Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீன தரப்பு தமிழர் பிரதிநிதிகளை 3 தடவை சந்திக்க எடுத்துக்கொண்ட முயற்சியும் TNA தலைமை நிராகரித்ததா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

https://www.tamilguardian.com/content/tna-refused-meet-us-3-times-claims-chinese-envoy

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்களைச் சந்திக்க 3 முறை மறுத்துவிட்டது' என சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்

இலங்கைக்கான சீனாவின் துணைத் தூதுவர் ஹூ வெய், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA) மூன்று தடவைகள் தமிழ்த் தலைவர் ஆர் சம்பந்தனைச் சந்திக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், அது நிராகரிக்கப்பட்டது என்றும் சாடினார்.

“சீனா தமிழ் மக்களுடன் உறவைப் பேணவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மூன்று தடவைகள் அழைப்பிதழ் அனுப்பியிருந்தோம். அதை ஒப்புக்கொள்ளும் மரியாதை கூட அவர்களிடம் இல்லை" என்று ஹூ வெய் கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இலங்கையை நீண்டகாலமாகப் பாதுகாத்து வரும் சீனா, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்களுக்கு அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதாக வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தச் சலுகைகளுக்குப் பதிலளிக்கும் போது பெரும்பாலும் TNA இந்திய அரசாங்கத்தின் சார்பாக பாதுகாப்புக் கவலைகளை மேற்கோள் காட்டியது.

யாழ்ப்பாணத்தில் சீனப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது, கலந்துகொண்ட உள்ளூர் மக்கள் சீனாவின் தலையீடு குறித்து தமது கவலைகளை வெளிப்படுத்தினர்.

"தமிழ் மக்களின் நலன்களுக்கு எதிராக சீனா செயல்பட்டது. தமிழர்களுக்கு அரசியல் ரீதியாக உதவவில்லை. தற்போது இந்தியாவுக்கு எதிரான வியூகமாக தமிழர்களை சுற்றி வளைக்க முயல்கின்றனர்" என உள்ளூர்வாசிகள் பலர் குரல் எழுப்பினர்.

ஆயுத மோதலின் இறுதிக் காலத்தில், தமிழர்கள் வாழும் பகுதிகள் மீது இரக்கமின்றி ஷெல் தாக்குதல் நடத்திய இலங்கை இராணுவத்திற்கு சீனா மில்லியன் கணக்கான இராணுவ உதவிகளை வழங்கியது மற்றும் இலங்கையை ஐநா நிகழ்ச்சி நிரலில் இருந்து விலக்கி வைக்க உழைத்தது. இதன் மூலம் சீனர்கள் ராஜபக்ச குலத்துடனான உறவை வலுப்படுத்திக் கொண்டனர்.

தமிழ் மக்களின் நலனுக்கு எதிராக செயற்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை சீனாவின் தூதுவர் மறுத்துள்ளார்.

“தமிழ் மக்களை அணுகுவதில் பல தடைகளை எதிர்கொண்டோம். மேலும், தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் சந்திக்க முயற்சித்தோம். ஓரிரு முறை அல்ல, மூன்று முறை ஆர் சம்பந்தனுக்கு அழைப்பு அனுப்பினோம். நாங்கள் அவரை அவரது இல்லத்தில் சந்திப்போம் என்று கூறினோம். அழைப்பிதழ்களுக்கு நாங்கள் எந்த பதிலும் வரவில்லை" என்று ஹூ வெய் குறிப்பிட்டார்.

China’s deputy envoy to Sri Lanka, Hoo Wei, slammed the Tamil National Alliance (TNA) claiming that on three occasions they had asked to meet with Tamil Leader R Sampanthan and were refused.

“The accusation that China does not maintain relationships with Tamil people cannot be accepted. We had sent invitations three times to the representatives of the Tamil people, the Tamil National Alliance. They did not even have the courtesy to  acknowledge it", Hoo Wei claimed.

China, whilst long defending Sri Lanka against human rights abuses committed against Eelam Tamils at the United Nations, has increasingly turned to make appeals to Tamils in the North and East with an offer to support development projects. Often the TNA has cited security concerns on behalf of the Indian government when responding to these offers.

During a meeting with the Chinese delegation in Jaffna, locals who attended voiced their concerns of China’s involvement.

