Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி மு.றெமீடியஸ் விபத்தில் உயிரிழப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 11/2/2023 at 07:54, தமிழ் சிறி said:

கட்டாக்காலி  நாயினால், ஒரு உயிர் பறி போய் விட்டது. 
ஆழ்ந்த அனுதாபங்கள்.

யாழ். மாரகரசபை இனி, கட்டாக்காலி நாய்களை பிடிக்கும் வேகத்தை 
இரு மடங்காக்க வேண்டும்.

சைக்கிளில் போகும் போது துரத்தும் சொறி நாய் என அசட்டையாக இருக்க கூடாது. பார்தீர்களா ஒரு உயிர் அநியாயமாக பலியாகியுள்ளது.

இதுகளையும் போய், மணி, அன்பு, செல்வம், ராஜா, மகாராஜா என பெயர்வைத்து கொண்டாடும் மக்களை என்ன சொல்வது.

Edited by goshan_che

  • Replies 53
  • Views 4.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Kapithan said:

எனது அடையாளத்தைக் கண்டுபிடிப்பதற்கு தாங்கள் கடுமையாக முயற்சிப்பது புரிகிறது.

அப்படி எல்லாம் கடுமையாக முயற்சிக்கவில்லை மகா கனம் பொருந்திய மகாராஜா அவர்களே!

நீங்களாகவே உங்களை யாரென்று அம்மணப்படுத்தியுள்ளீர்கள். அது உங்களுக்குப் புரியாதது உங்கள் பிரச்சினை😃

 

ஒரு தகவல் உண்மையென்பதை ஆராய்ந்து சொல்ல பல வழிகள் உள்ளன. ஆனால் எந்த ஆதாரமும் கொடுக்காமல் திரும்பத் திரும்பச் சொல்லியே உண்மை என்று நம்பவைக்க நீங்கள் எங்கே பயிற்சி எடுத்துள்ளீர்கள் என்றும் இங்கு பலருக்கு தெரியும்.😁

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, கிருபன் said:

1) அப்படி எல்லாம் கடுமையாக முயற்சிக்கவில்லை மகா கனம் பொருந்திய மகாராஜா அவர்களே!

நீங்களாகவே உங்களை யாரென்று அம்மணப்படுத்தியுள்ளீர்கள். அது உங்களுக்குப் புரியாதது உங்கள் பிரச்சினை😃

 

2) ஒரு தகவல் உண்மையென்பதை ஆராய்ந்து சொல்ல பல வழிகள் உள்ளன. ஆனால் எந்த ஆதாரமும் கொடுக்காமல் திரும்பத் திரும்பச் சொல்லியே உண்மை என்று நம்பவைக்க

3) நீங்கள் எங்கே பயிற்சி எடுத்துள்ளீர்கள் என்றும் இங்கு பலருக்கு தெரியும்.😁

1) அதுதான் நீங்களே கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறீர்களே எனது பெயரைக் கூறலாமே. ஏன்  மறைக்கிறீர்கள்?  அதுசரி என்னை யாரென்று இனம்காணத் துடியாய்த் துடிப்பது ஏனோ ? 🤣

2) சரி.. நான்தான் ஆதாரம் கொடுக்கவில்லை. அது கொலையல்ல, விபத்து என உறுதிப்படுத்த தாங்கள் வழக்கத்துக்கு மாறாக மாரடித்து அழுவதன் நோக்கம்  என்ன? எதை நிறுவ முயற்சிக்கிறீர்கள்? நான் ஆதாரம் கொடுக்காவிட்டால், நீங்களாவது விபத்து என நிறுவுவதற்கு ஆதாரம் கொடுக்கலாமே 😀

3) பலருக்குத் தெரிந்த பரகசியத்தை இங்கே  பகிரங்கமாகக் கூறுவது ? சிரிப்பாய்ச் சிரிப்பார்கள் எனப் பயமா ? 🤣 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 11/2/2023 at 17:58, கிருபன் said:

கடந்த புதன்கிழமை மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, வீதியின் குறுக்கே நாய் ஒன்றுடன் மோதி விபத்திற்கு உள்ளானதில், தலைக் கவசம் கழன்றமையினால் தலையில் பலத்த காயத்திற்கு இலக்காகி, யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இது களநிலபரச்செய்தி.

