Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விவசாயிகளிற்கு ஆதரவாக திங்கட்கிழமை போராட்டம் – சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விவசாயிகளிற்கு ஆதரவாக திங்கட்கிழமை போராட்டம் – சுமந்திரன்

 
விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திங்கள் கிழமை வடக்கு கிழக்கில் நடத்த உள்ள போராட்டம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
Sumanthiran-SriLanka-300x185.jpg
 
நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள உரம் மற்றும் கிருமிநாசினி பற்றாக்குறை விவசாயிகளையும் தோட்டத்தொழிலையும் மிக மோசமாக பாதித்திருக்கிறது.
 
வடக்கிலும் கிழக்கிலும் காலபோக /பெரும்போக நெற் பயிர்ச்செய்கை தற்போது ஆரம்பமாகியுள்ளது. ஓரிரு வாரங்களுக்குள் பசளை மற்றும் கிருமி நாசினி அத்தியாவசியமாக தேவைப்படும். இத்தேவையை உடனடியாக பூர்த்திசெய்யுமாறு கோரி வடக்கு கிழக்கிலுள்ள சகல கமநல சேவைகள் மையங்களுக்கூடாக 18ம் திகதி திங்கற்கிழமை காலை 9.00 மணிக்கு ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன.
 
கோவிட் தொற்று காரணமாக சிறிய எண்ணிக்கையானவர்கள், சமூக இடைவெளிகளைப் பேணி இப்போராட்டத்தில் ஈடுபடுவார்கள். பல இடங்களில் ஓரே நேரத்தில் நடைபெறவிருக்கும் இவ்வார்ப்பாட்டங்களுக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/143797

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் கிழிச்சு முடிஞ்சுது எனி இது..?! விவசாயிகள் வாழ்க்கையும் எனி நாசம். இந்த நரி முகத்தில் முளிச்சாலே சாபக்கேடு தான். 

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, nunavilan said:

விவசாயிகளிற்கு ஆதரவாக திங்கட்கிழமை போராட்டம் – சுமந்திரன்

 
விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திங்கள் கிழமை வடக்கு கிழக்கில் நடத்த உள்ள போராட்டம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
Sumanthiran-SriLanka-300x185.jpg
 
நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள உரம் மற்றும் கிருமிநாசினி பற்றாக்குறை விவசாயிகளையும் தோட்டத்தொழிலையும் மிக மோசமாக பாதித்திருக்கிறது.
 
வடக்கிலும் கிழக்கிலும் காலபோக /பெரும்போக நெற் பயிர்ச்செய்கை தற்போது ஆரம்பமாகியுள்ளது. ஓரிரு வாரங்களுக்குள் பசளை மற்றும் கிருமி நாசினி அத்தியாவசியமாக தேவைப்படும். இத்தேவையை உடனடியாக பூர்த்திசெய்யுமாறு கோரி வடக்கு கிழக்கிலுள்ள சகல கமநல சேவைகள் மையங்களுக்கூடாக 18ம் திகதி திங்கற்கிழமை காலை 9.00 மணிக்கு ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன.
 
கோவிட் தொற்று காரணமாக சிறிய எண்ணிக்கையானவர்கள், சமூக இடைவெளிகளைப் பேணி இப்போராட்டத்தில் ஈடுபடுவார்கள். பல இடங்களில் ஓரே நேரத்தில் நடைபெறவிருக்கும் இவ்வார்ப்பாட்டங்களுக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/143797

போராட வரும் போது அந்த டிரக்டரில் வர மறக்க வேண்டாம் ஸேர் 🤣

 

39 minutes ago, nunavilan said:

விவசாயிகளிற்கு ஆதரவாக திங்கட்கிழமை போராட்டம் – சுமந்திரன்

 
விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திங்கள் கிழமை வடக்கு கிழக்கில் நடத்த உள்ள போராட்டம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
Sumanthiran-SriLanka-300x185.jpg
 
நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள உரம் மற்றும் கிருமிநாசினி பற்றாக்குறை விவசாயிகளையும் தோட்டத்தொழிலையும் மிக மோசமாக பாதித்திருக்கிறது.
 
