Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பொருளாதார நெருக்கடி: "ஜனாதிபதி பதவி விலகி, மேலை நாடுகளில் செல்வாக்கு உள்ள ஒருவர் கைக்கு நாடு செல்லவேண்டும்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பொருளாதார நெருக்கடி: "ஜனாதிபதி பதவி விலகி, மேலை நாடுகளில் செல்வாக்கு உள்ள ஒருவர் கைக்கு நாடு செல்லவேண்டும்"

  • ரஞ்சன் அருண்பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக
6 மணி நேரங்களுக்கு முன்னர்
 

இலங்கை போராட்டம்

பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகி, மேலை நாடுகளின் செல்வாக்கு பெற்ற ஒருவர் கைக்கு இலங்கை செல்லவேண்டும் என்று கூறியுள்ளார் பொருளாதார வல்லுநர் விஜேசந்திரன்.

இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவுகளை சந்தித்துள்ள இந்த தருணத்தில், நாட்டு மக்கள் நாளாந்தம் பல்வேறு விதமான பிரச்னைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

இவ்வாறான நிலையில், நாடு எதிர்காலத்தில் எவ்வாறான சவால்கள் மற்றும் எவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்கும் என்பது குறித்து, பிபிசி தமிழ் ஆராய்கிறது.

இந்த நிலையில், பொருளாதார நிபுணரும் பேராதனை பல்கலைக்கழக பொருளியல் துறை மூத்த விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ்.விஜேசந்திரன் பிபிசி தமிழுக்கு அளித்த நேர்க்காணல்.

கேள்வி: இலங்கை ரூபா அதன் மதிப்பை இழக்குமா? இலங்கை மற்றுமொரு நாணயத்தை ஏற்றுக்கொள்ளுமா?

பதில்: மற்றுமொரு நாணயத்தை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை இப்போதைக்கு இல்லை. இலங்கை பொதுவாக தன்னுடைய ரூபாவின் பெறுமதியை இழந்துக்கொண்டிருக்கின்றது. பாரிய முதலீடுகள், சர்வதேச நாடுகளின் உதவிகள் அல்லது நன்கொடைகள் கிடைப்பதன் ஊடாக, இந்த நிலைமையிலிருந்து மீளலாம். ஆகவே, அதன் அடிப்படையில் இன்னுமொரு நாட்டின் நாணயத்தை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கான அவசியம் இப்போதைக்கு இல்லை என்று கருத முடிகிறது.

கேள்வி: அப்படி மற்றுமொரு நாணயத்திற்குச் சென்றால், இலங்கை யாருடன் இணையும்?

 

எஸ்.விஜேசந்திரன்

பட மூலாதாரம்,S.VIJESANDIRAN

 

படக்குறிப்பு,

எஸ்.விஜேசந்திரன்

பதில்: இலங்கைக்கு அருகில் இருக்கக்கூடிய இந்தியா அல்லது சீனாவுடன் தான் இலங்கை சேர வேண்டும். ஆனாலும், தற்போதைய சூழ்நிலையில் அதற்கான சாத்தியம் இல்லை என்றே கூற வேண்டும்.

கேள்வி: கடனை திரும்ப செலுத்த முடியவில்லை என்றால், நாடு திவாலாகுமா?

பதில்: கடனை திருப்பிச் செலுத்த முடியாதபோது, இலங்கைக்குள் உதவிகள் வராது. வங்கித் துறை வங்குரோத்து அடையலாம். நாட்டின் பொருளாதாரம் முழுமையாக ஸ்தம்பித்து, நாடு முழு வங்குரோத்து நிலைக்கு அல்லது பொருளாதார மந்த நிலைக்குச் செல்லலாம்.

கேள்வி: இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கினால், நாடு மீள வழமை நிலைக்கு வர அது உதவுமா?