On 11/2/2023 at 21:24, Kapithan said:

இது விபத்து அல்ல, கொலை எனச்  சந்தேகிக்கப்படுகிறது.  இவர் EPDP யில் அதிருப்தியுற்று அண்மையில்தான் அதில் இருந்து விலகியிருந்தார்.

சில நாட்களுக்கு முன்னர் வடமராட்சியில் வீதி ஓரத்தில்  தலையில் பலத்த காயங்களுடன்  காணப்பட்ட அவரை, சுயநினைவற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதித்திருந்தார்கள். அவருக்கு அருகில் தலைக்கவசமும் கிடந்துள்ளது. 

 தலையில் மட்டுமே காயங்கள் காணப்பட்டுள்ளன. உடலின் வேறுபகுதியில் காயங்கள் எதுவும் இல்லை. அத்துடன், அவர் மெதுவாகவே மோட்டார் சைக்கிளை ஓட்டும் பழக்கத்தைக் கொண்டவர் , வேகமாக ஓட்டுபவரல்ல என்பதும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியதாகும். 

இது இந்திய, இலங்கை புலனாய்வுச்செய்தி!

On 12/2/2023 at 04:37, Kapithan said:

புலனாய்வுக் கிளி என்று வைத்துக்கொள்ளுங்களேன். 

உண்மையில் இது விபத்து அல்ல, திட்டமிடப்பட்ட கொலை என்று என்னால் உறுதியாகக் கூற முடியும். 

 

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் கொஞ்சமாய் வேஷம் கலைந்து, சரக்கு வெளியில வருகுது. எதிரியோடு சண்டையிடலாம், துரோகியை விலத்தியே நடக்க வேணும். பட்டறிவு!

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kapithan said:

நான்தான்  ஆதாரமில்லாமல் கதைக்கிறேன் என்கிறீர்கள். உங்கள் வாதத்திற்கு ஆதாரம் எங்கிருந்து வருகிறது? 

டக்ளஸோ அல்லது EPDP யினரே கொலை செய்தார்களென்று எங்குமே நான் கூறவில்லை. நீங்களாகக் கற்பனை செய்தால் அது உங்கள் தெரிவு. 

"எனது வார்த்தைகளுக்கு மட்டுமே நான் பொறுப்பு". (உபயம்; விசுகர் 😀)

அவை செய்திகள் மட்டுமே. அவை உண்மையான காரங்கள் அல்ல. 

உங்கள் அவியல்களை மு.புத்தகத்தில் கொண்டு போய் கொட்டுங்கோ ..எல்லோரும் விபத்து என்று சொல்லும் போது கொலை என்று சொன்னது நீங்கள் . ஆதாரம் நீங்கள் தான் தர வேண்டும் . நானில்லை ...அவர் ஈபிடிபி யில் இருந்து அண்மையில் தான் பிரிந்தார் என்று எழுதியதும் நீங்கள் தான் 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

சைக்கிளில் போகும் போது துரத்தும் சொறி நாய் என அசட்டையாக இருக்க கூடாது. பார்தீர்களா ஒரு உயிர் அநியாயமாக பலியாகியுள்ளது.

இதுகளையும் போய், மணி, அன்பு, செல்வம், ராஜா, மகாராஜா என பெயர்வைத்து கொண்டாடும் மக்களை என்ன சொல்வது.