வடக்கிலும் கிழக்கிலும் காலபோக /பெரும்போக நெற் பயிர்ச்செய்கை தற்போது ஆரம்பமாகியுள்ளது. ஓரிரு வாரங்களுக்குள் பசளை மற்றும் கிருமி நாசினி அத்தியாவசியமாக தேவைப்படும். இத்தேவையை உடனடியாக பூர்த்திசெய்யுமாறு கோரி வடக்கு கிழக்கிலுள்ள சகல கமநல சேவைகள் மையங்களுக்கூடாக 18ம் திகதி திங்கற்கிழமை காலை 9.00 மணிக்கு ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன.
 
கோவிட் தொற்று காரணமாக சிறிய எண்ணிக்கையானவர்கள், சமூக இடைவெளிகளைப் பேணி இப்போராட்டத்தில் ஈடுபடுவார்கள். பல இடங்களில் ஓரே நேரத்தில் நடைபெறவிருக்கும் இவ்வார்ப்பாட்டங்களுக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/143797

 

  • கருத்துக்கள உறவுகள்

விவசாயிகள் மற்றும் மீனவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு வழங்குமாறு  சாணக்கியன் வேண்டுகோள்

October 16, 2021
 
 
சிறப்பாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினராக முதலிடத்தினை பிடித்தார்  சாணக்கியன்!

வடமாகணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் M.A. சுமந்திரனால் முன்னெடுக்கப்படும் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் பிரதேசரீதியாக  மேற்கொள்ளும் கவன ஈர்ப்பு போராட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் முழு ஆதரவுடன் மட்டக்களப்பிலும் எதிர்வரும் 18.10.2021 அன்றிலிருந்து நடாத்துவதாக தீர்மானித்துள்ளார்கள். 

இவ் கவனஈர்ப்பு போராட்டமானது  தரை மற்றும் கடல் வழி என நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அதன் அடிப்படையில், வெல்லாவெளியில் காலை 8, மணி, கொக்கட்டிச்சோலையில் 8.30 மணி, ஆயித்தியமலையில் 9.30, மணி, வந்தாறுமூலையில் 10.30,மணி, கிரானில் 11.30,மணி, என ஐந்து இடங்களில் விவசாயிகளால் இடம்பெறும் கவன ஈர்ப்பு போராட்டத்தில் அந்தந்த பகுதி பிரதேச தவிசாளர்கள் உறுப்பினர்கள், தமிழ்தேசியகூட்டமைப்பு உறுப்பினர்கள், இலங்கை தமிழரசு கட்சி தொகுதி கிளை, பிரதேச கிளை உறுப்பினர்கள், வாலிபர் அணி உறுப்பினர்கள், மகளீர் அணி உறுப்பினர்களும்  உள்ளிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், தமிழ்தேசிய கூட்டமைப்பு பங்காளிகட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொள்ளவது என முடிவு செய்யப்பட்டது.

வடக்கு கிழக்கு மக்களின் மிக முக்கிய வாழ்வாதாரங்களை காப்பாற்றும் போராட்டங்களிற்கு அனைவரையும் அணிதிரளுமாறு பாராளுமன்ற உறுப்பினர்  சாணக்கியன்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக அழைப்பு விடுத்துள்ளார்.

 

https://www.ilakku.org/support-the-struggle-of-farmers-and-fishermen/

  • கருத்துக்கள உறவுகள்

சார் இதிங்  எப்டி இரிக்கி ? 

