Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களுக்காக ஆயுதம் ஏந்தி கழுத்தில் சைனட் கட்டியது தப்பு! பகிரங்க குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்காக ஆயுதம் ஏந்தி கழுத்தில் சைனட் கட்டியது தப்பு! பகிரங்க குற்றச்சாட்டு

 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, nunavilan said:

தமிழ் மக்களுக்காக ஆயுதம் ஏந்தி கழுத்தில் சைனட் கட்டியது தப்பு! பகிரங்க குற்றச்சாட்டு

 

 

 

இணைப்பிற்கு நன்றி தம்பி நுணாவில்.


தமிழரசு கட்சியும்.....தமிழர் விடுதலை கூட்டணியும்......தமிழர் கூட்டமைப்பும் ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

நான் அப்பவே சொன்னேன்   உந்த  கறுப்பு சட்டை போட்ட அப்புக்காத்துமார்களினால் தான் தமிழினமே அழிந்தது என்று....நான் சொன்னால் யார் கேட்கின்றார்கள்? 😂

சேர் பொன் இராமநாதனாம்......அவர் தொடக்கி வைச்ச அழிவு இன்று வரைக்கும் தொடர்கின்றது.......அன்று ஒரு ஈழத்து ஜின்னா இருந்திருந்தால் எமக்கெல்லாம் இந்த அழிவுகள் வந்திருக்குமா? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, குமாரசாமி said:

நான் அப்பவே சொன்னேன்   உந்த  கறுப்பு சட்டை போட்ட அப்புக்காத்துமார்களினால் தான் தமிழினமே அழிந்தது என்று....நான் சொன்னால் யார் கேட்கின்றார்கள்? 😂

நீங்கள் சத்தமாக சொல்லேல்ல போல. அதுதான் யாரும் கேட்கேல்லப் போல. 🤭🤣

  • கருத்துக்கள உறவுகள்+

"மக்களுக்கு தேசியம் பற்றிய சிந்தனை குறைந்துவிட்டது"

"தமிழர் என்ற அடையாளத்தோடு வாழ வேண்டும் என்ற சிந்தனை எங்களில் பெரும்பாலானோருக்கு இல்லாமல் போய்விட்டது"

1000 வீதம் உண்மை!

 

 

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, shanthy said:

நீங்கள் சத்தமாக சொல்லேல்ல போல. அதுதான் யாரும் கேட்கேல்லப் போல. 🤭🤣

சத்தமாய் சொன்னாலும் சொல்லாட்டிலும் உண்மை அதுதான்....:cool:

முககவசம் வடிவுக்கு போடுறேல்லை பாதுகாப்புக்கு.......சண்கிளாசை தலைக்கு மேலை தூக்கி விடுற மாதிரி  இப்ப மாஸ்கை தாடைக்கு கீழை இறக்கி.....ஸ்டையிலாக்கும்.😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

சத்தமாய் சொன்னாலும் சொல்லாட்டிலும் உண்மை அதுதான்....:cool:

முககவசம் வடிவுக்கு போடுறேல்லை பாதுகாப்புக்கு.......சண்கிளாசை தலைக்கு மேலை தூக்கி விடுற மாதிரி  இப்ப மாஸ்கை தாடைக்கு கீழை இறக்கி.....ஸ்டையிலாக்கும்.😂

ஏதோ இந்த உலகத்துக்கு சொல்ல வாறியள் கோதாரி எனக்கு தான் விளங்கேல்ல. வித்தியாசதரனின் பேச்சுக்கு கொரோனா பாதுகாப்பு எச்சரிக்கை சொல்றீங்கள்.😊

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நன்னிச் சோழன் said:

"மக்களுக்கு தேசியம் பற்றிய சிந்தனை குறைந்துவிட்டது"

"தமிழர் என்ற அடையாளத்தோடு வாழ வேண்டும் என்ற சிந்தனை எங்களில் பெரும்பாலானோருக்கு இல்லாமல் போய்விட்டது"

1000 வீதம் உண்மை!