நாய் திரத்துவதைப் பற்றி, அந்த ஜேர்மன் பெடியனும் மிகுந்த பயத்துடன் சொன்னவர்.
தாங்கள் Mofa´வில் ஓடிக் கொண்டிருக்கும் போது, பல இடங்களில் திடீரென்று 
எட்டு, பத்து நாய்கள் சேர்ந்து திரத்துமாம்.
கடிக்குமோ என்றும், விபத்து நடந்து விடுமோ என்றும்  பயமாக  இருந்ததாக சொன்னார்.
தடுப்பு ஊசி போட்டிருக்காத நாய்கள், மிகுந்த ஆபத்தானவை என்றார்.

நான் இலங்கையில் இருந்த காலத்திலும்...
இந்த நாய்கள்  திரத்தி, பெரிய பயத்தை ஏற்படுத்தும்.
அன்றிலிருந்து, இன்று வரை இதற்கு ஒரு சட்டத்தை பயன்படுத்தியோ,
கட்டாக்காலி நாய்களின் உரிமையாளர்களுக்கு   தண்டனை கொடுத்தோ...
மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல் உள்ளதுதான்... நம் நாட்டின் தலைவிதி.
மக்களின் உயிர்தான்... அநியாயமாக பறிபோய் கொண்டுள்ளது. 

நாய் திரத்தி... இறந்தவர்களின், கணக்கு எடுத்தால்.. 
நிச்சயம் அது ஒரு பெரிய தொகையில் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நாய் திரத்துவதைப் பற்றி, அந்த ஜேர்மன் பெடியனும் மிகுந்த பயத்துடன் சொன்னவர்.
தாங்கள் Mofa´வில் ஓடிக் கொண்டிருக்கும் போது, பல இடங்களில் திடீரென்று 
எட்டு, பத்து நாய்கள் சேர்ந்து திரத்துமாம்.
கடிக்குமோ என்றும், விபத்து நடந்து விடுமோ என்றும்  பயமாக  இருந்ததாக சொன்னார்.
தடுப்பு ஊசி போட்டிருக்காத நாய்கள், மிகுந்த ஆபத்தானவை என்றார்.

நான் இலங்கையில் இருந்த காலத்திலும்...
இந்த நாய்கள்  திரத்தி, பெரிய பயத்தை ஏற்படுத்தும்.
அன்றிலிருந்து, இன்று வரை இதற்கு ஒரு சட்டத்தை பயன்படுத்தியோ,
கட்டாக்காலி நாய்களின் உரிமையாளர்களுக்கு   தண்டனை கொடுத்தோ...
மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல் உள்ளதுதான்... நம் நாட்டின் தலைவிதி.
மக்களின் உயிர்தான்... அநியாயமாக பறிபோய் கொண்டுள்ளது. 

நாய் திரத்தி... இறந்தவர்களின், கணக்கு எடுத்தால்.. 
நிச்சயம் அது ஒரு பெரிய தொகையில் வரும்.

எனக்கு இந்த நாய்களை கண்டால் ரொம்பவே ஒவ்வாமை.

அதுவும் வல்லவனின், ஜஸ்டின் அண்ணாவின் ரேபீஸ் பற்றிய பதிவுகளை பார்த்த பின் இரட்டை ஒவ்வாமை.

மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்தால் இதுகளை அடித்து துரத்திவிட முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

நாய் திரத்துவதைப் பற்றி, அந்த ஜேர்மன் பெடியனும் மிகுந்த பயத்துடன் சொன்னவர்.
தாங்கள் Mofa´வில் ஓடிக் கொண்டிருக்கும் போது, பல இடங்களில் திடீரென்று 
எட்டு, பத்து நாய்கள் சேர்ந்து திரத்துமாம்.
கடிக்குமோ என்றும், விபத்து நடந்து விடுமோ என்றும்  பயமாக  இருந்ததாக சொன்னார்.
தடுப்பு ஊசி போட்டிருக்காத நாய்கள், மிகுந்த ஆபத்தானவை என்றார்.

