Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரெஞ்சு மண்ணில் ஆழக் கால் பதிக்கும் தமிழீழ அரசியல்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

நீங்கள் எழுதும் பாணி அப்படியே நாதமுனியை நினைவுக்கு கொண்டு வருகிறது. 

அவரை போலவே நீங்களும் பலராலும் விரும்பபடும் கருத்தாளராக வர வாழ்துக்கள் 💐.

நீங்கள் எழுதுறதும் எனக்கு ஒரு ஆளை நினைவுபடுத்துது.எல்லாத்தையும் வெளியிலை சொல்லிக்கொண்டே திரியிறம் 😂 கருத்தை கருத்துக்களாலை வெல்லோணும் கண்டியளோ😆

  • Replies 109
  • Views 8.5k
  • Created
  • Last Reply
3 hours ago, விசுகு said:

 

நான் எழுதியதில்  ஒரு  மண்ணாங்கட்டியும்  உங்களுக்கு  புரியவில்லை  இதுக்க  எனக்கு  வகுப்பு????

வீட்டில  இருந்து  தான்  எல்லாமே  தொடங்குது

 

நீங்கள் சொல்ல வரும் விடயங்களில் நேர்மை இருந்தால் தெளிவாக சொல்லலாம். அது இல்லாவிட்டால் இப்படி ஒளித்து மறைத்து சொல்ல வேண்டிய நிலை உங்களுக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, tulpen said:

நீங்கள் சொல்ல வரும் விடயங்களில் நேர்மை இருந்தால் தெளிவாக சொல்லலாம். அது இல்லாவிட்டால் இப்படி ஒளித்து மறைத்து சொல்ல வேண்டிய நிலை உங்களுக்கு. 

வீட்டில இருந்து தான்  எல்லாம் தொடங்குது என்பதில் என்ன  ஒழிவு  மறைவு???

நித்திரை மாதிரி நடிக்கும் கூட்டத்தை எழுப்ப முடியாது என்று தெரியும்

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, valavan said:

பிரெஞ்சு குடியுரிமை பெற்று   பிரெஞ்சு குடிமக்களாக வாழும் அவர்கள் பிரான்சு நகர  நிர்வாக தேர்தல்களில் நின்றால் அது எப்படி ஆழ கால் பதிக்கும் தமிழீழ அரசியல் ஆகும்?

தேர்தல்களில் அவர்கள் வெற்றி பெற்றுவிட்டால் அவர்கள் கவனிக்கபோவது பிரான்சின் நகரங்களின் நிர்வாக நடவடிக்கைகளையா அல்லது தமிழீழ நிர்வாக நடவடிக்கைகளையா? 

குடியுரிமை பெற்ற அனைத்து இனங்களை சேர்ந்தவர்களையும் ஐரோப்பியநாடுகள் தேர்தலில் நிற்க உரிமைகளை வழங்கியிருக்கு அப்போ தேர்தலில் பங்குபற்றும் வேற்றுநாடுகளிலிருந்து பிரெஞ்சு பிரஜை ஏனைய நாட்டவர்கள்  அவர்களது பிறந்த தேசத்து அரசியல் பிரான்சில் ஆழ கால்பதிக்கிறார்கள் என்று அர்த்தமா?

பிரான்சு சட்டங்கள் பிரான்சில் ஆழகால்பதிக்கும் எல்லை கடந்த நாடுகளின் அரசியலை அனுமதிக்குமா?

அளவுக்கதிகமான அரிதாரம் பூசப்பட்ட தலைப்புகள் என்று நினைக்கிறேன்.

 

17 hours ago, goshan_che said:

இவை எல்லாமே குழுவாத அரசியல் மருதர். நாமெல்லோரும் ஏதோ ஒரு வகையில் இந்த சுழலில்தான் இருக்கிறோம். 

நான் ஏன் 1% பணக்காரருக்கு வரி விலக்கு கொடுப்போம் என சொல்லும் கட்சிக்கு வாக்களிப்பதில்லை? ஏனென்றால் நான் அந்த 1% பணக்காரர் குழுவில் இல்லை.

அரசியல் என்பதே குழுவாதம்தான்.

அது ஏழை, பணக்காரன், வேலை உள்ளவன், வேலை இல்லாதவன், சோசல் காசில் இருப்பவன், சோசல் காசுக்கு வரி கொடுப்பவன் என்று எப்போதும் குழுக்களின் நலன் சார்ந்தே ஓடும்.

ஆனால் இவற்றில் எல்லாம் ஒரு குழுவில் இருந்து இன்னோர் குழுவுக்கு போகலாம். யார் கண்டது நாளைக்கு நான் 1% பணக்காரர் குழுவில் சேர்ந்து விடலாம்.

ஆனால் இனத்தூய்மைவாதம் அப்படி அல்ல. அது ஒரு மாற்ற முடியாத லேபல். ஆகவேதான் குழுவாத அரசியல்கள் எல்லாவற்றிலும் மிக ஆபத்தான குழுவாத அரசியலாக இனத்தூய்மைவாதம் இருக்கிறது.

திருவாளர் கோசான்!

மேலே வளவன் எழுதிய கருத்தை நான் இங்கு போடுகிறேன் 
அந்த கருத்தில் ஒன்றும் இல்லை.

அதுக்கு 5 பேர் பச்சை குத்தி வரவேற்று இருக்கிறார்கள் ஒருவர் சுவிஅவர்கள் அவருக்கு அந்த கருத்து 
பிடித்து இருக்கிறது என்று எண்ணுகிறேன்.

மற்ற நாலு போரையும் நினைத்து உருண்டு உருண்டு சிரிக்கிறேன் 

இந்த பாம்பாம்த்து சிர்த்தத்தங்களில் தொங்கும் கீழ்நிலையைத்தான் நான் மேலே 
எழுதினேன். அதைத்தான் திரும்ப திரும்ப நான் மேலே எழுதி இருக்கிறேன் 
வலவன் வடிவில் நான் வைத்த மிதிவெடியில் வந்து இப்படி மிதித்து நிக்கிறார்களே?
இவ்வாறான ஒரு கேவலம் எதற்கு?