செய்தி மூலம் ; ahalnews.com
 

மீனவர் ஆர்ப்பாட்டத்தை புறக்கணிக்க இந்தியா வற்புறுத்தல்

Indian-High-Commission-Jaffna.jpg
Share on facebook
 
Share on twitter
 
Share on linkedin
 
Share on wயாழ்ப்பாணம், ஒக்.15

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கெதிராக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்தில் பங்கு கொண்டால் இந்தியா தம்மீது கோபம் கொள்ளும் நிலை ஏற்படும் எனத் தெரிவித்து கூட்டமைப்பின் தலைவர்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொள்ளாது ஓடி ஒளிவதாக ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்தவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Sumanthiran.jpg

கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அழைப்பின் பேரில், எதிர் வரும் 17ஆம் திகதி முல்லைத்தீவில் இருந்து பருத்தித்துறை வரையில் கடல் வழியாக, இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து போராட்டம் இடம்பெறவுள்ளது. இந்த போராட்டத்தை விரும்பாத இந்தியத் தூதரக, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்தியாவிற்கு எதிராகவே போராட்டம் செய்கின்றீர்களா எனத் தனித் தனியாக வினாவியுள்ளனர்.

http://ahalnews.com/wp-content/uploads/2021/10/Mavai.jpg

இதன்போது மாவை.சேனாதிராஜா இந்தியத் தூதரக அதிகாரிகளிடம், குறித்த போராட்டத்தில் நான் பங்கு கொள்ளமாட்டேன் எனவும், அப்போராட்டம் கட்சி ரீதியான பங்களிப்பு அல்ல எனவும் உறுதிமொழி வழங்கியுள்ளார்.

Selvam.jpg

இதேநேரம் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் புளட் அமைப்பின் சித்தார்த்தன் ஆகியோர் இதனை சுமந்திரன் மட்டுமே ஏற்பாடு செய்தார் எமக்கு எந்த தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

http://ahalnews.com/wp-content/uploads/2021/10/Siddarthan.jpg

ஈழத் தமிழர்களிற்காக அரசியல் செய்யும் கட்சிகள் இந்திய அரசு கோபிக்குமே என எண்ணி எமது உரிமையினை அடைவு வைப்பதாகவும் தேர்தல் காலம் வரும்போது இந்த தலைவர்கள் நாடிவரும்போது தகுந்த பதுலடி கிடைக்கும் என மீனவர்கள் கூறிவருகின்றனர்.

Share on facebook
 
Share on twitter
 
Share on linkedin
 
Share on whatsapp
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

போராட வரும் போது அந்த டிரக்டரில் வர மறக்க வேண்டாம் ஸேர் 🤣

ஒரு விவசாயி இன்னொரு விவசாயிக்காக  போராடுவதில்  என்ன தவறு இருக்கின்றது?
பிளீஸ் ரெல் மீ 😂

FB_IMG_1633848760580.jpg

 

Edited by குமாரசாமி
எழுத்துப்பிழை.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

ஒரு விவசாயி இன்னொரு விவசாயிக்காக  போராடுவதில்  என்ன தவறு இருக்கின்றது?
பிளீஸ் ரெல் மீ 😂

FB_IMG_1633848760580.jpg

 

 

🤣 உவர் ஸ்ராலின பாத்து வயல்ல இறங்கின விவசாயி அண்ணை🤣

அதுசரி குடத்தனை பக்கம் உப்பிடி வயல் இருக்கோ அண்ணை🤣.

இவர பார்த்த மண்கும்பியில நெல்விதைக்கிறவர் போலத்தான் தெரியுது எனக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 

FB_IMG_1633848760580.jpg

 

போட்டோவில சிங்கம்மாதிரி நிக்குறமனுசன உங்க ஆர்வக்கோளாறில வீடியோவில சிதைச்சுட்டிங்களேடா.. 😂😂😂

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

போட்டோவில சிங்கம்மாதிரி நிக்குறமனுசன உங்க ஆர்வக்கோளாறில வீடியோவில சிதைச்சுட்டிங்களேடா.. 😂😂😂

“வீடியோவில வந்தா காணும்” - ஒத்த வசனத்தில பத்து வருச அரசியல் வாழ்கையில சாணிய கரைச்சு ஊத்திட்டானுவோ🤣

  • கருத்துக்கள உறவுகள்

விவசாயிகளை விட மீன் பிடி பிரச்சனை தான் இப்ப பெரிய பிரச்சனை ...அதை திசை திருப்ப இந்த போராட்டம் 