"China acted against the Tamil people's interests. They did not help the Tamils politically.  They are now trying to get around  Tamils as a strategy against India" voiced a number of locals.

During the final period of the armed conflict, China supplied millions in terms of military aid to the Sri Lankan army which ruthlessly shelled Tamil civilian areas and worked to keep Sri Lanka off the UN agenda. In doing so the Chinese strengthened their ties with the Rajapaksa clan.

China’s envoy has denied allegations of working against the interest of Tamil people.

“We faced many obstacles in approaching the Tamil people. Furthermore, we tried to meet the representatives of the Tamil people, the Tamil National Alliance.  It was not one or two times, we sent invitations to R Sampanthan three times. We told them that we would meet him at his residence. We received no response for the invitations" Hoo Wei noted.

 

https://www.tamilguardian.com/content/tna-refused-meet-us-3-times-claims-chinese-envoy

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்

@Elugnajiru ஏற்கனவே இந்தியாவில் மேற்கில் தமக்கு நம்பிக்கை இல்லை என அறிவித்துவிட்ட முண்ணனியினர் ஏன் இதை வாய்ப்பாக பயன்படுத்தி சீனாவுடன் பேசிப்பார்க்க கூடாது?

முயற்சிக்கலாமே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இந்த விடயங்கள் குறித்து நிறைய ஆராயப்பட வேண்டும் என நினைக்கிறன்.  தமிழ் மக்களுக்கான சரியான (குறைந்த பட்ச அனுகூலமான) அரசியல் வியூகம் எதையாவது TNA அல்லது இதர கட்சிகள் வைத்திருக்கிறதா? 

  • 3 தடவைகள் தமிழர் பிரதிநிதிகளை சந்திக்க விரும்பிய சீன தூதுவர்களை / அதிகாரிகளை TNA உண்மையில் ஏன் நிராகரித்தது?
  • எந்த எந்த காலப்பகுதியில் இந்த சந்திப்பை அவர்கள் கோரி இருந்தார்கள்?
  • அந்த காலப்பகுதியில் இருந்த நிலவரம் என்ன? எமக்கு சாதகமாக எதையாவது நிகழ்த்தக்கூடிய சூழ்நிலை இருந்ததா? அல்லது எமது நிலைப்பாட்டை ஒரு வெறும் பிரச்சாரமாக சரி சொல்லக்கூடிய நிலைமை இருந்ததா? 
  • கட்சிக்குள் புதிதாக உள்வாங்கப்பட்ட சாணக்கியன் அண்மையில் இலங்கையில் நிலவும் சீன அரசியல் செயல்பாடுகளை பாராளுமன்றத்தில் வைத்து கிழித்து தொங்கவிட்டதன் பின்னணி என்ன?
  • தமிழர் அரசியல் வெறுமனே இந்திய கைப்பாவை அரசியலாக மாறிவிட்டதா?
  • நமது அரசியலில் யாரையெல்லாம் எமது அரசியல்வாதிகள் நிரந்தர எதிரிகளாக பார்க்கிறார்கள்?
  • இவையெல்லாம் தாயக மக்கள் சிந்திக்கிறார்களா?

*** சீனா ஒன்றும் ஜனநாயக நாடு அல்ல அதே நேரம் ஜனநாயகத்தின் மகுடம் என பீற்றிக்கொள்ளும் இந்தியாவும் அப்படி கிடையாது என்ற புரிதலுடன் பார்க்கலாம் ***

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Sasi_varnam said:

3 தடவைகள் தமிழர் பிரதிநிதிகளை சந்திக்க விரும்பிய சீன தூதுவர்களை / அதிகாரிகளை TNA உண்மையில் ஏன் நிராகரித்தது?

சசி குழந்தையை கேட்டாலே இதற்கு பதில் சொல்லிவிடும்.

12 minutes ago, Sasi_varnam said:

தமிழர் அரசியல் வெறுமனே இந்திய கைப்பாவை அரசியலாக மாறிவிட்டதா?

ஆமா,ஆமா,ஆமா.

  • கருத்துக்கள உறவுகள்

இர்ராசதந்திரமாய் இருக்குமோ 🤣

 

2 hours ago, Sasi_varnam said:

உண்மையில் இந்த விடயங்கள் குறித்து நிறைய ஆராயப்பட வேண்டும் என நினைக்கிறன்.  தமிழ் மக்களுக்கான சரியான (குறைந்த பட்ச அனுகூலமான) அரசியல் வியூகம் எதையாவது TNA அல்லது இதர கட்சிகள் வைத்திருக்கிறதா? 

