Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னை கொல்ல வந்த தமிழனுக்கு தோசை வாங்கிக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைப்பேன்-சரத் பொன்சேகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

9a954504-sarath-fonseka.jpg

என்னை கொலை செய்ய இராணுவ தலைமையகத்திற்கு தற்கொலை குண்டுதாரியை அழைத்து வந்த மொரிஷ் என்பவரை விடுவித்து இந்த நடவடிக்கையை அரசு ஆரம்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அப்படி விடுவிக்கப்பட்டால் வெலிக்கடை சிறைச்சாலையின் வாசலிற்கே சென்று அவரை வரவேற்க தயாராக இருக்கிறேன். அவரை ஆனந்தபவனிற்கு அழைத்து சென்று இரண்டு தோசையும் வாங்கிக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைப்பேன் என தெரிவித்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மேலும் நேற்று திங்கடகிழமை கொழும்பில் செய்தியாளர்கள் மத்தியில் பேசியபோது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான தமிழ் இளைஞர்களை விடுவிப்பது தவறான செயல் அல்ல.
மேலும் கைது செய்யப்பட்ட பலர் நீண்டகாலமாக சிறைக்குள் கழித்து விட்டனர். தமது இளமைக்காலத்தை தொலைத்து விட்டனர். வெளியில் இருந்திருந்தால் அவர்களிற்கு நீண்டகாலத்தின் முன்னரே திருமணமாகி பிள்ளைகள் கூட இருந்திருப்பார்கள்.

அத்தோடு ஆயுள்தண்டனை கைதிகளிற்கு 15 வருடங்களில் விடுதலை கிடைக்கும்.இவர்கள் அதைவிட அதிக காலம் சிறையில் இருந்து விட்டனர். ஆகவே இனியும் வைராக்கியத்துடன் இருக்க வேண்டியதில்லை. அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். புனர்வாழ்வு தேவைப்படுபவர்களிற்கு ஒரு வருடம் புனர்வாழ்வளித்து விடுவிக்கலாம்.

மேலும் என்னை கொலை செய்ய இராணுவ தலைமையகத்திற்கு தற்கொலை குண்டுதாரியை அழைத்து வந்த மொரிஷ் என்பவரை விடுவித்து இந்த நடவடிக்கையை அரசு ஆரம்பிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். அப்படி விடுவிக்கப்பட்டால் வெலிக்கடை சிறைச்சாலையின் வாசலிற்கே சென்று அவரை வரவேற்க தயாராக இருக்கிறேன். அவரை ஆனந்தபவனிற்கு அழைத்து சென்று இரண்டு தோசையும் வாங்கிக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைப்பேன் என்றார்.

https://samugammedia.com/i-will-buy-dosa-for-the-tamil-who-came-to-kill-me-and-send-it-home/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=i-will-buy-dosa-for-the-tamil-who-came-to-kill-me-and-send-it-home

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்த பவனில் தோசை சாப்பிட்ட அனுபவம் பேசுது.

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்குள்ளேயும் ஒரு கிரந்தம்....

ஏன் போடிமெனிக்கே கடைக்கு கூட்டிக்கொண்டு போய், கிரிபத்தும், கட்ட சம்பலும் வாங்கி கொடுக்க கூடாதோ?🤔

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் மீண்டும் தனது பல்லை தேடி இலங்கையில் பிறந்தார் ..................

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Nathamuni said:

அதுக்குள்ளேயும் ஒரு கிரந்தம்....

ஏன் போடிமெனிக்கே கடைக்கு கூட்டிக்கொண்டு போய், கிரிபத்தும், கட்ட சம்பலும் வாங்கி கொடுக்க கூடாதோ?🤔

பொடிமெனிக்கேயை கண்டதனால் ஆனந்தபவனின் இரெண்டு தோசை வியாபாரத்துக்கு ஆப்பு வைக்கிறீர்களே? அடுக்குமா?

 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Nathamuni said:

அதுக்குள்ளேயும் ஒரு கிரந்தம்....

ஏன் போடிமெனிக்கே கடைக்கு கூட்டிக்கொண்டு போய், கிரிபத்தும், கட்ட சம்பலும் வாங்கி கொடுக்க கூடாதோ?🤔

கொடுக்கலாந்தான்... மொரிஷுக்கு பிடிக்குமோ என்னவோ? தனது விருப்பத்தை திணிக்காமல், மொரிஷின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க எண்ணியிருப்பார். சிறைக்கூடம் கற்றுக்கொடுத்திருக்கும். "பட்டால் அறிவான் சண்டாளன், மழை பெய்தால் அறிவான் வேளாளன்." 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Nathamuni said:

அதுக்குள்ளேயும் ஒரு கிரந்தம்....

ஏன் போடிமெனிக்கே கடைக்கு கூட்டிக்கொண்டு போய், கிரிபத்தும், கட்ட சம்பலும் வாங்கி கொடுக்க கூடாதோ?🤔

இப்படி சொல்வதால் நீங்கள் ஏனைய விடுதலைப்புலிகளின் விடுதலைக்கு ஆப்பு வைக்க போறீங்கள்...அவர் தோசை மீது கொண்ட காதலால் அப்படி சொன்னவர்....🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

இப்படி சொல்வதால் நீங்கள் ஏனைய விடுதலைப்புலிகளின் விடுதலைக்கு ஆப்பு வைக்க போறீங்கள்...அவர் தோசை மீது கொண்ட காதலால் அப்படி சொன்னவர்....🤣

அந்தாள் வேற, பகிடி விடுகுது!!