  • கருத்துக்கள உறவுகள்
நீங்கள் மாகாணசபை தேர்தல் என்றவுடன்
தோட்டத்திற்கு போவிங்கள்....வயலில இறங்குவியள்!
ஏன் பனையிலையும் ஏறுவிங்க
அதற்காக எமது பிரச்சனையை அரசியலாக்க வேண்டாம்
யாழ் மாவட்ட மீனவர் சங்கங்களின் சமேளனம் சுமந்திரனிடம் கோரிக்கை

https://www.facebook.com/100024421883118/videos/1239065516579859/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, goshan_che said:

 

🤣 உவர் ஸ்ராலின பாத்து வயல்ல இறங்கின விவசாயி அண்ணை🤣

அதுசரி குடத்தனை பக்கம் உப்பிடி வயல் இருக்கோ அண்ணை🤣.

இவர பார்த்த மண்கும்பியில நெல்விதைக்கிறவர் போலத்தான் தெரியுது எனக்கு.

குடத்தனையை ஆகலும் இழக்காரமாய் கதைக்கக்கூடாது கண்டியளோ.😁

அங்கையும் குளிர்ச்சியான வயல் வெளியள் தென்னங்காணியள் எல்லாம் இருக்கு.அம்பன் குடத்தனையெல்லாம் நல்ல ஊர்கள்.😂

ஆனால் அங்கை பிறந்த சீவன் ஒண்டுக்கு மண்வாசனை இல்லாமல் போனதுதான் பெரிய மனக்கவலை... 😎

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புலவர் said:
நீங்கள் மாகாணசபை தேர்தல் என்றவுடன்
தோட்டத்திற்கு போவிங்கள்....வயலில இறங்குவியள்!
ஏன் பனையிலையும் ஏறுவிங்க

சுமத்திரன்  பனையேறுவது பற்றி கற்பனை பண்ணி பார்த்தேன் 🤣பனையை  வட்டுடன் வெட்டி  தாட்டு போட்டு இந்தாள்  நின்ற நிலையில் சீவல் செய்வார் என்று நினைக்கிறேன் .🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

சுமத்திரன்  பனையேறுவது பற்றி கற்பனை பண்ணி பார்த்தேன் 🤣பனையை  வட்டுடன் வெட்டி  தாட்டு போட்டு இந்தாள்  நின்ற நிலையில் சீவல் செய்வார் என்று நினைக்கிறேன் .🤣

நீங்கள் சுமந்திரன் பனையேறுவது பற்றி கற்பனை பண்ணித்தானே பாத்தியள்! பரவாயில்லை..... அதனோடு நிறுத்திக்கொள்ளுங்கள். எங்களின் பிரதானமான வளம் ஒன்று இவரிடம் சிக்கி சிதைவதை என்னால் கற்பனை  செய்து கூட பார்க்க முடியவில்லை.

 சுமந்திரனின் பெயரை கேட்டாலே இப்போ  ஒரு ஆள் போட்டது போட்டபடி விட்டிட்டு ஓடி வரப்போகுது!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

நீங்கள் சுமந்திரன் பனையேறுவது பற்றி கற்பனை பண்ணித்தானே பாத்தியள்! பரவாயில்லை..... அதனோடு நிறுத்திக்கொள்ளுங்கள். எங்களின் பிரதானமான வளம் ஒன்று இவரிடம் சிக்கி சிதைவதை என்னால் கற்பனை  செய்து கூட பார்க்க முடியவில்லை.

 சுமந்திரனின் பெயரை கேட்டாலே இப்போ  ஒரு ஆள் போட்டது போட்டபடி விட்டிட்டு ஓடி வரப்போகுது!

என்ன சாத்தான் செய்யிறது,

சமயத்தையும் சாதியையும் தூக்கிப்பிடிக்கிற கூட்டத்திற்கு நீங்க சொல்லுற ஓடி வாற மனுசனக் கண்டா குல நடுக்கமெல்லோ வருகிது. 