நான் இலங்கையில் இருந்த காலத்திலும்...
இந்த நாய்கள்  திரத்தி, பெரிய பயத்தை ஏற்படுத்தும்.
அன்றிலிருந்து, இன்று வரை இதற்கு ஒரு சட்டத்தை பயன்படுத்தியோ,
கட்டாக்காலி நாய்களின் உரிமையாளர்களுக்கு   தண்டனை கொடுத்தோ...
மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல் உள்ளதுதான்... நம் நாட்டின் தலைவிதி.
மக்களின் உயிர்தான்... அநியாயமாக பறிபோய் கொண்டுள்ளது. 

நாய் திரத்தி... இறந்தவர்களின், கணக்கு எடுத்தால்.. 
நிச்சயம் அது ஒரு பெரிய தொகையில் வரும்.

 

1 hour ago, goshan_che said:

எனக்கு இந்த நாய்களை கண்டால் ரொம்பவே ஒவ்வாமை.

அதுவும் வல்லவனின், ஜஸ்டின் அண்ணாவின் ரேபீஸ் பற்றிய பதிவுகளை பார்த்த பின் இரட்டை ஒவ்வாமை.

மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்தால் இதுகளை அடித்து துரத்திவிட முடியும்.

இலங்கையில் நாய்கள் கொல்லப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஏராளன் said:

 

இலங்கையில் நாய்கள் கொல்லப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.

ம்ம்ம்…ஆட்கள் செத்தால் ஓகேயாமா🤣

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

 

இதுகளையும் போய், மணி, அன்பு, செல்வம், ராஜா, மகாராஜா என பெயர்வைத்து கொண்டாடும் மக்களை என்ன சொல்வது.

நாய் பிரியர்கள்,நாய் காப்பாளர்கள்😃

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, putthan said:

நாய் பிரியர்கள்,நாய் காப்பாளர்கள்😃

🤣சொந்த செலவில் சூனியம் வைப்பவர்கள் எண்டும் சொல்லலாம் 🤣.

அவுசிலும் டமிள்ஸ் நாய் வைத்திருப்பது பேஷனா?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

கட்டாக்காலி நாய்களின் உரிமையாளர்களுக்கு   தண்டனை கொடுத்தோ...

கட்டாக்காலி நாய்களுக்கு யார் உரிமை கொண்டாடுவது? யார் யாருக்கு தண்டனை கொடுப்பது? முன்பெல்லாம் மாநகர சபை ஊழியர்கள் இந்தத் தெருநாய்களை பிடித்துச் செல்வார்கள், வீட்டு நாய்களுக்கு அதன் உரிமையாளரின் அடையாளம் குறிக்கும் தகடு கொடுக்கப்பட்டு அந்த நாய்கள் பிடிக்கப்பட்டால் அவர்களை அழைத்து உரிய அறிவுறுத்தல் கொடுக்கப்படும்,  வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசிகளும் உரிய காலத்தில் வழங்கி வந்தார்கள். மஹிந்த காலத்தில் அதுவும் மக்களை வகைதொகையின்றி கொன்றுகுவித்துக்கொண்டு கட்டாக்காலி நாய்களை அழிப்பதை தடை செய்தார். ஒருவேளை அது இலங்கைப் புத்த தர்மமாக இருக்குமோ என்னவோ தமிழரை அழித்து தெருநாய்களை பெருக்குவது? எங்கள் வீட்டுக்கு அண்மையில் இருந்த இராணுவ முகாமைச்சுற்றி அதிகமான கட்டாக்காலி நாய்கள் இருந்தன, அவற்றை அவர்களே தமக்கு பாதுகாப்பாக வைத்திருந்தார்கள். அதுகள் பலுகிப்பெருகி சாதாரண மக்களை அந்த வழியால் போக விடாதுகள்.   

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அவுசிலும் டமிள்ஸ் நாய் வைத்திருப்பது பேஷனா?

