Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாற்பதுக்கு மேல்: வாழ்வும் சாவும்…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

இதை நான் வெளிப்படையாக சொல்லி விடுகிறேன்: என் நண்பர்கள், பிரியத்துக்குரியவர்கள், திறமையாளர்கள், சாதனையாளர்கள் 40களில் தற்கொலை பண்ணிக் கொண்டாலோ திடீரென்று மரணமடைந்தாலோ நான் அதை ஒரு அதிர்ஷ்டம் என்றே நினைக்கிறேன். நாற்பது என்பது ஒரு மோசமான கால எல்லை. அந்த எல்லைக்கோட்டில் காலை வைத்தால் பிடிக்கிற கேட்ச் எல்லாமே சிக்ஸர் தான், தோல்வியின் சவுக்கடி தான். இதை சொல்லும் அதே நேரம், நாற்பதுக்கு மேல் பெரும் வெற்றிகளைப் பெற்றவர்கள், சாதனைகளை செய்தவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் ஏற்கிறேன். அவர்கள் அரிதான மனிதர்கள், எழுபது வயதிலும் அரியணைக்கு அருகில் நின்று கொண்டு ஒரு சின்ன வாய்ப்பு அமைந்தால் அதில் நான் இருப்பேன் என நம்புகிறவர்கள். நான் சொல்வது பெரும்பாலானவர்களின் கதை. என்னையும் உங்களையும் போன்றவர்களுக்கு பெரும் நம்பிக்கைகள் இருபது, முப்பதுகளிலேயே செத்து விடுகின்றன. அதன் பிறகு சின்னச்சின்ன சந்தோஷங்களுக்காக ஒரு வாழ்க்கை, செத்து விடுவோமோ எனும் பயத்தில் துரத்தும் நாயைப் பார்த்தபடி ஓடுவது போலொரு வாழ்க்கை.

நுண்ணுணர்வு கொண்ட பல கலைஞர்கள் குடித்தும், கஞ்சா அடித்துமே சீக்கிரத்தில் சாவது இதனால் தான். 

இன்னொரு விசயம் இந்த இருத்தலின் ஒவ்வொரு நொடியும் மகத்தானது, இனிதானது என்பது. நான் அதை மறுக்கவில்லை. ஆனால் வாழ்க்கை அதையும் தாண்டியது என நினைக்கிறேன். பெரும் கனவுகள், நம்பிக்கைகள் இந்த வாழ்க்கைக்கு அவசியம். அதனால் தான் யாராவது இறந்தால் என் மனம் அவர்களை ஆசீர்வதிக்கிறது. என்னையும் கூட்டிப் போயிருக்கலாமே நீ எனத் தோன்றுகிறது.

அண்மையில் பிரியத்துக்குரிய கவிஞர் பிரான்சிஸ் கிருபா காலமான போதும் அப்படியே தோன்றியது. இப்போது ஒரு இளம் பத்திரிகையாளர் தற்கொலை பண்ணிக்கொண்டார் எனத் தெரிய வந்த போதும் அப்படியே தோன்றுகிறது. (இளைஞர்களும் இந்த செத்துப் போன வாழ்வில் நம்பிக்கையை இழந்து வருகிறார்கள்.)
அடுத்த சில ஆண்டுகளில் எனக்கு ஒரு மாரடைப்பு வந்து முதல் அழைப்பிலேயே போய் விட்டால் நிம்மதியாக உணர்வேன். இல்லாவிட்டால் இந்த மொழிக்கு பணியாற்றுவது என் கடமை என நம்பி, இன்னும் ஒரு இருபதாண்டுகள் எழுதும் சுகத்துக்காக மட்டும் இருப்பேன். அப்படி இருப்பது ஒரு துன்பியல் - நியாயமாக வாழும் சுகத்துக்காக, எதிர்காலத்தின் சாத்தியங்களுக்காக வாழ வேண்டும். எழுத்தென்பது வாழ்வின் ஒரு பகுதி தானே, அது வாழ்வு அல்லவே.

மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு போரிட்டு எதிரிகளை அழிக்கும் அந்த மகத்தான வாய்ப்பு அவர்களுடைய வயதான காலத்திலேயே வந்தது எனப் படித்திருக்கிறேன். யுதிஷ்டிரருக்கு அப்போது வயது 91, பாணடவர்களிலேயே இளைஞருக்கு வயது 88.  அரைமனத்துடன் போரிட்டு சாம்ராஜயத்தைப் பெற்று பின்னர் ஜனங்களே இல்லாத அனாதையான ஒரு தேசத்தை அரைமனத்துடன் ஆண்டார்கள்.

