Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமைதி வழியில்... போராடிய மக்கள் மீது, வன்முறை பிரயோகிக்கப்பட்டமையை... கண்டிக்கிறேன் – அங்கஜன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமைதி வழியில் போராடிய மக்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டமையை கண்டிக்கிறேன் – அங்கஜன்

அமைதி வழியில்... போராடிய மக்கள் மீது, வன்முறை பிரயோகிக்கப்பட்டமையை... கண்டிக்கிறேன் – அங்கஜன்

ஜனநாயக மரபுகளின்படி அமைதி வழியில் போராடிய மக்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டமையை கண்டிக்கிறேன் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது உத்தியோகபூர்வ முகநூலில் பதிவிட்டுள்ளார்.

காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகை முன்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் மீது , வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்தி , அவர்களின் கூடாரங்களை அடித்து நொறுக்கி அவற்றுக்கு தீ வைத்துள்ளது.

இந்த சம்பவங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தனது உத்தியோக பூர்வ முகநூலில் மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில் மேலும் உள்ளதாவது, பொதுமக்கள் தமது கோரிக்கைகளை அமைதிவழியில் வெளிப்படுத்திய நிலையில்‌, அவர்கள் மீது இன்று கொழும்பில் இடம்பெற்ற வன்முறைத் தாக்குதலானது மிகவும் அநாகரிகமானது.

ஜனநாயக பண்புகளுக்கமைய அமைதியாக போராடும் உரிமை நாட்டு மக்களுக்குண்டு. இன்று அந்த உரிமை மீது இரத்தக்கறை படிந்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவங்களானது நாட்டின் மக்கள் உரிமைகள், அரசியல் உரிமைகள், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக மாண்பின் மீது நிகழ்த்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலாக நான் கருதுவதோடு எனது கண்டனத்தை வேதனையடைந்த மனதுடன் தெரிவிக்கிறேன்.

சர்வதேச ஒத்துழைப்புடன் நாடு, பொருளாதார மீட்சியை எட்டுமென எதிர்பார்த்துள்ள நிலையில் இச்சம்பவமானது பேரிடியாக மாறியுள்ளது என்றுள்ளது.

https://athavannews.com/2022/1280909

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, தமிழ் சிறி said:

அமைதி வழியில் போராடிய மக்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டமையை கண்டிக்கிறேன் – அங்கஜன்

அமைதி வழியில்... போராடிய மக்கள் மீது, வன்முறை பிரயோகிக்கப்பட்டமையை... கண்டிக்கிறேன் – அங்கஜன்

ஜனநாயக மரபுகளின்படி அமைதி வழியில் போராடிய மக்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டமையை கண்டிக்கிறேன் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது உத்தியோகபூர்வ முகநூலில் பதிவிட்டுள்ளார்.

காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகை முன்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் மீது , வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்தி , அவர்களின் கூடாரங்களை அடித்து நொறுக்கி அவற்றுக்கு தீ வைத்துள்ளது.

இந்த சம்பவங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தனது உத்தியோக பூர்வ முகநூலில் மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில் மேலும் உள்ளதாவது, பொதுமக்கள் தமது கோரிக்கைகளை அமைதிவழியில் வெளிப்படுத்திய நிலையில்‌, அவர்கள் மீது இன்று கொழும்பில் இடம்பெற்ற வன்முறைத் தாக்குதலானது மிகவும் அநாகரிகமானது.

ஜனநாயக பண்புகளுக்கமைய அமைதியாக போராடும் உரிமை நாட்டு மக்களுக்குண்டு. இன்று அந்த உரிமை மீது இரத்தக்கறை படிந்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவங்களானது நாட்டின் மக்கள் உரிமைகள், அரசியல் உரிமைகள், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக மாண்பின் மீது நிகழ்த்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலாக நான் கருதுவதோடு எனது கண்டனத்தை வேதனையடைந்த மனதுடன் தெரிவிக்கிறேன்.

சர்வதேச ஒத்துழைப்புடன் நாடு, பொருளாதார மீட்சியை எட்டுமென எதிர்பார்த்துள்ள நிலையில் இச்சம்பவமானது பேரிடியாக மாறியுள்ளது என்றுள்ளது.

https://athavannews.com/2022/1280909

இஞ்சை பார்றா இவர் இன்னும் இருக்கிறராம்

  • கருத்துக்கள உறவுகள்

மூழ்கும் கப்பலில் இருந்து பாய்ந்தோடும் எலி 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

மூழ்கும் கப்பலில் இருந்து பாய்ந்தோடும் எலி 🤣

நோ பேத்தை  வால் 

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு  இது  பழகியது  தானே??

