Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவால்... அன்பளிப்பாக வழங்கப்பட்ட, "டோனியர்-228"  கடல்சார் கண்காணிப்பு விமானம், கட்டுநாயக்க விமானப்படை தளத்தை வந்தடைந்தது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டோனியர்-228 கடல்சார் கண்காணிப்பு விமானம், கட்டுநாயக்க விமானப்படை தளத்தை வந்தடைந்தது

இந்தியாவால்... அன்பளிப்பாக வழங்கப்பட்ட, "டோனியர்-228"  கடல்சார் கண்காணிப்பு விமானம், கட்டுநாயக்க விமானப்படை தளத்தை வந்தடைந்தது.

இலங்கை கடற்படையினருக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ள இந்திய கடற்படைக்கு சொந்தமான டோனியர்-228 கடல்சார் கண்காணிப்பு விமானம், கட்டுநாயக்க விமானப்படை தளத்தை வந்தடைந்துள்ளது.

இந்திய சுதந்திர தினமான... இன்றைய தினம், குறித்த விமானம்... இலங்கைக்கு வழங்கப்படுகின்றது.

விமான நிலை ஊழியர்கள்..  தரையிறங்கிய விமானத்தை, நீர் பீச்சியடித்து வரவேற்றனர்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

image_ea2afa79e3.jpg

image_c763c9aec6.jpg

image_cc480dd5f1.jpg

https://athavannews.com/2022/1294793

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் கடல் கண்காணிப்புக்கு அவசியமானது போல.
சிலவேளை பழைய உரிமையாளருக்கும் ஏதும் தகவல்களை வழங்குமோ தெரியல?

  • கருத்துக்கள உறவுகள்

சீன கப்பல் வரும் முன்பே இலங்கைக்கு இந்தியா வழங்கிய டோனியர் விமானம்

19 நிமிடங்களுக்கு முன்னர்
 

டோர்னியர் இலங்கை

இந்தியாவால் அன்பளிப்பாக கையளிக்கப்பட்ட சமுத்திர கண்காணிப்பு விமானமான 'டோனியர் 228' ரக விமானம் இன்று இலங்கையை வந்தடைந்தது. இந்திய சுதந்திர தினத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த விமானம் இலங்கைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படைக்கு சொந்தமான டோனியர் 228 சமுத்திர கண்காணிப்பு விமானமே இவ்வாறு இன்று இலங்கையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு இவ்வாறான மூன்று விமானங்கள் கையளிக்கப்படவுள்ளதுடன், அதில் முதலாவது விமானமே இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவினால் கையளிக்கப்பட்ட இந்த விமானம், இன்று மதியம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் பாதுகாப்பு படைகளில் பிரதானிகள் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.

இந்த டோனியர் ரக விமானத்தின் மூலம், இலத்திரனியல் போர் நடவடிக்கைகள், சமுத்திர கண்காணிப்பு மற்றும் அனர்த்த நிலைமைகளுக்கான பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

 

சீன கப்பல் வருகைக்கு முன்பே வந்த விமானம்

 

இலங்கை ராணுவம் ஜனாதிபதி ரணில்

பட மூலாதாரம்,PMD

குறுகிய தூரத்திலேயே ஏற்ற முடியும் என்பதுடன், அவசரமாக தரையிறக்கக்கூடிய வசதிகளும் இந்த விமானத்தில் காணப்படுகின்றன.

புதுடில்லியில் 2018ம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பாதுகாப்பு தொடர்பிலான கலந்துரையாடலின் போது, முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்த விமானத்தை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

சீனாவின் உளவு கப்பல் ஆகஸ்ட் 17ஆம் தேதி இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் வருகை தரவுள்ள நிலையில், ஆகஸ்ட் 15ஆம் தேதி சமுத்திர கண்காணிப்பு விமானம் இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

சீனாவின் கப்பல் இலங்கைக்கு வருகைத் தருவதற்கு முதலில் இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்ததாக பல ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், இந்தியா அதனை நிராகரித்திருந்ததுடன், சீன கப்பல் வருகைத் தருவதற்கு ஒரு நாள் எஞ்சியிருக்கக்கூடிய நிலையில், சமுத்திர கண்காணிப்பு தொடர்பிலான விசேட விமானம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

இலங்கை ஜனாதிபதி டோர்னியர் விமானம்

பட மூலாதாரம்,PMD

இந்த விமானம் கையளிக்கப்பட்டமை தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் கருத்து வெளியிட்டுள்ளது.

