர்களின் தவத்தில் இதுவும் ஒரு அங்கமாயிருக்குமோ? யார் கண்டார்? தவமிருந்து திருப்பலிக்கு போனவர்களை சுவர்கத்துக்கு அனுப்பியபடியால், இவர்களின் நோன்பும் அப்படி  இருக்கலாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.