இவர் தோசை வாங்கி கொடுப்பேன் என்றதால், கோத்தா  விடுவார் என்று நீங்கள் நினைத்தால்.... சொல்வதற்கு என்ன இருக்குது புத்தன்? 

8 hours ago, satan said:

கொடுக்கலாந்தான்... மொரிஷுக்கு பிடிக்குமோ என்னவோ? தனது விருப்பத்தை திணிக்காமல், மொரிஷின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க எண்ணியிருப்பார். சிறைக்கூடம் கற்றுக்கொடுத்திருக்கும். "பட்டால் அறிவான் சண்டாளன், மழை பெய்தால் அறிவான் வேளாளன்." 

சிறையில் அவரிடம் போய், அய்யா... விபரம் புரியாமல், விடுதலை போராட்டம், தமிழர் உரிமை என்று 'முட்டாள் தனமாக' இறங்கி.... உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் அளவுக்கு போய் விட்டேன். மன்னித்து விடுங்கள் என்று சொல்லி இருப்பார்.

தனிப்பட்ட முறையில் புரிகிறது.... ஆனாலும் வேறு விதத்தில் யோசிக்கும் போது.... வேறு புரிதல்கள் வருகின்றன.

9 hours ago, கற்பகதரு said:

பொடிமெனிக்கேயை கண்டதனால் ஆனந்தபவனின் இரெண்டு தோசை வியாபாரத்துக்கு ஆப்பு வைக்கிறீர்களே? அடுக்குமா?

 

ஆனந்தபவன் பெரிய கம்பெனி. போடிமெனிக்கே... குடிசை.... பாவம், பிழைத்துப்போகட்டும் 😰

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர் ஏன் தோசையிலை நிக்கிறார்? 
புட்டு  இடியப்பம் பாணும் சம்பலும் ஞாபகத்துக்கு வரேல்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்

அவரும் அவர் போல சிறையில் வாடும் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை அடைந்தால் சரி.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

இவர் ஏன் தோசையிலை நிக்கிறார்? 
புட்டு  இடியப்பம் பாணும் சம்பலும் ஞாபகத்துக்கு வரேல்லையோ?

இது புட்டு கதை போல் ரீல்  அடிக்கும்  .

அதுசரி வட்டமாய் தோசை போடுவதில் இன்னும் நான்  பாஸ் ஆகவில்லை யாருக்கும் அந்த ரகசியம் தெரியுமா ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

அதுசரி வட்டமாய் தோசை போடுவதில் இன்னும் நான்  பாஸ் ஆகவில்லை யாருக்கும் அந்த ரகசியம் தெரியுமா ?

எங்கண்ட தல, கோசன் சமையல் கில்லாடி... அவரிட்ட கேட்டுப்பாருங்கோ, வட்டம் என்ன, முக்கோணம் எல்லாம் சொல்லி தருவார். 😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

இது புட்டு கதை போல் ரீல்  அடிக்கும்  .

அதுசரி வட்டமாய் தோசை போடுவதில் இன்னும் நான்  பாஸ் ஆகவில்லை யாருக்கும் அந்த ரகசியம் தெரியுமா ?

வட்டமாய் தோசை சுடுவது கொஞ்சம் கஷ்டம்தான் ஆனால் சுடட தோசையை வட்டமாக்குவது சுலபம்.... அளவான அரிதட்டும் ஒரு கத்தரிக்கோலும் போதும்.......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

தோசையோ, இட்லியோ, வட்டமோ, முக்கோணமோ,

எமக்காக போரடப்போன மனிதன். இனியாவது வெளியே வந்து பிள்ளையுடன் வாழட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

தோசையோ, இட்லியோ, வட்டமோ, முக்கோணமோ,

எமக்காக போரடப்போன மனிதன். இனியாவது வெளியே வந்து பிள்ளையுடன் வாழட்டும்.

ஆள் வரும், கவலைப்படாதீங்கோ.... எல்லாம் பீகிங் வெட்டி ஆடும்.

பகிடிக்கு சொல்லவில்லை.... சிங்களத்தின் பலவீனங்கள் குறித்து, சீனா சில ராஜதந்திர வேலைகள் செய்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

தோசையோ, இட்லியோ, வட்டமோ, முக்கோணமோ,

எமக்காக போரடப்போன மனிதன். இனியாவது வெளியே வந்து பிள்ளையுடன் வாழட்டும்.

சுன்டெலிக்கு சீவன் போகுதாம் குழந்தைப் பிள்ளைக்கு விழையாட்டாம்.கதை தான் இங்கை ஓடுது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

சுன்டெலிக்கு சீவன் போகுதாம் குழந்தைப் பிள்ளைக்கு விழையாட்டாம்.கதை தான் இங்கை ஓடுது.

என்ன சுவை பழமொழியையும் மாத்திப்போட்டியள் போல கிடக்கு? பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு உயிர் போகுது என்று தான் சொல்வார்கள். ஒருவேளை உங்கள் ஊரில் இப்படி வழக்கமாக இருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.