மேல பாருங்கோ , இந்தியன் TNA ஆக்களக் கூப்பிட்டு வெருட்டினதா செய்தி வந்திருக்கு. ஆனா ஆராவது அதப்பற்றி கதைக்கீனமோ? இல்லத்தானே..🤪

சுமந்திரன் எண்ட வேதக்காறன்(?) நல்ல பேர் எடுத்திடுவானெண்டெல்லோ இஞ்ச கன பேருக்கு குல நடுக்கம்....

குருசக்(Cross) கண்ட சாத்தானுக்கு ஈரக்குல நடுங்கிற மாதிரி நீங்க சொல்லுற மனுசனக் கண்டா இஞ்ச கனபேர் நடுங்குறதுக்கு காரணம் இருக்குத்தானே.

என்னங்..நாங் சொல்றது சரிங்தானே மஹத்தயா.. 😀

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு பின்னும் பொறுத்திருக்க மாட்டீர்கள் என்பது தெரிந்துதான் அழைத்தேன் தங்களை. தங்களது வருகைக்கு நன்றி.  நிற்க! இங்கு யாருக்கும் சுமந்திரனின் சாதி, சமயம், இன்னோரன்ன சொந்த விஷயங்களை பற்றி தெரியாது, கதைப்பதுமில்லை, அது பிரச்னையுமில்லை. அவரது சுத்து மாத்துகளையே தெரியும் அதுபற்றியே பகிர்வோம். ஆனால் நீங்களோ விலாவாரியா அவரைப்பற்றிய எல்லாத் தகவல்களையும் தெரிந்து வைத்திருக்கிறீர்கள், இங்கு அதை வெளியிட்டுமிட்டிருக்கிறீர்கள்.  பின், அவர் வேதக்காரன் என்பதார்த்தான் எல்லோரும் விமர்சிக்கிறார்கள் என்று வேறு குற்றஞ்சாட்டுகிறீர்கள். அப்படி குற்றஞ் சுமத்தும் உங்களுக்கு சாள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன், இன்னும் இருவர் பெயர் மறந்து விட்டேன். ஒருவர் முன்னாள் யாழ் மாநகர முதல்வர், மற்றவர் சொலமன் மத்தியூ என்று நினைக்கிறன், ரொனால்டு ஆனோல்ட்? கிறிஸ்தவர்கள்.  அவர்கள் மேல் குற்றச்சாட்டு வைக்கவில்லை என்று புரியவில்லையா? அல்லது சுமந்திரன் விசுவாசம்: அவர் மட்டுந்தான் கிறிஸ்தவர் என்று ஏற்கும் உங்களால் இவர்களை கிறிஸ்தவர் என்று ஏற்கவும் மனம் வரவில்லையோ? அவரைப்பற்றிய இவ்வளவு தகவலும் தெரிந்த நீங்கள், அவருக்காகவே அழும் நீங்கள், அவரின் உறவா? அல்லது நட்பு வட்டாரமா? அதற்கும் இந்தியாவையும், கிறிஸ்தவத்தையும் தொடர்புபடுத்தாதீர்கள்.

சிறில் மத்தீயூ....?

  • கருத்துக்கள உறவுகள்

மீனவ நண்பனாக மாறிய சுமந்திரன்... 🤣😩

செய்தி மூலம்; ahalnews.com

 

 

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கெதிரான போராட்டம் ஆரம்பம்

WhatsApp-Image-2021-10-16-at-11.02.29-PM
Share on facebook
 
Share on twitter
 
Share on linkedin
 
Share on whatsapp

வட மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கக்கோரி முல்லைத்தீவில் இருந்து பருத்தித்துரை வரையான கடல் போராட்டம் சற்று முன்னர் ஆரம்பமானது.

WhatsApp-Image-2021-10-16-at-11.02.29-PM

முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் இருந்து ஆர்ப்பாட்டத்தினை ஆரம்பமானது. இதில் ஆரம்பத்தில் 50ற்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்களும் அரசியல் பிரமுகர்களும் மக்களும் கறுப்பு கொடிகளை தாங்கிய வண்ணம் கலந்துகொண்டுள்ளனர்.