 நாற்பதுக்கு மேல் வாழ்கிறவர்களின் கதி அனேகமாக அது தான். எல்லாம் அரைமனதாக, அரை-மகிழ்ச்சியுடன், அரை-துக்கத்துடன், அரை-ஆர்வத்துடன் நடந்தாக வேண்டும். பாதி குடித்து ஆறிப் போன காபியைப் போல. ஈ விழுந்தாலாவது கொட்டி விடலாம் என யோசித்தால் எழவு ஈயும் விழாது.

 

By Abilash chandran 

 

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

ஓணாண்டியார், இதற்குப் பச்சை போட முடியாது! மன்னிக்கவும்! 😂

அபிலாஷ் எந்த வயதைப் பற்றிக் கதைக்கிறார்? கால வயதென்பது (chronological age) இப்போது கணக்கிலெடுக்கப் படத் தேவையற்ற ஒன்று!

ஆனால், எங்கள் ஆசிய மனப்பாங்கில் நாற்பதுக்குப் பிறகு இறங்கு முகம் என்ற நம்பிக்கை மூட நம்பிக்கை போல ஊறி விட்டது. இதை வெட்டியாட வழிகள் உண்டு. உங்களுக்கு அறிய ஆர்வமாக இருந்தால் மட்டும் சொல்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

 

இதை நான் வெளிப்படையாக சொல்லி விடுகிறேன்: என் நண்பர்கள், பிரியத்துக்குரியவர்கள், திறமையாளர்கள், சாதனையாளர்கள் 40களில் தற்கொலை பண்ணிக் கொண்டாலோ திடீரென்று மரணமடைந்தாலோ நான் அதை ஒரு அதிர்ஷ்டம் என்றே நினைக்கிறேன். நாற்பது என்பது ஒரு மோசமான கால எல்லை. அந்த எல்லைக்கோட்டில் காலை வைத்தால் பிடிக்கிற கேட்ச் எல்லாமே சிக்ஸர் தான், தோல்வியின் சவுக்கடி தான். இதை சொல்லும் அதே நேரம், நாற்பதுக்கு மேல் பெரும் வெற்றிகளைப் பெற்றவர்கள், சாதனைகளை செய்தவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் ஏற்கிறேன். அவர்கள் அரிதான மனிதர்கள், எழுபது வயதிலும் அரியணைக்கு அருகில் நின்று கொண்டு ஒரு சின்ன வாய்ப்பு அமைந்தால் அதில் நான் இருப்பேன் என நம்புகிறவர்கள். நான் சொல்வது பெரும்பாலானவர்களின் கதை. என்னையும் உங்களையும் போன்றவர்களுக்கு பெரும் நம்பிக்கைகள் இருபது, முப்பதுகளிலேயே செத்து விடுகின்றன. அதன் பிறகு சின்னச்சின்ன சந்தோஷங்களுக்காக ஒரு வாழ்க்கை, செத்து விடுவோமோ எனும் பயத்தில் துரத்தும் நாயைப் பார்த்தபடி ஓடுவது போலொரு வாழ்க்கை.

நுண்ணுணர்வு கொண்ட பல கலைஞர்கள் குடித்தும், கஞ்சா அடித்துமே சீக்கிரத்தில் சாவது இதனால் தான். 

இன்னொரு விசயம் இந்த இருத்தலின் ஒவ்வொரு நொடியும் மகத்தானது, இனிதானது என்பது. நான் அதை மறுக்கவில்லை. ஆனால் வாழ்க்கை அதையும் தாண்டியது என நினைக்கிறேன். பெரும் கனவுகள், நம்பிக்கைகள் இந்த வாழ்க்கைக்கு அவசியம். அதனால் தான் யாராவது இறந்தால் என் மனம் அவர்களை ஆசீர்வதிக்கிறது. என்னையும் கூட்டிப் போயிருக்கலாமே நீ எனத் தோன்றுகிறது.

