Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் மக்களின் உறுதுணையாக இருப்பது இந்தியாவே.: எதிர்காலம் குறித்து சீனா தீர்க்கமான முடிவெடுக்க வேண்டும் - சிறிதரன் எம்.பி அவசர கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் உறுதுணையாக இருப்பது இந்தியாவே.: எதிர்காலம் குறித்து சீனா தீர்க்கமான முடிவெடுக்க வேண்டும் - சிறிதரன் எம்.பி அவசர கடிதம்

(ஆர்.ராம்)
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த தீர்மானத்தினை சீனா எதிர்த்தமை தமிழ் மக்களுக்கு அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் வரலாற்றுக்காலம் முதல் தமிழ் மக்களுக்கு உறுதுணையாக இருப்பது இந்தியாவே ஆகும். 

அவ்வாறான நிலைமைகளை புரிந்துகொண்டு சீனா தனது எதிர்காலச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இலங்கைக்கான சீனத்தூதுவர் குய் ஜென்ஹோங்கிற்கு அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

leeter.jpg

அக்கடிதத்தின் முழுவடிவம் வருமாறு, கிளிநொச்சி மாவட்டத்தின் ஆதிக் கிராமங்களுள் ஒன்றாக, 2700 வருடங்களுக்கு முன்னைய வரலாற்றையும் தொல்பொருள் அடையாளங்களையும்,  பல்லவர்கால பக்தி இலக்கியமரபைக் கொண்ட மண்ணித்தலை சிவன் கோயில் உள்ளிட்ட மரபுரிமைச் சொத்துக்களையும் கொண்டமைந்துள்ள கௌதாரிமுனை எனும் பழம்பெரும் கிராமத்தின் கடற் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தங்கள் நாட்டு கடலட்டைப் பண்ணை எமது மக்களையும், அவர்களது வாழ்வாதாரத்தையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

பரமன்கிராய், கௌதாரிமுனை ஆகிய இரு கிராம அலுவலர் பிரிவுகளையும், வில்லடி மேற்கு, பரமன்கிராய்,  வெட்டுக்காடு, கௌதாரிமுனை, வினாசியோடை, மண்ணித்தலை, கல்முனை ஆகிய உப கிராமங்களையும் உள்ளடக்கியுள்ள கௌதாரிமுனை எனும் பழம்பெரும் கிராமத்தில் தற்போது பொருளாதாரத்தில் நலிவடைந்த நிலையிலுள்ள 320 குடும்பங்களைச் சேர்ந்த 1012 பேர் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவருமே கடற்றொழிலைத் தமது பிரதான சீவனோபாயமாக கொண்டு வாழ்ந்து வரும் நிலையில் தங்கள் நாட்டவர்களால் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டைப் பண்ணை அவர்களது வாழ்வாதாரத்தை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.

பன்னெடுங்காலமாகவே தமிழர்களுக்கும், சீனர்களுக்குமிடையே ஆதிகால பண்பாட்டுத் தொடர்புகள் பேணப்பட்டு வந்ததை வரலாறுகள் எண்பிக்கின்றன. ஆனால் தற்போதைய காலச்சூழலில் சீனர்களால் நடைமுறைப்படுத்தப்படும் செயற்பாடுகள் அனைத்தும், சிங்கள பௌத்த பேரினவாதத்தின் இனவெறிச் செயல்களால் அனைத்து இயலுமைகளும் அடியோடு அழிக்கப்பட்டு காலம்காலமாக தமது இருப்பைத் தக்கவைப்பதற்காக நிலம் வேண்டிப் போராடும் ஈழத் தமிழர்களிடம் எஞ்சியிருந்த கொஞ்சநஞ்ச நிம்மதியையும் இல்லாமற் செய்துள்ளது.

யாழ்குடாநாட்டின் தலைத்தீவுகளான நெடுந்தீவு,  அனலைதீவு, நயினாதீவு ஆகிய மூன்று தீவுகளிலும் சீன நிறுவனமொன்று மீள் புதுப்பிக்கத்தக்க சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளமையும் தங்கள் நாட்டினால் முன்னெடுக்கப்படும் கொழும்பு துறைமுக நகர நிர்மாணம் உள்ளிட்ட செயற்பாடுகளும் எமது மக்களிடையே அச்சநிலையைத் தோற்றுவித்துள்ளது.