WhatsApp-Image-2021-10-16-at-11.02.28-PM

இதேநேரம் பருத்தித்துறை செலும்போது, அந்த வழியில் உள்ள மேலும் பல மீனவ சங்கங்கள் இந்த போராட்டத்தில் இணையத் தயாராக உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp-Image-2021-10-16-at-11.02.27-PM

இதனால் பருத்தித்துறையை அடையும் சமயம் 200ற்கும் மேற்பட்ட படகுகள் இதில் இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதோடு கடல் பேரணி வெற்றிகரமாக நகர்த்த வண்ணம் உள்ளதாக ஏற்பாட்டாளர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

WhatsApp-Image-2021-10-16-at-11.02.26-PM

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

இதற்கு பின்னும் பொறுத்திருக்க மாட்டீர்கள் என்பது தெரிந்துதான் அழைத்தேன் தங்களை. தங்களது வருகைக்கு நன்றி.  நிற்க! 

1) இங்கு யாருக்கும் சுமந்திரனின் சாதி, சமயம், இன்னோரன்ன சொந்த விஷயங்களை பற்றி தெரியாது, கதைப்பதுமில்லை, அது பிரச்னையுமில்லை.

 🤪நம்பீட்டோம்😇

2) அவரது சுத்து மாத்துகளையே தெரியும் அதுபற்றியே பகிர்வோம். ஆனால் நீங்களோ விலாவாரியா அவரைப்பற்றிய எல்லாத் தகவல்களையும் தெரிந்து வைத்திருக்கிறீர்கள், இங்கு அதை வெளியிட்டுமிட்டிருக்கிறீர்கள்.  பின், அவர் வேதக்காரன் என்பதார்த்தான் எல்லோரும் விமர்சிக்கிறார்கள் என்று வேறு குற்றஞ்சாட்டுகிறீர்கள்.

😌எல்லோரும் அல்ல என்பது என் தாழ்மையான கருத்து. அனேகர் உளச் சுத்தியுடன் விமர்சிக்கின்ரனர் 🙏

3) அப்படி குற்றஞ் சுமத்தும் உங்களுக்கு சாள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன், இன்னும் இருவர் பெயர் மறந்து விட்டேன். ஒருவர் முன்னாள் யாழ் மாநகர முதல்வர், மற்றவர் சொலமன் மத்தியூ என்று நினைக்கிறன், ரொனால்டு ஆனோல்ட்? கிறிஸ்தவர்கள்.  அவர்கள் மேல் குற்றச்சாட்டு வைக்கவில்லை என்று புரியவில்லையா?

😩மிகத்தெளிவாகவே இவர்களுக்கும் சுமந்திரனுக்கும் இடையில் உள்ள அரசியல், கல்வித் தகுதி, வெளியுலகத் தொடர்புகள், பன்மொழிப் புலமை போன்ற தகுதிகளும் அதனால் இவர்களுக்கிடையேயுள்ள  வேறுபாடும், எதிர்காலமும்(?) எனக்குப் புரிகிறது. 😆

அல்லது சுமந்திரன் விசுவாசம்: அவர் மட்டுந்தான் கிறிஸ்தவர் என்று ஏற்கும் உங்களால் இவர்களை கிறிஸ்தவர் என்று ஏற்கவும் மனம் வரவில்லையோ? அவரைப்பற்றிய இவ்வளவு தகவலும் தெரிந்த நீங்கள், அவருக்காகவே அழும் நீங்கள், அவரின் உறவா? அல்லது நட்பு வட்டாரமா? 

4) அதற்கும் இந்தியாவையும், கிறிஸ்தவத்தையும் தொடர்புபடுத்தாதீர்கள்.

இந்தியாதான் இலங்கையின் சகல பிரச்சனைகளுக்கும் மூல காரணம் என்பது தங்களுக்குத் தெடியாத..☹️

சிறில் மத்தீயூ....?