 

 

வயிறு பசிக்கும்போது, (பைபிள்) போதனை செவியில் ஏறாது என்பதுதான் நியதி. ☹️

3 hours ago, Kapithan said:

வயிறு பசிக்கும்போது, (பைபிள்) போதனை செவியில் ஏறாது என்பதுதான் நியதி. ☹️

இரத்தின சுருக்கமான,  குறியீட்டு வரிகள். நன்றி கபிதன். ஆனால்,  போதனை செய்பவர்கள் வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு சுக போகத்துடன் வாழ்பவர்களாதலால் நீங்கள் சொன்ன ஜதார்த்தத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

வயிறு பசிக்கும்போது, (பைபிள்) போதனை செவியில் ஏறாது என்பதுதான் நியதி. ☹️

பசி வந்தபோதும்  கச்சையை  எவரும்  களட்டி  வீசுவதில்லை

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நன்னிச் சோழன் said:

"தமிழர் என்ற அடையாளத்தோடு வாழ வேண்டும் என்ற சிந்தனை எங்களில் பெரும்பாலானோருக்கு இல்லாமல் போய்விட்டது"

சந்திரிகா சனாதிபதியாக இருந்த போது, சரியாக ஞாபகமில்லை, ஒரு பிக்கு என்று எண்ணுகிறேன், சிங்கள அரசுக்கு அறிவுரை செய்த செய்தியை மட்டும் வாசித்த ஞாபகமுள்ளது. "தமிழர்கள் கேட்பதைக் கொடுத்துவிடுங்கள், அவர்கள் கிடைத்ததை வாங்கிப் பங்குபோட்டுக்கொள்ள முடியாமல், தங்களுக்குள் அடிபட்டுக், குத்துப்பட்டு வாங்கியதைத் திரும்பவும் தாம்பாளத்தில் வைத்து எங்களிடமே கொண்டுவந்து தருவார்கள்".   

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

பசி வந்தபோதும்  கச்சையை  எவரும்  களட்டி  வீசுவதில்லை

நீங்கள் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கலாம். ஆனால் தேசியம் என்பது கச்சையா அல்லது (பைபிள்) போதனையா என்பதை   இலங்கையில் போரால் பாதிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்பவர்கள் கூறுவதுதான் சரியானதாக இருக்கும் என நம்புகிறேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

நீங்கள் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கலாம். ஆனால் தேசியம் என்பது கச்சையா அல்லது (பைபிள்) போதனையா என்பதை   இலங்கையில் போரால் பாதிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்பவர்கள் கூறுவதுதான் சரியானதாக இருக்கும் என நம்புகிறேன்.

 

நான் கச்சை  என்று  குறிப்பிட்டது

தமிழரின்  ஆகக்குறைந்த சுயமரியாதையை...

தமிழர்கள்  இதை  இழக்கவேமாட்டார்கள்

அவ்வாறு  நீங்கள் எதிர்பார்ப்பது  அல்லது  நினைப்பதே மாபெரும்  தவறு  தான்.

 

  • கருத்துக்கள உறவுகள்

தேசியம் சிதைவதற்கு மக்களைக் குறை சொல்லும் வித்தி போன்ற ஊடகவியலாளர் சுமத்திரன் போன்ற அரசியல்வாதிகளுக்குகாவடி எடுக்கிறதை விட்டு விட்டு மக்களுக்குத் தேசியத்தை போதிக்கலாமே!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

   இலங்கையில் போரால் பாதிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்பவர்கள் கூறுவதுதான் சரியானதாக இருக்கும் என நம்புகிறேன்.

 

அவர்கள் வாய்பேச முடியாத குரலற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் குரலாக நாங்கள் தான் முடிவு எடுப்போம். பசித்த வயிற்றுக்கு தான் தெரியும் அதன் பெறுமதி. 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

நான் கச்சை  என்று  குறிப்பிட்டது

தமிழரின்  ஆகக்குறைந்த சுயமரியாதையை...

தமிழர்கள்  இதை  இழக்கவேமாட்டார்கள்

அவ்வாறு  நீங்கள் எதிர்பார்ப்பது  அல்லது  நினைப்பதே மாபெரும்  தவறு  தான்.

 

சுயமரியாதையை இழக்க யாரும் விரும்புவதில்லை என்பது உண்மைதான்  விசுகர். சுயமரியாதையை இழக்கச் சொல்லி யாரும்கோரப்போவதும் இல்லை. 

ஆனால் அங்குள்ளவர்களுக்கு அதனை நாங்கள் போதிக்க முடியாது. தேவையோடிருப்பவர்களுக்கு தேவையானவற்றைச் செய்து முடித்த பின்னர் அதனை நாங்கள் கூற முடியும். 