இதுக்கு அடித்தளமே முதலில் குழுவாதம் 
மற்றது தாங்கள்தான் பெருந்தகைகள் எனும் கர்வம் 
மற்றது இன்னொருவனை மிதிக்கும் ஒரு அதிகார ஆணவம் 
மற்றதை சீமானின் வாலில் புலிவாலில் தொங்குவது 

இவற்றை கட்டிப்பிடித்து தொங்கிக்கொண்டு 
அடுத்தவனுக்கு பாடம் எடுப்பு. 

அரசியல் என்பதே முதலில் ஆளுமை சார்ந்தது 
ஆளுமையை கைவிட்டால் அரசியல் இல்லை ஆளுமையை பற்றிக்கொள்ள 
பலம் வேண்டும் அது இப்போது பண (பொருளாதார) பலமாகவே இருக்கிறது 
எந்த அரசுகள் என்றாலும் அதற்கு உட்பட்டுதான் ஆட்ச்சி 
என்னைப் பொறுத்தவரை இதில் சிலாகிக்கவே ஏதும் இல்லை. 

உண்மையில் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை .....
விழுந்து விழுந்து சிரிக்கிறேன் 

ஓநாய் ஓநாய் என்பவன் ஒரு நாள் உண்மையிலேயே ஓநாய் வரும்போது ஆடுகளை 
இழப்பதுபோல. குழுவாதம் மூலம் அடுத்தவர்களை சாதி வெறியில் இருந்துகொண்டு 
நலிந்தவனை மிதிப்பதுபோல இங்கிருக்கும் சக கருத்தாளர்களை வீம்புக்கு வம்புழுத்து 
வன்மம் வளர்க்கும் இவர்கள் ஒருநாள் தங்கள் முகத்தில் கரிப்பூசிக்கொண்டு நிற்பார்கள் 
என்பது நான் ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். 


இருந்தாலும் எனக்கு ஒரு கவலை உண்டு இப்போது ஈழத்தமிழரிடம் 
பெரும் சக்தி உண்டு ஏன் வீணாக எந்த அரசியல் பலமும் இல்லாத சீமானை 
ஆதரவாகமும் எதிராளியாகவும் காவிக்கொண்டு திரிகிறோம் என்பதே 
(ஸ்டாலின் கனிமொழியையே வழிக்கு கொண்டுவரும் பொருளாதார பலம் உண்டு)  

அதுக்கு விடை எனக்கு 90லேயே தெரியும் 
தெளிவாக அது தெரிந்தபின்தான் நான் போர் உச்சத்தில் இருந்தபோதும் 
சுயலநலத்துடன் உயிருக்காக தேசத்தை விட்டு ஓடினேன். 

சிங்களவன் போட்டு கும்பு கும்பு என்று கும்மினால் 
யாழ்ப்பாண ஆணவ தலைகளுக்குள் கொஞ்சம் புத்தி வரலாம் என்று எதிர்பார்த்தேன் 
அது இன்னும் ஒரு ஆயிரம் வருசத்துக்கு வாராது என்றே மேலே இருக்கும் சில ஆணவ கருத்துக்கள் 
அடித்து சொல்கின்றன.

நான் எந்த வலதுசாரிகளுக்கும் ஆதரவாளன் இல்லை 
அதுக்காக போலி இடதுசாரிகளின் வேஷம் தெரியாதவனும் இல்லை 
இந்த வேஷங்கள் ஒருநாள் கலையும் என்று எனக்கு தெரியும் 

இவ்வளவு சீக்கிரமாக.......... என்பதுதான் எதிர்பாராதது. 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Maruthankerny said:

 

திருவாளர் கோசான்!

மேலே வளவன் எழுதிய கருத்தை நான் இங்கு போடுகிறேன் 
அந்த கருத்தில் ஒன்றும் இல்லை.

அதுக்கு 5 பேர் பச்சை குத்தி வரவேற்று இருக்கிறார்கள் ஒருவர் சுவிஅவர்கள் அவருக்கு அந்த கருத்து 
பிடித்து இருக்கிறது என்று எண்ணுகிறேன்.

மற்ற நாலு போரையும் நினைத்து உருண்டு உருண்டு சிரிக்கிறேன் 

இந்த பாம்பாம்த்து சிர்த்தத்தங்களில் தொங்கும் கீழ்நிலையைத்தான் நான் மேலே 
எழுதினேன். அதைத்தான் திரும்ப திரும்ப நான் மேலே எழுதி இருக்கிறேன் 
வலவன் வடிவில் நான் வைத்த மிதிவெடியில் வந்து இப்படி மிதித்து நிக்கிறார்களே?
இவ்வாறான ஒரு கேவலம் எதற்கு?

இதுக்கு அடித்தளமே முதலில் குழுவாதம் 
மற்றது தாங்கள்தான் பெருந்தகைகள் எனும் கர்வம் 
மற்றது இன்னொருவனை மிதிக்கும் ஒரு அதிகார ஆணவம் 
மற்றதை சீமானின் வாலில் புலிவாலில் தொங்குவது 

இவற்றை கட்டிப்பிடித்து தொங்கிக்கொண்டு 
அடுத்தவனுக்கு பாடம் எடுப்பு. 

அரசியல் என்பதே முதலில் ஆளுமை சார்ந்தது 
ஆளுமையை கைவிட்டால் அரசியல் இல்லை ஆளுமையை பற்றிக்கொள்ள 
பலம் வேண்டும் அது இப்போது பண (பொருளாதார) பலமாகவே இருக்கிறது 
எந்த அரசுகள் என்றாலும் அதற்கு உட்பட்டுதான் ஆட்ச்சி 
என்னைப் பொறுத்தவரை இதில் சிலாகிக்கவே ஏதும் இல்லை. 