சொலமன் சிறில் என்பதுதான் நீங்கள் கூற வந்தவர் என நினைக்கிறேன். 

முழுதும் நனைந்த பின்னர் முக்காடிட்டுப் பிரயோசனமில்லீங்க சாத்தான். 

குறிப்பு; 

1) சுமந்திரனுக்கும் எனக்கும் எதுவிதமான தொடர்பும் இல்லை. தனிப்பட்ட ரீதியில் அவரை எனக்குத் தெரியாது. சுமந்திரனின் அரசியலில் கூட எனக்கு உடன்பாடில்லை

2) மதத்தை அடிப்படையாக வைத்து தமிழரை பிரித்தாளுவதற்கு இந்தியா மிகவும் மும்முரமாக முயற்சிக்கிறது. அதனை பல சந்தர்ப்பங்களில்  இங்கே கூறியுமுள்ளேன். அதற்கு எனது எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளேன். இந்த அடிப்படையில்தான் சுமந்திரனிற்கெதிரான தூற்றுதலை  நான் எதிர்க்கிறேன். சுமந்திரன் மட்டுமல்ல, அடைக்கலநாதன், ஆனல்ட்டுக்கெதிரான இந்தியாவின் சூழ்ச்சிகளையும் நான் நன்கறிவேன். என்னிடம் ஆதாரமும் இருக்கிறது.  இங்கே சாதாரண தமிழ்  மக்களைப்பற்றி எதனையும் நான் கூறவில்லை.  

3) யாழ் களத்திலுள்ள பலரும் இந்தியாவின் இந்த கொள்கைக்கு ஆதரவு. 

4) இந்தியாவை தொடர்புபடுத்துவது நான் அல்ல. மேலேயுள்ள செய்தித் தளம் கூறியுள்ளது தங்களுக்குப் புரியவில்லையோ.. 😔

உங்களுக்கு இது தெரியாதென்று நான் நம்பவில்லை. உண்மையில் தெரியாதென்றால் கண்களைத் திறந்து பாருங்கள். தெரியும், புரியும். 

இதன் பின்னாலுள்ள ஆபத்தும் புரியும்.. ☹️

 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பொறுத்தவரை இந்தியா நல்லது செய்யும் என்று நான் ஒருபோதும் நம்பவில்லை, நம்பப்போவதுமில்லை. எங்களின் இந்த கையறு நிலைக்கு முக்கிய காரணமே இந்தியாவின் நயவஞ்சகமே. ஆனால் சுமந்திரனின் சுத்துமாத்துக்களை எல்லாம் கிறிஸ்தவத்துக்குள் இழுத்து மூடி, கிறிஸ்தவர்கள் எல்லோரும் சுத்துமாத்துகள் என்கிற பிம்பம் ஏற்படக்கூடாது. கிறிஸ்தவ பாதிரிமாரே சுமந்திரனிடம் பல கேள்விகள் எழுப்பியுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

என்னைப்பொறுத்தவரை இந்தியா நல்லது செய்யும் என்று நான் ஒருபோதும் நம்பவில்லை, நம்பப்போவதுமில்லை. எங்களின் இந்த கையறு நிலைக்கு முக்கிய காரணமே இந்தியாவின் நயவஞ்சகமே. ஆனால் சுமந்திரனின் சுத்துமாத்துக்களை எல்லாம் கிறிஸ்தவத்துக்குள் இழுத்து மூடி, கிறிஸ்தவர்கள் எல்லோரும் சுத்துமாத்துகள் என்கிற பிம்பம் ஏற்படக்கூடாது. கிறிஸ்தவ பாதிரிமாரே சுமந்திரனிடம் பல கேள்விகள் எழுப்பியுள்ளனர்.

சுமந்திரனை வைத்துத்தான் கிறீத்துவர்களை எடைபோடுவீர்களோ...😀

இது பேணியை தலைகீழாக(குப்பற வைத்து ) வைத்து அரிசி அளப்பது போல் அல்லவா இருக்கிறது.  