முல்லைத்தீவு பக்கமாக ஒருதரம் போய் வந்தபின்னர் இதனைக் கூறுவது நன்று. 

Edited by Kapithan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பிரஜாவுரிமைச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்த தமிழ்ப் பிரதிநிதிகள்.
16.11.1952 வெளியான சுதந்திரன் பத்திரிகையில் இலங்கைப் பாராளுமன்றத்து மேற்படி பிரஜாவுரிமைச் சட்டத்தை ஆதரித்து, எதிர்த்து வாக்களித்த தமிழ்ப்பிரதிகளின் விபரங்கள் வெளியாகியுள்ளன. இது பற்றிச் சுதந்திரனில் வெளியான சிறு தகவற் குறிப்பினையே இங்கு காண்கின்றீர்கள்.

 

269608970_10158513235473372_174261652226

  • கருத்துக்கள உறவுகள்
On 26/12/2021 at 20:43, nunavilan said:

தமிழ் மக்களுக்காக ஆயுதம் ஏந்தி கழுத்தில் சைனட் கட்டியது தப்பு! பகிரங்க குற்றச்சாட்டு

அப்படின்னா.. அந்த தமிழ் மக்களுக்கு.. தமிழ் தேசியப் பரப்பில் போதிய அறிவூட்டாமைக்கு.. பல பேப்பர்களின் சொந்தக்காரரான தங்களின் பங்களிப்பு என்ன மாதிரி வித்தியாதரன்..???!

தமிழ் மக்களில் ஒரு தொகுதிக்கு.. உலகத்தில என்ன நடக்குன்னே தெரியாது. பிறந்தமா.. வளர்ந்தமா.. வாழ்ந்தமா.. செத்தமான்னு இருக்குதுங்க. அதுகளுக்கு நீங்கள் எதனையும் போதிக்க முடியாது. 

ஆனால்.. சிங்களவர்களோடு வாழக்கிடைத்தது வாழ்வின் பெரும் பாக்கியமே கூட்டத்திடமிருந்து மக்களுக்கு தமிழ் தேசிய உணர்வு ஊட்டப்படும் என்றும் எதிர்பார்க்கக் கூடாது. அது உங்களின் தெருக்கடை நண்பராக இருப்பினும்.. வித்தியாதரன். இதனையும் நீங்கள் உள்வாங்கிட்டுப் பேசனும்.

ஏன்னா.. நீங்களோ.. உங்கள் குடும்பமோ.. நஞ்சு மாலை சுமக்கவில்லை.. கருவி மாலை சுமக்கவில்லை.. சுமந்தவர்கள் இன்று துன்பமாலை தான் சுமக்கிறார்கள்.. அவர்களை சுமந்தவர்களுக்கும் அதே தான் கதி. 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kapithan said:

வயிறு பசிக்கும்போது, (பைபிள்) போதனை செவியில் ஏறாது என்பதுதான் நியதி. ☹️

 

4 hours ago, Kapithan said:

சுயமரியாதையை இழக்க யாரும் விரும்புவதில்லை என்பது உண்மைதான்  விசுகர. சுயமரியாதையை இழக்கச் சொல்லி யாரும்கோரப்போவதும் இல்லை. 

இதில் எந்தக் கருத்து சரியாது 

Just now, Kandiah57 said:

 

இதில் எந்தக் கருத்து சரியாது 

சரயானது 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Kandiah57 said:

 

இதில் எந்தக் கருத்து சரியாது 

சரயானது 

கந்தையர்,

எனக்கென்னமோ நீங்கள் பழைய / வேறு கறளை இங்கே தீர்ப்பதாகத் தோன்றுகிறது.

எனது யூகம் சரியா ? 

  • கருத்துக்கள உறவுகள்+
19 hours ago, Kapithan said:

வயிறு பசிக்கும்போது, (பைபிள்) போதனை செவியில் ஏறாது என்பதுதான் நியதி. ☹️

ஐயனே,
வாழவே வழியில்லாதபோது தேசியம் ஏன் எனக் கேட்கிறீர்கள். ஓம், நியாயம் உள்ளதுதான். எம்மக்களில் சில பேர் அவ்வாறு உள்ளனர்.

