Jump to content

6.9 மில்லியன் மக்களின் ஆதரவு... இன்னும் இருப்பதால், ஜனாதிபதி பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை – ஜோன்ஸ்டன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

6.9 மில்லியன் மக்களின் ஆதரவு இன்னும் இருப்பதால் ஜனாதிபதி பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை – ஜோன்ஸ்டன்

6.9 மில்லியன் மக்களின் ஆதரவு... இன்னும் இருப்பதால், ஜனாதிபதி பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை – ஜோன்ஸ்டன்

இலங்கையில் உள்ள 6.9 மில்லியன் மக்களின் ஆதரவு இன்னும் இருப்பதால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தனது இராஜினாமாவை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்த அமைச்சர், மக்கள் ஆணையை ஜனாதிபதி இன்னும் வைத்திருப்பதாக தான் நம்புவதாக தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கு இன்னும் மக்களின் ஆதரவு உள்ளது என்பதை நிரூபிக்க தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தற்போது முன்னெடுக்கப்படும் பொதுப் போராட்டங்கள் சிறு போராட்டங்களே எனத் தெரிவித்த அமைச்சர், எனினும் மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர் என்பதை ஏற்றுக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1274916

Link to comment
Share on other sites

மக்களை போராட  விடாமல் ஊரடங்கு சட்டம் மூலம் அவர்களை நசுக்குவது. பின்னர் மக்கள்  சிறிய அளவில் போராடுகிறார்கள் என கணக்கு காட்டுவது.

துணிவிருந்தால் ஒரு தேர்தலை வைத்து 6.9 மில்லியன் கணக்கை சரி பார்க்கலாமே அமைச்சரே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் கோத்தாவின் போர் நட்பு நாடு பாகிஸ்தானில் இம்ரான் கான் பதவி விலகி தேர்தலுக்கு வழிவிட்டது போல்.. கோத்தா பதவி விலகி.. நடப்பு பாராளுமன்றையும் களைத்து மீண்டும் மக்கள் விருப்பறிவதே.. மக்கள் சன நாயகமாகும். 

Link to comment
Share on other sites

அமைச்சரவையை மாற்றி அமைப்பதை பார்த்தால் தொடர்ந்து ராணுவத்தின் உதவியுடன் ஆட்சியில் இருப்பதே மகிந்த சகோதரர்களின் திட்டம் போல் தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

அமைச்சரவையை மாற்றி அமைப்பதை பார்த்தால் தொடர்ந்து ராணுவத்தின் உதவியுடன் ஆட்சியில் இருப்பதே மகிந்த சகோதரர்களின் திட்டம் போல் தெரிகிறது.

எனக்கும் அப்பிடித்தான் தெரிகிறது. அவ்வளவு இலகுவாக அதிகாரத்தை விட்டு இறங்க மாட்டார்கள், அதை விட்டால் பாதுகாப்பும் கிடையாது. அமைச்சர்களை ராஜினாமா செய்யவைத்து ஏதாவது திசை திருப்பலாமா என்ற முயற்சி நடக்கிறது, எடுபடாது என்று நினைக்கிறேன். நீங்கள்தான் இந்த நிலைக்கு காரணம், நீங்கள் பதவி இறங்காமல், அமைச்சர்களை மாத்தி நாடகமா ஆடுகிறீர்கள் என்று எங்கே பார்த்தாலும் சிங்களவர்கள் கேட்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா உதவி செய்யும்...இதுதான் செய்தி..4 படகில் புலிகள்... முல்லைத்தீவில் ..தரை இறங்க முயற்சி...நடுக்கட்லில் கைது செய்யப்பட்டனர்.....

காத்தான்குடியில்...துப்பாக்கிப் பயிற்சியில்  ஈடுபபட்ட சகரானின் ஆட்கள்  கைது...

இதன் முடிவு..கோத்தா 80 இலட்சம் வாக்குகளால் ..மீண்டும் சனாதிபதியாகத் தெரிவு....படம் முடிந்தது..சுபம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, alvayan said:

இந்தியா உதவி செய்யும்...இதுதான் செய்தி..4 படகில் புலிகள்... முல்லைத்தீவில் ..தரை இறங்க முயற்சி...நடுக்கட்லில் கைது செய்யப்பட்டனர்.....