  • கருத்துக்கள உறவுகள்

விகாரைக்கு காணி பிடித்துக்குடுக்கிறவர்...நல்ல காணியாப் பார்த்து இவ

ருக்கும் ஒரு இடத்தைப் போட்டுக் கொடுங்கோ....விட்டால் நிறையக் காணி பிடிச்சுக் கொடுப்பார்..பார்த்துச் செய்யுங்கோ

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

நோ பேத்தை  வால் 

பெருமாளுக்கு தமிழ் விட்டுப்போச்சுதோ? 

அது பேத்தை வால் அல்ல வால்பேத்தை 🤣

  • கருத்துக்கள உறவுகள்

முன்னம் இட்டதீ முப்புறத்திலே, அறம் நின்று கொல்லும். ஐ நா உட்பட இந்தியா ஈறாக மேற்குலக நாடுகளுடன் தமிழர்களைக் கொன்றொழித்த பாவம் இப்போது அனைவரதும் அடிமடியிலும் கைவைக்கிறது உக்ரைன் ரஸ்யா ஐரோப்பியா என எல்லாஇடங்களிலும் இருப்பில் நெருப்புப் பற்றிவிட்டது. நிச்சயம் சிறிய ரக அணுகுண்டுகள் இந்த நாடுகளைப் பதம்பார்க்கும். அதன் பின்பு இந்தியாவுக்கும் இதே நிலை வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

பெருமாளுக்கு தமிழ் விட்டுப்போச்சுதோ? 

அது பேத்தை வால் அல்ல வால்பேத்தை 🤣

ஆனந்தக் களிப்பில்...என்ன செய்வது..என்ன எழுதுவது என்பதான் பதகளிப்பு..🙃

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, alvayan said:

ஆனந்தக் களிப்பில்...என்ன செய்வது..என்ன எழுதுவது என்பதான் பதகளிப்பு..🙃

சொல்லவந்ததும் அதுதான் .

7 hours ago, வாதவூரான் said:

இஞ்சை பார்றா இவர் இன்னும் இருக்கிறராம்

சனம்  இருக்கிற வெறியில் இவருக்குத்தான் கணக்கு பண்ணிக்கொண்டு இருந்தவை இப்படி எதிர் அறிக்கை விட்டு தப்பி விட்டேன் என்று நினைக்கிறார் போல் உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்

எனது யோசனை! இவர்களின் வாலுகள் எங்கே ஒழியப்போகிறார்கள்? தப்பவும் வழியில்லை, தடுக்கவும் வழியில்லை, ஆடிய ஆட்டம் திரும்பி ஆடப்போகுது. 

கடவுள் நடுநிலை தவறாத நீதிபதி! அவர் நீண்ட பொறுமை காப்பதால் கடவுளே இல்லை, நானே கடவுள் என்று ஆடியவர் பக்கம் அவர் தன் வாளை கூர்மையாக்குவார். அவர் காத்த பொறுமை; நாம் திருந்த வேண்டுமென்பதற்காக. ஏழைகளின் கண்ணீரை அவர் நீண்ட காலம் காணாதிருக்க மாட்டார். 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, satan said:

எனது யோசனை! இவர்களின் வாலுகள் எங்கே ஒழியப்போகிறார்கள்? தப்பவும் வழியில்லை, தடுக்கவும் வழியில்லை, ஆடிய ஆட்டம் திரும்பி ஆடப்போகுது. 

கடவுள் நடுநிலை தவறாத நீதிபதி! அவர் நீண்ட பொறுமை காப்பதால் கடவுளே இல்லை, நானே கடவுள் என்று ஆடியவர் பக்கம் அவர் தன் வாளை கூர்மையாக்குவார். அவர் காத்த பொறுமை; நாம் திருந்த வேண்டுமென்பதற்காக. ஏழைகளின் கண்ணீரை அவர் நீண்ட காலம் காணாதிருக்க மாட்டார். 

கூறியது அவ்வளவும் உண்மை 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பட்டியல் இருக்கு. பாத்துச் செய்யுங்கோ

 

1. டக்கிளஸ்

2. பிள்ளையான்

3. வியாழேந்திரன்

4. அங்கஜன்

5. கருணா

6. குடு சித்தாத்

 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரஞ்சித் said:

ஒரு பட்டியல் இருக்கு. பாத்துச் செய்யுங்கோ

 

1. டக்கிளஸ்

2. பிள்ளையான்

3. வியாழேந்திரன்

4. அங்கஜன்

5. கருணா

6. குடு சித்தாத்

 

ஏன் தர்மலிங்கம் சித்தார்த்தனை விட்டுடுட்டீங்க?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.