''இந்தியாவுடனான ஒத்துழைப்பினால் ஏனைய துறைகளில் கிடைக்கப்பெற்ற பலன்களைப் போலவே, இலங்கை விமானப்படைக்கு டோனியர் பரிசளிக்கப்பட்டமையும் முக்கியமானதாக காணப்படுவதுடன், கடல் பாதுகாப்பு குறித்த தேவைகளை இலங்கை நிவர்த்தி செய்வதற்கான ஒரு படியாகவும் கருதப்படுகின்றது. வங்காள விரிகுடா மற்றும் இந்து சமுத்திர பிராந்தியங்களிலுள்ள, இலங்கை போன்ற அயல் மற்றும் நட்பு நாடுகளின் பலத்தினை வலுவாக்குவதிலும் இந்தியாவின் வல்லமை உறுதுணையாக நிற்கின்றமைக்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்." என இந்திய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை, ''பரஸ்பர புரிந்துணர்வு, நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பால் இந்தியா மற்றும் இலங்கையின் பாதுகாப்பு மேம்படுத்தப்படுவதுடன் டோனியர் 228 விமானம் பரிசளிக்கப்படுகின்றமை இந்த இலக்கிற்காக இந்தியா வழங்கும் சமீபத்திய பங்களிப்பாகும்" என்று உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

டோனியர் விமானத்தின் வசதிகள் என்ன?

 

டோனியர்

  • இரண்டு டர்போபாப் எஞ்சின்களை இரண்டு இறக்கைகளிலும் கொண்டுள்ளது டோனியர் ஆர்288 ரக விமானம். குறைந்த எரிபொருள் பயன்பாடு, குறுகிய தூரத்திலேயே மேலெழும்பும் வசதி, தரையிறங்கும் திறனை இது பெற்றுள்ளது. பகுதியளவு தயாரான ஓடுபாதையில் கூட இந்த விமானத்தால் தரையிறங்கி மேலெழும்ப முடியும்.
  • இந்த விமானத்தில் இரு விமானிகள் பயணம் செய்யலாம். அதே சமயம், அதன் கட்டுப்பாட்டை தனியாகவும் ஒருவரால் மேற்கொள்ள முடியும். எனினும், பொதுவாக இதை இருவர் இயக்குவதே வழக்கில் உள்ளது.
  • இதன் மேலெழும்பும் எடை 6,400 கிலோவாகும், அதேபோல தரையிறங்கும்போது 5,900 கிலோ எடையாக இருக்கும்.
  • இரு பக்க இறக்கைகளிலும் 2 நான்கு முனை பிளேடுகள் அதன் ப்ரொப்பெல்லர்களில் உள்ளன. ஒவ்வொரு இறக்கையிலும் மூன்று ஒருங்கிணைந்த எரிபொருள் கலன்கள் பொருத்தப்பட்டுள்ளன. மொத்த எரிபொருள் தாங்கு திறன் 2,850 லிட்டர்கள் ஆகும். இரண்டு இறக்கைகளில் உள்ள எரிபொருள் கலன்களும் இணைக்கும் வகையில் இதன் வடிவம் உள்ளது.
  • இந்த விமானத்தின் மொத்த நீளம் 54 அடி 4 அங்குலம். உயரம் 15 அடி 11 அங்குலம். இதன் தரையிறங்கும் கியர்கள், ஹைட்ராலிக் முறையிலானது. 28 வோல்ட் மின்சாரமும் 300 ஆம்புகள் டிசி மின்சாரமும் இதன் இயக்கத்துக்கு தேவைப்படும்.
  • அதிகபட்ச வெப்பநிலை +55 டிகிரியிலும் குறைந்தபட்சம் -40 டிகிரியிலும் இந்த விமானம் எந்த பிரச்னையுமின்றி இயங்கும் திறனைக் கொண்டிருக்கிறது.