உண்மையில் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை .....
விழுந்து விழுந்து சிரிக்கிறேன் 

ஓநாய் ஓநாய் என்பவன் ஒரு நாள் உண்மையிலேயே ஓநாய் வரும்போது ஆடுகளை 
இழப்பதுபோல. குழுவாதம் மூலம் அடுத்தவர்களை சாதி வெறியில் இருந்துகொண்டு 
நலிந்தவனை மிதிப்பதுபோல இங்கிருக்கும் சக கருத்தாளர்களை வீம்புக்கு வம்புழுத்து 
வன்மம் வளர்க்கும் இவர்கள் ஒருநாள் தங்கள் முகத்தில் கரிப்பூசிக்கொண்டு நிற்பார்கள் 
என்பது நான் ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். 


இருந்தாலும் எனக்கு ஒரு கவலை உண்டு இப்போது ஈழத்தமிழரிடம் 
பெரும் சக்தி உண்டு ஏன் வீணாக எந்த அரசியல் பலமும் இல்லாத சீமானை 
ஆதரவாகமும் எதிராளியாகவும் காவிக்கொண்டு திரிகிறோம் என்பதே 
(ஸ்டாலின் கனிமொழியையே வழிக்கு கொண்டுவரும் பொருளாதார பலம் உண்டு)  

அதுக்கு விடை எனக்கு 90லேயே தெரியும் 
தெளிவாக அது தெரிந்தபின்தான் நான் போர் உச்சத்தில் இருந்தபோதும் 
சுயலநலத்துடன் உயிருக்காக தேசத்தை விட்டு ஓடினேன். 

சிங்களவன் போட்டு கும்பு கும்பு என்று கும்மினால் 
யாழ்ப்பாண ஆணவ தலைகளுக்குள் கொஞ்சம் புத்தி வரலாம் என்று எதிர்பார்த்தேன் 
அது இன்னும் ஒரு ஆயிரம் வருசத்துக்கு வாராது என்றே மேலே இருக்கும் சில ஆணவ கருத்துக்கள் 
அடித்து சொல்கின்றன.

நான் எந்த வலதுசாரிகளுக்கும் ஆதரவாளன் இல்லை 
அதுக்காக போலி இடதுசாரிகளின் வேஷம் தெரியாதவனும் இல்லை 
இந்த வேஷங்கள் ஒருநாள் கலையும் என்று எனக்கு தெரியும் 

இவ்வளவு சீக்கிரமாக.......... என்பதுதான் எதிர்பாராதது. 

நீங்கள் இதில் எனக்காக கனக்க எழுதவில்லை என நினைக்கிறேன்.

ஆனால் எனது நிலைப்பாட்டுக்கும் வளவன் எழுதியதற்கும் தூரம் அதிகமில்லை. இவர்கள் நகரசபை தேர்தலில் போட்டியிட்டு காத்திரமாக எதையும் செய்யமுடியாது அந்தவகையில் இந்த தலையங்கமும், இந்த செய்தியின் சாராம்சமும் ஓவர் பில்டப்தான்.

ஆனால் இப்போ யூகே பாராளுமன்றில் இருப்பவர்களில் 1/3 பேராவது ஒரு காலத்தில் நகரசபை உறுப்பினராக இருந்தோர்தான் என்பது என் கணிப்பு.

ராதிகா, கரி ஆகியோர் எம்பி ஆகி சாதிக்க முடியாததை இந்த நகரசபை உறுபினர்கள் (ஆகினால்) செய்வார்கள் என்ற கற்பனையில் யாரும் இருக்க முடியாது.

ஆனால் புலம்பெயர் தேசத்தின் அத்தனை தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் ஒரு குடையின் கீழ் வரவேண்டும். எம்பிகள் முதல் - நகரசபை உறுப்பினர் வரை.

இவர்கள் எல்லாருக்கும் அவரவர் நாட்டின், நகரத்தின் அரசியல்தான் முதல் கடமை. ஆனால் இரெண்டாவது கடமையாக நாட்டில் வாழும் மக்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு என்பதும் இருக்க வேண்டும்.

இவர்கள் அமர்வுகள் செய்ய வேண்டும். தூதுகுழுக்களை அமைக்க வேண்டும். அத்தனை உலக அதிகார மையங்களையும் லாபி பண்ண வேண்டும்.

தமிழகத்தில் - எல்லாருடனும் நட்புறவை பேண வேண்டும்.

நாட்டில் தமிழ் தேசிய சக்திகளுடன் அணைய வேண்டும்.

இப்படிபட்ட உலகளாவிய, ஜனநாயக மதிப்பு உள்ள ஒரு அமைப்பு எமக்கு உருவாகும் போது - அது பலதை சாதிக்க முடியும். 

இதன் முதல் படியாகவே இந்த செய்தியை நான் பார்கிறேன்.

ஆகவே நகரசபை உறுப்பினர்கள் எமக்கு எதையும் சாதிக்க முடியது என்ற வளவனின் கருத்தை ஏற்றாலும், என்னால் அதற்கு அப்பாலும் பார்க்க இல்லை கற்பனை செய்யவாவது முடிகிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Sasi_varnam said:

பிரபா... நீங்கள் இப்படி வாழ்த்துகிறீர்கள், அதைத்தான் கொழும்பான் கொழும்பு பாணியில் இப்படி சொல்கிறார். 👇

காலவதியான சித்தந்தங்களையும் / கறள் பிடித்த உறைந்த் எண்ணங்களையும் பற்றி படித்து தொங்கிக்கொண்டிருக்கும்   வயோதிப / போலி தேசிய நேசர்களை இளைய பிரான்ஸ் தலைமுறை புறக்கணிக்க வேண்டும்.   

