Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் அமைப்புகள் மீதான... தடையை நீக்கியது, அரசாங்கம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image

புலம்பெயர் அமைப்புகள் மீதான... தடையை நீக்கியது, அரசாங்கம்.

இலங்கை அரசாங்கம் சில புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் அமைப்புகள்  மீதான தடையை நீக்கியுள்ளது.

உலகதமிழர் பேரவை மற்றும் அதன் பேச்சாளர் சுரேன்சுரேந்திரன் மீதான தடைகளை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது.

பிரித்தானிய தமிழர் பேரவை, கனடா தமிழ் காங்கிரஸ் ஆகிய அமைப்புகள் மீதான தடையையும் இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடை நீக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/133487?fbclid=IwAR0BlNvSchaz2DpfXZ0wQ02QbjM6vj0iuIpB5q6jD6vVobVGxukdp2m28dc

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப தமிழீழம் கிடைச்சிடும் எண்டுறீயள்?

🤣

இந்த நரியை நம்ப முடியாது,  முன்னரைவிட தபோது அதிக  எச்சரிக்கையாக இருக்க வேண்டும். . 🧐

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kapithan said:

அப்ப தமிழீழம் கிடைச்சிடும் எண்டுறீயள்?

🤣

இந்த நரியை நம்ப முடியாது,  முன்னரைவிட தபோது அதிக  எச்சரிக்கையாக இருக்க வேண்டும். . 🧐

நம்பினால் அவ்வளவுதான் சொல்ல  முடியும் பிரச்சினை தீர்ந்த பிறகு மொத்தமாக சொருகிடுவாங்கள் அவர்கள் பெளத்த குடைக்குள் நின்றே வலைவீசுகிறார்கள் இழுக்கும் வரைக்கும் இழுத்து சட்டிக்குள் போட்டிடுவார்கள் விளங்கினால் சரி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அதன் பேச்சாளர் சுரேன்சுரேந்திரன் மீதான தடைகளை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது.

ஏன் இவரை மட்டும் தனியாக பெயரிடுகிறார்கள்? சுமந்திரன் சொல்லியிருப்பாரோ?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

image

புலம்பெயர் அமைப்புகள் மீதான... தடையை நீக்கியது, அரசாங்கம்.

இலங்கை அரசாங்கம் சில புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் அமைப்புகள்  மீதான தடையை நீக்கியுள்ளது.

உலகதமிழர் பேரவை மற்றும் அதன் பேச்சாளர் சுரேன்சுரேந்திரன் மீதான தடைகளை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது.

பிரித்தானிய தமிழர் பேரவை, கனடா தமிழ் காங்கிரஸ் ஆகிய அமைப்புகள் மீதான தடையையும் இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடை நீக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/133487?fbclid=IwAR0BlNvSchaz2DpfXZ0wQ02QbjM6vj0iuIpB5q6jD6vVobVGxukdp2m28dc

இவர்கள் எல்லாம் அவர்கள் ஆட்கள். சோனியாகாந்தி தன்னுடன் தமிழர்பிரச்சினை தொடர்பாக கனிவோடுபேசினார் என்று அறிக்கை விட்டவர்தான் இந்த சுரேந்திரன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Kapithan said:

அப்ப தமிழீழம் கிடைச்சிடும் எண்டுறீயள்?

🤣

இந்த நரியை நம்ப முடியாது,  முன்னரைவிட தபோது அதிக  எச்சரிக்கையாக இருக்க வேண்டும். . 🧐

இந்த நரி 2009 பின்னர் தந்திரங்களை மட்டுமே சிந்தித்து பல திட்டங்களை தீட்டியிருக்கும். அதன் முதல் படி திட்டம் தான் ஜனாதிபதி

  • கருத்துக்கள உறவுகள்

நரியின் போக்கில் நரியாகி நாமும் பிழைச்சுக் கொள்ள வேண்டியதுதானே தவிர நரிக்கு பனங்காட்டு சலசலப்புக் காட்டி நாம் எதையும் சாதிக்க முடியாது. கள நிலவரத்திற்கு ஏற்ப தந்திரோபாயம் மாறனும் இல்லைன்னா.. முள்ளிவாய்க்கால் தான் கதி. 