யாழில் அங்கயன் வென்றுள்ளார். ஆனால், யாழில் வாழும் பெரும்பாலான மக்களுக்கு தாங்கள் சொல்வது பொருந்தாதே! அவர்கள் ஏன் தேசியத்தை விட்டனர்?  

சம நேரத்தில், வாழ உத்தினை வசதியும் இருந்தும் தன்னின அடையாளங்களை தொலைத்துவிட்டு, அதை மீட்டெடுக்க வசதிகள் இருந்தும் செய்யாமல், தாம் வாழும் இடத்தின் இனத்தோடு கரைந்து போய் வாழும் கொழும்புத் தமிழர்கள், பல புலம்பெயர் தமிழர்களின் இளந்தலைமுறைகளுக்கு (மப்பிள் நாட்டில் வாழும் பலதுக்கு மாவீரர் நாள் என்றாலே என்னவென்று தெரியாது! நான் நேரடியாகக் கண்டது) தாங்கள் சொல்வது பொருந்தாதே! 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, நன்னிச் சோழன் said:

ஐயனே,
வாழவே வழியில்லாதபோது தேசியம் ஏன் எனக் கேட்கிறீர்கள். ஓம், நியாயம் உள்ளதுதான். எம்மக்களில் சில பேர் அவ்வாறு உள்ளனர்.

யாழில் அங்கயன் வென்றுள்ளார். ஆனால், யாழில் வாழும் பெரும்பாலான மக்களுக்கு தாங்கள் சொல்வது பொருந்தாதே! அவர்கள் ஏன் தேசியத்தை விட்டனர்?  

சம நேரத்தில், வாழ உத்தினை வசதியும் இருந்தும் தன்னின அடையாளங்களை தொலைத்துவிட்டு, அதை மீட்டெடுக்க வசதிகள் இருந்தும் செய்யாமல், தாம் வாழும் இடத்தின் இனத்தோடு கரைந்து போய் வாழும் கொழும்புத் தமிழர்கள், பல புலம்பெயர் தமிழர்களின் இளந்தலைமுறைகளுக்கு (மப்பிள் நாட்டில் வாழும் பலதுக்கு மாவீரர் நாள் என்றாலே என்னவென்று தெரியாது! நான் நேரடியாகக் கண்டது) தாங்கள் சொல்வது பொருந்தாதே! 

 

 

நீங்கள் எல்லாவற்றையும் ஒன்றோடு ஒன்றாய் கலந்து குழப்பிக்கொள்கிறீர்கள்.

இங்கே எவருமே தேசியத்தைக் கைவிட வேண்டும் எனக் கூறவில்லை. தேசியத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, அன்றாட தேவைகளுக்காக, நாளாந்தம்  அலைந்து திரியும் அழிந்துபோன எம் மக்களுக்கு கொடுப்பதில்லை என்பதுதான் இங்கே தொக்கி நிற்கும் விடயம். 

 

  • கருத்துக்கள உறவுகள்+
2 minutes ago, Kapithan said:

நீங்கள் எல்லாவற்றையும் ஒன்றோடு ஒன்றாய் கலந்து குழப்பிக்கொள்கிறீர்கள்.

இங்கே எவருமே தேசியத்தைக் கைவிட வேண்டும் எனக் கூறவில்லை. தேசியத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, அன்றாட தேவைகளுக்காக, நாளாந்தம்  அலைந்து திரியும் அழிந்துபோன எம் மக்களுக்கு கொடுப்பதில்லை என்பதுதான் இங்கே தொக்கி நிற்கும் விடயம். 

 

ஐயனே,
என்னைப் பொறுத்தவரை நான் தெளிவாகத்தான் வினவுகிறேன். அதாவது,

  1. நான் முதலில் அந்த கதைத்தவர் கூறியவற்றை மேற்கோள்காட்டி '1000 வீதம் உண்மை' என்றேன்.
  2. நீங்கள் அதை மேற்கோளிட்டு 'வாழ வழியில்லாதபோது தேசியம் பற்றிக் கவலைப்படமாட்டினம்' என்ற பொருள்பட கருத்தெளுதினீர்கள். 
  3. நான் அதை மேற்கோளிட்டு 'வாழ வழியுள்ளவர்களும் ஏன் தேசியத்தைக் கைவிட்டனர்' என்று வினவினேன்.