பதில்: சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கினால், இலங்கை எதிர்நோக்கியிருக்கின்ற பிரச்னையிலிருந்து ஓரளவு மீள முடியும். அது முழுமையாக மீள முடியாது. கடனை விட நாட்டிற்கு மானிய அடிப்படையில் பாரிய அளவிலான உதவிகள் கிடைக்கும் போதே நாடு மீள முடியும். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனைப் பெற்றால், அந்த கடனைச் செலுத்த முடியாது, திரும்பத் திரும்ப சிக்கலில் சிக்க வேண்டிய நிலைமை ஏற்படும். ஆகவே மேலை நாடுகளிடமிருந்து நிதி உதவிகள் மூலம் அல்லது மானிய அடிப்படையிலான உதவிகளைப் பெற்றுக் கொள்வதன் மூலம் தான் இந்த பிரச்னையிலிருந்து விடுப்படக் கூடிய வாய்ப்பு இருக்கும்.

 

பால்மாவுக்கான வரிசை.

கேள்வி: இந்தியா, சீனா ஆகிய நாடுகள் இலங்கைக்கு கடன் வழங்கும்பட்சத்தில், அது பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுவர உதவியாக இருக்குமா?

பதில்: ஓரளவு இருக்கும். பெருமளவு என்று சொல்ல முடியாது. இந்த இரண்டு நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு கடனை வழங்கும் போது, அது பல்வேறு நிபந்தனைகளை விடுத்தே கடனை வழங்கும். சீனாவும் இந்தியாவும் கடன் வழங்கும் போது, இலங்கை மேலும் இக்கட்டான நிலைக்குத்தான் போகும். சீனாவும் இந்தியாவும் முரண்பட்ட துருவங்கள். முரண்பட்ட துருவங்களிடமிருந்து கடனை வாங்கும் போது இந்தியா விதிக்கின்ற நிபந்தனைகளையும் சீனா விதிக்கின்ற நிபந்தனைகளையும் நிறைவேற்றும் போது இலங்கை அரசியல் மற்றும் பொருளாதார குழிக்குத் தள்ளப்படும். மீளவே முடியாத நிலைமை ஏற்படும். இது இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பனிப் போருக்கான களமாக மாற்றப்படும். ''இலங்கை குரங்கு கையில் அகப்பட்ட அப்பத்தை" போன்று இறுதியில் இருக்கும்.

கேள்வி: இலங்கை பிரச்சினைகள் முடிவடைய வேண்டும் என்றால், தற்போது இருக்கின்ற அரசாங்கம் பதவி விலக வேண்டுமா?

பதில்: இந்த அரசாங்கம் பதவி விலகுவது சரிவராது. ஜனாதிபதி பதவி விலக வேண்டும். ஏனென்றால், இலங்கையின் அதிகாரங்கள் தீர்மானம் எடுக்கும் சக்தி நாடாளுமன்றத்தை விடவும் ஜனாதிபதிக்கே அதிகம் இருக்கின்றது. அரசாங்கம் பதவி விலகி ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே ஜனாதிபதி பதவி விலகி வேறு ஒருவருக்கு பொறுப்பைக் கொடுக்க வேண்டும். அல்லது புதிய தேர்தலுக்குப் போக வேண்டும். அல்லது செய்யக்கூடிய ஆளுமை உள்ள மேலை நாடுகளின் செல்வாக்கு, மேலை நாடுகளின் அங்கீகாரம், மேலை நாடுகளின் பங்களிப்பு ஆகிய செல்வாக்கு உள்ள ஒருவருக்கு இந்த நாடு கையளிக்கப்பட வேண்டும். அப்படியாக இருந்தால் மாத்திரமே இலங்கை மீண்டெழ முடியும். அப்படி இல்லையென்றால், இலங்கைக்கு எந்த வித முன்னேற்றமும் வராது.

https://www.bbc.com/tamil/sri-lanka-60886261

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகி, மேலை நாடுகளின் செல்வாக்கு பெற்ற ஒருவர் கைக்கு இலங்கை செல்லவேண்டும் என்று கூறியுள்ளார் பொருளாதார வல்லுநர் விஜேசந்திரன்.

ரணில் பணம் கொடுத்து எழுதச் சொல்லியிருப்பாரோ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

ரணில் பணம் கொடுத்து எழுதச் சொல்லியிருப்பாரோ?

