Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதமரின் இல்லத்தைத் தீயிட்டுக்கொளுத்துபவர்கள் இரக்கம் காண்பிப்பதற்குத் தகுதியற்றவர்கள் - சுப்ரமணியன் ஸ்வாமி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமரின் இல்லத்தைத் தீயிட்டுக்கொளுத்துபவர்கள் இரக்கம் காண்பிப்பதற்குத் தகுதியற்றவர்கள் - சுப்ரமணியன் ஸ்வாமி

(நா.தனுஜா)

பிரதமரின் இல்லங்களைக்கூட தீயிட்டுக்கொளுத்தி, பாராளுமன்ற உறுப்பினர்கள்மீது தாக்குதல் நடத்துவதெனில், அந்த கலகக்காரர்கள் இரக்கம் காண்பிக்கப்படுவதற்கு எவ்வகையிலும் தகுதியற்றவர்களாவர் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் ஸ்வாமி தெரிவித்துள்ளார்.

'மைனா கோ கம' மற்றும் 'கோட்டா கோ கம' ஆகிய இடங்களில் கடந்த திங்கட்கிழமை அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறைத்தாக்குதல்களை அடுத்து நாடளாவிய ரீதியில் அமைதியின்மை நிலையொன்று தோற்றம் பெற்றுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் நேற்று பதிவொன்றைச் செய்திருந்த சுப்ரமணியன் ஸ்வாமி, 'அரசியலமைப்பு முறைமையை நிலைநாட்டுவதற்கு இந்திய இராணுவம் அனுப்பிவைக்கப்படவேண்டும்' என்று வலியுறுத்தியிருந்தார்.

அதனைத்தொடர்ந்து இன்றைய தினம் அவர் செய்திருக்கும் மற்றொரு பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

'பிரதமரின் இல்லங்களைக்கூட தீயிட்டுக்கொளுத்தி, பாராளுமன்ற உறுப்பினர்கள்மீது தாக்குதல் நடத்துவதெனில், அந்த கலகக்காரர்கள் இரக்கம் காண்பிக்கப்படுவதற்கு எவ்வகையிலும் தகுதியற்றவர்களாவர். எமது அயல்நாடு மற்றுமொரு லிபியாவாக மாறுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்கமுடியாது' என்று அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 

 

https://www.virakesari.lk/article/127323

  • கருத்துக்கள உறவுகள்

சுக்கிலாம்..... பிரகளாம்....

நல்ல மப்பால எழும்பி..... அலம்பறை பண்ணுறார்....

அடிவாங்கிய பா.உ கள், அடிக்க ஆட்களை கொண்டு வந்தவர்கள்... 😁

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

பிரதமரின் இல்லத்தைத் தீயிட்டுக்கொளுத்துபவர்கள் இரக்கம் காண்பிப்பதற்குத் தகுதியற்றவர்கள் - சுப்ரமணியன் ஸ்வாமி

இது வாங்கின காசுக்கு மேல கூவுது .

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

இது வாங்கின காசுக்கு மேல கூவுது .

மகிந்தவுக்கு பாரத ரத்னா விருது கொடுங்க வேணும் எண்டு கோரிய, அசட்டு  கிருமி.... இந்தாள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, கிருபன் said:

பிரதமரின் இல்லத்தைத் தீயிட்டுக்கொளுத்துபவர்கள் இரக்கம் காண்பிப்பதற்குத் தகுதியற்றவர்கள் - சுப்ரமணியன் ஸ்வாமி

சூப்ரமணியன் சிலோன் பிரச்சனை கதைக்கலாம் ஆனால் ஈழத்தமிழன் அதுவும் புலம்பெயர் தமிழன் தமிழ்நாட்டு அரசியலை பற்றி கதைக்கப்படாது.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Nathamuni said:

மகிந்தவுக்கு பாரத ரத்னா விருது கொடுங்க வேணும் எண்டு கோரிய, அசட்டு  கிருமி.... இந்தாள்.

நல்லதுதான் சொல்லியிருக்கார் அந்த செய்தியையும் சமூக வலைதளம்களில் உலாவ விடுவம் .

புதிய அவதார்  கோத்தா ராஜபாக்ஸ ஆதரவாளர் முகம் செம்மையாய் வாங்கி கட்டுது  அந்த அவதார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Nathamuni said:

மகிந்தவுக்கு பாரத ரத்னா விருது கொடுங்க வேணும் எண்டு கோரிய, அசட்டு  கிருமி.... இந்தாள்.

