Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்லே குணவங்ச தேரர், தமிழ் மக்களுக்கு பகிரங்க அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எல்லே குணவங்ச தேரர், தமிழ் மக்களுக்கு பகிரங்க அழைப்பு

 

elle எல்லே குணவங்ச தேரர், தமிழ் மக்களுக்கு பகிரங்க அழைப்பு

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை உட்பட பல பிரதேசங்களிலுள்ள பெறுமதி மிக்க காணிகளை வெளி நாடுகளுக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின்  முயற்சிகளை முறியடிக்க தம்முடன் இணைந்து  செயற்படுமாறு நாட்டைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவரான எல்லே குணவங்ச தேரர், தமிழ் மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்தப் பகிரங்க அழைப்பை விடுத்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

“இன ரீதியாக நாங்கள் பிரிந்திருந்தால் ஒருபோதும் எமக்கு சுதந்திரம் கிட்டாது. நாங்கள் பிரிந்திருக்கின்ற வரை சர்வதேச சக்திகள் எமது நாட்டுக்குள் பிரவேசித்து, நாட்டின் வளங்களைச் சூறையாடுவதற்கு சந்தர்ப்பமும் உருவாகும்.

மேற்குலக நாடுகளும், சக்திகளும் இலங்கையிலுள்ள எரிபொருள் வளங்களை கொள்ளையிடக் கங்கணம் காட்டித் திரிகின்றன. பொஸ்பேட் உள்நாட்டு உர உற்பத்தியாலையை வைத்துக் கொண்டு உள்நாட்டில் உரப் பற்றாக் குறையைச் சொல்கின்றனர்.

இதனையிட்டுக் கவலையடைகிறேன். இப்போதாவது இந்த நாட்டை எமது கைகளுக்குப் பெற்றுக் கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளுக்கு நாட்டை ஒப்படைத்து, அழிவுகளே இன்று வரை எஞ்சியிருக்கின்றன.

அவற்றுக்கு தொடர்ந்தும் இடமளிக்கக் கூடாது. சுமார் 20 அரச நிறுவனங்களை அரசாங்கம் விற்பனை செய்யவுள்ளது. யாழ்ப்பாணம் – காங்கேசன் துறையில் காணிகளை கொஞ்சம் கொஞ்சமாக வெளி நாடுகளுக்கு விற்பனை செய்யப் போகின்றார்கள். அதனால் தமிழ் மக்களும் எம்முடன் இப்போராட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கின்றேன்.

அண்மையில் கூட தமிழ் மக்கள் சிலர் என்னைச் சந்தித்ததோடு, இலங்கையிலுள்ள மலே பிரஜைகளும் என்னை சந்தித்திருக்கின்றனர். முஸ்லிம் மக்களும் எம்முடன் இணைய வேண்டும்.

அரசியல்வாதிகள் மற்றும் இனவாதிகளுக்கு அப்பாற் சென்று மூன்றாவது தரப்பு சக்தி யொன்றை உருவாக்கி அதனூடாக விடுதலைப் போராட்டத்தை நாங்கள் ஆரம்பிக்க வேண்டும். அரசாங்கம் தற்போது செயற்படும் விதத்தை நான் அனுமதிக்க மாட்டேன்” என்றார்.

 

https://www.ilakku.org/elle-gunawansa-thera-public-call-tamil-people/

 

 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

இதனையிட்டுக் கவலையடைகிறேன். இப்போதாவது இந்த நாட்டை எமது கைகளுக்குப் பெற்றுக் கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளுக்கு நாட்டை ஒப்படைத்து, அழிவுகளே இன்று வரை எஞ்சியிருக்கின்றன.

அவற்றுக்கு தொடர்ந்தும் இடமளிக்கக் கூடாது. சுமார் 20 அரச நிறுவனங்களை அரசாங்கம் விற்பனை செய்யவுள்ளது. யாழ்ப்பாணம் – காங்கேசன் துறையில் காணிகளை கொஞ்சம் கொஞ்சமாக வெளி நாடுகளுக்கு விற்பனை செய்யப் போகின்றார்கள். அதனால் தமிழ் மக்களும் எம்முடன் இப்போராட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கின்றேன்.