இவர் பிரதமரானால்..அமைச்சர்மார் ஒருவரும் இருக்க மாட்டினம்...இவர் கட்சியில் இவர் மட்டுமே எம் பி...அப்ப டொலர் மிச்சமாகும்..😃

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓர் இனத்தை அழித்து போர் செய்ததன் பலாபலன்கள் கண்ணெதிரே தெரிகின்றது.ஆனாலும் இன்னும் திருந்தும் யோசனை இனவாத அரசுகளுக்கு இல்லை.

அது சரி சம்பந்தனைப்போல ஒரு  ரோசம் கெட்ட அரசியல்வாதி பக்கத்தில் இருந்தால் யார்தான் திருந்துவார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

ஓர் இனத்தை அழித்து போர் செய்ததன் பலாபலன்கள் கண்ணெதிரே தெரிகின்றது.ஆனாலும் இன்னும் திருந்தும் யோசனை இனவாத அரசுகளுக்கு இல்லை.

அது சரி சம்பந்தனைப்போல ஒரு  ரோசம் கெட்ட அரசியல்வாதி பக்கத்தில் இருந்தால் யார்தான் திருந்துவார்கள்?

அவர்ஆவேசத்தில் மேசையில் குத்தினார் ....செய்தி பார்க்க வில்லையோ...ஒரு குத்துக்கு ஒரு பெட்டி...படு பிசியான பிசினெஸ்😂

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, alvayan said:

அவர்ஆவேசத்தில் மேசையில் குத்தினார் ....செய்தி பார்க்க வில்லையோ...ஒரு குத்துக்கு ஒரு பெட்டி...படு பிசியான பிசினெஸ்😂

குத்தின குத்தில மேசை இரண்டா போச்சென்றால் பாருங்கோவன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

குத்தின குத்தில மேசை இரண்டா போச்சென்றால் பாருங்கோவன்.

யோவ்  நேரகாலம் தெரியாமல் பகிடி விடாதையா    நாங்கள் சீரியசாய் கதைச்சுக்கொண்டிருக்கிறம்....😎

  • கருத்துக்கள உறவுகள்

இவங்க பேச்சுவார்த்தை முடியும் முன்னே சனம் பிச்சை எடுக்க தொடங்கி விடும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

குத்தின குத்தில மேசை இரண்டா போச்சென்றால் பாருங்கோவன்.

276149547_478104030706985_67083345107597

சம்பந்தன் ஐயா... உடைத்த மேசை.  😜

  • கருத்துக்கள உறவுகள்

துரதிஸ்டவசமாக இலங்கை வங்குரோத்தாவத்ற்கான சாத்திய கூறுகள் அதிகமாக காணப்படுகிறது என கருதுகிறேன், வெளிநாட்டுகடனோ அல்லது ஐ எம் எப் கடனோ தீர்வாகாது, இலங்கைக்கு இந்தியா மற்றும் உலக நாடுகள் கடனடிப்படையில் காசு வழங்காமல், மானியமாக வழங்க முன் வந்தாலே இலங்கையால் இப்பிரச்சனையில் இருந்து மீழ முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட கால குத்தகை அடிப்படையில் (வல்லரசுகள்) யார் யார் நாட்டில் எந்த எந்த பகுதியை கேட்கினமோ அதை அளித்துவிட்டு இருக்குற மக்களை காப்பாற்றலாம் ..😢

  • கருத்துக்கள உறவுகள்
On 26/3/2022 at 17:20, குமாரசாமி said:
On 26/3/2022 at 16:11, ஈழப்பிரியன் said:

குத்தின குத்தில மேசை இரண்டா போச்சென்றால் பாருங்கோவன்.

யோவ்  நேரகாலம் தெரியாமல் பகிடி விடாதையா    நாங்கள் சீரியசாய் கதைச்சுக்கொண்டிருக்கிறம்

 

18 hours ago, தமிழ் சிறி said:

276149547_478104030706985_67083345107597

சம்பந்தன் ஐயா... உடைத்த மேசை.  😜

படத்தோட போட்டிருக்கு இப்ப என்ன சொல்லிறியள்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

படத்தோட போட்டிருக்கு இப்ப என்ன சொல்லிறியள்?