இது கொடுத்த காசுக்கு மேலாக கூவேலை, இது தனக்கு வரவேண்டிய காசின்ற மிச்சம் வரவில்லை என்று அழுகிறது. மகிந்த திரும்ப வந்தால்தான் காசு அல்லது பெப்பே தான்… பாவம்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ragaa said:

இது கொடுத்த காசுக்கு மேலாக கூவேலை, இது தனக்கு வரவேண்டிய காசின்ற மிச்சம் வரவில்லை என்று அழுகிறது. மகிந்த திரும்ப வந்தால்தான் காசு அல்லது பெப்பே தான்… பாவம்

அட இப்படியும் எடுத்துக்கொள்ளலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பிரமணியம் சுவாமி மகிந்த சகோதரர்களின் குடும்ப நண்பர். அவர்களுடன் வியாபார கொடுக்கல் வாங்கல்கள் செய்யக்கூடும். அனுதாபம், ஆவேசம் வராதா பின்ன.. மகிந்த சகோதரர்களின் ஆட்சி ஆட்டம் கண்டால் அதன் பின் சாமியை இலங்கையில் வேறு யார் அழைத்து, மரியாதை செய்து, கெளரவிக்க போகின்றார்கள்?

தனது முன்னைய டிவிட்டர் பதிவுகளில் பிரேமதாசாவே இலங்கையில் இந்திய இராணுவத்தின் தோல்விக்கு காரணம் என்றும் கூறி உள்ளார். சாமி சஜித் அதிகாரத்தை பிடிப்பதை விரும்பமாட்டார் என்றே தோன்றுகின்றது. 

சாமியை டுவிட்டரில் பத்து மில்லியன் கணக்குகள் பின் தொடர்கின்றன. டுவிட்டருக்கு வந்த சோதனை!

  • கருத்துக்கள உறவுகள்

அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.  

07sld1.jpg

வெளியல நின்று சவுண்ட் கொடுக்காமல் நண்பனுக்காக களத்தில் இறங்குவதே சிறப்பு.👌

  • கருத்துக்கள உறவுகள்

 

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.

உடுத்தியுள்ள வேட்டியானது உடலில் இருந்து அவிழ்ந்து கீழே நழுவியபோது உடனே கை விரைந்து சென்று அதை சரிசெய்துவிடுகிறது. அதுபோல, ஒருவனுக்கு துன்பம் நேரிட்டபோது, உடனே சென்று அந்தத் துன்பத்தை நீக்கி விடுவதற்கு, உதவுவது சிறந்த நட்பாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கிருபன் said:

பிரதமரின் இல்லத்தைத் தீயிட்டுக்கொளுத்துபவர்கள் இரக்கம் காண்பிப்பதற்குத் தகுதியற்றவர்கள் - சுப்ரமணியன் ஸ்வாமி

இதனை... சு.சாமி, "கோத்தாகோகம" வில் நின்று சொல்ல துணிவு இருக்கின்றதா?
வாய்... இருந்தால், என்னத்தையும் கதைக்கிறாததா?
அவனனவன்  வேதனை, அவனுக்குத்தான் தெரியும்.
இதற்குள்.... கதைக்க, உமக்கு என்ன, அருகதை இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

பிரதம்ர் என்றவுடன் மோடி நினைவுக்கு வந்துவிட்டது சுவாமிக்கு..😆

முன்னம் இட்ட தீ இந்தியாவுக்கும் பரவும் என்கின்ற பயம் போல...😆

Edited by Kapithan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, தமிழ் சிறி said:

இதனை... சு.சாமி, "கோத்தாகோகம" வில் நின்று சொல்ல துணிவு இருக்கின்றதா?

அறளை பேந்த சூப்ரமணியம் அங்கை நிண்டு கொண்டு கோ கோத்தபாய எண்டு கத்தினாலும் கத்தும்.....இந்த கலியாணம் தெரியும் தானே 😂

 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

அறளை பேந்த சூப்ரமணியம் அங்கை நிண்டு கொண்டு கோ கோத்தபாய எண்டு கத்தினாலும் கத்தும்.....இந்த கலியாணம் தெரியும் தானே 😂

 

 

ரொம்ப குசும்பு பிடித்த அல்லது மறை கழன்ற சாமி போல் உள்ளதே. 

  • கருத்துக்கள உறவுகள்

சாமி நடிக்குது.....

யோவ் சாமி..... நம்ம முன்னாள் பிரதமர் மற்றும் அவரது அல்லக்கைகள் வீடுகளை எரிச்சதுக்கு பின்னால் பக்கா திட்டமிடல், வேகம்..... ஒழுங்கமைப்பு..... எல்லாத்தும் காரணம்.... உங்கள் ரோ என்று.... புலம்புகிறார்.... திருகோணமலையில் இருந்து ஒருத்தர்....

😉

  • கருத்துக்கள உறவுகள்

சாமிக்கு தான் செய்த அநியாயத்துக்கு தன் வீடுகளையும் எரிச்சிடுவாங்களோன்ன பயத்தில உளறுது. மகிந்தாவிட்ட வாங்கி பெட்டிகள் அனைத்தும் பாவத்தின் கணக்கென்னு.. சாமிக்கு விளங்கும் போது.. உடம்பு ஊசலாடுமோ தெரியல்ல. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

 

ரொம்ப குசும்பு பிடித்த அல்லது மறை கழன்ற சாமி போல் உள்ளதே. 

 செய்தது பிழை எண்டு தெரிஞ்சும்..... நிண்டு சாந்தி முகுர்த்தம்  நடத்தீட்டு போற பிளான்போல பல்லை காட்டிகொண்டு நிக்குது 😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.