இப்போது மேற்குலநாடுகளில் தமிழர்கள் நாய் வைத்திருப்பது பாஷனாகிவிட்டது.
பகிடி என்னவென்றால் முன்பு நாய்யை பார்த்து பயந்து அருவருப்பு அடைந்தவர்கள் இப்போ நாய்வளர்க்கிறார்கள் 🤣  அவர்களுடைய அம்மா அப்பா முன்பு நாய் இருக்கிற வீட்டிற்கு போனாலே தங்களுக்கு அஸ்மா மூச்சுதிணறல் வந்துவிடும் என்று  சொன்னவர்கள், நாய் வைத்திருக்கும் வெள்ளை இனத்தவரை கண்டால் அவர்களை crazy பியுப்பிள் என்று சொன்னவர்கள் , இப்போது நாயை தடவி தங்கள் மடியில் வைத்திருக்கிறார்கள். நாய்க்கு உதவி செய்வதற்காக அதை கூட்டி கொண்டு வெளியே நடந்து செல்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

நாய் திரத்துவதைப் பற்றி, அந்த ஜேர்மன் பெடியனும் மிகுந்த பயத்துடன் சொன்னவர்.
தாங்கள் Mofa´வில் ஓடிக் கொண்டிருக்கும் போது, பல இடங்களில் திடீரென்று 
எட்டு, பத்து நாய்கள் சேர்ந்து திரத்துமாம்.
கடிக்குமோ என்றும், விபத்து நடந்து விடுமோ என்றும்  பயமாக  இருந்ததாக சொன்னார்.
தடுப்பு ஊசி போட்டிருக்காத நாய்கள், மிகுந்த ஆபத்தானவை என்றார்.

நான் இலங்கையில் இருந்த காலத்திலும்...
இந்த நாய்கள்  திரத்தி, பெரிய பயத்தை ஏற்படுத்தும்.
அன்றிலிருந்து, இன்று வரை இதற்கு ஒரு சட்டத்தை பயன்படுத்தியோ,
கட்டாக்காலி நாய்களின் உரிமையாளர்களுக்கு   தண்டனை கொடுத்தோ...
மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல் உள்ளதுதான்... நம் நாட்டின் தலைவிதி.
மக்களின் உயிர்தான்... அநியாயமாக பறிபோய் கொண்டுள்ளது. 

நாய் திரத்தி... இறந்தவர்களின், கணக்கு எடுத்தால்.. 
நிச்சயம் அது ஒரு பெரிய தொகையில் வரும்.

ஊரில் நாய்க்கு தடுப்பூசி போடாமல் யாருக்கும் கடித்தால் தண்டனை என்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 hours ago, goshan_che said:

இதுகளையும் போய், மணி, அன்பு, செல்வம், ராஜா, மகாராஜா என பெயர்வைத்து கொண்டாடும் மக்களை என்ன சொல்வது.

வீமன்,அர்ஜுனன்,தர்மன்,நகுலன் ஓகேயா?
கனடாவிலை என்ரை சொத்தம் ஒண்டு தன்ரை லேடி டோக்குக்கு மீனா எண்டு பேர் வைச்சிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

இப்போது மேற்குலநாடுகளில் தமிழர்கள் நாய் வைத்திருப்பது பாஷனாகிவிட்டது.
பகிடி என்னவென்றால் முன்பு நாய்யை பார்த்து பயந்து அருவருப்பு அடைந்தவர்கள் இப்போ நாய்வளர்க்கிறார்கள் 🤣  அவர்களுடைய அம்மா அப்பா முன்பு நாய் இருக்கிற வீட்டிற்கு போனாலே தங்களுக்கு அஸ்மா மூச்சுதிணறல் வந்துவிடும் என்று  சொன்னவர்கள், நாய் வைத்திருக்கும் வெள்ளை இனத்தவரை கண்டால் அவர்களை crazy பியுப்பிள் என்று சொன்னவர்கள் , இப்போது நாயை தடவி தங்கள் மடியில் வைத்திருக்கிறார்கள். நாய்க்கு உதவி செய்வதற்காக அதை கூட்டி கொண்டு வெளியே நடந்து செல்கிறார்கள்

ஓம். அதை நாய் எண்டு சொன்னால் ஏன் அதுக்கு பெயர் இல்லையோ எண்டு சண்டைக்கு வேற வாறார்கள்🤣.