  • 3 தடவைகள் தமிழர் பிரதிநிதிகளை சந்திக்க விரும்பிய சீன தூதுவர்களை / அதிகாரிகளை TNA உண்மையில் ஏன் நிராகரித்தது?
  • எந்த எந்த காலப்பகுதியில் இந்த சந்திப்பை அவர்கள் கோரி இருந்தார்கள்?
  • அந்த காலப்பகுதியில் இருந்த நிலவரம் என்ன? எமக்கு சாதகமாக எதையாவது நிகழ்த்தக்கூடிய சூழ்நிலை இருந்ததா? அல்லது எமது நிலைப்பாட்டை ஒரு வெறும் பிரச்சாரமாக சரி சொல்லக்கூடிய நிலைமை இருந்ததா? 
  • கட்சிக்குள் புதிதாக உள்வாங்கப்பட்ட சாணக்கியன் அண்மையில் இலங்கையில் நிலவும் சீன அரசியல் செயல்பாடுகளை பாராளுமன்றத்தில் வைத்து கிழித்து தொங்கவிட்டதன் பின்னணி என்ன?
  • தமிழர் அரசியல் வெறுமனே இந்திய கைப்பாவை அரசியலாக மாறிவிட்டதா?
  • நமது அரசியலில் யாரையெல்லாம் எமது அரசியல்வாதிகள் நிரந்தர எதிரிகளாக பார்க்கிறார்கள்?
  • இவையெல்லாம் தாயக மக்கள் சிந்திக்கிறார்களா?

*** சீனா ஒன்றும் ஜனநாயக நாடு அல்ல அதே நேரம் ஜனநாயகத்தின் மகுடம் என பீற்றிக்கொள்ளும் இந்தியாவும் அப்படி கிடையாது என்ற புரிதலுடன் பார்க்கலாம் ***

நீட்டப்படும் கையைப் பிடிப்பதுதான் இராசதந்திரம். தேவையென்றால், இறுக்கிப்பிடிக்கலாம், முறுக்கலாம், இழுதது விழுத்தலாம், தேவையில்லையென்றால் பிடித்த கையையும் விட்டுவிடலாம். 

எங்கள் அரசியல்வாதிகளோ இந்தியாவைத் திருப்திப்படுத்த, இந்தியாவோ சிங்களத்தைத் திருப்திப்படுத்த, சிங்களமோ எங்கள் இருவரினது தலையிலும் மிளகாய் அரைக்கிறது. 

☹️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kapithan said:

எங்கள் அரசியல்வாதிகளோ இந்தியாவைத் திருப்திப்படுத்த, இந்தியாவோ சிங்களத்தைத் திருப்திப்படுத்த, சிங்களமோ எங்கள் இருவரினது தலையிலும் மிளகாய் அரைக்கிறது. 

 

இதையே எவ்வளவுகாலம் சொல்லிக்கொண்டிருப்பது?
இந்தியாவை மீறி எந்த நாடாவது ஈழத்தமிழினத்திற்கு சார்பாக அல்லது பிரச்சனையை தீர்க்க வருமா´?
 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Sasi_varnam said:

*** சீனா ஒன்றும் ஜனநாயக நாடு அல்ல அதே நேரம் ஜனநாயகத்தின் மகுடம் என பீற்றிக்கொள்ளும் இந்தியாவும் அப்படி கிடையாது என்ற புரிதலுடன் பார்க்கலாம் ***

சிங்களவர்கள் எல்லா இடமும் டீலை போட்டு தான் தமது அரசியலை நடாத்துகிறார்கள். நாமும் அது போல  அல்லவா செய்ய வேண்டும். 
எல்லோரும் சுயநலவாதிகள் என்பது உண்மை. அவர்களின் நலத்தோடும் எமது நலத்தையும் சேர்த்து(win win) காரியத்தை சாதிக்க ஒரு தமிழ் அரசியல்வாதியும் முயலாதது ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தமிழருக்கு சுயநிர்ணயத்திற்கு சமமான எந்த அதிகாரப்பகிர்வினையும் விரும்பாது, ஏனெனில் இந்தியாவில் மானிலங்களை எவ்வாறு கட்டுப்படுத்தி கொண்டு மொழி, மத அடக்குமுறையில் ஈடுபடும் போது இலங்கையில் தமிழருக்கு அதிக அதிகாரம் கொண்ட தீர்வு சாத்தியமில்லை, ஒன்றுமேயில்லாத வெற்று தீர்வினையே இந்தியா தமிழருக்கு வழங்குவதற்கு உதவுவதாக பெயரளவிலாவது சொல்கிறது.