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய தமிழர் பேரவை, கனடா தமிழ் காங்கிரஸ் ஆகிய அமைப்புகள் மீதான தடையையும் இ  லங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது.                                                                                                                                                                                                                      அப்ப கனடாத் தெருத் திருவிழாவிற்கு...கண்டியன் நடனமும்....ரூபவாகினியும் வரும்  என்கிறியள்....  அப்ப சுமந்து குழுவுடன் ரணிலும் வருவாரோ...வந்தால் டொலராப் பொறுக்கலாம்..           

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

உதவி தேடி தட்டிய கதவுகள் திறக்க மறுத்துவிட்டன, வேறு வழியில்லை நரியாருக்கு, புலம்பெயர்ந்தோர் கதவை தட்ட வேண்டிய கட்டாயம் வேறொன்றுமில்லை. விட்டில் பூச்சிகள் வந்து விழும்!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, alvayan said:

பிரித்தானிய தமிழர் பேரவை, கனடா தமிழ் காங்கிரஸ் ஆகிய அமைப்புகள் மீதான தடையையும் இ  லங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது.           

அவை ஏற்கனவே உள்ளுக்குள்ளால் நல்ல உறவு இன்று சண்டே ஈலிங் அம்மன் தேர் இரண்டு கொட்டகை போட்டு இருக்கினம் BTF காரர் உண்டியல் குலுக்கிரம் வந்த காசுடன் கொழும்பு போறம் தமிழ் ஈழத்துகாண பேச்சு வார்த்தையை தொடங்கிரம் ஈழத்தை வாங்கிறம் .....😀

14 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நம்பினால் அவ்வளவுதான் சொல்ல  முடியும் பிரச்சினை தீர்ந்த பிறகு மொத்தமாக சொருகிடுவாங்கள் அவர்கள் பெளத்த குடைக்குள் நின்றே வலைவீசுகிறார்கள் இழுக்கும் வரைக்கும் இழுத்து சட்டிக்குள் போட்டிடுவார்கள் விளங்கினால் சரி

அது விளங்குபவர்களுக்கு விளங்கனுமே ?

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கெனவே சுமந்திரன் உந்த புலம்பெயர்ந்தோரை வளைத்துப்போட ஓடுப்பட்டு திரிஞ்சவர் கண்டியளோ! யாராவது வந்தால் சுரேந்திரனையும் சேர்த்து இழுத்து வரலாம் என்று, ஒருவரும் மாட்டுப்படேல்லை, காத்திருந்து வேறு வழியில்லாமல் இப்போ சுரேந்திரன் தலைமை எடுக்குது, தன்னை பாத்து யாராவது தொடருவினை என்று. சர்வதேசமே ஒதுங்கும்போது இவர்கள் வந்து முறியப்போகினம். 

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, satan said:

ஏற்கெனவே சுமந்திரன் உந்த புலம்பெயர்ந்தோரை வளைத்துப்போட ஓடுப்பட்டு திரிஞ்சவர் கண்டியளோ! யாராவது வந்தால் சுரேந்திரனையும் சேர்த்து இழுத்து வரலாம் என்று, ஒருவரும் மாட்டுப்படேல்லை, காத்திருந்து வேறு வழியில்லாமல் இப்போ சுரேந்திரன் தலைமை எடுக்குது, தன்னை பாத்து யாராவது தொடருவினை என்று. சர்வதேசமே ஒதுங்கும்போது இவர்கள் வந்து முறியப்போகினம். 

ஒருமுறை Javaharlal Neru பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை  தொடர்பாக  பின்வருமாறு கூறினார் (சாராம்சம் ). "கை குலுக்குவதில் உள்ள நன்மை, கை குலுக்குபவர் (Pakisthan)  தனது கையை விட்டாலோ அல்லது  மற்றையவரது (India) கையைத் திருகினாலோ திருகுபவரது (Pakisthan) கை மற்றவரது(India ) பிடியில் உள்ளது" என்று. 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழ் சிறி said:

image

புலம்பெயர் அமைப்புகள் மீதான... தடையை நீக்கியது, அரசாங்கம்.

இலங்கை அரசாங்கம் சில புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் அமைப்புகள்  மீதான தடையை நீக்கியுள்ளது.