அளவை பிழையே...😀

  • கருத்துக்கள உறவுகள்
On 16/10/2021 at 23:37, Kapithan said:

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கெதிராக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்தில் பங்கு கொண்டால் இந்தியா தம்மீது கோபம் கொள்ளும் நிலை ஏற்படும் எனத் தெரிவித்து கூட்டமைப்பின் தலைவர்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொள்ளாது ஓடி ஒளிவதாக ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்தவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அப்போ சுமந்திரன் த .தே . கூட்டமைப்பின் உறுப்பினர் இல்லையா? 

ஐயா கடலில் இறங்கி நிற்பதைப்பார்த்தால் அப்படிபோல்தான் உள்ளது. கடல் ராஜாவுடன் கைகோர்க்கலாம், கூட்டணி வைக்கலாம் என்று நினைத்திருப்பாரோ? 

 கடல் பேரணி வெற்றிகரமாக நகர்த்த வண்ணம் உள்ளதாக ஏற்பாட்டாளர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

21 hours ago, Kapithan said:

சுமந்திரன் எண்ட வேதக்காறன்(?) நல்ல பேர் எடுத்திடுவானெண்டெல்லோ இஞ்ச கன பேருக்கு குல நடுக்கம்....

20 hours ago, satan said:

கிறிஸ்தவ பாதிரிமாரே சுமந்திரனிடம் பல கேள்விகள் எழுப்பியுள்ளனர்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, பெருமாள் said:

May be an image of 4 people and text

ஈழத்தமிழருக்கு எந்த அரசியல் படங்கள் இனிமேற்காலங்களில் வரக்கூடாது என நினைத்தேனோ அது இன்று என் காலடியிலேயே வீழ்ந்து கிடக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kapithan said:

மீனவ நண்பனாக மாறிய சுமந்திரன்... 🤣😩

செய்தி மூலம்; ahalnews.com

 

 

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கெதிரான போராட்டம் ஆரம்பம்

WhatsApp-Image-2021-10-16-at-11.02.29-PM
Share on facebook
 
Share on twitter
 
Share on linkedin
 
Share on whatsapp

வட மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கக்கோரி முல்லைத்தீவில் இருந்து பருத்தித்துரை வரையான கடல் போராட்டம் சற்று முன்னர் ஆரம்பமானது.

WhatsApp-Image-2021-10-16-at-11.02.29-PM

முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் இருந்து ஆர்ப்பாட்டத்தினை ஆரம்பமானது. இதில் ஆரம்பத்தில் 50ற்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்களும் அரசியல் பிரமுகர்களும் மக்களும் கறுப்பு கொடிகளை தாங்கிய வண்ணம் கலந்துகொண்டுள்ளனர்.

WhatsApp-Image-2021-10-16-at-11.02.28-PM

இதேநேரம் பருத்தித்துறை செலும்போது, அந்த வழியில் உள்ள மேலும் பல மீனவ சங்கங்கள் இந்த போராட்டத்தில் இணையத் தயாராக உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp-Image-2021-10-16-at-11.02.27-PM

இதனால் பருத்தித்துறையை அடையும் சமயம் 200ற்கும் மேற்பட்ட படகுகள் இதில் இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதோடு கடல் பேரணி வெற்றிகரமாக நகர்த்த வண்ணம் உள்ளதாக ஏற்பாட்டாளர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

WhatsApp-Image-2021-10-16-at-11.02.26-PM

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படலாம் என்று ஒரு கதை அடிபடுகிறதே....  உண்மையா? வானம் கறுத்தால் மழை வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, satan said:

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படலாம் என்று ஒரு கதை அடிபடுகிறதே....  உண்மையா? வானம் கறுத்தால் மழை வரும்.

 வானம் மேற்கால கறுக்கோணும் அப்போதுதான் மழை.

அனேகமாக இது கோடை இடியாகத்தான் இருக்கும் எண்டு நினைக்கிறன். 🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.