இலங்கையில் தமிழர் தீர்வை இந்தியா உண்மையாக விரும்புகிறதா?

எனது அபிப்பிராயப்படி இல்லை எனவே கருதுகிறேன்.

இலங்கை அடிப்படையில் இந்திய எதிர்ப்பு நிலைப்பாடு கொண்ட நாடு எந்த ஆட்சியாளர் வந்தாலும் அதில் மாற்றம் இல்லை, இவ்வாறான சுழலில் இலங்கையில் சமாதானம் நிலவினால் இலங்கையில் இந்தியாவின் பிடி தளரலாம், அதனால் தொடர்ச்சியாக அரசியல், பொருளாதார நெருக்கடி இலங்கையில் நிலவவேண்டும் என இந்தியா விரும்பக்கூடும்.

மறுவளமாக சீனாவினை பொறுத்தவரை  சீனாவின் இந்தியாவின் பாதுகாப்பில் தலையிட இலங்கையில் காலூன்ற வேண்டும் அதற்கு எப்போதும் ஒரு தடையாக தமிழர்கள் இருந்து கொண்டே உள்ளார்கள், இருப்பார்கள் அதனால் அவர்களையும் தம் பக்கம் இழுக்கும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளது.

அவ்வாறாயின் சீனா இந்தியாவின் தீர்வு திட்டத்தினை விட அதிகமாக தமிழர்களுக்கு வழங்குமா?

சீனாவினை விட பல மடங்கு இந்திய  ஜனநாயகம் அதிகம், அப்படி இருக்க எப்படி சீனா தமிழருக்கு ஒரு சின்ன தீர்வையாவது தரும் (இது எனது அபிப்பிராயம் மட்டுமே).

அப்படியாயின் சீனாவுடனான சந்திப்பை த தே கூ தவிர்த்த முடிவு சரியா?

இல்லை, குறைந்த பட்ச சந்திப்பினையாவது மேற்கொண்டு முடங்கிபோயிருக்கும் தமிழர் பிரச்சினைக்கு முடிவுகட்ட த தே கூ முயன்றிருக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

@Elugnajiru ஏற்கனவே இந்தியாவில் மேற்கில் தமக்கு நம்பிக்கை இல்லை என அறிவித்துவிட்ட முண்ணனியினர் ஏன் இதை வாய்ப்பாக பயன்படுத்தி சீனாவுடன் பேசிப்பார்க்க கூடாது?

முயற்சிக்கலாமே?

நீங்களோ நானோ அல்லது யார் சொல்லியும் அங்குள்ளவர்கள் செவிமடுப்பார்கள் என்றா நம்புகிறீர்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Sasi_varnam said:

தமிழர் அரசியல் வெறுமனே இந்திய கைப்பாவை அரசியலாக மாறிவிட்டதா?

அம்புட்டுத்தே ....இதற்க்கு மேல் இங்கே குத்தி முறிய ஒன்றுமில்லை.
இந்தியாவை தவிர்த்து எமக்கு தீர்வு கிடைக்குமா என்ற கேள்விக்கு பதில். இந்தியாவிற்கு சோப்பு போட்டுக்கொண்டிருக்கும் வரை ஒன்றுமே கிடைக்காது என்பதே.
வழமை போல அதே பழைய  ஆயுதம் கொடுத்தான் ஐ நாவில்  பாதுகாத்தான் என்ற புளிச்சல் ஏவறைகளை விட்டுக்கொண்டு, அதை விட கேப்மாரித்தனம் புரிந்த இந்தியாவின் வாலை பிடித்துக்கொண்டு திரிந்ததாலேயே இன்று ஈழத்தமிழர்கள் அரசியல் அனாதைகளாகி உள்ளனர். இன்னும் வாலை பிடிக்க பிடிக்க ஈழத்தமிழர்களது அரசியல் வங்குரோத்துத்தனம் வெளிவருவது தவிர்க்க முடியாதது. ஈழத்தமிழர்களது தற்போதைய  அரசியல் இந்தியதுணைத்தூதரை சந்தித்து அவருடன் சேர்ந்து  விசுக்கோத்து சாப்பிடுவது. அதாவது விசுக்கோத்து அரசியல்         
 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