நான் அப்படி எழுதியதில் ஏதும் பிழை இருப்பதாக தெரியவில்லை. 
என்னைப்பொறுத்தவரையில் எங்களது இரண்டாம் தலைமுறை பிள்ளைகள், அரசியலில் ஈடுபடும் போது, அவர்கள் தங்களை தெரிவு செய்த மக்களுக்கு, தங்களுடைய நாட்டுக்கு சேவை செய்தாலும் எங்கள் மக்களை மறக்ககூடாது, விஜய் தணிகாசலம் அளவு முடியாவிட்டாலும் கூட எங்களது மக்களுக்கு நடந்தவற்றை மறக்காமல் அவர்கள் தங்களான முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என எதிர்பார்ப்பது இயற்கைதானே!!
 

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு ஒற்றுமையான அமைப்பை 2ம் தலைமுறை பிள்ளைகள் எம்மை விட இலகுவாக செய்வார்கள்.

1. என்னதான் வீட்டில் சொல்லி கொடுத்தாலும் சாதி, சமய, அரசியலில் அவர்கள் தமது அறிவை கொண்டே செயல்படுவதை கண்டுளேன்.

2. அவர்களிடம் எமது பழைய குரோதங்கள் இல்லை. 

3. அவர்களிடம் எம்மை போல் தனிமனித வழிபாடும் இல்லை. 

4. எம்மை விட நியாத்தின் பால் பிடிப்பு உள்ளவர்களாக, மேலைதேய ஜனநாயக விழுமியங்களை ஏற்றவர்களாக அவர்கள் உள்ளார்கள். தமிழன் என்பதால் அல்லாமல் - இது அநியாயம் என்பதால் அவர்கள் எம் பக்கம் நிலை எடுப்பார்கள்.

5. அவர்களுக்கு இலங்கையில் நடந்ததை சரியாக சொன்னாலே, எமது பக்கம்தான் நியாயம் என்பது புரியும்.

ஆங்கிலத்தில் சொன்னால் எனதும், எனக்கு முந்திய தலைமுறைகளும் we have a lot of baggage. இந்த சுமை இல்லாத அடுத்த புலம் பெயர் தலைமுறை - தத்தம் நாட்டு அரசியலில் இருந்தபடியே, இதை தூர நகர்த்தி செல்லலாம்.

இப்படி நடக்கும் என்பதில்லை. இதற்கு எதிர்மாறாய் அவர்கள் தத்தம் நாட்டு அரசியலோடு சுருங்கியும் போகலாம்.

ஆனால் தமிழ், தமிழ் அடையாளம், கல்தோன்றா மண்தோன்றா தமிழன் என்ற பொய் ஜம்பங்களை புகுத்துவதை விட, இலங்கையில் எமக்கு நடந்தது ஒரு அநியாயம் என்பதை அவர்களுக்கு எடுத்து சொன்னால் போதுமானது - மிகுதியை அவர்கள் வளரும் நாடு அவர்களில் விதைக்கும் விழுமியங்கள் பார்த்துகொள்ளும்.

 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

*********************************************************************
*********************************************************************
*********************************************************************

*********************************************************************

*********************************************************************

*********************************************************************

*********************************************************************

*********************************************************************

*********************************************************************

*********************************************************************

*********************************************************************

*********************************************************************

*********************************************************************

*********************************************************************

*********************************************************************
*********************************************************************

இந்த திரியின் தலைப்பு என்ன? 

Edited by நியானி
திரிக்கு சம்பந்தமில்லாத சக கள உறுப்பினர்களைப் பற்றிய அநாவசியமான கருத்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு விட்டுச் சென்ற பாதையை தொடருங்கள் .எங்கள் அடையாளம் தொலையாமல் உரிமையை வென்றெடுங்கள் .வாழ்த்துகள் 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

 

ஆனால் தமிழ், தமிழ் அடையாளம், கல்தோன்றா மண்தோன்றா தமிழன் என்ற பொய் ஜம்பங்களை புகுத்துவதை விட, இலங்கையில் எமக்கு நடந்தது ஒரு அநியாயம் என்பதை அவர்களுக்கு எடுத்து சொன்னால் போதுமானது - மிகுதியை அவர்கள் வளரும் நாடு அவர்களில் விதைக்கும் விழுமியங்கள் பார்த்துகொள்ளும்.

 

இதைத்தான் நான் செய்துள்ளேன்

உங்கள் அலசலில் 6 வதாக இதையும்  சேர்த்துக்கொள்ளுங்கள்

6 - அவர்களது  மனச்சாட்சிக்கு சரியென  படுவதை  செய்வார்கள். அல்லது  மிக சுலபமாக ஒதுங்கி  விடுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இப்படி ஒரு ஒற்றுமையான அமைப்பை 2ம் தலைமுறை பிள்ளைகள் எம்மை விட இலகுவாக செய்வார்கள்.

1. என்னதான் வீட்டில் சொல்லி கொடுத்தாலும் சாதி, சமய, அரசியலில் அவர்கள் தமது அறிவை கொண்டே செயல்படுவதை கண்டுளேன்.

2. அவர்களிடம் எமது பழைய குரோதங்கள் இல்லை. 

3. அவர்களிடம் எம்மை போல் தனிமனித வழிபாடும் இல்லை. 

4. எம்மை விட நியாத்தின் பால் பிடிப்பு உள்ளவர்களாக, மேலைதேய ஜனநாயக விழுமியங்களை ஏற்றவர்களாக அவர்கள் உள்ளார்கள். தமிழன் என்பதால் அல்லாமல் - இது அநியாயம் என்பதால் அவர்கள் எம் பக்கம் நிலை எடுப்பார்கள்.

5. அவர்களுக்கு இலங்கையில் நடந்ததை சரியாக சொன்னாலே, எமது பக்கம்தான் நியாயம் என்பது புரியும்.