கொழும்பு துறைமுக நகர நிர்மாணம் என்பது எமது மக்களின் வாழ்வாதாரத்தை நலிவுறச் செய்வதில் நேரடித் தாங்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், மீள் புதுப்பிக்கத்தக்க சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை அமைத்தல், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் எல்லை முனைப் பகுதியான கௌதாரிமுனையில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டைப் பண்ணை ஆகியவற்றின் தொழிற்பாட்டினால் யாழ்ப்பாண மாவட்டத்தின் தீவகப் பிரதேச மக்களும், குருநகர், பாசையூர் பகுதிகளைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களும் கிளிநொச்சி மாவட்டத்தின், பூநகரி பிரதேசத்தில் முற்றுமுழுதாக பொருண்மியத்தால் நலிவுற்ற குடும்பங்கள்; வாழும் கௌதாரிமுனை, பள்ளிக்குடா, வலைப்பாடு,  கிராஞ்சி, வேரவில், நாச்சிக்குடா, இரணைதீவு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களும் தமது வாழ்வாதார மூலத்தை முழுமையாக இழக்கும் நிலையே ஏற்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த இறுதிப்போரில் சிங்கள பேரினவாதத்தால் கண்மூடித்தனமாக மேற்கொள்ளப்பட்ட தமிழ் இன அழிப்புக்கு நீதி வேண்டி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராகவும், இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் சீனா வாக்களித்திருந்தமை எமது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தமது வாழ்வாதாரத்தையும், இயல்பு வாழ்வையும் பாதிக்கும் வகையில் சீனாவினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் இத்தகைய செயற்பாடுகளும், இந்தியாவுக்கும், குறிப்பாக தமிழ்நாட்டிற்கும் ஈழத்தமிழர்களுக்கும் இடையே பரம்பரை பரம்பரையாக பேணப்பட்டு வரும் தொப்புள்க்கொடி உறவுநிலையில் விரிசலை ஏற்படுத்தும் விதத்திலான தங்களின் நிலைப்பாடுகளும் ஈழத்தமிழ் மக்களிடையே சீனா மீதான வெறுப்புணர்வை அதிகரிப்பதாக அமைந்துள்ளது.

எழுபது ஆண்டுகால இனவிடுதலைப் போரினால் நொந்து போன ஈழத்தமிழர்களுக்கு ஆத்மபலமளிக்கும் செயற்பாடுகளை அவ்வப்போது இந்தியாவே மேற்கொண்டு வந்துள்ளது. ஈழத்தமிழர்கள் மீது சிங்கள பேரினவாதம் இன அழிப்பை மேற்கொள்கின்றது என்பதை முதன்முதலில் 1984களில்  ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முன்வைத்தவர் மறைந்த பாரதப் பிரதமர் அன்னை இந்திராகாந்தி தான்.

1987 களில் கைச்சாத்திடப்பட்டு, இன்றும் நடைமுறையிலிருக்கும் இந்திய, இலங்கை ஒப்பந்தம் ஊடாக போர் நிறுத்தத்தை ஏற்படுத்தவும், தமிழர்களுக்கு அரசியல்த்தீர்வைப் பெற்றுத்தரவும் இந்தியாவே முனைந்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக ஈழத்தமிழர்களுக்கு நிரந்தரமானதும், நியாயமானதும், கௌரவமானதுமான அரசியல் தீர்வைப் பெற்றுத்தர இந்தியாவால் மட்டுமே முடியும் என்பது உலகம் புரிந்த விடயமாகும்.

இத்தகைய அரசியற் சூழலில் வடக்கில் தங்கள் நாட்டினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நோக்கிய நடவடிக்கைகள் இந்தியாவை சீண்டுவதாகவும், ஈழத்தமிழர்களை இந்தியாவிலிருந்து அந்நியப்படுத்து வதாகவும் அமைந்துள்ளது. நான்கு இலட்சத்துக்கு (400,000) மேற்பட்ட பொதுமக்களையும் அறுபதாயிரத்திற்கு (60, 000) மேற்பட்ட மாவீரர்களையும் இந்த மண்ணிலே புதைத்து விட்டு விடுதலை நோக்கிய ஆழ்மன ஏக்கங்களோடு தவித்திருக்கும் எமது மக்களின் உறுதுணையாக இருக்கும் இந்தியாவின் நேரடித் தலையீடின்றி தமிழர்களுக்கான நிரந்தர அரசியல்த் தீர்வு கிட்டப்போவதில்லை என்பதில் ஈழத்தமிழர்கள் தெளிவான புரிதலோடுள்ளார்கள்.

2015 செப்டம்பரில்  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதாக இலங்கை அரசாங்கமே ஏற்றுக்கொண்ட போதும் அத் தீர்மானத்தை சீனா எதிர்த்திருந்தமை ஈழத்தமிழர்கள் மத்தியில் சீனா மீதான அதிருப்தியை அதி உச்சமாக்கியுள்ளது. எனவே, ஈழத்தமிழர்கள் எதிர்பார்த்திருக்கும் அரசியல் தீர்வுக்கு குந்தகம் இல்லாமல், இந்தியாவின் நேரடித் தலையீட்டால் மட்டுமே தமிழர்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்ற அடிப்படை அரசியல் யதார்த்தத்தை புரிந்துகொண்டு, தங்களின் எதிர்கால செயற்பாடுகளை இலங்கையில் மேற்கொள்வீர்கள் என்று அக்கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

https://www.virakesari.lk/article/109184

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவே.... 🤥

  • கருத்துக்கள உறவுகள்

சிறிதரன் சீன தூதரகத்துக்கு கடிதம் போட்டிருக்கிறார், இது  சீனாவிற்கு பாரிய அச்சுறுத்தலாக அமைய போகிறது, 

நான் நினைக்கிறேன் இந்த இக்கட்டான நிலமையில்  சீனாவுக்கு ரஷ்யா எப்படியும் உதவி செய்யும்.