அவ காலைல எழும்பி கக்கா போற அழகே அழகு, உச்சா போற அழகே அழகு எண்ட டார்ச்சர் வேற😩

1 hour ago, குமாரசாமி said:

வீமன்,அர்ஜுனன்,தர்மன்,நகுலன் ஓகேயா?
கனடாவிலை என்ரை சொத்தம் ஒண்டு தன்ரை லேடி டோக்குக்கு மீனா எண்டு பேர் வைச்சிருக்கிறார்.

🤣 கற்பூரப்புத்தி🙏🏾

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, goshan_che said:

ஓம். அதை நாய் எண்டு சொன்னால் ஏன் அதுக்கு பெயர் இல்லையோ எண்டு சண்டைக்கு வேற வாறார்கள்🤣.

அவ காலைல எழும்பி கக்கா போற அழகே அழகு, உச்சா போற அழகே அழகு எண்ட டார்ச்சர் வேற

சாருக்கு வீட்டில ரொம்ப கஸ்ரம்  போலிருக்கே, குழந்தை இல்லா வீட்டில் நாய் துள்ளி விளையாடுது என்று நினையுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, satan said:

சாருக்கு வீட்டில ரொம்ப கஸ்ரம்  போலிருக்கே, குழந்தை இல்லா வீட்டில் நாய் துள்ளி விளையாடுது என்று நினையுங்கோ

என்னது வீட்டில் நாயா - ஒன்றில் நான் அல்லது நாய் என்பதுதான் எப்போதும் என் நிலைப்பாடு (இரெண்டும் ஒன்றுதான்🤣).

மகன் பெரிய சத்யாகிரகம் எல்லாம் பண்ணினவர் - நான் மசியவில்லையே. ஆறுதல் பரிசாக ஒரு மீன் தொட்டியை அனுமதித்தேன். அதுவும் ஒரு சிலமாதங்களில் அலுப்புத்தட்டி விட்டதாம்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
On 14/2/2023 at 06:59, goshan_che said:

🤣சொந்த செலவில் சூனியம் வைப்பவர்கள் எண்டும் சொல்லலாம் 🤣.

அவுசிலும் டமிள்ஸ் நாய் வைத்திருப்பது பேஷனா?

வன்மையாக கண்டிக்கிறேன் ,நாய் என சொல்லக்கூடாது அவையளின்ட குடுமபத்தில் ஒருத்தர்....செல்லம்..

.நாயை பார்த்தால் ஊரில் திரியும் தெரு நாய் போல இருக்கும் ,ஆனால் இவையள் வாயில நுழையாத புது பெயர் சொல்லி அந்த பீரிட் இந்த பீரிட் ....என சொல்லி புகழ்வினம்

  • கருத்துக்கள உறவுகள்

முன்பெல்லாம் வீட்டில் நாய் வளர்க்கும்போது அதில் ஒரு அன்பு இருக்கும், அது நம்மேல் காட்டும் மரியாதை, எந்த வித எதிர்பார்ப்புமில்லாமல் எமது பாதுகாப்பில் காட்டும் அக்கறை, நன்றி உணர்வு. என்னையே சுற்றி சுற்றி வந்தாலும் அதை தொடுவதற்கு ஒருவித தயக்கம். என்தாயார் அதை குளிப்பாட்டி கூடுதல் அக்கறை செலுத்துவார். ஆனால் இன்று எனது நண்பர்கள், உறவுகளோடு ஒப்பிட்டுப்பார்க்கும்போது அதற்கு கோவில் கட்டி கும்பிட்டிருக்கலாம் போல் தோன்றுகிறது. எல்லாம் அனுபவம்! 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