மேலும் நான் தங்களிடம் 'தேசியத்தைக் கைவிட வேண்டும்' என்ற பொருள்படும் மறுப்பறுப்பினை முன்வைக்கவில்லை. நீங்கள் 'வாழ வழியில்லாதபோது தேசியம் பற்றிக் கவலைப்படமாட்டினம்' என்றபோது, ஏன் வாழ வழியுள்ளவர்கள் விட்டார்கள் என்றே வினவுகிறேன்!

தெளிவான கேள்வி, தாங்கள் கூறியதை வைத்து!

 

5 hours ago, நன்னிச் சோழன் said:

ஐயனே,
என்னைப் பொறுத்தவரை நான் தெளிவாகத்தான் வினவுகிறேன். அதாவது,

  1. நான் முதலில் அந்த கதைத்தவர் கூறியவற்றை மேற்கோள்காட்டி '1000 வீதம் உண்மை' என்றேன்.
  2. நீங்கள் அதை மேற்கோளிட்டு 'வாழ வழியில்லாதபோது தேசியம் பற்றிக் கவலைப்படமாட்டினம்' என்ற பொருள்பட கருத்தெளுதினீர்கள். 
  3. நான் அதை மேற்கோளிட்டு 'வாழ வழியுள்ளவர்களும் ஏன் தேசியத்தைக் கைவிட்டனர்' என்று வினவினேன்.

மேலும் நான் தங்களிடம் 'தேசியத்தைக் கைவிட வேண்டும்' என்ற பொருள்படும் மறுப்பறுப்பினை முன்வைக்கவில்லை. நீங்கள் 'வாழ வழியில்லாதபோது தேசியம் பற்றிக் கவலைப்படமாட்டினம்' என்றபோது, ஏன் வாழ வழியுள்ளவர்கள் விட்டார்கள் என்றே வினவுகிறேன்!

தெளிவான கேள்வி, தாங்கள் கூறியதை வைத்து!

 

“வயிறு பசிக்கும் போது”, என்று @Kapithan கூறியது மக்களின் வாழ்வு நிலை சம்பந்தப்பட்டதாக கூறிய குறியீடு. அதை நேரடியாக பசி என்று  பொருள் கொள்ளக் கூடாது.

தேசியம் தன்னாட்சி என்று தீவிர நிலை எடுத்தவர்கள் மக்களின் பாதுகாப்பு குறித்த அக்கறையை எந்த காலத்திலும் செலுத்தவில்லையென்பதுடன் இனியும்  செலுத்தமாட்டார்கள்,   என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். 

வாழ வேண்டிய வயதில் தமது பிள்ளைகளுக்கு விளக்கு வைக்கவேண்டிய நிலையை தீவிர தமிழ் தேசியர்கள் உருவாக்குவார்களே தவிர, தமது பிள்ளைகளின் தியாகத்தை பலமாக கொண்டு தமிழ் தேசியத்தை வலுப்படுத்தமாட்டார்கள்.  மாறாக அதை விழலுக்கிறைத்த நீராக்குவர். தமது( தமக்குள்) வெட்டி வீர கதைகள் கூறி/ எழுதி பொழுது போக்கவே  தமது பிள்ளைகளின் அர்பணிப்பை உபயோகிப்பரே தவிர, அவர்களின் அர்ப்பணிப்பை பொறுப்புடணச்சியுடன் உணர மாட்டார்கள்,  என்பதை மக்கள் தமது பட்டறிவு மூலம் புரிந்து கொண்டனர். 

விட்டில் பூச்சிகள் போல் மீண்டும் விளக்கில் வந்து விழும் முட்டாள்களாக இருக்க மக்கள் தயாரில்லை என்பது தான் நிதர்சனம். 

இன்று புலம் பெயர் நாடுகளில் ஓவராக சவுண்டு விடும் பல so call தமிழ் தேசியர்கள் கூட இப்படியான விடயங்களில் நேரத்தை செலவிட்டு தமது சொந்த பிள்ளைகள் கல்வியில் சிறிதளவு பின்னடைவைக் கூட சந்திக்கக் கூடாது,  என்பதில் மிக உறுதியாக இருப்பதை மக்கள் நேரடியாகக் காண்கிறார்கள். 

ஆகவே தமிழ் தேசியத்தை விரும்பும் மக்கள் கூட தீவிர தமிழ் தேசியம் என்று வாய்சசவடால் விடுபவர்கள் குறித்து அச்சப்படுகிறார்கள் என்பதே உண்மை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.