ஆங்கிலத்தில் சொன்னால் எனதும், எனக்கு முந்திய தலைமுறைகளும் we have a lot of baggage. இந்த சுமை இல்லாத அடுத்த புலம் பெயர் தலைமுறை - தத்தம் நாட்டு அரசியலில் இருந்தபடியே, இதை தூர நகர்த்தி செல்லலாம்.

இப்படி நடக்கும் என்பதில்லை. இதற்கு எதிர்மாறாய் அவர்கள் தத்தம் நாட்டு அரசியலோடு சுருங்கியும் போகலாம்.

ஆனால் தமிழ், தமிழ் அடையாளம், கல்தோன்றா மண்தோன்றா தமிழன் என்ற பொய் ஜம்பங்களை புகுத்துவதை விட, இலங்கையில் எமக்கு நடந்தது ஒரு அநியாயம் என்பதை அவர்களுக்கு எடுத்து சொன்னால் போதுமானது - மிகுதியை அவர்கள் வளரும் நாடு அவர்களில் விதைக்கும் விழுமியங்கள் பார்த்துகொள்ளும்.

 

நீங்கள் சொல்லவருவதை புரிந்துகொள்கிறேன் 

நீங்கள் ஏற்கிறீர்களோ இல்லையோ 
இதில் எனக்கு நிறைய மாற்றுக்கருத்து உண்டு 

காற்றில் பறக்கும் பஞ்சு எங்கு போய் வீழும் என்பது யாருக்கும் தெரியாது 
அது சகதியாக கூட இருக்கலாம் 

ஒரு கொள்கை இலக்கு இல்டசியம் இல்லாத எந்த மனிதனும் 
சமூகமும் முன்னேறவே முடியாது. அவர்களிடம் பணம் பொருள் 
இருப்பின் சிலர் அதை முன்னேற்றம் என்று கொள்ளலாம் 
முன்னேற்றம் பற்றி பேசும்போது ... முதலில் முன்னேற்றம் என்றால் என்ன?
என்பதில் தெளிவு வேண்டும்.

"தனி மரம் தோப்பு ஆகாது" 
ஒரு சமூகம் சாராதவன் தான் யார் என்றே அறியாதவன் 
ஒரு ஆக்கபூர்வ அரசியல் செய்வான் என்று எதிர்பார்ப்பது வெறும் கனவே 
அரசியல் என்பதே ஒரு அதிகார ஆதிக்கம்தான் அதில் தெளிவு இல்லை என்றால் 
அழிவுதான் அதிகமாக இருக்கும். மிருகநலன் பேசுபவனுக்கு முதலில் ஆடு வேறு 
ஓநாய் வேறு என்ற தெளிவு இருக்கவேண்டும் இல்லையேல் அவர்களுக்கு நல்லது செய்கிறேன் 
என்று எண்ணி தன்னை அறியாமலேயே ஆட்டையும் ஓநாய்யையும் ஒரே பட்டியில் போடும் 
ஆபத்தை செய்துவிடுவான். வேண்டும் என்று  செய்யாவிடினும் தவறுகளுக்கு நிறைய வாய்ப்பு உண்டு.

"சிறுபிள்ளை வேளாண்மை விளையும் வீடு வந்து சேராது" 
என்னதான் உரிமை எல்லாம் எனது பிள்ளைக்கு அமெரிக்காவில் கிடைத்தாலும் 
தனது சமூகம் தமிழ் என்பதை மறப்பின் அவரால் அமெரிக்காவுக்கும் நன்மை இல்லை 
தமிழருக்கும் நண்மை இல்லை. அதுக்கான அடிப்படை என்ன எனில் எங்கிருந்து வருகிறேன் 
என்ற தெளிவு இருக்கிறவனுக்கே எங்கு போக வேண்டும் என்று ஒரு இல்டசியம் இருக்கும். 
அதில் தெளிவு இருக்கும் .......... மனித வரலாறு பூராகவும் அழிவும் கசப்பும் தான் கிடக்கிறது 
அதை தெளிவாக தெரிந்து கொள்பவன்தான் அவற்றை நீக்கி பயணிக்க வேண்டும் எனும் 
சிந்தனையை பெறுவான். 

குறள் 633:
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு.

அரசியல் என்பது சூழலை பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும் .. உதாரணத்துக்கு 
இரண்டு வருடம் முன்பு ட்ரம் இங்கு அதிபராக இருந்தபோது ஒரு ஐரோப்பிய யூனியன் எதிர்ப்பு 
அலை இருந்தது. அதுக்கு காரணம் பிரித்தானிய பிரிப்பு அதன் சூத்திரதாரியே அமேரிக்கா என்பது 
ஐரோப்பிய யூனியனுக்கு நன்கு தெரியும் என்பதால் பிரான்சும் ஜெர்மனும் அதை பொறுமையாக கையாண்டார்கள். இதை ஏன் குறிப்பிட்டு எழுதுகிறேன் என்றால் பிரிப்பு அழிப்பு சேர்ப்பு என்பது எல்லாம் 
மாறி மாறி நடந்துகொண்டே இருக்கும். சிலர் "மேலைநாட்டு ஜனநாயகம்" என்று வாய் கூசாமல் சொல்லுகிறார்கள் ஜனநாயகத்தை மேற்குக்கு அறிமுகப்படுத்தியதே கீழை நாடுகள் என்ற தெளிவு அவர்களுக்கு இல்லை.இப்போதும் கூட மேலை நாட்டு ஜனநாயகம் என்பது பணநாயகம் மட்டுமே. அதனால்தான் பல நாடுகளில் பிணநாயகமாக வாழ்க்கை நடக்கிறது. இனி பைடன் காலம் ஐரோப்பிய யூனியனுடன் கட்டி புரளும் காலம் நாம் கட்டி புரளுவது அமெரிக்காவுடன் என்ற தெளிவு அற்ற ஒரு ஐரோப்பிய அரசியல்வாதியால் ... இந்த கட்டிப்புடி விளையாட்டில் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு எந்த நன்மையும் விளையாது.
   