முன்பெல்லாம் வீட்டில் நாய் வளர்க்கும்போது அதில் ஒரு அன்பு இருக்கும், அது நம்மேல் காட்டும் மரியாதை, எந்த வித எதிர்பார்ப்புமில்லாமல் எமது பாதுகாப்பில் காட்டும் அக்கறை, நன்றி உணர்வு. என்னையே சுற்றி சுற்றி வந்தாலும் அதை தொடுவதற்கு ஒருவித தயக்கம். என்தாயார் அதை குளிப்பாட்டி கூடுதல் அக்கறை செலுத்துவார். ஆனால் இன்று எனது நண்பர்கள், உறவுகளோடு ஒப்பிட்டுப்பார்க்கும்போது அதற்கு கோவில் கட்டி கும்பிட்டிருக்கலாம் போல் தோன்றுகிறது. எல்லாம் அனுபவம்! 

உண்மை.

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 12/2/2023 at 18:04, கிருபன் said:

அப்படி எல்லாம் கடுமையாக முயற்சிக்கவில்லை மகா கனம் பொருந்திய மகாராஜா அவர்களே!

நீங்களாகவே உங்களை யாரென்று அம்மணப்படுத்தியுள்ளீர்கள். அது உங்களுக்குப் புரியாதது உங்கள் பிரச்சினை😃

 

ஒரு தகவல் உண்மையென்பதை ஆராய்ந்து சொல்ல பல வழிகள் உள்ளன. ஆனால் எந்த ஆதாரமும் கொடுக்காமல் திரும்பத் திரும்பச் சொல்லியே உண்மை என்று நம்பவைக்க நீங்கள் எங்கே பயிற்சி எடுத்துள்ளீர்கள் என்றும் இங்கு பலருக்கு தெரியும்.😁

மறைந்த சட்டத்தரணி ரெமீடியஸ் முடியப்புவின் மரணம் தொடர்பான எனது நம்பிக்கை(கொலை) பிழையென அறிய முடிகிறது. 

எனது கருத்து யாழ் களத்தினரை தவறாக வழிநடாத்தியிருப்பதுடன், தவறான ஊகங்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் வழிவகுத்திருப்பதாக கருதுகிறேன். 

எனவே, யாழ் களத்தினரையும் அதன் வாசகர்களையும் தவறாக வழிநடாத்தியமைக்காக எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

🙏

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Kapithan said:

யாழ் களத்தினரையும் அதன் வாசகர்களையும் தவறாக வழிநடாத்தியமைக்காக எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

மதகின் மேல் குந்தியிருந்து விசிலடிக்கிறீர்களோ ? 

அதெல்லாம் சரி ... எதற்கெடுத்தாலும் யார், எவர் என்றில்லாமல், மதில் மேல் இருந்து போவோர் வருவோருக்கு விசில் அடிப்பது என்று 
திட்டி பிராண்டுகிறீர்களே, உங்களின் அந்த அனுபவத்தை கொஞ்சம் இங்கே பகிர்வது. அந்த உங்கள் அனுபவத்திலிருந்து உங்களால் விடுபட முடியவில்லை என்பது மட்டும் புரிகிறது. தப்பிருந்தால் மன்னித்துக்கொள்ளங்கள் மகாராஜாவே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

மறைந்த சட்டத்தரணி ரெமீடியஸ் முடியப்புவின் மரணம் தொடர்பான எனது நம்பிக்கை(கொலை) பிழையென அறிய முடிகிறது. 

எனது கருத்து யாழ் களத்தினரை தவறாக வழிநடாத்தியிருப்பதுடன், தவறான ஊகங்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் வழிவகுத்திருப்பதாக கருதுகிறேன். 

எனவே, யாழ் களத்தினரையும் அதன் வாசகர்களையும் தவறாக வழிநடாத்தியமைக்காக எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

🙏

நன்றி. 🙏🏽

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.