அண்மையில் பிரியத்துக்குரிய கவிஞர் பிரான்சிஸ் கிருபா காலமான போதும் அப்படியே தோன்றியது. இப்போது ஒரு இளம் பத்திரிகையாளர் தற்கொலை பண்ணிக்கொண்டார் எனத் தெரிய வந்த போதும் அப்படியே தோன்றுகிறது. (இளைஞர்களும் இந்த செத்துப் போன வாழ்வில் நம்பிக்கையை இழந்து வருகிறார்கள்.)
அடுத்த சில ஆண்டுகளில் எனக்கு ஒரு மாரடைப்பு வந்து முதல் அழைப்பிலேயே போய் விட்டால் நிம்மதியாக உணர்வேன். இல்லாவிட்டால் இந்த மொழிக்கு பணியாற்றுவது என் கடமை என நம்பி, இன்னும் ஒரு இருபதாண்டுகள் எழுதும் சுகத்துக்காக மட்டும் இருப்பேன். அப்படி இருப்பது ஒரு துன்பியல் - நியாயமாக வாழும் சுகத்துக்காக, எதிர்காலத்தின் சாத்தியங்களுக்காக வாழ வேண்டும். எழுத்தென்பது வாழ்வின் ஒரு பகுதி தானே, அது வாழ்வு அல்லவே.

மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு போரிட்டு எதிரிகளை அழிக்கும் அந்த மகத்தான வாய்ப்பு அவர்களுடைய வயதான காலத்திலேயே வந்தது எனப் படித்திருக்கிறேன். யுதிஷ்டிரருக்கு அப்போது வயது 91, பாணடவர்களிலேயே இளைஞருக்கு வயது 88.  அரைமனத்துடன் போரிட்டு சாம்ராஜயத்தைப் பெற்று பின்னர் ஜனங்களே இல்லாத அனாதையான ஒரு தேசத்தை அரைமனத்துடன் ஆண்டார்கள்.

 நாற்பதுக்கு மேல் வாழ்கிறவர்களின் கதி அனேகமாக அது தான். எல்லாம் அரைமனதாக, அரை-மகிழ்ச்சியுடன், அரை-துக்கத்துடன், அரை-ஆர்வத்துடன் நடந்தாக வேண்டும். பாதி குடித்து ஆறிப் போன காபியைப் போல. ஈ விழுந்தாலாவது கொட்டி விடலாம் என யோசித்தால் எழவு ஈயும் விழாது.

 

By Abilash chandran 

 

ஒரு போனை பறித்து எறிந்ததுக்கு இந்த டிராமா ரொம்ப ஓவர் மிஸ்டர் ஓணாண்டி 🤣.

அபிலாஸ் சந்திரனுடன் நான் முற்றிலும் முரண்படுகிறேன்.

அபிலாஸ் 40க்குள் கொஞ்சமாவது வெற்றிகளை ருசித்திருப்பார் போலும்.

நாமல்லாம் வாழ்வில் வெற்றியின் படிகட்டை மட்டுமே கண்டு வந்த ஆக்கள் 🤣. வாழ்க்கை பூராவுமே படிகட்டுத்தான்🤣.

அதனால்தானோ என்னமோ கனவுகள் காண்பதும், கலைவதும், திருப்பி கண்ணை மூடி கனவு காண்பதும் இலகுவாக இருக்கிறது🤣.

சீரியசாக - நான் நினைகிறேன் இது lack of purpose in life என்று.

இதுக்கு இரெண்டே வழிதான் உண்டு.

1. ஒரு பெரும் இலட்சியத்தை வரித்து கொள்ளல் - தலைவர் எப்பவாவது இப்படி சிந்தித்து இருப்பாரா? அவரை விடுங்கள் - அவர் சாரனையாளர். 40 வயது தாண்டிய ஒரு போராளி தன்னும் இப்படி சிந்தித்திருப்பாரா? இல்லை. ஏனென்றால் அவர்களுக்கு ஒரு purpose இருந்தது.

2. முதலாம் வகை முடியாவிட்டால் - வாழ்கையை சுகிப்பதே ஒரு purpose என வாழலாம். ஒரு கடற்கரையில் கவிழ்ந்து கிடப்பது, இசையை கேட்பது, தாய்லாந்து போவது மட்டும் அல்ல, ஒரு ஏழை பையனுக்கு ஒரு விலை உதிர்ந்த சாக்கிலேட் கேக்கை வாங்கி கொடுப்பதும் அதில் இன்பமடைவதும் கூட சந்தோசத்தை தரும். 