  • கருத்துக்கள உறவுகள்

பொய் சொல்லலாம், ஏக்கர் கணக்கில பொய் சொல்லக்கூடாது?

தமிழ் மக்களுக்கு எந்தக் காலத்தில் இந்தியா உறுதுணையாக நின்றது?

சிங்களவனை மகழ்ச்சிப்படுத்துவதாக, தமிழர்களை ஒடுக்கி, இன்று கந்தறுந்து போய் கையை பிசைந்து கொண்டு நிக்கிறது.

அதிலும் பார்க்க, இந்தியாவை நம்பி ஏமாந்து போனோம்.... சீனா ஏதாவது செய்து எமக்கான உரிமைகளை பெற்றுத் தரவேண்டும் என்று எழுதிப்பாருங்கள்...

சும்மா அதிரும்... 👌

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் வித்தியாசம் தெரியாமல் கடிதம் எழுதும் அறிவாளி .

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இப்போ ஹிந்தியக் கூலி ஆகிட்டார். தமிழர்களைப் பொறுத்த வரை சீனாவை விட ஹிந்தியா மோசமான துரோகி. ஹிந்தியாவை நம்புவது அல்லது நம்பச் சொல்வது.. தமிழர்களை புதைகுழிக்கு மேலும் மேலும் அனுப்பும் செயலாகும்.

ஏன் தமிழர்கள் மாற்றி யோசிக்கக் கூடாது. சீனா.. மேற்குலகம்.. ஹிந்தியா என்று எல்லார் நடுவிலும் நின்று விளையாடுறது.. யார் பக்கமும் சார்ந்தும்.. சாராமலும். அப்படித்தானே சிங்களம் இவ்வளவு காலமும் பிழைப்பை ஓட்டி வருகிறது.. இந்த உலகில். எதற்கு ஹிந்தியா சார்பாக தமிழர்கள் நிற்கனும்..???!

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே கூத்தமைப்புகாரர்கள் யோககாரர்கள்..

hqdefault.jpg

ரெண்டு சம்பளதிற்கு உழைக்கினம்..

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, valavan said:

சிறிதரன் சீன தூதரகத்துக்கு கடிதம் போட்டிருக்கிறார், இது  சீனாவிற்கு பாரிய அச்சுறுத்தலாக அமைய போகிறது, 

நான் நினைக்கிறேன் இந்த இக்கட்டான நிலமையில்  சீனாவுக்கு ரஷ்யா எப்படியும் உதவி செய்யும்.

சிறிதரனின் இந்தக்கடிதத்தால் பெரும்இராஜதந்திர நெருக்கடி வரப்போகிறது.சீனாவுக்கு ரஜ்யா உதவிசெய்ய வந்தால் அnமிரிக்காவும்.பிரிட்டனும் இந்தியாவுக்கு உதவும். இந்தியா வும் தன் பலத்தை காட்டுவதற்கான சந்தர்பம் வந்து விட்டது.ஆநேகமாகஇஅமெரிக்க இரஸ்ய ஜனாதிபதிகள் சிறிதரனும் தொடர்பை ஏற்படுத்த முயற்சிப்பார்கள் என்று  நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா பற்றி ஏதும் எழுதாமல் விட்டு இருந்தால் கூட இதை பகிடியாக எடுக்காமல் சீனா விட்டிருக்கும். இந்தியாவை இன்னுமாடா நம்புகிறீர்கள் என்று தான் நினைப்பார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புலவர் said:

சிறிதரனின் இந்தக்கடிதத்தால் பெரும்இராஜதந்திர நெருக்கடி வரப்போகிறது.சீனாவுக்கு ரஜ்யா உதவிசெய்ய வந்தால் அnமிரிக்காவும்.பிரிட்டனும் இந்தியாவுக்கு உதவும். இந்தியா வும் தன் பலத்தை காட்டுவதற்கான சந்தர்பம் வந்து விட்டது.ஆநேகமாகஇஅமெரிக்க இரஸ்ய ஜனாதிபதிகள் சிறிதரனும் தொடர்பை ஏற்படுத்த முயற்சிப்பார்கள் என்று  நினைக்கிறேன்.

இவர் எழுதிய இந்த கடித்ததால் மூன்றாம் உலகப்போர் மூளப்போகுது இருந்து பாருங்கோவேன்! சீனன் தூக்கி குப்பையிலே கடாசி விட்டு இன்னும் அமோகமாக வேலை பார்ப்பான்.

  சீனன் உதவி என்கிற பெயரில் நாட்டை ஆக்கிரமிக்க போகிறான் என்று நான் ஒரு தடவை இங்கு கருத்தெழுதியபோது, "சீனா எந்த நாட்டை ஆக்கிரமித்தது என்று காட்டுங்கள் பாப்போம்"  ஒரு உறவு கேட்டு கருத்து பதிந்து தர்க்கம் செய்திருந்தார். அந்த உறவை  கூச்சப்படாமல் களத்திற்கு வந்து சிறிதரனுக்கு பதில் தரும்படி விநயமாக கேட்டுக்கொள்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

Quellbild anzeigen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.