போராட்டம் தானே ஆடினால் போச்சு ....
மிஸ்டர் எல்லே தமிழர்கள்  போராடி காணியை மீட்டு உங்களிடம் தந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் புத்தரை குந்தவைத்து சிங்களவர்களை கொண்டுவந்து குடியேற்றுவீர்கள், அதற்கு வெளிநாட்டுக்காரர்களிடமே இருந்துவிட்டு போகட்டுமே, அவர்களது தொழிற்பேட்டைகளை சுற்றி சிறு வணிகங்களை உருவாக்கியாவது எம்மக்கள் பிழைத்துக்கொள்வார்கள், மொத்தத்தில் சீனாக்காரன் வட கிழக்கிற்குள் வருவது ஒருவகையில் தமிழர்களுக்கு மிகவும் நல்லது

 

1 hour ago, உடையார் said:

அண்மையில் கூட தமிழ் மக்கள் சிலர் என்னைச் சந்தித்ததோடு, இலங்கையிலுள்ள மலே பிரஜைகளும் என்னை சந்தித்திருக்கின்றனர். முஸ்லிம் மக்களும் எம்முடன் இணைய வேண்டும்.

இந்த தமிழ்மக்கள் கூத்தமைப்பு தானே, எசமானருக்கு அங்கே  வாலில் நெருப்பு பற்றியதற்கு இவர்கள் இங்கே கூடி ஒப்பாரி வைத்துக்கொண்டு அலறுகிறார்கள்   

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

தமிழ் மக்களும் எம்முடன் இப்போராட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கின்றேன்.

நாங்கள் எதிர்பார்த்ததுதான், நீங்கள் எங்களுக்கு அழைப்பு விடுவீர்கள் என்று. ஆனாலும் போராட்டத்தில் இழப்பதும் நாங்கள்தான், போராட்டம் முடிந்தபின் அழிக்கப்படுவதும் நாங்கள்தான். உங்களுக்கு ஏலவே உதவியவர்கள், உதவுகிறவர்களை தாராளமாக உங்களுடன் இணைத்துக்கொள்ளலாம்.  

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்கு… செய்யிற அநியாயம் எல்லாம் செய்து போட்டு…

ஒரு கூச்சமும் இல்லாமல், தமிழ் மக்களை தம்முடன் போராட அழைக்க, இவருக்கு வெட்கமாக இல்லையா.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் வெட்கத்தைவிட்டு, கூச்ச நாச்சமில்லாமல் அவர்கள்  கேட்காமலேயே  உதவுவதாலேயே அவர்களும் அழைக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

நாங்கள் வெட்கத்தைவிட்டு, கூச்ச நாச்சமில்லாமல் அவர்கள்  கேட்காமலேயே  உதவுவதாலேயே அவர்களும் அழைக்கிறார்கள். 

சாத்தான்… நாங்கள் என்று பன்மையில் சொல்லப் படாது. சிலதுகள் என்று.. அஃறிணையில் சொல்ல வேணும். 😁

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு  தெரிகிறது

இந்த மண்ணை தமிழர்களே  அதிகம் நேசிக்கின்றனர்  என்பதும்

எந்தநிலை  வந்தபோதும்

மண்ணை விற்று ஈழத்தை  அடைய அவர்கள் விரும்பியிருக்கவில்லை  என்பதும்...

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் வலு பிஸி.... பிறகு வாருங்கோ, பார்ப்போம்... 🤗

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப புலி வேணும் போலை இருக்குமே உங்களுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ இருக்கும் நம்ம சுசும்கி  .சங்கின்தன் (சுமத்திரன் சம்பந்தன்   அவர்களின் சைனீஸ்    பெயர்தான்   ஒரு ஆர்வ கோளாறு )அவர்களை இப்படியான விடயங்களுக்கு கதைக்க விடுங்க காணி வாங்கவந்தவன் துண்டைக்கானோம் துணியை காணோம் என்று தலைதெறிக்க ஓடிவிடுவான் ஏற்கனவே வடகிழக்கு மக்களுக்கு விடிவு தருகிரம்  என்று பொய் சொல்லி பதவிக்கு வந்து தமிழர்களை ஏமாற்றிய அனுபவம் உண்டு .