சும்மா சொல்லப்படாது ஐயாவுக்குள் ஒரு மினி ஹல்க் தூங்கிக்கொண்டிருக்கு 
ஐயாவின் குத்தை பார்த்து கோத்தாவுக்கு யட்டி நனைந்து விட்டதாம். 
https://youtu.be/MwGkIjL1I50

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்

நான் வேலை பார்க்குமிடத்திலுள்ள சிங்களவர்கள் பேசி கொண்டார்கள் ஆகிலும் பஞ்சம் பட்டினி ஏற்பட்டால் தமிழர்களுக்கு ஓடி போக தமிழகம் இருக்கு, ஆனால் சிங்களவர்களும் முஸ்லிம்களும் இலங்கைக்குள்ளையே கிடந்து சாகவேண்டியதுதன் எண்டு.

இப்போதே பல வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் சிங்களவர்கள் வெள்ளை பச்சை அரிசி சோறும் தேங்காய் சம்பலும்தான் சாப்பிட ஆரம்பித்து விட்டார்களாம் அதுவும் ஒருவேளை, இனி அதுவும் கஷ்டம் என்றார்கள்.

வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் தங்கடை ஆக்களுக்கு ஹெல்ப் பண்ணுவினமாம் ஆனால் தங்கள் இனம் அப்படியில்லை என்று நொந்து கொண்டார்கள்.

நம்மவர்களுக்கும் வெளிநாட்டில் ஆக்கள் இல்லாத குடும்பங்களின் நிலை அதுதான் என்பதை அவங்களுக்கு சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டே பேசாமல் போய்விட்டேன்.

இப்படியாவது அவர்கள் கதறலை பார்க்க ஒரு சந்தோஷம் , நம்மவர்கள் நிலையை சொன்னால் அட எல்லோருக்கும் உள்ளதுதான் என்று தங்களுடைய இனத்தை நினைத்து மன ஆறுதல் அடையாமல் இருக்கட்டும் என்ற கொடூர சிந்தனைதான்.

ஒருகாலம் நாடு முழுவதும் நன்றாக சாப்பிட்டுக்கொண்டிருக்க நம்மை மட்டும் பட்டினி போட்டார்கள், இப்போது நாடு முழுவதும் உணவில்லாமல் இருக்கும்போதுதானே அவர்கள் பட்டினியாய் கிடக்கிறார்கள் அதனால் அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள் அல்ல என்பது எண்ணம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, valavan said:

நான் வேலை பார்க்குமிடத்திலுள்ள சிங்களவர்கள் பேசி கொண்டார்கள் ஆகிலும் பஞ்சம் பட்டினி ஏற்பட்டால் தமிழர்களுக்கு ஓடி போக தமிழகம் இருக்கு, ஆனால் சிங்களவர்களும் முஸ்லிம்களும் இலங்கைக்குள்ளையே கிடந்து சாகவேண்டியதுதன் எண்டு.

இப்போதே பல வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் சிங்களவர்கள் வெள்ளை பச்சை அரிசி சோறும் தேங்காய் சம்பலும்தான் சாப்பிட ஆரம்பித்து விட்டார்களாம் அதுவும் ஒருவேளை, இனி அதுவும் கஷ்டம் என்றார்கள்.

வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் தங்கடை ஆக்களுக்கு ஹெல்ப் பண்ணுவினமாம் ஆனால் தங்கள் இனம் அப்படியில்லை என்று நொந்து கொண்டார்கள்.

நம்மவர்களுக்கும் வெளிநாட்டில் ஆக்கள் இல்லாத குடும்பங்களின் நிலை அதுதான் என்பதை அவங்களுக்கு சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டே பேசாமல் போய்விட்டேன்.

இப்படியாவது அவர்கள் கதறலை பார்க்க ஒரு சந்தோஷம் , நம்மவர்கள் நிலையை சொன்னால் அட எல்லோருக்கும் உள்ளதுதான் என்று தங்களுடைய இனத்தை நினைத்து மன ஆறுதல் அடையாமல் இருக்கட்டும் என்ற கொடூர சிந்தனைதான்.