இந்திய கடற்படை டோனியர் (INDO - 228), இலகு ரக விமானம் ஆகும். இது 1981ஆம் ஆண்டில்தான் முதல் முறையாக தயாரிக்கப்பட்டது. ஜெர்மனியின் டோனியர் ஜிஎம்பிஹெச் நிறுவனம் தான் இந்த ரக விமானத்தை முதலில் தயாரித்தது. அந்த நிறுவனம் 1981-1998 வரையிலான காலகட்டத்தில் 245 விமானங்களை தயாரித்துள்ளது. இதற்கிடையே, 1993இல் இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம், டோனியர் ஜிஎம்பிஹெச் உரிமத்தின் கீழ், டோனியர் விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கத் தொடங்கியது.

https://www.bbc.com/tamil/sri-lanka-62553540

  • கருத்துக்கள உறவுகள்

விழுந்தும் மீசையில் மண் படாத கதைதான்...நரி இந்தைடத்தில் சொன்னது ...இலங்கையும் இந்தியாவும் நாணயதந்தின்..இரண்டு பக்கமாம்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

விமான நிலை ஊழியர்கள்..  தரையிறங்கிய விமானத்தை, நீர் பீச்சியடித்து வரவேற்றனர்.

ஒல்லாந்தர் காலத்து தட்டிவானுக்கு தண்ணி பீச்சியடிப்பு வேற.......அத கண்டு களிக்க நரி கோட்டு சூட்டோட நெஞ்ச நிமித்திக்கொண்டு போவுது.🤣

இப்ப இஞ்சையிருந்து ஒரு நாள் கட்டின சாறியள கூட அங்கத்தையான் எங்கட சனம் வாங்குதுகள் இல்ல.....நாங்கள் என்ன பிச்சைக்காரரோ எண்டு முகத்திலை காறித்துப்புதுகளாம்.😉

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

ஒல்லாந்தர் காலத்து தட்டிவானுக்கு தண்ணி பீச்சியடிப்பு வேற.......அத கண்டு களிக்க நரி கோட்டு சூட்டோட நெஞ்ச நிமித்திக்கொண்டு போவுது.🤣

இப்ப இஞ்சையிருந்து ஒரு நாள் கட்டின சாறியள கூட அங்கத்தையான் எங்கட சனம் வாங்குதுகள் இல்ல.....நாங்கள் என்ன பிச்சைக்காரரோ எண்டு முகத்திலை காறித்துப்புதுகளாம்.😉

பகிடி என்னவென்றால்... புலிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க, 
இந்தியா  கொடுத்த சற்றலைற் சரியாக வேல செய்யவில்லை என்று, 
அதை வைத்து... மண்வெட்டி தான் செய்யலாம் என்று 
கேலி பேசிய சிங்களவனுக்கு, இந்தியாவும்... வெட்கம் இல்லாமல், 
கொடுத்துக் கொண்டே இருக்குது.

அவனும்...  ஓசி என்றவுடன்,  விழா எடுத்து கொண்டாடுறான்.
இரண்டு கிழமையில்... மீண்டும், இந்தியாவை வழக்கம் போல கரிச்சுக்  கொட்டுவான். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

 

இலங்கை ராணுவம் ஜனாதிபதி ரணில்

 

மாப்பிள்ளை முறுக்கு போல் இதுதான் “ஜனாதிபதி முறுக்கு”.

பழைய தோலா-பாலா உடுப்பை எல்லாம் விட்டுட்டு சின்ராசு சும்மா ரைட்-பிட்டிங் சூட்டில, கூலிங் கிளாசோட கலக்கிறாப்பல🤣.

அடுத்தவன் மனைவியை (ஜனாதிபதி பதவி) ஆட்டைய போட்டாலும் கெத்தா இருக்கிறார் பாருங்க - அதுதான் நம்ம அதி உத்தமரல்லாத ஜனாதிபதி🤣.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ஊடகங்களை (சில) பார்த்தால் சீனாவை ஓட  ஓட விரட்டுவோம் என்று எழுதுகிறார்கள்.  இங்கை பார்த்தால் சிங்களவர் பீச்சி அடிக்கிறார்கள் தண்ணியை.🤣

1 minute ago, goshan_che said:

மாப்பிள்ளை முறுக்கு போல் இதுதான் “ஜனாதிபதி முறுக்கு”.

பழைய தோலா-பாலா உடுப்பை எல்லாம் விட்டுட்டு சின்ராசு சும்மா ரைட்-பிட்டிங் சூட்டில, கூலிங் கிளாசோட கலக்கிறாப்பல🤣.

அடுத்தவன் மனைவியை (ஜனாதிபதி பதவி) ஆட்டைய போட்டாலும் கெத்தா இருக்கிறார் பாருங்க - அதுதான் நம்ம அதி உத்தமரல்லாத ஜனாதிபதி🤣.