 

 

முடிவு வரும் என்பது தெரியும் இவ்வளவு வேகமாய் வரும் என்று யாரும் நினைக்கவில்லை மே 18 பால்சோறு திண்டவங்களை  தேடுகிறோம் மிஸ்ட்டர் எல்லே குணவங்ச.🤣

சிரிப்புக்குறி போட்டதுக்கு சோதனையில் பாஸ் பண்ணியவர்கள் வந்து நக்கலடிக்கபோகினம் .😭

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

நாங்கள் வலு பிஸி.... பிறகு வாருங்கோ, பார்ப்போம்... 🤗

உண்மைதான் நாங்கள ரொம்ப பிசியோ பிசி.பிறகும் வர வேண்டாம்.😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

உண்மைதான் நாங்கள ரொம்ப பிசியோ பிசி.பிறகும் வர வேண்டாம்.😂

லார்டு டாக்லஸ்சே வரமாட்டார்.

அங்கஜனை கேட்டுப்பாருங்கோ. கிழக்கு பக்கமா கருணா அம்மான் இடமும் கேளுங்கோ. 😜

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பெருமாள் said:

May be an image of one or more people and people standing

May be an image of one or more people, people standing and grass

May be an image of 3 people, people standing and outdoors

இதாரப்பா இது நடு ரோட்டில மலையாள பட போஸ்டர் மாரி 🤣

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு உரிமை தேவையில்லை அபிவிருத்தி தான் தேவை என்று சொல்ல வைச்ச மொட்டைகளிடம்.. தமிழர்களுக்கு சீனாவின் அபிவிருத்தி தான் தேவை.. சிங்கள தேசம் பற்றி கவலை இல்லை என்ற செய்தியை பதிலாக சொல்லி அனுப்புங்கள். சீனாவை தமிழர் தேசத்தை அபிவிருத்தி செய்ய அணுகுவது மட்டுமன்றி.. ஹிந்தியாவை சிதறடிக்கவும் செய்தால் அதையும் வரவேற்க்கலாம்.

சிங்களவனிடம் வெட்டிக்கு.. அடிமையாய் இருப்பதிலும்.. சீனனிடம்.. அபிவிருத்திக்காய் சலாம் போடலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

சாத்தான்… நாங்கள் என்று பன்மையில் சொல்லப் படாது. சிலதுகள் என்று.. அஃறிணையில் சொல்ல வேணும். 😁

அதுவும் சிங்கள இனவாதிகள் அரசியல்வாதிகள் அனைவருக்கும் சிம்ம சொற்பனமாக விளங்கிய ஒர் போராட்ட காலத்தில வாழந்த நாங்கள் (புலம் பெயர்ந்து இருந்தாலும்)

  • கருத்துக்கள உறவுகள்
On 9/7/2021 at 23:09, தமிழ் சிறி said:

சாத்தான்… நாங்கள் என்று பன்மையில் சொல்லப் படாது. சிலதுகள் என்று.. அஃறிணையில் சொல்ல வேணும். 😁

சொல்லலாந்தான் ஆனால் இங்கு தடைசெய்யப்பட்டுள்ளது. அத்தோடு அஃறிணையில் அழைத்தால் என்வீட்டு நா.. முறைச்சுப்பாக்குது.

On 10/7/2021 at 05:20, Nathamuni said:

லார்டு டாக்லஸ்சே வரமாட்டார்.

அங்கஜனை கேட்டுப்பாருங்கோ. கிழக்கு பக்கமா கருணா அம்மான் இடமும் கேளுங்கோ. 😜

 ம்.... ம்..... அவர்கள் இவர்களோடு கூட்டுச் சேர்வதாயில்லை, சீனாவிற்கு இவர்களை போட்டுக்கொடுத்து தாம் எப்படி பதவி பெறுவது என்கிற ஆலோசனையில். அழைப்பும் சொரணை கெட்ட அவர்களுக்கில்லை. அவர்கள் அழைப்பது போட்டிபோட்டு தாம் அழித்த வீரனை தேடுகினம். கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்யினம். வேண்டாம் என்று எறிந்த கல்லும் வேளைக்கு உதவும் என்று தேடி வைக்கவில்லையே இவர்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.