Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பருவ மழைக்காலத்தின் பின்னர் காணிகளை விடுவிப்பது தொடர்பில் தீர்மானம் – டக்ளஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பருவ மழைக்காலத்தின் பின்னர் காணிகளை விடுவிப்பது தொடர்பில் தீர்மானம் – டக்ளஸ்

பருவ மழைக்காலத்தின் பின்னர் காணிகளை விடுவிப்பது தொடர்பில் தீர்மானம் – டக்ளஸ்

வடக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பருவ மழைக்காலம் நிறைவடைந்ததும் சாதகமான – தீர்க்கமான முடிவெடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வலி வடக்கு, மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்திற்கு இன்றைய தினம் புதன்கிழமை சென்ற அமைச்சர் அங்கு கடற்றொழிலாளர்களுடனான சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் “வடக்கு கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அபிலாஷைகளுக்கு தீர்வுகாணும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில் ஜனாதிபதி இந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.

பருவ மழை காலம் நிறைவடைந்ததும் நேரடியாக சம்மந்தப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்து தீர்க்கமான சாதகமான முடிவுகளை எடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளார்.

எனவே, கடந்த காலங்களில் தமிழ்த்தரப்புகள் விட்ட தவறுகள் என்னவென்றால் கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதே.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் இவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டிருக்காது.

தற்போது கிடைக்கும் சாதகமான வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு இனியாவது இருப்பதை பாதுகாத்துக்கொண்டு அதனை முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

பிரச்சினைகள் தீர்வை நோக்கி போகவேண்டுமேயொழிய அதனை குழப்பிக்கொண்டு போகும் நோக்கம் எனக்கில்லை” என அமைச்சர் தெரிவித்தார்.

வலி வடக்கு, மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்திற்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கு முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளை பார்வையிட்டதுடன் பிரதேசக் கடற்றொழிலாளர்களினால் முன்வைக்கப்பட்ட அபிப்பிராயங்கள் தொடர்பில் ஆராய்ந்தது தேவையான ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கினார்.

https://athavannews.com/2022/1308499

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 minutes ago, தமிழ் சிறி said:

கடந்த காலங்களில் தமிழ்த்தரப்புகள் விட்ட தவறுகள் என்னவென்றால் கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதே.

ஐயா நீங்கள் ஆர்ரை தரப்பு????? 😀

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

ஐயா நீங்கள் ஆர்ரை தரப்பு????? 😀

எந்தக் கட்சி ஆட்சிக்கு வருகுதோ அவையின்ரை தரப்பு?

முக்கிய குறிப்பு..எந்த பருவமழை...எந்த வருசம் என்பதை ஒருக்கால் கேட்டுச் சொல்லவும்😄

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

பிரச்சினைகள் தீர்வை நோக்கி போகவேண்டுமேயொழிய அதனை குழப்பிக்கொண்டு போகும் நோக்கம் எனக்கில்லை” என அமைச்சர் தெரிவித்தார்.

உதாரணம்: பேரூந்தை கடலில் தாட்டது.😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, nunavilan said:

உதாரணம்: பேரூந்தை கடலில் தாட்டது.😄

ரயிலையும் கடலில் தாக்கிற பிளான் இருந்தது. 
டக்கியின்  பழைய எசமான்…. “கோ ஹோம் கோத்தா”  வீட்டை போய் விட்டார். 😂

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

ரயிலையும் கடலில் தாக்கிற பிளான் இருந்தது. 
டக்கியின்  பழைய எசமான்…. “கோ ஹோம் கோத்தா”  வீட்டை போய் விட்டார். 😂

 

விட்டா  புத்தற்ரையையே தாட்டுவிடுவார்  என்று  கோத்தாவுக்கு  நன்கு  தெரியும்😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

விட்டா  புத்தற்ரையையே தாட்டுவிடுவார்  என்று  கோத்தாவுக்கு  நன்கு  தெரியும்😂

இந்த ஆளின்ரை ராசிதான்… கோத்தா அற்ப ஆயுசுலை போக வேண்டி வந்தது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, nunavilan said:

உதாரணம்: பேரூந்தை கடலில் தாட்டது.😄

இது ஒரு நல்ல திட்டம் ஆனால் இடையில் தமிழ்நாட்டு இழுவை கப்பல் முதலாளிகளிடம் இருந்து பெட்டிகளை வாங்கிகொண்டு அமைதியாகி விட்டார் . இழுவை படகில் மீன் பிடிப்பது உலகளவில் தடை செய்யபட்டு கொண்டு வருகிறது . ஒரு 1௦௦ பழைய வாகனம்களை கடலில் தாட்டு விட தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்பக்கமே தலைவைத்து படுக்க மாட்டார்கள் அதே நேரம் சிங்களவர்களின் பாரிய இழுவைபடகுகளும் வடக்கு கடலில் எட்டியும் பார்க்காயினம் .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

இது ஒரு நல்ல திட்டம்

அதனை அடிப்படையாக வைத்து கூறுகின்றீர்கள் ? 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

இந்த ஆளின்ரை ராசிதான்… கோத்தா அற்ப ஆயுசுலை போக வேண்டி வந்தது.

என்னது கோத்தா செத்துப்போனாரா? அதுவும் அற்ப ஆயுசிலையா? அவருக்கு வயது எழுபதுக்கு மேல்!

9 hours ago, குமாரசாமி said:

ஐயா நீங்கள் ஆர்ரை தரப்பு????? 😀

கொப்புக்கு கொப்பு தாவி அறிக்கை விட்டு வாக்கு கெஞ்சும் தரப்பு!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

என்னது கோத்தா செத்துப்போனாரா? அதுவும் அற்ப ஆயுசிலையா? அவருக்கு வயது எழுபதுக்கு மேல்!

கோத்தா… ஜனாதிபதி பதவி சுகத்தை முழுமையாக அனுபவிக்காமல்
இரண்டு வருடத்தில் போனதை, அற்ப ஆயுசு என்று சொன்னேன். 😂

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட அறளை பேந்தது தீபாவளி தைப்பொங்கல் எண்டு தான் கெடு வைக்கும்.

குத்தியருக்கும் வயசு வட்டுக்குள்ள போய்க்கொண்டிருக்கில்லே. அறளை பெயர்ற தன்மை சாடையாக வெளிப்படுக்குது.

என்ன கோடை மாரி எண்டு ஆள் வானிலை வாசிக்குது..😀

எல்லாம் உன் செயலே கச்சியேகம்பனே .....

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவம் விவசாயம் செய்யனும்.. வியாபாரம் செய்யனும். குத்தியருக்கு உதை எல்லாம் செய்து கொடுத்தால் தானே காட்டிக்கொடுப்பு அரசியல் செய்ய அனுமதி கிடைக்கும்.

புலிகள் பேசும் போதும் உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றல்.. காணி விடுவிப்புக்கு முன்னுரிமை கொடுத்தார்கள். அப்போதும் இவர் புலிகள் உதைச் சொல்லி பேச்சைக் குழப்பினம் என்று புறணிபாடிக்கிட்டு திரிஞ்சவர்.

இப்ப தானும் அதே சுருதியைப் பாடிறார்... சிங்கள இராணுவத்துக்கு நோகாமல்.. சொந்த மக்களுக்கு நோக. 

  • கருத்துக்கள உறவுகள்
On 3/11/2022 at 00:08, தமிழ் சிறி said:

வடக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பருவ மழைக்காலம் நிறைவடைந்ததும் சாதகமான – தீர்க்கமான முடிவெடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஏன் பருவ மழைக்கும் காணிவிடுவிப்புக்கும் என்ன தொடர்பு? இப்ப விட்டால் காணி மாட்டேன் என்று சொல்லுமா? அல்லது காணிக்காரர் ஏற்க மாட்டோம் என்றா சொல்லப்போகிறார்கள்? ஏதோ ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு காலத்தை குறை, சாட்டு சொல்வது, அதுக்கு ஒத்தூதுவதற்க்கு இவர் இடையில.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிலிருந்து காங்கேசன்துறைக்கு கப்பல் விட்டு சிறீலங்காவின் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு ஓர் இரவிலேயே தீர்வு கண்டவராச்சே! 

  • கருத்துக்கள உறவுகள்

அவர் மக்களை பேய்க்காட்டி, வாக்கு சேகரித்து, கெத்தாய் பாராளுமன்றம் போக அப்பப்ப விடுகிற றீலை கண்டுகொள்ளக்கூடாது கண்டியளோ! விட்டால் எருமைமாடு ஏரோப்பிளேன் ஓட்டுது என்றும் சொல்லுவார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 2/11/2022 at 21:36, Kapithan said:

அதனை அடிப்படையாக வைத்து கூறுகின்றீர்கள் ? 

சுத்தமான உருட்ட வைச்சுத்தான்.....😂

Bild

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.