சும்மா இருக்க வ்ந்த பதவி கோசான். அந்தாள் ஜமாய்க்குது.😆

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

மாப்பிள்ளை முறுக்கு போல் இதுதான் “ஜனாதிபதி முறுக்கு”.

பழைய தோலா-பாலா உடுப்பை எல்லாம் விட்டுட்டு சின்ராசு சும்மா ரைட்-பிட்டிங் சூட்டில, கூலிங் கிளாசோட கலக்கிறாப்பல🤣.

அடுத்தவன் மனைவியை (ஜனாதிபதி பதவி) ஆட்டைய போட்டாலும் கெத்தா இருக்கிறார் பாருங்க - அதுதான் நம்ம அதி உத்தமரல்லாத ஜனாதிபதி🤣.

அவருக்கும் பசிக்கும்ல.. 🤗

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, nunavilan said:

சும்மா இருக்க வ்ந்த பதவி கோசான். அந்தாள் ஜமாய்க்குது.😆

நரி, நரி முகத்தில முழிச்சிருக்கு🤣

 

22 minutes ago, ராசவன்னியன் said:

அவருக்கும் பசிக்கும்ல.. 🤗

🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

இலங்கையின் கடல் கண்காணிப்புக்கு அவசியமானது போல.
சிலவேளை பழைய உரிமையாளருக்கும் ஏதும் தகவல்களை வழங்குமோ தெரியல?

அதானே இந்தியன்ர திட்டமே.
இலங்கை கடல் எல்லைக்குள்ள சீனாக்காரன்ர
கப்பல் நிக்கும்போது அதுக்கும் மேலாலை நாம பறந்து உளவு பாப்பமெல்ல.
விமானத்தில் பெறப்படும்  வேவுத் தரவுகளை இந்தியாவிலுள்ள புலனாய்வு மையத்தில் வைத்து de-code பண்ணாம இலங்கை அதை(data) வச்சு ரணிலுக்கு நாக்குதான்  வழிக்கலாம். இந்த வேவு விமானத்தை இந்திய விமானிகளுக்கு பதிலாக இலங்கை விமானிகள் ஒட்டுவார்கள் அதுதான் வித்தியாசம்.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

சில ஆண்டுகளுக்கு முன்னர் அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கு அருகில் விழுந்த ஹிந்திய விமானப்படை விமானத்தையே கண்டுபிடிக்க முடியாமல் திணறியவர்கள்.. இதை வைச்சு.. மீன்பிடி வலைகளையாவது வீசலாமா..?!

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடல் எல்லைக்குள்ளும் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள்ளும் தாங்கள்  வரமுடியாது என்பதற்கக, இலங்கையைக் கொண்டே உளவு பார்க்கிறார்கள்.

உளவுப் பரிமாற்றத்தின்போது இந்தியா Live ஆகவே கண்காணிப்பை மேற்கொள்ள முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

சீனாவின் உளவு கப்பல் ஆகஸ்ட் 17ஆம் தேதி இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் வருகை தரவுள்ள நிலையில், ஆகஸ்ட் 15ஆம் தேதி சமுத்திர கண்காணிப்பு விமானம் இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

அனுப்புங்கோ அனுப்புங்கோ, இன்னும் அனுப்புங்கோ! சீனன் வந்து பழுது பாக்கட்டும் அவைகளை, வேலைசெய்யுதோ என்று பரீட்ச்சித்து பாத்து தகவலும் அனுப்பட்டும் உங்களுக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

தடுக்க பாத்தீர்கள் முடியவில்லை, நாங்கள் விடமாட்டோம் ஓயமாட்டோம் என்று நாண்டு கொண்டு அனுப்புகிறீர்கள். உங்களின் வேண்டுகோளை ஏற்காமல் அழைக்கிறார்கள் சீனாவை, உதுகளை அனுப்பினால் நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்களா? உங்களின் இயலாத்தன்மை இப்படி வெளிப்படுகிறது. அவன் பழைய இரும்புச்சாலையில் கொண்டுபோய் தள்ளிப்போட்டு சீனக்கப்பலை வரவேற்று,  கைகுலுக்க போய்விடுவான் நாளைக்கு. அதுக்கு பூக்கொத்தும் அனுப்பிவையுங்கோ!

  • கருத்துக்கள உறவுகள்

இது இலங்கை விமான படைக்கு பயிற்சி விமானமாக பயன்படும். மற்றும்படி வேறு என்ன உபயோகம் என்று விளங்கவில்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.