இதையே எவ்வளவுகாலம் சொல்லிக்கொண்டிருப்பது?
இந்தியாவை மீறி எந்த நாடாவது ஈழத்தமிழினத்திற்கு சார்பாக அல்லது பிரச்சனையை தீர்க்க வருமா´?
 

இந்தியாவின் பாவாடைத் தலைப்பைப் பிடித்துக்கொண்டு தொங்கும்வரை ஒன்றுமே நடவாது. 

☹️

  • கருத்துக்கள உறவுகள்

யாழில்.மூத்த ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு யாழ்.ஊடக அமையம் கண்டனம்:-  Global Tamil News

போர் முடிந்து... 13 வருடமாக இந்தியாவை நம்பியதில், தமிழருக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. 
மாறாக நிலைமை மோசமாகியதுதான்... கண்ட பலன்.  தமிழ்க் கட்சிகளும் தங்கள் இந்திய நிலைப்பாட்டிலிருந்து வெளியே வர வேண்டிய தருணம் இது.

சீனா தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு மூன்று முறை அழைப்பு விடுத்த செய்தியை கூட...
தமக்கு வாக்குப் போட்ட  மக்களுக்கு தெரிவிக்காமல் மறைத்தது பெரும் துரோகம்.

இனி வரும் தேர்தல்களில்... சீனாவுடனும் உறவுகளை பேணுவோம் என்று அறிவிக்கும் கட்சிகளுக்கோ, இந்திய உறவை துண்டித்து விட்டு வரும் கட்சிகளுக்கோ  மக்கள் தமது வாக்குகளை செலுத்த வேண்டும். 

இந்த அறிவித்தலை உடனடியாக... "யாழ். ஊடக அமையம்" ஊடாக,
ஒரு பொது அமைப்போ, அரசியல் ஆய்வாளர்களின் அமைப்புகளோ அறிவித்து,
பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.  

 

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும்  திகதியை,
தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில்....

ஊடக அமையத்திலிருந்து  இந்த அறிவிப்பு... உடனடியாக வெளியிடப் பட்டால் தான்..
கட்சிகளின் மாற்றத்தையும், இந்தியாவின் போக்கையும்   அவதானிக்க முடியும். 

இனியும்... தமிழ் தலைவர்கள் பேய்க்காட்டு அரசியலை செய்வதை, துளியும் அனுமதிக்க முடியாது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

@Kapithan @தமிழ் சிறி 

கிந்தியா என்பது ஈழத்தமிழினத்தின் தொண்டை குழியில் சிக்கிய விசம்.வெளியே துப்பவும் முடியாது. உள்ளே விழுங்கவும் முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பெருமாள் said:

நீங்களோ நானோ அல்லது யார் சொல்லியும் அங்குள்ளவர்கள் செவிமடுப்பார்கள் என்றா நம்புகிறீர்கள் ?

இல்லை ஆனால் அவர்களை யாழில் ஆதரித்து, தேர்தல் நேரம் தீயாய் உழைப்பவர்கள் சொன்னால் கேட்ககூடும்?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

இல்லை ஆனால் அவர்களை யாழில் ஆதரித்து, தேர்தல் நேரம் தீயாய் உழைப்பவர்கள் சொன்னால் கேட்ககூடும்?

அங்கு அவர்களுக்கு தீயாக  உழைப்பவர்கள் ஐஸ் போதை கும்பல் கஞ்சா போதை விற்பனையாளர் ஆவா வாழ் வெட்டு குழு போன்றவை அவர்களால் நல்லது நடக்குமா ?

ஐஸ் கஞ்சா வால்  வெட்டு போலீசில் மாட்டுப்பட்டால் சுமத்திரனின் ஆட்கள் தான் அவர்களுக்காக வாதாடுவது பரமரகசியம் அல்ல .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.