 உங்களுடைய தற்போதைய ஹோம் செகிரேட்டரி பிரீத்தி பட்டேல் 
இப்படி எமது இளையவர்கள் ஆக கூடாது என்பதுக்கு நல்ல உதாரணம் 
ஆளுமை கிடைத்தால் போதும் அதுதான் முன்னேற்றம் என்று சிலர் எண்ணலாம் 
இவரை இடம் மாற்றி வலதுசாரி அரசியலில் புகுத்தியதே இஸ்திரேல் மொஸாட்தான் இவரால் 
இந்தியர்களுக்கும் நன்மை இல்லை ....... பிரிடிஷ் மக்களுக்கும் நன்மை இல்லை. 
இவர்களின் ஆட்ச்சி காலம் முடியும்போது சாதாரண மனித அறிவு உள்ளவர்களால் வெறுக்க படுவார்கள். 

இவர்களுக்கு ஓரளவு அறிவு இருக்கிறது ஆனால் இங்கிருந்து வந்தோம் .. என்பதோ 
அதனால் எங்கு போகவேண்டும் என்றோ இலக்கு ஏதும் இல்லை. அதிகாரம் நோக்கி நகர்ந்தால் போதும் 
என்ற எண்ணம் மட்டுமே இருக்கும் ...அது கிடைக்கும்போது மக்களால் அறியப்படுவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நான் அப்படி எழுதியதில் ஏதும் பிழை இருப்பதாக தெரியவில்லை. 
என்னைப்பொறுத்தவரையில் எங்களது இரண்டாம் தலைமுறை பிள்ளைகள், அரசியலில் ஈடுபடும் போது, அவர்கள் தங்களை தெரிவு செய்த மக்களுக்கு, தங்களுடைய நாட்டுக்கு சேவை செய்தாலும் எங்கள் மக்களை மறக்ககூடாது, விஜய் தணிகாசலம் அளவு முடியாவிட்டாலும் கூட எங்களது மக்களுக்கு நடந்தவற்றை மறக்காமல் அவர்கள் தங்களான முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என எதிர்பார்ப்பது இயற்கைதானே!!
 

பிரபா நான் உங்கள் வாழ்த்தில் பிழை கூறவில்லை... உங்கள் நேர்மையான வாழ்த்தையும் கொழும்பானின் எதிர்மறை கருத்தையும் பதிந்தேன். என்னுடைய வாழ்த்தும் உங்களைப்போலவே.👍

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maruthankerny said:

 

 

 

அதுக்கு 5 பேர் பச்சை குத்தி வரவேற்று இருக்கிறார்கள் ஒருவர் சுவிஅவர்கள் அவருக்கு அந்த கருத்து 
பிடித்து இருக்கிறது என்று எண்ணுகிறேன்.

மற்ற நாலு போரையும் நினைத்து உருண்டு உருண்டு சிரிக்கிறேன்

இதில் நானும் பச்சை குத்தி உள்ளேன்.ஆனால்சுவியரை கான வில்லை.நான் குழு சார்ந்தவன் என்றால் ரொம்ப சொக் ஆகிடுவன்.😂

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, சுவைப்பிரியன் said:

இதில் நானும் பச்சை குத்தி உள்ளேன்.ஆனால்சுவியரை கான வில்லை.நான் குழு சார்ந்தவன் என்றால் ரொம்ப சொக் ஆகிடுவன்.😂

சுவையை தான் சுவி என்று எழுதிவிட்டேன்

(உங்களை போய் அப்படி எண்ணுவேனா? தவிர அந்த கருத்துதான் உண்மையான கருத்து அதைத்தான் நானும் எழுதிவருகிறேன் சீமானும் பேசிவருகிறார். அதில் புடுங்குபடுபவர்கள்தான் பல்டி அடிக்கிறார்கள்) 

 

நான் ஒருவரை பற்றி எழுந்தமானாக எண்ணுவதில்லை 
அவர்களை பல காலம் அவதானித்து அவர்கள் கருத்துக்களை வாசித்தாலும் ... 
தாம் யார் என்று அவர்கள் வாக்குமூலம் தந்த பின்புதான் ஏற்றுக்கொள்ளுவேன் தங்களை அறியாமலே அவர்கள் வாக்குமூலம் தரும்போது வாங்கி வைத்துக்கொள்வேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

அதை தான் தமிழ் நாட்டு மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் தீர்மானித்தார்கள். இனி அடுத்த தேர்தலில் மீண்டும் தீர்மானிப்பார்கள். 

தமிழநாட்டு மக்கள் தீர்மானிக்கவில்லை...

தமிழகத்தை சுரண்டி தமிழர்களை தேர்தலின் போது பிச்சை எடுக்க வைத்து தமிழர்களை அறியாமையில் மிதக்கவிட்டு தீர்மானிக்க வைத்துள்ளனர்... தமிழகத்தில் சன நாயகமா இருக்கிறது...

ஆங்கலேயனுக்கு பிறகு திராவிடம் தமிழ்நாட்டை ஆக்கிரமித்து கொண்டது... தமிழ்நாட்டிற்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்ல... திராவிடத்தின் பண பலத்தில் அடிமைபட்டு கிடக்கிறோம்... எங்களுக்கான சுயத்தை கொஞ்சம் கொஞ்சமாக திராவிடத்திடம் இழந்து கொண்டிருக்கிறோம்...

இதே நிலை தொடர்ந்தால் ராமசாமியும் கருணநிதியும் மட்டுமே (மட்டுமே) தமிழ்நாட்டின் அடையாளமாக இருப்பார்கள்... நாங்கள் தமிழ்நாட்டில் அகதிகளாக்கபடுவோம்...