இவை சின்ன, சின்ன சந்தோசங்கள் இல்லை.

இவைதான் வாழ்கை.

கடைசியில் எமது படிப்பு, பட்டம், சொத்துகளை மட்டும் அல்ல, கனவுகளையும் நாம் கொண்டு போக போவதில்லை.

In the grand scheme of things, nothing matters.

ஆகவே சலிக்காமல் கனவுகாணுங்கள். அது பலிக்கிறதோ இல்லையோ.

நயந்தாரா இல்லை என்றால் திரிஷா, இல்லை என்றால் கீர்தி சுரேஸ்….🤣

 

  • கருத்துக்கள உறவுகள்

40.....50.....60......இவை எண்கள்  இந்த எண்களில் எதுவுமில்லை உங்கள் உடல் ஆரோக்கியம்..எண்ணங்கள் சிந்தனைகள் செயல்கள இளமையாக இருப்பின்  நீங்கள் என்றுமே இளைஞர் தான் 😍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு ஜேர்மனியில் 60 வயதுக்காரரை வயது போய்விட்டது என கூற மாட்டார்கள்.

60 வயதிலை பெஞ்சன் எடுக்கிறதெண்டால் பெரிய அல்லோலகல்லோலப்பட்டு உள்ள செக்கப் எல்லாம் செய்துதான் பென்சன் எடுக்கலாம். எனவே பொடியள் 40 வயசிலையும் மார்க்கண்டேயன் நினைப்பிலை திரியுங்கோ.
எங்கடை அமெரிக்கன் அன்ட் பிரெஞ்ச்/ டொச்ச பிரண்ட்ஸ் டோண்ட் வெறி பீ ஹப்பி..🤣

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:


எங்கடை அமெரிக்கன் அன்ட் பிரெஞ்ச்/ டொச்ச பிரண்ட்ஸ் டோண்ட் வெறி பீ ஹப்பி..🤣

அண்ணை பாத்தியளே எங்கள மறந்துட்டியள்🤣.

  • கருத்துக்கள உறவுகள்

வெந்ததும் வேகாததுமாய் வாய்க்குள்ள போட்டுகொண்டு, குருட்டுப்பூனை விட்டத்திலே பாய்ந்ததுபோல் பாய்ந்து ஓடி உழைக்க நண்டும் சிண்டுமாய் மூண்டு நாலு வந்திடும், அதையெல்லாம் செட்டில் பண்ணி மூச்சு விட நாற்பது வந்திடும்.......பின்புதான் குடும்பத்தை ரசித்து விராட்கோலி மாதிரி நிறுத்தி நிதானமாய் சதம் அடிக்கிற காலம் இந்த நாற்பதுக்கு பின்னான பொற்காலம்.......சும்மா புரியாமல் புலம்பக்கூடாது.....!  😂

  • கருத்துக்கள உறவுகள்

மனிதன் முழுமையான கல்வியை… கற்று முடிக்க  25 வயது ஆகி விடும்.

பின் வேலையில் சேர்ந்து… நெளிவு, சுழிவுகளை அறிய 30 ஆகும்.

திருமணத்தின் பின்… இரண்டு குழந்தைகளுடன் 40 வயது ஆகி விடும்.

அதன் பின் தான்… மனிதன் வாழ்க்கையில் ஒவ்வொன்றையும் ரசித்து வாழும் தருணம். 🙂 

  • கருத்துக்கள உறவுகள்

life begins at 40 என்று சொல்வார்கள்.

இதென்ன இப்படி ஒரு புலம்பல்.

ஒபாமா 50 வயதிற்கு முன்பே ஜனாதிபதியாகி விட்டார். பைடன் 70 கு பின்புதான்.
இப்படியெல்லாம் சிந்தித்தால் வாழ்வில் எதிர்நீச்சல் அடிக்க முடியாது
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் உறவுகளை நினைக்க பெருமையாக இருக்கு.. எனக்கும் தன்னம்பிக்கை வருது.. நீங்கள் எழுதியதை எல்லாம் வாசிச்சபின் பிறந்தாச்சு வாழ்ந்துதான் பாப்பமே..

 

மற்றது ஜஸ்ற்றின் எழுதுங்கோ உளவியல் டோக்டர பாப்பம் எண்டிருந்தன் எழுதுங்கோ வாசிச்சா இன்னும் செல்ப்கென்பிடன்ஸ் வரும்..

நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த என் வாழ்க்கையினை நான் ஆழ்ந்து அனுபவிக்க தொடங்கியதே 40 இன் பின் தான். அத்துடன் ஒரு விடயத்தை திட்டமிட்டு, ஒழுங்கு செய்து வெற்றிய அடைய தொடங்கியதும் இந்த வயதில் தான்.
பெரும்பாலான ஆண்களுக்கு 40 வயதின் பின் தான் நிதானமும், ஒரு வகையான பணிவும் வருகின்றது. குடும்பத்தை, மனைவியை, தன்னைச் சுற்றியுள்ளவர்களின் நலன்களை பொறுமையாக அணுகும் பக்குவமும் கிடைக்கின்றது.தொழிலிலும் முன்னேற்றம் 40 வயதின் பின் தான் உறுதியான வழியில் நடை போடத் தொடங்குகின்றது. வெற்றிபெற்ற பல ஆண்கள் 40 இல் தான் வாழ்வின் முக்கியமான முடிவுகளை எடுக்கத் தொடங்கியும் இருப்பர். 

40 இல் சலிப்புறுகின்றவர்கள் செய்ய வேண்டியது, தான் நடந்து வந்த வாழ்வை மீண்டும் திரும்பி பார்த்து விட்ட பிழைகளை செப்பனிடத் தொடங்குவது தான். அத்துடன் தாம் எப்பவும் மற்றவர்களுக்காக மட்டுமே வாழ்கின்றோம் என்ற நினைப்பில் வாழாமல். தனக்காக வாழத் தொடங்குவதும், தாம் இல்லாவிட்டாலும் இந்த உலகம் சுற்றும் என்பதை உணர்வதும் ஆகும். இந்த உணர்வு தன்னைப் பற்றிய நம்பிக்கையையும், முக்கியமான தருணங்களில் பயத்தை கைவிட்டு துணிவாக முடிவு எடுக்கவும் உதவும்.

40 பின்னான வாழ்வு ஆறிப்போன ஈ விழுந்த வாழ்வு அல்ல. சுடச் சுட வடையுடன் கிடைக்கும் ரின் பால் தேனீர்.

  • கருத்துக்கள உறவுகள்

நாற்பதிலேயே வாழ்வை அனுபவிக்க மறுப்பவன் சாதலே சரி. போய்யா உலகத்துக்கு நீ தேவையற்றவன்😡

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

யாழ் உறவுகளை நினைக்க பெருமையாக இருக்கு.. எனக்கும் தன்னம்பிக்கை வருது.. நீங்கள் எழுதியதை எல்லாம் வாசிச்சபின் பிறந்தாச்சு வாழ்ந்துதான் பாப்பமே..

 

மற்றது ஜஸ்ற்றின் எழுதுங்கோ உளவியல் டோக்டர பாப்பம் எண்டிருந்தன் எழுதுங்கோ வாசிச்சா இன்னும் செல்ப்கென்பிடன்ஸ் வரும்..

அபிலாஷ் சந்திரன் ஒரு மாற்றுத்திறனாளி என்று நினைக்கிறேன். மனைவி பிள்ளையை பிரிந்து வெண்கல்லூரில்(பெங்களூர்) கல்லூரியில் கற்பிக்கிறார். எழுத்தாளரும் கூட.
2009 இல் எதிர்காலம் குறித்த மிகுந்த அச்சத்தில் இருந்தேன். நெடுக்கரிடம் மனப்பயத்தை கூறி இருந்தேன், கலைஞன் அண்ணாவும் தெம்பூட்டியவர். அப்பா, அம்மாவை நம்பிய வாழ்க்கை. அவர்கள் இல்லா காலங்கள் எவ்வாறு எதிர்கொள்வது என்ற மனப்பயம். ஆனால் இப்போது அவர்கள் இல்லா காலத்தில் எங்களை நாங்களே பார்த்துக் கொள்ள(உதவியாளர்கள் மூலம்) முடியும் எனும் நம்பிக்கையை காலம் தந்திருக்கிறது.

 

19 hours ago, goshan_che said:

இதுக்கு இரெண்டே வழிதான் உண்டு.