உலகதமிழர் பேரவை மற்றும் அதன் பேச்சாளர் சுரேன்சுரேந்திரன் மீதான தடைகளை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது.

பிரித்தானிய தமிழர் பேரவை, கனடா தமிழ் காங்கிரஸ் ஆகிய அமைப்புகள் மீதான தடையையும் இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடை நீக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/133487?fbclid=IwAR0BlNvSchaz2DpfXZ0wQ02QbjM6vj0iuIpB5q6jD6vVobVGxukdp2m28dc

 

நல்ல விடயம். தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். இலங்கையின் வடக்கு, கிழக்கில் மக்கள் குடியிருப்புக்களில் அடாத்தாக நிலைகொண்டுள்ள இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்படவேண்டும். சகல இனங்களிடையேயும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் நல்லதொரு சுமுகமான சூழலை எற்படுத்தவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ! இந்தமுறை ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான குரல்கள் ஒலிக்காது என்கிறீர்கள். அதுதான் புலம்பெயர்ந்தோரை வளைத்து பிடித்தாச்சே, நரிபுத்தி! கோத்தபாய மனித உரிமைகளின் பிதா என்று நிறுவுவார் நரியார் ஜெனிவாவில். மீண்டும் மீண்டும் ஏமாறும் முட்டாள்கூட்டம். சுமந்திரன் இருக்கும்வரை சிங்களம் எல்லாவற்றையும் வெடியாளும். பிரதம மந்திரி பதவி பேரம்பேசப்படலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நம்பினால் அவ்வளவுதான் சொல்ல  முடியும் பிரச்சினை தீர்ந்த பிறகு மொத்தமாக சொருகிடுவாங்கள் அவர்கள் பெளத்த குடைக்குள் நின்றே வலைவீசுகிறார்கள் இழுக்கும் வரைக்கும் இழுத்து சட்டிக்குள் போட்டிடுவார்கள் விளங்கினால் சரி

உண்மை!

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

உதவி தேடி தட்டிய கதவுகள் திறக்க மறுத்துவிட்டன, வேறு வழியில்லை நரியாருக்கு, புலம்பெயர்ந்தோர் கதவை தட்ட வேண்டிய கட்டாயம் வேறொன்றுமில்லை. விட்டில் பூச்சிகள் வந்து விழும்!

 

23 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நம்பினால் அவ்வளவுதான் சொல்ல  முடியும் பிரச்சினை தீர்ந்த பிறகு மொத்தமாக சொருகிடுவாங்கள் அவர்கள் பெளத்த குடைக்குள் நின்றே வலைவீசுகிறார்கள் இழுக்கும் வரைக்கும் இழுத்து சட்டிக்குள் போட்டிடுவார்கள் விளங்கினால் சரி

சிறிலங்கா அரசை ஏதோ அரசியல் அறத்தின் மீதான அரசாக எண்ணினால் மட்டுமே இந்த நகர்வை அதிசயிக்க வேண்டும். அறமற்ற அரசுகளால் வந்த போராட்டத்தை போரறத்தை மீறி (அதனை சிங்களத்திடம் எதிர்பார்க்கலாமா?) அழித்துவிட்டோம் இனிச் சிறிலங்கா சொர்கப்புரியாகுமென எண்ணி ஏமாந்த சிங்கள அன்றாடங்காய்ச்சிகளான மத்தியதரவர்க்கத்தின் போராட்டம் கொடுத்த அரசு. அதன் ஆழ்மன ஓட்டத்தில் பௌத்த சிங்கள இனவாதம் ஒடுங்கிவிடவில்லை, ஓய்வெடுக்கிறது. தற்போது பசியாறும் காலமாகும். மீணடும் அது வீச்சோடு வாளெடுக்கும். வர்த்தமானிகள் மாறும். தமிழர் ஒரு இனமாக நிதானமாகச் சிந்திக்க வேண்டிய காலம். இடையிலே வெட்டி ஆடல்கள் தொடங்கிவிட்டது. சும் யேர்மனியில் நிற்பதாக ஒரு அரசியற் செயற்பாட்டாளர் கூறினார். எனவே தமிழினத்தினுள் உள்ள சிங்களத்தின் ஏவலாளர்களும் காவலர்களும் களத்தில் சத்தமின்றி இறக்கிவிடப்பட்டுள்ளனர். மக்கள் ஏமாறாமல் இருப்பதே முதலில் நன்மை பயக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nochchi said:

சும் யேர்மனியில் நிற்பதாக ஒரு அரசியற் செயற்பாட்டாளர் கூறினார்.