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

அதை தான் தமிழ் நாட்டு மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் தீர்மானித்தார்கள். இனி அடுத்த தேர்தலில் மீண்டும் தீர்மானிப்பார்கள். 

உண்மை தான்.

தமிழ் நாட்டு மக்கள் தீர்மானித்தார்கள் ஆனால் வெளிநாடுகளில் உள்ள ஈழ தமிழர்களுக்கு பலத்த அதிர்ச்சி தானே. ஸ்டாலினை எதிர்த்து சீமான் போட்டியிட்டால் ஸ்டாலினுக்கு கட்டுகாசும் கிடையாது என்றே நம்பியிருந்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, மியாவ் said:

இதே நிலை தொடர்ந்தால் ராமசாமியும் கருணநிதியும் மட்டுமே (மட்டுமே) தமிழ்நாட்டின் அடையாளமாக இருப்பார்கள்... நாங்கள் தமிழ்நாட்டில் அகதிகளாக்கபடுவோம்...

நீங்கள் இந்திய தமிழரா. நான் உங்கள் பேச்சு வழக்கில் இருந்து இலங்கை தமிழர் என நினைத்தேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, tulpen said:

அதை தான் தமிழ் நாட்டு மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் தீர்மானித்தார்கள். இனி அடுத்த தேர்தலில் மீண்டும் தீர்மானிப்பார்கள். 

சார்! ஏனைய கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக ஊடகங்களில் பகிரங்கமாக செய்திகள் வந்தது. அதை மறுத்தோ அல்லது எதிர்ப்பு அறிக்கைகள் விடுத்தோ எந்த கட்சியும் மறுப்பறிக்கைகள் விடவில்லை.
இப்படியிருக்கும் போது  தங்களின் புளகாங்கிதம் ஒருவித வக்கிரமமாகவே தெரிகின்றது.
கோழி குருடாய் இருந்தாலும் நமக்கு குழம்பு முக்கியம் பீலிங் ....

வாக்குக்கு பணம் கொடுக்கப்படவில்லை என உங்களால் நிரூபிக்க முடியுமா?
 

11 hours ago, மியாவ் said:

தமிழநாட்டு மக்கள் தீர்மானிக்கவில்லை...

தமிழகத்தை சுரண்டி தமிழர்களை தேர்தலின் போது பிச்சை எடுக்க வைத்து தமிழர்களை அறியாமையில் மிதக்கவிட்டு தீர்மானிக்க வைத்துள்ளனர்... தமிழகத்தில் சன நாயகமா இருக்கிறது...

ஆங்கலேயனுக்கு பிறகு திராவிடம் தமிழ்நாட்டை ஆக்கிரமித்து கொண்டது... தமிழ்நாட்டிற்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்ல... திராவிடத்தின் பண பலத்தில் அடிமைபட்டு கிடக்கிறோம்... எங்களுக்கான சுயத்தை கொஞ்சம் கொஞ்சமாக திராவிடத்திடம் இழந்து கொண்டிருக்கிறோம்...

இதே நிலை தொடர்ந்தால் ராமசாமியும் கருணநிதியும் மட்டுமே (மட்டுமே) தமிழ்நாட்டின் அடையாளமாக இருப்பார்கள்... நாங்கள் தமிழ்நாட்டில் அகதிகளாக்கபடுவோம்...

ஓ அப்படியா!  அப்ப ஒண்டும் செய்யேலாது தான். அது தான் பிரான்ஸில் தமிழ் பிள்ளைகள் அரசியலில் ஈடுபட்ட தலையங்கத்தின் கீழ்  வந்து முறையிடுறீங்களோ. அங்க கஷரம் எண்டால்  பேசாமல்  புலத்திற்கே புகலிடம் தேடி வரலாமே. வந்தால் இங்கே பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டு சொகுசாக இருந்து அதி தீவிர தமிழ் தேசியம் பேசலாம் தானே. சும்மா ஒரு ஐடியா தான்.  

(அட நான் ஏற்கனவே அதை தானே செய்து கொண்டிருக்கிறேன் இவர் என்ன ஐடியா கொடுக்க என்று என்னில் பாய்ந்து விழாதீங்க😂

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

நீங்கள் இந்திய தமிழரா. நான் உங்கள் பேச்சு வழக்கில் இருந்து இலங்கை தமிழர் என நினைத்தேன்.

ப்ரொஃபைலில் உடனடியாக இடத்தை அப்டேட் செய்து விடுகிறேன்...

எனது தமிழ் அவ்வளவு அழகாகவா இருக்கிறது... மகிழ்ச்சி... 😀

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, tulpen said:

ஓ அப்படியா!  அப்ப ஒண்டும் செய்யேலாது தான். அது தான் பிரான்ஸில் தமிழ் பிள்ளைகள் அரசியலில் ஈடுபட்ட தலையங்கத்தின் கீழ்  வந்து முறையிடுறீங்களோ. அங்க கஷரம் எண்டால்  பேசாமல்  புலத்திற்கே புகலிடம் தேடி வரலாமே. வந்தால் இங்கே பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டு சொகுசாக இருந்து அதி தீவிர தமிழ் தேசியம் பேசலாம் தானே. சும்மா ஒரு ஐடியா தான்.  

(அட நான் ஏற்கனவே அதை தானே செய்து கொண்டிருக்கிறேன் இவர் என்ன ஐடியா கொடுக்க என்று என்னில் பாய்ந்து விழாதீங்க😂

ஒவ்வொரு கருத்திற்கு எதிரான உங்கள் கருத்து சுத்தமாக சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது...

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மியாவ் said:

ப்ரொஃபைலில் உடனடியாக இடத்தை அப்டேட் செய்து விடுகிறேன்...

எனது தமிழ் அவ்வளவு அழகாகவா இருக்கிறது... மகிழ்ச்சி... 😀

நிச்சயமாக. உங்களை போல் ஈழத்தமிழர்கள் கூட இப்போ எழுதுவதில்லை. அந்தளவுக்கு எங்களின் தமிழ் மேல் சினிமா பாதிப்பு.