1. ஒரு பெரும் இலட்சியத்தை வரித்து கொள்ளல் - தலைவர் எப்பவாவது இப்படி சிந்தித்து இருப்பாரா? அவரை விடுங்கள் - அவர் சாரனையாளர். 40 வயது தாண்டிய ஒரு போராளி தன்னும் இப்படி சிந்தித்திருப்பாரா? இல்லை. ஏனென்றால் அவர்களுக்கு ஒரு purpose இருந்தது.

2. முதலாம் வகை முடியாவிட்டால் - வாழ்கையை சுகிப்பதே ஒரு purpose என வாழலாம். ஒரு கடற்கரையில் கவிழ்ந்து கிடப்பது, இசையை கேட்பது, தாய்லாந்து போவது மட்டும் அல்ல, ஒரு ஏழை பையனுக்கு ஒரு விலை உதிர்ந்த சாக்கிலேட் கேக்கை வாங்கி கொடுப்பதும் அதில் இன்பமடைவதும் கூட சந்தோசத்தை தரும். 

மிக்க நன்றி உங்கள் கருத்திற்கு.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா நமக்கு இன்னும் தூரம் இருக்கு நாற்பதுக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

யாழ் உறவுகளை நினைக்க பெருமையாக இருக்கு.. எனக்கும் தன்னம்பிக்கை வருது.. நீங்கள் எழுதியதை எல்லாம் வாசிச்சபின் பிறந்தாச்சு வாழ்ந்துதான் பாப்பமே..

 

மற்றது ஜஸ்ற்றின் எழுதுங்கோ உளவியல் டோக்டர பாப்பம் எண்டிருந்தன் எழுதுங்கோ வாசிச்சா இன்னும் செல்ப்கென்பிடன்ஸ் வரும்..

சரி, ஒரு உண்மைச் சம்பவம் கேளுங்கள்: 

நாசி வதை முகாம்களில் அடைத்து வைக்கப் பட்டிருந்த மக்களுக்கு பல தெரிவுகள் இருக்கவில்லை. எப்படியோ மரணம் தானே என்ற நிலையில் அதைத் தாங்களாகவே தேடிக்கொள்ள பலர் முயன்றனர். வதை முகாமின் மின்சார வேலியை நோக்கி நடந்து ஏற முயலும் மக்களை ஒன்று உயர் அழுத்த மின்சாரம் கொல்லும் அல்லது மின்சாரத்தை முந்திக் கொண்டு நாசிகளின் தோட்டாக்கள் கொல்லும்! இவ்வாறு தன்னுயிர் மாய்த்துக் கொள்ளும் மக்களை ஒரு மனநல மருத்துவர் - அவரும் வதைமுகாம் கைதியான யூதர் தான் - அவதானித்துக் கொண்டிருந்தார். அவரது குறிப்புகளின் படி, தன்னுயிர் மாய்த்துக் கொண்டோரில் குழந்தைகளோடிருந்த தாய்மார் இருக்கவில்லையாம். இது ஏன் என்று யோசித்த போது வாழும் ஊக்கத்தைக் குழந்தைகள் கொடுத்ததால் அவர்கள் அந்த நரகத்திலும் உயிரோடிருக்க பிரயத்தனம் செய்து கொண்டிருந்தனர் என்ற முடிவுக்கு அவர் வந்தார்!

அந்த மனநல மருத்துவரின் பெயர் விக்ரர் பிராங்கெல் (Viktor Frankl)! வதைமுகாமிலிருந்து மீண்டு வந்து இந்த வாழும் ஊக்கம் பற்றி மேலும் அவர் ஆய்வு செய்து உருவாக்கிய சிகிச்சை முறைக்குப் பெயர் லோகோ தெரபி (logo therapy)! அடிப்படையில் லோகோ தெரபி என்பது  வாழ்க்கைக்கு ஒரு இலக்கைத் தேடிக் கொள்வது தான்! 

ஆழமாக வாசிக்க விரும்பினால் அவரது முக்கியமான நூல்: 

41VKDyqd6RL._SX348_BO1,204,203,200_.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, goshan_che said:

அண்ணை பாத்தியளே எங்கள மறந்துட்டியள்🤣.

உங்களையெல்லாம் எப்பிடி மறக்கேலும்...?? 😁

நான் சொல்ல வந்தது கண்டசாலா கண்ணாம்பாள் காலத்து ஆக்களுக்கு எல்லோ...... 😎

நீங்களெல்லாம் ஆர்யா காலத்து ஆக்கள். எப்பிடி கூட்டு சேர்க்கேலும்? 🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.