ஒருகாலம் நாடு முழுவதும் நன்றாக சாப்பிட்டுக்கொண்டிருக்க நம்மை மட்டும் பட்டினி போட்டார்கள், இப்போது நாடு முழுவதும் உணவில்லாமல் இருக்கும்போதுதானே அவர்கள் பட்டினியாய் கிடக்கிறார்கள் அதனால் அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள் அல்ல என்பது எண்ணம்.

நீங்கள்…. அந்த சிங்களவருக்கு,
சொல்ல வந்ததை… சொல்லாமல் விட்டது சந்தோசம்.
முஸ்லீம்களுக்கு… அரபு நாடுகள் உதவி செய்யும், என்று சொல்லியிருந்தால்..
சிங்களவன், வயிறு எரிஞ்சிருப்பான். 😂

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

நீங்கள்…. அந்த சிங்களவருக்கு,
சொல்ல வந்ததை… சொல்லாமல் விட்டது சந்தோசம்.
முஸ்லீம்களுக்கு… அரபு நாடுகள் உதவி செய்யும், என்று சொல்லியிருந்தால்..
சிங்களவன், வயிறு எரிஞ்சிருப்பான். 😂

நீங்கள் வேற தமிழ்சிறி, இப்போ எல்லாம் எங்களைவிட முஸ்லிம்களை சிங்களவர்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள், முஸ்லிம்நாடுகள் இலங்கை முஸ்லிம்களுக்கு பள்ளிவாசல் கட்டவும் இஸ்லாமிய மதவாத கல்லூரிகள் ஆரம்பிக்கவும்,மட்டுமே காசு கொடுப்பார்களாம் , மற்றும்படி பஞ்சம் பட்டினி என்றால் கண்டு கொள்ளவே மாட்டார்களாம், மிஞ்சி மிஞ்சிபோனால் ரமழான் காலத்தில் இலவச பேரீச்சம் பழ பெட்டிகள் அனுப்புவார்களாம், என்று பேசி கொள்வார்கள்,

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் சிங்களவரும் முஸ்லிம்களும் எங்களுடன் பெரிதாக பேசுவதில்லை, ஈஸ்டர் தாக்குலுக்கு பிறகு முஸ்லிம்கள் என்றாலே அவர்களுக்கு லைட்டா கசக்கிறது, சரியோ பிழையோ தமிழர்கள் நேருக்கு நேரே மோதினார்கள். கூட இருந்தே குழிபறித்து நயவஞ்சகம் பண்ணவில்லையென்ற ஒரு உணர்வு பல சிங்களவர்களுக்குள் இப்போ அரும்பியிருக்கிறது.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் கீழேஉள்ள  படத்திலிருந்துதான் கண்ணுக்கு தெரிந்த எதிரி தமிழர்களைவிட அவர்கள் ஆபத்தானவர்கள் என்றொரு முடிவுக்கு வர ஆரம்பித்தார்கள்.

Screenshot-3oo.png

 

  • கருத்துக்கள உறவுகள்
On 27/3/2022 at 03:55, vasee said:

துரதிஸ்டவசமாக இலங்கை வங்குரோத்தாவத்ற்கான சாத்திய கூறுகள் அதிகமாக காணப்படுகிறது என கருதுகிறேன், வெளிநாட்டுகடனோ அல்லது ஐ எம் எப் கடனோ தீர்வாகாது, இலங்கைக்கு இந்தியா மற்றும் உலக நாடுகள் கடனடிப்படையில் காசு வழங்காமல், மானியமாக வழங்க முன் வந்தாலே இலங்கையால் இப்பிரச்சனையில் இருந்து மீழ முடியும். 

வாங்க வேண்டிய  கையெழுத்துக்களை இப்போதே வாங்கி விட்டு (ஒப்பந்தங்களில்) சிங்கள மக்களால் மகிந்த அரசு விரட்டப்பட வேண்டும் என்பதே மேற்கின் திட்டமாம். குணா கவியழகன் சொல்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.