ஆனால் உங்கள் எழுத்தில் தமிழகவாடையே இல்லை. 

அச்சு அசல் ஈழத்தமிழ் எழுத்து. 

பாராட்டுகள்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, மியாவ் said:

தமிழநாட்டு மக்கள் தீர்மானிக்கவில்லை...

தமிழகத்தை சுரண்டி தமிழர்களை தேர்தலின் போது பிச்சை எடுக்க வைத்து தமிழர்களை அறியாமையில் மிதக்கவிட்டு தீர்மானிக்க வைத்துள்ளனர்... தமிழகத்தில் சன நாயகமா இருக்கிறது...

ஆங்கலேயனுக்கு பிறகு திராவிடம் தமிழ்நாட்டை ஆக்கிரமித்து கொண்டது... தமிழ்நாட்டிற்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்ல... திராவிடத்தின் பண பலத்தில் அடிமைபட்டு கிடக்கிறோம்... எங்களுக்கான சுயத்தை கொஞ்சம் கொஞ்சமாக திராவிடத்திடம் இழந்து கொண்டிருக்கிறோம்...

இதே நிலை தொடர்ந்தால் ராமசாமியும் கருணநிதியும் மட்டுமே (மட்டுமே) தமிழ்நாட்டின் அடையாளமாக இருப்பார்கள்... நாங்கள் தமிழ்நாட்டில் அகதிகளாக்கபடுவோம்...

எம்.ஜி.ஆர்.    யை. மீண்டும்...மீண்டும்.  ஆட்சியமைக்க தெரிவு செய்த  ....உலக நாடுகளிலெல்லாம்.  வேலை விசாவைப்பெற்று.  பெரிய பதவிகளில். இருக்கின்ற  தமிழகத்தமிழரைப். பார்த்து.  ...நான். தமிழகத் தமிழன். என்று. சொல்லிக்கொண்டு தமிழக்த்தமிழரே.. உங்களைத்.  சுரண்ட முடியும்....உங்களைப்பிச்சையெடுக்க  வைக்கமுடியம்....உங்களை. அறியாமையில். மிதக்க வைக்க முடியம்...என்ற. உங்கள. கருத்தை. நான். எற்றுக்கொள்ளவில்லை ..எனெனில்.  இந்தக்கருத்து. சீமான். வெல்லுதல்....தோற்றல்.  என்பதை. அடிப்படையாக. வைத்து. எழுதப்பட்டது. இந்த 21 ஆம் நூற்றுயாண்டில்.  92%தமிழ்நாட்டு. தமிழ்மக்கள் பற்றி. இப்படி எழுதுவது. கவலையளிக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மியாவ் said:

ஒவ்வொரு கருத்திற்கு எதிரான உங்கள் கருத்து சுத்தமாக சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது...

அதுதான் அவரின் ஸ்டைல். விளங்கும் ஆனால் விளங்காது. பதில் மாதிரி தெரியும் ஆனால் பதிலில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Kandiah57 said:

எம்.ஜி.ஆர்.    யை. மீண்டும்...மீண்டும்.  ஆட்சியமைக்க தெரிவு செய்த  ....உலக நாடுகளிலெல்லாம்.  வேலை விசாவைப்பெற்று.  பெரிய பதவிகளில். இருக்கின்ற  தமிழகத்தமிழரைப். பார்த்து.  ...நான். தமிழகத் தமிழன். என்று. சொல்லிக்கொண்டு தமிழக்த்தமிழரே.. உங்களைத்.  சுரண்ட முடியும்....உங்களைப்பிச்சையெடுக்க  வைக்கமுடியம்....உங்களை. அறியாமையில். மிதக்க வைக்க முடியம்...என்ற. உங்கள. கருத்தை. நான். எற்றுக்கொள்ளவில்லை ..எனெனில்.  இந்தக்கருத்து. சீமான். வெல்லுதல்....தோற்றல்.  என்பதை. அடிப்படையாக. வைத்து. எழுதப்பட்டது. இந்த 21 ஆம் நூற்றுயாண்டில்.  92%தமிழ்நாட்டு. தமிழ்மக்கள் பற்றி. இப்படி எழுதுவது. கவலையளிக்கிறது. 

தமிழ்நாட்டில் வாக்கு செலுத்தும் உரிமை உள்ள நூறு சதவிகிக மக்களில் 65 முதல் 70% மக்கள் மட்டுமே வாக்கு செலுத்துகின்றனர்... ஓரளவு வாக்குரிமையை புரிந்தவர்களிடம் பாஜக உள்ளே புகுந்து இந்துத்துவத்தை புகுத்திவிடும் என்ற ஆயுதத்தை பயன்படுத்துகிறது திராவிடம்... இது வாக்கு செலுத்துபவர்களில் குறைந்த அளவே உள்ளது... நடுத்தர வர்க்கத்தினரும் வறுமை கோட்டுக்கு கீழுள்ள மக்களிடம் பணத்தை வைத்து விளையாடுகிறது திராவிடம்... இதை தான் மக்களின் அறியாமை என்றேன்...

டல்பன் மக்கள் தான் தேர்வு செய்து விட்டனரே என்ற கருத்திற்கு அடிப்படையாக வைத்து எழுதிய கருத்தாகும்...

நான் சீமானை தவிர்த்து யாரை அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டில் இயங்க வேண்டும் என்பதற்கு சம்பந்தமே இல்லாமல் பதிலளித்தார்... சரி அதற்கு பதிலளிப்போம் என்றால் மறுபடியும் சம்பந்தமே இல்லாமல் வேறு பதிலளிக்கிறார்...

இப்பொழுது விவாதம் எதை நோக்கி போகிறது என்றே எனக்கு தெரியவில்லை...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.