சாமியார், சிறியர் அறியவில்லையா? கொஞ்சம் கொடுத்து விடுகிறது..... நான் டொலரை சொன்னேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, satan said:

சாமியார், சிறியர் அறியவில்லையா? கொஞ்சம் கொடுத்து விடுகிறது..... நான் டொலரை சொன்னேன்.

ஓம்....ஆளை வீட்டை கூட்டிக்கொண்டு வந்து இருத்தி வைச்சு குடுப்பன்😁

17 minutes ago, nochchi said:

இடையிலே வெட்டி ஆடல்கள் தொடங்கிவிட்டது. சும் யேர்மனியில் நிற்பதாக ஒரு அரசியற் செயற்பாட்டாளர் கூறினார்.

ஆள் எங்கை நிக்கிறாராம்? dortmund  பக்கமாய்த்தானிருக்கும் 🧐

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, satan said:

சாமியார், சிறியர் அறியவில்லையா? கொஞ்சம் கொடுத்து விடுகிறது..... நான் டொலரை சொன்னேன்.

தெற்கு ஜேர்மனியில்… இல்லை. அப்படி… கூட்டம் வைத்தால், 
அவுஸ்திரேலியா, கனடாவில் கொடுத்த பூசை மாதிரி கொடுப்பார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, தமிழ் சிறி said:

தெற்கு ஜேர்மனியில்… இல்லை. அப்படி… கூட்டம் வைத்தால், 
அவுஸ்திரேலியா, கனடாவில் கொடுத்த பூசை மாதிரி கொடுப்பார்கள்.

கூடுதலாய் ஜேர்மனியிலை பப்பிளிக்காய் திரிஞ்சார் எண்டால் தர்ம அடி நிச்சயம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

கூடுதலாய் ஜேர்மனியிலை பப்பிளிக்காய் திரிஞ்சார் எண்டால் தர்ம அடி நிச்சயம். 

ஓம்… சுமந்திரன் அந்தளவுக்கு, ஊத்தை வேலை செய்து… எதிர்ப்பை சம்பாதித்து வைத்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

   யாராவது இரகசியமாய் அழைத்து, பூட்டிய அறையில் வைத்து போஷிப்பினம் ..... சே.... பேசுவினம். அவர் பிரதம மந்திரி கனவோடு வேலை செய்யிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஓம்....ஆளை வீட்டை கூட்டிக்கொண்டு வந்து இருத்தி வைச்சு குடுப்பன்😁

ஆள் எங்கை நிக்கிறாராம்? dortmund  பக்கமாய்த்தானிருக்கும் 🧐

ஆம், அப்படித்தான் தகவல். டோட்முன்ட் பகுதியில் உள்ள ஒரு தமிழ் யேர்மனிய அரசியல்வாதியின் அனுசரனையோடுதான் வந்துள்ளதாக அறிந்தேன். 

  • கருத்துக்கள உறவுகள்

   ஐயையோ ....... எல்லாத்தையும் சொல்லிப்புட்டாங்களே, சுமந்திரன் தொலைஞ்சார்ரா.  அவரை தொட்டு உங்கட கையை அழுக்காக்காதீங்கோ! அங்கை வைக்கிற ஓலம் இலங்கையில வந்துதான் நிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

தெற்கு ஜேர்மனியில்… இல்லை. அப்படி… கூட்டம் வைத்தால், 
அவுஸ்திரேலியா, கனடாவில் கொடுத்த பூசை மாதிரி கொடுப்பார்கள்.

பந்தயம் கட்டுறன்.

ஜேர்மன் தமிழ் ஆக்கள் சும்மா வாய் மட்டும்தான்🤣

2 hours ago, குமாரசாமி said:

கூடுதலாய் ஜேர்மனியிலை பப்பிளிக்காய் திரிஞ்சார் எண்டால் தர்ம அடி நிச்சயம். 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.