காத்தான்குடியில்...துப்பாக்கிப் பயிற்சியில்  ஈடுபபட்ட சகரானின் ஆட்கள்  கைது...

இதன் முடிவு..கோத்தா 80 இலட்சம் வாக்குகளால் ..மீண்டும் சனாதிபதியாகத் தெரிவு....படம் முடிந்தது..சுபம்..

இந்த நேரத்தில் இது எடுபடும் என நான் நினைக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

இலங்கையில் உள்ள 6.9 மில்லியன் மக்களின் ஆதரவு இன்னும் இருப்பதால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை

அங்க, இங்க என்று கண்டும் காணாமலும் இருக்கிறவர்களையும் உசுப்பி போராட அழைக்கிறார் இவர்.

11 hours ago, தமிழ் சிறி said:

ஜனாதிபதிக்கு இன்னும் மக்களின் ஆதரவு உள்ளது என்பதை நிரூபிக்க தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

உதைத்தான் முதுகிலே குத்துறது என்கிறது. தெரியாமல் நடிப்பார்கள் தெரிந்தவர்கள்.

Link to comment
Share on other sites

இன்றைய பேரணியில் அதன் ஒழுங்கமைப்பாளர் பேசும் போது மகிந்த குடும்பத்தை நாட்டை விட்டு வெளியேற விடக்கூடாது. நாட்டு மக்களின் சொத்தை கொள்ளை அடித்தவர்கள். பொன்சேகாவை போட்ட சிறையில் போட வேண்டும். மகிந்த சகோதரர்கள் அமெரிக்க குடியுரிமையை கொண்டவர்கள். " நான் கேள்விப்படுகிறேன் நாமலின் மனைவியும் அவரது பெற்றோரும் நாட்டை விட்டு வெளியேறி விட்டார்கள் என".  மகிந்த குடும்பத்தை வெளியேற விடக்கூடாது. இவர்களால் தான் மக்கள் இவ்வளவு கஸ்டப்படுகிறார்கள். என்றார்

Link to comment
Share on other sites

அடிப்படையில் ஜோன்ஸ்டன் ஒரு தமிழர். இவரது அப்பா குருணாகலின்  ஐ.தே.க சார்பாக நின்று மேயராக (முதல்வர்) இருக்கும் போது என் அப்பாவின் நண்பராக இருந்தவர் ( என் அப்பா குருணாகல் மாநகரசபையின் கணக்காளராக இருந்தமையால்). இவரது அப்பாவால் சரளமாக தமிழ் கதைக்க முடியும். ஜெயராஜ் பெர்ணாந்து புள்ளே போன்று தமிழ் அடையாளத்தை அரசியலுக்காக மறைத்தவர்களில் இவர் குடும்பமும் ஒன்று.

சிங்கள தலைவர்களை போற்றும் தமிழர்கள் சிங்கள மக்களை விட அதிகமாக அவர்களுக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்பதை இவரும் நிரூபிக்கின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, நிழலி said:

அடிப்படையில் ஜோன்ஸ்டன் ஒரு தமிழர். இவரது அப்பா குருணாகலின்  ஐ.தே.க சார்பாக நின்று மேயராக (முதல்வர்) இருக்கும் போது என் அப்பாவின் நண்பராக இருந்தவர் ( என் அப்பா குருணாகல் மாநகரசபையின் கணக்காளராக இருந்தமையால்). இவரது அப்பாவால் சரளமாக தமிழ் கதைக்க முடியும். ஜெயராஜ் பெர்ணாந்து புள்ளே போன்று தமிழ் அடையாளத்தை அரசியலுக்காக மறைத்தவர்களில் இவர் குடும்பமும் ஒன்று.

சிங்கள தலைவர்களை போற்றும் தமிழர்கள் சிங்கள மக்களை விட அதிகமாக அவர்களுக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்பதை இவரும் நிரூபிக்கின்றார்.

தகவலுக்கு நன்றி நிழலி .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.